• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 53 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அவள் பெருமூச்செறிந்து அழைப்பை துண்டித்தவள், அரங்கத்திற்குள் நுழைய டேவிடும் அதே போல் பெருமூச்சுவிட்டு தன்னறையில் இருந்த பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒன்றில் அவளின் வருகையை கண்டுகளித்தபடி இருந்தான்.

மாயாவும் ஜென்னியும் இருக்கையில் அமர, இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போதே மாயாவின் குரல் சுருதி இறங்கியது.

"என்னாச்சு மாயா ?!" என்றவள் கேட்டபடியே அவள் பார்த்த திசையில் பார்வையை திருப்ப,

அங்கே மகிழும் அவனுடன் ஒரு பெண் தொகுப்பாளரும் அளவளாவி கொண்டிருந்ததை பார்த்தாள்.

மாயா கோபம் பொங்க,."நான் இத்தனை நாள் கழிச்சு வெளியூர்ல இருந்து வந்திருக்கேன்... என்னை வந்து பார்த்து பேசனும்னு தோணுச்சா பார்த்தியாடி அவருக்கு ?" என்றாள்.

"எப்படி மாயா முடியும்? இந்த டென்ஷன்ல" என்று ஜென்னி அவன் நிலையை உரைக்க,

"மனசிருந்தா முடியும்" என்றவள் கூர்மையாய் மேடையையே பார்த்திருந்தாள்.

மேடையில் மகிழ் அருகில் நின்றிருந்த ப்ரியா அவனை பார்த்து "இன்னைக்கு பார்க்கவே ரொம்ப ஸ்பெஷலா ஸ்மார்ட்டா தெரியிரீங்களே மகிழ்?!" என்று மைக்கில் ஒரு போடு போட்டாள்.

மாயாவிற்கு உள்ளூர தீ கொழூந்து விட்டு எரிய,"திஸ் இஸ் டூ மச்" என்றவள் பொறும,

ஜென்னி அவளிடம் "ஏ லூசு மாயா... நீ ஒரூ வீஜே வோட வொய்ஃப்... இப்படியெல்லாம் ஸில்லியா திங் பண்ண கூடாது" என்றவள் சொல்லவும்,

அதற்குள் மேடையில் மகிழ் "நீங்களும்தான் ப்ரியா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க" என்று சொல்லி தொலைத்தான்.

மாயாவின் முகம் சிவப்பேற,

ஜென்னி புன்னகையோடு 'மகிழ் நிலைமை கஷ்டம்தான்' என்று எண்ணி கொண்டாள்.

விளையாட்டாய் பேச்சை ஆரம்பித்து இருவரும் வெகுபிரமாதமாய் அந்த விருது வழங்கும் விழாவை தொகுத்து கொண்டிருக்க, மாயாவுக்குதான் உள்ளூர புகைந்து கொண்டிருந்தது.

வரிசையாக பலரும் விருதுகளை பெற்று கொண்டிருக்க, சையத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது.

அவன் ஜென்னியை வைத்து எழுதி இயக்கிய ரௌத்திரம் பழகு என்ற படத்திற்கு.

அந்த படம் அவன் வீழ்ச்சியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திருப்பியிருந்தது.

மகிழ் விருது வாங்கி நின்ற சையத்திடம் "என்ன சையத் சார் ?... இந்த அவார்ட் இல்லாம... உங்களுக்கு டபுள் அவார்ட் கிடைச்சிருக்காமே" என்று கிண்டலடித்த சிரிக்க,

அவன் பதில் சொல்லாமல் நெகழ்ச்சியுற நிற்க,

"அதென்ன இரண்டு அவார்ட் மகிழ்" ப்ரியா கேட்க,

"சையத் சாருக்கு ட்வின்ஸ் பிறந்திருக்கு... அதோட இந்த படத்தோட வெற்றி... அதோட வரிசையாய் நிறைய படங்கள் வேற.."

"வாவ்... கம்மான் சையத் சார்... உங்க சந்தோஷத்தை எங்ககிட்டயும் ஷேர் பண்ணிக்கலாமே" என்றாள் ப்ரியா.

