Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
37
திருமண வைபவம்
அவன் உள்ளே நுழைந்த மறுகணமே அவள் அந்த அறையின் ஜன்னல் பக்கமாய் முகத்தை திருப்பியபடி நின்று கொண்டாள். அந்த நிராகரிப்பு அவனை எந்தளவுக்கு காயப்படுத்தியது என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் இவள் இன்று நேற்று அப்படி நடந்து கொள்ளவில்லை. ஒரு வருட காலமாய் இப்படிதான் நடந்து கொண்டிருந்தாள்.
அந்த மோசமான நிகழ்விற்கு பிறகு அவன் வாழ்க்கை முற்றிலும் தலைகீழாய் மாறியிருந்தது.
விதி இப்படி ஒரு மோசமான விளையாட்டை அவர்கள் வாழ்வில் விளையாடிவிடும் என்று எண்ணியிருப்பார்களா என்ன? அப்படி என்ன கோபம் அந்த கடவுளுக்கு இவர்கள் மீதும் இவர்களின் காதல் மீதும்.
அதற்கான விடை இப்போதைக்கு நம்மிடம் இல்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சூர்யாவால் ஈஷ்வரின் ரூபத்தில் இருக்கும் அபிமன்யுவை ஏற்று கொள்ளவே முடியாது. அது அவளுக்கு மரணத்திற்கு நிகரான வேதனை. எந்த பெண்ணுக்கும் வாழ்வில் வந்துவிடக் கூடாத சோதனை.
அன்று நடந்த விபத்தில் அபிமன்யு ஈஷ்வர் இருவருமே உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றே எல்லா மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். ஆனால் இருவருமே அந்த ஜென்மத்திலும் நிறைவேறாத ஆசைகளோடு மரணிக்க தயாராகயில்லை. அதிலும் அபிமன்யுவின் தேகம் முழுவதும் காயமுற்று காப்பாற்றவே முடியாது என்ற நிலையிலும் அவனை உயிர்ப்பித்து வைத்திருந்தது அவனின் உறுதியான மனோதிடம்தான் என்று சொல்ல வேண்டும்.
டாக்டர். வைத்தீஸ்வரனுக்கு மகனை காப்பாற்ற முடியாது என்று நன்றாகவே தெரிந்து போனது. ஈஷ்வரையாவது காப்பாற்றிவிட முடியுமா என்ற முயற்சியும் கிட்டதட்ட தோல்விதான். ஏற்கனவே ஒரு தடவை அவன் மோசமான விபத்தில் சிக்கி தலையில் காயப்பட்டிருந்ததினால், இம்முறை அவன் தலையில் உண்டான காயம் அவனை மூளைச்சாவடைய செய்திருந்தது.
ஆனால் இதயம் மட்டும் துடித்து கொண்டிருக்க, அப்போதுதான் வைத்தீஸ்வரனுக்கு ஒரு விபரீதமான எண்ணம் தோன்றிற்று. அதை அவந்திகாவிடம் சொல்ல மகனை மொத்தமாய் பறிகொடுக்க விரும்பாதவள் அந்த முயற்சிக்கு ஒப்புக் கொண்டாள்.
உலகின் அத்தனை திறமையான மூளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரவழைக்கப்பட, இதுவரை நிகழாத அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒருவன் உடலாகவும் இன்னொருவன் உயிராகவும் மாறிய அதிசயம் அது.
அந்த மரணப் போராட்டத்தில் மீண்டும் யார் உயிர்த்தெழுந்தனர் என்பதை சொல்வதற்கில்லை. ஆனால் ஈஷ்வரின்
சிதைந்து போன நினைவுகள் அகற்றப்பட்டு அபிமன்யுவின் நினைவுகள் அவனுக்குள் புகுத்தப்பட்டன. அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதே எனினும் ஈஷ்வராயிருக்கும் அபிமன்யு கண்விழிக்க நாட்கள் கடந்தன.
அபிமன்யு தன் கனவில் அவனின் சிரம் துண்டிக்கப்பட்டு தரையில் வீழ்ந்து கிடப்பதை பார்த்த நொடி அதிர்ச்சியோடு கண்விழிக்க, அவன் மீண்டும் உயிர்பெற்று எழுந்தான். அபிமன்யுவின் சாம்பலில் இருந்து , ஈஷ்வரின் உடலுக்குள் மீண்டும் ஒரு பீனக்ஸ் பறவையாய் அபிமன்யு உயிர்த்தெழுந்த அதே சமயம், மீண்டும் அபிமன்யுவின் ஞாபகங்களை சுமந்தபடி ஈஷ்வரும் உயிர்த்தெழுந்தான்.
