அந்த கணமே அவளிடம் நெருக்கமாய் வந்தவன் "நான் உன்னை கல்யாண பண்ணிக்கிறேன் பேபி... அதை விட பெட்டர் காம்பென்ஸேஷன் என்ன இருக்க முடியும் ?!" என்றவன் சொல்லும் போதே அவள் மீதான காமவெறி இன்னும் அவனுக்குள் தேங்கி நின்று கொண்டிருப்பதை அவன் பார்வை பளிச்சிட்டது.
அவள் அந்த நொடி பயங்கரமாய் சிரிக்க, அவன் முகம் வெறுப்பாய் மாற தன் சிரிப்பை பிராயத்தனப்பட்டு கட்டுபடுத்தியவள்,
"என்ன ராகவ் நீ ?... பிராக்டிக்லா கேளுன்னு சொல்லிட்டு நீ இப்படி ஒரு மொக்கை கம்பன்ஸேஷனை கொடுக்கிறேங்கிற... கெடுத்தவனையே கல்யாணம் பண்ணிக்கிறதெல்லாம் ஓல்ட் ஸ்டைல்" என்றவள் சொல்ல,
அவளின் பேச்சும் செயலும் அவனுக்கு பிடிபடவேயில்லை. மீண்டும் மீண்டும் அவள் வலையில் தான் சிக்கி கொள்கிறோமோ என்று அவன் யோசித்திருக்க, அவள் அவனிடம் இருந்து நகர்ந்து வந்து
அவன் படுக்கையில் கால் மீது கால் போட்டு அமர்ந்தவள் "ரொம்ப யோசிக்காதே ராகவ்... நீ எனக்கு என்ன மாதிரியான கம்பேன்ஸேஷன் கொடுக்கனும்ங்கிறதை நான் எப்பவோ டிசைட் பண்ணிட்டேன்..." என்றாள்.
அவன் மனம் பதட்டத்தை ஆட்கொள்ள, "என்னடி அது?" என்றவன் தவிப்புற கேட்க,
"சொன்னா எப்ஃக்ட் இருக்காது... அதை பிக்சைரஸ் பண்ணாதான் நல்லா இருக்கும்" என்று அவள் அந்த அறையை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு டிவி ரிமோட்டை எடுத்து ஆன் செய்தாள்.
அவன் நகத்தை கடித்து கொண்டு என்னவென்று யூகிக்க முடியாமல் விழிகளை கூர்மையாய் மாற்றி கொண்டு பதட்டத்தின் உச்சத்தில் நிற்க, ஆன் செய்த டிவியில் ஜே செய்திகளில் ஜென்னி பேசி கொண்டிருந்தது ஒளிபரப்பானது.
சேனலுக்கு கீழே 'பிரபல நடிகர் ராகவை திருமணம் செய்ய விருப்பமில்லை - ஜென்னித்தா பேட்டி' என்று ஓடி கொண்டிருந்தது.
அவன் அதிர்ந்து அவளை பார்க்க அவள் புன்னகை ததும்ப,."வாட்ச் இட்" என்றாள்.
அவன் பார்வையை மீண்டும் டிவியின் புறம் திருப்ப ஒரு பெண் நிருபர் ஜென்னியிடம் "திடீர்னு ஆக்டர் ராகவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றீங்களாமே... அப்படியா ?" என்றவள் கேட்க,
"எஸ்" என்றாள் சலிப்போடு !
"ஏன் ? உங்க இரண்டு பேருக்குள்ள மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்கா ? என்று அங்கே நின்றிருந்த வேறொரு சேனல் நிருபர் கேட்க,
"அதெல்லாய் இல்ல... நான் மிஸ்டர். ராகவை ரொம்ப நல்லவர் ஒழுக்கமானவர்னு... நம்பி ஏமாந்துட்டேன்... ஆனா அவர் அப்படி இல்லை" என்றாள்.
