Srija Venkatesh
SM Exclusive
அத்தியாயம் 3.
ராமகிருஷ்ணனும் பசுபதியும் ஜீப்பை விட்டு குதித்தது அவர்கள் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் சரியான அடி பட்டிருக்கும். இருவரும் ஜீப்பை பார்த்தனர். முன்னால் இருக்கும் கண்ணாடி தூள் தூளாக உடைந்து சீட்டெங்கும் சிதறி இருந்தது.
"பசுபதி! என்ன நேத்து ராத்திரி சரியான மப்பா?" என்றான் ராமகிருஷ்ணன் எரிச்சலுடன்.
"அப்படி ஒண்ணும் இல்ல! திடீர்னு என்ன ஆச்சுன்னே தெரியல்ல ராமாகிருஷ்ணா! ஒரு செக்கண்டு கை ஸ்டியரிங்க் வீல்ல இருக்கு அடுத்த நோடி பார்த்தா ஜீப் எங்கியோ இழுத்துக்கிட்டுப் போகுது. "
"சரி விடுப்பா! டிரைவர் இல்லாம நானே வண்டி ஓட்டுறேன்னு நீ சொன்னப்பவே நான் சுதாரிச்சிருக்கணும். வண்டி ஓட்டத் தெரியல்லன்னா ஏன் ஓட்டுற? நாம ஒரு நாள் தங்கிட்டு டிரைவர் வந்தப்புறம் கிளம்பியிருக்கலாம் இல்ல?" என்றான் ராமகிருஷ்ணன்.
"அப்படி இல்லப்பா! ஆஃபீசர் வீரமணி இன்னைக்கே நம்மை மலையில இருக்கச் சொன்னாரு. அதான் வந்தேன்."
"ஆமா! நீ தான் அந்த ஆளை மெச்சிக்கணும். சரியான லஞ்சப்பெருச்சாளி. இந்த மலையை என்ன செய்ய போறாரோ? தப்பான காரியம்னா நான் கூட்டு நிக்க மாட்டேன் இப்பவே சொல்லிட்டேன் பசுபதி" என்றான் ராமகிருஷ்ணன்.
எதுவும் பேசாமல் மௌனமாக நின்றான் பசுபதி. இனி அந்த ஜீப்பில் பயணிக்க முடியாது. காட்டு வழி பஸ்ஸோ காரோ எதுவும் வருகிறார் போலவும் இல்லை. இன்னும் குறைந்தது 7 கி மீ போயாக வேண்டும் என்ன செய்ய என திகைத்தனர். செல் ஃபோனைப் பார்த்தால் அதில் சிக்னல் இல்லாமல் ஈ என இளித்தது.
"நடக்க வேண்டியது தான். எவ்வளவு நேரம் இப்படியே நிக்க?" என்றான் பசுபதி.
வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே வாட்டர் பாட்டில் டார்ச் லைட் டேப் போன்ற தங்களது உபகரணங்களை சகரித்துக்கொண்டு மெல்ல நடக்கத்தொடங்கினர் இருவரும். ஒன்றாக வந்திருந்தனரே தவிர இருவரும் நெருங்கிய நண்பர்கள் என சொல்ல முடியாது. சம வயதினர், ஒரே அலுவலகத்தில் வேலை, பக்கத்தில் வீடு என எல்லாம் இருந்தும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகாததற்குக் காரணம் இருவரது குணத்திலும் பெரிய வேறுபாடு இருந்தது. ராமகிருஷ்ணன் ஒழுக்கம் கடமை போன்ற குணங்கள் நிறைந்தவன். ஆனால் பசுபதியோ நம் வேலையைச் செய்ய யாரேனும் பணம் தருகிறேன் என்றால் ஏன் வேண்டாம் எனச் சொல்ல வேண்டும்? என்ற கொள்கை உடையவன். வீடு நிலம் இவைகளை அளக்க செல்லும் போது சொந்தக்காரர்களிடம் காசு வாங்கும் பழக்கம் உள்ளவன் பசுபதி. அதைக் கண்டும் காணாமல் இருந்து விடுவானே அன்றி கை நீட்டிக் காசு வாங்கியதில்லை இது வரை. அதனால் தான் ராமகிருஷ்ணன் வாடகை வீட்டிலும் பசுபதி சொந்த வீட்டிலும் வாழ்கின்றனர்.
