Hii frnds... happy reading...
அத்தியாயம் 3
ஐயப்பன் தாங்கல்ல இருந்து கோயம்பேடு மார்கெட்டுக்கு பத்து கிலோ மீட்டர். டிராபிக் இல்லனா 15 நிமிசத்துல போயிடலாம்.
சண்முகம் காலையில நாலரை மணிக்கு கிளம்பினா ஆறு மணிக்கு காய்கறி கீரை எல்லாம் வாங்கிட்டு வந்திடுவாரு…… ஆறு மணிக்கு நாச்சியா டீ வைச்சி கடையத் திறந்துடுவாள். ஒம்பது மணிக்கு வாசு வர வரைக்கும் கடையில் அப்பாவோடு இருப்பாள். நடுவுல சமையல் வேலையும் நடக்கும்.
வாசு வந்ததும் வீட்டுக்குள்ள போனா அர மணி நேரத்துல லன்ஞ்சுக்கும் சேர்த்து முடிச்சிடுச்சிடுவா…..
பொழுது விடிய நேரமிருக்கச் சண்முகத்த எழுப்பி மார்க்கெட்டுக்கு அனுப்பிட்டு டீ போட்டு குடிச்சிட்டு….. வீட்டு முன்னால் இருக்க வேப்ப மரம் உதிர்த்த சருகுகளைக் கூட்டிச் சுத்தம் பண்ணிட்டு….. சமையலுக்குத் தேவையானதை எடுத்து வெட்டி வைக்க ஆரம்பித்தாள்…..
சண்முகம் மார்க்கெட்டில் வழக்கமான காய்கறிகளை வாங்கினாலும், பலவகையான கீரைகளை அள்ளிக்கிட்டு வருவார். முடிந்தவரை மக்களுக்கு நல்லத குடுக்கனுங்கற எண்ணம். ஏறக்குறைய எல்லாக் கீரைகளின் பேரும் அதன் பயனும் சண்முகத்திற்குத் தெரியும். கீரைக்காகவே சண்முகம் மளிகைக்கடை அந்த ஏரியாவுல பேமஸ்…..
சண்முகம் மார்கெட்ல பொருட்கள வாங்கிட்டு 6 மணிக்கு வர, நாச்சியா கடையைத் திறந்து பால் வியாபாரத்தை ஆரம்பித்திருந்தாள். வாங்கி வந்த காய்கறி, கீரைகளைக் கடையின் முன்னால் உள்ள மரப்பலைகை பென்ஞ்சில் அடுக்கி வைத்து விட்டுச் சண்முகம் வீட்டிற்குள் போய் டீ குடிச்சிட்டு கடைக்குள் வந்தார்….
"டீ குடிச்சிட்டிங்களாப்பா?"
"ம் ஆச்சு நாச்சியா"
"ப்ரண்ட் ஒருத்திக்கு வளைக்காப்பு வேளச்சேரியில ஒரு பத்து மணிக்கு போய்ட்டு வந்திடறன்பா!"
"ம் உன் பிரன்ட்டுங்களுக்கு வளைக்காப்பு, நீ எங்க பேச்சை கேட்டுருந்தனா இந்நேரம் உன் குழந்தைக்கூட நான் விளையாடிக்கிட்டு இருந்திருப்பேன்"
"அப்பா காலையிலயேவா ஒழுங்கா வியாபாரத்தைக் கவனிங்க…. கூட்டம் வந்தா கூப்டுங்க நான் சமையல் வேலையைப் பாக்கறன் வேளச்சேரி வேற போகனும்" என்றவள் வீட்டிற்குள் நுழைந்தாள்!
வேலைகளை முடிச்சிட்டு சண்முகத்துக்குச் சாப்பாடு குடுத்துட்டு வளைகாப்புக்கு தயார் ஆனாள் நாச்சியா….
"ம்மா கிளம்பிட்டியா புல்லட்ட எடுத்துக்கிட்டு போய்டாத ஸ்கூட்டியவே எடுத்துட்டு போ என்று" சிரித்தார் சண்முகம்…..
