Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
வானமும் கடலும்
மும்பையில் உள்ள அதிநவீன மருத்துவமனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று வீ.ஜே மருத்துவமனை.
அந்த நகரத்தின் ரொம்பவும் முக்கியமான இடத்தில் அமைந்திருந்த அந்த மருத்துவமனையின் கட்டிடங்களை பார்வையிடவே ஒரு நாள் கடந்துவிடும்.
அந்தளவுக்கு அந்த மருத்துவமனை கட்டிடங்கள் பரந்து விரிந்து கிடக்க, அங்கே எல்லாவகையான நோய்களுக்கும் தனித்தனியாக சிகிச்சைகள் அளிக்கப்பட வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க, அங்கே அதிநவீன மருத்துவ உபகரணங்களும் கூட அமைந்திருந்தன என்பது மற்றொரு சிறப்புக்குரிய விஷயம்தான்.
அதே நேரம் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடின்றி எல்லோருக்குமே சிறப்பான முறையில் மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டன.
ஜென்னித்தா டிரஸ்ட் வசதியற்றவர்களுக்கான மருத்துவ செலவுகளை கவனித்து கொண்ட நிலையில், அத்தகைய பேறு பெற்ற மருத்துவமனையின் தலைமை நிர்வாகியாக இருப்பவர்தான் விக்டரின் மனைவி ஜென்னிபாஃர்.
அவரின் பெயருக்கருகில் வரிசையாய் நீளும் மருத்துவபட்டத்தை பார்க்கும் போதே எல்லோரும் வியப்படைய கூடும்.
ஆனால் அவரோ பார்வைக்கும் பேச்சும் அத்தனை எளிமையாகவும் இயல்பாகவும் பழககூடியவர்.
சாக்ஷியை முழுமையாய் ஜென்னியை மாற்றியதில் அவருக்கு அதிக பங்கு இருந்தது. அவளின் தைரியத்தையும் புத்திகூர்மையும் மெருகேற்றி அவளை தனித்துவமாய் இயங்க வைத்த பெருமையும் அவரையே சாரும்.
அத்தகைய ஜென்னிபஃரின் அறையில்தான் இப்போது ஜென்னித்தா நின்றுக் கொண்டிருந்தாள்.
அந்த மருத்துவ கட்டிடத்தில் நடுநாயகமாய் அமைந்திருந்த அறை அது.
பார்வைக்குள் அடங்காத அந்த விசாலமான அறையிலிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக மக்களின் நடமாட்டத்தை பார்த்து கொண்டிருந்த ஜென்னித்தாவின் முகத்தில் சொல்லவொண்ணாத வேதனை.
அவள் பார்வையில் தெரிந்த தெளிவற்ற நிலையை கவனித்த ஜென்னிபஃர் தன் இருக்கையை அவள் புறம் திருப்பியபடி "ஜென்னி"என்றழைக்க,
"ஹ்ம்ம் சொல்லுங்கம்மா" வெறுமையான பார்வையோடு அவரை நோக்கினாள். ,
"மலேசியாவில கான்பரஃன்ஸ் எல்லாம் நல்லா போச்சுதானே" என்றவர் கேட்டு அவள் எண்ணத்தை ஆழம் பார்க்க,
"அதெல்லாம் ரொம்ப நல்லா போச்சு... இட்ஸ் அ கிரேட் எக்ஸ்ப்பீர்யன்ஸ்" என்க, அவள் முகத்தில் அந்த வார்த்தைகுண்டான சந்தோஷம் பிரதிபலிக்கவில்லை.
"அப்புறம் என்ன? ஏன் அப்செட்டா இருக்கு ? வாட்ஸ் பாதரிங் யூ" என்றவர் அவளை சந்தேகமாய் பார்க்க, அவள் தவிப்போடு மௌனமாய் நின்றிருந்தாள்.
"வாட் ஹேப்பன் ஜென்னி ?" என்றவர் அழுத்தி கேட்கவும்,
அவள் அவரை நோக்கி அடியெடுத்து வைத்து "அது..." என்றவள் தயங்கி நிற்க,
ஜென்னிபஃர் அவளை ஏறிட்டு "எதுவாயிருந்தாலும் பரவாயில்லை சொல்லு" என்றார்.
