Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
Hi friends,
முந்தைய பதிவில் எல்லோருமே சையத்தை பாராட்டியதில் எனக்கு அதீத சந்தோஷம்.
அதே போல் இந்த பதிவுக்கான உங்கள் கருத்துக்களையும் மறவாமல் தந்தருளூங்கள்.
விதி வலியது
"ஏ, கம்மிங் வீக் ராகவோட படம் ரிலீஸாகுது... நம்மெல்லாம் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ போறோம்... என்ஜாய் பன்றோம்" என்று வேந்தனின் நண்பன் சரவணன் சொல்லிக் கொண்டிருந்தான்.
மற்றொரு நண்பன் யோசனையோடு "படம் நல்லா இருக்கும்மா... " என்று சந்தேகித்து கேட்க,
"டே... டைரக்ட்ர் நந்தக்குமார் படம்டா... அதுவும் இல்லாம ராகவோட படமெல்லாம் வரிசையா ஹிட்தான்... இதுவும் ஹிட்டாகும்... ஹிட்டாயிடுச்சுன்னா இது அவனுக்கு ஹேட் டிரிக்" என்று ராகவின் புகழுரையை பாடிக் கொண்டிருக்க அந்த நண்பர் குழு மொத்தமாய் அதற்கு ஆமோதித்தது வேந்தனை தவிர. .அவன் மட்டும் சிகரெட்டை பிடித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான்.
அதை கண்டு கொண்ட சரவணன் "என்ன மச்சான் ? பேசவே மாட்டிற... படத்துக்கு நீ வர்றியா இல்லையா ?!" என்று கேட்கவும் வேந்தன் தன் சிகரெட்டை காலில் மிதித்துவிட்டு நிமிர்ந்து பார்த்து,
"இல்ல சரோ... நான் உடனே கெனடா கிளம்பனும்... ஸோ நான் வர முடியாது" என்க, எல்லோரின் முகமும் வாடிப்போனது.
"என்ன மச்சான் ? இப்படி சொல்ற" என்று ஒருவன் வருத்தமுற, எல்லோருமே வேந்தனிடம் அவனை இன்னும் இருவாரங்கள் தங்கியிருக்க சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவன் வேலை இருப்பதாக சொல்லி திட்டவட்டமாய் மறுத்துவிட்டு, "டைமாச்சு... வீட்டில தேடுவாங்க... நான் கிளம்பிறேன்" என்று புறப்பட, அவனை இன்னும் சிலமணி நேரம் இருக்க சொல்லி அவன் நண்பர்கள் கேட்க, யாருக்கும் அசைந்து கொடுக்காமல் அவன் தன் பைக்கை இயக்கி புறப்பட்டுவிட்டான்.
அவனின் நினைப்பெல்லாம் சாக்ஷியை பற்றியே இருக்க அவர்களோடு அவனால் இயல்பாக கலந்து பேச முடியவில்லை.
அவள் முகம் திரும்ப திரும்ப அவன் கண்முன்னே வந்துப் போய் கொண்டிருந்தது.
போதாக் குறைக்கு அவளை நெருக்கமாய் பார்த்ததிலிருந்து அவன் அவனாக இல்லை. அவளை அடைய வேண்டும் என்ற ஆசை அபிரமிதமாய் பெருகியிருக்க அவள் தன் தம்பியின் காதலுக்கு உரியவள் என்ற ஒரே விஷயம் மட்டும்தான் அவன் தன் எல்லையை மீறவிடாமல் கட்டுக்குள் நிறுத்தியிருந்தது.
ஆனால் அவளை பார்க்க வேண்டுமென்று உள்ளூர தோன்றிய ஆசையில் சாரதா இல்லத்தின் வாசலில் பைக்கோடு சென்று நின்றான்.
ஆனால் அவனின் வெகுநேரம் காத்திருப்பில் ஏமாற்றமே மிஞ்ச, திரும்பி செல்லும் போது அவளே அந்த வழியாக தனித்து நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அது அவனின் அதிர்ஷ்டமா இல்லை அவளின் துரதிஷ்டமா ? அவள் தனிமையில் நடந்து வந்து கொண்டிருக்க அவன் தன் பைக்கை தாறுமாறாக கொண்டுவந்து அவளை வழிறித்து நிற்கவும் துணுக்குற்றாள் சாக்ஷி.
