அத்தியாயம் இரண்டு
சத்யம் திரையரங்க வளாகத்தினுள் நுழையும் போதே மணி ஆறாகி ஐந்து நிமிடங்களை கடந்திருந்தது. ராயப்பேட்டையின் வாகன நெரிசல்களை மீறி திருவிக சாலையில் அமைந்திருக்கும் அந்த திரையரங்கத்தில் தான் அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மக்கள் குரலுக்கு வந்த அழைப்பின் பேரில் போட்டோக்ராபர் ஹாசனை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். இருவருமே அவரவர் வாகனத்தில்!
ப்ரெஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தனது ஆக்டிவாவை பார்த்தவுடன் அந்த வாகன நெறியாளர், நிறுத்த வேண்டிய இடத்தை காட்ட, அந்த இடத்தை நோக்கி போனாள்.
ப்ரெஸ் என்ற ஸ்டிக்கர் எப்போதுமே அந்த மாயாஜாலத்தை செய்துவிடும் இது போன்ற விழாக்களில். தனியொரு மரியாதை!
கவின்மலர் எப்போதுமே இதுபோன்ற சினிமா விழாக்களுக்கு வந்ததில்லை. அவளுக்கு அது பிடித்தமும் இல்லை. அவளது ஆர்வமும் அதுவல்ல!
அவளுக்கு பிடித்ததெல்லாம் அரசியல் மற்றும் சமூகம்!
பெண்கள் அரசியல் பற்றி எழுத முடியுமா என்ற கேள்விக்குறியை ஆச்சரியக்குறியாக்கியவள் அவள்! வெகு தீர்க்கமாக, தெளிவாக, அரசியல் நிலைப்பாடுகளை துல்லியமாக அவள் செய்யும் விமர்சனம் வெகுவாக வாசகர்களால் பாராட்டப்பட்டு வந்திருக்கிறது.
அப்படிபட்டவளுக்கு இந்த சினிமா விழாவென்பது அவ்வளவு பிடித்தமில்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் தனது அடுத்த கட்டுரைக்காகவென சமாதானம் சொல்லிக்கொண்டு வந்திருந்தாள்.
சித்திரை வெயில் மண்டையை பிளந்தது. அனல் காற்று வேறு!
திரையரங்க வளாகத்தினுள் வாகனம் நிறுத்துமிடம் வேறு மொட்டையாக, கொஞ்சமேனும் நிழல் கிடைக்குமா என்று தேடுமளவு இருந்தது.
முக்கால் கை சல்வாரை அணிந்து வந்தது நல்லதாக போய்விட்டது என்று நினைத்துக்கொண்டாள். அனலில் சற்று வியர்த்தாலும் இந்த வெயிலுக்கு இதுதான் சரி. இல்லையெனில் இந்த சித்திரை வெயிலில் ஹாஸ்டல் சென்று சேர்வதற்குள் சிக்கன் ப்ரை ஆகி விட வேண்டியிருக்குமே!
சென்னையில் வெளியே செல்வதற்கு பெண்கள் எத்தனை ஆயத்தங்களை செய்ய வேண்டியிருக்கிறது? முகத்துக்கு முகமூடியை கொள்ளைகாரர்களை போல கட்டிக்கொண்டு, கண்களுக்கு கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு, கைகளுக்கு கவசத்தை மாட்டிக்கொண்டு கால்களுக்கு சாக்ஸ் போட்டு அந்த இடத்தையும் மறைத்துக் கொண்டு, ஷப்பா மொத்தமாக தங்களை மம்மியாக்கி கொள்வது போல வெளியே கிளம்பி, இந்த வெயிலில் வதங்கி விடாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள நிறைய திறமை தேவைப்படுகிறது.
எங்கோ சென்னையை பற்றி ஒரு வடக்கத்தியன் எழுதியது கவினுக்கு நினைவுக்கு வந்தது. சென்னையின் மூன்று விதமான கிளைமேட் என்று. ஒன்று ஹாட்(வெப்பம்), அடுத்தது ஹாட்டர் (மிகவும் வெப்பம்), அடுத்தது ஹாட்டஸ்ட்(மிக மிக வெப்பம்) என்று!
இருக்கட்டுமே!
ஆனாலும் கவினுக்கு பிடித்தது இந்த சென்னை தான்!
சென்னை அவளது உணர்வோடு ஒன்றி விட்ட ஒரு இடம். இங்கு வாழ்க்கையை உயிர்ப்போடு வாழ நிறைய விஷயமிருக்கிறது. சென்னை என்பது இருபது மாடி அப்பார்ட்மென்ட்களை கொண்ட மாநகரம் அல்ல!