அவள் சற்று நிதானித்து "ஸாரி மா... நீங்க எனக்கு கொடுத்த அங்கிகாரத்தை என் சுயநலத்துக்காக நான் பயன்படுத்திக்கிட்டேன்" அவள் முகத்தை கலக்கம் நிறைத்திருக்க,
"என்ன சொல்ல வர்ற... புரியல" என்க,
"நான் ஜென்னித்தாங்கிற பெயரை என்னுடைய சுயநலத்துக்காக பயன்படுத்திக்கிட்டேன்னு சொல்ல வர்றேன்" என்று புரியும்படி அவள் தெளிவுற உரைத்தாள்.
அவர் சிரித்துவிட்டு "அது உன்னோட அடையாளம்... அதை நீ எப்படி வேணா பயன்படுத்தலாம்" என்றார்.
"அது என்னோட அடையாளமா மட்டும் இருந்தா பரவாயில்லை... ஆனால் அதுல உங்களோட ... விக்டரப்பாவோட கௌரவமும் இருக்கு... நான் செய்ய போற காரியத்தினால அதுக்கு பங்கம் வரலாம்... உங்க அந்தஸ்த்து பாதிக்கலாம்... ப்ச் இதை பத்தி எல்லாம் யோசிக்காம நான்" என்று மேலே பேச முடியாமல் ஜென்னி தலையை பிடித்துக் கொண்டாள்.
அப்போது ஜென்னிஃபர் தம் இருக்கையிலிருந்து எழுந்து அவரருகில் வந்து "நீ இவ்வளவு டென்ஷனாக கூடாது... முதல்ல உட்கார்ந்து... கொஞ்சம் ரீலாக்ஸ் பண்ணு" என்று சொல்லி அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தார்.
ஆனால் அவளோ மனஉளைச்சலோடே காணப்பட ஜென்னிபஃர் மேஜையின் மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தந்து, அவளை குடிக்க சொல்லி பணிக்க அவள் அதனை முழுவதுமாய் அருந்தினாள்.
அதனால் எல்லாம் அவள் மனதில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அணைந்துவிடாது.
அவள் ஜென்னிபஃரின் முன்னிலையில் அமைதியடைய முயற்சிக்க, அது அவளுக்கு சாத்தியமற்றாய் ஒன்றாய் இருந்தது.
ஜென்னிபஃர் அவள் அருகாமையில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி "நீ செய்ய போறன்னு சொன்னியே... அந்த விஷயம் உன் மனசுக்கு சரின்னு படுதா?" என்று அவளை நேர்கொண்டு பார்த்து கேட்க,
"சரின்னு சொல்ல மாட்டேன்... அதே நேரத்தில அது தப்பான காரியமும் இல்ல" என்றாள்.
"உனக்கு தப்பில்லைன்னு பட்டா தைரியமா செய்... அதனால வர்ற எதுவா இருந்தாலும் நாம பேஃஸ் பண்ணிக்கலாம்" என்று அவர் திடமாய் உரைக்க,
"ஆனா ம்மா" என்றவள் தயங்கி நிறுத்தினாள்.
ஜென்னிபஃருக்கு அவளின் தவிப்பும் பயமும் நன்காகவே புரிய, அவள் தோளை பற்றியவர் "அங்கே பாரு" என்று எதையோ சுட்டி காண்பிக்க,
அவர் காட்டிய திசையில் ஜென்னியும் பார்த்தாள்.
சிலுவலையில் அறையப்பட்டு குருதி வடிந்த நிலையில் ஏசுவின் சித்திரம் இருந்தது.
