Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
அவனின் நினைவலைகள்
ஜென்னி அப்போது சையத்தின் அலைபேசிக்கு அழைத்து கொண்டிருந்தாள்.
அவளின் அழைப்பு அடித்து ஓய்ந்து போகும் நிலையில் அவன் எதிர்புறத்தில் அழைப்பை ஏற்றான்.
அவள் அவனிடம் எப்படி கேட்பது என்று தயங்கி மௌனத்தில் இருக்க,
"நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு எனக்கு தெரியும் ஜென்னி" என்று சிரத்தையின்றி ஒலித்தது அவன் குரல்.
அப்போதே அவளுக்கு புரிந்து போனது. நிறைய பேர் டிவியில் ஒளிப்பரப்பான செய்தி குறித்து அவனிடம் கேட்டிருப்பார்கள் என்று.
அவளும் அது உண்மைதானா என்று கேட்கவே அழைத்திருப்பாள் என்று அவன் எண்ணி கொண்டான்.
ஆனால் அவள் அவனை சந்தேகித்து அழைக்கவில்லை. அவளுக்கு தெரியும். அந்த செய்தி உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை என்று.
அவள் நடந்தது என்னவென்று விசாரிக்க வாயெடுக்கும் போதே,
சையத் தன் கனிர் குரலில் "டிவில வந்த நீயூஸ் உண்மைதான்... ஜென்னி" என்று அழுத்தமாய் உரைக்க,
"சையத்" என்று அவள் அதிர்ச்சியானாள்.
"வேறெதாவது கேட்கனுமா ?" என்று அவன் கேள்வி எழுப்ப,
அவள் அதிர்ச்சியிலிருந்து மீளாமல், "என்ன சொல்றீங்க சையத் ?" என்று புரியாமல் கேட்டாள்.
"உண்மையைதான் சொல்றேன்... எனக்கும் மதுவுக்கும் தொடர்பிருந்துச்சு... அவ கூட நான் லிவ்விங் டூகெதர் ரீலேஷன்ஷிப்ல இருந்தேன்... " என்றான்.
"சையத் ஸ்டாப் இட்... அவசரத்தில வார்த்தையை விடாதீங்க"
"ஜென்னி ப்ளீஸ்... இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க... நான் இப்போ எதுவும் பேசிற மனநிலையில இல்லை" என்று சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டித்துவிட, அவன் குரலில் இருந்த வலியும் வேதனையும் அவளால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.
அவள் யோசனையோடு அமர்ந்திருக்க, ரூபா அவளிடம் "சையத் என்ன சொன்னாரூ ஜென்னி ?" என்று ஆர்வம் ததும்ப கேட்டாள்
"எல்லாம் உண்மைதானு" என்று குழப்பமுற சொல்லிவிட்டு, அவள் டீவி செய்தியை மீண்டும் பார்க்கலானாள்.
மது கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் சையத் தன்னை காதலித்து ஏமாற்றுவிட்டதாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
"அப்போ மது டிவில சொல்றது உண்மைதானா ?" என்று ரூபா வினவ,
"சேன்ஸே இல்லை" என்று ஜென்னி தீர்க்கமாய் உரைத்தாள்.
"அப்போ சையத் ஏன் அப்படி சொல்லனும் ?"
"தெரியலயே ரூப்ஸ்" என்றவள் ஆழ்ந்த சிந்தனைக்குள் செல்ல,
"இப்போ என்ன பண்ணப் போறீங்க ஜென்னி" என்று கேட்டதுமே ஜென்னி அவளை நோக்கி,
"சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணு... அதுவும் இப்பவே" என்றாள்.
அவளும் சொன்னதை ஏற்று தலையசைத்துவிட்டு வெளியேற போக,
"ரூப்ஸ் .... டிக்கெட் எனக்கு மட்டும்" என்று அழுத்தமாய் உரைத்தாள் ஜென்னி.
"ஏன் ஜென்னி ? நானும் உங்க கூட வர்றேனே" என்று ரூபா சொல்ல அவள் தன் கைகளை காட்டி வேண்டுமென்றாள்.
ராகவ் அன்று அவள் மீது கொண்ட வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள ரூபாவை அடைத்து வைத்ததை இன்றளவும் அவளால் மறக்க முடியாது.
