Thank you so much maha ka???Big family heavy subject ah dhan irrukum interesting bhavya??one more think sollanum neenaiche unga name romba azhaga irruku ma??
Thank you so much maha ka???Big family heavy subject ah dhan irrukum interesting bhavya??one more think sollanum neenaiche unga name romba azhaga irruku ma??
List perusa poi2 iruku ????????கதை தொடர்வதிற்கு முன் குடும்பத்தை பற்றி சின்ன இன்ட்ரோ. மதுரையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது பருத்தியூர்.அதுதான் நியதி குடும்பத்தின் சொந்த ஊர்.அங்கே ஊரியிலேயே பெரிய வீடு அவர்களுடையது.தாத்தா மருதைய்யன் பாட்டி மரகதவல்லி.கணவன் மனைவி என்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் அவர்கள்.அவர்களுக்கு நான்கு மகன்கள் ஒரே ஒரு மகள்.மூத்தவர் ஞானசேகரன் அவர் மனைவி லஷ்மி.இரண்டாமவர்தான் நியதியின் தந்தை சுந்தரம் மனைவி சந்தியா.மூன்றாவது சமர்த்தின் தாய் லலிதா அவரின் கணவர் தயாநிதி.நான்காவது கேசவன் அவர் மனைவி விமலா.கடைக்குட்டி தான் கிராமத்தில் மரகதவல்லிப் பாட்டியோடு இருக்கும் கார்த்திகேயன் அவர் மனைவி நித்திலா.
இவர்களின் வாரிசுகள் ஞானசேகரன்-லஷ்மி தம்பதிகளுக்கு மூத்தவன் நிரஞ்சன்..மனைவி ரிதிமா.வெளிநாட்டில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான்.இரண்டாவது மகள் ஸ்ருதி...பட்ட மேற்படிப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள்... அவளின் தங்கை சின்மயி...டிகிரி ஃபர்ஸ்ட் இயர்.
சுந்தரம்-சந்தியா தம்பதிகளுக்கு மூத்தவள் நியதி டிகிரி ஃபர்ஸ்ட் இயர்.இரண்டாமவன் அவள் தம்பி வருண் எட்டாம் வகுப்பு.
கேசவன்-விமலா தம்பதிகளுக்கு மூத்தவள் சாருலதா...டிகிரி ஃபர்ஸ்ட் இயர்...அவளின் தம்பி அஸ்வின்... பத்தாம் வகுப்பு.
ஞானசேகரன் சுந்தரத்துக்கு தங்கை கேசவன் கார்த்திகேயனின் அக்கா லலிதா-தயாநிதி தம்பதிகளுக்கு மூத்தவன் நம் ஹீரோ சமர்த்.. பிஸ்னஸ் செய்கிறான்...அவனின் தங்கை வித்யா... டிகிரி ஃபர்ஸ்ட் இயர்... அவளின் தங்கை ஜெயராணி ப்ளஸ் டூ.
கிராமத்தில் இருக்கும் கார்த்திகேயன்-நித்திலாவிற்கு ஒரே மகள் வந்தனா..மூன்றாம் வகுப்பு.
அப்பாடா... இப்போதைக்கு இந்த இன்ட்ரோ போதும்...மீதி விவரங்களை கதையின் போக்கில் தெரிந்துக் கொள்ளலாம்.