Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
பேரிடியாய் இறங்கியது
மகிழ் டேவிடை சந்திக்க அவனின் அலுவலக அறைக்குள் வர அனுமதி கோரவும் "எஸ் கம்மின்" என்றான் டேவிட்.
டேவிடிடம் பேசிவிட வேண்டும் என்று ஒருவாரமாக முயன்று அவனுக்கு இப்போதுதான் அதற்கான வாய்ப்புகிட்டியது.
வேந்தன் சொன்னவற்றை எல்லாம் கேட்ட பின்னர் மகிழின் மனநிலை இன்னும் மோசமாகியிருந்தது.
சாக்ஷி ஏன் அன்றே இது பற்றி தன்னிடம் சொல்லவில்லை என்ற கேள்வியும், அவள் இன்னும் என்னவெல்லாம் மறைத்திருக்கிறாளோ என்ற யோசனையும் அவனை தவிப்புற செய்திருக்க, அவளை அன்றி வேறொரு சிந்தனையே இல்லை அவனுக்கு.
அன்று அவள் வேண்டுமென்றே பேச்சை திசைதிருப்பி தன்னை கோபமூட்டியிருக்கிறாளோ என்று எண்ணத் தோன்றியது.
அவள் அந்தளவுக்கு ஒருவிஷயத்தை மறைக்க முற்படுவது அவனுக்குள் சந்தேகத்தையும் பயத்தையும் பெருக்கியது.
மனம் போன போக்கில் அவன் சிந்தனை வரையறையின்றி பயணிக்க,
அவளுக்கு தவறாக அஎதுவும் நேர்ந்திருக்க கூடாதே என்கிற கவலை அவனை எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட விடாமல் முடக்கியிருந்தது.
இறுதியாய் உண்மையை தெரிந்து கொள்ள டேவிடை சந்திக்க முடிவெடுத்தவன், பிராயத்தனப்பட்டு அவனை பார்க்க அனுமதியும் பெற்றான்.
மகிழ் டேவிடின் முன்னிலையில் ஒரு வித அச்சத்தோடு நிற்க "உட்காருங்க மகிழ்... நமக்குள்ள என்ன பாஃர்மாலட்டி ?" என்று டேவிட் உரைத்து புன்முறுவல் செய்யவும்,
"நீங்க எனக்கு பாஸ்... பாஃர்மலிட்டி பார்க்காம எப்படி ?" என்றவன் கேட்க,
அவன் சிரித்து கொண்டே "நான் உங்களை ப்ரண்டாதான் நினைக்கிறேன் மகிழ்" என்றவன் மேலும் "ஹ்ம்ம்... நீங்க என்கிட்ட பெர்ஸன்லா பேசினுமா... இல்லை அபிஃஷியலாவா ?!" என்று யோசனையோடு கேட்க மகிழ் நிதானித்து "பெர்ஸனலாதான்" என்றான்.
"அப்போ ஆபிஸ்ல வேண்டாம்... நம்ம ஈவனிங் வெளியே போய் பேசுவோமே" என்று அவன் சொல்ல, "ஒகே சார்" என்று தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்.
********
வாஸனின் வீடு.
மனோ வாஸனிடம் வகையாய் சிக்கிக் கொண்டிருந்தான்.
அவன் அச்சத்தில் நடுக்கமுற, வாஸன் கொந்தளிப்போடு காட்சியளித்தார்.
"யாரை கேட்டிறா கல்யாண ஏற்பாடெல்லாம் நடக்குது ? அதுவும் கிறிஸ்துவ முறைப்படி நடக்க போகுதாம்" என்றவர் கேட்டதும்,
"பாஸ்தான்... ஜென்னி மேடம் விருப்பம்னு" என்று தயங்கிய பார்வையோடு சொல்லி கொண்டிருக்கும் போதே, "நடக்காதிரா... இந்த கல்யாணத்தை நான் நடக்க விடாம மாட்டேன்... " என்று அவர் ரௌத்திரமாய் உரைத்தார்.
அப்போது ஆங்காரமாக "அப்படி ஏதாச்சும் பண்ணி வைச்சீங்க... நான் மனிஷனாவே இருக்க மாட்டேன்" என்று ராகவ் சொல்லியபடி வீட்டிற்குள் நுழைய, மனோவிற்கு நிம்மதி பெருமூச்சுவந்தது.