"கொஞ்சங் கூட அறிவில்லயா உங்களுக்கு... இப்படி குறுக்கால வந்துதான் வண்டியை நிறுத்துவாங்களா ?!" என்றவள் கடிந்து கொள்ள அவன் உரக்க சிரித்துவிட்டு
"நானாடி உன் வழில வந்தேன்... நீதான்டி என் வழில வந்த" என்றான்.
வேந்தனின் குரலை அவள் அடையாளம் கண்டுகொண்டாள். முந்தைய நாள் மகிழ் வீட்டில் அவன் நடந்து கொண்ட விதத்தை அவளால் எப்படி மறக்க முடியும்.
அவளுக்குள் படபடப்பு அதிகரிக்க அவனிடம் பேச்சு கொடுக்காமல் அவனை அவள் கடந்து செல்ல முற்பட, எந்த பக்கமும் வழியில்லாமல் அவன் பைக் வழிமறித்தது.
தவிப்போடு "உங்களுக்கு என்ன வேணும் இப்போ ?" என்று கேட்க,
"நீதான் வேணும்" என்க, அவளுக்கு தேகம் முழுக்க பற்றி எறிந்தது போல் இருக்க அவனை சீற்றமாய் பார்த்தவள்,
"சே... நீங்க போய் மகிழோட அண்ணனா ? என்னால நம்பவே முடியல" என்றவள் முகத்தை சுளிக்க,
அவன் புன்னகை ததும்ப "நான் அவனோட அண்ணன் இல்ல... அவன்தான் என்னோட தம்பி... " என்றான்.
அவள் அங்கே நிற்க முடியாமல் செல்ல முயற்சி செய்ய அவன் வழிவிடாமல் தன் பைக்கில் அவளுக்கு தடுப்பணை போட்டபடி "நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போடி" என்றான்.
"என்ன கேட்டீங்க. ?" அவள் புரியாமல் கேட்க,
"என் கூட கெனடா வந்திருன்னு சொன்னேனே மறந்திட்டியா ?"
அவள் எரிச்சலோடு "அன்னைக்கே நான் அதுக்கு பதில் சொல்லிட்டேன்" என்றவள் உரைக்க,
"என்னடி சொன்ன ?" என்று அவன் குழப்பமாய் கேட்க,
"செருப்பு பிஞ்சிருன்னு சொன்னேனே மறந்திட்டிங்களா ?" என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லி நிறுத்த,
அவன் சினத்தோடு பைக்கில் இருந்து இறங்கி வந்து அவளை உரசியபடி "எங்க அடிடி பார்ப்போம்" என்க,
அவளும் சீற்றத்தோடு,"வேண்டாம்... நான் சத்தம் போட்டு கத்தி ஊரை கூட்டுவேன்" என்றவள் எச்சரிக்க அவன் அந்த நொடி பார்வையை சுழற்றினான்.
இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் குடியிருப்புகள் கூட ஒன்றிரடுதான் இருந்தது.
அவன் அலட்சியமாக சிரித்தபடி "கத்துடி... அன்னைக்கு மாறி இல்ல... இங்க உன்னை காப்பாத்த ஒரு ஈ காக்கா கூட இல்ல" என்று அவன் வன்மமாய் உரைக்க, அவளை பயம் ஆட்கொண்டது.
வெலவெலத்து போனவள் சுற்றிலும் ஏதேனும் சத்தம் எழுகிறதா என செவியை தீட்டிக் கொண்டு கேட்க, அவ்வப்போது வேகமாய் சீறிக் கொண்டு கடந்து சென்ற வாகனங்களின் சத்தம் மட்டுமே கேட்டது.
அப்போதுதான் அவள் உணர்ந்தாள். மாயாவை விடுத்து தனியே புறப்பட்டு வந்தது எத்தனை பெரிய தவறு என்று.
மகிழை பற்றிய சிந்தனையில் கோவிலில் வந்து அமர்ந்து தன்னிலை மறந்து கிடந்தவளுக்கு நேரம் கடந்து இருள் அடர்ந்து கொண்டிருப்பதை உணர முடியாமல் போனது.
கோவில் அர்ச்சகரின் குரல் கேட்டு விழிப்படைந்தவள் அங்கிருந்து அப்போதுதான் புறப்பட்டாள்.
