MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 8
தஞ்சாவூர் கோர்ட், கெளதம் தான் தான் மாதவனை கொலை செய்தேன் என்று கூறுவான் என்று சற்றும் எதிர் பார்க்காத சௌந்தர்யா அதை ஏற்க முடியாமல் அதிர்ச்சியில் அப்படியே நின்றாள். பேச கூட முடியாமல் சிந்திக்க முடியாமல், அவனையே பார்த்து கொண்டு நின்று இருந்தாள். கெளதமின் முகமோ எந்த மாற்றமும் இன்றி இருந்தது.
நாம் நினைத்தது போல் இவர் உண்மையில் நல்லவர் இல்லையோ என்று ஒரு நிமிடம் எண்ணி, பின் அதற்கு தன்னையே திட்டியும் கொண்டாள். அவனிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலே கொலை பண்ணலைனா கூட அன்னைக்கு முருகனோட சாவுக்கு நான் தான் காரணம் அப்டின்னு சொன்னவரு... அவரு போய் இப்டி கொலை பண்ணுவாரா...? இல்ல இதுவும் அன்னைக்கு போல சொல்லுறாரா...? ஒண்ணுமே புரியல... என்று மனதில் புலம்பி பின் அதை அவனிடம் சொன்னாள்.
“நீங்க அன்னைக்கு முருகன் சாவுக்கு நான் தான் காரணம் அப்டின்னு சொன்னது போல தான இன்னைக்கும் இத நான் தான் பண்ணேன் அப்டின்னு சொல்லுறீங்க... ஏன் நீங்க இப்டி இருக்கீங்க..?”
“இல்ல நான் உண்மைய தான் சொல்லுறேன்...” சிறு அமைதி. இருவரும் பேசவில்லை. யோசனையோடு மறுபடியும் கேட்கிறாள்,
“என்ன சொல்லுறீங்க... பொய் இல்லையா அது... உண்மையா...?!”
“ஆமாம்... நான் தான் அவனுக்கு தண்ணிய குடுத்தேன்... மூச்சு விட கஷ்ட பட்டு அப்டியே அவன் மயங்கி விழுந்தான், எல்லாரும் வந்தாங்க... அவன ஹாஸ்பிட்டல சேர்த்தாங்க... ஆனா அவன் இறந்துட்டான்...”
“ஆனா அந்த கேஸ் க்ளோஸ் பண்ணிட்டதா நீதிபதி சொன்னாரு...?!”
“ஆமாம்... நான் சின்ன பையன்னு பாவம் பார்த்து அவுங்க அம்மா தான் கேஸ் வேணாம்ன்னு எழுதி குடுத்து என்ன மன்னிச்சு விட்டுட்டாங்க...
நான் கொலை தான் பண்ணிட்டேன்...”
சௌந்தர்யாவிற்கு அடுத்து எதுவும் பேச முடியவில்லை, ஆனால் கெளதமோ முகத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து பேசி கொண்டிருந்தான்.
“அன்னைக்கு நான் பண்ண தப்புக்கு தான் இன்னைக்கு கடவுள் என்னை தண்டிக்கிறாரு... நான் பண்ண அந்த கொலைக்கு அவுங்க மன்னிச்சுட்டாலும் அந்த கடவுள் என்ன மன்னிக்கல... அதான் இப்போ தப்பு பண்ணலைனாலும் தண்டனை கொடுத்துருக்காரு.. இது எனக்கு சரியானது தான்...”
“ஏன் நீங்க இப்டியெல்லாம் பேசுறீங்க..? நீங்க கொலை பண்ணதா சொன்னா அத நான் நம்ப மாட்டேன். எனக்கு உங்கள பத்தி நல்லாவே தெரியும்... நீங்க எவ்ளோ பாசகாரர்ன்னு எனக்கு தெரியும்... நீங்க ஒருத்தர கொன்னதா சொன்ன நான் அத நம்ப மாட்டேன்...”
அவனிடம் பதில் எதுவும் வரவில்லை.
“நான் உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன், இப்போவும் அத தான் சொல்லுறேன் நீங்க தப்பே பண்ணிருந்தாலும் நான் உங்க கூட தான் இருப்பேன்... இனி நீங்க தான் எனக்கு வாழ்க்கை...”
சௌந்தர்யா கௌதம் கொலை செய்ததாக கூறியதை முழுசாக ஏற்கவில்லை. அவனிடம் மறுபடியும் கேட்டால்,
“நான் நம்ப மாட்டேன் நீங்க சொல்லுறத... நீங்க எதுக்காக கொலை பண்ணுனீங்க அத சொல்லுங்க அப்போ...?”