அங்கே இருந்த பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி நிருபர்கள் எல்லோரும் அதிர்ந்து "என்ன சொல்ல வர்றீங்க. ? ஆக்டர் ராகவோட கேரெக்டர் சரியில்லைன்னா ?" என்று கேட்க,
"எஸ்... அவருக்கிட்ட இல்லாத கெட்ட பழக்கமே இல்லை... மோரோவர் பொண்ணுங்க விஷயத்தில ரொம்ப ரொம்ப மோசமானவர்... அப்படி ஒரு ஓழுக்கங்கெட்ட ஒருத்தரை என்னால மேரேஜ் பண்ணிக்க முடியாது... இதுக்கு மேல எந்த கேள்வியும் கேட்காதீங்க... நானே ரொம்ப நொந்து போயிருக்கேன்" என்று அவர்களை கடந்து செல்ல பார்க்கவும்,
"ஒன் லாஸ்ட் க்விஷன்" என்று அங்கிருந்தவர்கள் கேட்கவும், அவள் ஒரு நொடி நின்று அவர்களை பார்த்தாள்.
"நீங்க ஆக்டர் ராகவ் பத்தி சொல்றதெல்லாம் உண்மைதானா? அதை எப்படி நாங்க நம்பிறது... ஆக்டர் ராகவோட பேரை கெடூக்க நீங்க இப்படி பன்றிங்களா ?" என்று அழுத்தம் திருத்தமாய் கேட்க,
"அவர் பேரை கெடுக்கிறதினால எனக்கென்ன யூஸ்?நான் ஜஸ்ட் நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்... இதுக்கு மேல எதுவாயிருந்தாலும் நீங்க ராகவ்கிட்ட கேட்டுக்கோங்க" என்றவள் முடிக்க ராகவின் நாளங்கள் வெடித்து சிதறியது போலிருந்தது.
அவன் இந்த உலகத்திலயே அதிகமாய் நேசிப்பது அவனையும் அவன் இமேஜையும்தான். அதை இப்படி அவள் தரைமட்டமாக்குவாள் என்று கனவிலும் அவன் எதிர்பார்க்கவில்லை.
"எவ்வளவு திமிரு இருந்தா என்னை பத்தி மீடியால தப்பு தப்பா சொல்லி இருப்ப" என்று கேட்டு அவன் வெறியோடு பார்க்க.
அவள் "இதேதானே நீ சையத்துக்கு பண்ண ... அப்போ அவருக்கு வலிக்கும்னு நீ யோசிக்கலயே... அதென்ன ? உனக்கு வந்தா இரத்தம்... மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா ?" என்று கிண்டலான பார்வையோடு கேட்க,
கோபத்தின் உச்சத்தை தொட்டவன் "அடிங்க உன்னை" என்று அவளை நெருங்கி கழுத்தை நெறித்து படுக்கையின் மீது தள்ளி வெறியோடு அழுத்த அவள் சிரமப்பட்டு "இது வெறும் டிரெயலர்தான் ராகவ்... மெயின் பிக்சர் இன்னும் ரீலாஸாகல... அதுக்குள்ள இவ்வளவு டென்ஷனான்னா எப்படி ?" என்று கேட்க அதிர்ச்சியில் தன் கரத்தை சற்று தளர்த்தி,
"வேறென்னலான்டி பண்ணி வைச்சிருக்க ?" என்று அச்சம் மேலிட அவன் வினவ,
"முதல்ல கழுத்தை விடுடா... சொல்றேன்" என்றாள்.
அவன் மூச்சிறைக்க அவளை முறைத்தபடி விலகிவந்து நிற்க "சொல்லு டி" என்றான்.