வண்டியை எடுத்து பஸ்ஸ்டாப் தாண்டி திரும்புகையில் விக்கி இல்லாமல் தேவா தனியாகப் பஸ்ஸ்டாப்பில் நிற்பதை பார்த்தாள் நாச்சியா……
"ஹாய் என்ன விக்கி இல்லாம தனியா நிக்கறிங்க அதிசயமா இருக்கு" என்றாள் நாச்சியா …..
திடீர்னு அவளா வந்து பேசினதும் அவனுக்கு என்ன பதில் சொல்றதுனு புரியல.,., கடைசியா அவக்கிட்ட பேசி மூனு மாசம் இருக்கும் அதுவும் கடையில பொருள் வாங்கறப்ப……
"என்ன பேச்சு மூச்சையே காணம்?" என்றாள் மீண்டும் நாச்சியா!
"இல்ல அதுவந்து ப்ரன்ட் மலேசியாவுல இருந்து வந்திருக்கான் அவன பார்க்க வேளச்சேரி வரை போறன்" என்று இழுத்து இழுத்து ஒருவழியா பேசி முடித்தான் தேவா….
"நானும் வேளச்சேரிதான் போறன் வாங்களேன் ட்ராப் பண்றன்"
" இல்ல பரவாயில்லை நான் பஸ்சுலயே போய்டறன்"
"அட பரவாயில்லை வாங்க வேணும்னா வண்டியை நீங்களே ஓட்டுங்க"னு கிண்டலா பின்னால் நகர்ந்து உட்கார்ந்தாள் நாச்சியா!
அப்படி இப்படினு ஒருவழியா வர சம்மதித்தான் தேவா….
நாச்சியா வண்டிய ஓட்ட பின்னாடி உட்கார்ந்தான் தேவா……
"அப்புறம் தேவா என்ன பண்றிங்க?!"
"குரூப் எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருக்கேன்"
"ம் நல்லா போகுதா?!"
" ம் ஏதோ போகுது" என்றவனின் குரலில் விரக்தி!
"என்ன மலேசியா ரிட்டன் ப்ரன்ட் கூடச் சரக்கு பார்ட்டியா"னு கூலாத்தான் கேட்டாள் நாச்சியா… ஆனா தேவா பதறிட்டான்……
"இல்லங்க பார்த்து ரொம்ப நாளாச்சி சும்மா பாக்கலாமேனு போறேன். நாளைக்கு அவன் மறுபடியும் மலேசியா போறான் அதான்"
" ஓகே ஓகே பதறாதிங்க" என்றவள் வண்டியை விரட்ட வேளச்சேரிக்கு வந்து சேர்ந்தார்கள்……
"நீங்க எங்க போகனும் தேவா?!"
"இன்னும் ஒரு ரெண்டு கிராஸ் தாண்டி" என்ற தேவா இறங்க முயற்சிக்க,
"உட்காருங்க நான் போற இடம் இங்கதான் உங்கள அங்க விட்டுட்டு வந்துக்கறேன்"னு அவன் அனுமதியை கேட்காமலேயே வண்டியை நகர்த்தினாள் நாச்சியா…..,
இடம் வந்ததும் தேவா இறங்கினான்….
"ரொம்பத் தேங்க்ஸ்ங்க" என்ற தேவாவிடம்….
"உங்களோட தேங்க்ஸ்ஸ நீங்களே வைச்சுக்கோங்க….. சரி உங்க நம்பர குடுங்க நான் போறப்ப நீங்க கிளம்பறதா இருந்தா அப்படியே கூட்டிட்டு போறன்"என்று ரொம்பச் சாதாரணமா கேட்டாள் நாச்சியா…..
ஆனா தேவா அநியாயத்துக்கு வெட்கப்பட்டுப் பயந்து ஒருமாதிரி இருந்தான்.
