• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 40

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
மகிழை பார்த்ததிலிருந்து அவள் மனம் முற்றிலுமாய் மாறியிருந்தது.

அவனின் விழிகளில் அவளுக்கே உரித்தான ஆழமான காதலை பார்த்த பின் ஏற்பட்ட அபிரமிதமான சந்தோஷம் இது.

அதுவே போதும் இந்த ஜென்னம் முழுக்க என்றளவுக்காய் அவள் உள்ளமெல்லாம் அவன் காதலை எண்ணி பூரிப்படைந்திருக்க, சாக்ஷியாய் தான் மகிழின் பார்வையில் எப்படியிருந்திருப்போம் என்று அவளுக்குள் தோன்றிய அசட்டுத்தனமான ஆசையை தீர்த்துகொள்ளவே அவ்விதம் உடையணிந்து பார்த்து கொண்டாள்.

முதல்முறையாய் அவள் விழிகள் அவளையே பார்த்து ரசித்து கொண்டது.

அந்த சமயம் ராகவ் டேவிடின் வீட்டிற்குள் நுழைந்தான். அவன் தயக்கத்தோடு முகப்பு அறையில் நின்று பார்வையை சுழற்ற,

டேவிட் அவனை பார்த்துவிட்டு,

"உள்ளே வாங்க ராகவ்" என்றழைத்தான்.

டேவிடை பார்த்ததும் கொஞ்சம் கடுப்பானவன், அவனிடம் அலட்சிய பார்வையோடு "ஜென்னியை பார்க்கனும்" என்று இறுக்கமாகவே உரைத்தான்.

ராகவிற்கு தன்னை சுத்தமாய் பிடிக்கவில்லை என்பதை டேவிட் அவன் பார்வையிலயே உணர்ந்தாலும்,

புன்முறுவலோடே அவனை பார்த்து "ஜஸ்ட் மினிட் ராகவ்" என்றவன்

அங்கிருந்த பணியாள் ஒருவனை அழைத்து, ராகவை ஜென்னியின் அறைக்கு அழைத்துப் போகச் சொல்லி பணித்தான்.

அவன் டேவிடிடம் மரியாதைக்காக கூட ஒர் நன்றியுரைக்காமல் கடந்து சென்றான்.

ராகவ் அவள் அறையில் வாசலில் வந்து நிற்க, ஜென்னியின் மனமெல்லாம் மகிழை மட்டுமே சுற்றியே இருந்தது.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்'

என்ற பாடல் மிதமாய் ஒலித்துக் கொண்டிருக்க, அவள் மனநிலைக்கு ஏற்றவாறாய் இருந்த அந்த பாடலை அவள் விழிகள் மூடி இருக்கையில் அமர்ந்து தலைசாய்த்து ரசித்திருந்தாள்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை'

உள்ளே நுழைந்தவன் அப்படியே அந்த பாடலின் சந்தங்களில் தன்னிலை மறந்து கிடந்தவளின் புதுவிதமான உடையலங்கரத்தை பார்த்து திகைப்புற்றான்.

அவளோ அவன் வருகையை அறியாமல் அந்த பாடலுக்குள்ளேயே மூழ்கிகிடந்தாள்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்'

'புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி

கண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

என்றோ என்றோ இறந்திருப்பேன்!'

அவள் தேகத்தின் நிறத்தோடு போட்டிக் போட்டுக் கொண்டு அழகாய் மிளிரும் அந்த மஞ்சள் நிற காட்டன் புடவையில் பின்னிய கூந்தலும் அதனில் அவள் சூடியிருந்த மலரும் என அவளை உச்சி முதல் பாதம் வரை நிதானமாய் ரசித்தவனின் மனம் சலனப்பட்டது.

காந்தமாய் ஈர்த்தவளை அவன் மனம் தீண்டச் சொல்லி அழுத்தம் கொடுக்க, அவனின் காம உணர்வுகள் எரித்தழலாய் மாறி அவனுக்குள் தீ முட்டியது.

ஆனால் அவள் அதனை சற்றும் உணர்ந்திருக்கவில்லை. அந்த பாடலிலேயே அவள் லயித்திருந்தாள்.

