“விக்கி ஒழுங்கா பேசு டா....” சுற்றியிருந்ததில் ஒருவன் அவனை உற்சாகப்படுத்த.... எச்சில் கூட்டி விழுங்கியவன்.... வினு பக்கம் திரும்பாமல்.,
“திரு சார் ரொம்ப நல்லவங்க.... ரொம்ப ஹார்ட் வர்க் பண்ணுவார்... சிரிச்சா ரொம்ப அழகா இருப்பார் ஆனா சிரிக்க மாட்டார்... எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவார் ஆனா வெளிய காமிச்சிக்க மாட்டார்... பேசினா ரொம்ப ஜாலியா பேசுவாரா இருக்கும் ஆனா பேச மாட்டார்...” விக்கி திருவை பற்றி இருக்கு ஆனா இல்லை என்ற ரேன்ஞ்சில் பேச அனைவரும் கெக்கபெக்கேவென சிரித்தனர்... திருவிற்கும் சிரிப்பு எட்டிப் பார்த்தது ஆனால் அடக்கிக் கொண்டான்...
ஒரு வழியாக அனைவரின் கேலிகளையும் தாங்கிக் கொண்டு விக்கி திருவின் அருகில் சென்று அமர்ந்துவிட., இறுதியாக வினு மட்டுமே பேசாமல் எஞ்சியிருந்தாள்... அதுவும் விக்கியை பற்றி மட்டுமே யாரும் பேசவில்லை என்பதால் சீட்டு எடுக்காமலே அனைவரும் விக்கியை பற்றி பேச சொல்ல... பற்களை நறநறவென கடித்தவள் எழும்ப... அதற்குள் விக்கி எழும்பி,
“என்னப் பத்தி என் அக்கா சொன்னா என்னப்பா இன்ட்ரஸ்டிங்கா இருக்க போகுது... டைமாகுது வாங்க சாப்பிடலாம்” வினு தன்னை பற்றி கழுவி ஊத்துவதற்குள் விக்கி அனைவரையும் அப்புற படுத்த முயல... வினுவும் விக்கியை தனியாக கவனிக்க வேண்டியிருந்ததால் அமைதியாக இருந்தாள்....
ஏற்கனவே நேரம் ஒன்பதை நெருங்கிவிட்டதால் அனைவரும் விக்கி கூறியதும் சரியென்று மதுவின் பக்கமும் சாப்பாட்டின் பக்கமும் சென்றுவிட., விக்கி தனியாக வினுவிடம் மாட்டிக் கொண்டான்...
“வினு ப்ளீஸ் வேணாம்... எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா தான் இருக்கணும்..... விட்டு டி....” தன்னை அடிக்க தயாராக இருந்தவளிடம் கெஞ்சியவன்., லானில் விக்கி ஓட, வினு அவனை துரத்திக் கொண்டு இருந்தாள்...
“நில்லு டா... எனக்கும் அரசுக்கும் கெமிஸ்ட்ரி செட்டாகும்னு பார்த்தா ஒவ்வொரு தடவையும் வில்லி மாதிரி வந்து நீ கெமிஸ்ட்ரி செட் பண்றியா???? நில்லுடா... நில்லு... உன்னை சும்மா விட மாட்டேன்....”
“அய்யோ வினு... ஹிட்லர் கூட கெமிஸ்ட்ரி செட் பண்ணி நான் என்னடி பண்ணப் போறேன்... எனக்கு அந்த மனுஷன பார்த்தாலே உதறல் எடுக்கும் டி... விட்ரு டி என்னை.. நான் அம்மாக்கு கடைசி ஒரே பையன் டி”... விக்கி அலற...
வினு ஓடிச் சென்று அவனை பிடித்து அவன் முதுகில் நான்கைந்து அடிகளை வழங்க... விக்கி தான் அப்பாவியாக மாட்டிக் கொண்டு அவள் கொடுத்த அடிகளை சுமைதாங்கியாக மாறி தாங்கிக் கொண்டான்..
