Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
ஆழமான வலி
ராகவின் கண்களில் அத்தனை வெறியும் கோபமும் இருந்தது.
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் தன்னை அவள் முட்டாளாக்கி இருக்கிறாள் என்று எண்ணும் போதே அவன் உள்ளமெல்லாம் கொந்தளித்து கொண்டிருந்தது.
அன்று அவளுக்கு தான் செய்த வன்கொடுமை குறித்து இந்நிலையிலும் அவன் வருந்தத் தயராக இல்லை.
அவனுக்கு அவனும் அவன் உணர்வுகள் மட்டுமே முக்கியம். அதை தாண்டி வேறெதையும் அவன் துளியளவும் மதிப்பவன் அல்ல.
அவனின் வெறியே ஜென்னி அவனின் உணர்வுகளோடு விளையாடியிருக்கிறாள் என்பதுதான்.
அப்படி இருக்கும் போது அவளை சும்மா விட தோன்றுமா அவனுக்கு ?
இப்போதும் அவள் மீதான மோகத்தீ அவனுக்கு அணைந்தபாடில்லை.
அது இன்னும் உக்கிரமாகவும் உஷ்ணமாகவும் எரிந்து கொண்டிருக்க,
அன்று அவளை நாசம் செய்தது போல் இன்னும் நூறு மடங்காய் செய்ய வேண்டும் என்று அவன் மனம் அடங்கா ஆத்திரத்தோடு பொறுமி கொண்டிருந்தது.
உள்ளூர அவள் மீதான கோபத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்காய் கூர்தீட்டி கொண்டு அவன் காத்திருக்க
அந்த சமயம் ராகவுக்கு ஜென்னியிடமிருந்து அழைப்பு வந்தது.
உடனே எடுத்து பேசியவன் "எத்தனை மணிக்கு ஏர்போர்டுக்கு வரனும் ?" என்று கேட்க,
"நீங்க வர வேண்டாம்.. நானே வந்து உங்களை மீட் பன்றேன்... " என்று உரைக்க, அவள் சுதாரித்து கொள்கிறாளோ என்று எண்ணியவன்,
"ஏன்டி திடீர்னு பிளானை மாத்திர ?"என்று கேட்டான்.
"ப்ளைட் லேட்டாகுமாம்... நீங்க எதுக்கு ஏர்போர்ட்ல வந்து வெயிட் பண்ணிட்டு... நானே வந்திடுறேன்... எங்க வரனும்னு சொல்லுங்க" என்றவள் சொல்லவும் அவளிடம் தானே வருவதாக அடம் பிடித்தால் அவளுக்கு சந்தேகம் வந்துவிடலாம் என்று எண்ணியவன்
"என் ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்திரு" என்றான்.
"டன்" என்றவள் "வந்துட்டு கால் பன்றேன்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.
அவள் எப்போது வந்து சேர்வாள் என்று பித்து பிடித்தவன் போல காத்திருந்தான்.
அவனை பொறுத்துவரை அவளை உண்மையிலயே காதலித்தான். அந்த காதலை அவள் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு என்னவெல்லாம் செய்தால் என்று எண்ணும் போதே கனலாய் எறிந்து கொண்டிருந்தது அவனுக்கு.
அவளுக்கு அவன் செய்த கொடுமைகள் எல்லாம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை.
அவள் தன்னை முட்டாளக்கிவிட்டாள். அவள் தன்னை ஏமாற்றுகொண்டிருக்கிறாள். இப்படியாகவே அவன் மனம் ஓயாமல் சிந்தித்து கொண்டிருக்க, அவளுக்கு அவன் காத்திருப்பு முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனது.
அவள் வராமல் போய்விடுவாளோ என்று உள்ளூர படபடப்பாகவும் இருந்தது.
அதே நேரம் அவள் எங்கே சென்றாலும் அவளை விட கூடாது என்று அவன் சூளுரைத்து கொண்ட போது ஜென்னி வீட்டிற்குள் நுழைந்த தகவல் ராகவை வந்தடைந்தது.
அவள் அவன் அறைகதவை தட்ட,
திறந்தவன் "உள்ளே வா" என்று தன் கோபத்தை மறைத்து கொண்டு அழைக்க,
"வெளியவே உட்கார்ந்து பேசலாமே" என்றாள் அவள்.
உடனடியாக கோபத்தை காட்டிவிட கூடாது என்ற எண்ணத்தோடு "உன்கிட்ட நம்ம மேரேஜுக்கான டெக்கரெஷன் டிசைன்ஸ் லாம் காட்டனும்... வா" என்றவன் கரத்தை பற்றி அவன் உள்ளே இழுக்க, அவன் கோபத்தை காட்டிவிட கூடாதென்று எண்ணினாலும் அவன் கரம் அவள் கரத்தை இறுகபற்றியது.
