• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the epi?

  • நன்று

    Votes: 0 0.0%
  • பரவாயில்லை

    Votes: 0 0.0%

  • Total voters
    27

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
முக்கியமான கட்டத்தில் நிறுத்தி விட்டீர்களே, இந்த ஜென்மத்திலாவது அபியையும் சூர்யாவையும் வாழ விடுங்கள்.
 




Janani26

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
49
Reaction score
55
"இப்பதான் நான் சூர்யாகிட்ட பேசினேன் ஈஷ்வர்" என்று சொன்ன நொடி
அவன் தன்னை பற்றி என்னவெல்லாம் சொல்லி இருப்பாளோ என்று அவன் அப்படியே சிந்தினையில் ஆழ்ந்துவிட


அவந்திகா மீண்டும் "நீ செய்றது ரொம்ப தப்பு தேவ்" என்றார்.

ஈஷ்வர் தெரியாதவன் போல் "சூர்யா உங்ககிட்ட என்ன சொன்னா ?" என்று வினவ

"அவ சொன்னதை இப்பவும் என்னால நம்ப முடியல தேவ்...
ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு" என்று அவந்திகா உரைத்த பிறகு ஈஷ்வர் பதில் பேசாமல் மௌனமாகவே இருந்தான்.


"உனக்கு சூர்யாவை கல்யாணம் பண்ணி வைக்க நானும் ஆசைப்பட்டேன் தேவ்... ஆனா அவளுக்கு விருப்பமில்லன்னு சொல்லும் போதும் நீ வற்புறுத்திறது சரியில்ல" என்றார்.

ஈஷ்வர் இப்போதும் பதில் பேசாமல் அமைதியாயிருக்க அவந்திகா மேலும் "ஏன் ஸைலன்ட்டா இருக்க தேவ்... பதில் சொல்லு" என்றார்.

"என்ன பேசிறது... உங்களுக்கு என் விருப்பத்தை விட அவளோட விருப்பம்தான் பெரிசா போச்சு... இல்ல" என்றான் கோபமான தொனியில்.

"அப்படி இல்ல தேவ்..."

"பேசாதீங்க மாம்... நீங்க எனக்காக அவகிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணுவீங்களா... அதை விட்டுவிட்டு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டிருக்கீங்க"

"விருப்பமில்லன்னு மட்டும் சொன்னா பேசி கன்வின்ஸ் பண்ணலாம்... பட் வேறொருத்தனை விரும்பிறன்னு சொல்றவளை எப்படி தேவ் கன்வின்ஸ் பண்ண முடியும்" என்றார்.

"சரி உங்களால முடியலன்னா விட்டிருங்க... நான் பார்த்துக்கிறேன்" என்று சொன்ன நொடி அவந்திகா கொஞ்சம் அதிர்ச்சியுற்றார்.

"வேண்டாம் தேவ்... நான் உன் ரேஞ்ச்க்கு ஏத்த மாதிரி அழகா அறிவான ஒரு பொண்ணா பார்க்கிறேன்... சூர்யாவை விட்டிடு... அவளுக்கு உன் மதிப்பு தெரியல" என்று அவன் போக்கிலேயே அவர் புரிய வைக்க முயற்சி செய்ய

ஈஷ்வரோ தெளிவோடு "கரெக்ட் மாம்... அவளுக்கு என் மதிப்பு தெரியல... அதை அவளுக்கு நான் புரிய வைக்கிறேன்... ... பட் ஒன் திங்... சூர்யாவை தவிர வேறெந்த பொண்ணையும் என்னால நினைச்சு பார்க்க கூட பார்க்க முடியாது... ஐ நீட் ஹெர்... இந்த விஷயத்தில நான் உங்க பேச்சை கேட்க முடியாது மாம்...சாரி" என்று தீர்க்கமாக உரைக்க

"உன் பிடிவாதத்தை பத்தி எனக்கு நல்லா தெரியும் தேவ்... நீ செய்யனும்னு ஒரு விஷயத்தில இறங்கிட்டின்னா அதை செஞ்சி முடிச்சிடுவ... இந்த ஹேட்டிட்டியூட் பிஸ்னஸ்ல சக்ஸ்ஸஸ் ஆகலாம்... பட் ...இட்ஸ் லைஃப்.. நீ உன் விருப்பத்தை நிறைவேத்திக்க சூர்யா வாழ்க்கையில விளையாடிறது... ரொம்ப பெரிய தப்பு" என்று சீற்றத்தோடு உரைக்க
ஈஷ்வரின் பொறுமையும் கறைந்து போய் கோபம் தலைதூக்க


"நான் செய்றது பெரிய தப்புன்னா... அப்ப நீங்க செஞ்சது" என்று கேட்டான்.