இருவரும் அடித்துக் கொண்டே அந்த நீண்ட லானிலிருந்து சற்று தொலைவு வந்திருக்க., அவர்களின் சண்டையை கலைத்தது அங்கு கேட்ட பேச்சு சத்தம். அலங்காரத்திற்காக புதர் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருந்த செடியின் பின் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள் அவர்கள் இருவரம். மெல்லிய வெளிச்சத்தில் அவர்களின் உருவம் இவர்களுக்கு தெரிந்தாலும் இவர்கள் நிற்பதை அவர்கள் கவனிக்கவில்லை.
“டேய் நான் சொன்ன மாதிரி செஞ்சிட்டியாடா....” வினுவும் விக்கியும் ஆபிஸில் சேர்ந்த முதல் நாளன்று., திருவிடம் அடிவாங்கி விட்டு வெளியேறியவன் கேட்க...
மற்றொருவனோ, “ஆமாம் டா. நீ போதை மருந்து கலந்துக் கொடுத்த ஜீசை திருகிட்ட கொடுத்திட்டேன்... இன்னும் கொஞ்ச நேரத்துலளு அதோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடும்.... “
“காட்டணும் டா... இந்த பிரகாஷ் யாருன்னு காட்டணும்டா... ஒரு ப்ராஜக்ட் முடிக்கலை அப்படிங்கறதுக்காக என் மேலயே கை வச்சிட்டான்... சந்தர்ப்பம் கிடைக்கும் போது பழி வாங்கிடணும்னு தான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... இன்னைக்கு இத்தனை பேர் முன்னாடி அவன் போதைல தள்ளாடணும்... அசிங்கப்படணும்” என்றவனின் குரலில் அத்தனை பழிவெறி....
இருவரும் மேலும் சில வார்த்தைகள் திருவை திட்டிப் பேச... வினுவிற்கும் விக்கிக்கும் திக்கென்று இருந்தது...
“வினு இப்போ என்னப் பண்றது???” விக்கி பதட்டத்துடன் கேட்க....
“நீ இவனுங்களை கவனிச்சிக்கோ விக்கி... நான் அரசுவை பார்க்கிறேன்....” சட்டென்று முடிவு எடுத்தவள் திருவை தேடி பார்ட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல... அங்கே அவனை காணவில்லை....
“எங்க போய்ட்டான்????” வினு கண்களால் அனைத்து இடங்களையும் துளாவ., திரு அங்கு எங்குமே இல்லை...
“திரு சார் ரொம்ப நல்லவங்க.... ரொம்ப ஹார்ட் வர்க் பண்ணுவார்... சிரிச்சா ரொம்ப அழகா இருப்பார் ஆனா சிரிக்க மாட்டார்... எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவார் ஆனா வெளிய காமிச்சிக்க மாட்டார்... பேசினா ரொம்ப ஜாலியா பேசுவாரா இருக்கும் ஆனா பேச மாட்டார்...” விக்கி திருவை பற்றி இருக்கு ஆனா இல்லை என்ற ரேன்ஞ்சில் பேச அனைவரும் கெக்கபெக்கேவென சிரித்தனர்... திருவிற்கும் சிரிப்பு எட்டிப் பார்த்தது ஆனால் அடக்கிக் கொண்டான்...
ஒரு வழியாக அனைவரின் கேலிகளையும் தாங்கிக் கொண்டு விக்கி திருவின் அருகில் சென்று அமர்ந்துவிட., இறுதியாக வினு மட்டுமே பேசாமல் எஞ்சியிருந்தாள்... அதுவும் விக்கியை பற்றி மட்டுமே யாரும் பேசவில்லை என்பதால் சீட்டு எடுக்காமலே அனைவரும் விக்கியை பற்றி பேச சொல்ல... பற்களை நறநறவென கடித்தவள் எழும்ப... அதற்குள் விக்கி எழும்பி,
“என்னப் பத்தி என் அக்கா சொன்னா என்னப்பா இன்ட்ரஸ்டிங்கா இருக்க போகுது... டைமாகுது வாங்க சாப்பிடலாம்” வினு தன்னை பற்றி கழுவி ஊத்துவதற்குள் விக்கி அனைவரையும் அப்புற படுத்த முயல... வினுவும் விக்கியை தனியாக கவனிக்க வேண்டியிருந்ததால் அமைதியாக இருந்தாள்....