அவள் கரத்தை உதறியபடி "கையை விடுங்க ராகவ்... நானே வர்றேன்" என்று ஜென்னி உள்ளே நுழைய மறுகணமே அவன் அறைகதவை மூடி தாழிட்டான்.
அவள் துணுக்குற்று திரும்பி பார்த்தாள்.
"நம்ம பெர்ஸனலா பேசும் போது யாரும் டிஸ்டர்ப் பண்ணிட கூடாது... அதுக்குதான்" என்றவன் மேலோட்டமாய் புன்னகையித்து சமாளிக்க,
"தட்ஸ் ஒகே ராகவ்" என்று எந்தவித பதட்டமுமின்றி உள்ளே நுழைந்தாள்.
அவன் தன் படுக்கையில் அமர்ந்துவிட்டு அவளிடமும் "உட்காரு ஜென்னி" என்று அருகில் அழைத்து அமரச் சொன்னான்.
அவள் எதிர்புறத்தில் நின்றபடி "டைம் இல்ல ராகவ்... நீங்க டிஸைன்ஸை காண்பிங்க... நான் கிளம்பிறேன்" என்றாள்.
"ஏன் ? இங்கே உட்கார்ந்தா பழசை எல்லாம் ஞாபகத்துக்கு வந்திருமோ ?!" என்று கூறியவன் வன்மமாய் ஒரு புன்னகையை உதட்டில் தவழவிட,
"என்ன ஞாபகம் வரும்? புரியலயே" என்றவள் முகத்தை குழப்பமாய் வைத்து கொண்டு கேட்டாள்.
அவன் எரிச்சலான பார்வையோடு ,
"இங்க என்னஆஸ்கார் அவார்டா கொடுக்கிறாங்க... இப்படி ஆக்ட் பண்ணிட்டிருக்க" என்க,
"ஆக்டிங் எல்லாம் என்னை விட உங்களுக்குதான் நல்லா வரும் ராகவ்... நான் உங்களுக்கு ஜுனியர்தான்" என்றவள் எள்ளலாய் நகைத்து கூறவும் அவனுக்கு கடுப்பானது.
"ஏய்... உன் மேட்டரெல்லாம் எனக்கு நல்லா தெரியும் டி" என்று சொல்லும் போதே
இடைமறித்தவள் "என் மேட்டரா? அதென்ன ராகவ்?" புரியாத பார்வையோடு அவள் கேட்கவும்,
அவளை கோபத்தோடு நெருங்கியவன்,
"உன் உண்மையான பேரு சாக்ஷிதானே" என்க,
"யாரு சாக்ஷி ?" என்றவள் கேட்க, உச்சபட்சமான கோபத்தை எட்டியவன் அவள் முகத்தில் பளாரென்று அறைந்துவிட்டு "என்ன கடுப்பேத்திறியா?" என்று வினவ, அவள் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் சிலையாய் சமைந்திருந்தாள்.
அவள் பார்வையில் எந்தவித உணர்வுகளும் தென்படவில்லை. அது கோபமோ வலியோ எதையுமே காட்டிக் கொள்ளாமல் அவள் வெறுமையான விழிகளோடு அவனை பார்க்க,
அவன் வியப்போடு "என்னடி ? அடிச்சிருக்கேன்... ரியாக்ட் பண்ணாம... அப்படியே மரம் மாதிரி நிற்கிற" என்று பல்லை கடித்து கொண்டு கேட்டவனை,
ஆழ்ந்து நோக்கியவளின் பார்வையில் அத்தனை சீற்றம்.
நிதானமாய் மூச்சை இழுத்துவிட்டு கொண்டவள் "நீதான் என் உணர்ச்சிகளை எல்லாம் கொன்னுட்டியே... அப்புறம்... மரம் மாதிரி நிற்காம... வேறெப்படிறா?" அவள் உதடுகள் உதிர்த்த வார்த்தைகளை விட பார்வையில் அத்தனை வெறி.
அதோடு விழிக்குள் நின்றிரூந்த கண்ணீர் எரிகுழம்போ என்றவளுக்கு அவனை சாம்பாலிக்கிட காத்திருக்க,
"அப்போ நீதான் அந்த ப்ளைன்ட் கெர்ள் சாக்ஷி... இல்ல " என்றவன் கேட்க,
"இல்லை" என்றாள் அழுத்தமாக !