"இப்ப என்ன சொன்ன தேவ்" என்று அவந்திகா புரியாமல் கேட்க

ஈஷ்வர் சூட்சமத்தோடு "நல்லா யோசிச்சு சொல்லுங்க... உங்க பர்ஸ்னல் லைஃப்ல... நீங்க எந்த தப்புமே செய்யலயா மாம்.. " என்று கேட்டான். அவந்திகா அதிர்ந்தபடி மௌனமாய் இருக்க ஈஷ்வர் மேலும்

"டேடுக்கு நடந்தது ஆக்ஸிடண்ட்டா ?"
என்று கேட்க அந்த கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை.


"என்ன பேசிற தேவ்" என்று அவந்திகா குரலை உயர்த்த

ஈஷ்வர் பொறுமையாக "டென்ஷனாகதீங்க மாம்... ரிலாக்ஸ்... நான் இதை பத்தி உங்ககிட்ட கேட்க கூடாதுன்னுதான் நினைச்சேன்... பட் ஏதோ கோபத்தில" என்று சொன்ன மறுகணம்

அவந்திகா குற்றவுணர்வோடு "தேவ்... நீ நினைக்கிற மாதிரி நான்" என்று ஏதோ சொல்ல வர ஈஷ்வரை அவரை பேசவிடாமல் "நீங்க எனக்கு எந்தவிதமான ரீஸனும் கொடுக்க வேண்டாம்... நானும் அதை பத்தி கேட்க விரும்பல... பீகாஸ் நீங்க எது செஞ்சாலும் அதுக்கு பின்னாடி ஏதோ ஸ்டிராங்கான ரீஸன் இருக்குன்னு நான் உங்களை நம்பிறேன் மாம்..." என்றான்.

அவந்திகா பேச முடியாமல் மௌனமாக இருக்க ஈஷ்வர் முடிவாக "நீங்களும் அந்த மாதிரி என்னை புரிஞ்சிக்கோங்க..." என்று சொல்லி அவந்திகாவை பேச முடியாமல் செய்துவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அப்போது ஈஷ்வரின் கோபமெல்லாம் சூர்யாவின் மீது திரும்பி இருக்க உடனே அறைக்கு வெளியே நின்ற மதியை அழைத்து "நம்மோட இந்த பிரொஜக்ட் முடிஞ்சதும் நீ ஒரு விஷயம் செய்யனும் மதி" என்றான்.

அவனும் ஆர்வமாய் "சொல்லுங்க பாஸ்" என்று கேட்க

ஈஷ்வர் வெறி கொண்ட பார்வையோடு "அந்த அபிமன்யு உயிரோட இருக்க கூடாது" என்றான்.

மதி இதை ஏற்கனவே எதிர்பார்த்தான். ஆனால் இப்போது உடனே இவ்வாறு சொல்லிய காரணம் புரியாமல் யோசனை குறியோடு நிற்க ஈஷ்வர் அவன் தோள்களில் கைவைத்தபடி "அவன் டெத் ரொம்ப மோசமா இருக்கனும் மதி... அப்படி ஒருத்தன் இருந்ததிற்கான தடம் கூட தெரிய கூடாது... முக்கியமா அவன் செத்தாலும் உயிரோட இருக்கிற மாதிரியான இம்பேகட் உருவாக்கனும்" என்றான்.

மதி குழப்பத்தோடு "அதெப்படி பாஸ்" என்று கேட்க

ஈஷ்வர் அடங்காத அதே கோபத்தோடு "தட் மீன்ஸ்... அவன் சாகனும்... ஆனா அவனோட உடம்பு யாருக்கும் கிடைக்க கூடாது... எங்கயோ காண போயிட்டான்னு நம்ப வைச்சிருவோம்... சிம்பிள்" என்றான்.

