Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
தூய்மையான காதல்
வள்ளி பரபரப்பாய் மகிழ் வேலைக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மேற்கொண்டிருந்தார்.
அந்த சமயம் மகிழோ படாதபாடுபட்டு அழுது கொண்டிருக்கும் தன் ஒன்றரை வயது மகள் சாக்ஷியை சமாதானப்படுத்தி கொண்டிருந்தான்.
மகிழ் அவனுக்கு பெண் குழந்தை பிறந்த உடனேயே முடிவெடுத்துவிட்டான்.
அவளுக்கு சாக்ஷி என்று பெயரிட வேண்டுமென்று. மாயாவும் அதே எண்ணத்தைதான் கொண்டிருந்தாள்.
ஆனால் ஜென்னி அதற்கு பிடிவாதமாய் மறப்பு தெரிவித்தாள். தான் சாக்ஷியாய் பட்ட துன்பங்களை வேறெந்த பெண்ணும் இம்மியளவும் பெறக் கூடாதே என்ற எண்ணம்தான்.
ஆனால் மாயா மகிழ் இருவரும் தங்கள் மகளுக்கு பிடிவாதமாய் சாக்ஷி என்ற பெயரையே சூட்டிவிட்டனர்.
மகிழ் தன் மகளை கரத்தில் ஏந்தி கொண்டு,
"ஏன் அழறீங்க... இதோ பாட்டி... பால் கலக்கி எடுத்துட்டு வந்திருவாங்க... அழக்கூடாது" என்றவன் அவளை அமைதியடைய செய்ய முயன்று முடியாமல் அவதியுற்றிருந்தான்.
யார் எத்தனை பொறுப்பாக பார்த்து கொண்டாலும் குழந்தைகளுக்கு அம்மாதானே முதல் முக்கிய தேவை.
ஆனால் என்ன செய்வது?
மாயா ஓரிசாவில் உள்ள சில பார்வையற்ற குழந்தைகளுக்கு தன் நிறுவனம் மூலமாக பார்வை கிடைப்பதற்கு வேண்டிய உதவிகளை ஏற்பாடு செய்ய சென்றிருக்கிறாள்.
அவள் ஏற்படுத்திய சாக்ஷி சைட் சேவர் ஆர்கனைஷன் இந்தியா முழுக்க தம் புகழை பரப்பியதில்லாமல் பலரின் பாராட்டுதல்களையும் உதவி தொகைகளையும் அள்ளி குவித்து கொண்டிருந்தது.
அவள் ஆசைப்பட்டதும் அதைதானே.
அவளின் உதவி பலருக்கும் தேவைப்படும் போது குழந்தையை பார்த்து கொள்ளும் பொறுப்பை மகிழ் ஏற்று கொண்டான்.
இன்று தாயின் அருகாமையை அவன் மகள் தொலைத்திருந்தாலும் ஒரு நாள் தன் தாயை கண்டு பெருமிதம் கொள்வாள் அல்லவா.
தன் தாயை போல அவளும் பலருக்கும் உதவிகள் புரிவாள். அதற்காக இந்த சிற்சில பிரிவுகள் ஒன்றும் பெரிய விஷயமல்ல.
மகிழ் அலுவலகத்திற்கு புறப்பட தயாராகி நின்றவன் தன் மகளிடம்
"சாக்ஷி செல்லம்... அப்பா ஆபிஸ் போயிட்டு வர வரைக்கும் நீங்க பாட்டியை தொந்தரவு செய்யாம பார்த்துக்கனும்" என்றான்.
அதன் பிறகு மகளை தன் தாயிடம் விட்டு புறப்பட்டவன்,
"அவார்ட் பங்ஷன் வொர்க்லாம் போயிட்டிருக்கு... ஸோ நைட் வர மாட்டேன் மா... கொஞ்சம் நீயும் அப்பாவும் சமாளிச்சுக்கங்க" என்றதும்
அவரும் "சரி ப்பா... நீ பார்த்து போ" என்று வழியனுப்பினர்.
அவன் புறப்பட்ட சென்ற சில நிமிடங்களில் கைப்பேசியில் தன் மனைவியின் அழைப்பை பார்த்து ஆனந்தம் பொங்க அழைப்பை ஏற்றவன்,
"எப்படி இருக்கீங்க மகிழ் ? பாப்பா எப்படி இருக்கா ?" என்றவள் வினவ,
"நீ இல்லாம நாங்க இரண்டு பேரும் ரொம்ப கஷ்டபடிறோம் டி.. எப்போதான் வருவ. ?!" என்றவன் தவிப்போடு கேட்க,
"வேலை முடிஞ்சாலும் முடியல்லன்னாலும் நான் நாளைக்கு ஈவனிங் சென்னையில இருப்பேன் ல... சாக்ஷி மேடையில ஏறி அவார்ட் வாங்கிறது பார்க்கனும் ல" என்க,
அவன் கோபமாக,
"அப்ப கூட உன் ப்ரண்ட் அவார்ட் வாங்கிறது பார்க்கத்தான் வருவ... எங்களை பார்க்க இல்ல" என்று ஏக்கமாய் கேட்டான்.