அந்த நொடி அவள் குழப்பமாய் ஜென்னிபஃரை நோக்க,
"நல்லது செய்யனும்னு இறங்கினா இறைவனாகவே இருந்தாலும் சோதனையும் அவமானத்தையும் வலியும்
கடந்து வர வேண்டி வரும்... " என்றவர் விளக்கமளிக்க, அவள் அதனை ஏற்காமல்,
"எந்த வலியும் வேதனையும் எனக்கு மட்டும் நடந்தா பரவாயில்லையே" என்றவள் ஆதங்கப்பட,
அவர் புன்முறுவலோடு "சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறது மட்டும் இல்ல உறவுங்கிறது... துக்கத்தையும் பகிர்ந்திருக்கிறதும்தான்... நாங்க உண்மையிலயே உன்னை எங்க மகளாதான் பார்க்கிறோம் ஜென்னி" என்று அவள் தலையை தடவிக் கொடுக்க ஜென்னி அவர் தோள் மீது சாய்ந்து கொண்டார்.
அவர் அவள் ஆதரவாய் .அணைத்து "நாங்க இருக்கோம்மா உன் கூட... நீ எதுவாயியருந்தாலும் தைரியமா பண்ணு" என்க, அவள் நெகிழ்ந்து போனாள்.
ஜென்னி தெளிவுப்பெற்று நிமிர, ஜென்னிபஃர் அவள் கரத்தை அழுத்தமாய் பற்றி கொண்டு "நான் எப்பவும் சொல்றதுதான்... நீ என்னை செய்யனும்னு நினைக்கிறியோ அதை எவ்வளவு எதிர்ப்பும் பிரச்சனையும் வந்தாலும் செஞ்சு மூடி... நெவர் கிவ் அப் அட் எனி காஸ்" என்று தீர்க்கமாய் உரைக்க, அவள் மனதில் நின்றிருந்த பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வந்தன.
'மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்'
அந்த நொடி ஜென்னியின் மனோதிடம் பன்மடங்கு பெருகியிருந்தது.
ஆனால் இதற்கு பிறகுதான் அவள் உறுதியை தகர்க்கும் சம்பவங்களை அவள் எதிர்கொள்ள போகிறாள் என்பது இப்போதைக்கு அவள் அறியாத ஓன்று.
ஜென்னிபஃரிடம் பேசி முடித்த பின் ஜென்னி அந்த அறையை விட்டு வெளியேறி கீழ்தளத்திற்கு வரவும் அங்கே மனநலமருத்துவர் ஷெரிஃபின் அறை இருந்தது.
அவள் மனநலம் பாதிப்பட்டிருந்த போது அவளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியது அவர்தான்.
அங்கே வந்து நின்றவள் செவிலியரை ஏதோ விவரம் கேட்க அவர் பவ்யமாக அவள் கேள்விக்கெல்லாம் பதிலுரைத்தாள்.
அதன் பிறகாய் அவள் ஷெரிஃபின் அறைக்குள் நுழைய, அங்கே மருத்துவரின் இருக்கை காலியாக இருந்தது.
ஆனால் அதன் அருகாமையில் ஒரு பெண் மருத்துவர் லேப்டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருக்க, ஜென்னி தன் இருகரத்தால் அவள் கண்களை மறைத்தாள்.
"ஜென்னி" என்று அவள் சரியாய் கண்டறிய, ஜென்னி தன் கரத்தை விலக்கி கொண்டு முன்னே வந்து நின்றாள்.
"எப்படி தியா கண்டுபிடிச்ச?" என்று கேட்க,
"நீ வந்த விஷயம் எப்பவோ ஹாஸ்பெட்டில் முழுக்க பரவிடுச்சு" என்றாள்.
"ஓ அப்படியா !!!" என்று லேசாய் அவளுக்கு சுருதி இறங்கி பின் மெல்ல மீண்டு,
"சரி அது போகட்டும்... அன்னைக்கு மீட்டிங் எப்படி இருந்துச்சு" என்று அவள் கண்சிமிட்டிக் கேட்க, தியாவின் முகம் மாற்றமடைந்தது.
"இங்கே பேச வேண்டாம்... நீ வெளியே வெயிட் பண்ணு நான் வர்றேன்..." என்றதும்,
"கம் சூன்" என்றுரைத்துவிட்டு அவள் அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் அறைவாசலில் நிற்க, கடந்து செல்பவர்கள் எல்லோரும் அவளை பயபக்தியோடே ஒரு பார்வை பார்த்து விஷ் செய்துவிட்டு போக அவளுக்கு அங்கே நிற்பதற்கு சங்கடமாய் இருந்தது.
