• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 43

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அவனின் நினைவலைகள்


ஜென்னி அப்போது சையத்தின் அலைபேசிக்கு அழைத்து கொண்டிருந்தாள்.

அவளின் அழைப்பு அடித்து ஓய்ந்து போகும் நிலையில் அவன் எதிர்புறத்தில் அழைப்பை ஏற்றான்.

அவள் அவனிடம் எப்படி கேட்பது என்று தயங்கி மௌனத்தில் இருக்க,

"நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு எனக்கு தெரியும் ஜென்னி" என்று சிரத்தையின்றி ஒலித்தது அவன் குரல்.

அப்போதே அவளுக்கு புரிந்து போனது. நிறைய பேர் டிவியில் ஒளிப்பரப்பான செய்தி குறித்து அவனிடம் கேட்டிருப்பார்கள் என்று.

அவளும் அது உண்மைதானா என்று கேட்கவே அழைத்திருப்பாள் என்று அவன் எண்ணி கொண்டான்.

ஆனால் அவள் அவனை சந்தேகித்து அழைக்கவில்லை. அவளுக்கு தெரியும். அந்த செய்தி உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை என்று.

அவள் நடந்தது என்னவென்று விசாரிக்க வாயெடுக்கும் போதே,

சையத் தன் கனிர் குரலில் "டிவில வந்த நீயூஸ் உண்மைதான்... ஜென்னி" என்று அழுத்தமாய் உரைக்க,

"சையத்" என்று அவள் அதிர்ச்சியானாள்.

"வேறெதாவது கேட்கனுமா ?" என்று அவன் கேள்வி எழுப்ப,

அவள் அதிர்ச்சியிலிருந்து மீளாமல், "என்ன சொல்றீங்க சையத் ?" என்று புரியாமல் கேட்டாள்.

"உண்மையைதான் சொல்றேன்... எனக்கும் மதுவுக்கும் தொடர்பிருந்துச்சு... அவ கூட நான் லிவ்விங் டூகெதர் ரீலேஷன்ஷிப்ல இருந்தேன்... " என்றான்.

"சையத் ஸ்டாப் இட்... அவசரத்தில வார்த்தையை விடாதீங்க"

"ஜென்னி ப்ளீஸ்... இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க... நான் இப்போ எதுவும் பேசிற மனநிலையில இல்லை" என்று சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டித்துவிட, அவன் குரலில் இருந்த வலியும் வேதனையும் அவளால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவள் யோசனையோடு அமர்ந்திருக்க, ரூபா அவளிடம் "சையத் என்ன சொன்னாரூ ஜென்னி ?" என்று ஆர்வம் ததும்ப கேட்டாள்

"எல்லாம் உண்மைதானு" என்று குழப்பமுற சொல்லிவிட்டு, அவள் டீவி செய்தியை மீண்டும் பார்க்கலானாள்.

மது கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் சையத் தன்னை காதலித்து ஏமாற்றுவிட்டதாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

"அப்போ மது டிவில சொல்றது உண்மைதானா ?" என்று ரூபா வினவ,

"சேன்ஸே இல்லை" என்று ஜென்னி தீர்க்கமாய் உரைத்தாள்.

"அப்போ சையத் ஏன் அப்படி சொல்லனும் ?"

"தெரியலயே ரூப்ஸ்" என்றவள் ஆழ்ந்த சிந்தனைக்குள் செல்ல,

"இப்போ என்ன பண்ணப் போறீங்க ஜென்னி" என்று கேட்டதுமே ஜென்னி அவளை நோக்கி,

"சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணு... அதுவும் இப்பவே" என்றாள்.

அவளும் சொன்னதை ஏற்று தலையசைத்துவிட்டு வெளியேற போக,

"ரூப்ஸ் .... டிக்கெட் எனக்கு மட்டும்" என்று அழுத்தமாய் உரைத்தாள் ஜென்னி.

"ஏன் ஜென்னி ? நானும் உங்க கூட வர்றேனே" என்று ரூபா சொல்ல அவள் தன் கைகளை காட்டி வேண்டுமென்றாள்.

ராகவ் அன்று அவள் மீது கொண்ட வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள ரூபாவை அடைத்து வைத்ததை இன்றளவும் அவளால் மறக்க முடியாது.

மீண்டும் தன்னால் ரூபாவுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரணத்தாலயே அவளை உடன் அழைத்து செல்ல விருப்பமில்லாமல் ஜென்னி அவளை தவிர்த்தாள்.