சென்னையின் உயிர் இருப்பதும் அங்கல்ல!
சென்னையின் உண்மையான வாரிசுகள் வசிப்பது வடசென்னையில் தான்.
அதுவே வேர்!
அதுவே சென்னையின் உண்மையான முகவரி!
அது ஒரு தனி உலகம்!
உழைப்பாளிகளின் உலகம்!
கறுப்பர்கள் என்றும், மதராஸிகள் என்றும், வடக்கத்தியர்கள் கிண்டல் செய்யும் கறுப்பர்களின் மண். கறுப்பன் என்றால் யார் குறைவாக கூற முடியும்? இது எமது ஆதி நிறம்! எமது சொந்த நிறம்! எமது மண்ணின் உண்மையான நிறம்! எமது திராவிட நிறம்! அது பெருமையன்றோ!
ஏன் என்று கேட்க ஒட்டுமொத்த ஜனமும் வரும் ஒரு நல்ல உலகமது! அண்டை வீட்டுக்காரன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதை கூட அறியாத தென் சென்னை வாசிகளுடன் ஒப்பிடும் போது கட்டுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக சுதந்திரமாக வாழும் வடசென்னை என்பது நிறைய நேரங்களில் கவினுக்கு சொர்க்கமாகத்தான் தோன்றியிருக்கிறது.
தினம் பத்து ரூபாயை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துபவர்களும், ஒரு வேளை உணவுக்கு பத்தாயிரம் ருபாய் செலவு செய்பவர்களும் சேர்ந்து வாழுமிடம் இந்த வடசென்னை!
மக்கள் குரலின் ஊழியர்கள் பலர் வடசென்னை ஆட்கள் என்பதால் அவர்களுக்கு இயல்பாகவே அந்த பெருமை இருக்கும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வடசென்னைவாசிகள் அழுக்கானவர்களாக, நாகரிகம் குறைந்தவர்களாக தோன்றலாம்.
ஆனால் சென்னையின் உயிர் இருப்பது வடசென்னையில் தான்.
மக்கள் குரல் அலுவலகமும் ப்ரெஸ்ஸும் இருப்பது வேப்பேரி. அதனால் இந்த வடசென்னை கவினுக்கு புகலிடமாகி நான்கு வருடங்களாகியிருந்தது. அலுவலகத்தின் அருகிலேயே ஹாஸ்டல் என்பதாலும், அவள் ஒய்வு நேரங்களில் சுற்றித் திரிவதும் அங்குதான்.
அவளுக்கு விடுமுறை நாட்களில்லை, பண்டிகைகள் இல்லை, எந்த விசேஷமும் இல்லை. காரணம் குடும்பம் என்ற ஒன்று அவளுக்கு இல்லை.
பிறந்தது எங்கேயோ? அது அவளறியாத ஒன்று! அதைப் பற்றி சிந்தித்தும் இல்லை!
வளர்ந்தது ராமகிருஷ்ணர் ஆசிரமத்தில்!
படித்தது எத்தனையோ பேரின் தயவில்! ஆஸ்ரமத்துக்கு வரும் நன்கொடைகள்! அரசாங்க உதவிப்பணம் என்று முடித்தாள். அவளுக்கு இஷ்டமான ஜர்னலிசம் படித்தாள். அதற்கு பின் இன்னொருவருக்கு வழி விட வேண்டும் என்று ஹாஸ்டலுக்கு புலம் பெயர்ந்து கொண்டாள்.
கவின்மலர் என்பது ஆசிரமத்தில் அய்யா வைத்த பெயர். அதோடு அவளது முதன்மையான ஸ்பான்சர் பெயரான ஸ்வப்னா ஸ்வரூப் என்ற வட இந்தியரின் பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டாள்.
என்றுமே தன்னுடைய வேரை மறந்துவிடக் கூடாதல்லவா!
கண்டித்து வளர்க்க தாயில்லை. அன்பூட்டி வளர்க்க தந்தையும் இல்லை. ஆனாலும் எப்போதும் ஒழுக்கத்தை பேணும் குணத்திலிருந்து தவறியதில்லை! இப்போதும் எத்தனையோ பிரச்சனைகள் பற்றி எழுதினாலும் குடும்பம் என்ற ஒன்று இல்லையென்பதால் பயமும் அறவே இல்லை.