அந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்தவள், அங்கே வெளிப்புறம் அமைக்கப்பட்டிருந்த செய்ற்கைமான புல்தரையில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
அவள் மனமெல்லாம் பழைய நினைவுகளை நோக்கி பயணித்தது.
அவளுக்கு சிகிச்சை அளித்த ஷெரிஃபின் அசிஸ்டென்ட் தியா. வசீகரிக்கும் தோற்றமும் பொறுமையும் அன்பும் நிறைந்தவள்.
அவளின் துணையோடுதான் ஜென்னி தன் பழைய நினைவுகளை மீட்டெடுத்தாள். .
ஆதலால் அவளின் வாழ்வில் நடந்தவற்றை அனைத்தையும் தியா நன்கறிவாள்.
அவள் மனமுடைந்து போகும் போதெல்லாம் தியா ஒரு தோழி போல அவளுக்கு துணையிருந்த கையாண்டவள்.
அதே நேரம் தியாவுக்கு டேவிட் பற்றியும் தெரியும். அவள் ஜென்னிக்காக செய்த எல்லாவற்றையும் தியாவுக்கும் தெரிந்திருந்தது.
அவன் எந்த உறவுமில்லா ஜென்னியின் மீது காட்டிய அக்கறை அவளை வியப்பில் ஆழ்த்தியிருந்தது. அதோடு அவனின் குணமும் நடை உடை பாவனை அனைத்தும் அவளை வெகுவாய் ஈர்த்திருக்க ஒரூமுறை பேச்சுவாக்கில் ஜென்னியிடம் "டேவிடை மேரேஜ் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப லக்கி... இல்ல ஜென்னி" என்றுரைக்க, அவள் சொன்ன விதத்தில் ஏக்கமும் காதலும் எட்டிபார்த்ததை ஜென்னி கவனிக்கதவறவில்லை.
மும்பையில் உள்ள அதிநவீன மருத்துவமனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று வீ.ஜே மருத்துவமனை.
அந்த நகரத்தின் ரொம்பவும் முக்கியமான இடத்தில் அமைந்திருந்த அந்த மருத்துவமனையின் கட்டிடங்களை பார்வையிடவே ஒரு நாள் கடந்துவிடும்.
அந்தளவுக்கு அந்த மருத்துவமனை கட்டிடங்கள் பரந்து விரிந்து கிடக்க, அங்கே எல்லாவகையான நோய்களுக்கும் தனித்தனியாக சிகிச்சைகள் அளிக்கப்பட வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க, அங்கே அதிநவீன மருத்துவ உபகரணங்களும் கூட அமைந்திருந்தன என்பது மற்றொரு சிறப்புக்குரிய விஷயம்தான்.
அதே நேரம் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடின்றி எல்லோருக்குமே சிறப்பான முறையில் மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டன.
ஜென்னித்தா டிரஸ்ட் வசதியற்றவர்களுக்கான மருத்துவ செலவுகளை கவனித்து கொண்ட நிலையில், அத்தகைய பேறு பெற்ற மருத்துவமனையின் தலைமை நிர்வாகியாக இருப்பவர்தான் விக்டரின் மனைவி ஜென்னிபாஃர்.
அவரின் பெயருக்கருகில் வரிசையாய் நீளும் மருத்துவபட்டத்தை பார்க்கும் போதே எல்லோரும் வியப்படைய கூடும்.
ஆனால் அவரோ பார்வைக்கும் பேச்சும் அத்தனை எளிமையாகவும் இயல்பாகவும் பழககூடியவர்.
சாக்ஷியை முழுமையாய் ஜென்னியை மாற்றியதில் அவருக்கு அதிக பங்கு இருந்தது. அவளின் தைரியத்தையும் புத்திகூர்மையும் மெருகேற்றி அவளை தனித்துவமாய் இயங்க வைத்த பெருமையும் அவரையே சாரும்.