சையத் புன்முறுவலோடு "எல்லாமே அல்லாவோடு அருளாலும் எங்க அம்மா அப்பாவோடு ஆசிகளாலும் என் அன்பான மனைவியாலும்தான்... " என்று சொல்லவும் அரங்கம் அதிர கைதட்டல்கள் கேட்டது.

"சொல்ல வேண்டியதை நச்சுன்னு சொல்லிட்டாரு" ப்ரியா சொல்ல,

"அதுதானே சையத் சாரோட ஸ்டைல்" என்று முடித்தான் மகிழ்.
இறுதியாய் பெஸ்ட் ஹீரோயின் என்ற கேட்டகிரி வரவும்,


எல்லோருக்குமே சந்தேகமின்றி தெரியும் அது ஜென்னித்தாதான் என்று.

அவள் பெயரை சொல்ல போகும் தருணத்திற்காக ஆவலாக பலரும் எதிர்பார்த்திருக்க,

"தி வின்னர் இஸ் கார்ஜியஸ் அன் ப்யூட்டிப்புஃல் லுக்கிங்

ஜென்னித்தா" என்று அறிவிக்கப்பட்டது.

கைத்தட்டல் ஒலிகளும் ஆரவாரங்களும் கேட்க ஜென்னி மேடையேறினாள்.

உள்ளூர பயமும் தயக்கமும் அவளை பின்னுக்கு இழுத்தது.

அவள் வாழ்க்கையில் கடந்து வந்த சிரமங்கள் தாண்டி இப்போது அவள் கடக்க போவதுதான் அத்தனை சிரமத்திற்குரிய விஷயமாய் இருக்க போகிறது.

பல பெண்களும் அவளை போல் பல சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது மறுக்கப்பட முடியாத நிதர்சனம்.

ஆனால் அவள் இப்போது செய்ய துணியும் காரியத்தை யாரும் செய்ய துணிய மாட்டார்கள்.

டேவிடும் அவளின் மனநிலையை அவள் முகத்தை வைத்தே ஆராய்ந்து தெரிந்து கொண்டான்.

அவள் அருகில் இப்போது துணையாய் நிற்க வேண்டும் என்று அவன் மனமெல்லாம் துடிக்க,

ஜென்னி மேடையேறி அவளுக்கான விருதை பெற்றாள்.

ப்ரியா புன்னகையோடு "நீங்க உண்மையிலயே அந்த படத்தில நடிச்சீங்கன்னு சொல்ல முடியாது...ஜென்னி... யூ ஜஸ்ட் லிவ்ட் இட்" என்றாள்.

ஜென்னித்தா புன்னகை ததும்ப "தேங்க் யூ ப்ரியா... ஆனா இந்த புகழுக்கும் பாராட்டுக்கும்ம் உரியவர் இந்த படத்தோட டைரக்டர் ஆஸ் வெல் ஆஸ் மை ப்ரண்ட் சையத்... அவருக்குதான் நான் தேங்க் பண்ணனும்" என்றவள் நிறுத்தி,

"தேங்க்யூ சையத்... இப்படி ஒரு கேரக்டர்ல என்னை நடிக்க வைச்சதுக்கு... " என்றாள்.

ஜென்னி தயங்கிய பார்வையோடு

"இங்க இன்னும் நான் சில முக்கியமான விஷயங்களை ஷேர் பண்ணிக்கனும்... பண்ணிக்கலாமா ?" என்று கேட்க,

"ப்ளீஸ்" என்று ப்ரியா அவளை பேச சொன்னாள்.

இதயம் படபடக்க ஜென்னி பேச ஆரம்பித்தாள்.

"நான் இன்னைக்கு இங்க இருக்கேன்... ஆனா இதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன்னு எல்லோருமே தெரிஞ்சிக்கனும்னு ஆசைபடறேன்" என்றவள் சொல்ல மகிழும் மாயாவும் அதிர்ச்சியாய் அவளை பார்த்தனர்.