மீண்டும் தன்னால் ரூபாவுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரணத்தாலயே அவளை உடன் அழைத்து செல்ல விருப்பமில்லாமல் ஜென்னி அவளை தவிர்த்தாள்.
*********
மீடியாக்களில் பரப்படும் செய்திகள் யாவும் உண்மையா பொய்யா என ஊர்ஜிதமாவதற்கு முன்னதாகவே அது மக்களிடையில் காட்டுத்தீ போல் பரவிவிடுகிறது.
அதுவும் அந்த செய்தி எந்த கோணத்தில் படமாக்கப்படுகிறதோ, அந்த கண்ணோட்டத்திலயே மக்களின் பார்வைக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
அதுதான் சையத்தின் விஷயத்திலும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் ஒரு சினிமா பிரபலம் என்பதால், அவன் மீது சுமத்தப்பட்ட அவதூறான செய்தி இன்னும் அதிவேகமாய் பரவியது.
அவன் பக்கமிருக்கும் நியாயம் குறித்து அதுவரையில் துளியளவும் யாரும் கவலைப்படவில்லை.
ஒரே நொடியில் சையத்தின் பிம்பம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுவிட, அவன் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் எல்லோருமே அவனை ஓர் குற்றவாளி போல பார்க்க தொடங்கினர்.
அவனை மட்டுமல்லாது அவன் தங்கை தம்பி அம்மா என்று எல்லோரையுமே குத்தலான பார்வையாலும் பேச்சாலும் வேதனைப்படுத்தினர்.
டிவி சேனல்கள் அந்த செய்தியை மேலும் சுவராஸ்யமாக்க தீவிரமாய் அது பற்றி விவாதித்ததோடு அல்லாமல் ராகவிடமும் இது பற்றி கருத்து கேட்டனர்.
அவனோ "எனக்கு இது பத்தி எல்லாம் தெரியாது... சையத் எனக்கொரு நல்ல ப்ரண்ட் அவ்வளவுதான்" என்றுரைத்து வெகுசாமர்த்தியமாய் தப்பிக் கொண்டான்.
ராகவின் இந்த விட்டேத்தியான பதில் ஜென்னிக்கு அதீத சந்தேகத்தை கிளப்பிவிட, அவன் அப்படிதான் சொல்வான் என்று சையத் முன்னமே யூகித்திருந்தான்.
ராகவ் ஒருவாரம் முன்பு அலைப்பேசியில் பேசும் போது அவனை எச்சர்த்திருந்தான்.
"நீ ஜென்னியை வைச்சி அந்த படத்தை எடுக்க கூடாது... அதுக்கு நான் ஒருநாளும் அனுமதிக்க மாட்டேன்" என்று உரைக்க,
ஜென்னி அந்த படம் முடித்த பிறகுதான் திருமணம் என்று சொன்னதினால், அவனுக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் எரிச்சலும் அவனை அப்படி சையத்திடம் பேச வைத்திருந்தது
ஆனால் சையத் அவன் எண்ணம் புரியாமல் "உன் அனுமதியை இங்க யாரும் கேட்கல" என்று பதிலுரைக்க,
"வேண்டாம் சையத்... என்னை எதிர்த்துக்கிட்டு எதையும் செய்யனும்னு நினைக்காதே.. அது உனக்குதான் ஆபத்தா முடியும்"
"மிரட்டிறியா ?"
"ஆமான்டா... மிரட்டிறேன்... புத்திசாலியா இருந்தா பிழைச்சுக்கோ" என்று சொல்லி எகத்தாளமாய் சிரித்துவிட்டு ராகவ் அழைப்பை துண்டிக்க, சையத் இந்த பிரச்சனையின் தீவிரத்தை அப்போதே உணர்ந்து சுதாரிக்காமல் விட்டதன் விளைவு. இன்று அனுபவிக்கிறான்.
ராகவ் தன் மீது கொண்ட வஞ்சத்திற்காக மதுவை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்ள, அப்போது சையத்திற்கு அவனை கொலை செய்யும் அளவுக்காய் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
*********
ஜென்னி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த போது இருள் அடர்ந்திருந்தது.
அங்கேதான் டேவிட் அவளை வேதனை நிரம்பிய முகத்தோடு வழியனுப்பினான்.
அந்த தருணத்தை மறக்க முடியுமா ?
அந்த காட்சி அவள் விழிகளின் முன் வந்து அரங்கேற, அந்த நொடி அவனின் நினைவலைகள் எழும்பி அவள் மனதில் ஆர்பரிக்க தொடங்கியிருந்தது.