கைப்பேசியையும் இல்லத்திலயே மறந்துவிட்டதால் அதுவும் அவளின் நேரத்தை மறக்கடித்திருந்தது. இல்லையெனில் மாயா அவளை அழைத்து இருக்கும் இடத்தை கேட்டிருப்பாளே!
அருகிலிருக்கும் கோவிலுக்குதானே என்று எப்போதும் போல் புறப்பட்டு வந்தவளுக்கு இப்படி வேந்தன் வழிமறித்து தவறாய் நடந்து கொள்வான் என்று முன்னமே தெரியுமா என்ன. ?
விதி வலியது என்பார்களே. அது அவள் விஷயத்தில் ரொம்பவும் பொருந்திப் போனது.
எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டு அவள் அவனை விலகி போக முயற்சி செய்ய அவன் கரம் அவளின் வெற்று இடையை அணைத்து பிடித்தது.
பதறியவள் அவன் கரத்தை இழுத்து தள்ளியபடி "யாராச்சும் காப்பாத்துங்க" என்று சத்தமிட, அவன் சிரித்து கொண்டே அவளை நெருங்கவும் அவள் தன் கையிலிருந்த ஸ்டிக்கால் அவனை தாக்க முற்பட்டாள்.
அந்த ஸ்டிக்கை அவள் வீசியதால் அவனுக்கு அடிப்பட அவளை விட்டு விலகியவன், கோபத்தில் அதனை அவள் கையிலிருந்து பறித்து தூக்கியெறிய அவளும் தடுமாறி கீழே விழ நேர்ந்தது.
அவள் ஸ்டிக் விழுந்த சத்தத்தை கேட்டு அதன் திசையை கணித்தவள் "என் ஸ்டிக்" என்று தட்டுத்தடுமாறி எடுக்க போக, அப்போது யாரும் எதிர்பாராமல் அதிவேகமாய் வந்த கார் அவளை இடித்தது.
தடுமாறி அவள் எழமுடியாமல் ரோட்டில் விழ, அவளை காப்பாற்ற முற்பட்டால் தான்தான் பிரச்சனையில் சிக்கி கொள்வோம் என்று எண்ணியவன் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை கூட கவனிக்காமல் வேகமாக தன் பைக்கை ஓட்டிச் சென்றுவிட்டான்.
இந்த சம்பவத்தை வேந்தன் சொல்லி முடிக்கும் போது அவன் முகம் குற்றவுணர்வில் மூழ்கியிருக்க, மகிழ்
உயிரற்ற பார்வையோடு கிடந்தான்.
அவன் பார்வை கண்ணெதிரே இருக்கும் எதையும் காட்சிபடுத்தவில்லை. சாக்ஷியின் முகத்தை மட்டுமே முன்னிறுத்தியது. அந்த சம்பவத்தை கற்பனை செய்து பார்த்து துடித்து போயிருந்தான்.
'என்னை விடவா உங்களுக்கு அவர் மேல கோபம்' என்று மருத்துவமனையில் அவள் கேட்டதின் அர்த்தத்தை இப்போது புரிந்தது அவனுக்கு.
அவள் உரைத்தது எத்தனை வலி மிகுந்த வார்த்தை. அதனை உணராமல் அவளை கடிந்து கொண்டதை எண்ணி வருத்தமுற்றவன் தன் அவசர புத்தியை தானே சாடிக் கொள்ள, "மகிழ்" என்று வேந்தனின் அழைப்பு அவனை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
"உன்னை கொல்லனுங்கிற அளவுக்கு வெறி எனக்கு வருது... ஆனா முடியல... உன் உயிரை அவ காப்பாத்தியிருக்கா பாரு... அது அதுதான் உனக்கு பெரிய தண்டனை... நீ உயிரோட இருக்கிற ஒவ்வொரு நொடியும் அதை நினைச்சி நினைச்சி குற்றவுணர்வில சாகனும் டா" என்றவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் உரைக்க, அவனின் கோபத்தையும் வலியையும் வேந்தனால் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது.
அதே நேரம் அது சரி செய்ய கூடிய கோபமும் அல்ல என்று அவனுக்கு தெரியும். ஆனால் சாக்ஷியை பார்த்து மன்னிப்பு கோர வேண்டும் என்று அவன் மனம் துடித்து கொண்டிருந்ததும் உண்மை.