அத்தகைய ஜென்னிபஃரின் அறையில்தான் இப்போது ஜென்னித்தா நின்றுக் கொண்டிருந்தாள்.
அந்த மருத்துவ கட்டிடத்தில் நடுநாயகமாய் அமைந்திருந்த அறை அது.
பார்வைக்குள் அடங்காத அந்த விசாலமான அறையிலிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக மக்களின் நடமாட்டத்தை பார்த்து கொண்டிருந்த ஜென்னித்தாவின் முகத்தில் சொல்லவொண்ணாத வேதனை.
அவள் பார்வையில் தெரிந்த தெளிவற்ற நிலையை கவனித்த ஜென்னிபஃர் தன் இருக்கையை அவள் புறம் திருப்பியபடி "ஜென்னி"என்றழைக்க,
"ஹ்ம்ம் சொல்லுங்கம்மா" வெறுமையான பார்வையோடு அவரை நோக்கினாள். ,
"மலேசியாவில கான்பரஃன்ஸ் எல்லாம் நல்லா போச்சுதானே" என்றவர் கேட்டு அவள் எண்ணத்தை ஆழம் பார்க்க,
"அதெல்லாம் ரொம்ப நல்லா போச்சு... இட்ஸ் அ கிரேட் எக்ஸ்ப்பீர்யன்ஸ்" என்க, அவள் முகத்தில் அந்த வார்த்தைகுண்டான சந்தோஷம் பிரதிபலிக்கவில்லை.
"அப்புறம் என்ன? ஏன் அப்செட்டா இருக்கு ? வாட்ஸ் பாதரிங் யூ" என்றவர் அவளை சந்தேகமாய் பார்க்க, அவள் தவிப்போடு மௌனமாய் நின்றிருந்தாள்.
"வாட் ஹேப்பன் ஜென்னி ?" என்றவர் அழுத்தி கேட்கவும்,
அவள் அவரை நோக்கி அடியெடுத்து வைத்து "அது..." என்றவள் தயங்கி நிற்க,
ஜென்னிபஃர் அவளை ஏறிட்டு "எதுவாயிருந்தாலும் பரவாயில்லை சொல்லு" என்றார்.
அவள் சற்று நிதானித்து "ஸாரி மா... நீங்க எனக்கு கொடுத்த அங்கிகாரத்தை என் சுயநலத்துக்காக நான் பயன்படுத்திக்கிட்டேன்" அவள் முகத்தை கலக்கம் நிறைத்திருக்க,
"என்ன சொல்ல வர்ற... புரியல" என்க,
"நான் ஜென்னித்தாங்கிற பெயரை என்னுடைய சுயநலத்துக்காக பயன்படுத்திக்கிட்டேன்னு சொல்ல வர்றேன்" என்று புரியும்படி அவள் தெளிவுற உரைத்தாள்.
அவர் சிரித்துவிட்டு "அது உன்னோட அடையாளம்... அதை நீ எப்படி வேணா பயன்படுத்தலாம்" என்றார்.
"அது என்னோட அடையாளமா மட்டும் இருந்தா பரவாயில்லை... ஆனால் அதுல உங்களோட ... விக்டரப்பாவோட கௌரவமும் இருக்கு... நான் செய்ய போற காரியத்தினால அதுக்கு பங்கம் வரலாம்... உங்க அந்தஸ்த்து பாதிக்கலாம்... ப்ச் இதை பத்தி எல்லாம் யோசிக்காம நான்" என்று மேலே பேச முடியாமல் ஜென்னி தலையை பிடித்துக் கொண்டாள்.
அப்போது ஜென்னிஃபர் தம் இருக்கையிலிருந்து எழுந்து அவரருகில் வந்து "நீ இவ்வளவு டென்ஷனாக கூடாது... முதல்ல உட்கார்ந்து... கொஞ்சம் ரீலாக்ஸ் பண்ணு" என்று சொல்லி அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தார்.
ஆனால் அவளோ மனஉளைச்சலோடே காணப்பட ஜென்னிபஃர் மேஜையின் மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தந்து, அவளை குடிக்க சொல்லி பணிக்க அவள் அதனை முழுவதுமாய் அருந்தினாள்.