அபிமன்யுவாய் ஈஷ்வர் விழித்தெழுந்த நொடி தான் பிழைத்துவிட்டோம் என அவன் ஆனந்தம் கொள்வதா, இல்லை தன் தேகத்தை தொலைத்துவிட்டதை எண்ணி வேதனைப்படுவதா? என்று பெரும் சிக்கலான மனநிலையில் மாட்டிக் கொண்டான்.
மூளை மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒருவனின் மனநிலையை மொத்தமாய் பாதிக்க கூடிய ஒன்று.
ஒருவன் தான் வாழ்ந்த தேகத்திலிருந்து இன்னொருவனின் உடலோடு பொருத்திக் கொள்வது யாருக்காக இருந்தாலும் அத்தனை சுலபமான காரியம் அல்ல. ஆனால் அபிமன்யு அசாத்தியமானவான். அவன் மனோபலத்தோடு எதிர்கொண்டு அத்தகைய மாற்றத்தையும் ஏற்றுகொண்டான்.
அபியின் குடும்பத்தில் உள்ள எல்லோருமே மெல்ல மெல்ல அந்த மாற்றத்தை ஏற்றுகொள்ள, அவந்திகாவிற்கும் அந்த மாறுதல் ஈஷ்வரின் இழப்பை முற்றிலுமாய் மறக்கடித்திருந்தது.
ஆனால் அபிமன்யுவால் சாத்தியப்படாத ஒன்று, அந்த மாற்றத்தை சூர்யாவை ஏற்க வைப்பது. எப்போது அவன் அந்த அறுவை சிகிச்சையில் ஈஷ்வராய் உயிர்த்தெழுந்தானோ அன்றிலிருந்து சூர்யா அவனிடம் பேச அல்ல, பார்க்க கூட தவிர்த்திருந்தாள். அந்த ஒரு வருடத்தில் பலமுறை அபிமன்யு முயன்றும் சூர்யா அவனை பார்த்து பேசவும் தயாராயில்லை.
எல்லோருமே சேர்ந்து ஆறு மாதித்திற்கு முன்பு அர்ஜுன் ரம்யா திருமணத்தோடு சேர்த்து சூர்யா அபியின் திருமணத்தையும் ஏற்பாடு செய்ய, அவளோ முரண்டு பிடித்து அதனை நடக்கவிடாமல் தடுத்தும்விட்டாள்.
இறுதியாய் அர்ஜுனிற்கும் ரம்யாவிற்கும் மட்டும் திருமணம் நிகழ்ந்துவிட்டிருந்தது. ஆனால் அப்போதும் விடாமல் எல்லோரும் அவளை திருமணத்திற்கு கட்டாயப்படுத்த அவள் தப்பித்து கொள்ளும் விதமாய் ஆறு மாத அவகாசம் கேட்டாள். இப்போது அந்த அவகாசம் முடிவுற்றிருந்தது. மீண்டும் அவர்களுக்களான திருமண ஏற்பாடுகள் நடைபெற, கத்தி முனையில் நிற்கும் நிலைமைதான் சூர்யாவிற்கு. அவள் முடிந்த வரையில் அந்த திருமணத்தை நிறுத்திவிடவே போராடினாள்.
ஈஷ்வரால் ஏற்பட்ட மோசமான அனுபவங்களை அவளால் மறக்கவே முடியவில்லை. அபிமன்யுவின் ஞாபகங்களை சுமந்து கொண்டிருந்தாலும் அது ஈஷ்வரின் உடம்புதானே. எப்படி அவளால் அத்தகைய ஒரு நிலைமையை ஏற்று கொள்ள முடியும்.
அபிமன்யுவும் அவளின் நிலையை புரிந்து கொண்டு அவளை ஒருவாறு தொந்தரவு செய்யாமல் காத்திருந்தான். ஆனால் திருமண நடந்துவிட்டால் எல்லாமே பழகிப் போய்விடும் என்று அவன் நம்பியிருந்த நிலையில் இன்று மீண்டும் அவளின் பிடிவாதமும் நிராகரிப்பும் அவனின் அத்தனை நாள் பொறுமையை தூள் தூளாய் தகர்ந்திருந்தது.