*********
மீடியாக்களில் பரப்படும் செய்திகள் யாவும் உண்மையா பொய்யா என ஊர்ஜிதமாவதற்கு முன்னதாகவே அது மக்களிடையில் காட்டுத்தீ போல் பரவிவிடுகிறது.

அதுவும் அந்த செய்தி எந்த கோணத்தில் படமாக்கப்படுகிறதோ, அந்த கண்ணோட்டத்திலயே மக்களின் பார்வைக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

அதுதான் சையத்தின் விஷயத்திலும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் ஒரு சினிமா பிரபலம் என்பதால், அவன் மீது சுமத்தப்பட்ட அவதூறான செய்தி இன்னும் அதிவேகமாய் பரவியது.

அவன் பக்கமிருக்கும் நியாயம் குறித்து அதுவரையில் துளியளவும் யாரும் கவலைப்படவில்லை.

ஒரே நொடியில் சையத்தின் பிம்பம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுவிட, அவன் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் எல்லோருமே அவனை ஓர் குற்றவாளி போல பார்க்க தொடங்கினர்.

அவனை மட்டுமல்லாது அவன் தங்கை தம்பி அம்மா என்று எல்லோரையுமே குத்தலான பார்வையாலும் பேச்சாலும் வேதனைப்படுத்தினர்.

டிவி சேனல்கள் அந்த செய்தியை மேலும் சுவராஸ்யமாக்க தீவிரமாய் அது பற்றி விவாதித்ததோடு அல்லாமல் ராகவிடமும் இது பற்றி கருத்து கேட்டனர்.

அவனோ "எனக்கு இது பத்தி எல்லாம் தெரியாது... சையத் எனக்கொரு நல்ல ப்ரண்ட் அவ்வளவுதான்" என்றுரைத்து வெகுசாமர்த்தியமாய் தப்பிக் கொண்டான்.

ராகவின் இந்த விட்டேத்தியான பதில் ஜென்னிக்கு அதீத சந்தேகத்தை கிளப்பிவிட, அவன் அப்படிதான் சொல்வான் என்று சையத் முன்னமே யூகித்திருந்தான்.

ராகவ் ஒருவாரம் முன்பு அலைப்பேசியில் பேசும் போது அவனை எச்சர்த்திருந்தான்.

"நீ ஜென்னியை வைச்சி அந்த படத்தை எடுக்க கூடாது... அதுக்கு நான் ஒருநாளும் அனுமதிக்க மாட்டேன்" என்று உரைக்க,

ஜென்னி அந்த படம் முடித்த பிறகுதான் திருமணம் என்று சொன்னதினால், அவனுக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் எரிச்சலும் அவனை அப்படி சையத்திடம் பேச வைத்திருந்தது

ஆனால் சையத் அவன் எண்ணம் புரியாமல் "உன் அனுமதியை இங்க யாரும் கேட்கல" என்று பதிலுரைக்க,

"வேண்டாம் சையத்... என்னை எதிர்த்துக்கிட்டு எதையும் செய்யனும்னு நினைக்காதே.. அது உனக்குதான் ஆபத்தா முடியும்"

"மிரட்டிறியா ?"

"ஆமான்டா... மிரட்டிறேன்... புத்திசாலியா இருந்தா பிழைச்சுக்கோ" என்று சொல்லி எகத்தாளமாய் சிரித்துவிட்டு ராகவ் அழைப்பை துண்டிக்க, சையத் இந்த பிரச்சனையின் தீவிரத்தை அப்போதே உணர்ந்து சுதாரிக்காமல் விட்டதன் விளைவு. இன்று அனுபவிக்கிறான்.

ராகவ் தன் மீது கொண்ட வஞ்சத்திற்காக மதுவை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்ள, அப்போது சையத்திற்கு அவனை கொலை செய்யும் அளவுக்காய் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

*********

ஜென்னி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த போது இருள் அடர்ந்திருந்தது.

அங்கேதான் டேவிட் அவளை வேதனை நிரம்பிய முகத்தோடு வழியனுப்பினான்.

அந்த தருணத்தை மறக்க முடியுமா ?

அந்த காட்சி அவள் விழிகளின் முன் வந்து அரங்கேற, அந்த நொடி அவனின் நினைவலைகள் எழும்பி அவள் மனதில் ஆர்பரிக்க தொடங்கியிருந்தது.