பாதை நீண்டு கொண்டே போவதாகத் தோன்றியது. அதோடு ஏற்றம் வேறு. சோர்ந்து போய் அங்கங்கே நின்றனர். ஒரு இடத்தில் செல்ஃபோன் சிக்னல் கிடக்கும் போல இருக்கவே உடனே ஆபீசர் வீரமணிக்கு ஃபோன் செய்து தாங்கள் நிலையைச் சொன்னார்கள். அங்கயேயே அமர்ந்திருக்குமாறும் உடனே ஜீப் எடுத்து வருவதாகவும் சொல்லி கட் செய்தார் அவர். மர நிழலில் அமர்ந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்தனர். எங்கும் மரங்களும் பசுமையுமாகக் காட்சியளித்தது. மூலிகைகளின் மணம் சுகமாக இருந்தது. காற்றை இழுத்து நுரையீரலை நிரப்பிக்கொண்டார்கள்.
"ராமு! இந்தக்காட்டுல என்னடா இருக்கு? இங்க போயி எவன் இருப்பான்?" என்றான் பசுபதி.
"ஹூம்! நீ ஒரு ரசிக்கத்தெரியாத ஜென்மம். இங்க என்ன இல்ல? சுத்தமான காத்து, சுத்தமான தண்ணி எல்லாத்துக்கும் மேல மன நிம்மதி. நான் கூட ரிடயர் ஆன பிறகு இந்த மலை அடிவாரத்துல வந்து தங்கிடலாம்னு பார்க்குறேன். மனசுக்கே நிம்மதியா இருக்குடா" என்றான்
"உனக்கு இப்பத்தான் 35 வயசாகுது! இன்னும் நாம அனுபவிக்க வேண்டியது எத்தனையோ இருக்கு. அதை விட்டுட்டு சாமியார் மாதிரி பேசாத. இன்னி ராத்திரி நம்மை இங்க தங்கச் சொல்லியிருக்காங்க. வீரமணி சார் ஏற்பாடுகளை சூப்பரா செஞ்சிருப்பாரு. போறோம் அளக்கறோம், அப்படியே ஒரு குவாட்டர் போட்டுட்டு ஏதாவது குட்டி கெடச்சா அவளை கட்டிக்கிட்டு தூங்கறோம். தேவைப்பட்டா கூட ரெண்டு நாள் தங்கலாம். என்ன சொல்ற?"
"நீ என்ன வேணும்னாலும் செய்யி! ஆனா என்னை இழுக்காதே! நா இல்ல! இன்னைக்கு சாயங்காலமே நான் திரும்பலாம்னு இருக்கேன். வீட்டுல வேலை இருக்கு" என்றான்.
இருவரும் பேசியபடியே காத்திருந்தனர். சரியாக பத்தாவது நிமிடம் வீரமணியின் ஜீப் இவர்களை நோக்கி வந்தது. எகத்தாளமாக சிரித்தார் அவர்.
"என்னய்யா? ரெண்டு பேரும் ஜீப்பை மோதிட்டு சவுக்கியமா உக்காந்து பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்றார்.
"சார்! ஸ்டியரிங்க் வீல்ல என்ன பிரச்சனைன்னு தெரியல்ல! தானா மரத்துக்கிட்ட போயி மோதி நின்னது. டிப்பார்ட்மெண்டுல ஹைதர் காலத்து ஜீப்பை கொடுத்தங்கான்ன என்ன செய்ய?"
"சரி சரி ஏறுங்க" என்றார். ராமகிருஷ்ணன் கவனிக்கும் முன் தனியாக பசுபதியின் காதில் கிசுகிசுத்தார்.