அபிமன்யு அந்த அறைகதவை மூடிவிட்டு அவளை நோக்கி வர சூர்யா தவிப்போடு "ப்ளீஸ் அபி... ஸ்டே தேர்... எனக்கு அந்த முகத்தை கூட பார்க்க வேண்டாம்" என்றாள்.
அவன் அதற்கு மேல் முன்னேறி வராமல் "ஸோ நீ என் முகத்தை மட்டும்தான் பார்க்கிற... என் மனசை இல்ல... அப்படிதானே ?" என்று கோபத் தொனியில் கேட்க
சூர்யா திரும்பாமலே, "அப்படி இல்ல அபி... நான் உங்களை எந்தளவுக்கு நேசிக்கிறேனோ... அதே அளவுக்கு அந்த ஈஷ்வரை வெறுக்கிறேன்... ஏன்னா அவன் அந்தளவுக்கு என்னை டார்ச்சர் பண்ணியிருக்கான்... நான் அந்த முகத்தில உங்களை பார்த்தா... அதெல்லாம்தான் எனக்கு ஞாபகத்துக்கும் வரும்... ஏன் உங்க மேலயே எனக்கு வெறுப்பு உண்டாயிடுமோன்னு பயமா இருக்கு...அதனாலதான் சொல்றேன்... ப்ளீஸ் இந்த கல்யாணம் வேண்டாம்..." என்றாள்.
அபிமன்யு கோபத்தோடு, "இதுக்காகவாடி நான் கஷ்டப்பட்டு அவ்வளவு வேதனையிலும் என் உயிரை பிடிச்சிட்டிருந்தேன்... இப்படி எல்லாம் நடக்கும்னு அப்பவே தெரிஞ்சிறிதா நான் நிம்மதியா செத்திருப்பேன்ல... நீயும் நிம்மதியா இருந்திருப்ப" என்று உரைக்க
சூர்யா பதறியபடி திரும்பியவள் அவனை பார்த்தும் பார்க்காமலும் "ப்ளீஸ் அபி... இவ்வளவு ஹார்ஷா பேசாதீங்க... எனக்கு கஷ்டமா இருக்கு" என்றாள்.
"நீ என்கிட்ட பேசிறதும் அப்படிதான் இருக்கு சூர்யா... இல்ல தெரியாமதான் கேட்கிறேன்... திடீர்ன்னு எனக்கு ஒரு அக்ஸிடென்ட்ல முகமெல்லாம் சிதைஞ்சி போயிருந்தா என்ன பண்ணிருப்ப... விட்டுவிட்டு போயிடுவியா ?!" என்று கேட்டான்.
"அதெப்படி அபி நான் அந்தமாதிரி உங்களை விட்டுவிட்டு போவேன்... நான் உங்களை உண்மையா நேசிக்கிறேன்... " என்று அவள் உரைக்க
அபி அவளிடம் "அப்போ அப்படி ஒரு விபத்து எனக்கு நடந்திடுச்சுன்னு நினைச்சுக்கோ... நான் இன்னைக்கு என்னையே மொத்தமாய் இழந்துட்டு வேறொருவனா நிக்கிறேன்னா... அது உனக்காகதான்... " என்றான்.
சூர்யா தீர்க்கமான பார்வையோடு "எனக்கு புரியுது அபி... பட் பிரச்சனை அதுமட்டுமில்ல... நீங்க சர்வைவ் ஆகிறதே ஈஷ்வரோட உடம்புக்குள்ள... அப்படி இருக்கும் போது எப்படி உங்களுக்கு நான் மனைவியா..." என்றாள் தயக்கத்தோடு.
"ம்ம்ம்... அதான் உன் பிரச்சனைன்னா... பைஃன்... உன் விருப்பமில்லாம நான் உன்னை நெருங்க கூட மாட்டேன்... எனக்கு வாழ்க்கை பூரா உன் காதல் மட்டும் இருந்தாலே போதும்... நத்திங் எல்ஸ்... என் மேல நம்பிக்கை இருந்தா நீ நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சி மணமேடையில் வந்து உட்காரு.. இல்லன்னா உன்னை பொறுத்த வரைக்கும் இந்த அபிமன்யு செத்துட்டான்னு நினைச்சுக்கோ" என்று சொல்லிவிட்டு அறையை விட்டு அபிமன்யு விறுவிறுவென வெளியேறினான்.