தப்பி பிழைத்தோம் என்று அவன் எண்ணி கொண்டிருக்க,
ராகவ் "வா மனோ போலாம்" என்றழைத்தான்.
வாஸனுக்கு கோபம் அதிகரித்த போதும் சற்று அமர்த்தலாகவே மகனிடம் "நீ அவசரபடிற ராகவ்... பெரிய பிரச்சனையில சிக்க போற" என்றார்.
"பிரச்சனையா ?!" என்றவன் எகத்தாளமாய் சிரித்துவிட்டு "எனக்கு பிரச்சனை கொடுக்கிற ஒரே ஆள் நீங்க மட்டும்தான்" என்றான் ராகவ்.
வாஸன் முறைப்போடு "அந்த ஜென்னித்தா உன்னை முட்டாளாக்கிறா ராகவ்... நீ நினைக்கிற மாதிரி விக்டரோட சொந்த மக இல்ல அவ" என்றவர் சொல்ல,
ராகவ் அவர் வார்த்தையை நம்பாமல் எள்ளலாய் நகைத்தபடி "இப்படி எல்லாம் சொல்லி கல்யாணத்தை நிறுத்திறதுக்கு ஐடியாவா ?!" என்றதும் அவர் சீற்றத்தோடு அவர் வைத்திருந்த சில போட்டோக்களை தூக்கி அவன் மேல் எறிந்தார்.
ராகவ் புரியாமல் அவற்றை எல்லாம் பார்க்க, அதில் வீணையோடு அமர்ந்திருந்தவளை கூர்ந்து பார்த்து "ஜென்னி" என்க,
அவன் தந்தை வாஸன் "அவ பெயர் ஜென்னி இல்லை... சாக்ஷி" என்றார்.
அவன் தன் தந்தையை குழப்பமாய் நோக்க, மனோவும் அதிர்ச்சியோடு அந்த போட்டோக்களை பார்த்தான்.
இதே தோற்றத்தில் ஜென்னியை சில நாட்கள் முன்பு பார்த்த நினைவு இருந்தது ராகவிற்கு. ஆனால் அதற்கு முன்னரே அவளை எங்கேயோ பார்த்த நினைவும் அவனின் நினைவில் ஒளிந்து கொண்டிருந்தது. எங்கே எப்போது என்று அவனால் நினைவுப்படுத்தி கொள்ள முடியவில்லை.
அவன் அந்த யோசனையில் சிலையாய் நின்றுவிட வாஸன் தன் மகனிடம் "உன்னை அவ முட்டாளாக்கிட்டிருக்கா ராகவ்... ஆனா ஏன் எதுக்குன்னுதான் எனக்கு தெரியல" என்றவர் சொல்ல அவன் பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்த ஒரு போட்டோவை தன் கையில் எடுத்து கொண்டு வெளியேறினான்.
அவனால் அவர் சொன்னதை எல்லாம் முழுவதுமாய் நம்ப முடியவில்லை.. அந்தளவுக்கு அவளை நேசித்துவிட்டேன்.
ஆனால் அவள் தன்னை நேசிக்கிறாளா ? இந்த கேள்வியை தனக்குத்தானே கேட்டு கொண்டவனுக்கு உண்மையிலயே அதனை உறுதிப்படுத்தி கொள்ள முடியவில்லை.
அவளை தன்னவளாக மாற்றி கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் கண்மூடிதனமாய் இருந்துவிட்டோமோ என்று எண்ணமுற்றவனுக்கு அவனை சிந்திக்கவிடாமல் மறக்கடித்திருந்த
காதலென்ற மோகத்திரை மெல்ல விலகி கொண்டிருந்தது.
*******
டேவிடின் கார் சாரதா இல்லத்தின் வாசலில் நிற்க, மகிழ் குழப்பமானான்.
அவன் இறங்காமல் தயக்கமாக பார்க்க,
"என்ன மகிழ் யோசிக்கிறீங்க... இறங்குங்க" என்றான் டேவிட்
அவன் தவிப்போடு "இங்கே எதுக்கு ?" என்று கேட்கவும் அவன் புன்னகையித்துவிட்டு,
"பழக்கப்படாத இடத்துக்கு வந்த மாதிரி இப்படி யோசிக்கிறீங்க" என்று கேள்வி எழுப்பியவன் மேலும் "நீங்க இறங்கி உள்ளே போங்க மகிழ்... நான் காரை பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்" என்க,
மகிழுக்கு வேறுவழி இருக்கவில்லை. உள்ளே சென்றே தீர வேண்டும் என்ற இக்கட்டோடு அவன் நுழைய காவலாளி முதற்கொண்டு அங்குள்ள குழந்தைகள் வரை அன்பாய் அவனை நலம் விசாரித்து அவனின் இறுக்கமான மனநிலையை தளர்த்திவிட்டிருந்தனர்.
