Srija Venkatesh
SM Exclusive
பாட்டியிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விடலாம் என முடிவெடுத்தார்கள்.
"சரி பாட்டி! இந்தக் காட்டுல ஹோட்டல் வந்தா இந்தக்காடே அழிஞ்சிரும்னு நீங்க நினைக்கறீங்க? ஆனா பல காணிகள் அதுல வேலை செய்யலாம் பணம் சம்பாதிக்கலாம்னு நினைக்கறாங்களே?" என்றான் அருண்.
பெருமூச்செறிந்தாள் கிளிக்குட்டி.
"நீ சொல்றதும் சரி தான் சாமி! எங்க சனங்கள்லயே சில பேரு மாறிட்டாங்க தான். அவங்களை நான் ஒண்ணும் சொல்லல்ல! அவங்களுக்குப் பிடிக்காத வாழ்க்கையை அவங்க ஏன் வாழணும்? பக்கத்துல எத்தனையோ இடம் இருக்கு. அங்க போக வேண்டியது தானே? 50 வருஷத்துக்கு முன்ன அரசாங்கமே எங்க கிட்ட நகரத்துல வாழ ஆசைப் படுறீங்களா? கேட்டுது."
"நீங்க போகலையா?"
"எங்கள்ல நிறையக் குடும்பம் அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டு சேர்மாதேவி, களக்காடு கேரளா நாகர்கோயில்னு போயிட்டாங்க. அவங்க உங்களை மாதிரி மாறிட்டாங்க. ஆனா அகஸ்தியருக்கு படையல் குடுக்க மாட்டும் தவறாம வந்திருவாங்க. அவங்களால இன்னொரு ஆபத்தும் இருக்கு" என்றூ நிறுத்தினாள்.
"என்ன ஆபத்து பாட்டி?"
"அவங்க இந்த மலையைப் பத்தியும் அதோட அழகு அப்புறம் மூலிகைகள் வளம் பத்தியும் மேலே இருக்குற அகஸ்தியர் சிலையைப் பத்தியும் வெளிய சொல்லிடறாங்க. அகஸ்தியரைக் கும்புடுற ஆசையில நிறைய நகரத்து மக்கள் சித்ரா பௌர்ணமிக்கு வந்து இந்த இடத்தையே அழிச்சுட்டு போயிடறாங்க."
அருணும் பூஜாவும் சிந்தனையில் ஆழ்ந்தனர்,
"ஆம்! கிளிக்குட்டி சொல்வது உண்மை தான். நம்மில் பலருக்கு மலையைப் பற்றியும் அதில் உள்ள மூலிகையைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் அளவுக்கு காடுகளைக் காப்பற்ற வேண்டுமானால் நாம் காட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டூம் என்ற முறை தெரியவில்லை. சத்தமாக பாடல் போட்டு கத்திக்கத்தி பஜனை செய்து அதன் சமன்பாட்டை கெடுத்து விடுகிறார்கள். அப்படிப் பார்க்கும் போது இந்த மலையைக் காப்பாற்ற வேண்டுமானால் நிச்சயம் பெரிய அளவில் திட்டமிட வேண்டும்" என்று எண்ணிக் கொண்டனர்.
சிந்தனையின் நடுவே ஏதோ நிரடியது. இந்த மலையைக் காக்கும் பொறுப்பு நமக்கு எப்படி வந்தது? முக்கியமாக தாங்கள் எப்படி மீகாமர்களானோம் என்பதை தெரிந்து கொள்ளவே முடியவில்லையே கேட்டு விட வேண்டியது தான் என்று தீர்மானித்துக்கொண்டு பாட்டியைப் பார்த்தான் அருண்.
"பாட்டி நீங்க சொல்றதை வெச்சுப் பார்க்கும் போது இது வரைக்கும் காணிகள் தான் மீகாமர்களா இருந்திருக்காங்கன்னு நினைக்கறேன். ஆனா நாங்க காணிங்க இல்லையே? அப்புறம் எப்படி?" என்று இழுத்தான். அருண். அவனை ஆமோத்தித்தார்கள் மற்ற இருவரும்.
அவர்களை நோக்கி ஒரு அர்த்தமுள்ள சிரிப்பு சிரித்தாள் கிளிக்குட்டி.
"இந்த ஜென்மத்துல நீங்க காணிக்காரங்க இல்ல தான். ஆனா போன ஜென்மத்துல நீங்க யாரு தெரியுமா? பல வருஷம் முன்னால நீங்க இந்தக் காட்டுக்காக உசிரையே தியாகம் செஞ்ச மீகாமர்கள் தெரியுமா உங்களுக்கு?" என்றாள்.