சூர்யா அவன் வார்த்தைகளை கேட்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தமாய் அவளுக்கு தெரிந்தது அவன் கொண்ட காதல் மட்டுமே. அவளின் பிடிவாதம் அவனின் காதலின் முன் பொய்த்துப் போனது. ஆதலால் அவள் மணமேடையில் வந்து அமர்ந்தாள்.
திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டிருக்க ரொம்பவும் வியப்புக்குரிய விஷயம் அவந்திகா இயல்பாக நின்றபடி எல்லோரையும் வரவேற்று விசாரித்து கொண்டிருந்தாள். எத்தனையோ பெரிய ஆராய்ச்சியாளர்களால் முடியாத ஒன்றை அபிமன்யுவின் திறமை சாதித்து காட்டியிருந்தது.
சுந்தரும் சந்தியாவும் இத்தனை வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதும் மற்றொரு வியப்பு. அர்ஜுன் மனைவியை கவனித்து கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்க, இம்முறை நடப்பதெல்லாம் நன்மையாய் இருக்க வேண்டும் என்பதே அவனின் ஆழ் மனதின் கவலை.
சுகந்திக்கு மகன் எந்த உருவத்தில் இருந்தாலும் அவன் இருக்கிறான் என்பதே பெரிய ஆறுதல். வைத்தீஸ்வரன் செய்தது சாதாரண காரியமல்ல. சாத்தியமற்ற ஒன்றாய் மருத்துவ துறையில் கருதப்படும் பிரெயின் டிரான்ஸ்பிளேன்டேஷனை தன் மகனை வைத்தே செய்து காட்டிவிட்டார். அது மருத்துவ உலகின் மையில் கல். ஆனால் உண்மையென்னவினில் அது எப்படி சாத்தியமானது என்பது இன்னுமும் புரியாத புதிராகவே இருந்தது.
இதில் அவருடைய திறமையை விட அபிமன்யுவின் மனோபலமே அதிகம் பங்காற்றியதென்று அவர் நன்கறிந்திருந்தார்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் அங்கே உள்ள இவர்களை தவிர மணமேடையில் அமர்ந்திருப்பது அபிமன்யுதான் என்பது யாருக்கும் தெரியாது. அவன் இந்த உலகை பொறுத்த வரை ஈஷ்வர் தேவ்தான். ஏனெனில் அவந்திகா அந்த பெரிய சமாராஜ்ஜித்தை நிர்வகிக்கும் ஈஷ்வர் தேவ் மரணித்துவிட்டான் என்பதை அறிவிக்க விரும்பவில்லை.
அவனின் இறப்பை அறிந்து கொண்டால் எதிராய் இருக்கும் பல நிறுவனங்களால் ரா க்ரூப் ஆஃப் கம்பெனிஸுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பது அவரின் எண்ணம். அந்த உண்மை எப்போதும் ரகசியமாகவே இருக்க ஒருவிதத்தில் அபிமன்யுவும் சம்மதித்தான்.
அதற்காக அபிமன்யு அவர்களிடம் இனி ரா மெடிகல் ரிசர்ச் சென்டர், நோய்களை பாமர மக்களின் மீது செலுத்தி எந்தவித ஆராய்ச்சியும் செய்து அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடாது எனவும் உறுதி பெற்று கொண்டான். ஆனால் இன்று நிலைமையே வேறு. அபிமன்யுவின் திறமையை பார்த்து அவந்திகா அவனை தன் வாரிசாய் ஏற்று அந்த சாம்ராஜ்ஜியத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுக்கவும் தயாராக இருந்தாள்.
திருமண சடங்குகள் எல்லாம் இனிதே நடைபெற, சூர்யாவால் மட்டும் அவற்றை எதையும் விரும்பி முழுமையாய் ஏற்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் தவித்தாள். ஒருவகையில் இப்பிறவியில் சூர்யாவின் கனவு அரங்கேறிவிட்டது.
ஆனால் சூர்யாவும் அபிமன்யுவும் தங்கள் ஜென்மாந்திர காதல் விருட்சத்தை காப்பாற்றிக் கொள்ள, கனவிலும் சாத்தியமில்லாத பேரிழப்பை ஏற்று கொள்ள நேரிட்டது பெரும் துயர்தான்.
