Semma review kavyaa dear... மற்றும் இந்த கதையை பாராட்டிய மற்ற தோழமைகளுக்கும் என் மனமார நன்றிகள்.
நான் ரொம்ப நாட்களாய் இழுத்து இழுத்து எழுதின கதை.Mu.
நான் எழுதின கதைகளிலேயே அதிகபட்சமான நாட்கள் அதாவது நான்கு மாதங்கள் முட்டி மோதி எழுதி முடிச்சேன். நான் முடிஞ்சளவுக்கு என்னவெல்லாம் கருத்துக்களை சொல்லனும்னு நினைச்சேனோ அதை கதையோட சேர்த்து சொல்லி முடிக்க நிறைய சிரமமாயிருந்தது.
அதனாலேயே நாட்கள் அதிகம் எடுத்தது. அதே நேரம் இந்த கதையின் முடிவை எப்படி மக்கள்கிட்ட சேர்ப்பதுன்னு நான் ரொம்ப பயந்தேன். ஆனால் எல்லாமே ஒரளவுக்கு சரியாய் முடிஞ்சிடுச்சு. இந்த கதை புத்தகமா வந்து சித்த மருத்துவம் பலரை சென்றடைவதிலேயே இந்த கதையின் உண்மையான வெற்றி.
ஆக்சுவலி இலுமினாட்டி கான்சப்ட்தான் இந்த கதையோட ஸ்பார்க்.
@smteam சஷி அக்கா கிட்ட இதை பத்தி சொல்லும் போது எதை வேணா எழுது. ஆனா அதை பத்தின முழு விவரங்களை படிச்சி எழுதுன்னு சொன்னாங்க. அங்கே இலுமானிட்டியை படித்து தேட ஆரம்பித்த என் பயணத்தில கிடைச்ச மேட்டர்தான். மெடிக்கல் பிஸ்னஸ். அதை துரத்திய போது கிடைச்சது ஒரு தடுப்பூசியினால் வெளிநாட்டில் ஏற்பட்ட நோய். அதனால் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகள்.
இலுமினாட்டி என்பவர்கள் உலகத்தையே ஆளும் பெரும் ஜாம்பாவான்கள். பத்து வயதிலேயே பிஸ்னஸ் செய்ய பழக்கப்படுத்தப்பட்டு உலகத்தினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பதின்மூன்று குடும்பங்கள் அதனோட வாரிசுகள். இலுமினாட்டியோட சின்னமாய் கருதப்படுவது ஒற்றை கண். தட்ஸ் இஸ் ஈஷ்வர் டையலாக் ஐம் வாட்சிங் யூ ஆல். எங்கிருந்தாலும் அவர்கள் கண்பார்வையில் இருந்து தப்ப முடியாது என்பதுதான் அதன் அர்த்தம்.
எனக்கு அந்த ஒற்றை கண் பார்க்க நெற்றி கண் போலவே தெரிஞ்சிது. அதான் நம்ம வில்லனோட பெயர் சிவனை குறிக்கும். அதாவது மறைமுகமாய் இலுமினாட்டியை குறிக்கும்.
மெடிக்கல் பிஸ்னஸ் தேட தேட புற்றீசல் மாறி நிறைய விஷயங்கள் கிடைக்க பெற அதிர்ச்சி.. பேரதிர்ச்சி.. இதுக்கெல்லாம் தீர்வென்னனு தேடும் போது எப்போ எங்கே இந்த ஆங்கில மருத்துவம் முறை நம் நாட்டில பிரபலமாச்சுன்னு தேட சுதந்திரத்திற்கு பிறகு... அடுத்த அதிர்ச்சி
சித்த மருத்துவத்தோட சிறப்பை சொல்லனும்னே யோசிச்சி அதை பற்றி படிக்க ஆரம்பிச்ச போது அதோட பழமை என்னை பிரமிக்க வைத்தது. அப்போ சித்தா பத்தி சொல்லனும்னா அட்லீஸ்ட் ஆயிரம் வருஷமாவது பின்னே போகனும்னு யோசிச்சி நம் சரித்திரத்தை தேடி நான் கதைகளமா தேர்ந்தெடுத்த இடம் கொயமுத்தூர். நீலகிரி. இந்த இடம்தான் கொங்கு நாடா இருந்துதா தெரிய வர... அடுத்த ஸெர்ச் கொங்கு நாடு.
சஷி அக்கா சொன்னாங்க அப்பதான். கொங்கு நாட்டோட வரலாறை முழுசா படிச்சிட்டு ஆரம்பின்னு. இன்னும் ஆழமாய் அதனை படித்து அந்த ஊர்களோட வளமையை படிச்சி போது அத்தனை ஆச்சர்யம். ஸோ அங்கே இது முன்ஜென்மம் கதையா மாறி இதோட பாஸிப்பில்டீஸ் பத்தி தேடும் போது. ஒரு இன்டிரஸ்டிங்கான மேட்டர் கிடைச்சது. சில பறவைகள் கண்டங்கள் தாண்டி பறந்து போகுது. அதாவது வழிவழியாய் .. வாரிசுகள். அதுவும் யாருமே சொல்லி தராம அதே டெஸ்டினேஷுனுக்கு. அங்கேதான் கிடைத்த விஷயம் ஜெனிட்டிக்கல் மெம்மரி. இது நம்ம எல்லோருக்குள்ளேயும் இருக்கு. அதான் யாருமே சொல்லி தராமலே வர நம் வலது கை பழக்கம்.