எப்போதும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்ற உணர்வு அவளது ரத்தத்தில் கலந்தது. அது ஒன்று மட்டுமே உண்டு!
முகத்தில் கட்டியிருந்த முகமூடியை கழட்டி ஆக்டிவாவின் பாஸ்கட்டில் வைத்தாள். திரையரங்கம் முழுக்க தோரணமும் மிகப்பெரிய கட்அவுட்களுமாக அல்லோலகல்லோல பட்டது.
இந்திரஜித்தின் இருபத்தி ஐந்தாவது திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா!
இந்திரஜித்!
முப்பது வயதை தொட்ட கம்பீரமான ஆணழகன்!
தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம்!
இப்போது வடக்கிலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியிருப்பவன்!
ரசிகர்களுக்கு அவன் கடவுள்!
இளம் பெண்களுக்கு அவன் ரகசிய காதலன்!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நாயகன்!
அத்தனை பேரையும் எப்படித்தான் இவன் இப்படி வசீகரித்து இருக்கிறானோ என்று அவளுக்கு தோன்றியது!
அவன் திரையில் தோன்றினாலே சூடம் காட்டி வணங்க கூட ஆயத்தமாக இருக்குமொரு கூட்டம். அவனது பேரை நெஞ்சில் பச்சை குத்திக் கொள்ளும் ஒரு கூட்டம். அவனுக்காக எதையும் தியாகம் செய்ய காத்திருக்கும் ஒரு கூட்டம் என்று எத்தனை கூட்டங்களை வசீகரித்து வைத்திருக்கிறான்!
ஆச்சரியம் தான் என்று எண்ணிக்கொண்டாள்!
இந்தரின் கட் அவுட்டை நிமிர்ந்து பார்த்தாள். அந்த கண்களில் தென்பட்ட கூர்மையோடு கூடிய அப்பாவித்தனம். அது மிகவும் ஸ்பெஷலாக தோன்றியது. இது எல்லோரிடமும் அமைந்து விடுவதில்லை.
ஆனால் அதில் சற்று உண்மையும் இருக்க வேண்டுமே என்று எண்ணிக்கொண்டாள். உண்மையில்லாத மனிதர்கள் விலங்குக்கு ஒப்பானவர்கள் இல்லையா?
சத்யம் திரையரங்க வளாகத்தினுள் நுழையும் போதே மணி ஆறாகி ஐந்து நிமிடங்களை கடந்திருந்தது. ராயப்பேட்டையின் வாகன நெரிசல்களை மீறி திருவிக சாலையில் அமைந்திருக்கும் அந்த திரையரங்கத்தில் தான் அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மக்கள் குரலுக்கு வந்த அழைப்பின் பேரில் போட்டோக்ராபர் ஹாசனை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். இருவருமே அவரவர் வாகனத்தில்!
ப்ரெஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தனது ஆக்டிவாவை பார்த்தவுடன் அந்த வாகன நெறியாளர், நிறுத்த வேண்டிய இடத்தை காட்ட, அந்த இடத்தை நோக்கி போனாள்.
ப்ரெஸ் என்ற ஸ்டிக்கர் எப்போதுமே அந்த மாயாஜாலத்தை செய்துவிடும் இது போன்ற விழாக்களில். தனியொரு மரியாதை!
கவின்மலர் எப்போதுமே இதுபோன்ற சினிமா விழாக்களுக்கு வந்ததில்லை. அவளுக்கு அது பிடித்தமும் இல்லை. அவளது ஆர்வமும் அதுவல்ல!
அவளுக்கு பிடித்ததெல்லாம் அரசியல் மற்றும் சமூகம்!
பெண்கள் அரசியல் பற்றி எழுத முடியுமா என்ற கேள்விக்குறியை ஆச்சரியக்குறியாக்கியவள் அவள்! வெகு தீர்க்கமாக, தெளிவாக, அரசியல் நிலைப்பாடுகளை துல்லியமாக அவள் செய்யும் விமர்சனம் வெகுவாக வாசகர்களால் பாராட்டப்பட்டு வந்திருக்கிறது.
அப்படிபட்டவளுக்கு இந்த சினிமா விழாவென்பது அவ்வளவு பிடித்தமில்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் தனது அடுத்த கட்டுரைக்காகவென சமாதானம் சொல்லிக்கொண்டு வந்திருந்தாள்.
சித்திரை வெயில் மண்டையை பிளந்தது. அனல் காற்று வேறு!