திருமண வைபவம்
அவன் உள்ளே நுழைந்த மறுகணமே அவள் அந்த அறையின் ஜன்னல் பக்கமாய் முகத்தை திருப்பியபடி நின்று கொண்டாள். அந்த நிராகரிப்பு அவனை எந்தளவுக்கு காயப்படுத்தியது என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் இவள் இன்று நேற்று அப்படி நடந்து கொள்ளவில்லை. ஒரு வருட காலமாய் இப்படிதான் நடந்து கொண்டிருந்தாள்.
அந்த மோசமான நிகழ்விற்கு பிறகு அவன் வாழ்க்கை முற்றிலும் தலைகீழாய் மாறியிருந்தது.
விதி இப்படி ஒரு மோசமான விளையாட்டை அவர்கள் வாழ்வில் விளையாடிவிடும் என்று எண்ணியிருப்பார்களா என்ன? அப்படி என்ன கோபம் அந்த கடவுளுக்கு இவர்கள் மீதும் இவர்களின் காதல் மீதும்.
அதற்கான விடை இப்போதைக்கு நம்மிடம் இல்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சூர்யாவால் ஈஷ்வரின் ரூபத்தில் இருக்கும் அபிமன்யுவை ஏற்று கொள்ளவே முடியாது. அது அவளுக்கு மரணத்திற்கு நிகரான வேதனை. எந்த பெண்ணுக்கும் வாழ்வில் வந்துவிடக் கூடாத சோதனை.
அன்று நடந்த விபத்தில் அபிமன்யு ஈஷ்வர் இருவருமே உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றே எல்லா மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். ஆனால் இருவருமே அந்த ஜென்மத்திலும் நிறைவேறாத ஆசைகளோடு மரணிக்க தயாராகயில்லை. அதிலும் அபிமன்யுவின் தேகம் முழுவதும் காயமுற்று காப்பாற்றவே முடியாது என்ற நிலையிலும் அவனை உயிர்ப்பித்து வைத்திருந்தது அவனின் உறுதியான மனோதிடம்தான் என்று சொல்ல வேண்டும்.
டாக்டர். வைத்தீஸ்வரனுக்கு மகனை காப்பாற்ற முடியாது என்று நன்றாகவே தெரிந்து போனது. ஈஷ்வரையாவது காப்பாற்றிவிட முடியுமா என்ற முயற்சியும் கிட்டதட்ட தோல்விதான். ஏற்கனவே ஒரு தடவை அவன் மோசமான விபத்தில் சிக்கி தலையில் காயப்பட்டிருந்ததினால், இம்முறை அவன் தலையில் உண்டான காயம் அவனை மூளைச்சாவடைய செய்திருந்தது.
ஆனால் இதயம் மட்டும் துடித்து கொண்டிருக்க, அப்போதுதான் வைத்தீஸ்வரனுக்கு ஒரு விபரீதமான எண்ணம் தோன்றிற்று. அதை அவந்திகாவிடம் சொல்ல மகனை மொத்தமாய் பறிகொடுக்க விரும்பாதவள் அந்த முயற்சிக்கு ஒப்புக் கொண்டாள்.
உலகின் அத்தனை திறமையான மூளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரவழைக்கப்பட, இதுவரை நிகழாத அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒருவன் உடலாகவும் இன்னொருவன் உயிராகவும் மாறிய அதிசயம் அது.
அந்த மரணப் போராட்டத்தில் மீண்டும் யார் உயிர்த்தெழுந்தனர் என்பதை சொல்வதற்கில்லை. ஆனால் ஈஷ்வரின்
சிதைந்து போன நினைவுகள் அகற்றப்பட்டு அபிமன்யுவின் நினைவுகள் அவனுக்குள் புகுத்தப்பட்டன. அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதே எனினும் ஈஷ்வராயிருக்கும் அபிமன்யு கண்விழிக்க நாட்கள் கடந்தன.
அபிமன்யு தன் கனவில் அவனின் சிரம் துண்டிக்கப்பட்டு தரையில் வீழ்ந்து கிடப்பதை பார்த்த நொடி அதிர்ச்சியோடு கண்விழிக்க, அவன் மீண்டும் உயிர்பெற்று எழுந்தான். அபிமன்யுவின் சாம்பலில் இருந்து , ஈஷ்வரின் உடலுக்குள் மீண்டும் ஒரு பீனக்ஸ் பறவையாய் அபிமன்யு உயிர்த்தெழுந்த அதே சமயம், மீண்டும் அபிமன்யுவின் ஞாபகங்களை சுமந்தபடி ஈஷ்வரும் உயிர்த்தெழுந்தான்.