அடுத்ததா ஹெட் இஞ்சுரி... தலையில் காயம் ஏற்படும் போது இந்த ஜெனிட்டிக் மெம்மரி அதிகமா தூண்டபடிறதா மருத்துவம் சொல்லுது. ஈஸ்வருக்கு அக்னி முகம் நினைவுக்கு வரும். சூர்யாவுக்கு கார் ஆக்ஸிடென்ட். அபிக்கு லாஸ்ட் க்ளைமேக்ஸ்.
அப்புறம் கொங்கு நாட்டில கதையை தொடங்க முடிவெடுத்த போது அதை எப்படிறா கதையில காட்சிப்படுத்த போறோம்னு. பார்க்காத ஒரு இடத்தை எப்படி வாசகர்களுக்கிட்ட கொண்டு போய் சேர்க்க முடியும். ஆனா சஷி அக்கா சொன்னாங்க நம்ம நினைச்சா முடியும். அந்த சீனை எழுதிற முன்னாடி அந்த இடத்துக்குள்ள இருக்க மாறி பீல் பண்ணி அதுக்கு வார்த்தை வடிவம் கொடுன்னு....
மற்ற கதைகளைவிட அதனாலேயே மீண்டும் உயிர்த்தெழுல வர்ணனைகள் அதிகமா இருக்கும். கொங்கு நாட்டில் அதாவது அதன் இயற்கை வளமையை சொல்லி கரண்ட் செஞ்சுரில நாம எதை தொலைச்சோம்னு புரிய வைக்க.
அடுத்ததா சுத்த தமிழ். ஸ்ரீயஸா சொல்லனும்னு அது எனக்கு ரொம்ப ஈஸியா இருந்துச்சு. ஆங்கில கலப்பு இல்லாமல் பழமையான வார்த்தைகளை எழுதும் போது உண்மையிலேயே அது உள்ளூக்குள் தானாகவே ஊற்றெடூத்து. தமிழ் மீதான காதல் வெறி இதானால் கூட இருக்கலாம்.
ரசிச்சி சிலாகிச்சி எழுதினேன். ரொம்ப சிரமமான இடங்களோ தடங்கல்களோ வரும் போது பொன்னியின் செல்வனோட ஒரு எபிசோடை படிப்பேன். கீளியாராயிடும்.
கொங்ககிரி என்கிற ஊர் முழுக்க என் கற்பனை. சந்திர வதினி மலரும் கூட. ஆனால் கரிசன் சோழா ஆன்ஸ்பாட்ல ஹீரோ இன்டிரோ முடிச்சதும் அப்ப நெட்ல தேடி எழுதினது. அது ஆனைமலை பக்கத்தில இருக்கிற ஊர். அதாவது இன்னும் இயற்கையாக இருக்கும் பல அதிசிய முலிகைகள் கொண்ட வனம்.
அபிமன்யு பேர். மஹாபாரதத்தில வர பலர் மனம் கவர்ந்த கேரக்டர். அசாத்திய வீரன். வயிற்றுக்குள் இருக்கும் போதே பாடம் கற்றவன். சக்கிரவீயூகத்தில அசாத்திய துணிச்சலோடு நுழைந்து துரோகத்தால் உயிர் துறப்பான். ஆனா அவன் இறந்தாலும் அவன் அழியாத மாதிரி அவன் மனைவி வயிற்றில் வாரிசு வளரும். அதாவது பாரதத்தில உயிர் பிழைச்ச ஓரே அடுத்த வாரிசு. யுத்தத்திற்கு பின் அவன் வாரிசின் வாரிசே பாரதத்தைஆண்டன. இதை விட சரியான பெயர் கிடைக்காதுன்னு வைச்சேன்.
வானம் பூமி சூர்யன் உதாரணம் எல்லாம் காலேஜ் டேஸ்ல எழுதி வைச்ச கவிதையின் தாக்கம். என் கண்ணுக்கு எப்பவுமே அந்த மூன்று கிரகங்களும் ஒரு ட்ரைங்கல் லவ் மாறி தெரிஞ்சிச்சு. அதை வைச்சி ஆரம்பிச்சது. இந்த கதையில காதல் என்பது வெறும் மாயைதான். அது முக்கியத்துவம் வாய்ந்ததல்ல.
க்ளைக்ஸ் இலுமினாட்டி அதாவது ஒரு மாஸ் வில்லனை வைச்சு கதை எழுத யோசிக்கும் போது அதை பத்தி யோசிச்சிட்டேன். அதை முதல் அத்தியாயித்தில் இருந்தே படிப்பவர்களுக்கு க்ளூஸ் கொடுத்தேன் . பட் யாரும் கெஸ் பண்ணல.
இந்த ரிவ்யூ பார்த்ததும் இதெல்லாம் படபடவென நியாபாகம் வந்திருச்சு. அதான் ஷேர் பண்ணிக்கிட்டேன்.
எனி வே தேங்க்ஸ் ஆல் டியரீஸ் . உங்க சப்போர்ட் இல்லன்னா இந்த கதையில்ல ??????இது காவ்யா குட்டிக்கு??????
Iluminati symbol
View attachment 5365