திரையரங்க வளாகத்தினுள் வாகனம் நிறுத்துமிடம் வேறு மொட்டையாக, கொஞ்சமேனும் நிழல் கிடைக்குமா என்று தேடுமளவு இருந்தது.
முக்கால் கை சல்வாரை அணிந்து வந்தது நல்லதாக போய்விட்டது என்று நினைத்துக்கொண்டாள். அனலில் சற்று வியர்த்தாலும் இந்த வெயிலுக்கு இதுதான் சரி. இல்லையெனில் இந்த சித்திரை வெயிலில் ஹாஸ்டல் சென்று சேர்வதற்குள் சிக்கன் ப்ரை ஆகி விட வேண்டியிருக்குமே!
சென்னையில் வெளியே செல்வதற்கு பெண்கள் எத்தனை ஆயத்தங்களை செய்ய வேண்டியிருக்கிறது? முகத்துக்கு முகமூடியை கொள்ளைகாரர்களை போல கட்டிக்கொண்டு, கண்களுக்கு கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு, கைகளுக்கு கவசத்தை மாட்டிக்கொண்டு கால்களுக்கு சாக்ஸ் போட்டு அந்த இடத்தையும் மறைத்துக் கொண்டு, ஷப்பா மொத்தமாக தங்களை மம்மியாக்கி கொள்வது போல வெளியே கிளம்பி, இந்த வெயிலில் வதங்கி விடாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள நிறைய திறமை தேவைப்படுகிறது.
எங்கோ சென்னையை பற்றி ஒரு வடக்கத்தியன் எழுதியது கவினுக்கு நினைவுக்கு வந்தது. சென்னையின் மூன்று விதமான கிளைமேட் என்று. ஒன்று ஹாட்(வெப்பம்), அடுத்தது ஹாட்டர் (மிகவும் வெப்பம்), அடுத்தது ஹாட்டஸ்ட்(மிக மிக வெப்பம்) என்று!
இருக்கட்டுமே!
ஆனாலும் கவினுக்கு பிடித்தது இந்த சென்னை தான்!
சென்னை அவளது உணர்வோடு ஒன்றி விட்ட ஒரு இடம். இங்கு வாழ்க்கையை உயிர்ப்போடு வாழ நிறைய விஷயமிருக்கிறது. சென்னை என்பது இருபது மாடி அப்பார்ட்மென்ட்களை கொண்ட மாநகரம் அல்ல!
சென்னையின் உயிர் இருப்பதும் அங்கல்ல!
சென்னையின் உண்மையான வாரிசுகள் வசிப்பது வடசென்னையில் தான்.
அதுவே வேர்!
அதுவே சென்னையின் உண்மையான முகவரி!
அது ஒரு தனி உலகம்!
உழைப்பாளிகளின் உலகம்!
கறுப்பர்கள் என்றும், மதராஸிகள் என்றும், வடக்கத்தியர்கள் கிண்டல் செய்யும் கறுப்பர்களின் மண். கறுப்பன் என்றால் யார் குறைவாக கூற முடியும்? இது எமது ஆதி நிறம்! எமது சொந்த நிறம்! எமது மண்ணின் உண்மையான நிறம்! எமது திராவிட நிறம்! அது பெருமையன்றோ!
ஏன் என்று கேட்க ஒட்டுமொத்த ஜனமும் வரும் ஒரு நல்ல உலகமது! அண்டை வீட்டுக்காரன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதை கூட அறியாத தென் சென்னை வாசிகளுடன் ஒப்பிடும் போது கட்டுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக சுதந்திரமாக வாழும் வடசென்னை என்பது நிறைய நேரங்களில் கவினுக்கு சொர்க்கமாகத்தான் தோன்றியிருக்கிறது.
தினம் பத்து ரூபாயை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துபவர்களும், ஒரு வேளை உணவுக்கு பத்தாயிரம் ருபாய் செலவு செய்பவர்களும் சேர்ந்து வாழுமிடம் இந்த வடசென்னை!
மக்கள் குரலின் ஊழியர்கள் பலர் வடசென்னை ஆட்கள் என்பதால் அவர்களுக்கு இயல்பாகவே அந்த பெருமை இருக்கும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வடசென்னைவாசிகள் அழுக்கானவர்களாக, நாகரிகம் குறைந்தவர்களாக தோன்றலாம்.
ஆனால் சென்னையின் உயிர் இருப்பது வடசென்னையில் தான்.
மக்கள் குரல் அலுவலகமும் ப்ரெஸ்ஸும் இருப்பது வேப்பேரி. அதனால் இந்த வடசென்னை கவினுக்கு புகலிடமாகி நான்கு வருடங்களாகியிருந்தது. அலுவலகத்தின் அருகிலேயே ஹாஸ்டல் என்பதாலும், அவள் ஒய்வு நேரங்களில் சுற்றித் திரிவதும் அங்குதான்.
அவளுக்கு விடுமுறை நாட்களில்லை, பண்டிகைகள் இல்லை, எந்த விசேஷமும் இல்லை. காரணம் குடும்பம் என்ற ஒன்று அவளுக்கு இல்லை.
பிறந்தது எங்கேயோ? அது அவளறியாத ஒன்று! அதைப் பற்றி சிந்தித்தும் இல்லை!
வளர்ந்தது ராமகிருஷ்ணர் ஆசிரமத்தில்!
படித்தது எத்தனையோ பேரின் தயவில்! ஆஸ்ரமத்துக்கு வரும் நன்கொடைகள்! அரசாங்க உதவிப்பணம் என்று முடித்தாள். அவளுக்கு இஷ்டமான ஜர்னலிசம் படித்தாள். அதற்கு பின் இன்னொருவருக்கு வழி விட வேண்டும் என்று ஹாஸ்டலுக்கு புலம் பெயர்ந்து கொண்டாள்.
கவின்மலர் என்பது ஆசிரமத்தில் அய்யா வைத்த பெயர். அதோடு அவளது முதன்மையான ஸ்பான்சர் பெயரான ஸ்வப்னா ஸ்வரூப் என்ற வட இந்தியரின் பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டாள்.
என்றுமே தன்னுடைய வேரை மறந்துவிடக் கூடாதல்லவா!
கண்டித்து வளர்க்க தாயில்லை. அன்பூட்டி வளர்க்க தந்தையும் இல்லை. ஆனாலும் எப்போதும் ஒழுக்கத்தை பேணும் குணத்திலிருந்து தவறியதில்லை! இப்போதும் எத்தனையோ பிரச்சனைகள் பற்றி எழுதினாலும் குடும்பம் என்ற ஒன்று இல்லையென்பதால் பயமும் அறவே இல்லை.
எப்போதும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்ற உணர்வு அவளது ரத்தத்தில் கலந்தது. அது ஒன்று மட்டுமே உண்டு!
முகத்தில் கட்டியிருந்த முகமூடியை கழட்டி ஆக்டிவாவின் பாஸ்கட்டில் வைத்தாள். திரையரங்கம் முழுக்க தோரணமும் மிகப்பெரிய கட்அவுட்களுமாக அல்லோலகல்லோல பட்டது.
இந்திரஜித்தின் இருபத்தி ஐந்தாவது திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா!
இந்திரஜித்!
முப்பது வயதை தொட்ட கம்பீரமான ஆணழகன்!
தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம்!
இப்போது வடக்கிலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியிருப்பவன்!
ரசிகர்களுக்கு அவன் கடவுள்!
இளம் பெண்களுக்கு அவன் ரகசிய காதலன்!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நாயகன்!
அத்தனை பேரையும் எப்படித்தான் இவன் இப்படி வசீகரித்து இருக்கிறானோ என்று அவளுக்கு தோன்றியது!
அவன் திரையில் தோன்றினாலே சூடம் காட்டி வணங்க கூட ஆயத்தமாக இருக்குமொரு கூட்டம். அவனது பேரை நெஞ்சில் பச்சை குத்திக் கொள்ளும் ஒரு கூட்டம். அவனுக்காக எதையும் தியாகம் செய்ய காத்திருக்கும் ஒரு கூட்டம் என்று எத்தனை கூட்டங்களை வசீகரித்து வைத்திருக்கிறான்!
ஆச்சரியம் தான் என்று எண்ணிக்கொண்டாள்!
இந்தரின் கட் அவுட்டை நிமிர்ந்து பார்த்தாள். அந்த கண்களில் தென்பட்ட கூர்மையோடு கூடிய அப்பாவித்தனம். அது மிகவும் ஸ்பெஷலாக தோன்றியது. இது எல்லோரிடமும் அமைந்து விடுவதில்லை.
ஆனால் அதில் சற்று உண்மையும் இருக்க வேண்டுமே என்று எண்ணிக்கொண்டாள். உண்மையில்லாத மனிதர்கள் விலங்குக்கு ஒப்பானவர்கள் இல்லையா?