அவள் எழுந்து சம்மேளம் போட்டு அமர்ந்து "கதையில சஸ்பென்ஸை உடைச்சிட்டா இன்டிரஸ்டா இருக்காது ராகவ்" என்றவள் சொல்ல,
அவன் கடுப்பாகி "இதோட உன் விளையாட்டை நிறுத்திக்கோ... நான் சொன்னதெல்லாம் தப்புன்னு மீடியா முன்னாடி ஒத்துக்கிற... இல்லன்னு வைச்சுக்கோ... "
"இல்லைன்னா ?!" என்றவள் எகத்தாளமாய் பார்க்க
அவன் அவள் முகத்தின் அருகில் வந்து "ஏய்... இப்ப நீ டிவில சொன்னதெல்லாம் ஜஸ்ட் நத்திங்.. நான் ஊதி தள்ளிட்டு போயடுவேன்.. ஆனா நான் உன் இமேஜை டேமஜ் பண்ண நினைச்சன்னு வைச்சுக்கோ... வெளியே நீ தலைகாட்ட முடியாது... அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிற்ப... உன் போட்டோஸை மார்ஃப் பண்ணி அசிங்க அசிங்கமா ட்விட்டர்ஸ் பேஸ் புக் வாட்ஸ்அப்னு எல்லா ஸோஸியல் மீடியாவிலயும் உலாவ விடுவேன்... பார்த்துக்கோ?!" என்றவன் மிரட்டி அவளை குரூரமாய் பார்த்தவனை அவள் சிறு சலனமே இல்லாமல் எதிர்கொள்ள,
அவள் பார்வையில் அச்சமோ கோபமோ இல்லை. மாறாய் அலட்சியம் தென்பட,
அவன் மீண்டும் "என்னடி ? செய்ய மாட்டன்னு நினைக்கிறியா ?!" என்றவன் கேட்க,
அவள் இளக்காரமாய் பார்த்து "நீ எதையும் செய்வடா... என்னை இல்லை... உன் சொந்த அம்மாவை கூட மார்ஃப் பண்ணி போடுவ... அப்படிபட்ட கேடுகெட்ட பிறவிடா நீ" என்றதும் அவன் கோபம் அதிகரிக்க அவள் கன்னத்தில் அறைந்துவிட அவள் படுக்கையில் விழுந்தாள்.
அவன் வெறியோடு, "நீ அடங்கமாட்ட... உன்னை எப்படி அடக்கனும்னு எனக்கு தெரியும் டி.. உன் வீக்னஸ் என்னன்னும் எனக்கு நல்லா தெரியும்... உன்னை அணுஅணுவா சித்ரவதை செஞ்சி உன்னை அனுபவிக்கிறேன்டி" என்றவன் தன் மேல்சட்டையை களைந்து அவளை நெருங்கவர,
அவள் துளியளவும் பயமின்றி எகத்தாளமாய் அவனை பார்த்து சிரித்தாள்.
அவன் புரியாத பார்வையோடு "எதுக்குடி சிரிக்கிற. ?" என்று கேட்க,
அவள் வஞ்சமாய் புன்னகையித்து,
"யூ கான்ட் ஈவன் பிளக் மை சிங்கிள் ஹெர் டேமிட்" என்று வெடித்து அவள் சொன்ன விதத்தில் தெரிந்த தீவிரமான துணிச்சல் அவனை மிரட்சிக்குள்ளாக்கியது.
அவளின் இந்த தைரியத்திற்கும் நிதானத்திற்கும் பிண்ணனியில் வேறெதோ இருக்கிறது என்று பட்டது அவனுக்கு.
அவளை நெருங்க முடியாமல் உள்ளூர ஏதோ ஒன்று தடுத்து கொண்டிருக்க, உணர்ச்சிவசப்பட்டு தான் எதையாவது செய்ய போக அது தன் பேருக்கும் புகழுக்கு இழுக்காகிவிட்டால் என்று அவளிடமிருந்து பின்வாங்க,
அவனின் பலம் அவளின் மனோபலத்தில் முன்னிலையில் குன்றி கொண்டே வந்தது.
அவள் பேசும் பேச்சுக்கு அவளை எதுவும் செய்ய முடியாத இயலாமையில் நிற்கிறோமே என்று அவமானமாகவும் வலியாகவும் இருந்த அதே சமயம் நடப்பது நடக்கட்டும் என்று அவளை சிதைத்துவிட சொல்லி ஒரு குரல் உள்ளே வெறி கொண்டு கத்தியது.