அதற்குள் அவன் வந்திருக்கும் செய்தி மாயாவின் செவிக்கு எட்டியிருக்க, கணவனை பார்க்கும் ஆர்வத்தில் அவசரமாய் ஓடி வந்தவள் மகிழை நேரெதிரே பார்த்தபடி நின்றுவிட்டாள்.
உடல் இளைத்து வாட்டமுற்றிருந்த அவளின் தோற்றம் அவன் மனதை ஏதோ செய்ய அவள் தாமதிக்காமல் அவனை அவள் இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.
அவளுக்குள் இருந்த ஏக்கத்தையும் தாபத்தையும் அவளின் தழுவலில் அவன் நன்காகவே உணர்ந்து கொண்டான்.
ஜென்னி ராகவின் கல்யாணம் பற்றிய செய்தி பரவலாய் பேசப்பட்டு கொண்டிருக்க, மகிழை தான் தவறாக எண்ணிக் கொண்டுவிட்டோமோ என்று வேதனையுற தோன்றியது அவளுக்கு.
அவன் இல்லாத அந்த நாட்கள் அவனுடன் இருந்த நாட்களை மட்டுமே நினைவுப்படுத்த அதீத காதலில் அவள் செய்த தவறுதான் அது.
அவற்றை எல்லாம் தாண்டி அவனை அப்படி அணைத்து கொள்ள வேறொரு காரணமும் இருந்தது. அவனுக்காக ஏங்கி தவித்த தவிப்போடு அவனின் உயிரை சுமக்கின்ற பூரிப்பும் கூட சேர்ந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்.
இதை உணராத மகிழ் அவளை விலக்கிவிட்டு "மாயா ப்ளீஸ்... நான் என் பாஸ் டேவிட் சாருக்காக இங்கே வந்திருக்கேன்" என்றவன்.
"அப்போ என்னை பார்க்க வரலயா ?!" ஏமாற்றமாய் மாறிய அவளின் விழிகளை நேர்கொண்டு பார்க்காமல் "இல்லை" என்க, அவள் மனமுடைந்து கண்ணீரோடு அங்கிருந்து அகன்றுவிட, அவளின் வலி மிகுந்த பார்வை அவனின் மனதையும் வேதனையில் மூழ்கடித்தது.
பின்னோடு நடந்து வந்த டேவிட் அவனின் முகமாற்றங்களை பார்த்து "என்னாச்சு மகிழ் ?" என்று வினவ, அவன் ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தான்.
பின்னர் டேவிடும் மகிழும் முன்னேறி மாயாவின் வீட்டிற்குள் நுழைய,
யாழ்முகைக்கு மகிழை பார்த்ததும் உள்ளம் இன்பத்தில் திளைத்திட உடன் டேவிட் வருவதை பார்த்து தன் மனஉணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டு இருவரையும் வரவேற்று முகப்பு அறையில் அமர வைத்தார்.
மகிழ் அவரிடம் "இவர்தான் எங்க சேனல் எம்.டி" என்று அறிமுகம் செய்யவும் யாழ்முகையும் மாதவனும் ஆச்சரயத்தில் மூழ்கினர்.
டேவிட் அவர்களை நலம் விசாரித்து இயல்பாக பேச்சு கொடுக்க, அவனின் பேச்சிலும் நடவடிக்கையிலும் வெகுவாய் ஈர்க்கப்பட்டனர்.
டேவிட் பேச்சு வாக்கில் "மாயா எங்கே ?" என்று கேட்க மகிழின் முகத்தில் அத்தனை தவிப்பு,
யாழ்முகை மகளிடம் விஷயத்தை சொல்ல, அவள் மறுப்புதெரிவிக்க எண்ணினாலும் டேவிட் அழைக்கும் போது அப்படி தவிர்க்க முடியவில்லை.