அபிமன்யுவாய் ஈஷ்வர் விழித்தெழுந்த நொடி தான் பிழைத்துவிட்டோம் என அவன் ஆனந்தம் கொள்வதா, இல்லை தன் தேகத்தை தொலைத்துவிட்டதை எண்ணி வேதனைப்படுவதா? என்று பெரும் சிக்கலான மனநிலையில் மாட்டிக் கொண்டான்.
மூளை மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒருவனின் மனநிலையை மொத்தமாய் பாதிக்க கூடிய ஒன்று.
ஒருவன் தான் வாழ்ந்த தேகத்திலிருந்து இன்னொருவனின் உடலோடு பொருத்திக் கொள்வது யாருக்காக இருந்தாலும் அத்தனை சுலபமான காரியம் அல்ல. ஆனால் அபிமன்யு அசாத்தியமானவான். அவன் மனோபலத்தோடு எதிர்கொண்டு அத்தகைய மாற்றத்தையும் ஏற்றுகொண்டான்.
அபியின் குடும்பத்தில் உள்ள எல்லோருமே மெல்ல மெல்ல அந்த மாற்றத்தை ஏற்றுகொள்ள, அவந்திகாவிற்கும் அந்த மாறுதல் ஈஷ்வரின் இழப்பை முற்றிலுமாய் மறக்கடித்திருந்தது.
ஆனால் அபிமன்யுவால் சாத்தியப்படாத ஒன்று, அந்த மாற்றத்தை சூர்யாவை ஏற்க வைப்பது. எப்போது அவன் அந்த அறுவை சிகிச்சையில் ஈஷ்வராய் உயிர்த்தெழுந்தானோ அன்றிலிருந்து சூர்யா அவனிடம் பேச அல்ல, பார்க்க கூட தவிர்த்திருந்தாள். அந்த ஒரு வருடத்தில் பலமுறை அபிமன்யு முயன்றும் சூர்யா அவனை பார்த்து பேசவும் தயாராயில்லை.
எல்லோருமே சேர்ந்து ஆறு மாதித்திற்கு முன்பு அர்ஜுன் ரம்யா திருமணத்தோடு சேர்த்து சூர்யா அபியின் திருமணத்தையும் ஏற்பாடு செய்ய, அவளோ முரண்டு பிடித்து அதனை நடக்கவிடாமல் தடுத்தும்விட்டாள்.
இறுதியாய் அர்ஜுனிற்கும் ரம்யாவிற்கும் மட்டும் திருமணம் நிகழ்ந்துவிட்டிருந்தது. ஆனால் அப்போதும் விடாமல் எல்லோரும் அவளை திருமணத்திற்கு கட்டாயப்படுத்த அவள் தப்பித்து கொள்ளும் விதமாய் ஆறு மாத அவகாசம் கேட்டாள். இப்போது அந்த அவகாசம் முடிவுற்றிருந்தது. மீண்டும் அவர்களுக்களான திருமண ஏற்பாடுகள் நடைபெற, கத்தி முனையில் நிற்கும் நிலைமைதான் சூர்யாவிற்கு. அவள் முடிந்த வரையில் அந்த திருமணத்தை நிறுத்திவிடவே போராடினாள்.
ஈஷ்வரால் ஏற்பட்ட மோசமான அனுபவங்களை அவளால் மறக்கவே முடியவில்லை. அபிமன்யுவின் ஞாபகங்களை சுமந்து கொண்டிருந்தாலும் அது ஈஷ்வரின் உடம்புதானே. எப்படி அவளால் அத்தகைய ஒரு நிலைமையை ஏற்று கொள்ள முடியும்.
அபிமன்யுவும் அவளின் நிலையை புரிந்து கொண்டு அவளை ஒருவாறு தொந்தரவு செய்யாமல் காத்திருந்தான். ஆனால் திருமண நடந்துவிட்டால் எல்லாமே பழகிப் போய்விடும் என்று அவன் நம்பியிருந்த நிலையில் இன்று மீண்டும் அவளின் பிடிவாதமும் நிராகரிப்பும் அவனின் அத்தனை நாள் பொறுமையை தூள் தூளாய் தகர்ந்திருந்தது.