"என்னடி பொய் சொல்றியா ?"
"நீதானடா சாக்ஷியை கொன்ன ? மறந்துட்டியா ?" என்றவள் கேட்டு அனலாய் அவனை பார்க்க,
குழப்பமாய் தலைமுடியை பிய்த்து கொண்டவன் "என்னடி உளறிட்டிருக்க ?" என்று வினவினான்.
"உளறல... நான் அவ இல்லைன்னு சொல்றேன்... அவளை நீ சாகடிச்சிட்டன்னு சொல்றேன்... அவ மனசை... அவ உடம்பை... அவ கனவை... அவ காதலைன்னு... எல்லாத்தையும் கொன்னுட்ட...
நவ் ஷீ இஸ் நோ மோர்... ப்ளடி பாஸ்டட்" என்று சொல்லியவளின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி சீற்றமாய் அவன் சட்டையை இழுத்து பிடித்து கொண்டு நின்றாள்.
அவள் முகத்தில் அத்தனை வேதனையும் தவிப்பும் வலியும் தெரிந்தது.
அவள் எந்தளவுக்கு காயப்பட்டிருக்கிறாள் என்பதை அவள் முகம் அப்பட்டமாய் காட்டி கொடுக்க, மெல்ல அவள் விழியிலிருந்து இறங்கி வர இருந்த கண்ணீரை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அவன் சட்டையை அவசரமாய் விடுத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அவளின் கோபம் அவன் சாக்ஷியிடம் நடந்து கொண்டதை அவன் கண்முன்னே நிறுத்த அவன் மௌனமாய் நின்றுவிட்டான்.
அவளோ தன் கண்ணீரை அந்த நொடி உள்வாங்கி கொண்டிருந்தாள். அவன் முன்னே ஒருபோதும் உடைந்துவிட கூடாதே என்றவள் தன் மனதை திடப்படுத்தி கொண்டிருக்க,
ராகவ் அவள் முன்னே வந்து நின்று "நான்தான் உன்னை ரேப் பண்ணன்னு உனக்கெப்படி தெரியும் ?" என்றவன் கேட்டு இளக்காரமாய் பார்க்க,
"சாக்ஷி ப்ளைன்ட்தான்... ஆனா அவ இயர்ஸும் ப்ரைனும் செம ஷார்ப்" என்று அவனை கூர்மையாய் பார்த்து உரைத்தவள் அவளே தொடர்ந்தாள்.
"சென்னைக்கு நான் ரீஓபனிங்காகவோ சையத்தை பார்க்கவோ வரல... ஐ கேம் ஜஸ்ட் பாஃர் யூ... அப்சானா சையத்தை பத்தி சொன்னதும் அவர் படத்தை தேடி பார்க்க போய்தான் படத்தில உன் குரலை கேட்டேன்... அப்பவே மண்டையில உறைச்சது... நீதான் அவன்னு... ஆனா வெறும் குரலை மட்டுமே வைச்சி நீதானான்னு ஸ்டிராங்கா என்னால
அப்படி யோசிக்க முடியல... உன்னை பத்தி விசாரிச்சேன்... ஆனா உன்னை பத்தி ராங்கா ஒரு விஷயம் கூட என் காதில விழல... அங்கதான் நான் கன்புஃயூஸ் ஆனான்... இவ்வளவு பெரிய ஹீரோ எப்படின்னு... அதனாலதான் உன்னை நேரடியா பார்க்கனும்னு நான் நினைச்சேன்... அதுக்காகதான் சென்னை ரீஓபனிங்கு வர ஒத்துக்கிட்டேன்... அதுக்குள் நீயா என் செகரட்டிரிக்கு கால் பண்ண... உன் முகத்தை பார்க்காம உன் குரலை கேட்க நான் விருப்பப்படல... அது இன்னும் எனக்கு பழைய விஷயங்களை ஞாபகபடுத்துமே... அதனாலதான் உன்கிட்ட பேசாம அவாயிட் பண்ணேன்... அட் தி சேம் டைம் உன்னை பார்க்க வந்தேன்... நம்ம பர்ஸ்ட் மீட்டிங்கலயே எனக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் வரல... அதுக்கப்புறம் நடந்த மீட்டிங் எல்லாமே நான் ப்ளேன் பண்ணது... ரீஓபனிங் பங்கஷன் உட்பட... அங்கதான்டா நீதான்னு கன்பர்ஃம் பண்ணேன்... நீ என் கையை பிடிச்சிட்டு தாறுமாறா பேசினியே அப்பவே நான் ஸ்டிராங்கா முடிவுபண்ணிட்டேன்... அப்புறம் சையத்தோட வந்த அன்னைக்கு என்னை நீ கிஸ் பண்ண வந்தியே... அப்போ உன் நெருக்கம் உன் மேல வீசின வாசனைன்னு முடிவே பண்ணிட்டேன்... அதுக்கப்புறம்தான் சையத் படத்தில நடிக்க ஓத்துக்கிட்டேன்... ஆனா இதுல நான் எதிர்பாராம நடந்தது நீ என்னை வீடு தேடி திரும்பியும் ரேப் பண்ண வந்தது" என்றவள் அளவில்லா கோபத்தில் நிறுத்தி அவனை பார்க்க, அவன் நடந்தவற்றை கேட்டபடி திகைப்புற்றிருந்தான்.