அவள் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், அவளின் கார் ஓட்டுநர் அவளுக்காக காத்திருந்தான்.
எப்போதும் டேவிட்தான் அவளை நேரடியாக வந்து அழைத்து போவது வழக்கம்.
அவள் மனமோ அவன் வரவில்லையே என்று எண்ணி ஏமாற்றமடைய, அந்த முட்டாள்தனத்தை அவள் என்னவென்று சொல்வது.
அவனை தானே நிராகரித்துவிட்டு தானே அவனை எண்ணி எண்ணி மருகாவானேன் ?!
அவளுக்கு உண்மையிலயே புரியவில்லை. நட்பென்ற வட்டத்திற்குள் அவள் வலுக்கட்டாயாமாக நிற்க முயற்சி செய்ய, அது வலிந்து அவளை வெளியே தள்ளிக் கொண்டிருந்தது.
சென்னைக்குள் நுழைந்த கணத்தில் இருந்த டேவிடின் நினைப்பு மட்டும்தான்.
நாம் நினைக்க கூடாதென்று எதை எண்ணுகிறோமோ நேர்மறையாய் அது மட்டுமே நம் எண்ணஅலைகளை ஆட்சி செய்யும்.
அதே போல் ஜென்னியின் நினைவுகளையும் டேவிடின் எண்ணமே ஆளுமை செய்து கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராமல் ஒரு பைக் தாறுமாறாய் வந்து அவர்கள் காரில் மோதவந்தது.
"அய்யோ பாத்து" என்றவள் பதறி ஓட்டுநரிடம் உரைக்க அவரும் எதிரே வந்த பைக்கை இடிக்காமல் வெகுஜாக்கிரதையாக கார் ஸ்டியரிங்கை திருப்பிவிட்டார்.
ஜென்னி நிம்மதி பெருமூச்சுவிடலாம் என்று எண்ணுவதற்கு முன்னதாக, அந்த பைக் பின்னே வந்த காரில் மோதிவிட்டது.
நொடிப் பொழுதில் அந்த விபத்து நிகழ்ந்தேறிவிட, இடித்த அந்த கார் கண்இமைக்கும் நேரத்தில கடந்து சென்றுவிட்டது.
அவள் பதறிக் கொண்டு "காரை நிறுத்துங்க" என்று ஓட்டுநரிடம் உரைக்க,
"வேண்டாம் மேடம்... நம்ம போயிடுவோம்" என்றவனிடம் அவள் ஆவேசமாக,
"நிறுத்துங்கன்னு சொன்னேன்" அதிகாரமாய் உரைக்க அவன் மறுகணமே பிரேக்கை அழுத்தி காரை ஓரமாய் நிறுத்திவிட, அவள் விரைவாக இறங்கி ஓடினாள்.
அதற்குள் விபத்து நிகழ்ந்த இடத்தில் கூட்டம் கூடியிருக்க, அவசரமாக அவர்களை விலக்கி கொண்டு உள்ளே நுழைந்தாள்.
ஓர் இளைஞன் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்க, "தூக்குங்க ஹாஸ்ப்பெட்டில் போகனும்" என்று சூழ்ந்திருந்த கூட்டத்தை பார்த்து கூறவும்,
அவர்களில் ஒருவன் "ஆம்புலன்ஸுக்கு போஃன் பண்ணியாச்சு" என்றான்.
"ஆம்புலன்ஸ் வர வரைக்கும் காத்திருக்க முடியாது... தூக்குங்க ப்ளீஸ்" என்றவள் பதட்டத்தோடு சொல்ல, அங்கிருந்தவர்களும் அவள் சொன்னதை ஆமோதித்து அவனை தூக்கி வந்து அவளின் காருக்குள் படுக்க வைத்தனர்.
டிரைவரிடம் "சீக்கிரம் ஹாஸ்ப்பெட்டில் போங்க" என்று பணித்தபடி காரில் ஏறியவள் காயப்பட்டவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அவனின் இரத்தம் தோய்ந்த முகத்தை அவள் நிமிர்த்தி பிடிக்க, அந்த நொடி அதிர்ந்து போனாள்.
"வேந்தன்" என்று சொல்லியவளுக்கு
படபடப்பு மிகுந்தது.
அவன் முகத்தையும் பார்க்க கூட அவள் விருப்பப்படவில்லை.