அபிமன்யு அந்த அறைகதவை மூடிவிட்டு அவளை நோக்கி வர சூர்யா தவிப்போடு "ப்ளீஸ் அபி... ஸ்டே தேர்... எனக்கு அந்த முகத்தை கூட பார்க்க வேண்டாம்" என்றாள்.
அவன் அதற்கு மேல் முன்னேறி வராமல் "ஸோ நீ என் முகத்தை மட்டும்தான் பார்க்கிற... என் மனசை இல்ல... அப்படிதானே ?" என்று கோபத் தொனியில் கேட்க
சூர்யா திரும்பாமலே, "அப்படி இல்ல அபி... நான் உங்களை எந்தளவுக்கு நேசிக்கிறேனோ... அதே அளவுக்கு அந்த ஈஷ்வரை வெறுக்கிறேன்... ஏன்னா அவன் அந்தளவுக்கு என்னை டார்ச்சர் பண்ணியிருக்கான்... நான் அந்த முகத்தில உங்களை பார்த்தா... அதெல்லாம்தான் எனக்கு ஞாபகத்துக்கும் வரும்... ஏன் உங்க மேலயே எனக்கு வெறுப்பு உண்டாயிடுமோன்னு பயமா இருக்கு...அதனாலதான் சொல்றேன்... ப்ளீஸ் இந்த கல்யாணம் வேண்டாம்..." என்றாள்.
அபிமன்யு கோபத்தோடு, "இதுக்காகவாடி நான் கஷ்டப்பட்டு அவ்வளவு வேதனையிலும் என் உயிரை பிடிச்சிட்டிருந்தேன்... இப்படி எல்லாம் நடக்கும்னு அப்பவே தெரிஞ்சிறிதா நான் நிம்மதியா செத்திருப்பேன்ல... நீயும் நிம்மதியா இருந்திருப்ப" என்று உரைக்க
சூர்யா பதறியபடி திரும்பியவள் அவனை பார்த்தும் பார்க்காமலும் "ப்ளீஸ் அபி... இவ்வளவு ஹார்ஷா பேசாதீங்க... எனக்கு கஷ்டமா இருக்கு" என்றாள்.
"நீ என்கிட்ட பேசிறதும் அப்படிதான் இருக்கு சூர்யா... இல்ல தெரியாமதான் கேட்கிறேன்... திடீர்ன்னு எனக்கு ஒரு அக்ஸிடென்ட்ல முகமெல்லாம் சிதைஞ்சி போயிருந்தா என்ன பண்ணிருப்ப... விட்டுவிட்டு போயிடுவியா ?!" என்று கேட்டான்.
"அதெப்படி அபி நான் அந்தமாதிரி உங்களை விட்டுவிட்டு போவேன்... நான் உங்களை உண்மையா நேசிக்கிறேன்... " என்று அவள் உரைக்க
அபி அவளிடம் "அப்போ அப்படி ஒரு விபத்து எனக்கு நடந்திடுச்சுன்னு நினைச்சுக்கோ... நான் இன்னைக்கு என்னையே மொத்தமாய் இழந்துட்டு வேறொருவனா நிக்கிறேன்னா... அது உனக்காகதான்... " என்றான்.
சூர்யா தீர்க்கமான பார்வையோடு "எனக்கு புரியுது அபி... பட் பிரச்சனை அதுமட்டுமில்ல... நீங்க சர்வைவ் ஆகிறதே ஈஷ்வரோட உடம்புக்குள்ள... அப்படி இருக்கும் போது எப்படி உங்களுக்கு நான் மனைவியா..." என்றாள் தயக்கத்தோடு.
"ம்ம்ம்... அதான் உன் பிரச்சனைன்னா... பைஃன்... உன் விருப்பமில்லாம நான் உன்னை நெருங்க கூட மாட்டேன்... எனக்கு வாழ்க்கை பூரா உன் காதல் மட்டும் இருந்தாலே போதும்... நத்திங் எல்ஸ்... என் மேல நம்பிக்கை இருந்தா நீ நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சி மணமேடையில் வந்து உட்காரு.. இல்லன்னா உன்னை பொறுத்த வரைக்கும் இந்த அபிமன்யு செத்துட்டான்னு நினைச்சுக்கோ" என்று சொல்லிவிட்டு அறையை விட்டு அபிமன்யு விறுவிறுவென வெளியேறினான்.