“நான் கொலை பண்ணனும்ன்னு நினைச்சு பண்ணல அத...
அன்னைக்கு நாங்க விளையாண்டுட்டு இருந்தோம்... அப்போ மாதவ் ஏதோ மூச்சு விட கஷ்ட பட்டுட்டு கீழ விழுந்து கிடந்தான். நான் கிட்ட போனப்போ.. அவன் தா, தான்னு தண்ணி கேட்டு அத சொல்ல முடியாம இருந்தான். நான் தண்ணி எடுத்துட்டு வந்து குடுத்தேன்... அவன் அத தடுத்தான்...
குடிக்க முடியாம தான் தடுக்குறான் போல அப்டின்னு நினைச்சு, நானே குடுத்தேன்... ஆனா அவன் அப்டியே மயங்கி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துட்டான். ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க... ஆனா அவன் பிழைக்கல... இறந்துட்டான்.
என்னை அப்போ போலீஸ் வந்து கூட்டிட்டு போனாங்க... ஆனா மாதவ் அம்மா வந்து கேஸ் வேணாம்ன்னு எழுதி குடுத்துட்டு போய்ட்டாங்க... அதனால என்னையும் வெளில விட்டுட்டாங்க...
நான் கொலை பண்ணிட்டேன்... கொலைகாரன்... நான் கொலை காரன் தான்...
இனி நீயும் என்னை நம்பிட்டு இருக்காத...
நான் வெளில வர மாட்டேன்... நான் தண்டனை அனுபவிச்சே ஆகணும்...
என்னால நீயும் வாழ்க்கைய இழந்துடாத... போய்டு...
நீ நல்லவ... நீ நல்லா வாழனும்... என் கூட சேர்ந்தா, நான் செய்த பாவம் எல்லாம் உன்னையும் கஷ்ட பட வைக்கும்... வேணாம் நீ போய்டு..”
“என்ன நீங்க இப்டி பேசுறீங்க...?”
அவளை பேச விடாமல், “நான் கிளம்புறேன்... கேஸ் ஆரம்பிச்சுடுவாங்க...” என்று கூறி வேகமாக சென்று விட, சௌந்தர்யாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘நாம இப்டி இவருக்காக கூடவே இருந்தா நம்மள இவர் எப்டி போ, போன்னு பேசுறாரு...’ என்று கோபமும் வந்தது.
ஆனால் ‘மனசு எந்த அளவிற்கு காயம் பட்டிருக்குமோ... அத மறக்க நம்ம மேல இப்டி கோப படுறாரு... கோபம் இருக்க இடத்துல தான் குணமும் இருக்கும்... நம்ம மேல உரிமை இருக்குன்னு தான் இவரு இப்டி எல்லாம் பேசுறாரு...’ என்று தனக்கு தானே சமாதானமும் செய்து கொண்டாள்.
அரை மணி நேரம் ஆனது. கேஸ் ஸ்டார்ட் ஆக நேரம் எடுத்தது. வக்கீல் எங்கு இருக்கிறார் என்று தேட சென்றாள். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. வக்கீல் வரவில்லை என்பது அவளுக்கு தெரிந்தது. வக்கீல் பார்க்க சென்ற போது அவர் ஏற்கனவே கிளம்பி விட்டதாக சொன்னது ஞாபகம் வந்து அவருக்கு கால் செய்து பார்க்கலாம் என்று எண்ணி டெலிபோன் செய்ய வெளியே செல்கிறாள். அங்கு வக்கீல் வந்து கொண்டிருப்பது தெரிகிறது.
வேகமாக அருகில் செல்கிறாள். அவரிடம் ‘என்ன அய்யா... இவ்ளோ லேட்டா வர்றீங்க... நல்ல வேல இன்னும் கேஸ் ஸ்டார்ட் பண்ணல...’ அப்டின்னு சொல்ல, அவர் முகம் எரிச்சல் காட்டுகிறது. அதை பார்த்ததும் அடுத்து அவரிடம் சௌந்தர்யா எதுவும் பேசவோ, கேக்கவோ இல்லை. அவர் நேராக உள்ளே செல்கிறார்.