டேவிடுடனான முதல் சந்திப்பில் அவன் தன்னை எத்தனை மரியாதையாக நடத்தினான் என்பதை அந்த நொடி நினைவுகூர்ந்தவள் முகத்தை துடைத்து கொண்டு அவள் அழுத சுவடை மறைத்தபடி வெளியே வந்து அவனை நலம் விசாரித்தாள்.
அதோடு அவன் தந்த நன்கொடை பணத்தை பற்றிய விவரங்களை கேட்க வந்தானோ என எண்ணி அதனை பார்வையற்றவர்களின் சிகிச்சைக்காக பயண்படுத்திய விவரங்களை கூறியவள் அவனிடம் "வெயிட் பண்ணுங்க சார்... நான் போய் பில்ஸ் எல்லாம் எடூத்துட்டு வர்றேன்" என்று உள்ளேசெல்ல போக,
"மாயா வெயிட்... நான் அதுக்காக வரல" என்றான்.
அவள் யோசனைகுறியோடு அவனை பார்க்க, "எனக்கு சாக்ஷியோட திங்க்ஸ் எல்லாம் பார்க்கனும்... முடியுமா ?!" என்று கேட்க, மகிழுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
காரில் வரும் போதே மகிழ் சாக்ஷிக்கு நிகழ்ந்தது என்ன என்று கேள்வி எழுப்ப "சொல்றேன் மகிழ்... நாம போக வேண்டிய இடத்துக்கு போன பிறகு சொல்றேனே" என்றவன் சாரதா இல்லத்திற்கு அழைத்துவந்து அவன் மனைவி முன்னிலையில் அமர்த்தி சங்கடத்தில் ஆழ்த்துவான் என்று எதிர்பார்க்கவில்லை.
அதோடு அல்லாமல் அவன் சாக்ஷியின் பொருட்களை பார்க்க வேண்டுமென்று சொல்ல அவனுக்கு உள்ளூர கோபத்தை ஏற்படுத்த, மாதவனும் யாழ்முகையும் நடப்பவற்றை கவனித்து வியப்படைந்தனர்.
அங்கே சூழ்ந்து கொண்ட மௌனத்தை கலைத்தபடி "ஏன் மாயா யோசிக்கிறீங்க? முடியாதா ?" என்று ஏக்கப்பார்வையோடு டேவிட் கேட்க, அவள் தன் கணவனை ஏறிட்டாள்.
சாக்ஷியின் பொருட்களை எல்லாம் தன் தோழியின் நினைவாக பாதுகாத்து வைத்தது அவளாக இருந்தாலும் அவற்றின் மீது பித்து பிடித்திருந்தவன் அவன்தானே !
மகிழ் மாயாவின் பார்வை புரிந்து அவனே டேவிடிடம் "பார்க்கலாம்... வாங்க" என்று வழிகாட்டி அழைத்து கொண்டு போக டேவிட் புன்முறுவலோடு "நீங்களும் வாங்க மாயா" என்றழைத்தான்.
சாக்ஷியின் அறையை பார்த்து டேவிட் மெய்மறந்து ரசித்திருந்தான். ரொம்பவும் சிறியதான அறைதான் எனினும் அது அத்தனை சீராக அடுக்கிவைக்கப்பட்டிருக்க, நிறைய பாடல் சீடி, அதுவும் பாரதியார் கவிதைகள், க்ளாஸிக்கல் மியூசிக் என ஒவ்வொன்றும் தனித்தனியாக வரிசையாய் வைக்கப்பட்டிருந்தன.
அவன் உண்மையிலயே தேடிவந்தது சாக்ஷியின் வீணையைதான்.
அதனை பார்த்த சிலாகிப்பில் தொட்டு அந்த வீணையின் தந்தங்களை மிதமாக வருடியவன் "இந்த வீணையை எனக்கு தர மூடியுமா மாயா ?!" என்று கேட்க இருவரும் ஒரு சேர அதிர்ந்தனர்.
மாயா இறுக்கமான பார்வையோடு "நீங்க இதை கேட்கிறீங்களா இல்ல சாக்ஷி கேட்டாளா ?" என்றவள் வினவ,
"அவளுக்காகதான் நான் கேட்கிறேன்" என்றான்.
"நீங்க யாரு அவளுக்கு ?" பளிச்சென்று வெளிப்பட்டது மாயாவிடம் இருந்து அந்த கேள்வி.