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள் மனதில் ஒரு மாறுதலா'

'இரக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தம் சோகம் தீர்வதற்கு

இது போல் மருந்து பிரிதில்லையே'

அந்தக் குழலைப் போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே'

அவளை தன் பார்வையாலயே வருடியவன் நிதானம் இழந்து தன்னிலை மீறி நெருங்கியவனுக்கு அந்த கணம் சடாரென எப்போதோ எங்கேயோ அவளை இதே கோலத்தில் இத்தனை நெருக்கமாய் பார்த்த நினைவு தோன்ற, அவன் அப்படியே ஸ்தம்பித்துவிட்டான்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்'

பாடல் முடிவுற,

அவள் சஞ்சரித்திருந்த அந்த இன்பகரமான உலகம் சட்டென்று மறைந்த நொடி அவள் உள்ளுணர்வு தலைதூக்கி அவளை எச்சரிக்க,

"ராகவ்" என்று அதிர்ந்து அவனை விலக்கிவிட்டு விழித்து கொண்டவளுக்கு இதயம் அதிவேகமாய் படபடத்தது.

அவள் தள்ளிய வேகத்தில் அவனோ சற்று நிலைத்தடுமாறி நின்றான்.

hi friends,
நான் எதிர்பார்த்ததை விட இந்த கதை அதிக அத்தியாயங்களை கடந்து கொண்டு இருக்கிறது.
இழுக்க வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை. அதே நேரத்தில் அவசரமாய் முடிக்கவும் முடியாது. இந்த கதையின் சிக்கலை ஒவ்வொன்றாக பொறுமையாகவே விடுவிக்க வேண்டும்.


வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.
(y):)
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
மகிழை பார்த்ததிலிருந்து அவள் மனம் முற்றிலுமாய் மாறியிருந்தது.

அவனின் விழிகளில் அவளுக்கே உரித்தான ஆழமான காதலை பார்த்த பின் ஏற்பட்ட அபிரமிதமான சந்தோஷம் இது.

அதுவே போதும் இந்த ஜென்னம் முழுக்க என்றளவுக்காய் அவள் உள்ளமெல்லாம் அவன் காதலை எண்ணி பூரிப்படைந்திருக்க, சாக்ஷியாய் தான் மகிழின் பார்வையில் எப்படியிருந்திருப்போம் என்று அவளுக்குள் தோன்றிய அசட்டுத்தனமான ஆசையை தீர்த்துகொள்ளவே அவ்விதம் உடையணிந்து பார்த்து கொண்டாள்.

முதல்முறையாய் அவள் விழிகள் அவளையே பார்த்து ரசித்து கொண்டது.

அந்த சமயம் ராகவ் டேவிடின் வீட்டிற்குள் நுழைந்தான். அவன் தயக்கத்தோடு முகப்பு அறையில் நின்று பார்வையை சுழற்ற,

டேவிட் அவனை பார்த்துவிட்டு,

"உள்ளே வாங்க ராகவ்" என்றழைத்தான்.

டேவிடை பார்த்ததும் கொஞ்சம் கடுப்பானவன், அவனிடம் அலட்சிய பார்வையோடு "ஜென்னியை பார்க்கனும்" என்று இறுக்கமாகவே உரைத்தான்.

ராகவிற்கு தன்னை சுத்தமாய் பிடிக்கவில்லை என்பதை டேவிட் அவன் பார்வையிலயே உணர்ந்தாலும்,

புன்முறுவலோடே அவனை பார்த்து "ஜஸ்ட் மினிட் ராகவ்" என்றவன்

அங்கிருந்த பணியாள் ஒருவனை அழைத்து, ராகவை ஜென்னியின் அறைக்கு அழைத்துப் போகச் சொல்லி பணித்தான்.

அவன் டேவிடிடம் மரியாதைக்காக கூட ஒர் நன்றியுரைக்காமல் கடந்து சென்றான்.