"யோவ் பசு! எதுக்கு நீ இந்த சாமியாரைக் கூட்டிக்கிட்டு வந்த? இவன் காசும் வாங்க மாட்டான் அதோட நீதி நேர்மை நியாயம்னு பேசுவானே?"
"எல்லாம் அந்த தாசில்தார் பண்ணுன வேலை. இவனையும் சேர்த்து தான் கூட்டிக்கிட்டுப் போகணும்னு சொல்லிட்டாரு. வேற என்ன செய்ய நானு?" என்றான் மெல்ல.
"என்ன சார்? ஏதும் பிரச்சனையா?" என்றான் ராமகிருஷ்ணன்.
"பிரச்ச்னையே நீ தானே?" என்று வாய்க்குள் பேசிக்கொண்டே ஜீப்பை எடுத்தார் வீரமணி. ராமகிருஷ்ணன் விசாரிக்க ஆரம்பித்தான்.
"ஏன் சார்? இந்த நடுக்காட்டுல யாரு வந்து வீடு கட்டப் போறாங்க?"
"வீடு இல்லப்பா! ரிசார்டு கட்டப்போறாங்க! கிட்டத்தட்ட ரெண்டு ஏக்கர் விஸ்தீரணம். அதை அளக்கத்தான் உங்களை வரச் சொல்லியிருக்காங்க"
"அப்படியா? ஆனா ஆபீசுல வீடு கட்ட அனுமதின்னு தானே போட்டிருந்தது?"
"அட என்னப்பா நீ? வந்ததும் வராததுமா நோண்ட ஆரம்பிச்சுட்ட! ரிசார்டு கட்ட அனுமதின்னா மத்தவங்க சும்மா இருப்பாங்களா? பசுமை தீர்ப்பாயம் சுற்றுச் சூழல் இயக்கம்னு பல பேர் உடனே பொங்கி எழுந்திருவாங்களே! அதுக்காகத்தான் இப்படி போட்டிருக்காங்க" என்றார் பல்லைக் கடித்தபடி.
"இது உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சுமா பேசாம இருக்கீங்க?"
"ஆரம்பிக்கதே ராமு! இதெல்லாம் சின்ன விஷயம். ரிசார்டு கட்டுனா இங்க இருக்குற மலை வாழ் மக்களுக்கு வேலை தர்ரதா சொல்லியிருக்காரு சேட்டு. அவங்க வாழ்க்கைத் தரம் உயரும் இல்லப்பா? அதை நீ தடுக்கப் போறியா?" என்றான் சாமர்த்தியமாக.
"என்ன இந்த மலையில மலைவாழ் மக்கள் இருக்காங்களா? "
"உனக்குத் தெரியாதா? காணிக்காரர்கள்னு சொல்லுவாங்க. அவங்க கூட்டத்துக்கே இந்த மலை தான் ஆதாரம். அவங்க இன்னமும் இங்க தான் இருக்காங்க"
"ஓ! சரி! எப்படியோ அவங்களுக்கு நல்லது நடந்தா சரி தான்" என்றான். அதன் பிறகு பேச்சே இல்லை. ரிசார்டு கட்ட திட்டமிட்ட இடத்துக்கு வந்து நின்றது ஜீப். ஓரிரு காணிகளே காணப்பட்டனர். அவர்கள் களப்பணியாளர்களை விரோதமாகப் பார்த்தனர். அன்பாக சிரித்தான் ராமகிருஷ்ணன் ஆனால் அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டனர். என்னவோ இருக்கிறது என தீர்மானித்துக்கொண்டான் அவன். பேச்சே இல்லாமல் அளக்கும் கருவி காமிரா மேப் இவைகளை எடுத்து தயாராக வைத்துக்கொண்டான். வீரமணியும் பசுபதியும் என்னவோ பேசிக்கொண்டே இருந்தனர். நிலத்தை அளக்க கழியை ஊன்றிய அதே நேரம் ஏதோ ஒரு அவலமான ஓலம் எழுந்தது.