அவள் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், அவளின் கார் ஓட்டுநர் அவளுக்காக காத்திருந்தான்.

எப்போதும் டேவிட்தான் அவளை நேரடியாக வந்து அழைத்து போவது வழக்கம்.

அவள் மனமோ அவன் வரவில்லையே என்று எண்ணி ஏமாற்றமடைய, அந்த முட்டாள்தனத்தை அவள் என்னவென்று சொல்வது.

அவனை தானே நிராகரித்துவிட்டு தானே அவனை எண்ணி எண்ணி மருகாவானேன் ?!

அவளுக்கு உண்மையிலயே புரியவில்லை. நட்பென்ற வட்டத்திற்குள் அவள் வலுக்கட்டாயாமாக நிற்க முயற்சி செய்ய, அது வலிந்து அவளை வெளியே தள்ளிக் கொண்டிருந்தது.

சென்னைக்குள் நுழைந்த கணத்தில் இருந்த டேவிடின் நினைப்பு மட்டும்தான்.

நாம் நினைக்க கூடாதென்று எதை எண்ணுகிறோமோ நேர்மறையாய் அது மட்டுமே நம் எண்ணஅலைகளை ஆட்சி செய்யும்.

அதே போல் ஜென்னியின் நினைவுகளையும் டேவிடின் எண்ணமே ஆளுமை செய்து கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராமல் ஒரு பைக் தாறுமாறாய் வந்து அவர்கள் காரில் மோதவந்தது.

"அய்யோ பாத்து" என்றவள் பதறி ஓட்டுநரிடம் உரைக்க அவரும் எதிரே வந்த பைக்கை இடிக்காமல் வெகுஜாக்கிரதையாக கார் ஸ்டியரிங்கை திருப்பிவிட்டார்.

ஜென்னி நிம்மதி பெருமூச்சுவிடலாம் என்று எண்ணுவதற்கு முன்னதாக, அந்த பைக் பின்னே வந்த காரில் மோதிவிட்டது.

நொடிப் பொழுதில் அந்த விபத்து நிகழ்ந்தேறிவிட, இடித்த அந்த கார் கண்இமைக்கும் நேரத்தில கடந்து சென்றுவிட்டது.

அவள் பதறிக் கொண்டு "காரை நிறுத்துங்க" என்று ஓட்டுநரிடம் உரைக்க,

"வேண்டாம் மேடம்... நம்ம போயிடுவோம்" என்றவனிடம் அவள் ஆவேசமாக,

"நிறுத்துங்கன்னு சொன்னேன்" அதிகாரமாய் உரைக்க அவன் மறுகணமே பிரேக்கை அழுத்தி காரை ஓரமாய் நிறுத்திவிட, அவள் விரைவாக இறங்கி ஓடினாள்.

அதற்குள் விபத்து நிகழ்ந்த இடத்தில் கூட்டம் கூடியிருக்க, அவசரமாக அவர்களை விலக்கி கொண்டு உள்ளே நுழைந்தாள்.

ஓர் இளைஞன் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்க, "தூக்குங்க ஹாஸ்ப்பெட்டில் போகனும்" என்று சூழ்ந்திருந்த கூட்டத்தை பார்த்து கூறவும்,

அவர்களில் ஒருவன் "ஆம்புலன்ஸுக்கு போஃன் பண்ணியாச்சு" என்றான்.

"ஆம்புலன்ஸ் வர வரைக்கும் காத்திருக்க முடியாது... தூக்குங்க ப்ளீஸ்" என்றவள் பதட்டத்தோடு சொல்ல, அங்கிருந்தவர்களும் அவள் சொன்னதை ஆமோதித்து அவனை தூக்கி வந்து அவளின் காருக்குள் படுக்க வைத்தனர்.

டிரைவரிடம் "சீக்கிரம் ஹாஸ்ப்பெட்டில் போங்க" என்று பணித்தபடி காரில் ஏறியவள் காயப்பட்டவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அவனின் இரத்தம் தோய்ந்த முகத்தை அவள் நிமிர்த்தி பிடிக்க, அந்த நொடி அதிர்ந்து போனாள்.

"வேந்தன்" என்று சொல்லியவளுக்கு
படபடப்பு மிகுந்தது.

அவன் முகத்தையும் பார்க்க கூட அவள் விருப்பப்படவில்லை.

ஆனால் இப்படி ஒரு நிலையில் அவனை பார்க்க நேரிடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அவன் மேல் மலையளவுக்கு கோபம் இருக்கிறது. ஆனால் காயப்பட்டு வலியால் துடித்து கொண்டிருப்பவனிடம் அதை காட்டுமளவுக்காய் அவள் உள்ளம் இறுகி போய்விடவில்லை.

கார் மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் துரிதமாய் அவனை சிகிச்சை அறைக்கு அழைத்து போகச் செய்தாள்.

அவள் மகிழுக்கு இதை பற்றி தெரிவிக்க எண்ணியவள் நேரடியாக அவனிடம் பேச சங்கடப்பட்டுக் கொண்டு அவளின் கார் ஓட்டுநர் மூலமாக விஷயத்தை சொல்ல சொன்னாள்.

அவனும் அவள் சொன்னதை அப்படியே சொல்லியவன்,.அதிர்ந்த பார்வையோடு "செத்து தொலையட்டும் நான் வரமாட்டேன்னு... சொல்றார் மேடம்" என்று மகிழ் தெரிவித்ததை உரைக்க, அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

அப்போது எழிலின் எண் அவளிடம் இருப்பது நினைவுக்கு வர, தன் ஓட்டுநரிடமே அவளுக்கு அழைத்து விவரத்தை கூற சொன்னாள்.

எழில் பதறி துடித்து வருவதாக தெரிவித்தாள்.

ஜென்னி ஒருவாறு நிம்மதி பெரூமூச்சுவிட்டு புறப்பட யத்தனித்த போதுதான் வேந்தனின் நிலைமை ரொம்பவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் உரைத்தனர்.

ஜென்னிக்கு அங்கிருந்து புறப்பட மனமில்லாமல் இயலாமையோடு தலையை பிடித்தபடி அமர்ந்து கொண்டிருக்க, மகிழ் நர்ஸின் வழிகாட்டு தலோடு அங்கே வந்து நின்றான்.

அங்கே அவளை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளும் அவன் அவ்விதம் சொல்லிவிட்டு வந்து நிற்பான் என எதிர்பார்க்கவில்லை.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இருவரும் பார்வையாலயே அதிர்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

பார்க்க வேண்டும் என துடித்த போதெல்லாம் பார்க்க முடியாமல் போனது. ஆனால் பார்க்கவே கூடாதென்று நினைத்திருக்கும் போது பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இத்தகைய விதியை யார் வடிவமைத்தது.

உணர்ச்சியற்ற பார்வையோடு "நீ இங்கே என்ன பண்ணிட்டிருக்க. ?" என்று அவன் கேட்க, அவள் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு நடந்த விபத்தை குறித்து விவரமாய் அவனிடம் சொல்லி முடித்தாள்.

"உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை ?" என்று கேட்டவனின் பார்வையில் அத்தனை கோபம்!

"என்ன பேசறீங்க மகிழ் ? உயிருக்காக போராடிட்டிருக்கிறவரை எப்படி அப்படியே விட்டுட்டு போக முடியும் ?"

அவளை அலட்சியமாய் அவன் ஏற இறங்க பார்த்து "அவ்வளவு நல்லவாளா நீ ?!" என்று இளக்காரமாய் கேட்டவன்

மேலும் அவளிடம் "சரி கிளம்பு... அவன் செத்தாலும் பிழைச்சாலும் உனக்கென்ன ஆகப் போகுது" என்று இறுக்கமான பார்வையோடு உரைக்கவும் அவள் சீற்றமானாள்.

அவள் கனலேறிய பார்வையோடு அவனை நோக்கி "எதுக்கு இப்படி மனிஷத்தனமே இல்லாம பேசிட்டிருக்கீங்க ? என்னை விட உங்களுக்கு அவர் மேல.. கோபமா ?!" என்றவள் கேட்டுவிட அவன் கொதிப்போடு,

"உன்னை விட எனக்குதான்டி அவன் மேல கோபம்... ஏன்னா அவன் எனக்கு செஞ்சது துரோகம்... நான் அப்படிதான் பேசுவேன்" என்று திட்டவட்டமாய் உரைத்தான்.

அவள் மனம் கேட்காமல் இறங்கிய குரலில் "அதெல்லாம் இப்ப பேச வேண்டாம் மகிழ்" என்றாள்.

அவன் தன்னிலையில் இருந்து துளியளவும் இறங்காமல் "ஏன் சாக்ஷி ? அவன் சாககிடந்தா அவன் எனக்கும் உனக்கும் செஞ்சதெல்லாம் இல்லன்னு ஆயிடுமா ?!" என்று கேட்டவனை அவள் ஆழ்ந்து பார்த்தாள்.

அவனின் வார்த்தைகளில் இருந்த கடுமை அவளை பேச்சற்று போக செய்தது.

அவன் தொடர்ச்சியாய் காயப்பட்டதினால் அவன் மனதளவில் ரொம்பவும் இறுகி போயிருந்தான் என்பது அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அதே நேரம் அவனுக்கு வேந்தனிடம் என்னதான் கோபம் இருந்தாலும் அவனுக்கு அது வார்த்தையளவில்தான் இருக்கிறது.

இல்லையெனில் அவன் இங்கே வந்திருப்பானா என்று எண்ணியவள் மேலே அவனிடம் வாக்குவாதம் செய்யாமல் புறப்பட யத்தனித்த போது அவளுக்கு வேறொரு அதிர்ச்சி காத்துகொண்டிருந்தது.

எழிலும் மாயாவும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தபடி நின்றிருந்தனர்.

அதுவும் மாயாவின் விழிகள் அத்தனை உஷ்ணமாயிருக்க, அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அவர்கள் தவறாக புரிந்து கொண்டனரா என எண்ணி அவள் அச்சமுற,

மகிழும் ஜென்னியின் முகப்பாவனையை பார்த்து துணுக்குற்று திரும்பி நோக்கினான்.

அவன் பார்வையில் அதிர்ச்சியில்லை. மாறாய் அலட்சியம் குடிக்கொண்டிருக்க அவன் ஜென்னியிடம் "எழிலுக்கு நீ இன்பாஃர்ம் பண்ணியா ?" என்று கேட்க,

"ஹ்ம்ம்ம்" என்றாள் தயங்கியபடி !

மாயாவின் முகத்தை பார்த்தவனுக்கு அவள் மனம் என்னவெல்லாம் எண்ணிக் கொள்ளும் என்று நன்றாகவே தெரியும்.

அதை பொருட்படுத்தாமல் அவளை பார்க்காதது போல் அவன் திரும்பி கொள்ள, அவனின் நிராகரிப்பு அவளை பெரிதும் ரணப்படுத்தியது.

எழில் நேராக மகிழிடம் வந்து "அண்ணாக்கு என்னாச்சு மகிழ் ? எப்படிதான் இருக்காரு ?" என்று படபடப்போடு வினவ,

"தெரியல... ட்ரீட்மன்ட் கொடுத்திட்டிருக்காங்க" என்றவன் பதில் சொல்ல மாயா அவர்கள் அருகில் வராமல் பின்தங்கியே நின்றுக் கொண்டாள்.

நர்ஸ் நேராக வந்து ஜென்னியிடம் "டாக்டர் உங்களை கூப்பிடிறாரு" என்க,

அவள் அந்த நர்ஸிடம் மகிழை சுட்டி காட்டி "இவர்தான் பேஷன்ட்டோட ரீலேட்டிவ்" என்று தெரிவிக்க, அவனும் அந்த நர்ஸின் பின்னோடு மருத்துவரை பார்க்க சென்றான்.

ஜென்னிக்கு இனி தான் அங்கே நிற்பது உசிதமில்லை என்று எண்ணி புறப்பட யத்தனிக்க எழில் அவளிடம் "சாக்ஷி நில்லு" என்றாள்.

அவள் கலக்கத்தோடு எழிலை பார்க்க, அவள் பார்வையாலயே வெறுப்பை உமிழ்ந்தபடி "நீ பெரிய ஆளுதான்... எல்லார்கிட்டயும் உன் பேர் ஜென்னின்னு சொல்லி நம்ப வைச்சி முட்டாளக்கிட்ட இல்ல" என்று கேட்க,

"இல்ல க்கா... அது வந்து" என்றவள் தவிப்புற்று பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

"நீ என்னவா வேணா இருந்துட்டு போ... ஆனா என் தம்பி வாழ்க்கையில குறுக்கிடாதே.." என்று அழுத்தமாய் தெரிவிக்க, ஜென்னி அதிர்ந்து நின்றாள்.

எழில் மேலும், "அவனும் நீயும் காதலிச்சிருக்கலாம்... ஆனா இப்ப நீ அவன் வாழ்க்கையில குறுக்கிடிறது சரியில்ல" என்றதும் அவள் உடைந்த நிலையில்,

"நீங்க தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க க்கா... நான் மகிழ் வாழ்க்கையில குறுக்கிடனும்னு நினைக்கவே இல்ல" என்க,

"நீ நினைக்காமதான் மகிழும் மாயாவும் இப்போ பிரிஞ்சிருக்காங்களா ?!" என்று கேட்கவும், அவளின் விழிகளின் நீர் சூழ்ந்து கொண்டு வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்தது.

அதற்குள் மகிழ் வந்து "வாயமூடு எழில்... என்ன ஏதுன்னு தெரியாம உன் இஷ்டத்துக்கு பேசிட்டிருக்க" என்று கோபம் கொண்டவன் ஜென்னியின் புறம் திரும்பி "நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு" என்க, அவள் யோசனை குறியோடு அவனை பார்த்தாள்.

"சாக்ஷி கிளம்பு" என்றவன் மீண்டும் அழுத்தி கூறவும் அங்கிருந்து புறப்பட்டவள், மாயாவை ஒரு நொடி நின்று பார்க்க அவளோ வெடுக்கென பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

அந்த சமயம் எழில் தன் தம்பியிடம் "அவளை சொன்னதும் உனக்கு அப்படியே கோபம் பொத்துக்கிட்டு வருதோ ?!" என்று கேட்க,

"லூசு மாறி பேசாதே... உனக்கு சண்டை போடனும்னா போய் அதோ நிற்கிறா பாரு... அவகிட்ட போய் போடு..."என்று மாயாவை சுட்டிக்காட்டியவன் மேலும் தன் தமக்கையிடம் "சம்பந்தமில்லாதவகிட்ட கோபப்பட்டு என்ன பிரோயோஜனம் ?" என்று மாயாவின் காதுப்படவே உரைத்தான்.

அப்போது அவன் பார்வை இருக்கையில் இருந்த ஜென்னியின் கைப்பேசியை கவனித்தது.

அவசரமாய் அதனை கையில் ஏந்தியவன் ஜென்னியிடம் கொடுக்க சென்றுவிட, எழிலுக்கு ஆத்திரம் பொங்கியது.

எழில் மாயாவின் அருகாமையில் வந்து "அவ போஃனை விட்டுட்டு போயிட்டாளாம்.. அதை கொடுக்க அப்படியே பதறிட்டு ஓடிறான்" என்றதும்,

"விடுங்க க்கா... உங்க தம்பி அவளைதானே காதலிச்சாரு... நான் அவங்க நடுவுல வந்தவதான்" என்று சொல்லி விரக்தியாக பார்க்க,

எழிலுக்கு அவளின் பதில் அதிர்ச்சிகரமாய் இருந்தது.

மாயாவை சமாதானம் செய்து அழைத்துவர எழில் சாரதா இல்லத்திற்கு சென்ற சமயத்தில்தான் வேந்தனுக்கு விபத்து என்று தகவல் வந்து இருவரும் அடித்துபிடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கே மகிழும் ஜென்னியும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த போதே மாயாவிற்கு மனம் வெறுத்து போனது.

ஜென்னி காரில் ஏறுவதற்கு முன்னதாக "சாக்ஷி" என்று மகிழ் குரல் கொடுக்க அவள் திரும்பி பார்த்தாள்.

அவன் அவளின் கைப்பேசியை நீட்ட, அதனை பெற்றுக் கொண்டவளின் விழி கலங்கியிருந்ததை கவனித்தவன் "ஸாரி... எழில் அப்படி உன்கிட்ட பேசியிருக்க கூடாது" என்றான்.

அவள் அவனை கூர்ந்து பார்த்து "நீங்களும் மாயாவும் பிரிஞ்சிருக்கீங்களா மகிழ் ?!" என்று அவள் கேட்க,

"அது உனக்கு தேவையில்லாத விஷயம்" என்று திரும்பி நடந்தான்.

"என்னாலதான் நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சிருக்கீங்கன்னு உங்க அக்கா சொல்றாங்க.." என்று வினவினாள்.

"அப்படி எல்லாம் எதுவும் இல்ல" என்று அவன் முகம் பாராமலே அவன் சொல்ல,

"நீங்க பொய் சொல்றீங்க... நம்ம இரண்டு பேரும் அன்னைக்கு மீட் பண்ணிக்கிட்டாதாலதான் உங்களுக்குள்ள பிரச்சனை" என்றவள் தெளிவாய் கணித்தாள்.

"ஆமாம்... அதனாலதான் பிரச்சனை... இப்ப என்னங்கிற ?!" என்று அவளை அவன் திரும்பி பார்த்து முறைக்க

"நான் வேணா மாயாகிட்ட பேசட்டுமா ?!" நிதானமாகவே அவள் அவனிடம் கேட்க,

அவன் எகத்தாளமாய் சிரித்துவிட்டு

"நீ எனக்கு இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் பத்தலயா... இதுல அவகிட்ட வேற பேசி... இருக்கிற பிரச்சனை பெரிசாக்க பார்க்கிறியா ?!" என்றான்.

"என்ன பேசிறீங்க மகிழ் ?" அவள் தவிப்போடு வினவ,

"கரெக்ட்டாதான் பேசிறேன்... நீங்க இரண்டு பேரும் என் வாழ்க்கைகுள்ள வராம இருந்திருந்தா நான் நிம்மதியா இரூந்திருப்பேன்... என் லைஃப்ல நான் செஞ்ச பெரிய தப்பு... உன்னை காதலிச்சது.. அவளை கல்யாணப் பண்ணிக்கிட்டது" என்று தன் மனவேதனையெல்லாம் வார்த்தைகளாக அவளிடம் கொட்டி தீர்த்துவிட்டு அவன் அகன்றுவிட, அவளோ கதிகலங்கி போனாள்.

எதுவெல்லாம் அவள் நிகழக் கூடாதென்று பயந்தாலோ அதுவெல்லாம் நிகழ்ந்துவிட, எல்லாமே அவள் கையை மீறி போய்விட்டது என்பது மட்டும் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

சோர்ந்த நிலையில் காரில் ஏறி அவள் புறப்பட்டுவிட, வேந்தனுக்கு சிகிச்சைகள் முடிந்து மருத்துவர் மகிழிடம் "ஹீ இஸ் நவ் ஒகே... மயக்கத்தில இருக்காரு... அப்புறமா மயக்கம் தெளிஞ்சதும் போய் பாருங்க" என்க,

எழிலும் மாயாவும் ஒருவாறு நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

ஆனால் மகிழோ உணர்வுகளற்ற முகத்தோடு அவர் சொன்னதை உள்வாங்கி கொண்டான். இன்று அவன் பிழைத்து கொண்டுவிட்டாலும் இன்னும் எத்தனை நாளைக்கு.. அவனை மரணம் நெருங்காமல் இருக்கும். அதை எப்படி வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க போகிறோம் என்ற இக்கட்டில் அவன் நின்றிருக்க,

எழில் அப்போது மாயாவிடம் "ரொம்ப லேடாயிடுச்சு மாயா... நீ கிளம்பு" என்றவள் தன் தம்பியின் புறம் திரும்பி

"போய் அவளை வீட்டில விட்டுட்டு வா" என்றாள்.

அவன் விழி இடூங்க பார்த்து "எதுக்கு ? அவங்களுக்கு எல்லா தனியா போய் பழக்கம்தான்... போயிடுவாங்க" என்று அவன் யாரையோ சொல்வது போல் பேச,
அவள் உள்ளூர உடைந்து கொண்டிருந்தாள்.

ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "இல்ல அண்ணி..எனக்கு யார் துணையும் வேண்டாம்... நானே போயிடுவேன்" என்று அவள் அவனை முறைத்தபடி பதிலுரை கொடுக்க,
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
எழில் விடாமல் "சும்மா இரு மாயா... எப்படி அவ்வளவு தூரம் தனியா போவ... அதுவும் இருட்டிடுச்சு வேற" என்று சொல்லி தன் தம்பியிடம் சமிஞ்சையால் அழைத்து போக சொல்லி கட்டாயப்படுத்தினாள்.

அவன் சலிப்போடு "சரி வர சொல்லு... " என்றதும்

"அப்படி ஒண்ணும் அவர் சலிச்சிக்கிட்டு என்னை கூட்டிட்டு போக தேவையில்லை... எனக்கு போக தெரியும்" என்றவள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் செல்லவும் எழில் வேதனையோடு தம்பியை நோக்கினாள்.

அவன் உணர்ச்சிகளற்ற பார்வை ஒன்றை உதிர்த்துவிட்டு அப்படியே இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

எழிலுக்கும் மகிழின் அந்த இறுக்கத்தை நம்ப முடியவில்லை.

அவனின் இறுக்கம் தளர வேண்டுமெனில் மாயா அவனை புரிந்து கொண்டு இறங்கி வர வேண்டும். ஆனால் அது ஜென்னியால் மட்டுமே சாத்தியம்.

இப்போது இருக்கும் நிலைமையில் ஜென்னிக்கும் எந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் தருவதென்றே புரியவில்லை. வரிசையாய் பிரச்சனைகள் அணிவகுத்து அவள் மனோதிடத்தை தகர்த்து கொண்டிருக்க, டேவிட் இப்போது தன் அருகாமையில் இருந்திருக்க கூடாதா ?

ஏங்கி தவித்தது அவள் மனம். அவனை பார்ப்பதற்கும் பேசுவதற்கும்.

ஆனால் அப்படி செய்துவிடவே கூடாதென என அவளை அவளே கட்டுப்படுத்தி கொண்டு இருக்க, டேவிடின் நினைவு அவள் உறக்கத்தை களவாடிக் கொண்டது.

இரவெல்லாம் விழித்திருந்ததினால் அவள் அகம் முகம் என எல்லாம் சோர்ந்து போயிருக்க, அப்போது அவளின் அலைப்பேசி ரீங்காரிமிட்டது.

அதனை எடுத்து அவள் "ஹெலோ" என்க, டேவிடின் தந்தை தாமஸின் குரல் ஒலித்தது.

அவள் சற்று தெளிவுப்பெற்று "என்ன விஷயம் அங்கிள் ?" என்க,

"நீ இப்போ எங்க இருக்கம்மா ?" என்று கேள்வி எழுப்பினார்.

"சென்னையிலதான் அங்கிள்... ஏன் ?"

"கொஞ்சம் உடனே வீட்டுக்கு வர முடியுமா ?" என்று கேட்க,

அவள் யோசித்துவிட்டு மேலே எதுவும் விசாரிக்காமல் "வர்றேன் அங்கிள்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

விரைவாய் அவள் டேவிட் வீட்டை அடைய தாமஸ் முகப்பறையில் அமர்ந்திருக்க "என்ன அங்கிள்? என்னாச்சு?" என்றவள் கேட்டு அவர் கவலை தோய்ந்த முகத்தை கூர்மையாய் பார்த்தாள்.

அவர் தயக்கத்தோடு "டேவிட்" என்று ஆரம்பிக்கவும்

"டேவிடுக்கு என்ன. ?" என்று பதறினாள்.

"டேவிட் சென்னையை விட்டு போறானாம்... அவனுக்கு ரிலேக்ஸேஷன் தேவைப்படுதுன்னு ஏதோஏதோ சொல்றான்... என்னால அவன்கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ண முடியல... எனக்கென்னவோ அவன் நீ சொன்னா கேட்பான்னு தோணுது" என்றவர் உரைத்த மறுகணமே தாமதிக்காமல் அவன் அறை நோக்கி விரைந்தாள்.

டேவிட் அப்போதுதான் தன் படுக்கையில் அமர்ந்தபடி ஒரு ஊதா நிற ஷர்ட்டை தடவி பார்த்து தன் வேதனையை உள்ளூர விழுங்கி கொண்டிருக்க, ஜென்னி அவனின் அந்த செய்கையை விசித்திரமாய் பார்த்தாள்.

'அது என்ன ஷர்ட் ?' என்று அவள் மனம் கேட்ட கேள்விக்கான விடையை அவன் மட்டுமே சொல்ல கூடும்.

Hi friends,
திரும்பியும் count down start ஆகிடுச்சு. கதையை முடிக்கனும்னா தினம் ஒரு பதிவு கொடுக்கனும் போல.

முயற்சி செய்து இறுதி நாளுக்கு முன் முடிக்க பார்க்கிறேன்.

முந்தையை பதிவிற்கு கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி. பிழையேனும் இருந்தால் பொறுத்தருளுங்கள்.

உங்கள் கருத்துக்கள்தான் என் பலம்.

ஆதலால் உங்கள் கருத்தை மறவாமல் தந்து ஊக்குவிக்கும்.

அடுத்த பதிவு ஜென்னி டேவிடுக்காக Spl
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top