அன்று அவனுக்கு விபத்து நிகழ்ந்து எல்லோரும் அவனை அவள் காரில் கிடத்திய போது அறைகுறை மயக்கத்தில்தான் இருந்தான்.
அவள் காரில் அவன் தலையை நிமிர்த்தி பிடித்த போது அவனும் அவள் முகத்தை பார்க்க நேர்ந்தது. அந்த மயக்க நிலையிலும் அவள் முகத்தை அவன் விழிகள் அடையாளம் கண்டுகொண்டன. மறக்க கூடிய முகமா அது.
அதுவும் அவனை பார்த்த நொடி அவள் பார்வையில் கோபம் ஏற்பட்ட போதும் அதனை மறந்து அவன் உயிரை காப்பாற்ற அவள் துடித்ததை இப்போது எண்ணினாலும் அவனுக்கு வலியாயிருந்தது.
சாக்ஷி வாழ்க்கையில் தான் ஏற்படுத்திய குழப்பத்திற்கும் அவளுக்கு செய்த அவமானத்திற்கும் மன்னிப்பு என்ற வார்த்தை ஈடாகாதுதான்.
ஆனால் வாழ்நாட்களை எண்ணி கொண்டிருக்கும் அவனுக்கு அந்த மன்னிப்பை கோர்வதன் மூலமாக லேசாய் ஒரு மனஅமைதி கிட்டும் என்ற நப்பாசைதான்.
மின்சாரத்தை பாய்ச்சியது
ராகவ் சினிமாவில் உடையலங்காரம் செய்யும் கைதேர்ந்த நிபுணர்களை வைத்து ஜென்னியின் திருமண உடைகளை வடிவமைக்க ஏற்பாடு செய்தான்.
அவள் சொன்னபடிதான் உடைகள் எல்லாம் வடிவமைக்கப்பட்டு வந்தன. ஆனால் அவள் ஒன்றுவிடாமல் எல்லா உடைகளையும் குறை சொல்லி அங்குள்ளவர்களை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள்.
அந்த நீளமான வெள்ளை கவுனை அவள் தரையில் தவழ அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்தவள், "ஏதோ மிஸ்ஸிங்... இல்ல ராகவ்" என்று கேட்க, அவன் நொந்துவிட்டான்.
முந்தைய பதிவில் எல்லோருமே சையத்தை பாராட்டியதில் எனக்கு அதீத சந்தோஷம்.
அதே போல் இந்த பதிவுக்கான உங்கள் கருத்துக்களையும் மறவாமல் தந்தருளூங்கள்.
விதி வலியது
"ஏ, கம்மிங் வீக் ராகவோட படம் ரிலீஸாகுது... நம்மெல்லாம் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ போறோம்... என்ஜாய் பன்றோம்" என்று வேந்தனின் நண்பன் சரவணன் சொல்லிக் கொண்டிருந்தான்.
மற்றொரு நண்பன் யோசனையோடு "படம் நல்லா இருக்கும்மா... " என்று சந்தேகித்து கேட்க,
"டே... டைரக்ட்ர் நந்தக்குமார் படம்டா... அதுவும் இல்லாம ராகவோட படமெல்லாம் வரிசையா ஹிட்தான்... இதுவும் ஹிட்டாகும்... ஹிட்டாயிடுச்சுன்னா இது அவனுக்கு ஹேட் டிரிக்" என்று ராகவின் புகழுரையை பாடிக் கொண்டிருக்க அந்த நண்பர் குழு மொத்தமாய் அதற்கு ஆமோதித்தது வேந்தனை தவிர. .அவன் மட்டும் சிகரெட்டை பிடித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான்.
அதை கண்டு கொண்ட சரவணன் "என்ன மச்சான் ? பேசவே மாட்டிற... படத்துக்கு நீ வர்றியா இல்லையா ?!" என்று கேட்கவும் வேந்தன் தன் சிகரெட்டை காலில் மிதித்துவிட்டு நிமிர்ந்து பார்த்து,
"இல்ல சரோ... நான் உடனே கெனடா கிளம்பனும்... ஸோ நான் வர முடியாது" என்க, எல்லோரின் முகமும் வாடிப்போனது.