மகிழ் டேவிடை சந்திக்க அவனின் அலுவலக அறைக்குள் வர அனுமதி கோரவும் "எஸ் கம்மின்" என்றான் டேவிட்.
டேவிடிடம் பேசிவிட வேண்டும் என்று ஒருவாரமாக முயன்று அவனுக்கு இப்போதுதான் அதற்கான வாய்ப்புகிட்டியது.
வேந்தன் சொன்னவற்றை எல்லாம் கேட்ட பின்னர் மகிழின் மனநிலை இன்னும் மோசமாகியிருந்தது.
சாக்ஷி ஏன் அன்றே இது பற்றி தன்னிடம் சொல்லவில்லை என்ற கேள்வியும், அவள் இன்னும் என்னவெல்லாம் மறைத்திருக்கிறாளோ என்ற யோசனையும் அவனை தவிப்புற செய்திருக்க, அவளை அன்றி வேறொரு சிந்தனையே இல்லை அவனுக்கு.
அன்று அவள் வேண்டுமென்றே பேச்சை திசைதிருப்பி தன்னை கோபமூட்டியிருக்கிறாளோ என்று எண்ணத் தோன்றியது.
அவள் அந்தளவுக்கு ஒருவிஷயத்தை மறைக்க முற்படுவது அவனுக்குள் சந்தேகத்தையும் பயத்தையும் பெருக்கியது.
மனம் போன போக்கில் அவன் சிந்தனை வரையறையின்றி பயணிக்க,
அவளுக்கு தவறாக அஎதுவும் நேர்ந்திருக்க கூடாதே என்கிற கவலை அவனை எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட விடாமல் முடக்கியிருந்தது.
இறுதியாய் உண்மையை தெரிந்து கொள்ள டேவிடை சந்திக்க முடிவெடுத்தவன், பிராயத்தனப்பட்டு அவனை பார்க்க அனுமதியும் பெற்றான்.
மகிழ் டேவிடின் முன்னிலையில் ஒரு வித அச்சத்தோடு நிற்க "உட்காருங்க மகிழ்... நமக்குள்ள என்ன பாஃர்மாலட்டி ?" என்று டேவிட் உரைத்து புன்முறுவல் செய்யவும்,
"நீங்க எனக்கு பாஸ்... பாஃர்மலிட்டி பார்க்காம எப்படி ?" என்றவன் கேட்க,
அவன் சிரித்து கொண்டே "நான் உங்களை ப்ரண்டாதான் நினைக்கிறேன் மகிழ்" என்றவன் மேலும் "ஹ்ம்ம்... நீங்க என்கிட்ட பெர்ஸன்லா பேசினுமா... இல்லை அபிஃஷியலாவா ?!" என்று யோசனையோடு கேட்க மகிழ் நிதானித்து "பெர்ஸனலாதான்" என்றான்.
"அப்போ ஆபிஸ்ல வேண்டாம்... நம்ம ஈவனிங் வெளியே போய் பேசுவோமே" என்று அவன் சொல்ல, "ஒகே சார்" என்று தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்.
********
வாஸனின் வீடு.
மனோ வாஸனிடம் வகையாய் சிக்கிக் கொண்டிருந்தான்.
அவன் அச்சத்தில் நடுக்கமுற, வாஸன் கொந்தளிப்போடு காட்சியளித்தார்.
"யாரை கேட்டிறா கல்யாண ஏற்பாடெல்லாம் நடக்குது ? அதுவும் கிறிஸ்துவ முறைப்படி நடக்க போகுதாம்" என்றவர் கேட்டதும்,
"பாஸ்தான்... ஜென்னி மேடம் விருப்பம்னு" என்று தயங்கிய பார்வையோடு சொல்லி கொண்டிருக்கும் போதே, "நடக்காதிரா... இந்த கல்யாணத்தை நான் நடக்க விடாம மாட்டேன்... " என்று அவர் ரௌத்திரமாய் உரைத்தார்.
அப்போது ஆங்காரமாக "அப்படி ஏதாச்சும் பண்ணி வைச்சீங்க... நான் மனிஷனாவே இருக்க மாட்டேன்" என்று ராகவ் சொல்லியபடி வீட்டிற்குள் நுழைய, மனோவிற்கு நிம்மதி பெருமூச்சுவந்தது.