ராமகிருஷ்ணனும் பசுபதியும் ஜீப்பை விட்டு குதித்தது அவர்கள் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் சரியான அடி பட்டிருக்கும். இருவரும் ஜீப்பை பார்த்தனர். முன்னால் இருக்கும் கண்ணாடி தூள் தூளாக உடைந்து சீட்டெங்கும் சிதறி இருந்தது.
"பசுபதி! என்ன நேத்து ராத்திரி சரியான மப்பா?" என்றான் ராமகிருஷ்ணன் எரிச்சலுடன்.
"அப்படி ஒண்ணும் இல்ல! திடீர்னு என்ன ஆச்சுன்னே தெரியல்ல ராமாகிருஷ்ணா! ஒரு செக்கண்டு கை ஸ்டியரிங்க் வீல்ல இருக்கு அடுத்த நோடி பார்த்தா ஜீப் எங்கியோ இழுத்துக்கிட்டுப் போகுது. "
"சரி விடுப்பா! டிரைவர் இல்லாம நானே வண்டி ஓட்டுறேன்னு நீ சொன்னப்பவே நான் சுதாரிச்சிருக்கணும். வண்டி ஓட்டத் தெரியல்லன்னா ஏன் ஓட்டுற? நாம ஒரு நாள் தங்கிட்டு டிரைவர் வந்தப்புறம் கிளம்பியிருக்கலாம் இல்ல?" என்றான் ராமகிருஷ்ணன்.
"அப்படி இல்லப்பா! ஆஃபீசர் வீரமணி இன்னைக்கே நம்மை மலையில இருக்கச் சொன்னாரு. அதான் வந்தேன்."
"ஆமா! நீ தான் அந்த ஆளை மெச்சிக்கணும். சரியான லஞ்சப்பெருச்சாளி. இந்த மலையை என்ன செய்ய போறாரோ? தப்பான காரியம்னா நான் கூட்டு நிக்க மாட்டேன் இப்பவே சொல்லிட்டேன் பசுபதி" என்றான் ராமகிருஷ்ணன்.
எதுவும் பேசாமல் மௌனமாக நின்றான் பசுபதி. இனி அந்த ஜீப்பில் பயணிக்க முடியாது. காட்டு வழி பஸ்ஸோ காரோ எதுவும் வருகிறார் போலவும் இல்லை. இன்னும் குறைந்தது 7 கி மீ போயாக வேண்டும் என்ன செய்ய என திகைத்தனர். செல் ஃபோனைப் பார்த்தால் அதில் சிக்னல் இல்லாமல் ஈ என இளித்தது.
"நடக்க வேண்டியது தான். எவ்வளவு நேரம் இப்படியே நிக்க?" என்றான் பசுபதி.
வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே வாட்டர் பாட்டில் டார்ச் லைட் டேப் போன்ற தங்களது உபகரணங்களை சகரித்துக்கொண்டு மெல்ல நடக்கத்தொடங்கினர் இருவரும். ஒன்றாக வந்திருந்தனரே தவிர இருவரும் நெருங்கிய நண்பர்கள் என சொல்ல முடியாது. சம வயதினர், ஒரே அலுவலகத்தில் வேலை, பக்கத்தில் வீடு என எல்லாம் இருந்தும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகாததற்குக் காரணம் இருவரது குணத்திலும் பெரிய வேறுபாடு இருந்தது. ராமகிருஷ்ணன் ஒழுக்கம் கடமை போன்ற குணங்கள் நிறைந்தவன். ஆனால் பசுபதியோ நம் வேலையைச் செய்ய யாரேனும் பணம் தருகிறேன் என்றால் ஏன் வேண்டாம் எனச் சொல்ல வேண்டும்? என்ற கொள்கை உடையவன். வீடு நிலம் இவைகளை அளக்க செல்லும் போது சொந்தக்காரர்களிடம் காசு வாங்கும் பழக்கம் உள்ளவன் பசுபதி. அதைக் கண்டும் காணாமல் இருந்து விடுவானே அன்றி கை நீட்டிக் காசு வாங்கியதில்லை இது வரை. அதனால் தான் ராமகிருஷ்ணன் வாடகை வீட்டிலும் பசுபதி சொந்த வீட்டிலும் வாழ்கின்றனர்.