அவர் கூடவே அவளும் உள்ளே செல்ல எரிச்சல் பட்டு கொண்டே, “இங்கயே நிள்ளும்மா... நான் எவிடன்ஸ் சப்மிட் பண்ணிட்டு வர்றேன்.” கூற அவள் நின்று விடுகிறாள். பின் சிறிது நேரத்தில் வெளியே வந்தார். இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்டார்ட் பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன் என்றார்.
சௌந்தர்யா தயக்கத்தோடு வக்கீலிடம், “அய்யா... அந்த ஆதாரம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா நான்..?” என்று கேக்கிறாள். ஆனால் அவரது முகம் எரிச்சலோடு இருந்தது, எந்த மாற்றமும் இன்றி. பதில் கூறவில்லை. சிறிது நேரத்தில் அவருக்கு ஏதோ கால் வருகிறது. எடுத்து பேச விலகி செல்கிறார்.
பேசிவிட்டு ஒரு சில நிமிடத்தில் வருகிறார். அப்போது அவரது முகம் நன்கு மாறியிருந்ததை அவள் உணர்ந்தாள். ஆனால் அவள் எந்த கேள்வியும் கேக்க வில்லை. ஆனால் வக்கீல் அவராக சொல்லுகிறார்.
“நான் கோர்ட்க்கு தான் கிளம்பிட்டு இருந்தேன். ஆனா யாரோ எனக்கு என்னோட குழந்தைக்கு ஆக்சிடெண்ட்ன்னு கால் பண்ணி சொன்னாங்க... நான் கால் பண்ணா போன் நாட் ரீச்சபல்... அப்பறம் வீட்டுக்கே நேர போய் பார்த்தா, அங்கயும் இல்ல... அப்பறம் இப்போ தான் வீட்டுல இருந்து போன் வந்துச்சு... வேற யாருக்கோ ஆக்சிடென்ட், அதுக்கு தான் இவுங்களும் ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க... இப்போ தான் கொஞ்சம் ரிலிபா இருக்கு...
சாரிம்மா... இப்போ சொல்லு... நீ என்ன கேட்ட...?”
“ஐயா... அந்த ஆதாரம் என்னன்னு கேட்டேன்...”
“அதுவாம்மா... இறந்து போனது முருகன் இல்ல... வேற யாரோ...”
சௌந்தர்யா முகத்தில் அதிர்ச்சி கலந்த ஆனந்தம், சொல்ல முடியாத சந்தோஷம். பேச முடியவில்லை. வக்கீலே பேசுகிறார்.
“முருகன் போட்டோ ஒன்னு கெளதம் வீட்டுல இருந்து கிடைச்சுருக்கு நடராஜர் சார்க்கு... அந்த போட்டோவும், இறந்து போனவானோட போட்டோவும் பார்த்து தான் அது வேற ஒருத்தர்ன்னு தெரிஞ்சது..”
“எப்டி சார்...?”
“அது...” அவர் சொல்ல போகும் போது கேஸ் நம்பர் சொல்லவும், திரும்பி பார்த்து விட்டு, “போவோம் வாம்மா...” என்று கூறி உள்ளே செல்கின்றனர்.
பட்டுகோட்டை, வளவன்புரம். இருள் சூழ்ந்த நூலாம்படையும் குப்பையும் சேர்த்து வைத்து இருக்கும் ஒரு பழைய வீடு. கையில் சாப்பாடு பொட்டலத்தோடு அந்த வீட்டிற்குள் நுழைகிறான் ஒருவன். ஆறு அடி உயரத்துடன் முரட்டுதனமான உடல்வாகுடன் பார்ப்பதற்கு அடியால் என்பதை தெளிவாக சொல்லும் திமிரான நடையில் அலட்சியத்துடன் வருகிறான். நுழைந்ததும் இடது புறம் திரும்பி ஒரு அறை. அதன் கதவு லேசாக சாத்தப்பட்டு இருக்கிறது, அதனை திறக்கிறான். அங்கு இன்னும் சில அடிஆட்கள் அமர்ந்து தண்ணி அடித்து கொண்டிருக்கின்றனர். அவர்களை பார்த்ததும் கோபமாக அதிகாரத்தோடு தான் தான் உங்களுக்கு தலைவன் என்பது போல்,
“ஏய்..! அறிவே இல்லையாடா உங்களுக்கு எல்லாம்... எத்தன தடவ சொல்லிருக்கேன் இப்டி எல்லாரும் ஒரு சேர குடிக்காதீங்க... அப்பறம் காரியமே கெட்டுடும்... புரியவே புரியாதா...”