"என்ன மச்சான் ? இப்படி சொல்ற" என்று ஒருவன் வருத்தமுற, எல்லோருமே வேந்தனிடம் அவனை இன்னும் இருவாரங்கள் தங்கியிருக்க சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவன் வேலை இருப்பதாக சொல்லி திட்டவட்டமாய் மறுத்துவிட்டு, "டைமாச்சு... வீட்டில தேடுவாங்க... நான் கிளம்பிறேன்" என்று புறப்பட, அவனை இன்னும் சிலமணி நேரம் இருக்க சொல்லி அவன் நண்பர்கள் கேட்க, யாருக்கும் அசைந்து கொடுக்காமல் அவன் தன் பைக்கை இயக்கி புறப்பட்டுவிட்டான்.
அவனின் நினைப்பெல்லாம் சாக்ஷியை பற்றியே இருக்க அவர்களோடு அவனால் இயல்பாக கலந்து பேச முடியவில்லை.
அவள் முகம் திரும்ப திரும்ப அவன் கண்முன்னே வந்துப் போய் கொண்டிருந்தது.
போதாக் குறைக்கு அவளை நெருக்கமாய் பார்த்ததிலிருந்து அவன் அவனாக இல்லை. அவளை அடைய வேண்டும் என்ற ஆசை அபிரமிதமாய் பெருகியிருக்க அவள் தன் தம்பியின் காதலுக்கு உரியவள் என்ற ஒரே விஷயம் மட்டும்தான் அவன் தன் எல்லையை மீறவிடாமல் கட்டுக்குள் நிறுத்தியிருந்தது.
ஆனால் அவளை பார்க்க வேண்டுமென்று உள்ளூர தோன்றிய ஆசையில் சாரதா இல்லத்தின் வாசலில் பைக்கோடு சென்று நின்றான்.
ஆனால் அவனின் வெகுநேரம் காத்திருப்பில் ஏமாற்றமே மிஞ்ச, திரும்பி செல்லும் போது அவளே அந்த வழியாக தனித்து நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அது அவனின் அதிர்ஷ்டமா இல்லை அவளின் துரதிஷ்டமா ? அவள் தனிமையில் நடந்து வந்து கொண்டிருக்க அவன் தன் பைக்கை தாறுமாறாக கொண்டுவந்து அவளை வழிறித்து நிற்கவும் துணுக்குற்றாள் சாக்ஷி.
"கொஞ்சங் கூட அறிவில்லயா உங்களுக்கு... இப்படி குறுக்கால வந்துதான் வண்டியை நிறுத்துவாங்களா ?!" என்றவள் கடிந்து கொள்ள அவன் உரக்க சிரித்துவிட்டு
"நானாடி உன் வழில வந்தேன்... நீதான்டி என் வழில வந்த" என்றான்.
வேந்தனின் குரலை அவள் அடையாளம் கண்டுகொண்டாள். முந்தைய நாள் மகிழ் வீட்டில் அவன் நடந்து கொண்ட விதத்தை அவளால் எப்படி மறக்க முடியும்.
அவளுக்குள் படபடப்பு அதிகரிக்க அவனிடம் பேச்சு கொடுக்காமல் அவனை அவள் கடந்து செல்ல முற்பட, எந்த பக்கமும் வழியில்லாமல் அவன் பைக் வழிமறித்தது.
தவிப்போடு "உங்களுக்கு என்ன வேணும் இப்போ ?" என்று கேட்க,
"நீதான் வேணும்" என்க, அவளுக்கு தேகம் முழுக்க பற்றி எறிந்தது போல் இருக்க அவனை சீற்றமாய் பார்த்தவள்,
"சே... நீங்க போய் மகிழோட அண்ணனா ? என்னால நம்பவே முடியல" என்றவள் முகத்தை சுளிக்க,
அவன் புன்னகை ததும்ப "நான் அவனோட அண்ணன் இல்ல... அவன்தான் என்னோட தம்பி... " என்றான்.
அவள் அங்கே நிற்க முடியாமல் செல்ல முயற்சி செய்ய அவன் வழிவிடாமல் தன் பைக்கில் அவளுக்கு தடுப்பணை போட்டபடி "நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போடி" என்றான்.
"என்ன கேட்டீங்க. ?" அவள் புரியாமல் கேட்க,
"என் கூட கெனடா வந்திருன்னு சொன்னேனே மறந்திட்டியா ?"
