• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Minnal vizhiye - 5(a)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Iniya

மண்டலாதிபதி
Author
Joined
Feb 17, 2019
Messages
325
Reaction score
2,563
Location
Tamilnadu
1551018907221.jpg


மின்னல் விழியே குட்டித் திமிரே 5

ஆர்வமாக கேட்கும் அனுவிடம் என்ன சொல்வது என்று முழித்தவள், “அது அண்ணி இன்னைக்கு தானே ஜாய்ன் பண்ணிருக்கேன் சீக்கிரம் கண்டுப்பிடிக்கிறேன் நீங்க கவலைபடாதிங்க....” என்றவள் அனு வேறு எதுவும் கேட்கும் முன் வேலை இருப்பதாக கூறி போனை அணைத்துவிட்டாள்.... சிறிது நேரம் கழித்து சுதா, நிகில் என அனைவரும் போன் செய்து முதல் நாளை பற்றி விசாரிக்க அகில் போன் பண்ணவேயில்லை.... அகில் போன் செய்ய மாட்டான் என தெரிந்தாலும் ஏமாற்றமாக தான் இருந்தது.... அதை நினைத்து கவலை படுவதை விட சமைக்கலாம் என தனக்கு தெரிந்த சமையலை சமைக்க தொடங்க விக்கியும் வந்து அவளுக்கு உதவினான்....

ஆபிஸிலிருந்து அசுர வேகத்தில் கிளம்பிய திருவின் கார் நேராக வந்து நின்றது அவனது தோழனின் வீடான ஹரியின் வீட்டில்.... ஹரியும் திருவும் பள்ளி காலத்து நண்பர்கள்... ஹரி மேற்ப்படிப்புக்காக லண்டன் சென்றுவிட திரு பெங்களூரிலேயே படித்தான்... இப்போது ஹரி ஒரு பெரிய எம்.என்.சி கம்பெனியில் சீப் எக்ஸியூட்டிவ்வாக இருக்கிறான்... ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணமாகியிருக்க மனைவி மது ஏழாம் மாத கருவை சுமந்துக் கொண்டு தாயின் வீட்டிற்கு இப்போதே பிள்ளைபேறுக்காக சென்றுவிட்டாள்.... அதனால் ஹரி மட்டுமே இப்போது அவனது அப்பார்ட்மென்டில் இருக்கிறான்.... அது தெரிந்ததுனால் தான் திரு இங்கு வந்தது இல்லையென்றால் ஹரி எவ்வளவு முறை வருந்தி அழைத்தாலும் திரு வர மாட்டான்....

ஹரியின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தியன் ஹரிக்காக காத்திருக்க, கதவை திறந்து ஹரி எதோ அதிசயத்தை பார்ப்பது போல் திருவை மேலும் கீழும் பார்க்க... அவனை தள்ளிக் கொண்டு திரு உள்ளே நுழைந்தான்.... இதற்கு முன்பு ஒரே ஒரு முறை தான் ஹரியின் வீட்டிற்கு வந்திருக்கிறான்... சோபாவில் சென்று அமர்ந்தவன் சோபாவில் சாய்ந்தவாறு அமர்ந்துக்கொண்டு நெற்றியில் கை வைத்துக் கொள்ள... ஹரி அவனுக்காக டீ போட சென்றான்....

எந்த சத்தமும் இல்லாததால் கண் திறந்து பார்த்த திரு, ஹரி உள்ளே டீ போடுவதை உணர்ந்து எதிரில் இருந்த சுவற்றை பார்த்தான்... அதில் அவனும் ஹரியும் சேர்ந்து ஐந்து வருடங்களுக்கு முன்பாக ஹரி வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்த போது எடுத்த புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது... அதன் அருகே சென்றவன்.... அதில் வாய்கொள்ள சிரிப்புடன் ஹரியின் தோளில் கைப் போட்டவாறு தான் நின்றிருந்த படத்தை பார்க்க.... காலையில் வினு கேட்ட... நீங்க எப்பவுமே இப்படி தான... சிடு சிடுன்னு... கோபமா... என்ற வார்த்தை ஞாபகம் வர அவன் உதட்டில் ஒரு கசந்த முறுவல் தோன்றியது....

பின்னாடி எதோ அரவம் கேட்க, திரும்பி பார்த்தவன் கையில் டீயோடு நின்றுக் கொண்டு கூர்மையாக தன்னை அளந்துக் கொண்டிருந்த ஹரியை பார்த்து தடுமாறி பின சுதாரித்து சோபாவிலையே சென்று அமர்ந்துக் கொண்டான்....

திரு டீயை குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த ஹரி, “என்னடா திரு எதுக்காக ரெஸ்ட்லெஸ்சாக இருக்க???” என்றான் கேள்வியாக...