"ஹலோ தேவா என்னாச்சு ஏன் ஒரு மாதிரியாவே இருக்கிங்க?!
"இல்லங்க அது வந்து……" என்ற தேவா நெளிய…..
"சரி சரி நம்பர தாங்க நான் கிளம்பறனு சாதாரணமா சொன்ன சொன்ன நாச்சியா அவன் நம்பர் தர சேவ் பண்ணிட்டு கிளம்பினாள்.
தேவா உண்மையிலயே பிரமை பிடிச்சிதான் நின்னான். எப்படி இவளால பலநாள் பழகின மாதிரி இயல்பா பேச முடியுது. உலகத்த மனுசங்கள எவ்வளவு தைரியமா பேஸ் பண்றா. நாம ஏன் எதுக்கெடுத்தாலும் தயங்கறோம்னு தன்னை நினைச்சி தானே திட்டிக்கிட்டான்…
இந்தச் சந்திப்புக்காக நாச்சியா கடவுளுக்கு மனசார நன்றி சொல்லிக்கிட்டாள். பையன் ஏதாவது லவ் கிவ்னு வந்தா ஓகே சொல்லி கல்யாணம் பண்ணி லோக்கல்லயே செட்டில் ஆகிடலாங்கற எண்ணம் நாச்சியாவுக்கு. நாச்சியாவால் தன் அப்பாவை, கடையை, வருமானத்தை விட்டுத் தரவே முடியாது. அவன சும்மா வைச்சி சோறு போடனும் அப்படினாலும் அவளுக்கு ஓகேதான்.
இதான் பெண் புத்தி பின் புத்தி என்பது!
அதாவது எது செஞ்சாலும் அதனால என்ன பின் விளைவுகள் வரும்னு தெளிவா யோசிக்கறது!
ரெண்டுபேர் வாழ்க்கையிலும் இது ரொம்ப முக்கியமான நாள். தங்கள் வாழ்வில் பல மாற்றங்களை உருவாக்கப் போகின்ற நாள்!.….
அத்தியாயம் 3
ஐயப்பன் தாங்கல்ல இருந்து கோயம்பேடு மார்கெட்டுக்கு பத்து கிலோ மீட்டர். டிராபிக் இல்லனா 15 நிமிசத்துல போயிடலாம்.
சண்முகம் காலையில நாலரை மணிக்கு கிளம்பினா ஆறு மணிக்கு காய்கறி கீரை எல்லாம் வாங்கிட்டு வந்திடுவாரு…… ஆறு மணிக்கு நாச்சியா டீ வைச்சி கடையத் திறந்துடுவாள். ஒம்பது மணிக்கு வாசு வர வரைக்கும் கடையில் அப்பாவோடு இருப்பாள். நடுவுல சமையல் வேலையும் நடக்கும்.
வாசு வந்ததும் வீட்டுக்குள்ள போனா அர மணி நேரத்துல லன்ஞ்சுக்கும் சேர்த்து முடிச்சிடுச்சிடுவா…..
பொழுது விடிய நேரமிருக்கச் சண்முகத்த எழுப்பி மார்க்கெட்டுக்கு அனுப்பிட்டு டீ போட்டு குடிச்சிட்டு….. வீட்டு முன்னால் இருக்க வேப்ப மரம் உதிர்த்த சருகுகளைக் கூட்டிச் சுத்தம் பண்ணிட்டு….. சமையலுக்குத் தேவையானதை எடுத்து வெட்டி வைக்க ஆரம்பித்தாள்…..
சண்முகம் மார்க்கெட்டில் வழக்கமான காய்கறிகளை வாங்கினாலும், பலவகையான கீரைகளை அள்ளிக்கிட்டு வருவார். முடிந்தவரை மக்களுக்கு நல்லத குடுக்கனுங்கற எண்ணம். ஏறக்குறைய எல்லாக் கீரைகளின் பேரும் அதன் பயனும் சண்முகத்திற்குத் தெரியும். கீரைக்காகவே சண்முகம் மளிகைக்கடை அந்த ஏரியாவுல பேமஸ்…..