அவள் மேலும் "அன்னைக்கு திரும்பியும் அப்படி ஒரு நாள்... சாக்ஷி மாறி உணர்ச்சிவசப்பட கூடாது ரொம்ப கேர்புஃல்லா பொறுமையா டீல் பண்ண... ஆனா அன்னைக்கும் நீ என்னை கெஞ்ச வைச்சிட்ட... தோற்று போயிட்டோமோன்னு நினைக்கும் போதுதான்... பைத்தியகானாட்டும் காதலிக்கிறேன்னு... என் முன்னாடி வந்து நின்ன... உன்னை அடிக்கிறதுக்கான ஆயுதத்தை நீயே எடுத்து கொடுக்கும் போது அதை நான் யூஸ் பண்ணாம எப்படி விடறது " என்றவள் சொல்லி உரக்க சிரிக்க அவனுக்கு பற்றி எரிந்தது.
"நீ என் காலில் விழல... அவ்வளவேதான்... மத்தபடி நான் எப்படியெல்லாம் ஆட்டிவைச்சேனோ அப்படியெல்லாம் ஆடின" என்றவள் பரிகசித்து புன்னகையிக்க, அவன் முகமெல்லாம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.
உள்ளுர அவமானத்தில் அவன் துடித்தாலும் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டு இறங்கிய குரலில் "பைஃன்... அன்னைக்கு நான் அப்படி உன்கிட்ட நடந்திருக்க கூடாதுதான்... அது தப்புதான்... நீ வேற அன்னைக்கு என்னை ரொம்ப இரிடேட் பண்ணிட்டியா? அதனாலதான் கொஞ்சம் அரகென்ட்டா நடந்துக்கிட்டேன்... இல்லாட்டி போனா நான் அவ்வளவு மோசமானவன் எல்லாம் இல்ல" என்று சமாளிப்பாய் பேசியவன் எதற்காக அடி போடுகிறான் என்ற நோக்கம் புரியாமல் அவள் மௌனமாய் நிற்க அவன் மேலே தொடர்ந்தான்.
"அந்த இன்ஸிடென்டுக்காக நீ என்கிட்ட என்ன காம்பன்ஸேஷன் கேட்டாலும் தர்றேன்" என்று குற்றவுணர்வே இல்லாமல் அவளின் வலிக்கும் அவன் சீரழித்த அவள் பெண்மைக்கும் விலை பேச, அவளூக்கு அவனை கொன்றுவிடலாமா என்றளவுக்கு ஆத்திரம் பொங்கியது.
ஆனால் அவள் பொறுமையோடு "என்ன மாதிரியான காம்பேன்ஸேஷன் கொடுப்பீங்க மிஸ்டர். ராகவ் ?" என்றவள் எகத்தாளமாய் பார்த்து கேட்க,
"என்ன வேணா கேளு தர்றேன் ?... ஆனா இந்த பட டயலாக் மாறி என் பறிபோன கற்பை திருப்பி கொடுன்னு மொக்கையா ஏதாச்சும் கேட்காதே... கொஞ்சம் பிராடிக்க்கலா கேளு" என்று திமிரான பார்வையோடு அவன் சொல்ல,
அவனை நிதானமாய் ஏறிட்டவள்,
"யூ ஆர் ரைட்... இந்த இமோஷன்ஸ்... பீலிங்ஸ்.. இதெல்லாம் டோட்டல் வேஸ்ட்... ஸோ பிரக்கட்டிக்கலா யோசிக்கிறதுதான் பெஸ்ட்... நீயே எனக்கு என்ன காம்பன்ஸேஷன் கொடுக்க முடியும்னு சொல்லு... அதை அக்செப்ட் பண்ணிக்கிறதா வேண்டாமான்னு நான் முடிவுபண்றேன்" என்றவள் சொல்ல,
ராகவின் கண்களில் அத்தனை வெறியும் கோபமும் இருந்தது.