ஆனால் இப்படி ஒரு நிலையில் அவனை பார்க்க நேரிடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
அவன் மேல் மலையளவுக்கு கோபம் இருக்கிறது. ஆனால் காயப்பட்டு வலியால் துடித்து கொண்டிருப்பவனிடம் அதை காட்டுமளவுக்காய் அவள் உள்ளம் இறுகி போய்விடவில்லை.
கார் மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் துரிதமாய் அவனை சிகிச்சை அறைக்கு அழைத்து போகச் செய்தாள்.
அவள் மகிழுக்கு இதை பற்றி தெரிவிக்க எண்ணியவள் நேரடியாக அவனிடம் பேச சங்கடப்பட்டுக் கொண்டு அவளின் கார் ஓட்டுநர் மூலமாக விஷயத்தை சொல்ல சொன்னாள்.
அவனும் அவள் சொன்னதை அப்படியே சொல்லியவன்,.அதிர்ந்த பார்வையோடு "செத்து தொலையட்டும் நான் வரமாட்டேன்னு... சொல்றார் மேடம்" என்று மகிழ் தெரிவித்ததை உரைக்க, அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
அப்போது எழிலின் எண் அவளிடம் இருப்பது நினைவுக்கு வர, தன் ஓட்டுநரிடமே அவளுக்கு அழைத்து விவரத்தை கூற சொன்னாள்.
எழில் பதறி துடித்து வருவதாக தெரிவித்தாள்.
ஜென்னி ஒருவாறு நிம்மதி பெரூமூச்சுவிட்டு புறப்பட யத்தனித்த போதுதான் வேந்தனின் நிலைமை ரொம்பவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் உரைத்தனர்.
ஜென்னிக்கு அங்கிருந்து புறப்பட மனமில்லாமல் இயலாமையோடு தலையை பிடித்தபடி அமர்ந்து கொண்டிருக்க, மகிழ் நர்ஸின் வழிகாட்டு தலோடு அங்கே வந்து நின்றான்.
அங்கே அவளை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளும் அவன் அவ்விதம் சொல்லிவிட்டு வந்து நிற்பான் என எதிர்பார்க்கவில்லை.
ஜென்னி அப்போது சையத்தின் அலைபேசிக்கு அழைத்து கொண்டிருந்தாள்.
அவளின் அழைப்பு அடித்து ஓய்ந்து போகும் நிலையில் அவன் எதிர்புறத்தில் அழைப்பை ஏற்றான்.
அவள் அவனிடம் எப்படி கேட்பது என்று தயங்கி மௌனத்தில் இருக்க,
"நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு எனக்கு தெரியும் ஜென்னி" என்று சிரத்தையின்றி ஒலித்தது அவன் குரல்.
அப்போதே அவளுக்கு புரிந்து போனது. நிறைய பேர் டிவியில் ஒளிப்பரப்பான செய்தி குறித்து அவனிடம் கேட்டிருப்பார்கள் என்று.
அவளும் அது உண்மைதானா என்று கேட்கவே அழைத்திருப்பாள் என்று அவன் எண்ணி கொண்டான்.
ஆனால் அவள் அவனை சந்தேகித்து அழைக்கவில்லை. அவளுக்கு தெரியும். அந்த செய்தி உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை என்று.
அவள் நடந்தது என்னவென்று விசாரிக்க வாயெடுக்கும் போதே,
சையத் தன் கனிர் குரலில் "டிவில வந்த நீயூஸ் உண்மைதான்... ஜென்னி" என்று அழுத்தமாய் உரைக்க,
"சையத்" என்று அவள் அதிர்ச்சியானாள்.
"வேறெதாவது கேட்கனுமா ?" என்று அவன் கேள்வி எழுப்ப,
அவள் அதிர்ச்சியிலிருந்து மீளாமல், "என்ன சொல்றீங்க சையத் ?" என்று புரியாமல் கேட்டாள்.
"உண்மையைதான் சொல்றேன்... எனக்கும் மதுவுக்கும் தொடர்பிருந்துச்சு... அவ கூட நான் லிவ்விங் டூகெதர் ரீலேஷன்ஷிப்ல இருந்தேன்... " என்றான்.