பாதை நீண்டு கொண்டே போவதாகத் தோன்றியது. அதோடு ஏற்றம் வேறு. சோர்ந்து போய் அங்கங்கே நின்றனர். ஒரு இடத்தில் செல்ஃபோன் சிக்னல் கிடக்கும் போல இருக்கவே உடனே ஆபீசர் வீரமணிக்கு ஃபோன் செய்து தாங்கள் நிலையைச் சொன்னார்கள். அங்கயேயே அமர்ந்திருக்குமாறும் உடனே ஜீப் எடுத்து வருவதாகவும் சொல்லி கட் செய்தார் அவர். மர நிழலில் அமர்ந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்தனர். எங்கும் மரங்களும் பசுமையுமாகக் காட்சியளித்தது. மூலிகைகளின் மணம் சுகமாக இருந்தது. காற்றை இழுத்து நுரையீரலை நிரப்பிக்கொண்டார்கள்.
"ராமு! இந்தக்காட்டுல என்னடா இருக்கு? இங்க போயி எவன் இருப்பான்?" என்றான் பசுபதி.
"ஹூம்! நீ ஒரு ரசிக்கத்தெரியாத ஜென்மம். இங்க என்ன இல்ல? சுத்தமான காத்து, சுத்தமான தண்ணி எல்லாத்துக்கும் மேல மன நிம்மதி. நான் கூட ரிடயர் ஆன பிறகு இந்த மலை அடிவாரத்துல வந்து தங்கிடலாம்னு பார்க்குறேன். மனசுக்கே நிம்மதியா இருக்குடா" என்றான்
"உனக்கு இப்பத்தான் 35 வயசாகுது! இன்னும் நாம அனுபவிக்க வேண்டியது எத்தனையோ இருக்கு. அதை விட்டுட்டு சாமியார் மாதிரி பேசாத. இன்னி ராத்திரி நம்மை இங்க தங்கச் சொல்லியிருக்காங்க. வீரமணி சார் ஏற்பாடுகளை சூப்பரா செஞ்சிருப்பாரு. போறோம் அளக்கறோம், அப்படியே ஒரு குவாட்டர் போட்டுட்டு ஏதாவது குட்டி கெடச்சா அவளை கட்டிக்கிட்டு தூங்கறோம். தேவைப்பட்டா கூட ரெண்டு நாள் தங்கலாம். என்ன சொல்ற?"
"நீ என்ன வேணும்னாலும் செய்யி! ஆனா என்னை இழுக்காதே! நா இல்ல! இன்னைக்கு சாயங்காலமே நான் திரும்பலாம்னு இருக்கேன். வீட்டுல வேலை இருக்கு" என்றான்.
இருவரும் பேசியபடியே காத்திருந்தனர். சரியாக பத்தாவது நிமிடம் வீரமணியின் ஜீப் இவர்களை நோக்கி வந்தது. எகத்தாளமாக சிரித்தார் அவர்.
"என்னய்யா? ரெண்டு பேரும் ஜீப்பை மோதிட்டு சவுக்கியமா உக்காந்து பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்றார்.
"சார்! ஸ்டியரிங்க் வீல்ல என்ன பிரச்சனைன்னு தெரியல்ல! தானா மரத்துக்கிட்ட போயி மோதி நின்னது. டிப்பார்ட்மெண்டுல ஹைதர் காலத்து ஜீப்பை கொடுத்தங்கான்ன என்ன செய்ய?"
"சரி சரி ஏறுங்க" என்றார். ராமகிருஷ்ணன் கவனிக்கும் முன் தனியாக பசுபதியின் காதில் கிசுகிசுத்தார்.