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் தன்னை அவள் முட்டாளாக்கி இருக்கிறாள் என்று எண்ணும் போதே அவன் உள்ளமெல்லாம் கொந்தளித்து கொண்டிருந்தது.
அன்று அவளுக்கு தான் செய்த வன்கொடுமை குறித்து இந்நிலையிலும் அவன் வருந்தத் தயராக இல்லை.
அவனுக்கு அவனும் அவன் உணர்வுகள் மட்டுமே முக்கியம். அதை தாண்டி வேறெதையும் அவன் துளியளவும் மதிப்பவன் அல்ல.
அவனின் வெறியே ஜென்னி அவனின் உணர்வுகளோடு விளையாடியிருக்கிறாள் என்பதுதான்.
அப்படி இருக்கும் போது அவளை சும்மா விட தோன்றுமா அவனுக்கு ?
இப்போதும் அவள் மீதான மோகத்தீ அவனுக்கு அணைந்தபாடில்லை.
அது இன்னும் உக்கிரமாகவும் உஷ்ணமாகவும் எரிந்து கொண்டிருக்க,
அன்று அவளை நாசம் செய்தது போல் இன்னும் நூறு மடங்காய் செய்ய வேண்டும் என்று அவன் மனம் அடங்கா ஆத்திரத்தோடு பொறுமி கொண்டிருந்தது.
உள்ளூர அவள் மீதான கோபத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்காய் கூர்தீட்டி கொண்டு அவன் காத்திருக்க
அந்த சமயம் ராகவுக்கு ஜென்னியிடமிருந்து அழைப்பு வந்தது.
உடனே எடுத்து பேசியவன் "எத்தனை மணிக்கு ஏர்போர்டுக்கு வரனும் ?" என்று கேட்க,
"நீங்க வர வேண்டாம்.. நானே வந்து உங்களை மீட் பன்றேன்... " என்று உரைக்க, அவள் சுதாரித்து கொள்கிறாளோ என்று எண்ணியவன்,
"ஏன்டி திடீர்னு பிளானை மாத்திர ?"என்று கேட்டான்.
"ப்ளைட் லேட்டாகுமாம்... நீங்க எதுக்கு ஏர்போர்ட்ல வந்து வெயிட் பண்ணிட்டு... நானே வந்திடுறேன்... எங்க வரனும்னு சொல்லுங்க" என்றவள் சொல்லவும் அவளிடம் தானே வருவதாக அடம் பிடித்தால் அவளுக்கு சந்தேகம் வந்துவிடலாம் என்று எண்ணியவன்
"என் ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்திரு" என்றான்.
"டன்" என்றவள் "வந்துட்டு கால் பன்றேன்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.
அவள் எப்போது வந்து சேர்வாள் என்று பித்து பிடித்தவன் போல காத்திருந்தான்.
அவனை பொறுத்துவரை அவளை உண்மையிலயே காதலித்தான். அந்த காதலை அவள் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு என்னவெல்லாம் செய்தால் என்று எண்ணும் போதே கனலாய் எறிந்து கொண்டிருந்தது அவனுக்கு.
அவளுக்கு அவன் செய்த கொடுமைகள் எல்லாம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை.
அவள் தன்னை முட்டாளக்கிவிட்டாள். அவள் தன்னை ஏமாற்றுகொண்டிருக்கிறாள். இப்படியாகவே அவன் மனம் ஓயாமல் சிந்தித்து கொண்டிருக்க, அவளுக்கு அவன் காத்திருப்பு முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனது.
அவள் வராமல் போய்விடுவாளோ என்று உள்ளூர படபடப்பாகவும் இருந்தது.
அதே நேரம் அவள் எங்கே சென்றாலும் அவளை விட கூடாது என்று அவன் சூளுரைத்து கொண்ட போது ஜென்னி வீட்டிற்குள் நுழைந்த தகவல் ராகவை வந்தடைந்தது.
அவள் அவன் அறைகதவை தட்ட,
திறந்தவன் "உள்ளே வா" என்று தன் கோபத்தை மறைத்து கொண்டு அழைக்க,
"வெளியவே உட்கார்ந்து பேசலாமே" என்றாள் அவள்.
உடனடியாக கோபத்தை காட்டிவிட கூடாது என்ற எண்ணத்தோடு "உன்கிட்ட நம்ம மேரேஜுக்கான டெக்கரெஷன் டிசைன்ஸ் லாம் காட்டனும்... வா" என்றவன் கரத்தை பற்றி அவன் உள்ளே இழுக்க, அவன் கோபத்தை காட்டிவிட கூடாதென்று எண்ணினாலும் அவன் கரம் அவள் கரத்தை இறுகபற்றியது.