"சையத் ஸ்டாப் இட்... அவசரத்தில வார்த்தையை விடாதீங்க"
"ஜென்னி ப்ளீஸ்... இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க... நான் இப்போ எதுவும் பேசிற மனநிலையில இல்லை" என்று சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டித்துவிட, அவன் குரலில் இருந்த வலியும் வேதனையும் அவளால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.
அவள் யோசனையோடு அமர்ந்திருக்க, ரூபா அவளிடம் "சையத் என்ன சொன்னாரூ ஜென்னி ?" என்று ஆர்வம் ததும்ப கேட்டாள்
"எல்லாம் உண்மைதானு" என்று குழப்பமுற சொல்லிவிட்டு, அவள் டீவி செய்தியை மீண்டும் பார்க்கலானாள்.
மது கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் சையத் தன்னை காதலித்து ஏமாற்றுவிட்டதாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
"அப்போ மது டிவில சொல்றது உண்மைதானா ?" என்று ரூபா வினவ,
"சேன்ஸே இல்லை" என்று ஜென்னி தீர்க்கமாய் உரைத்தாள்.
"அப்போ சையத் ஏன் அப்படி சொல்லனும் ?"
"தெரியலயே ரூப்ஸ்" என்றவள் ஆழ்ந்த சிந்தனைக்குள் செல்ல,
"இப்போ என்ன பண்ணப் போறீங்க ஜென்னி" என்று கேட்டதுமே ஜென்னி அவளை நோக்கி,
"சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணு... அதுவும் இப்பவே" என்றாள்.
அவளும் சொன்னதை ஏற்று தலையசைத்துவிட்டு வெளியேற போக,
"ரூப்ஸ் .... டிக்கெட் எனக்கு மட்டும்" என்று அழுத்தமாய் உரைத்தாள் ஜென்னி.
"ஏன் ஜென்னி ? நானும் உங்க கூட வர்றேனே" என்று ரூபா சொல்ல அவள் தன் கைகளை காட்டி வேண்டுமென்றாள்.
ராகவ் அன்று அவள் மீது கொண்ட வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள ரூபாவை அடைத்து வைத்ததை இன்றளவும் அவளால் மறக்க முடியாது.
மீண்டும் தன்னால் ரூபாவுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரணத்தாலயே அவளை உடன் அழைத்து செல்ல விருப்பமில்லாமல் ஜென்னி அவளை தவிர்த்தாள்.
*********
மீடியாக்களில் பரப்படும் செய்திகள் யாவும் உண்மையா பொய்யா என ஊர்ஜிதமாவதற்கு முன்னதாகவே அது மக்களிடையில் காட்டுத்தீ போல் பரவிவிடுகிறது.
அதுவும் அந்த செய்தி எந்த கோணத்தில் படமாக்கப்படுகிறதோ, அந்த கண்ணோட்டத்திலயே மக்களின் பார்வைக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
அதுதான் சையத்தின் விஷயத்திலும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் ஒரு சினிமா பிரபலம் என்பதால், அவன் மீது சுமத்தப்பட்ட அவதூறான செய்தி இன்னும் அதிவேகமாய் பரவியது.
அவன் பக்கமிருக்கும் நியாயம் குறித்து அதுவரையில் துளியளவும் யாரும் கவலைப்படவில்லை.
ஒரே நொடியில் சையத்தின் பிம்பம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுவிட, அவன் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் எல்லோருமே அவனை ஓர் குற்றவாளி போல பார்க்க தொடங்கினர்.
அவனை மட்டுமல்லாது அவன் தங்கை தம்பி அம்மா என்று எல்லோரையுமே குத்தலான பார்வையாலும் பேச்சாலும் வேதனைப்படுத்தினர்.
டிவி சேனல்கள் அந்த செய்தியை மேலும் சுவராஸ்யமாக்க தீவிரமாய் அது பற்றி விவாதித்ததோடு அல்லாமல் ராகவிடமும் இது பற்றி கருத்து கேட்டனர்.
அவனோ "எனக்கு இது பத்தி எல்லாம் தெரியாது... சையத் எனக்கொரு நல்ல ப்ரண்ட் அவ்வளவுதான்" என்றுரைத்து வெகுசாமர்த்தியமாய் தப்பிக் கொண்டான்.
ராகவின் இந்த விட்டேத்தியான பதில் ஜென்னிக்கு அதீத சந்தேகத்தை கிளப்பிவிட, அவன் அப்படிதான் சொல்வான் என்று சையத் முன்னமே யூகித்திருந்தான்.
ராகவ் ஒருவாரம் முன்பு அலைப்பேசியில் பேசும் போது அவனை எச்சர்த்திருந்தான்.
"நீ ஜென்னியை வைச்சி அந்த படத்தை எடுக்க கூடாது... அதுக்கு நான் ஒருநாளும் அனுமதிக்க மாட்டேன்" என்று உரைக்க,
ஜென்னி அந்த படம் முடித்த பிறகுதான் திருமணம் என்று சொன்னதினால், அவனுக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் எரிச்சலும் அவனை அப்படி சையத்திடம் பேச வைத்திருந்தது
ஆனால் சையத் அவன் எண்ணம் புரியாமல் "உன் அனுமதியை இங்க யாரும் கேட்கல" என்று பதிலுரைக்க,
"வேண்டாம் சையத்... என்னை எதிர்த்துக்கிட்டு எதையும் செய்யனும்னு நினைக்காதே.. அது உனக்குதான் ஆபத்தா முடியும்"
"மிரட்டிறியா ?"
"ஆமான்டா... மிரட்டிறேன்... புத்திசாலியா இருந்தா பிழைச்சுக்கோ" என்று சொல்லி எகத்தாளமாய் சிரித்துவிட்டு ராகவ் அழைப்பை துண்டிக்க, சையத் இந்த பிரச்சனையின் தீவிரத்தை அப்போதே உணர்ந்து சுதாரிக்காமல் விட்டதன் விளைவு. இன்று அனுபவிக்கிறான்.
ராகவ் தன் மீது கொண்ட வஞ்சத்திற்காக மதுவை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்ள, அப்போது சையத்திற்கு அவனை கொலை செய்யும் அளவுக்காய் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
*********
ஜென்னி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த போது இருள் அடர்ந்திருந்தது.
அங்கேதான் டேவிட் அவளை வேதனை நிரம்பிய முகத்தோடு வழியனுப்பினான்.
அந்த தருணத்தை மறக்க முடியுமா ?
அந்த காட்சி அவள் விழிகளின் முன் வந்து அரங்கேற, அந்த நொடி அவனின் நினைவலைகள் எழும்பி அவள் மனதில் ஆர்பரிக்க தொடங்கியிருந்தது.
அவள் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், அவளின் கார் ஓட்டுநர் அவளுக்காக காத்திருந்தான்.
எப்போதும் டேவிட்தான் அவளை நேரடியாக வந்து அழைத்து போவது வழக்கம்.
அவள் மனமோ அவன் வரவில்லையே என்று எண்ணி ஏமாற்றமடைய, அந்த முட்டாள்தனத்தை அவள் என்னவென்று சொல்வது.
அவனை தானே நிராகரித்துவிட்டு தானே அவனை எண்ணி எண்ணி மருகாவானேன் ?!
அவளுக்கு உண்மையிலயே புரியவில்லை. நட்பென்ற வட்டத்திற்குள் அவள் வலுக்கட்டாயாமாக நிற்க முயற்சி செய்ய, அது வலிந்து அவளை வெளியே தள்ளிக் கொண்டிருந்தது.
சென்னைக்குள் நுழைந்த கணத்தில் இருந்த டேவிடின் நினைப்பு மட்டும்தான்.
நாம் நினைக்க கூடாதென்று எதை எண்ணுகிறோமோ நேர்மறையாய் அது மட்டுமே நம் எண்ணஅலைகளை ஆட்சி செய்யும்.
அதே போல் ஜென்னியின் நினைவுகளையும் டேவிடின் எண்ணமே ஆளுமை செய்து கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராமல் ஒரு பைக் தாறுமாறாய் வந்து அவர்கள் காரில் மோதவந்தது.
"அய்யோ பாத்து" என்றவள் பதறி ஓட்டுநரிடம் உரைக்க அவரும் எதிரே வந்த பைக்கை இடிக்காமல் வெகுஜாக்கிரதையாக கார் ஸ்டியரிங்கை திருப்பிவிட்டார்.
ஜென்னி நிம்மதி பெருமூச்சுவிடலாம் என்று எண்ணுவதற்கு முன்னதாக, அந்த பைக் பின்னே வந்த காரில் மோதிவிட்டது.
நொடிப் பொழுதில் அந்த விபத்து நிகழ்ந்தேறிவிட, இடித்த அந்த கார் கண்இமைக்கும் நேரத்தில கடந்து சென்றுவிட்டது.
அவள் பதறிக் கொண்டு "காரை நிறுத்துங்க" என்று ஓட்டுநரிடம் உரைக்க,
"வேண்டாம் மேடம்... நம்ம போயிடுவோம்" என்றவனிடம் அவள் ஆவேசமாக,
"நிறுத்துங்கன்னு சொன்னேன்" அதிகாரமாய் உரைக்க அவன் மறுகணமே பிரேக்கை அழுத்தி காரை ஓரமாய் நிறுத்திவிட, அவள் விரைவாக இறங்கி ஓடினாள்.
அதற்குள் விபத்து நிகழ்ந்த இடத்தில் கூட்டம் கூடியிருக்க, அவசரமாக அவர்களை விலக்கி கொண்டு உள்ளே நுழைந்தாள்.
ஓர் இளைஞன் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்க, "தூக்குங்க ஹாஸ்ப்பெட்டில் போகனும்" என்று சூழ்ந்திருந்த கூட்டத்தை பார்த்து கூறவும்,
அவர்களில் ஒருவன் "ஆம்புலன்ஸுக்கு போஃன் பண்ணியாச்சு" என்றான்.
"ஆம்புலன்ஸ் வர வரைக்கும் காத்திருக்க முடியாது... தூக்குங்க ப்ளீஸ்" என்றவள் பதட்டத்தோடு சொல்ல, அங்கிருந்தவர்களும் அவள் சொன்னதை ஆமோதித்து அவனை தூக்கி வந்து அவளின் காருக்குள் படுக்க வைத்தனர்.
டிரைவரிடம் "சீக்கிரம் ஹாஸ்ப்பெட்டில் போங்க" என்று பணித்தபடி காரில் ஏறியவள் காயப்பட்டவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அவனின் இரத்தம் தோய்ந்த முகத்தை அவள் நிமிர்த்தி பிடிக்க, அந்த நொடி அதிர்ந்து போனாள்.
"வேந்தன்" என்று சொல்லியவளுக்கு
படபடப்பு மிகுந்தது.
அவன் முகத்தையும் பார்க்க கூட அவள் விருப்பப்படவில்லை.
ஆனால் இப்படி ஒரு நிலையில் அவனை பார்க்க நேரிடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
அவன் மேல் மலையளவுக்கு கோபம் இருக்கிறது. ஆனால் காயப்பட்டு வலியால் துடித்து கொண்டிருப்பவனிடம் அதை காட்டுமளவுக்காய் அவள் உள்ளம் இறுகி போய்விடவில்லை.
கார் மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் துரிதமாய் அவனை சிகிச்சை அறைக்கு அழைத்து போகச் செய்தாள்.
அவள் மகிழுக்கு இதை பற்றி தெரிவிக்க எண்ணியவள் நேரடியாக அவனிடம் பேச சங்கடப்பட்டுக் கொண்டு அவளின் கார் ஓட்டுநர் மூலமாக விஷயத்தை சொல்ல சொன்னாள்.
அவனும் அவள் சொன்னதை அப்படியே சொல்லியவன்,.அதிர்ந்த பார்வையோடு "செத்து தொலையட்டும் நான் வரமாட்டேன்னு... சொல்றார் மேடம்" என்று மகிழ் தெரிவித்ததை உரைக்க, அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
அப்போது எழிலின் எண் அவளிடம் இருப்பது நினைவுக்கு வர, தன் ஓட்டுநரிடமே அவளுக்கு அழைத்து விவரத்தை கூற சொன்னாள்.
எழில் பதறி துடித்து வருவதாக தெரிவித்தாள்.
ஜென்னி ஒருவாறு நிம்மதி பெரூமூச்சுவிட்டு புறப்பட யத்தனித்த போதுதான் வேந்தனின் நிலைமை ரொம்பவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் உரைத்தனர்.
ஜென்னிக்கு அங்கிருந்து புறப்பட மனமில்லாமல் இயலாமையோடு தலையை பிடித்தபடி அமர்ந்து கொண்டிருக்க, மகிழ் நர்ஸின் வழிகாட்டு தலோடு அங்கே வந்து நின்றான்.
அங்கே அவளை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளும் அவன் அவ்விதம் சொல்லிவிட்டு வந்து நிற்பான் என எதிர்பார்க்கவில்லை.