தப்பி பிழைத்தோம் என்று அவன் எண்ணி கொண்டிருக்க,
ராகவ் "வா மனோ போலாம்" என்றழைத்தான்.
வாஸனுக்கு கோபம் அதிகரித்த போதும் சற்று அமர்த்தலாகவே மகனிடம் "நீ அவசரபடிற ராகவ்... பெரிய பிரச்சனையில சிக்க போற" என்றார்.
"பிரச்சனையா ?!" என்றவன் எகத்தாளமாய் சிரித்துவிட்டு "எனக்கு பிரச்சனை கொடுக்கிற ஒரே ஆள் நீங்க மட்டும்தான்" என்றான் ராகவ்.
வாஸன் முறைப்போடு "அந்த ஜென்னித்தா உன்னை முட்டாளாக்கிறா ராகவ்... நீ நினைக்கிற மாதிரி விக்டரோட சொந்த மக இல்ல அவ" என்றவர் சொல்ல,
ராகவ் அவர் வார்த்தையை நம்பாமல் எள்ளலாய் நகைத்தபடி "இப்படி எல்லாம் சொல்லி கல்யாணத்தை நிறுத்திறதுக்கு ஐடியாவா ?!" என்றதும் அவர் சீற்றத்தோடு அவர் வைத்திருந்த சில போட்டோக்களை தூக்கி அவன் மேல் எறிந்தார்.
ராகவ் புரியாமல் அவற்றை எல்லாம் பார்க்க, அதில் வீணையோடு அமர்ந்திருந்தவளை கூர்ந்து பார்த்து "ஜென்னி" என்க,
அவன் தந்தை வாஸன் "அவ பெயர் ஜென்னி இல்லை... சாக்ஷி" என்றார்.
அவன் தன் தந்தையை குழப்பமாய் நோக்க, மனோவும் அதிர்ச்சியோடு அந்த போட்டோக்களை பார்த்தான்.
இதே தோற்றத்தில் ஜென்னியை சில நாட்கள் முன்பு பார்த்த நினைவு இருந்தது ராகவிற்கு. ஆனால் அதற்கு முன்னரே அவளை எங்கேயோ பார்த்த நினைவும் அவனின் நினைவில் ஒளிந்து கொண்டிருந்தது. எங்கே எப்போது என்று அவனால் நினைவுப்படுத்தி கொள்ள முடியவில்லை.
அவன் அந்த யோசனையில் சிலையாய் நின்றுவிட வாஸன் தன் மகனிடம் "உன்னை அவ முட்டாளாக்கிட்டிருக்கா ராகவ்... ஆனா ஏன் எதுக்குன்னுதான் எனக்கு தெரியல" என்றவர் சொல்ல அவன் பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்த ஒரு போட்டோவை தன் கையில் எடுத்து கொண்டு வெளியேறினான்.
அவனால் அவர் சொன்னதை எல்லாம் முழுவதுமாய் நம்ப முடியவில்லை.. அந்தளவுக்கு அவளை நேசித்துவிட்டேன்.
ஆனால் அவள் தன்னை நேசிக்கிறாளா ? இந்த கேள்வியை தனக்குத்தானே கேட்டு கொண்டவனுக்கு உண்மையிலயே அதனை உறுதிப்படுத்தி கொள்ள முடியவில்லை.
அவளை தன்னவளாக மாற்றி கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் கண்மூடிதனமாய் இருந்துவிட்டோமோ என்று எண்ணமுற்றவனுக்கு அவனை சிந்திக்கவிடாமல் மறக்கடித்திருந்த
காதலென்ற மோகத்திரை மெல்ல விலகி கொண்டிருந்தது.
*******
டேவிடின் கார் சாரதா இல்லத்தின் வாசலில் நிற்க, மகிழ் குழப்பமானான்.
அவன் இறங்காமல் தயக்கமாக பார்க்க,
"என்ன மகிழ் யோசிக்கிறீங்க... இறங்குங்க" என்றான் டேவிட்
அவன் தவிப்போடு "இங்கே எதுக்கு ?" என்று கேட்கவும் அவன் புன்னகையித்துவிட்டு,
"பழக்கப்படாத இடத்துக்கு வந்த மாதிரி இப்படி யோசிக்கிறீங்க" என்று கேள்வி எழுப்பியவன் மேலும் "நீங்க இறங்கி உள்ளே போங்க மகிழ்... நான் காரை பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்" என்க,
மகிழுக்கு வேறுவழி இருக்கவில்லை. உள்ளே சென்றே தீர வேண்டும் என்ற இக்கட்டோடு அவன் நுழைய காவலாளி முதற்கொண்டு அங்குள்ள குழந்தைகள் வரை அன்பாய் அவனை நலம் விசாரித்து அவனின் இறுக்கமான மனநிலையை தளர்த்திவிட்டிருந்தனர்.
