நான் நேற்று தான் இந்த கதையை படித்து முடித்தேன்.. என்னடா இவ இப்போ தானா னு யோசிக்காதீங்க.. எல்லாம் ஒரு ஐஸ்கிரீம் கதையை அனக்கொண்டா கதையாக நினைத்து தான் படிக்க வரல..
முன்ஜென்மம்.. உண்மையா பொய்யா என்று தெரியாத ஒரு கற்பனை... அதில் நகரும் கதை கண்ணின் முன் அந்த காலத்து இயற்கை வளங்களையும் மனிதர்களையும் உலா விட்டது..
ருத்ர தேவன்... வாவ் என்று பார்க்க வைத்தவன்.. அவன் காதலும் அவனை போல் வீரியமானது.. அவன் காதல் கைகூடியிருந்தால் அவனை போல் நல்லவனை இந்த உலகம் கண்டிருக்காது.. ???? துரதிர்ஷ்டவசமாக காதலில் தோற்று எல்லார் மனதிலும் வெறுப்பை சம்பாதித்தான்.
அக்னீஸ்வரி... அவள் அழகால் அவள் அடைந்த துன்பம் சொல்லி மாளாது... அவள் உணர்வை தான் அப்படியே நான் இந்த கதையில் பிரதிபலித்தேன்.. ஒரு விசயத்தை தவிர.. அவள் விஷ்ணுவை வெறுக்கும் போது அதை மட்டும் ஒத்துக்கொள்ளவில்லை.. ஏன் என்றால்.. அவன் காதலித்தது இவள் மனதை அல்லவா..?.. ருத்ரா அழகை அல்லவா.. ?
விஷ்ணு... என்னை பொறுத்தவரை.. இவன் அக்னீஸ்வரியை முதலிலே மணந்திருந்தால் பிரச்சனையே இல்லை.. பாவம் பையன்.. பார்த்ததும் வராத காதல்.. பழக பழக வர.. நொந்தே போய்விட்டான்.. நானும் தான்.. ??
அடுத்த ஜென்மம்..
அனைவரும் மீண்டும் முன் ஜென்ம நியாபகம் இன்றி ஆனால் அவர்களின் குறிக்கோளோடு பிறக்க..
ஈஸ்வர் தேவ்... மீண்டும் வாவ் சொல்ல வைத்தான்... ஆனால் வழக்கம் போல் நம் நாட்டில் பிறந்து நம் நாட்டையே முட்டாளாக்கும் ஜாம்பாவான்களில் ஒருவனாக வந்து ஏமாற்றம் தந்தான் என்றால் மறுப்பதற்கில்லை... கடைசி வரை திருந்துவான் திருந்துவான் என்று எண்ணி நெஞ்சி வலி வந்தது தான் மிச்சம்... பாவி பையன் திருந்தவே இல்ல.. ???
அபிமன்யு... எண்டெரிங் சீன் கொங்ககிரியில்... விசிலடிக்க தோன்றியது.. ஹிஹி.. தெரியாது.. சோ.. கை தான் தட்டினேன்..
விஷ்ணுவை விட இவனே என்னை கவர்ந்தவன்.. வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று தோன்ற வைத்தான்.. ஆனால் அதெல்லாம் நம்மால முடியாது.. sorry abi.. ???
பின்னே காலையில் எழுவான்.. தியானம் செய்வான்.. சாமி கும்பிடுவான்.. இன்னும் என்ன என்னமோ பண்ணுறான்.. செம.. ??????
சூர்யா... என்ன சொல்ல... அவளே தான்... அவள் எப்படி வாழனும் என்று நினைத்தாளோ அப்படியே வாழ்ந்தாள் தான்.. ஆனால் இவளுக்கு வாழ்க்கை நியாயம் செய்ததா என்றால் கேள்விக்குறி தான்.. ??
இவர்கள் மூவருக்கும் இடையில் நடக்கும் காதலும் மோதலும் துரோகமும் துவேசமும் என கதை முழுக்க ஒரு வித பரபரப்புலயே நகர்ந்தது... ( பின்னே எழுதியது மோனிஷா வாச்சே.. your mind voice.. i catch it.. ??? )
இதில் முக்கியமாக நான் வியந்து படித்தது அவர்கள் பேசுவது தான்.. முன் ஜென்மம் தூய தமிழ் என்றால்.. இப்போது ஆங்கிலம் கலந்த தமிழ்.. அவ்ளோ தான் வித்யாசம்.. முன்னே பேசிய அனைத்தும் வெவ்வேறு சூழ்நிலையில் மீண்டும் நடக்கும் போது.. chanceless.. hats off to you ka.. ?????..
கடைசியில் முடிவு எதிர்பார்க்காததாய் இருந்தாலும்.. அபிமன்யு சொல்வது தான்.. உலகத்தையே கண்ட்ரோல் பண்ண நினைச்சவனால அவனையே கண்ட்ரோல் பண்ண முடியலையே.. இதான் வாழ்க்கை என்பதை அழுத்தமாக பதிவு செய்தது மீண்டும் உயிர்த்தெழு..
இக்கதையில் ஒரு விசயம் முற்றிலும் உண்மை.. டாக்டரால் வலியை மற்றுமே குறைக்க முடிந்த என் அம்மாவின் 4 வருட கழுத்து முதுகு வலி.. சித்த மருத்துவத்தில் 3 மாதத்தில் நல்ல மாற்றம் தெரிந்தது.. இப்போது மாத்திரை இன்றி நன்றாகவே இருக்கின்றார்.. எனக்கு வலித்தது.. எப்பேர்ப்பட்ட பொக்கிஷத்தை இழந்து இருக்கிறோம்..???????
யாரு சொன்னது மோனிஷா அக்காவிற்கு ரொமான்ஸ் வராதுன்னு.. பின்னி பெடல் எடுத்துட்டாங்க.. யாரிடமாவது அந்த அக்கா அப்படி சொன்னால் நம்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறது... ?????????? என்ன ஒரு ஆழமான காதல் இது.. ?????????????
இந்த கதை படித்து எனக்கு நான் என்னவாக இருந்தேன் முன்ஜென்மத்தில் என்ற யோசனை... அப்புறம் இவங்க படுற பாட்ட பாத்து உனக்கு இது தேவையா னு மனச்சாட்சி asking.. ???.. mee escape.... tata..
Last edited: