தன் ஸ்கூட்டியில் பெரியப்பா வீட்டை நோக்கி பறந்துக் கோண்டிருந்தாள் நியதி.மனம் உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது.யாரோ சம்பந்தம் இல்லாத ஒருவனை நம்பும் தன் கணவன் கட்டிய மனைவியை நம்பாதது தாங்க முடியாத வலியைக் கொடுத்தது.சிறு வயதிலிருந்தே அது தப்பு இது தவறு என்று பேசி பேசியே அவன் என்றாலே வெறுப்பின் உச்சியில் இருந்தவளை அவனே தன் மென்மையாலும் ஓயாது அவளையேத் தொடரும் பார்வையாலும் அதை காதலாக மாற்றியிருந்தான்.....ஆம் காதல்தான்....அதை ஒத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை அவளுக்கு.அதனாலையே இன்று அவனின் நம்பிக்கையின்மை இந்தளவு தாக்கிவிட்டது அவளது மனதை.
அந்த சுரேஷை நினைத்தால் அவளுக்கு உடலெல்லாம் எரிந்தது.எப்படிப்பட்ட மனிதன் இவன்.உலகில் இருக்கும் அத்தனைக் கெட்டப் பழக்கங்களையும் வைத்துக் கொண்டு பூவை விட மென்மையான தன் ஸ்ருதி அக்காவை மணக்க நினைக்கிறானே...சீக்ரெட் பிடிப்பதைக் கூட வெறுப்பாக பார்க்கும் ஸ்ருதி குடி பெண்கள் சகவாசம் என இருக்கும் இவனை மணந்தால் அவள் நிலை என்ன ஆகும்?
'இல்ல இந்த கல்யாணம் நடக்க நான் விட மாட்டேன்....என்ன ஆனாலும் சரி இத நிறுத்தியே தீருவேன்....சாட்சி தானே வேணும்....ஒண்ணென்ன ஓராயிரம் சாட்சி.....நா கொண்டு வரேன்...'
பாரடைஸ் ஹோட்டலின் முன் தன் ஸ்கூட்டியை நிறுத்தியவள் ரிசப்ஷன் அருகே சென்று
"எக்ஸ்க்யூஸ் மீ...ஒரு இம்பார்ட்டண்ட் டீடைல்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்ஸ்ல செக் பண்ணனும்... கொஞ்சம் ஆபிஸ் இன்சார்ஜ பாக்க முடியுமா?"
"அந்த மாதிரியெல்லாம் கேக்கறவங்களுக்கு எல்லாம் ரெகார்ட்ஸ் காட்றதில்ல மேம்...சாரி"
"ப்ளீஸ்....புரிஞ்சுக்கோங்க....அது ரொம்ப இம்பார்ட்டெண்ட்..."
"சாரி மேம்....அப்படி பண்ண முடியாது... ஹோட்டல் ரூல்ஸ்... நீங்க டிஸ்டர்ப் பண்ணாம போங்க"என்று இந்த முறை சிறிது கடுமையாக கூறினாள் வரவேற்பு பெண்.
அங்கிருந்து சிறிது தள்ளி வந்த நியதி மேலே என்ன செய்வதென யோசித்தாள்.அவள் எண்ணம் சிசிடிவி ஃபூடேஜில் பதிவாகியிருக்கும் அந்த சுரேஷின் லீலைகளை வீட்டில் காட்டி திருமணத்தை நிறுத்தி விடுவது என்று.ஆனால் அப்படி வெளி ஆட்களுக்கு அதையெல்லாம் காட்ட முடியாது என்கிறார்களே! இப்போது என்ன செய்வது என யோசித்த போது சட்டென நிஷாவின் நினைவு வந்தது அவளுக்கு.
நிஷாவின் தந்தை அந்த ஹோட்டலில் ஒரு பங்குதாரர்.அதனாலையே அவர்கள் விழாவெல்லாம் அங்கேயே நடத்தினர்.அவள் கூறினால் ஹோட்டல் நிர்வாகம் கண்டிப்பாக ஃபூடேஜை காட்டுவார்கள்.தன் போனில் நிஷாவின் எண்ணை அழைத்தாள்.இரண்டு மூன்று ரிங் சென்ற பின் போனை எடுத்தாள் நிஷா
"ஹலோ நிஷா!நா நியதி..."
"ஹாய் மச்சி!என்னடி விஷயம்?நா நாளைக்கு தான் காலேஜ் வருவேன்.... இன்னிக்கு ரிலேடிவ்ஸ் வந்திருக்காங்க....காலேஜுல இன்னிக்கு என்ன மேட்டர்?"
"நிஷா...நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்... ரொம்ப அர்ஜென்ட்...என்ன ஏது அதெல்லாம் அப்புறம் சொல்றேன்...."என்று தனக்கு அந்த ஃபூடேஜின் தேவையைக் கூறினாள்.
"இவ்ளோதானே...நா இப்பவே போன் பண்ணி சொல்லிட்றேன்...யூ டோண்ட் வொர்ரி...பை..."
ஐந்து நிமிடங்களில் மாயாஜாலம் போல அந்த ஹோட்டல் மேனேஜரே வந்து நியதியை ஆபிஸ் அறைக்கு அழைத்துச் சென்றார்...குடிக்க ஜுஸ் கூட வந்தது.அவள் எந்தந்த வீடியோ தேவை என்று விவரித்தாள்.ஆனால் அவள் எதை எதிர்ப்பார்த்து வந்தாளோ அது அங்கே இல்லை.தினமும் நூறாரு பேர்கள் அங்கே வந்து போகிறார்கள்.வருபவர் பதினெட்டு வயதுக்கு மேலே இருக்க வேண்டுமே தவிர அவர்களைப் பற்றி வேறு எந்த விவரமும் ஹோட்டலில் கேட்பதில்லை என்று மேஜேர் கூறினார்.ஆறு மாதத்திற்கு முன்பான ஃபூடேஜை அவள் கேட்ட போது
"சாரி மேம்...நாங்க ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி எல்லா ஃபூடேஜயும் டெலிட் பண்ணிடுவோம்.போன வாரம் தான் அத பண்ணினோம்...."
சே...என்றானது நியதிக்கு.அவள் மலை போல் நம்பியது அன்று பப்பில் தன் நினைவின்றி லீலைகள் புரிந்த சுரேஷின் வீடியோவைக் காட்டினால் இந்த திருமணம் கண்டிப்பாக நின்றுவிடும் என்று தான்.ஆனால் அதே இல்லையென்றானதும் அவளுக்கு மேலே என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஏமாற்றத்தோடு அவள் வெளியே வந்து அவள் பைக் அருகே சென்ற போது
"மேடம் கொஞ்சம் நில்லுங்க!"
என்றபடி அவளருகில் வந்தான் அவளுக்கு அங்கே ஜுஸ் கொண்டு வந்து வைத்த வெய்டர்.
என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள் நியதி.
"மேடம் நீங்க தேடற ஆளப் பத்தி எனக்கு தெரியும்னு நினைக்கிறேன்....இங்க வரவங்க முக்கால்வாசி பேர எனக்கு அடையாளம் தெரியும்..."
மனதில் நம்பிக்கை கீற்று அடிக்க
"அப்படியா?!!! சுரேஷ்னு ஒருத்தர் இங்க அடிக்கடி வருவாரான்னு தெரியாது....அவர பத்தி டீடெயில்ஸ் வேணும்.... ரொம்ப அர்ஜென்ட்...இது ஒரு பொண்ணோட வாழ்க்கை பிரச்சினை...."
"மேடம் அவரு போட்டோ இருந்தா காட்டுங்க நா பாத்து சொல்றேன்..."
என்றதும் ஃபேஸ்புக்கில் இருந்த சுரேஷின் ஃப்ரஃபைல் பிச்சரை அவனிடம் காட்டினாள்.
அதை இரண்டு நிமிடம் உற்று நோக்கிய அந்த ஆள்
"ஓ....இவரா!இவர நல்லாத் தெரியுமே....நாலு அஞ்சு வாட்டி வந்திருக்காரு...எப்ப வந்தாலும் வேற வேற பொண்ணுக் கூடத் தான் வருவாரு....போன வாட்டிக் கூட ஃபுல்லா ஏதிக்கிட்டு வேற யாரோ கூடவோ வந்த பொண்ண கைப் புடிச்சு இழுத்து ஒரே கலாட்டாவா..போச்சு...நாங்கெல்லா சேர்ந்து சரிப் பண்ணிட்டோம்...மேனேஜர் காது வரக் கொண்டு போல...ஐந்து பத்து டிப்ஸ கெடுத்துப்பானேன்னு...."
சுரேஷைப் பற்றி சந்தேமென்றாலும் அவன் இவ்வளவு கேவலமானவன் என்பதைக் கேட்ட போது அவள் கோபம் உச்சியை அடைந்தது.
அந்த சுரேஷை நினைத்தால் அவளுக்கு உடலெல்லாம் எரிந்தது.எப்படிப்பட்ட மனிதன் இவன்.உலகில் இருக்கும் அத்தனைக் கெட்டப் பழக்கங்களையும் வைத்துக் கொண்டு பூவை விட மென்மையான தன் ஸ்ருதி அக்காவை மணக்க நினைக்கிறானே...சீக்ரெட் பிடிப்பதைக் கூட வெறுப்பாக பார்க்கும் ஸ்ருதி குடி பெண்கள் சகவாசம் என இருக்கும் இவனை மணந்தால் அவள் நிலை என்ன ஆகும்?
'இல்ல இந்த கல்யாணம் நடக்க நான் விட மாட்டேன்....என்ன ஆனாலும் சரி இத நிறுத்தியே தீருவேன்....சாட்சி தானே வேணும்....ஒண்ணென்ன ஓராயிரம் சாட்சி.....நா கொண்டு வரேன்...'
பாரடைஸ் ஹோட்டலின் முன் தன் ஸ்கூட்டியை நிறுத்தியவள் ரிசப்ஷன் அருகே சென்று
"எக்ஸ்க்யூஸ் மீ...ஒரு இம்பார்ட்டண்ட் டீடைல்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்ஸ்ல செக் பண்ணனும்... கொஞ்சம் ஆபிஸ் இன்சார்ஜ பாக்க முடியுமா?"
"அந்த மாதிரியெல்லாம் கேக்கறவங்களுக்கு எல்லாம் ரெகார்ட்ஸ் காட்றதில்ல மேம்...சாரி"
"ப்ளீஸ்....புரிஞ்சுக்கோங்க....அது ரொம்ப இம்பார்ட்டெண்ட்..."
"சாரி மேம்....அப்படி பண்ண முடியாது... ஹோட்டல் ரூல்ஸ்... நீங்க டிஸ்டர்ப் பண்ணாம போங்க"என்று இந்த முறை சிறிது கடுமையாக கூறினாள் வரவேற்பு பெண்.
அங்கிருந்து சிறிது தள்ளி வந்த நியதி மேலே என்ன செய்வதென யோசித்தாள்.அவள் எண்ணம் சிசிடிவி ஃபூடேஜில் பதிவாகியிருக்கும் அந்த சுரேஷின் லீலைகளை வீட்டில் காட்டி திருமணத்தை நிறுத்தி விடுவது என்று.ஆனால் அப்படி வெளி ஆட்களுக்கு அதையெல்லாம் காட்ட முடியாது என்கிறார்களே! இப்போது என்ன செய்வது என யோசித்த போது சட்டென நிஷாவின் நினைவு வந்தது அவளுக்கு.
நிஷாவின் தந்தை அந்த ஹோட்டலில் ஒரு பங்குதாரர்.அதனாலையே அவர்கள் விழாவெல்லாம் அங்கேயே நடத்தினர்.அவள் கூறினால் ஹோட்டல் நிர்வாகம் கண்டிப்பாக ஃபூடேஜை காட்டுவார்கள்.தன் போனில் நிஷாவின் எண்ணை அழைத்தாள்.இரண்டு மூன்று ரிங் சென்ற பின் போனை எடுத்தாள் நிஷா
"ஹலோ நிஷா!நா நியதி..."
"ஹாய் மச்சி!என்னடி விஷயம்?நா நாளைக்கு தான் காலேஜ் வருவேன்.... இன்னிக்கு ரிலேடிவ்ஸ் வந்திருக்காங்க....காலேஜுல இன்னிக்கு என்ன மேட்டர்?"
"நிஷா...நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்... ரொம்ப அர்ஜென்ட்...என்ன ஏது அதெல்லாம் அப்புறம் சொல்றேன்...."என்று தனக்கு அந்த ஃபூடேஜின் தேவையைக் கூறினாள்.
"இவ்ளோதானே...நா இப்பவே போன் பண்ணி சொல்லிட்றேன்...யூ டோண்ட் வொர்ரி...பை..."
ஐந்து நிமிடங்களில் மாயாஜாலம் போல அந்த ஹோட்டல் மேனேஜரே வந்து நியதியை ஆபிஸ் அறைக்கு அழைத்துச் சென்றார்...குடிக்க ஜுஸ் கூட வந்தது.அவள் எந்தந்த வீடியோ தேவை என்று விவரித்தாள்.ஆனால் அவள் எதை எதிர்ப்பார்த்து வந்தாளோ அது அங்கே இல்லை.தினமும் நூறாரு பேர்கள் அங்கே வந்து போகிறார்கள்.வருபவர் பதினெட்டு வயதுக்கு மேலே இருக்க வேண்டுமே தவிர அவர்களைப் பற்றி வேறு எந்த விவரமும் ஹோட்டலில் கேட்பதில்லை என்று மேஜேர் கூறினார்.ஆறு மாதத்திற்கு முன்பான ஃபூடேஜை அவள் கேட்ட போது
"சாரி மேம்...நாங்க ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி எல்லா ஃபூடேஜயும் டெலிட் பண்ணிடுவோம்.போன வாரம் தான் அத பண்ணினோம்...."
சே...என்றானது நியதிக்கு.அவள் மலை போல் நம்பியது அன்று பப்பில் தன் நினைவின்றி லீலைகள் புரிந்த சுரேஷின் வீடியோவைக் காட்டினால் இந்த திருமணம் கண்டிப்பாக நின்றுவிடும் என்று தான்.ஆனால் அதே இல்லையென்றானதும் அவளுக்கு மேலே என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஏமாற்றத்தோடு அவள் வெளியே வந்து அவள் பைக் அருகே சென்ற போது
"மேடம் கொஞ்சம் நில்லுங்க!"
என்றபடி அவளருகில் வந்தான் அவளுக்கு அங்கே ஜுஸ் கொண்டு வந்து வைத்த வெய்டர்.
என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள் நியதி.
"மேடம் நீங்க தேடற ஆளப் பத்தி எனக்கு தெரியும்னு நினைக்கிறேன்....இங்க வரவங்க முக்கால்வாசி பேர எனக்கு அடையாளம் தெரியும்..."
மனதில் நம்பிக்கை கீற்று அடிக்க
"அப்படியா?!!! சுரேஷ்னு ஒருத்தர் இங்க அடிக்கடி வருவாரான்னு தெரியாது....அவர பத்தி டீடெயில்ஸ் வேணும்.... ரொம்ப அர்ஜென்ட்...இது ஒரு பொண்ணோட வாழ்க்கை பிரச்சினை...."
"மேடம் அவரு போட்டோ இருந்தா காட்டுங்க நா பாத்து சொல்றேன்..."
என்றதும் ஃபேஸ்புக்கில் இருந்த சுரேஷின் ஃப்ரஃபைல் பிச்சரை அவனிடம் காட்டினாள்.
அதை இரண்டு நிமிடம் உற்று நோக்கிய அந்த ஆள்
"ஓ....இவரா!இவர நல்லாத் தெரியுமே....நாலு அஞ்சு வாட்டி வந்திருக்காரு...எப்ப வந்தாலும் வேற வேற பொண்ணுக் கூடத் தான் வருவாரு....போன வாட்டிக் கூட ஃபுல்லா ஏதிக்கிட்டு வேற யாரோ கூடவோ வந்த பொண்ண கைப் புடிச்சு இழுத்து ஒரே கலாட்டாவா..போச்சு...நாங்கெல்லா சேர்ந்து சரிப் பண்ணிட்டோம்...மேனேஜர் காது வரக் கொண்டு போல...ஐந்து பத்து டிப்ஸ கெடுத்துப்பானேன்னு...."
சுரேஷைப் பற்றி சந்தேமென்றாலும் அவன் இவ்வளவு கேவலமானவன் என்பதைக் கேட்ட போது அவள் கோபம் உச்சியை அடைந்தது.