“எல்லாம் அந்த ரெட்ட வாலு குரங்குங்க பண்ற டார்ச்சர்ல தான் டா... இம்சைங்க.... காலையில இருந்து என் மண்டைய காய விடுறாங்க..”..என்றவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

திரு இதுவரை எதற்க்காகவுமே ஹரியை தேடி வந்தது இல்லை.... ஐந்து வருடங்களுக்கு முன்பு வாழ்க்கையே தொலைத்துவிட்டு அவன் நின்றிருந்த கோலத்தை கண்டு ஹரி தான் அவன் பின் சுற்றிக் கொண்டிருக்கிறான்.... ஆனால் திரு வாழ்க்கையை எதிர்த்து யார் துணையுமின்றி போராட ஆரம்பித்தான்... அதன் முதற்படி ஹரியிடம் எந்த உதவியும் எதிர்ப்பார்க்காமல் தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் வாழ தொடங்கினான்...எப்போதும் முகத்தில் ஒரு கடுமை என்னிடம் நெருங்காதே என கண்கள் அனைவரையும் தள்ளியே நிறுத்தும்... யாரையும் நம்ப மாட்டான்... இது தான் நான் என வாழ தொடங்கினான். எப்போதும் சிரிச்சிட்டே தான் இருப்பியா டா என்று கேட்டவர்கள் கூட திருவின் இம்மாற்றத்தை கண்டு ஒதுங்கினார்கள்... அவர்கள் ஒதுங்கினார்கள் என்பதை விட அவன் ஒதுக்கினான் என்பது தான் சரி. ஆனால் ஹரி மட்டுமே என்றாவது தான் தொலைத்த தன் நண்பன் கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் திருவின் பின் சுற்றிக் கொண்டிருக்கிறான்......

திரு கோபமாக பேச... ஹரி அவனை சுவாரஸ்யமாக பார்த்தான்... அதில் கடுப்புற்று திரு முறைக்க... சட்டென்று தன் பார்வையை மாற்றிக் கொண்டவன், “உன்னையே புலம்ப வச்சிட்டாங்களா மச்சான்... இன்ட்ரஸ்டிங்.... யாருடா அவங்க... ??,”

காலையில் இருந்து நடந்ததை கூறியவன் வினு தன்னை அடித்ததையும் கடைசியாக கிளம்பும் போது தன் மீது மோதியதையும் கூறவில்லை அதை ஏன் தன்னால் ஹரியிடம் சொல்ல முடியவில்லை என்பதற்கு அவனிடம் பதிலில்லை.....

அனைத்தையும் கேட்ட ஹரி வாய்விட்டு சிரிக்க..... இவன் என்ன பைத்தியமா என்பது போல் திரு அவனை பார்த்தான்.....

ஹரி சிரிப்பதில் எரிச்சலானவன், “என்னடா எதுக்கு சிரிக்கிற??? சொல்லிட்டு சிரி இல்ல இப்போ நான் கிளம்பிடுவேன்..”

“மச்சான் உன்னையும் ஒரு பொண்ணு டென்ஷன் பண்ணிட்டா பார்த்தியா... சோ ஸ்வீட் டா மச்சான்... எனக்கே இப்போ அந்த பொண்ண பார்க்கணும் போல இருக்குடா.... நீ ஏன் அந்த பொண்ணு சொல்றத கன்ஸிடர் பண்ணக் கூடாது... நீயும் வாழ்க்கையோட அடுத்த ஸ்டெப்க்கு போகணும் டா....” என்றவனின் குரலில் கவலை நிரம்பி வழிந்தது....

“வாழ்க்கையே போன அப்புறம் என்னடா அடுத்த ஸ்டெப்....” இகழ்ச்சியாக சொன்னவன் அதற்கு மேல் பேச விரும்பாமல் கிளம்பிவிட்டான்... அவனை நினைத்து ஹரிக்கு பாரம் ஏறியது... அவனது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என ஆத்திரம் பொங்கினாலும் எதுவும் தெரியாமல் ஹரியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை...... பெருமூச்சு ஒன்றை விட்டவன் வினுவையும் விக்கியையும் பார்க்க வேண்டும் என மட்டும் மனதில் குறித்துக் கொண்டான்.

இரவு உணவை அடித்து பிடித்து சமைத்து உண்ட வினுவும் விக்கியும் ஹால் சோபாவில் அமர்ந்து இருவருக்குமே பொதுவாக பிடித்த நின்ஜா ஹட்டோரியை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க... விக்கியின் போன் நானும் இருக்கிறேன் என்று அலறியது.... அதை எடுத்துக் காதுக்கு கொடுத்தவன் டீ,வி சத்தத்தில் எதுவும் கேட்காததால் பால்கனிக்கு சென்றான்....

“அகி அண்ணா????”

“விக்கி.... வினு எப்படி இருக்கா டா????” அவள் மேல் இருக்கும் பாசத்தில் அவளுக்கு அழைக்காமல் விக்கிக்கு அழைத்திருந்தான்...