ஆனால் டேவிடுக்கு அத்தகைய அதிர்ச்சி இல்லை. அவனிடம் சொன்ன பின்னரே அவள் அந்த காரியத்தை செய்கிறாள்.

அவனுடைய பயமே அவள் அழுதுவிடாமல் திடாமாய் பேச வேண்டுமென்பதே.

ஜென்னி அவள் பார்வையிழந்தவளாய் எதிர்கொண்ட சொல்லவொண்ணாத துயரங்களையும் விரிவாய் அத்தனை பேர் முன்னிலையிலும் விவரிக்க, அந்த அரங்கமே கனத்த மௌனத்தை சுமந்து கொண்டிருந்தது.

அவள் கதையை கேட்ட எல்லோரின் விழிகளிலும் நீர் துளிர்த்து விழ, அவள் மட்டும் கலங்கவில்லை.

மகிழின் முகம் வேதனையில் சிவப்பேறி இருக்க,. மாயாவுக்கு அவள் உணர்வுகளை கட்டூக்குள் வர முடியவில்லை.

தான் கடந்து வந்த பாதையை சொல்லி முடித்தவள்,

"ஏன் நான் இதையெல்லாம் இங்க சொல்றேன்னு எல்லோருக்கும் தோணும்... என்னை மாதிரி பாதிக்கப்பட்ட பெண்கள் முடங்கி போயிட கூடாது... இனி நமக்கு வாழ்க்கையே இல்லைன்னு தவறான முடிவை நோக்கி போயிடவே கூடாது... மனோதிடமா எல்லா பிரச்சனைகளும் கடந்து வந்து அவங்க கஷ்டத்தை ஜெய்ச்சி நிற்கனும்...

அதே போல உடலில் குறை இருக்கிறவங்கல அவங்க குறைகளை சுட்டிகாட்டி பேசிறதும் அவங்க பலவீனத்தை நமக்கு சாதகமா பயண்படுத்திக்க நினைக்கிறது ரொம்ப ரொம்ப தவறான விஷயம்..

இதை நான் அனுபவப்பூர்வமா சொல்றேன்...

நான் இன்னைக்கு இந்த இடத்தை அடைஞ்சிருக்கேன்னா பலரும் எனக்கு உதவியிருக்காங்க...

என் நண்பர்கள் மகிழ் மாயா தியா எனக்கு புது அடையாளத்தை கொடுத்த என்னோட பேரண்ட்ஸ் விக்டர் ஜென்னிபஃர் அதோட என் மாமனார் தாமஸ்...

லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்...
எனக்கு உயிர் கொடுத்த


எனக்கு விழி கொடுத்த

நண்பனா தோள் கொடுத்த

கணவனா காதல் கொடுத்த

என் வெற்றிக்காக இன்னைக்கு

இந்த மேடையும் கொடுத்திருக்காரு...

மை பெட்டர் ஹாஃவ்... என் லைஃப்ல வந்த ரியல் ஹீரோ ... டேவிட்

அவர் இல்லன்னா நான் இல்லை. ஒரு பெண்ணுக்கு அவரை போல ஒரு துணை கிடைச்சுட்டா இந்த வெற்றி எல்லாம் சர்வ சாதாரணம்...

என்னோட இந்த அவார்ட்... இந்த வெற்றி இரண்டையும் என்னுடைய ஆருயிர் கணவர் டேவிடுக்காக நான் டெடிக்கேட் பன்றேன்...

ஐ லவ் யூ டேவிட்" என்று சொல்லி முடிக்கும் போது அவள் கன்னங்கள் கண்ணீரால் முழுமையாக நனைத்திருந்தன.

மகிழும் அவள் சொன்னவற்றை கேட்டு நெகிழ்ச்சியானவன் தன்னிலை பெற்று "டேவிட் சார்... ப்ளீஸ் கம் ஆன் டூ தி ஸ்டேஜ்" என்றான்.

டேவிடுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவள் தன்னை பற்றிய உண்மையை சொல்ல போகிறேன் என்று மட்டும்தானே சொன்னாள்.