மதியும் ஆமோதித்து தலையசைக்க அவனை அங்கிருந்து செல்ல சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு வெளியேவர சூர்யா அந்த ஹோட்டலின் முன்பு வடிவமைக்கப்பட்டிருந்த கார்டனில் சிந்தனையில் ஆழ்ந்தபடி அமர்ந்திருந்ததை அவன் விழிகள் நோட்டமிட்டன. அந்த நொடி ஈஷ்வர் மனதிற்குள் 'சாரி சூர்யா... உனக்கு கொடுத்த வாக்கை என்னால காப்பாத்த முடியாது... பிகாஸ் உன் வாழ்க்கையில நீ வெறுக்கவோ காதலிக்கவோ... எதுவாயிருந்தாலும் நான் மட்டும்தான் இருக்கனும்...' என்று எண்ணி கொண்டான். இந்த எண்ணத்தை சூர்யா நேரடியாக அறிந்திருக்கவில்லை எனினும் அந்த நொடி ஒருவித பதட்டம் அவளுக்குள் சூழ்ந்து கொண்டது.

விடிந்தவுடன் மதி அங்கிருந்து செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டான். எங்கே செல்லப் போகிறோம் என்று அறிந்து கொள்ளும் நோக்கில் சூர்யா மதியிடம் "இப்ப நாம எங்க போறோம் மதி ?" என்று வினவ அவளின் கேள்விக்கான பதிலை உரைக்காமல் விழித்தபடியே நின்றான்.

சூர்யா மீண்டும் "ப்ளீஸ் மதி... சொல்லு?" என்று கேட்க மதி மனமிறிங்கினாலும் அவளிடம் ஏற்கனவே வாயை கொடுத்து மாட்டிக் கொண்டது நினைவுக்கு வர அவன் அப்போதும் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தான்.

மதி ஈஷ்வரின் அழுத்தமான விசுவாசியாயிற்றே. அவனிடமிருந்து பதிலை வாங்குவது சற்று சிரமம்தான் என எண்ணியவள் மீண்டும் மதியிடம் "எங்க போறோம்னு சொல்ல வேண்டும்.. அட்லீஸ்ட் எதில போறோம்னாச்சும்" என்று கேட்க

மதி இப்போது தன் மௌனத்தை கலைத்தபடி "கார்லதான்.. " என்றான்.

சூர்யாவால் அப்போதும் எங்கே என்று யூகிக்க முடியாமல் போக மதி அவளை நோக்கி "டைமாயிடுச்சு.. கிளம்பலாம்" என்றான்.

"நம்ம மூணு பேரும் மட்டுமா ?" என்று அவள் கேட்க அதற்கு தலையசைத்து ஆமோதிக்க அவர்கள் இருவரும் காரை நோக்கி நடந்தனர். அப்போது ஓட்டுநரும் இல்லாததை கவனித்தவள் எங்கேதான் இவர்களின் ரகசிய பயணம் என்று யோசித்தாலும் அவள் கேள்விக்கு விடை கிடைத்தபாடில்லை. இப்போதைக்கான பெரும் பிரச்சனை காரை எப்படி பார்த்தாலும் மதிதான் ஓட்டுவான் எனும் போது ஈஷ்வரோடு பின்னாடி ஒன்றாய் அமர்ந்து கொண்டு பயணிப்பதா என்ற நோக்கில் முன்புறம் இருந்து சீட்டில் அமர்ந்து கொள்ள மதி ஓட்டுநர் சீட்டில் அமரப் போனான். ஆனால் அப்போதைக்கு வந்த ஈஷ்வர் சூர்யாவின் எண்ணத்தை கணித்தபடி மதியை கண்ணசைத்து பின்னாடி அமரச் சொல்லிவிட்டு ஓட்டுநர் சீட்டில் அமர்ந்து கொள்ள மதி குழப்பத்தோடு "நீங்க போய் டிரைவ் பண்ணி... நான் பின்னாடி" என்று கேட்க "நான் உன்னை விட பெட்டரா ஓட்டுவன் மதி... போய் உட்காரு" என்றான்.