தஞ்சாவூர் கோர்ட், கெளதம் தான் தான் மாதவனை கொலை செய்தேன் என்று கூறுவான் என்று சற்றும் எதிர் பார்க்காத சௌந்தர்யா அதை ஏற்க முடியாமல் அதிர்ச்சியில் அப்படியே நின்றாள். பேச கூட முடியாமல் சிந்திக்க முடியாமல், அவனையே பார்த்து கொண்டு நின்று இருந்தாள். கெளதமின் முகமோ எந்த மாற்றமும் இன்றி இருந்தது.
நாம் நினைத்தது போல் இவர் உண்மையில் நல்லவர் இல்லையோ என்று ஒரு நிமிடம் எண்ணி, பின் அதற்கு தன்னையே திட்டியும் கொண்டாள். அவனிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலே கொலை பண்ணலைனா கூட அன்னைக்கு முருகனோட சாவுக்கு நான் தான் காரணம் அப்டின்னு சொன்னவரு... அவரு போய் இப்டி கொலை பண்ணுவாரா...? இல்ல இதுவும் அன்னைக்கு போல சொல்லுறாரா...? ஒண்ணுமே புரியல... என்று மனதில் புலம்பி பின் அதை அவனிடம் சொன்னாள்.
“நீங்க அன்னைக்கு முருகன் சாவுக்கு நான் தான் காரணம் அப்டின்னு சொன்னது போல தான இன்னைக்கும் இத நான் தான் பண்ணேன் அப்டின்னு சொல்லுறீங்க... ஏன் நீங்க இப்டி இருக்கீங்க..?”
“இல்ல நான் உண்மைய தான் சொல்லுறேன்...” சிறு அமைதி. இருவரும் பேசவில்லை. யோசனையோடு மறுபடியும் கேட்கிறாள்,
“என்ன சொல்லுறீங்க... பொய் இல்லையா அது... உண்மையா...?!”
“ஆமாம்... நான் தான் அவனுக்கு தண்ணிய குடுத்தேன்... மூச்சு விட கஷ்ட பட்டு அப்டியே அவன் மயங்கி விழுந்தான், எல்லாரும் வந்தாங்க... அவன ஹாஸ்பிட்டல சேர்த்தாங்க... ஆனா அவன் இறந்துட்டான்...”
“ஆனா அந்த கேஸ் க்ளோஸ் பண்ணிட்டதா நீதிபதி சொன்னாரு...?!”
“ஆமாம்... நான் சின்ன பையன்னு பாவம் பார்த்து அவுங்க அம்மா தான் கேஸ் வேணாம்ன்னு எழுதி குடுத்து என்ன மன்னிச்சு விட்டுட்டாங்க...
நான் கொலை தான் பண்ணிட்டேன்...”
சௌந்தர்யாவிற்கு அடுத்து எதுவும் பேச முடியவில்லை, ஆனால் கெளதமோ முகத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து பேசி கொண்டிருந்தான்.
“அன்னைக்கு நான் பண்ண தப்புக்கு தான் இன்னைக்கு கடவுள் என்னை தண்டிக்கிறாரு... நான் பண்ண அந்த கொலைக்கு அவுங்க மன்னிச்சுட்டாலும் அந்த கடவுள் என்ன மன்னிக்கல... அதான் இப்போ தப்பு பண்ணலைனாலும் தண்டனை கொடுத்துருக்காரு.. இது எனக்கு சரியானது தான்...”
“ஏன் நீங்க இப்டியெல்லாம் பேசுறீங்க..? நீங்க கொலை பண்ணதா சொன்னா அத நான் நம்ப மாட்டேன். எனக்கு உங்கள பத்தி நல்லாவே தெரியும்... நீங்க எவ்ளோ பாசகாரர்ன்னு எனக்கு தெரியும்... நீங்க ஒருத்தர கொன்னதா சொன்ன நான் அத நம்ப மாட்டேன்...”
அவனிடம் பதில் எதுவும் வரவில்லை.
“நான் உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன், இப்போவும் அத தான் சொல்லுறேன் நீங்க தப்பே பண்ணிருந்தாலும் நான் உங்க கூட தான் இருப்பேன்... இனி நீங்க தான் எனக்கு வாழ்க்கை...”
சௌந்தர்யா கௌதம் கொலை செய்ததாக கூறியதை முழுசாக ஏற்கவில்லை. அவனிடம் மறுபடியும் கேட்டால்,
“நான் நம்ப மாட்டேன் நீங்க சொல்லுறத... நீங்க எதுக்காக கொலை பண்ணுனீங்க அத சொல்லுங்க அப்போ...?”