அதனால் எல்லாம் அவள் மனதில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அணைந்துவிடாது.
அவள் ஜென்னிபஃரின் முன்னிலையில் அமைதியடைய முயற்சிக்க, அது அவளுக்கு சாத்தியமற்றாய் ஒன்றாய் இருந்தது.
ஜென்னிபஃர் அவள் அருகாமையில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி "நீ செய்ய போறன்னு சொன்னியே... அந்த விஷயம் உன் மனசுக்கு சரின்னு படுதா?" என்று அவளை நேர்கொண்டு பார்த்து கேட்க,
"சரின்னு சொல்ல மாட்டேன்... அதே நேரத்தில அது தப்பான காரியமும் இல்ல" என்றாள்.
"உனக்கு தப்பில்லைன்னு பட்டா தைரியமா செய்... அதனால வர்ற எதுவா இருந்தாலும் நாம பேஃஸ் பண்ணிக்கலாம்" என்று அவர் திடமாய் உரைக்க,
"ஆனா ம்மா" என்றவள் தயங்கி நிறுத்தினாள்.
ஜென்னிபஃருக்கு அவளின் தவிப்பும் பயமும் நன்காகவே புரிய, அவள் தோளை பற்றியவர் "அங்கே பாரு" என்று எதையோ சுட்டி காண்பிக்க,
அவர் காட்டிய திசையில் ஜென்னியும் பார்த்தாள்.
சிலுவலையில் அறையப்பட்டு குருதி வடிந்த நிலையில் ஏசுவின் சித்திரம் இருந்தது.
அந்த நொடி அவள் குழப்பமாய் ஜென்னிபஃரை நோக்க,
"நல்லது செய்யனும்னு இறங்கினா இறைவனாகவே இருந்தாலும் சோதனையும் அவமானத்தையும் வலியும்
கடந்து வர வேண்டி வரும்... " என்றவர் விளக்கமளிக்க, அவள் அதனை ஏற்காமல்,
"எந்த வலியும் வேதனையும் எனக்கு மட்டும் நடந்தா பரவாயில்லையே" என்றவள் ஆதங்கப்பட,
அவர் புன்முறுவலோடு "சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறது மட்டும் இல்ல உறவுங்கிறது... துக்கத்தையும் பகிர்ந்திருக்கிறதும்தான்... நாங்க உண்மையிலயே உன்னை எங்க மகளாதான் பார்க்கிறோம் ஜென்னி" என்று அவள் தலையை தடவிக் கொடுக்க ஜென்னி அவர் தோள் மீது சாய்ந்து கொண்டார்.
அவர் அவள் ஆதரவாய் .அணைத்து "நாங்க இருக்கோம்மா உன் கூட... நீ எதுவாயியருந்தாலும் தைரியமா பண்ணு" என்க, அவள் நெகிழ்ந்து போனாள்.
ஜென்னி தெளிவுப்பெற்று நிமிர, ஜென்னிபஃர் அவள் கரத்தை அழுத்தமாய் பற்றி கொண்டு "நான் எப்பவும் சொல்றதுதான்... நீ என்னை செய்யனும்னு நினைக்கிறியோ அதை எவ்வளவு எதிர்ப்பும் பிரச்சனையும் வந்தாலும் செஞ்சு மூடி... நெவர் கிவ் அப் அட் எனி காஸ்" என்று தீர்க்கமாய் உரைக்க, அவள் மனதில் நின்றிருந்த பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வந்தன.
'மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்'
அந்த நொடி ஜென்னியின் மனோதிடம் பன்மடங்கு பெருகியிருந்தது.
ஆனால் இதற்கு பிறகுதான் அவள் உறுதியை தகர்க்கும் சம்பவங்களை அவள் எதிர்கொள்ள போகிறாள் என்பது இப்போதைக்கு அவள் அறியாத ஓன்று.