சூர்யா எரிச்சலோடு தலையில் அடித்து கொள்ள கொங்கு நாட்டு பிரதேசத்தில் மீண்டும் ஒரு பயணம். விர்ரென சென்ற அந்த கார் சென்ற இடமெல்லாம் பசுமை படர்ந்திருக்க கொங்கு நாடு முன்பு போல் இப்போதும் செழித்திருந்தது என்று சொல்ல முடியாமல் போனாலும், அதற்கே உரித்தான சௌந்தர்யத்தை அது இன்னும் மிச்சம் மீதியாய் தன்னகத்தே தேக்கி வைததிருநத்து என்ற வண்ணம் கடந்து வந்த இடங்கள் காட்சியளித்தன.

ஆனால் அந்த அழகான காட்சிகளை சூர்யாவின் மனம் ரசிக்கும் நிலையில் இல்லை. மறுபுறம் ஈஷ்வருக்கோ சூர்யாவை தவிர வேறெதுவும் ரசனைக்குரியதாக இல்லை. ஈஷ்வரின் கவனமோ காரை ஓட்டுவதைவிடவும் சூர்யாவின் மீதே லயித்திருக்க மதிக்கோ பத்திரமாய் போய் சேர்வோமா என்ற கவலை ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற் போல் சூர்யாவின் கைப்பேசி ஒலிக்க அது சாதாரணமான அழைப்பாய் இருந்தால் யாருக்கும் பிரச்சனையில்லை. ஆனால் அந்த அழைப்பு அபிமன்யுவிடம் இருந்து வந்தது என்பதை சூர்யாவின் பார்வையில் தெரிந்த வியப்புகுறி அப்பட்டமாய் உரைக்க ஒரு பக்கம் அவள் அழைப்பை ஏற்காமல் ஈஷ்வரை திரும்பி நோக்கினாள். அந்த ஒரு பார்வையிலேயே ஈஷ்வர் அதனை கணிக்க சூர்யா அபிமன்யுவின் குரலாயாவது கேட்டுவிடலாம் என்ற நொடியில் அழைப்பை ஏற்க போக ஈஷ்வரின் கரம் அவளின் கரத்தை கெட்டியாய் பிடித்து அவளை தடுத்தது.

ஈஷ்வர் அப்போது காரை ஓட்டுவதைவிடவும் சூர்யாவை அபிமன்யுவிடம் பேசவிடக் கூடாது என்ற நோக்கில் "சூர்யா வேண்டாம்" என்று சொல்ல அவளோ கைப்பேசியை விடாமல் "நான் அபிக்கிட்ட பேசினோம்" என்றாள்.

"நான் விடமாட்டேன்" என்று அவனும் அவளின் கைப்பேசியை பறிக்க முயல அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த போராட்டத்தில் மதியோ என்ன செய்வது என்று அச்சமுற அவன் எண்ணத்திற்கு ஏற்றாற் போலவே கார் அதன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
Ipdi cliff hanger la vidrathey ungaluku velaya pochu??
Super update akka???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடப்பாவி, ஈஷ்வர் தேவ்?
சூர்யாவை, அபிமன்யுவிடம்
போனில் பேசக் கூட
விட மாட்டேங்கிறானே பா,
மோனிஷா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
போன பிறவியில்தான்
விஷ்ணுவர்த்தனை,
கொன்று, அநியாயமா
ருத்ர தேவன் ஜெயித்தான்
இந்தப் பிறவியிலாவது,
விஷ்ணுவர்த்தன் @
அபிமன்யுதான்
ஜெயிக்கணும் பா
ஈஷ்வர் தோற்க
வேண்டும்,
மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்தப் பிறவியிலாவது,
காதலர்களை,
ஒன்று சேர்த்து
வைங்கப்பா,
மோனிஷா டியர்
 




Prabah

புதிய முகம்
Joined
Jan 17, 2018
Messages
3
Reaction score
4
Location
Malaysia
Another thrilling chapter... Is it weird that I admire Eswar as much as I admire Abhi and Surya... ;)
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top