அவள் கரத்தை உதறியபடி "கையை விடுங்க ராகவ்... நானே வர்றேன்" என்று ஜென்னி உள்ளே நுழைய மறுகணமே அவன் அறைகதவை மூடி தாழிட்டான்.
அவள் துணுக்குற்று திரும்பி பார்த்தாள்.
"நம்ம பெர்ஸனலா பேசும் போது யாரும் டிஸ்டர்ப் பண்ணிட கூடாது... அதுக்குதான்" என்றவன் மேலோட்டமாய் புன்னகையித்து சமாளிக்க,
"தட்ஸ் ஒகே ராகவ்" என்று எந்தவித பதட்டமுமின்றி உள்ளே நுழைந்தாள்.
அவன் தன் படுக்கையில் அமர்ந்துவிட்டு அவளிடமும் "உட்காரு ஜென்னி" என்று அருகில் அழைத்து அமரச் சொன்னான்.
அவள் எதிர்புறத்தில் நின்றபடி "டைம் இல்ல ராகவ்... நீங்க டிஸைன்ஸை காண்பிங்க... நான் கிளம்பிறேன்" என்றாள்.
"ஏன் ? இங்கே உட்கார்ந்தா பழசை எல்லாம் ஞாபகத்துக்கு வந்திருமோ ?!" என்று கூறியவன் வன்மமாய் ஒரு புன்னகையை உதட்டில் தவழவிட,
"என்ன ஞாபகம் வரும்? புரியலயே" என்றவள் முகத்தை குழப்பமாய் வைத்து கொண்டு கேட்டாள்.
அவன் எரிச்சலான பார்வையோடு ,
"இங்க என்னஆஸ்கார் அவார்டா கொடுக்கிறாங்க... இப்படி ஆக்ட் பண்ணிட்டிருக்க" என்க,
"ஆக்டிங் எல்லாம் என்னை விட உங்களுக்குதான் நல்லா வரும் ராகவ்... நான் உங்களுக்கு ஜுனியர்தான்" என்றவள் எள்ளலாய் நகைத்து கூறவும் அவனுக்கு கடுப்பானது.
"ஏய்... உன் மேட்டரெல்லாம் எனக்கு நல்லா தெரியும் டி" என்று சொல்லும் போதே
இடைமறித்தவள் "என் மேட்டரா? அதென்ன ராகவ்?" புரியாத பார்வையோடு அவள் கேட்கவும்,
அவளை கோபத்தோடு நெருங்கியவன்,
"உன் உண்மையான பேரு சாக்ஷிதானே" என்க,
"யாரு சாக்ஷி ?" என்றவள் கேட்க, உச்சபட்சமான கோபத்தை எட்டியவன் அவள் முகத்தில் பளாரென்று அறைந்துவிட்டு "என்ன கடுப்பேத்திறியா?" என்று வினவ, அவள் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் சிலையாய் சமைந்திருந்தாள்.
அவள் பார்வையில் எந்தவித உணர்வுகளும் தென்படவில்லை. அது கோபமோ வலியோ எதையுமே காட்டிக் கொள்ளாமல் அவள் வெறுமையான விழிகளோடு அவனை பார்க்க,
அவன் வியப்போடு "என்னடி ? அடிச்சிருக்கேன்... ரியாக்ட் பண்ணாம... அப்படியே மரம் மாதிரி நிற்கிற" என்று பல்லை கடித்து கொண்டு கேட்டவனை,
ஆழ்ந்து நோக்கியவளின் பார்வையில் அத்தனை சீற்றம்.
நிதானமாய் மூச்சை இழுத்துவிட்டு கொண்டவள் "நீதான் என் உணர்ச்சிகளை எல்லாம் கொன்னுட்டியே... அப்புறம்... மரம் மாதிரி நிற்காம... வேறெப்படிறா?" அவள் உதடுகள் உதிர்த்த வார்த்தைகளை விட பார்வையில் அத்தனை வெறி.
அதோடு விழிக்குள் நின்றிரூந்த கண்ணீர் எரிகுழம்போ என்றவளுக்கு அவனை சாம்பாலிக்கிட காத்திருக்க,
"அப்போ நீதான் அந்த ப்ளைன்ட் கெர்ள் சாக்ஷி... இல்ல " என்றவன் கேட்க,
"இல்லை" என்றாள் அழுத்தமாக !