"இது என்ன புதுக்கதை? என்று நிமிர்ந்து அமர்ந்தார்கள் நால்வரும்.
"சரி பாட்டி! இந்தக் காட்டுல ஹோட்டல் வந்தா இந்தக்காடே அழிஞ்சிரும்னு நீங்க நினைக்கறீங்க? ஆனா பல காணிகள் அதுல வேலை செய்யலாம் பணம் சம்பாதிக்கலாம்னு நினைக்கறாங்களே?" என்றான் அருண்.
பெருமூச்செறிந்தாள் கிளிக்குட்டி.
"நீ சொல்றதும் சரி தான் சாமி! எங்க சனங்கள்லயே சில பேரு மாறிட்டாங்க தான். அவங்களை நான் ஒண்ணும் சொல்லல்ல! அவங்களுக்குப் பிடிக்காத வாழ்க்கையை அவங்க ஏன் வாழணும்? பக்கத்துல எத்தனையோ இடம் இருக்கு. அங்க போக வேண்டியது தானே? 50 வருஷத்துக்கு முன்ன அரசாங்கமே எங்க கிட்ட நகரத்துல வாழ ஆசைப் படுறீங்களா? கேட்டுது."
"நீங்க போகலையா?"
"எங்கள்ல நிறையக் குடும்பம் அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டு சேர்மாதேவி, களக்காடு கேரளா நாகர்கோயில்னு போயிட்டாங்க. அவங்க உங்களை மாதிரி மாறிட்டாங்க. ஆனா அகஸ்தியருக்கு படையல் குடுக்க மாட்டும் தவறாம வந்திருவாங்க. அவங்களால இன்னொரு ஆபத்தும் இருக்கு" என்றூ நிறுத்தினாள்.
"என்ன ஆபத்து பாட்டி?"
"அவங்க இந்த மலையைப் பத்தியும் அதோட அழகு அப்புறம் மூலிகைகள் வளம் பத்தியும் மேலே இருக்குற அகஸ்தியர் சிலையைப் பத்தியும் வெளிய சொல்லிடறாங்க. அகஸ்தியரைக் கும்புடுற ஆசையில நிறைய நகரத்து மக்கள் சித்ரா பௌர்ணமிக்கு வந்து இந்த இடத்தையே அழிச்சுட்டு போயிடறாங்க."
அருணும் பூஜாவும் சிந்தனையில் ஆழ்ந்தனர்,
"ஆம்! கிளிக்குட்டி சொல்வது உண்மை தான். நம்மில் பலருக்கு மலையைப் பற்றியும் அதில் உள்ள மூலிகையைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் அளவுக்கு காடுகளைக் காப்பற்ற வேண்டுமானால் நாம் காட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டூம் என்ற முறை தெரியவில்லை. சத்தமாக பாடல் போட்டு கத்திக்கத்தி பஜனை செய்து அதன் சமன்பாட்டை கெடுத்து விடுகிறார்கள். அப்படிப் பார்க்கும் போது இந்த மலையைக் காப்பாற்ற வேண்டுமானால் நிச்சயம் பெரிய அளவில் திட்டமிட வேண்டும்" என்று எண்ணிக் கொண்டனர்.
சிந்தனையின் நடுவே ஏதோ நிரடியது. இந்த மலையைக் காக்கும் பொறுப்பு நமக்கு எப்படி வந்தது? முக்கியமாக தாங்கள் எப்படி மீகாமர்களானோம் என்பதை தெரிந்து கொள்ளவே முடியவில்லையே கேட்டு விட வேண்டியது தான் என்று தீர்மானித்துக்கொண்டு பாட்டியைப் பார்த்தான் அருண்.
"பாட்டி நீங்க சொல்றதை வெச்சுப் பார்க்கும் போது இது வரைக்கும் காணிகள் தான் மீகாமர்களா இருந்திருக்காங்கன்னு நினைக்கறேன். ஆனா நாங்க காணிங்க இல்லையே? அப்புறம் எப்படி?" என்று இழுத்தான். அருண். அவனை ஆமோத்தித்தார்கள் மற்ற இருவரும்.
அவர்களை நோக்கி ஒரு அர்த்தமுள்ள சிரிப்பு சிரித்தாள் கிளிக்குட்டி.
"இந்த ஜென்மத்துல நீங்க காணிக்காரங்க இல்ல தான். ஆனா போன ஜென்மத்துல நீங்க யாரு தெரியுமா? பல வருஷம் முன்னால நீங்க இந்தக் காட்டுக்காக உசிரையே தியாகம் செஞ்ச மீகாமர்கள் தெரியுமா உங்களுக்கு?" என்றாள்.
"இது என்ன புதுக்கதை? என்று நிமிர்ந்து அமர்ந்தார்கள் நால்வரும்.