“நான் கொலை பண்ணனும்ன்னு நினைச்சு பண்ணல அத...
அன்னைக்கு நாங்க விளையாண்டுட்டு இருந்தோம்... அப்போ மாதவ் ஏதோ மூச்சு விட கஷ்ட பட்டுட்டு கீழ விழுந்து கிடந்தான். நான் கிட்ட போனப்போ.. அவன் தா, தான்னு தண்ணி கேட்டு அத சொல்ல முடியாம இருந்தான். நான் தண்ணி எடுத்துட்டு வந்து குடுத்தேன்... அவன் அத தடுத்தான்...
குடிக்க முடியாம தான் தடுக்குறான் போல அப்டின்னு நினைச்சு, நானே குடுத்தேன்... ஆனா அவன் அப்டியே மயங்கி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துட்டான். ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க... ஆனா அவன் பிழைக்கல... இறந்துட்டான்.
என்னை அப்போ போலீஸ் வந்து கூட்டிட்டு போனாங்க... ஆனா மாதவ் அம்மா வந்து கேஸ் வேணாம்ன்னு எழுதி குடுத்துட்டு போய்ட்டாங்க... அதனால என்னையும் வெளில விட்டுட்டாங்க...
நான் கொலை பண்ணிட்டேன்... கொலைகாரன்... நான் கொலை காரன் தான்...
இனி நீயும் என்னை நம்பிட்டு இருக்காத...
நான் வெளில வர மாட்டேன்... நான் தண்டனை அனுபவிச்சே ஆகணும்...
என்னால நீயும் வாழ்க்கைய இழந்துடாத... போய்டு...
நீ நல்லவ... நீ நல்லா வாழனும்... என் கூட சேர்ந்தா, நான் செய்த பாவம் எல்லாம் உன்னையும் கஷ்ட பட வைக்கும்... வேணாம் நீ போய்டு..”
“என்ன நீங்க இப்டி பேசுறீங்க...?”
அவளை பேச விடாமல், “நான் கிளம்புறேன்... கேஸ் ஆரம்பிச்சுடுவாங்க...” என்று கூறி வேகமாக சென்று விட, சௌந்தர்யாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘நாம இப்டி இவருக்காக கூடவே இருந்தா நம்மள இவர் எப்டி போ, போன்னு பேசுறாரு...’ என்று கோபமும் வந்தது.
ஆனால் ‘மனசு எந்த அளவிற்கு காயம் பட்டிருக்குமோ... அத மறக்க நம்ம மேல இப்டி கோப படுறாரு... கோபம் இருக்க இடத்துல தான் குணமும் இருக்கும்... நம்ம மேல உரிமை இருக்குன்னு தான் இவரு இப்டி எல்லாம் பேசுறாரு...’ என்று தனக்கு தானே சமாதானமும் செய்து கொண்டாள்.
அரை மணி நேரம் ஆனது. கேஸ் ஸ்டார்ட் ஆக நேரம் எடுத்தது. வக்கீல் எங்கு இருக்கிறார் என்று தேட சென்றாள். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. வக்கீல் வரவில்லை என்பது அவளுக்கு தெரிந்தது. வக்கீல் பார்க்க சென்ற போது அவர் ஏற்கனவே கிளம்பி விட்டதாக சொன்னது ஞாபகம் வந்து அவருக்கு கால் செய்து பார்க்கலாம் என்று எண்ணி டெலிபோன் செய்ய வெளியே செல்கிறாள். அங்கு வக்கீல் வந்து கொண்டிருப்பது தெரிகிறது.
வேகமாக அருகில் செல்கிறாள். அவரிடம் ‘என்ன அய்யா... இவ்ளோ லேட்டா வர்றீங்க... நல்ல வேல இன்னும் கேஸ் ஸ்டார்ட் பண்ணல...’ அப்டின்னு சொல்ல, அவர் முகம் எரிச்சல் காட்டுகிறது. அதை பார்த்ததும் அடுத்து அவரிடம் சௌந்தர்யா எதுவும் பேசவோ, கேக்கவோ இல்லை. அவர் நேராக உள்ளே செல்கிறார்.