ஜென்னிபஃரிடம் பேசி முடித்த பின் ஜென்னி அந்த அறையை விட்டு வெளியேறி கீழ்தளத்திற்கு வரவும் அங்கே மனநலமருத்துவர் ஷெரிஃபின் அறை இருந்தது.
அவள் மனநலம் பாதிப்பட்டிருந்த போது அவளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியது அவர்தான்.
அங்கே வந்து நின்றவள் செவிலியரை ஏதோ விவரம் கேட்க அவர் பவ்யமாக அவள் கேள்விக்கெல்லாம் பதிலுரைத்தாள்.
அதன் பிறகாய் அவள் ஷெரிஃபின் அறைக்குள் நுழைய, அங்கே மருத்துவரின் இருக்கை காலியாக இருந்தது.
ஆனால் அதன் அருகாமையில் ஒரு பெண் மருத்துவர் லேப்டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருக்க, ஜென்னி தன் இருகரத்தால் அவள் கண்களை மறைத்தாள்.
"ஜென்னி" என்று அவள் சரியாய் கண்டறிய, ஜென்னி தன் கரத்தை விலக்கி கொண்டு முன்னே வந்து நின்றாள்.
"எப்படி தியா கண்டுபிடிச்ச?" என்று கேட்க,
"நீ வந்த விஷயம் எப்பவோ ஹாஸ்பெட்டில் முழுக்க பரவிடுச்சு" என்றாள்.
"ஓ அப்படியா !!!" என்று லேசாய் அவளுக்கு சுருதி இறங்கி பின் மெல்ல மீண்டு,
"சரி அது போகட்டும்... அன்னைக்கு மீட்டிங் எப்படி இருந்துச்சு" என்று அவள் கண்சிமிட்டிக் கேட்க, தியாவின் முகம் மாற்றமடைந்தது.
"இங்கே பேச வேண்டாம்... நீ வெளியே வெயிட் பண்ணு நான் வர்றேன்..." என்றதும்,
"கம் சூன்" என்றுரைத்துவிட்டு அவள் அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் அறைவாசலில் நிற்க, கடந்து செல்பவர்கள் எல்லோரும் அவளை பயபக்தியோடே ஒரு பார்வை பார்த்து விஷ் செய்துவிட்டு போக அவளுக்கு அங்கே நிற்பதற்கு சங்கடமாய் இருந்தது.
அந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்தவள், அங்கே வெளிப்புறம் அமைக்கப்பட்டிருந்த செய்ற்கைமான புல்தரையில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
அவள் மனமெல்லாம் பழைய நினைவுகளை நோக்கி பயணித்தது.
அவளுக்கு சிகிச்சை அளித்த ஷெரிஃபின் அசிஸ்டென்ட் தியா. வசீகரிக்கும் தோற்றமும் பொறுமையும் அன்பும் நிறைந்தவள்.
அவளின் துணையோடுதான் ஜென்னி தன் பழைய நினைவுகளை மீட்டெடுத்தாள். .
ஆதலால் அவளின் வாழ்வில் நடந்தவற்றை அனைத்தையும் தியா நன்கறிவாள்.
அவள் மனமுடைந்து போகும் போதெல்லாம் தியா ஒரு தோழி போல அவளுக்கு துணையிருந்த கையாண்டவள்.
அதே நேரம் தியாவுக்கு டேவிட் பற்றியும் தெரியும். அவள் ஜென்னிக்காக செய்த எல்லாவற்றையும் தியாவுக்கும் தெரிந்திருந்தது.
அவன் எந்த உறவுமில்லா ஜென்னியின் மீது காட்டிய அக்கறை அவளை வியப்பில் ஆழ்த்தியிருந்தது. அதோடு அவனின் குணமும் நடை உடை பாவனை அனைத்தும் அவளை வெகுவாய் ஈர்த்திருக்க ஒரூமுறை பேச்சுவாக்கில் ஜென்னியிடம் "டேவிடை மேரேஜ் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப லக்கி... இல்ல ஜென்னி" என்றுரைக்க, அவள் சொன்ன விதத்தில் ஏக்கமும் காதலும் எட்டிபார்த்ததை ஜென்னி கவனிக்கதவறவில்லை.