ராகவ் அவள் அறையில் வாசலில் வந்து நிற்க, ஜென்னியின் மனமெல்லாம் மகிழை மட்டுமே சுற்றியே இருந்தது.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்'

என்ற பாடல் மிதமாய் ஒலித்துக் கொண்டிருக்க, அவள் மனநிலைக்கு ஏற்றவாறாய் இருந்த அந்த பாடலை அவள் விழிகள் மூடி இருக்கையில் அமர்ந்து தலைசாய்த்து ரசித்திருந்தாள்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை'

உள்ளே நுழைந்தவன் அப்படியே அந்த பாடலின் சந்தங்களில் தன்னிலை மறந்து கிடந்தவளின் புதுவிதமான உடையலங்கரத்தை பார்த்து திகைப்புற்றான்.

அவளோ அவன் வருகையை அறியாமல் அந்த பாடலுக்குள்ளேயே மூழ்கிகிடந்தாள்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்'

'புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி

கண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

என்றோ என்றோ இறந்திருப்பேன்!'

அவள் தேகத்தின் நிறத்தோடு போட்டிக் போட்டுக் கொண்டு அழகாய் மிளிரும் அந்த மஞ்சள் நிற காட்டன் புடவையில் பின்னிய கூந்தலும் அதனில் அவள் சூடியிருந்த மலரும் என அவளை உச்சி முதல் பாதம் வரை நிதானமாய் ரசித்தவனின் மனம் சலனப்பட்டது.

காந்தமாய் ஈர்த்தவளை அவன் மனம் தீண்டச் சொல்லி அழுத்தம் கொடுக்க, அவனின் காம உணர்வுகள் எரித்தழலாய் மாறி அவனுக்குள் தீ முட்டியது.

ஆனால் அவள் அதனை சற்றும் உணர்ந்திருக்கவில்லை. அந்த பாடலிலேயே அவள் லயித்திருந்தாள்.

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள் மனதில் ஒரு மாறுதலா'

'இரக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தம் சோகம் தீர்வதற்கு

இது போல் மருந்து பிரிதில்லையே'

அந்தக் குழலைப் போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே'

அவளை தன் பார்வையாலயே வருடியவன் நிதானம் இழந்து தன்னிலை மீறி நெருங்கியவனுக்கு அந்த கணம் சடாரென எப்போதோ எங்கேயோ அவளை இதே கோலத்தில் இத்தனை நெருக்கமாய் பார்த்த நினைவு தோன்ற, அவன் அப்படியே ஸ்தம்பித்துவிட்டான்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்'

பாடல் முடிவுற,

அவள் சஞ்சரித்திருந்த அந்த இன்பகரமான உலகம் சட்டென்று மறைந்த நொடி அவள் உள்ளுணர்வு தலைதூக்கி அவளை எச்சரிக்க,

"ராகவ்" என்று அதிர்ந்து அவனை விலக்கிவிட்டு விழித்து கொண்டவளுக்கு இதயம் அதிவேகமாய் படபடத்தது.

அவள் தள்ளிய வேகத்தில் அவனோ சற்று நிலைத்தடுமாறி நின்றான்.

hi friends,
நான் எதிர்பார்த்ததை விட இந்த கதை அதிக அத்தியாயங்களை கடந்து கொண்டு இருக்கிறது.
இழுக்க வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை. அதே நேரத்தில் அவசரமாய் முடிக்கவும் முடியாது. இந்த கதையின் சிக்கலை ஒவ்வொன்றாக பொறுமையாகவே விடுவிக்க வேண்டும்.


வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.
My favorite song lovely ????
 




Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
இவனும் சாஷிக்கு ஏற்பட்ட விபத்துக்கு காரணமா?.

இவனுக்கு எல்லாம் ஏக பத்னி விரதனான ராமனோட பேரு. விளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சலம் போல.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
உண்மைதான்.... அவர் ஜென்னி கூட சேருகிறாரோ இல்லையோ கல்யாணம் பண்ணிக்கணும்.....

அப்போ அந்த நாள் இவர் தான அது.... 🤨

இதுக்கு முன்னயே பார்த்துருக்கார....

அன்னைக்கு நைட் என்ன ஆச்சு.... யார் அவங்களோட இந்த நிலைமைக்கு காரணம்.....

இவரா.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top