அவர் கூடவே அவளும் உள்ளே செல்ல எரிச்சல் பட்டு கொண்டே, “இங்கயே நிள்ளும்மா... நான் எவிடன்ஸ் சப்மிட் பண்ணிட்டு வர்றேன்.” கூற அவள் நின்று விடுகிறாள். பின் சிறிது நேரத்தில் வெளியே வந்தார். இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்டார்ட் பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன் என்றார்.
சௌந்தர்யா தயக்கத்தோடு வக்கீலிடம், “அய்யா... அந்த ஆதாரம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா நான்..?” என்று கேக்கிறாள். ஆனால் அவரது முகம் எரிச்சலோடு இருந்தது, எந்த மாற்றமும் இன்றி. பதில் கூறவில்லை. சிறிது நேரத்தில் அவருக்கு ஏதோ கால் வருகிறது. எடுத்து பேச விலகி செல்கிறார்.
பேசிவிட்டு ஒரு சில நிமிடத்தில் வருகிறார். அப்போது அவரது முகம் நன்கு மாறியிருந்ததை அவள் உணர்ந்தாள். ஆனால் அவள் எந்த கேள்வியும் கேக்க வில்லை. ஆனால் வக்கீல் அவராக சொல்லுகிறார்.
“நான் கோர்ட்க்கு தான் கிளம்பிட்டு இருந்தேன். ஆனா யாரோ எனக்கு என்னோட குழந்தைக்கு ஆக்சிடெண்ட்ன்னு கால் பண்ணி சொன்னாங்க... நான் கால் பண்ணா போன் நாட் ரீச்சபல்... அப்பறம் வீட்டுக்கே நேர போய் பார்த்தா, அங்கயும் இல்ல... அப்பறம் இப்போ தான் வீட்டுல இருந்து போன் வந்துச்சு... வேற யாருக்கோ ஆக்சிடென்ட், அதுக்கு தான் இவுங்களும் ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க... இப்போ தான் கொஞ்சம் ரிலிபா இருக்கு...
சாரிம்மா... இப்போ சொல்லு... நீ என்ன கேட்ட...?”
“ஐயா... அந்த ஆதாரம் என்னன்னு கேட்டேன்...”
“அதுவாம்மா... இறந்து போனது முருகன் இல்ல... வேற யாரோ...”
சௌந்தர்யா முகத்தில் அதிர்ச்சி கலந்த ஆனந்தம், சொல்ல முடியாத சந்தோஷம். பேச முடியவில்லை. வக்கீலே பேசுகிறார்.
“முருகன் போட்டோ ஒன்னு கெளதம் வீட்டுல இருந்து கிடைச்சுருக்கு நடராஜர் சார்க்கு... அந்த போட்டோவும், இறந்து போனவானோட போட்டோவும் பார்த்து தான் அது வேற ஒருத்தர்ன்னு தெரிஞ்சது..”
“எப்டி சார்...?”
“அது...” அவர் சொல்ல போகும் போது கேஸ் நம்பர் சொல்லவும், திரும்பி பார்த்து விட்டு, “போவோம் வாம்மா...” என்று கூறி உள்ளே செல்கின்றனர்.
பட்டுகோட்டை, வளவன்புரம். இருள் சூழ்ந்த நூலாம்படையும் குப்பையும் சேர்த்து வைத்து இருக்கும் ஒரு பழைய வீடு. கையில் சாப்பாடு பொட்டலத்தோடு அந்த வீட்டிற்குள் நுழைகிறான் ஒருவன். ஆறு அடி உயரத்துடன் முரட்டுதனமான உடல்வாகுடன் பார்ப்பதற்கு அடியால் என்பதை தெளிவாக சொல்லும் திமிரான நடையில் அலட்சியத்துடன் வருகிறான். நுழைந்ததும் இடது புறம் திரும்பி ஒரு அறை. அதன் கதவு லேசாக சாத்தப்பட்டு இருக்கிறது, அதனை திறக்கிறான். அங்கு இன்னும் சில அடிஆட்கள் அமர்ந்து தண்ணி அடித்து கொண்டிருக்கின்றனர். அவர்களை பார்த்ததும் கோபமாக அதிகாரத்தோடு தான் தான் உங்களுக்கு தலைவன் என்பது போல்,
“ஏய்..! அறிவே இல்லையாடா உங்களுக்கு எல்லாம்... எத்தன தடவ சொல்லிருக்கேன் இப்டி எல்லாரும் ஒரு சேர குடிக்காதீங்க... அப்பறம் காரியமே கெட்டுடும்... புரியவே புரியாதா...”