ஏற்கனவே நேரம் ஒன்பதை நெருங்கிவிட்டதால் அனைவரும் விக்கி கூறியதும் சரியென்று மதுவின் பக்கமும் சாப்பாட்டின் பக்கமும் சென்றுவிட., விக்கி தனியாக வினுவிடம் மாட்டிக் கொண்டான்...
“வினு ப்ளீஸ் வேணாம்... எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா தான் இருக்கணும்..... விட்டு டி....” தன்னை அடிக்க தயாராக இருந்தவளிடம் கெஞ்சியவன்., லானில் விக்கி ஓட, வினு அவனை துரத்திக் கொண்டு இருந்தாள்...
“நில்லு டா... எனக்கும் அரசுக்கும் கெமிஸ்ட்ரி செட்டாகும்னு பார்த்தா ஒவ்வொரு தடவையும் வில்லி மாதிரி வந்து நீ கெமிஸ்ட்ரி செட் பண்றியா???? நில்லுடா... நில்லு... உன்னை சும்மா விட மாட்டேன்....”
“அய்யோ வினு... ஹிட்லர் கூட கெமிஸ்ட்ரி செட் பண்ணி நான் என்னடி பண்ணப் போறேன்... எனக்கு அந்த மனுஷன பார்த்தாலே உதறல் எடுக்கும் டி... விட்ரு டி என்னை.. நான் அம்மாக்கு கடைசி ஒரே பையன் டி”... விக்கி அலற...
வினு ஓடிச் சென்று அவனை பிடித்து அவன் முதுகில் நான்கைந்து அடிகளை வழங்க... விக்கி தான் அப்பாவியாக மாட்டிக் கொண்டு அவள் கொடுத்த அடிகளை சுமைதாங்கியாக மாறி தாங்கிக் கொண்டான்..
இருவரும் அடித்துக் கொண்டே அந்த நீண்ட லானிலிருந்து சற்று தொலைவு வந்திருக்க., அவர்களின் சண்டையை கலைத்தது அங்கு கேட்ட பேச்சு சத்தம். அலங்காரத்திற்காக புதர் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருந்த செடியின் பின் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள் அவர்கள் இருவரம். மெல்லிய வெளிச்சத்தில் அவர்களின் உருவம் இவர்களுக்கு தெரிந்தாலும் இவர்கள் நிற்பதை அவர்கள் கவனிக்கவில்லை.
“டேய் நான் சொன்ன மாதிரி செஞ்சிட்டியாடா....” வினுவும் விக்கியும் ஆபிஸில் சேர்ந்த முதல் நாளன்று., திருவிடம் அடிவாங்கி விட்டு வெளியேறியவன் கேட்க...
மற்றொருவனோ, “ஆமாம் டா. நீ போதை மருந்து கலந்துக் கொடுத்த ஜீசை திருகிட்ட கொடுத்திட்டேன்... இன்னும் கொஞ்ச நேரத்துலளு அதோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடும்.... “
“காட்டணும் டா... இந்த பிரகாஷ் யாருன்னு காட்டணும்டா... ஒரு ப்ராஜக்ட் முடிக்கலை அப்படிங்கறதுக்காக என் மேலயே கை வச்சிட்டான்... சந்தர்ப்பம் கிடைக்கும் போது பழி வாங்கிடணும்னு தான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... இன்னைக்கு இத்தனை பேர் முன்னாடி அவன் போதைல தள்ளாடணும்... அசிங்கப்படணும்” என்றவனின் குரலில் அத்தனை பழிவெறி....
இருவரும் மேலும் சில வார்த்தைகள் திருவை திட்டிப் பேச... வினுவிற்கும் விக்கிக்கும் திக்கென்று இருந்தது...
“வினு இப்போ என்னப் பண்றது???” விக்கி பதட்டத்துடன் கேட்க....
“நீ இவனுங்களை கவனிச்சிக்கோ விக்கி... நான் அரசுவை பார்க்கிறேன்....” சட்டென்று முடிவு எடுத்தவள் திருவை தேடி பார்ட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல... அங்கே அவனை காணவில்லை....
“எங்க போய்ட்டான்????” வினு கண்களால் அனைத்து இடங்களையும் துளாவ., திரு அங்கு எங்குமே இல்லை...