"என்னடி பொய் சொல்றியா ?"
"நீதானடா சாக்ஷியை கொன்ன ? மறந்துட்டியா ?" என்றவள் கேட்டு அனலாய் அவனை பார்க்க,
குழப்பமாய் தலைமுடியை பிய்த்து கொண்டவன் "என்னடி உளறிட்டிருக்க ?" என்று வினவினான்.
"உளறல... நான் அவ இல்லைன்னு சொல்றேன்... அவளை நீ சாகடிச்சிட்டன்னு சொல்றேன்... அவ மனசை... அவ உடம்பை... அவ கனவை... அவ காதலைன்னு... எல்லாத்தையும் கொன்னுட்ட...
நவ் ஷீ இஸ் நோ மோர்... ப்ளடி பாஸ்டட்" என்று சொல்லியவளின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி சீற்றமாய் அவன் சட்டையை இழுத்து பிடித்து கொண்டு நின்றாள்.
அவள் முகத்தில் அத்தனை வேதனையும் தவிப்பும் வலியும் தெரிந்தது.
அவள் எந்தளவுக்கு காயப்பட்டிருக்கிறாள் என்பதை அவள் முகம் அப்பட்டமாய் காட்டி கொடுக்க, மெல்ல அவள் விழியிலிருந்து இறங்கி வர இருந்த கண்ணீரை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அவன் சட்டையை அவசரமாய் விடுத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அவளின் கோபம் அவன் சாக்ஷியிடம் நடந்து கொண்டதை அவன் கண்முன்னே நிறுத்த அவன் மௌனமாய் நின்றுவிட்டான்.
அவளோ தன் கண்ணீரை அந்த நொடி உள்வாங்கி கொண்டிருந்தாள். அவன் முன்னே ஒருபோதும் உடைந்துவிட கூடாதே என்றவள் தன் மனதை திடப்படுத்தி கொண்டிருக்க,
ராகவ் அவள் முன்னே வந்து நின்று "நான்தான் உன்னை ரேப் பண்ணன்னு உனக்கெப்படி தெரியும் ?" என்றவன் கேட்டு இளக்காரமாய் பார்க்க,
"சாக்ஷி ப்ளைன்ட்தான்... ஆனா அவ இயர்ஸும் ப்ரைனும் செம ஷார்ப்" என்று அவனை கூர்மையாய் பார்த்து உரைத்தவள் அவளே தொடர்ந்தாள்.
"சென்னைக்கு நான் ரீஓபனிங்காகவோ சையத்தை பார்க்கவோ வரல... ஐ கேம் ஜஸ்ட் பாஃர் யூ... அப்சானா சையத்தை பத்தி சொன்னதும் அவர் படத்தை தேடி பார்க்க போய்தான் படத்தில உன் குரலை கேட்டேன்... அப்பவே மண்டையில உறைச்சது... நீதான் அவன்னு... ஆனா வெறும் குரலை மட்டுமே வைச்சி நீதானான்னு ஸ்டிராங்கா என்னால
அப்படி யோசிக்க முடியல... உன்னை பத்தி விசாரிச்சேன்... ஆனா உன்னை பத்தி ராங்கா ஒரு விஷயம் கூட என் காதில விழல... அங்கதான் நான் கன்புஃயூஸ் ஆனான்... இவ்வளவு பெரிய ஹீரோ எப்படின்னு... அதனாலதான் உன்னை நேரடியா பார்க்கனும்னு நான் நினைச்சேன்... அதுக்காகதான் சென்னை ரீஓபனிங்கு வர ஒத்துக்கிட்டேன்... அதுக்குள் நீயா என் செகரட்டிரிக்கு கால் பண்ண... உன் முகத்தை பார்க்காம உன் குரலை கேட்க நான் விருப்பப்படல... அது இன்னும் எனக்கு பழைய விஷயங்களை ஞாபகபடுத்துமே... அதனாலதான் உன்கிட்ட பேசாம அவாயிட் பண்ணேன்... அட் தி சேம் டைம் உன்னை பார்க்க வந்தேன்... நம்ம பர்ஸ்ட் மீட்டிங்கலயே எனக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் வரல... அதுக்கப்புறம் நடந்த மீட்டிங் எல்லாமே நான் ப்ளேன் பண்ணது... ரீஓபனிங் பங்கஷன் உட்பட... அங்கதான்டா நீதான்னு கன்பர்ஃம் பண்ணேன்... நீ என் கையை பிடிச்சிட்டு தாறுமாறா பேசினியே அப்பவே நான் ஸ்டிராங்கா முடிவுபண்ணிட்டேன்... அப்புறம் சையத்தோட வந்த அன்னைக்கு என்னை நீ கிஸ் பண்ண வந்தியே... அப்போ உன் நெருக்கம் உன் மேல வீசின வாசனைன்னு முடிவே பண்ணிட்டேன்... அதுக்கப்புறம்தான் சையத் படத்தில நடிக்க ஓத்துக்கிட்டேன்... ஆனா இதுல நான் எதிர்பாராம நடந்தது நீ என்னை வீடு தேடி திரும்பியும் ரேப் பண்ண வந்தது" என்றவள் அளவில்லா கோபத்தில் நிறுத்தி அவனை பார்க்க, அவன் நடந்தவற்றை கேட்டபடி திகைப்புற்றிருந்தான்.