அவள் எரிச்சலோடு "அன்னைக்கே நான் அதுக்கு பதில் சொல்லிட்டேன்" என்றவள் உரைக்க,
"என்னடி சொன்ன ?" என்று அவன் குழப்பமாய் கேட்க,
"செருப்பு பிஞ்சிருன்னு சொன்னேனே மறந்திட்டிங்களா ?" என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லி நிறுத்த,
அவன் சினத்தோடு பைக்கில் இருந்து இறங்கி வந்து அவளை உரசியபடி "எங்க அடிடி பார்ப்போம்" என்க,
அவளும் சீற்றத்தோடு,"வேண்டாம்... நான் சத்தம் போட்டு கத்தி ஊரை கூட்டுவேன்" என்றவள் எச்சரிக்க அவன் அந்த நொடி பார்வையை சுழற்றினான்.
இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் குடியிருப்புகள் கூட ஒன்றிரடுதான் இருந்தது.
அவன் அலட்சியமாக சிரித்தபடி "கத்துடி... அன்னைக்கு மாறி இல்ல... இங்க உன்னை காப்பாத்த ஒரு ஈ காக்கா கூட இல்ல" என்று அவன் வன்மமாய் உரைக்க, அவளை பயம் ஆட்கொண்டது.
வெலவெலத்து போனவள் சுற்றிலும் ஏதேனும் சத்தம் எழுகிறதா என செவியை தீட்டிக் கொண்டு கேட்க, அவ்வப்போது வேகமாய் சீறிக் கொண்டு கடந்து சென்ற வாகனங்களின் சத்தம் மட்டுமே கேட்டது.
அப்போதுதான் அவள் உணர்ந்தாள். மாயாவை விடுத்து தனியே புறப்பட்டு வந்தது எத்தனை பெரிய தவறு என்று.
மகிழை பற்றிய சிந்தனையில் கோவிலில் வந்து அமர்ந்து தன்னிலை மறந்து கிடந்தவளுக்கு நேரம் கடந்து இருள் அடர்ந்து கொண்டிருப்பதை உணர முடியாமல் போனது.
கோவில் அர்ச்சகரின் குரல் கேட்டு விழிப்படைந்தவள் அங்கிருந்து அப்போதுதான் புறப்பட்டாள்.
கைப்பேசியையும் இல்லத்திலயே மறந்துவிட்டதால் அதுவும் அவளின் நேரத்தை மறக்கடித்திருந்தது. இல்லையெனில் மாயா அவளை அழைத்து இருக்கும் இடத்தை கேட்டிருப்பாளே!
அருகிலிருக்கும் கோவிலுக்குதானே என்று எப்போதும் போல் புறப்பட்டு வந்தவளுக்கு இப்படி வேந்தன் வழிமறித்து தவறாய் நடந்து கொள்வான் என்று முன்னமே தெரியுமா என்ன. ?
விதி வலியது என்பார்களே. அது அவள் விஷயத்தில் ரொம்பவும் பொருந்திப் போனது.
எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டு அவள் அவனை விலகி போக முயற்சி செய்ய அவன் கரம் அவளின் வெற்று இடையை அணைத்து பிடித்தது.
பதறியவள் அவன் கரத்தை இழுத்து தள்ளியபடி "யாராச்சும் காப்பாத்துங்க" என்று சத்தமிட, அவன் சிரித்து கொண்டே அவளை நெருங்கவும் அவள் தன் கையிலிருந்த ஸ்டிக்கால் அவனை தாக்க முற்பட்டாள்.
அந்த ஸ்டிக்கை அவள் வீசியதால் அவனுக்கு அடிப்பட அவளை விட்டு விலகியவன், கோபத்தில் அதனை அவள் கையிலிருந்து பறித்து தூக்கியெறிய அவளும் தடுமாறி கீழே விழ நேர்ந்தது.
அவள் ஸ்டிக் விழுந்த சத்தத்தை கேட்டு அதன் திசையை கணித்தவள் "என் ஸ்டிக்" என்று தட்டுத்தடுமாறி எடுக்க போக, அப்போது யாரும் எதிர்பாராமல் அதிவேகமாய் வந்த கார் அவளை இடித்தது.
தடுமாறி அவள் எழமுடியாமல் ரோட்டில் விழ, அவளை காப்பாற்ற முற்பட்டால் தான்தான் பிரச்சனையில் சிக்கி கொள்வோம் என்று எண்ணியவன் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை கூட கவனிக்காமல் வேகமாக தன் பைக்கை ஓட்டிச் சென்றுவிட்டான்.