அதற்குள் அவன் வந்திருக்கும் செய்தி மாயாவின் செவிக்கு எட்டியிருக்க, கணவனை பார்க்கும் ஆர்வத்தில் அவசரமாய் ஓடி வந்தவள் மகிழை நேரெதிரே பார்த்தபடி நின்றுவிட்டாள்.
உடல் இளைத்து வாட்டமுற்றிருந்த அவளின் தோற்றம் அவன் மனதை ஏதோ செய்ய அவள் தாமதிக்காமல் அவனை அவள் இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.
அவளுக்குள் இருந்த ஏக்கத்தையும் தாபத்தையும் அவளின் தழுவலில் அவன் நன்காகவே உணர்ந்து கொண்டான்.
ஜென்னி ராகவின் கல்யாணம் பற்றிய செய்தி பரவலாய் பேசப்பட்டு கொண்டிருக்க, மகிழை தான் தவறாக எண்ணிக் கொண்டுவிட்டோமோ என்று வேதனையுற தோன்றியது அவளுக்கு.
அவன் இல்லாத அந்த நாட்கள் அவனுடன் இருந்த நாட்களை மட்டுமே நினைவுப்படுத்த அதீத காதலில் அவள் செய்த தவறுதான் அது.
அவற்றை எல்லாம் தாண்டி அவனை அப்படி அணைத்து கொள்ள வேறொரு காரணமும் இருந்தது. அவனுக்காக ஏங்கி தவித்த தவிப்போடு அவனின் உயிரை சுமக்கின்ற பூரிப்பும் கூட சேர்ந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்.
இதை உணராத மகிழ் அவளை விலக்கிவிட்டு "மாயா ப்ளீஸ்... நான் என் பாஸ் டேவிட் சாருக்காக இங்கே வந்திருக்கேன்" என்றவன்.
"அப்போ என்னை பார்க்க வரலயா ?!" ஏமாற்றமாய் மாறிய அவளின் விழிகளை நேர்கொண்டு பார்க்காமல் "இல்லை" என்க, அவள் மனமுடைந்து கண்ணீரோடு அங்கிருந்து அகன்றுவிட, அவளின் வலி மிகுந்த பார்வை அவனின் மனதையும் வேதனையில் மூழ்கடித்தது.
பின்னோடு நடந்து வந்த டேவிட் அவனின் முகமாற்றங்களை பார்த்து "என்னாச்சு மகிழ் ?" என்று வினவ, அவன் ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தான்.
பின்னர் டேவிடும் மகிழும் முன்னேறி மாயாவின் வீட்டிற்குள் நுழைய,
யாழ்முகைக்கு மகிழை பார்த்ததும் உள்ளம் இன்பத்தில் திளைத்திட உடன் டேவிட் வருவதை பார்த்து தன் மனஉணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டு இருவரையும் வரவேற்று முகப்பு அறையில் அமர வைத்தார்.
மகிழ் அவரிடம் "இவர்தான் எங்க சேனல் எம்.டி" என்று அறிமுகம் செய்யவும் யாழ்முகையும் மாதவனும் ஆச்சரயத்தில் மூழ்கினர்.
டேவிட் அவர்களை நலம் விசாரித்து இயல்பாக பேச்சு கொடுக்க, அவனின் பேச்சிலும் நடவடிக்கையிலும் வெகுவாய் ஈர்க்கப்பட்டனர்.
டேவிட் பேச்சு வாக்கில் "மாயா எங்கே ?" என்று கேட்க மகிழின் முகத்தில் அத்தனை தவிப்பு,
யாழ்முகை மகளிடம் விஷயத்தை சொல்ல, அவள் மறுப்புதெரிவிக்க எண்ணினாலும் டேவிட் அழைக்கும் போது அப்படி தவிர்க்க முடியவில்லை.