சூர்யா அவன் வார்த்தைகளை கேட்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தமாய் அவளுக்கு தெரிந்தது அவன் கொண்ட காதல் மட்டுமே. அவளின் பிடிவாதம் அவனின் காதலின் முன் பொய்த்துப் போனது. ஆதலால் அவள் மணமேடையில் வந்து அமர்ந்தாள்.
திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டிருக்க ரொம்பவும் வியப்புக்குரிய விஷயம் அவந்திகா இயல்பாக நின்றபடி எல்லோரையும் வரவேற்று விசாரித்து கொண்டிருந்தாள். எத்தனையோ பெரிய ஆராய்ச்சியாளர்களால் முடியாத ஒன்றை அபிமன்யுவின் திறமை சாதித்து காட்டியிருந்தது.
சுந்தரும் சந்தியாவும் இத்தனை வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதும் மற்றொரு வியப்பு. அர்ஜுன் மனைவியை கவனித்து கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்க, இம்முறை நடப்பதெல்லாம் நன்மையாய் இருக்க வேண்டும் என்பதே அவனின் ஆழ் மனதின் கவலை.
சுகந்திக்கு மகன் எந்த உருவத்தில் இருந்தாலும் அவன் இருக்கிறான் என்பதே பெரிய ஆறுதல். வைத்தீஸ்வரன் செய்தது சாதாரண காரியமல்ல. சாத்தியமற்ற ஒன்றாய் மருத்துவ துறையில் கருதப்படும் பிரெயின் டிரான்ஸ்பிளேன்டேஷனை தன் மகனை வைத்தே செய்து காட்டிவிட்டார். அது மருத்துவ உலகின் மையில் கல். ஆனால் உண்மையென்னவினில் அது எப்படி சாத்தியமானது என்பது இன்னுமும் புரியாத புதிராகவே இருந்தது.
இதில் அவருடைய திறமையை விட அபிமன்யுவின் மனோபலமே அதிகம் பங்காற்றியதென்று அவர் நன்கறிந்திருந்தார்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் அங்கே உள்ள இவர்களை தவிர மணமேடையில் அமர்ந்திருப்பது அபிமன்யுதான் என்பது யாருக்கும் தெரியாது. அவன் இந்த உலகை பொறுத்த வரை ஈஷ்வர் தேவ்தான். ஏனெனில் அவந்திகா அந்த பெரிய சமாராஜ்ஜித்தை நிர்வகிக்கும் ஈஷ்வர் தேவ் மரணித்துவிட்டான் என்பதை அறிவிக்க விரும்பவில்லை.
அவனின் இறப்பை அறிந்து கொண்டால் எதிராய் இருக்கும் பல நிறுவனங்களால் ரா க்ரூப் ஆஃப் கம்பெனிஸுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பது அவரின் எண்ணம். அந்த உண்மை எப்போதும் ரகசியமாகவே இருக்க ஒருவிதத்தில் அபிமன்யுவும் சம்மதித்தான்.
அதற்காக அபிமன்யு அவர்களிடம் இனி ரா மெடிகல் ரிசர்ச் சென்டர், நோய்களை பாமர மக்களின் மீது செலுத்தி எந்தவித ஆராய்ச்சியும் செய்து அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடாது எனவும் உறுதி பெற்று கொண்டான். ஆனால் இன்று நிலைமையே வேறு. அபிமன்யுவின் திறமையை பார்த்து அவந்திகா அவனை தன் வாரிசாய் ஏற்று அந்த சாம்ராஜ்ஜியத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுக்கவும் தயாராக இருந்தாள்.
திருமண சடங்குகள் எல்லாம் இனிதே நடைபெற, சூர்யாவால் மட்டும் அவற்றை எதையும் விரும்பி முழுமையாய் ஏற்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் தவித்தாள். ஒருவகையில் இப்பிறவியில் சூர்யாவின் கனவு அரங்கேறிவிட்டது.
ஆனால் சூர்யாவும் அபிமன்யுவும் தங்கள் ஜென்மாந்திர காதல் விருட்சத்தை காப்பாற்றிக் கொள்ள, கனவிலும் சாத்தியமில்லாத பேரிழப்பை ஏற்று கொள்ள நேரிட்டது பெரும் துயர்தான்.
Last edited: