murugesanlaxmi
மண்டலாதிபதி
சையத் அருமை மனிதன்
niceஅப்சானா தன் அண்ணனிடம் "என்ன ண்ணா இப்படி சொல்லிட்டீங்க ?" என்று கேட்க அதே கேள்விதான் சாஜியின் மனதையும் அழுத்தியது.
"வேறென்ன செய்ய முடியும் ?" சையத் விரக்தியான பார்வையோடு தங்கையை பார்க்க,
சாஜிம்மா கோபம் பொங்க "உன் பேர்ல தப்பா ஒருத்தி பழி போட்டிருக்கா? அவளை எதுக்குடா நீ கல்யாணம் பண்ணிக்கனும்... ?" என்று கேட்க,
"எனக்கு மதுவை நல்லா தெரியும்மா... அவ நிச்சயம் தெரிஞ்ச பண்ணி இருக்க மாட்டா... பாவம் அவ சூழ்நிலை என்னவோ ?!" என்றவன் உரைக்க சாஜிம்மா அவனை ஆச்சர்யமாய் பார்த்தார்.
அந்த கணம் எதிர்பாரா விதமாய் மது சையத்தின் கால்களை பிடித்து கொண்டு "ஸாரி ஸார்... என்னை மன்னிச்சிடுங்க" என்று கண்ணீர் வடிக்க எல்லோருமே அதிர்ந்தனர்.
சையத் அவள் கரத்தை பிடித்து தூக்கியவன் "என்ன காரியம் பன்ற மது?" என்று கோபமாய் பார்க்க,
அவள் கரத்தை குவித்தபடி
அழுதவள் "என்னை மன்னிச்சிடுங்க சார்... எனக்கு வேற வழி தெரியல" என்றாள்.
சாஜிம்மா எரிச்சலோடு "ஏன் மது? என் பையன் என்னைக்காச்சும் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டானா ?" என்று கேட்க,
அவள் பதறியபடி "சத்தியமா இல்லம்மா... அவர் அப்படி ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது" என்றாள்.
"அப்புறம் ஏன்டி என் பிள்ளை மானத்தை வாங்கின?... அவனை எல்லாரும் எப்படி பார்க்கிறீங்க தெரியுமா ? !" என்று அவர் உணர்ச்சி பொங்க குரலை உயர்த்த சையத் தன் அம்மாவை அணைத்து பிடித்தபடி,
"வேண்டாம் ம்மா... விடுங்க... "என்று சமாதானம் உரைக்க, அவர் தன் மகனின் தோளில் சாய்ந்தபடி அழ தொடங்கினர்.
அப்சானாவும் அதே நேரம் அழ தொடங்க, ஆஷிக் கோபத்தோடு மதுவை பார்த்து "அப்படி என்னதான் உங்களுக்கு எங்க ண்ணன் மேல கோபம்" என்று கேட்க,
அவள் தன் அழுகையை விழுங்கி கொண்டு "நான் எதுவும் வேணும்டே செய்யல... எங்க வீட்டில ரவுடிங்க மாதிரி வந்து சில பேர் மிரட்டினாங்க... சையத் சாரை தப்பா சொல்லலன்னா தங்கச்சிங்ககிட்ட தப்பா நடந்துப்பேன்னு சொன்னாங்க... அப்பாவுக்கும் உடம்பு சரியில்லை... நான் அந்த நிமிஷம் ரொம்ப பயந்துட்டேன்" என்று சொல்லும் போதே அவள் கரமெல்லாம் உதறலெடுத்தது.
அவளின் அழுகை மெல்ல மெல்ல அதிகரிக்க, சாஜி ஆஷிக் அப்சானா மூவரும் அதிர்ச்சியில் நின்றுவிட்டனர்.
சையத்திற்கு இதெல்லாம் ராகவின் வேலைதான் என்று தீர்க்கமாய் புரிந்தது.
'நீ செய்ற எல்லாத்துக்கும் ஒருநாள் அனுபவிப்ப ராகவ்' என்று மனதிற்குள் கொதித்தவன் அந்த கணம் மதுவின் நிலையை பார்த்து பரிதாபம் கொண்டான்.
அவளோ கதறி அழுதபடி தரையில் சரிய, சையத் அப்சானாவிடம் சமிஞ்சையால் அவளை தேற்ற சொன்னான்.
அப்சானா அவள் அருகில் அமர்ந்து "அழாதீங்க க்கா" என்றுரைக்க அவளோ அமைதியடையவில்லை.
சாஜி நடப்பதெல்லாம் என்னவென்று புரியாமல் மகனை பார்த்து "அந்த பொண்ணு சொல்றதெல்லாம் என்ன சையத்? " என்றவர் சந்தேகமாய் வினவ,
"நீங்க முதல்ல போய் கொஞ்சம் படுங்க... நைட்டெல்லாம் தூங்கல... நான் எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன்" என்றவன் ஆஷிக்கிடம் அம்மாவை உள்ளே அழைத்து போக சொன்னான்.
அவர் மகனை தவிப்போடு பார்த்துவிட்டு மறுப்பேதும் சொல்லாமல் ஆஷிக்கோடு உள்ளே செல்ல, சையத் அப்சானாவை பார்த்து "போய் மதுவுக்கு தண்ணி எடுத்துட்டு வந்து கொடு" என்க, அவளும் உள்ளே சென்றாள்.
சையத் தரையில் அமர்ந்திருப்பவளை பார்த்து "மது" என்றழைக்க அவள் விசும்பலோடு அவனை நோக்கினாள்.
"எழுந்திரு... மேலே உட்காரு" என்று இறுக்கமாக சொல்ல அவள் முகத்தை துடைத்தபடி எழுந்து கொண்டாள்.
அதற்குள் அப்சானா தண்ணி எடுத்து வந்து தரவும் அவள் அதை வாங்கி அருந்திய போதும் அவள் விசும்பல் நின்றபாடில்லை.
அப்சானா தன் அண்ணனின் பார்வை புரிந்து உள்ளே செல்ல, மதுவை அமர சொன்னான்.
அவள் விசும்பி கொண்டே அமர்ந்து கொள்ள,
சையத் அவளை நோக்கி "அழாதே மது... விடு போகட்டூம்" என்று உரைக்க அவள் உச்சபட்ச வியப்போடு அவனை பார்த்தாள்.
தான் செய்த செயலை அவன் இத்தனை நிதானமாய் எதிர்கொள்வதை அவளால் நம்பமுடியவில்லை. அவள் விசும்பல் கிட்டதட்ட நின்றிருக்க,
அவள் அவனை குழப்பமாய் பார்த்து "ஏன் ஸார்... நான் சொன்னது அத்தனையும் உண்மைன்னு ஒத்துக்கிட்டீங்க" என்றவள் கேட்க,
"தப்பு எல்லாம் என் பேர்லதான்... உனக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை வந்ததுக்கும் ஒருவகையில நான்தான் காரணம்... அதனாலதான் நான் அப்படி சொன்னேன்" என்றவன் சொல்லி பெருமூச்செறிந்தான்.
அவள் யோசனை குறியோடு மௌனமாகிட சையத் அவளிடம்,
"நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொன்னதுல உனக்கு சம்மதமா ?!" தயக்கத்தோடு அவன் கேட்கவும் அவள் அதிர்ந்தாள்.
அவன் மேலும் "நான் முஸ்லீங்கிறதால உங்க வீட்டில" என்று சொல்லும் போதே அவள் கண்ணீரோடு "உங்க மதமெல்லாம் எனக்கு தெரியல... நீங்க எனக்கு இப்போ கடவுளாதான் தெரியிறீங்க" என்றாள்.
"அப்படி எல்லாம் யாரும் அவ்வளவு சுலபமா கடவுளாகிட முடியாது மது" என்று தெளிவோடும் நிதானத்தோடும் உரைத்தவனை அடங்காத வியப்போடு பார்த்து
"உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா சார்?" என்று கேட்டு அவனை ஆழ்ந்து பார்த்தாள்.
அவன் உதடுகளில் லேசாய் புன்னகை எட்டி பார்த்தது.
"நீ கொஞ்சங் கூட உன் வாழ்க்கை பாதிக்குமேன்னு கவலைப்படாம.. உன் குடும்பத்துக்காக நீ எவ்வளவு தியாகம் பண்ணி இருக்கு மது... உன் மேல எனக்கு கோபம் வரல... அதுக்கு பதிலா மரியாதைதான் அதிகமாகுது" என்று உரைத்தவனை பார்த்து அதிசயத்துதான் போனாள்.
அவளுக்கு எப்போதும் அவன் மீது அளவுகடந்த மரியாதை உண்டு. ஆனால் அது இப்போது முற்றிலும் காதலாக உருமாறியிருந்தது.
Hi friends,
உங்களுக்கு கருத்துக்களுக்கு நன்றி. நேரம் கடந்துவிட்டாலும் இன்றைக்கான பதிவு வந்துவிட்டது. மறவாமல் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
this song for syed and madhu
Ipo than nenga knjam wrong thinging ilama twist vachuruknga tq sis ????அப்சானா தன் அண்ணனிடம் "என்ன ண்ணா இப்படி சொல்லிட்டீங்க ?" என்று கேட்க அதே கேள்விதான் சாஜியின் மனதையும் அழுத்தியது.
"வேறென்ன செய்ய முடியும் ?" சையத் விரக்தியான பார்வையோடு தங்கையை பார்க்க,
சாஜிம்மா கோபம் பொங்க "உன் பேர்ல தப்பா ஒருத்தி பழி போட்டிருக்கா? அவளை எதுக்குடா நீ கல்யாணம் பண்ணிக்கனும்... ?" என்று கேட்க,
"எனக்கு மதுவை நல்லா தெரியும்மா... அவ நிச்சயம் தெரிஞ்ச பண்ணி இருக்க மாட்டா... பாவம் அவ சூழ்நிலை என்னவோ ?!" என்றவன் உரைக்க சாஜிம்மா அவனை ஆச்சர்யமாய் பார்த்தார்.
அந்த கணம் எதிர்பாரா விதமாய் மது சையத்தின் கால்களை பிடித்து கொண்டு "ஸாரி ஸார்... என்னை மன்னிச்சிடுங்க" என்று கண்ணீர் வடிக்க எல்லோருமே அதிர்ந்தனர்.
சையத் அவள் கரத்தை பிடித்து தூக்கியவன் "என்ன காரியம் பன்ற மது?" என்று கோபமாய் பார்க்க,
அவள் கரத்தை குவித்தபடி
அழுதவள் "என்னை மன்னிச்சிடுங்க சார்... எனக்கு வேற வழி தெரியல" என்றாள்.
சாஜிம்மா எரிச்சலோடு "ஏன் மது? என் பையன் என்னைக்காச்சும் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டானா ?" என்று கேட்க,
அவள் பதறியபடி "சத்தியமா இல்லம்மா... அவர் அப்படி ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது" என்றாள்.
"அப்புறம் ஏன்டி என் பிள்ளை மானத்தை வாங்கின?... அவனை எல்லாரும் எப்படி பார்க்கிறீங்க தெரியுமா ? !" என்று அவர் உணர்ச்சி பொங்க குரலை உயர்த்த சையத் தன் அம்மாவை அணைத்து பிடித்தபடி,
"வேண்டாம் ம்மா... விடுங்க... "என்று சமாதானம் உரைக்க, அவர் தன் மகனின் தோளில் சாய்ந்தபடி அழ தொடங்கினர்.
அப்சானாவும் அதே நேரம் அழ தொடங்க, ஆஷிக் கோபத்தோடு மதுவை பார்த்து "அப்படி என்னதான் உங்களுக்கு எங்க ண்ணன் மேல கோபம்" என்று கேட்க,
அவள் தன் அழுகையை விழுங்கி கொண்டு "நான் எதுவும் வேணும்டே செய்யல... எங்க வீட்டில ரவுடிங்க மாதிரி வந்து சில பேர் மிரட்டினாங்க... சையத் சாரை தப்பா சொல்லலன்னா தங்கச்சிங்ககிட்ட தப்பா நடந்துப்பேன்னு சொன்னாங்க... அப்பாவுக்கும் உடம்பு சரியில்லை... நான் அந்த நிமிஷம் ரொம்ப பயந்துட்டேன்" என்று சொல்லும் போதே அவள் கரமெல்லாம் உதறலெடுத்தது.
அவளின் அழுகை மெல்ல மெல்ல அதிகரிக்க, சாஜி ஆஷிக் அப்சானா மூவரும் அதிர்ச்சியில் நின்றுவிட்டனர்.
சையத்திற்கு இதெல்லாம் ராகவின் வேலைதான் என்று தீர்க்கமாய் புரிந்தது.
'நீ செய்ற எல்லாத்துக்கும் ஒருநாள் அனுபவிப்ப ராகவ்' என்று மனதிற்குள் கொதித்தவன் அந்த கணம் மதுவின் நிலையை பார்த்து பரிதாபம் கொண்டான்.
அவளோ கதறி அழுதபடி தரையில் சரிய, சையத் அப்சானாவிடம் சமிஞ்சையால் அவளை தேற்ற சொன்னான்.
அப்சானா அவள் அருகில் அமர்ந்து "அழாதீங்க க்கா" என்றுரைக்க அவளோ அமைதியடையவில்லை.
சாஜி நடப்பதெல்லாம் என்னவென்று புரியாமல் மகனை பார்த்து "அந்த பொண்ணு சொல்றதெல்லாம் என்ன சையத்? " என்றவர் சந்தேகமாய் வினவ,
"நீங்க முதல்ல போய் கொஞ்சம் படுங்க... நைட்டெல்லாம் தூங்கல... நான் எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன்" என்றவன் ஆஷிக்கிடம் அம்மாவை உள்ளே அழைத்து போக சொன்னான்.
அவர் மகனை தவிப்போடு பார்த்துவிட்டு மறுப்பேதும் சொல்லாமல் ஆஷிக்கோடு உள்ளே செல்ல, சையத் அப்சானாவை பார்த்து "போய் மதுவுக்கு தண்ணி எடுத்துட்டு வந்து கொடு" என்க, அவளும் உள்ளே சென்றாள்.
சையத் தரையில் அமர்ந்திருப்பவளை பார்த்து "மது" என்றழைக்க அவள் விசும்பலோடு அவனை நோக்கினாள்.
"எழுந்திரு... மேலே உட்காரு" என்று இறுக்கமாக சொல்ல அவள் முகத்தை துடைத்தபடி எழுந்து கொண்டாள்.
அதற்குள் அப்சானா தண்ணி எடுத்து வந்து தரவும் அவள் அதை வாங்கி அருந்திய போதும் அவள் விசும்பல் நின்றபாடில்லை.
அப்சானா தன் அண்ணனின் பார்வை புரிந்து உள்ளே செல்ல, மதுவை அமர சொன்னான்.
அவள் விசும்பி கொண்டே அமர்ந்து கொள்ள,
சையத் அவளை நோக்கி "அழாதே மது... விடு போகட்டூம்" என்று உரைக்க அவள் உச்சபட்ச வியப்போடு அவனை பார்த்தாள்.
தான் செய்த செயலை அவன் இத்தனை நிதானமாய் எதிர்கொள்வதை அவளால் நம்பமுடியவில்லை. அவள் விசும்பல் கிட்டதட்ட நின்றிருக்க,
அவள் அவனை குழப்பமாய் பார்த்து "ஏன் ஸார்... நான் சொன்னது அத்தனையும் உண்மைன்னு ஒத்துக்கிட்டீங்க" என்றவள் கேட்க,
"தப்பு எல்லாம் என் பேர்லதான்... உனக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை வந்ததுக்கும் ஒருவகையில நான்தான் காரணம்... அதனாலதான் நான் அப்படி சொன்னேன்" என்றவன் சொல்லி பெருமூச்செறிந்தான்.
அவள் யோசனை குறியோடு மௌனமாகிட சையத் அவளிடம்,
"நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொன்னதுல உனக்கு சம்மதமா ?!" தயக்கத்தோடு அவன் கேட்கவும் அவள் அதிர்ந்தாள்.
அவன் மேலும் "நான் முஸ்லீங்கிறதால உங்க வீட்டில" என்று சொல்லும் போதே அவள் கண்ணீரோடு "உங்க மதமெல்லாம் எனக்கு தெரியல... நீங்க எனக்கு இப்போ கடவுளாதான் தெரியிறீங்க" என்றாள்.
"அப்படி எல்லாம் யாரும் அவ்வளவு சுலபமா கடவுளாகிட முடியாது மது" என்று தெளிவோடும் நிதானத்தோடும் உரைத்தவனை அடங்காத வியப்போடு பார்த்து
"உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா சார்?" என்று கேட்டு அவனை ஆழ்ந்து பார்த்தாள்.
அவன் உதடுகளில் லேசாய் புன்னகை எட்டி பார்த்தது.
"நீ கொஞ்சங் கூட உன் வாழ்க்கை பாதிக்குமேன்னு கவலைப்படாம.. உன் குடும்பத்துக்காக நீ எவ்வளவு தியாகம் பண்ணி இருக்கு மது... உன் மேல எனக்கு கோபம் வரல... அதுக்கு பதிலா மரியாதைதான் அதிகமாகுது" என்று உரைத்தவனை பார்த்து அதிசயத்துதான் போனாள்.
அவளுக்கு எப்போதும் அவன் மீது அளவுகடந்த மரியாதை உண்டு. ஆனால் அது இப்போது முற்றிலும் காதலாக உருமாறியிருந்தது.
Hi friends,
உங்களுக்கு கருத்துக்களுக்கு நன்றி. நேரம் கடந்துவிட்டாலும் இன்றைக்கான பதிவு வந்துவிட்டது. மறவாமல் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
this song for syed and madhu