டேவிடுடனான முதல் சந்திப்பில் அவன் தன்னை எத்தனை மரியாதையாக நடத்தினான் என்பதை அந்த நொடி நினைவுகூர்ந்தவள் முகத்தை துடைத்து கொண்டு அவள் அழுத சுவடை மறைத்தபடி வெளியே வந்து அவனை நலம் விசாரித்தாள்.
அதோடு அவன் தந்த நன்கொடை பணத்தை பற்றிய விவரங்களை கேட்க வந்தானோ என எண்ணி அதனை பார்வையற்றவர்களின் சிகிச்சைக்காக பயண்படுத்திய விவரங்களை கூறியவள் அவனிடம் "வெயிட் பண்ணுங்க சார்... நான் போய் பில்ஸ் எல்லாம் எடூத்துட்டு வர்றேன்" என்று உள்ளேசெல்ல போக,
"மாயா வெயிட்... நான் அதுக்காக வரல" என்றான்.
அவள் யோசனைகுறியோடு அவனை பார்க்க, "எனக்கு சாக்ஷியோட திங்க்ஸ் எல்லாம் பார்க்கனும்... முடியுமா ?!" என்று கேட்க, மகிழுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
காரில் வரும் போதே மகிழ் சாக்ஷிக்கு நிகழ்ந்தது என்ன என்று கேள்வி எழுப்ப "சொல்றேன் மகிழ்... நாம போக வேண்டிய இடத்துக்கு போன பிறகு சொல்றேனே" என்றவன் சாரதா இல்லத்திற்கு அழைத்துவந்து அவன் மனைவி முன்னிலையில் அமர்த்தி சங்கடத்தில் ஆழ்த்துவான் என்று எதிர்பார்க்கவில்லை.
அதோடு அல்லாமல் அவன் சாக்ஷியின் பொருட்களை பார்க்க வேண்டுமென்று சொல்ல அவனுக்கு உள்ளூர கோபத்தை ஏற்படுத்த, மாதவனும் யாழ்முகையும் நடப்பவற்றை கவனித்து வியப்படைந்தனர்.
அங்கே சூழ்ந்து கொண்ட மௌனத்தை கலைத்தபடி "ஏன் மாயா யோசிக்கிறீங்க? முடியாதா ?" என்று ஏக்கப்பார்வையோடு டேவிட் கேட்க, அவள் தன் கணவனை ஏறிட்டாள்.
சாக்ஷியின் பொருட்களை எல்லாம் தன் தோழியின் நினைவாக பாதுகாத்து வைத்தது அவளாக இருந்தாலும் அவற்றின் மீது பித்து பிடித்திருந்தவன் அவன்தானே !
மகிழ் மாயாவின் பார்வை புரிந்து அவனே டேவிடிடம் "பார்க்கலாம்... வாங்க" என்று வழிகாட்டி அழைத்து கொண்டு போக டேவிட் புன்முறுவலோடு "நீங்களும் வாங்க மாயா" என்றழைத்தான்.
சாக்ஷியின் அறையை பார்த்து டேவிட் மெய்மறந்து ரசித்திருந்தான். ரொம்பவும் சிறியதான அறைதான் எனினும் அது அத்தனை சீராக அடுக்கிவைக்கப்பட்டிருக்க, நிறைய பாடல் சீடி, அதுவும் பாரதியார் கவிதைகள், க்ளாஸிக்கல் மியூசிக் என ஒவ்வொன்றும் தனித்தனியாக வரிசையாய் வைக்கப்பட்டிருந்தன.
அவன் உண்மையிலயே தேடிவந்தது சாக்ஷியின் வீணையைதான்.
அதனை பார்த்த சிலாகிப்பில் தொட்டு அந்த வீணையின் தந்தங்களை மிதமாக வருடியவன் "இந்த வீணையை எனக்கு தர மூடியுமா மாயா ?!" என்று கேட்க இருவரும் ஒரு சேர அதிர்ந்தனர்.
மாயா இறுக்கமான பார்வையோடு "நீங்க இதை கேட்கிறீங்களா இல்ல சாக்ஷி கேட்டாளா ?" என்றவள் வினவ,
"அவளுக்காகதான் நான் கேட்கிறேன்" என்றான்.
"நீங்க யாரு அவளுக்கு ?" பளிச்சென்று வெளிப்பட்டது மாயாவிடம் இருந்து அந்த கேள்வி.