சண்முகம் மார்கெட்ல பொருட்கள வாங்கிட்டு 6 மணிக்கு வர, நாச்சியா கடையைத் திறந்து பால் வியாபாரத்தை ஆரம்பித்திருந்தாள். வாங்கி வந்த காய்கறி, கீரைகளைக் கடையின் முன்னால் உள்ள மரப்பலைகை பென்ஞ்சில் அடுக்கி வைத்து விட்டுச் சண்முகம் வீட்டிற்குள் போய் டீ குடிச்சிட்டு கடைக்குள் வந்தார்….
"டீ குடிச்சிட்டிங்களாப்பா?"
"ம் ஆச்சு நாச்சியா"
"ப்ரண்ட் ஒருத்திக்கு வளைக்காப்பு வேளச்சேரியில ஒரு பத்து மணிக்கு போய்ட்டு வந்திடறன்பா!"
"ம் உன் பிரன்ட்டுங்களுக்கு வளைக்காப்பு, நீ எங்க பேச்சை கேட்டுருந்தனா இந்நேரம் உன் குழந்தைக்கூட நான் விளையாடிக்கிட்டு இருந்திருப்பேன்"
"அப்பா காலையிலயேவா ஒழுங்கா வியாபாரத்தைக் கவனிங்க…. கூட்டம் வந்தா கூப்டுங்க நான் சமையல் வேலையைப் பாக்கறன் வேளச்சேரி வேற போகனும்" என்றவள் வீட்டிற்குள் நுழைந்தாள்!
வேலைகளை முடிச்சிட்டு சண்முகத்துக்குச் சாப்பாடு குடுத்துட்டு வளைகாப்புக்கு தயார் ஆனாள் நாச்சியா….
"ம்மா கிளம்பிட்டியா புல்லட்ட எடுத்துக்கிட்டு போய்டாத ஸ்கூட்டியவே எடுத்துட்டு போ என்று" சிரித்தார் சண்முகம்…..
வண்டியை எடுத்து பஸ்ஸ்டாப் தாண்டி திரும்புகையில் விக்கி இல்லாமல் தேவா தனியாகப் பஸ்ஸ்டாப்பில் நிற்பதை பார்த்தாள் நாச்சியா……
"ஹாய் என்ன விக்கி இல்லாம தனியா நிக்கறிங்க அதிசயமா இருக்கு" என்றாள் நாச்சியா …..
திடீர்னு அவளா வந்து பேசினதும் அவனுக்கு என்ன பதில் சொல்றதுனு புரியல.,., கடைசியா அவக்கிட்ட பேசி மூனு மாசம் இருக்கும் அதுவும் கடையில பொருள் வாங்கறப்ப……
"என்ன பேச்சு மூச்சையே காணம்?" என்றாள் மீண்டும் நாச்சியா!
"இல்ல அதுவந்து ப்ரன்ட் மலேசியாவுல இருந்து வந்திருக்கான் அவன பார்க்க வேளச்சேரி வரை போறன்" என்று இழுத்து இழுத்து ஒருவழியா பேசி முடித்தான் தேவா….
"நானும் வேளச்சேரிதான் போறன் வாங்களேன் ட்ராப் பண்றன்"
" இல்ல பரவாயில்லை நான் பஸ்சுலயே போய்டறன்"
"அட பரவாயில்லை வாங்க வேணும்னா வண்டியை நீங்களே ஓட்டுங்க"னு கிண்டலா பின்னால் நகர்ந்து உட்கார்ந்தாள் நாச்சியா!
அப்படி இப்படினு ஒருவழியா வர சம்மதித்தான் தேவா….
நாச்சியா வண்டிய ஓட்ட பின்னாடி உட்கார்ந்தான் தேவா……
"அப்புறம் தேவா என்ன பண்றிங்க?!"