"யோவ் பசு! எதுக்கு நீ இந்த சாமியாரைக் கூட்டிக்கிட்டு வந்த? இவன் காசும் வாங்க மாட்டான் அதோட நீதி நேர்மை நியாயம்னு பேசுவானே?"
"எல்லாம் அந்த தாசில்தார் பண்ணுன வேலை. இவனையும் சேர்த்து தான் கூட்டிக்கிட்டுப் போகணும்னு சொல்லிட்டாரு. வேற என்ன செய்ய நானு?" என்றான் மெல்ல.
"என்ன சார்? ஏதும் பிரச்சனையா?" என்றான் ராமகிருஷ்ணன்.
"பிரச்ச்னையே நீ தானே?" என்று வாய்க்குள் பேசிக்கொண்டே ஜீப்பை எடுத்தார் வீரமணி. ராமகிருஷ்ணன் விசாரிக்க ஆரம்பித்தான்.
"ஏன் சார்? இந்த நடுக்காட்டுல யாரு வந்து வீடு கட்டப் போறாங்க?"
"வீடு இல்லப்பா! ரிசார்டு கட்டப்போறாங்க! கிட்டத்தட்ட ரெண்டு ஏக்கர் விஸ்தீரணம். அதை அளக்கத்தான் உங்களை வரச் சொல்லியிருக்காங்க"
"அப்படியா? ஆனா ஆபீசுல வீடு கட்ட அனுமதின்னு தானே போட்டிருந்தது?"
"அட என்னப்பா நீ? வந்ததும் வராததுமா நோண்ட ஆரம்பிச்சுட்ட! ரிசார்டு கட்ட அனுமதின்னா மத்தவங்க சும்மா இருப்பாங்களா? பசுமை தீர்ப்பாயம் சுற்றுச் சூழல் இயக்கம்னு பல பேர் உடனே பொங்கி எழுந்திருவாங்களே! அதுக்காகத்தான் இப்படி போட்டிருக்காங்க" என்றார் பல்லைக் கடித்தபடி.
"இது உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சுமா பேசாம இருக்கீங்க?"
"ஆரம்பிக்கதே ராமு! இதெல்லாம் சின்ன விஷயம். ரிசார்டு கட்டுனா இங்க இருக்குற மலை வாழ் மக்களுக்கு வேலை தர்ரதா சொல்லியிருக்காரு சேட்டு. அவங்க வாழ்க்கைத் தரம் உயரும் இல்லப்பா? அதை நீ தடுக்கப் போறியா?" என்றான் சாமர்த்தியமாக.
"என்ன இந்த மலையில மலைவாழ் மக்கள் இருக்காங்களா? "
"உனக்குத் தெரியாதா? காணிக்காரர்கள்னு சொல்லுவாங்க. அவங்க கூட்டத்துக்கே இந்த மலை தான் ஆதாரம். அவங்க இன்னமும் இங்க தான் இருக்காங்க"
"ஓ! சரி! எப்படியோ அவங்களுக்கு நல்லது நடந்தா சரி தான்" என்றான். அதன் பிறகு பேச்சே இல்லை. ரிசார்டு கட்ட திட்டமிட்ட இடத்துக்கு வந்து நின்றது ஜீப். ஓரிரு காணிகளே காணப்பட்டனர். அவர்கள் களப்பணியாளர்களை விரோதமாகப் பார்த்தனர். அன்பாக சிரித்தான் ராமகிருஷ்ணன் ஆனால் அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டனர். என்னவோ இருக்கிறது என தீர்மானித்துக்கொண்டான் அவன். பேச்சே இல்லாமல் அளக்கும் கருவி காமிரா மேப் இவைகளை எடுத்து தயாராக வைத்துக்கொண்டான். வீரமணியும் பசுபதியும் என்னவோ பேசிக்கொண்டே இருந்தனர். நிலத்தை அளக்க கழியை ஊன்றிய அதே நேரம் ஏதோ ஒரு அவலமான ஓலம் எழுந்தது.