ஆனால் அவள் இப்படியெல்லாம் பேசுவாள் என்று அவன் துளியளவும் எதிர்பார்க்கவில்லை.

அவன் இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்தபடி நிற்க,

மகிழ் மேடைக்கு அழைத்ததை உணர்ந்து தன் கண்ணீரை அழுந்த துடைத்து கொண்டவன்,

அந்த பிரமாண்டமான மேடையிலிருந்த பின்புற கதவிலிருந்து மேடைக்குள் நுழைந்தான்.

அவன் வருகையை பார்த்ததும் எல்லோருமே எழுந்து நிற்க, அந்த அரங்கமே கைதட்டல் ஓலியில் மிதந்து மூழ்கி கொண்டிருந்தது.

நெகிழ்ச்சியாய் தன் மனைவியை பார்த்து சமிஞ்சையால் ஏன் இப்படி எல்லாம் என்று கேட்க,

அவள் அரங்கத்தினர்கள் அவனுக்கு செலுத்தும் மரியாதையை காண்பித்து

'யூ மஸ்ட் டிஸர்வ் திஸ் டேவிட்' என்று அழுகை தொனியில் உரைக்க,

அவன் தன்னவளை பார்த்து பேச்சற்று நின்றான்.

அன்று தாமஸ் தன் மகனை கண்டு அத்தனை பெருமிதம் கொண்டவர் ஜென்னி போன்ற பெண் அவனுக்கு துணைவியாக வந்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்திருந்தார்.

ஒரு தீயவனை அடையாளம் கண்டு தண்டிக்கப்படுவது எத்தனை முக்கியமோ அந்தளவுக்கு ஒரு நல்லவன் அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.

டேவிட் போன்றவர்கள் அங்கீகரித்து பாராட்ட பட வேண்டியவர்கள்.

நல்லவனாய் வாழ்வது இந்த உலகத்திலயே சிரமமான காரியம் என்ற நிதர்சனத்தை டேவிட் உணர்ந்தாலும் அவன் நிலையில் இருந்து கிஞ்சிற்றும் பிறழவில்லை.

அதனாலயே இன்று எல்லோர் முன்னிலையிலும் அவன் உயர்வாகவும் நிமிர்வாகவும் நின்றான்.

My fav lovable song for my lovable david

Hi friends,

இந்த கதையோட கடைசி அத்தியாயத்தை கொடுத்து முடிக்கும் போது ஒரு Complete feel,

நானே இந்த கதை ரொம்ப நேசிச்சி எழுதினேன். நானுமே டேவிடை லவ் பண்ணேன்னுதான் சொல்லனும்.

இந்த கதையை குறித்த என்னுடைய சில கருத்துக்களையும் முக்கியமா இந்த கதை எனக்குள்ள வந்த sparkயும் Epilogue ல பகிர்ந்துக்கிறேன்.

அப்படியே சில நன்றியுரைகளோடு உங்க எல்லோரையும் விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்.

Wait for the epilogue
Ethana varusam aachu nu sollalla ka... Appuram kulanthai jenni and david ku illaya
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Wowoooooow.... Moni very spl story.... Lovely fantastic....
Yevlo thadaikal vanthalum thagarthuttu phoenix paravaiya vantha jeni and chance illa nu solra charecter David... Marvelous...
Love u David... Love u soo much... And miss u both!
Unga journey la intha story oru mile stone moni... Different platform... Suspense... Oru thriller range ku irunthuchi.... Awesome...
All the very best to win!
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
Monisha
nice endingma solla vaarthavaravillai devit pol oru manithan jenni vaalvil oru devathodan thaan avanai perumai paduthuyathu intha epi eppavavum aangalin thavarugalai suttikaatuvathil irukkum alavu nallamanathulla aankalin seyalgal velikaatapaduvathillai ippadiyum oruvan namma ellor manathilum pramibai erpaduthiyulaan thanks for very good message novel and waiting for nachunu oru epilogue monisha once again thanks for very good novelma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top