"குரூப் எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருக்கேன்"
"ம் நல்லா போகுதா?!"
" ம் ஏதோ போகுது" என்றவனின் குரலில் விரக்தி!
"என்ன மலேசியா ரிட்டன் ப்ரன்ட் கூடச் சரக்கு பார்ட்டியா"னு கூலாத்தான் கேட்டாள் நாச்சியா… ஆனா தேவா பதறிட்டான்……
"இல்லங்க பார்த்து ரொம்ப நாளாச்சி சும்மா பாக்கலாமேனு போறேன். நாளைக்கு அவன் மறுபடியும் மலேசியா போறான் அதான்"
" ஓகே ஓகே பதறாதிங்க" என்றவள் வண்டியை விரட்ட வேளச்சேரிக்கு வந்து சேர்ந்தார்கள்……
"நீங்க எங்க போகனும் தேவா?!"
"இன்னும் ஒரு ரெண்டு கிராஸ் தாண்டி" என்ற தேவா இறங்க முயற்சிக்க,
"உட்காருங்க நான் போற இடம் இங்கதான் உங்கள அங்க விட்டுட்டு வந்துக்கறேன்"னு அவன் அனுமதியை கேட்காமலேயே வண்டியை நகர்த்தினாள் நாச்சியா…..,
இடம் வந்ததும் தேவா இறங்கினான்….
"ரொம்பத் தேங்க்ஸ்ங்க" என்ற தேவாவிடம்….
"உங்களோட தேங்க்ஸ்ஸ நீங்களே வைச்சுக்கோங்க….. சரி உங்க நம்பர குடுங்க நான் போறப்ப நீங்க கிளம்பறதா இருந்தா அப்படியே கூட்டிட்டு போறன்"என்று ரொம்பச் சாதாரணமா கேட்டாள் நாச்சியா…..
ஆனா தேவா அநியாயத்துக்கு வெட்கப்பட்டுப் பயந்து ஒருமாதிரி இருந்தான்.
"ஹலோ தேவா என்னாச்சு ஏன் ஒரு மாதிரியாவே இருக்கிங்க?!
"இல்லங்க அது வந்து……" என்ற தேவா நெளிய…..
"சரி சரி நம்பர தாங்க நான் கிளம்பறனு சாதாரணமா சொன்ன சொன்ன நாச்சியா அவன் நம்பர் தர சேவ் பண்ணிட்டு கிளம்பினாள்.
தேவா உண்மையிலயே பிரமை பிடிச்சிதான் நின்னான். எப்படி இவளால பலநாள் பழகின மாதிரி இயல்பா பேச முடியுது. உலகத்த மனுசங்கள எவ்வளவு தைரியமா பேஸ் பண்றா. நாம ஏன் எதுக்கெடுத்தாலும் தயங்கறோம்னு தன்னை நினைச்சி தானே திட்டிக்கிட்டான்…
இந்தச் சந்திப்புக்காக நாச்சியா கடவுளுக்கு மனசார நன்றி சொல்லிக்கிட்டாள். பையன் ஏதாவது லவ் கிவ்னு வந்தா ஓகே சொல்லி கல்யாணம் பண்ணி லோக்கல்லயே செட்டில் ஆகிடலாங்கற எண்ணம் நாச்சியாவுக்கு. நாச்சியாவால் தன் அப்பாவை, கடையை, வருமானத்தை விட்டுத் தரவே முடியாது. அவன சும்மா வைச்சி சோறு போடனும் அப்படினாலும் அவளுக்கு ஓகேதான்.
இதான் பெண் புத்தி பின் புத்தி என்பது!
அதாவது எது செஞ்சாலும் அதனால என்ன பின் விளைவுகள் வரும்னு தெளிவா யோசிக்கறது!
ரெண்டுபேர் வாழ்க்கையிலும் இது ரொம்ப முக்கியமான நாள். தங்கள் வாழ்வில் பல மாற்றங்களை உருவாக்கப் போகின்ற நாள்!.….