அவள் மேலும் "அன்னைக்கு திரும்பியும் அப்படி ஒரு நாள்... சாக்ஷி மாறி உணர்ச்சிவசப்பட கூடாது ரொம்ப கேர்புஃல்லா பொறுமையா டீல் பண்ண... ஆனா அன்னைக்கும் நீ என்னை கெஞ்ச வைச்சிட்ட... தோற்று போயிட்டோமோன்னு நினைக்கும் போதுதான்... பைத்தியகானாட்டும் காதலிக்கிறேன்னு... என் முன்னாடி வந்து நின்ன... உன்னை அடிக்கிறதுக்கான ஆயுதத்தை நீயே எடுத்து கொடுக்கும் போது அதை நான் யூஸ் பண்ணாம எப்படி விடறது " என்றவள் சொல்லி உரக்க சிரிக்க அவனுக்கு பற்றி எரிந்தது.
"நீ என் காலில் விழல... அவ்வளவேதான்... மத்தபடி நான் எப்படியெல்லாம் ஆட்டிவைச்சேனோ அப்படியெல்லாம் ஆடின" என்றவள் பரிகசித்து புன்னகையிக்க, அவன் முகமெல்லாம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.
உள்ளுர அவமானத்தில் அவன் துடித்தாலும் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டு இறங்கிய குரலில் "பைஃன்... அன்னைக்கு நான் அப்படி உன்கிட்ட நடந்திருக்க கூடாதுதான்... அது தப்புதான்... நீ வேற அன்னைக்கு என்னை ரொம்ப இரிடேட் பண்ணிட்டியா? அதனாலதான் கொஞ்சம் அரகென்ட்டா நடந்துக்கிட்டேன்... இல்லாட்டி போனா நான் அவ்வளவு மோசமானவன் எல்லாம் இல்ல" என்று சமாளிப்பாய் பேசியவன் எதற்காக அடி போடுகிறான் என்ற நோக்கம் புரியாமல் அவள் மௌனமாய் நிற்க அவன் மேலே தொடர்ந்தான்.
"அந்த இன்ஸிடென்டுக்காக நீ என்கிட்ட என்ன காம்பன்ஸேஷன் கேட்டாலும் தர்றேன்" என்று குற்றவுணர்வே இல்லாமல் அவளின் வலிக்கும் அவன் சீரழித்த அவள் பெண்மைக்கும் விலை பேச, அவளூக்கு அவனை கொன்றுவிடலாமா என்றளவுக்கு ஆத்திரம் பொங்கியது.
ஆனால் அவள் பொறுமையோடு "என்ன மாதிரியான காம்பேன்ஸேஷன் கொடுப்பீங்க மிஸ்டர். ராகவ் ?" என்றவள் எகத்தாளமாய் பார்த்து கேட்க,
"என்ன வேணா கேளு தர்றேன் ?... ஆனா இந்த பட டயலாக் மாறி என் பறிபோன கற்பை திருப்பி கொடுன்னு மொக்கையா ஏதாச்சும் கேட்காதே... கொஞ்சம் பிராடிக்க்கலா கேளு" என்று திமிரான பார்வையோடு அவன் சொல்ல,
அவனை நிதானமாய் ஏறிட்டவள்,
"யூ ஆர் ரைட்... இந்த இமோஷன்ஸ்... பீலிங்ஸ்.. இதெல்லாம் டோட்டல் வேஸ்ட்... ஸோ பிரக்கட்டிக்கலா யோசிக்கிறதுதான் பெஸ்ட்... நீயே எனக்கு என்ன காம்பன்ஸேஷன் கொடுக்க முடியும்னு சொல்லு... அதை அக்செப்ட் பண்ணிக்கிறதா வேண்டாமான்னு நான் முடிவுபண்றேன்" என்றவள் சொல்ல,