இந்த சம்பவத்தை வேந்தன் சொல்லி முடிக்கும் போது அவன் முகம் குற்றவுணர்வில் மூழ்கியிருக்க, மகிழ்
உயிரற்ற பார்வையோடு கிடந்தான்.
அவன் பார்வை கண்ணெதிரே இருக்கும் எதையும் காட்சிபடுத்தவில்லை. சாக்ஷியின் முகத்தை மட்டுமே முன்னிறுத்தியது. அந்த சம்பவத்தை கற்பனை செய்து பார்த்து துடித்து போயிருந்தான்.
'என்னை விடவா உங்களுக்கு அவர் மேல கோபம்' என்று மருத்துவமனையில் அவள் கேட்டதின் அர்த்தத்தை இப்போது புரிந்தது அவனுக்கு.
அவள் உரைத்தது எத்தனை வலி மிகுந்த வார்த்தை. அதனை உணராமல் அவளை கடிந்து கொண்டதை எண்ணி வருத்தமுற்றவன் தன் அவசர புத்தியை தானே சாடிக் கொள்ள, "மகிழ்" என்று வேந்தனின் அழைப்பு அவனை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
"உன்னை கொல்லனுங்கிற அளவுக்கு வெறி எனக்கு வருது... ஆனா முடியல... உன் உயிரை அவ காப்பாத்தியிருக்கா பாரு... அது அதுதான் உனக்கு பெரிய தண்டனை... நீ உயிரோட இருக்கிற ஒவ்வொரு நொடியும் அதை நினைச்சி நினைச்சி குற்றவுணர்வில சாகனும் டா" என்றவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் உரைக்க, அவனின் கோபத்தையும் வலியையும் வேந்தனால் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது.
அதே நேரம் அது சரி செய்ய கூடிய கோபமும் அல்ல என்று அவனுக்கு தெரியும். ஆனால் சாக்ஷியை பார்த்து மன்னிப்பு கோர வேண்டும் என்று அவன் மனம் துடித்து கொண்டிருந்ததும் உண்மை.
அன்று அவனுக்கு விபத்து நிகழ்ந்து எல்லோரும் அவனை அவள் காரில் கிடத்திய போது அறைகுறை மயக்கத்தில்தான் இருந்தான்.
அவள் காரில் அவன் தலையை நிமிர்த்தி பிடித்த போது அவனும் அவள் முகத்தை பார்க்க நேர்ந்தது. அந்த மயக்க நிலையிலும் அவள் முகத்தை அவன் விழிகள் அடையாளம் கண்டுகொண்டன. மறக்க கூடிய முகமா அது.
அதுவும் அவனை பார்த்த நொடி அவள் பார்வையில் கோபம் ஏற்பட்ட போதும் அதனை மறந்து அவன் உயிரை காப்பாற்ற அவள் துடித்ததை இப்போது எண்ணினாலும் அவனுக்கு வலியாயிருந்தது.
சாக்ஷி வாழ்க்கையில் தான் ஏற்படுத்திய குழப்பத்திற்கும் அவளுக்கு செய்த அவமானத்திற்கும் மன்னிப்பு என்ற வார்த்தை ஈடாகாதுதான்.
ஆனால் வாழ்நாட்களை எண்ணி கொண்டிருக்கும் அவனுக்கு அந்த மன்னிப்பை கோர்வதன் மூலமாக லேசாய் ஒரு மனஅமைதி கிட்டும் என்ற நப்பாசைதான்.
மின்சாரத்தை பாய்ச்சியது
ராகவ் சினிமாவில் உடையலங்காரம் செய்யும் கைதேர்ந்த நிபுணர்களை வைத்து ஜென்னியின் திருமண உடைகளை வடிவமைக்க ஏற்பாடு செய்தான்.
அவள் சொன்னபடிதான் உடைகள் எல்லாம் வடிவமைக்கப்பட்டு வந்தன. ஆனால் அவள் ஒன்றுவிடாமல் எல்லா உடைகளையும் குறை சொல்லி அங்குள்ளவர்களை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள்.
அந்த நீளமான வெள்ளை கவுனை அவள் தரையில் தவழ அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்தவள், "ஏதோ மிஸ்ஸிங்... இல்ல ராகவ்" என்று கேட்க, அவன் நொந்துவிட்டான்.