“அவளுக்கு என்னனா... ரொம்ப பேஷா இருக்கா ஆனா என் உயிர தான் வாங்குறா... நான் கூட பரவாயில்ல ஆனா பாவம் யார் பெத்த பிள்ளையோ அந்த ஹிட்லர் தான் முதல் நாளே இவகிட்ட மாட்டிட்டு அவஸ்த்தை படுறார் மாட்டிட்டு முழிக்கிறாரு...” மனதில் நினைத்தவன் அதை வெளியே சொன்னால் வினு நிச்சயம் அடி பிச்சிவிடுவாள் என்பதால் ரொம்ப நல்லா இருக்கோம்னா என்றான் எதுவும் அறியா பிள்ளையாக....

“பர்ஸட் டே எப்படி இருந்துச்சு????”

“அமோகமா இருந்துச்சுன்னா.... மேள தாளம் இல்லாதது தான் குறை அந்த அளவுக்கு எங்க டீம் லீடர் எங்கள புகழ்ந்து தள்ளிட்டாரு எங்க திறமைய பார்த்து....” வாய் அகிலிடம் சொன்னாலும் திருவிடம் வாங்கிய திட்டுக்கள் அவன் முன் தோன்றி சிரிப்பை ஏற்ப்படுத்தியது..... ( தாரை தப்பட்டையோட செம வரவேற்புன்னு சொல்லு விக்கி...)

“என் தம்பி தங்கச்சின்னா சும்மாவா?? நீங்க திறமைசாலிங்க டா...” ... உண்மை தெரியாமல் அகில் அவர்களை பற்றி பெருமையாக பேச… விக்கிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை...

அதன் பின் வினுவை பற்றி மேலும் சில விஷசயங்களை கேட்டுவிட்டு அகில் போனை வைக்க.... விக்கி மீண்டும் வினுவிடம் சென்றமர்ந்து அகிலிடம் பேசியதை கூறினான்... அனைத்தையும் கேட்டவள் ஓ என்று மட்டுமே சொல்ல... அவள் மனம் புரிந்தாற் போல் வினுவின் கைகளை பற்றிக் கொண்டு, “அகில் அண்ணா உன்கிட்டயும் பேசுவாங்க அக்கா... அவங்க தான் போன் பண்ணணும்னு நீ நினைக்கிற.... ஆனா என்கிட்ட பேசும் போது உன்ன பத்தி மட்டும் தான் அண்ணா கேட்டாங்க... உன்ன ரொம்ப பிடிக்கும் கா அண்ணாக்கு....”

விக்கியை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள் அவன் தலையை கலைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்....

மறுநாள் வினு உற்சாகமாக ஆபிஸிற்கு கிளம்ப, விக்கி இன்று என்னவெல்லாம் செய்ய போகிறாளோ என்று பயத்தோடு கிளம்பினான்.... ஆபிஸ் வாசலிலையே திருவை இருவரும் பார்த்துவிட அவனை நோக்கி ஓடியவள்... “குட் மார்னிங் அரசு” என்று கத்தினாள்....

அவளை அழுத்தமாக ஒருமுறை அவன் பார்க்க.... ஆரஞ்சு வண்ண டாப்சு கச்சிதாமாக அவளுக்கு பொருந்தியிருக்க... கறுப்பு நிற ஜீன் அணிந்திருந்தாள்... தோளில் இருந்து சற்று கீழே வரை இருந்த முடியை தூக்கி உச்சந்தலையின் அருகே போனி டெய்ல் போட்டிருக்க அது அவள் அசைவிற்கு ஏற்ப அவளை போலவே சொல்பேச்சு கேளாமல் ஆடியது.... நெற்றியில் சிறிய கருப்பு பொட்டும்.... கண்களுக்கு மையும் இட்டிருந்தாள்... அதைவிட அவள் இதழில் இருந்த மச்சம் தான் அவனை கட்டியிழுத்தது... அவன் நெஞ்சளவே இருந்ததால் அவனை சற்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள்... ( டேய் நீ அவள சைட் அடிக்கவா செய்யுற??? உன்ன நான் நல்லவன்னு நினைச்சேனே டா….)

அவளை மேலிருந்து கீழ் வரை அவளறியாமல் அளந்தவன், அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து, “பேட் மார்னிங்” என்று முனகியவாறு நகர, வினுவும் விடாமல் பின் தொடர்ந்தாள்...

“என்ன பார்த்துட்ட தானே அரசு அப்போ உனக்கு குட் மார்னிங் தான்...” புன்னகையோடு கூறியவள் அவனின் பதிலுக்காக காத்திருக்க,…. அவனோ... “டோன்ட் கால் மீ அரசு” என சிடுசிடுத்தான்.....

“வேற எப்படி கூப்பிடுறது மச்சான்.... யூ நோ நீ ரொம்ப ஹேன்ட்சம்... “கள்ளம் இல்லாமல் வினு சிரிக்க...

“உனக்கு அறிவே கிடையாதா??? இப்படி என் பின்னாடி சுத்துற???”
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சோனியா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top