"உங்களை பார்க்காம எப்படி ? அதையும் பார்க்கதானே வர்றேன்... அந்த கோ காம்பியர் பிரியா கிட்ட நீங்க எப்படி பேச போறீங்கன்னு" எனறாள்.
"அம்மா தாயே... நீ நினைக்கிற மாறி எல்லாம் இல்ல... நாங்க ஜஸ்ட் ப்ரொக்ரம்காகதான் அப்படி பேசிக்கிறோம் ?"
"அப்படி ஒண்ணும் தெரியலயே"
"பேசாம இந்த வேலையை விட்டிரேன்... அப்பையாச்சும் நீ நிம்மதியா இருப்ப"
"ஆமாம் எங்க போனாலும் உங்க பின்னாடி சுத்தவே ஒரு கூட்டம் இருக்கே" என்று பொறுமியவளுக்கு அவன் என்ன சமாதானம் உரைப்பான்.
அவன் எங்கே சென்றாலும் அவனை ஒரூ பத்து பெண்கள் ரசிகை என்ற பெயரில் சூழ்ந்து கொள்ள, அதை பார்ப்பவளுக்கு கோபம் பொங்கி கொண்டு வந்தது.
எங்கு இருந்தாலும் அவன் தன்னவனாக மட்டுமே இருக்க வேண்டுமே என்ற உரிமை.
அதை அவனாலும் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆதலாலயே அவன் திறமையை கண்டு நடிக்க படவாய்ப்புகள் வரும் போது கூட அவற்றை தவிர்த்துவிட்டான்.
நடிப்பாகவே இருந்தாலும் காதல் காட்சிகளில் வேறு பொண்ணோடு அவன் இருப்பதை கூட மாயாவால் தாங்கி கொள்ள முடியாது.
இருவரும் சில நொடிகள் மௌனம் காத்திட,
மாயா அவனிடம் "ஸாரி மகிழ்... ஹார்ட் பன்ற மாறி பேசிட்டேனா ? ஐ லவ் யூ ஸோ மச்... அதான்" என்க,
அவனும் அவள் குரலில் இழைந்த காதலை உணர்ந்தவனாய்,
"ஐ லவ் யூ டி... அன் ஐம் மிஸ்ஸிங் யூ டெரிப்பளி" என்றதும் அவள் முகம் பளீரென்று அத்தனை பிரகாசமாய் மாறியது.
அதை அவன் பார்த்திராவிட்டாலும் அவள் மௌனத்தின் மூலமாகவே அதனை உணர்ந்து கொண்டான்.
************
சையத் வீட்டில் ஓரே ஆர்பாட்டமாய் இருந்தது.
விருது வழங்கும் விழாவிற்கு போக, அஃப்சானா ஆஷிக் இருவருமே எந்த உடையை அணிந்து கொள்வதென்று குழப்பத்தில் இருந்தனர்.
அங்கே இத்தனை ரணகளம் நடந்து கொண்டிருந்தாலும் சையத்தின் குழந்தைகள் உறங்கி கொண்டிருந்தன.
அவன் குடும்ப வம்சாவெளி இரட்டை பிள்ளைகளாக பிறந்திருந்தது.
இரண்டுமே ஆண் குழந்தைகள்.
ஒருவனுக்கு கரீம் என்று தன் தந்தை பெயரை சூட்டியவன் இன்னொருவனுக்கு சிவா என்று மதுவின் தந்தை பெயரை சூட்டியிருந்தான்.
தன் குழந்தைகளை ஏக்கமாய் பார்த்திருந்தவனுக்கு பூரிப்போடு சேர்த்து வருத்தமும் கூட.
அவன் ஜென்னியை வைத்து எடுத்த ரௌத்திரம் பழகு என்ற படம் அமோக வெற்றி.
யாருமே எதிர்பாராத அளவுக்கு வசூலை அள்ளியது.
பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்க, அவனை வாய்ப்புகள் விரும்பி தேடிவந்தன.
அவன் இயக்கத்தில் நடிக்க பல நாயகர்கள் முன்னே வந்து நிற்க, மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென்ற தனித்துவமான இடத்தை தக்க வைத்து கொண்டுவிட்டான் சையத்.
அதே நேரம் தன் குழந்தைகளோடு இருந்து விளையாடி நேரம் கழிக்க முடியவில்லையே என்ற லேசான நெருடல்.
அதுவும் இரட்டை குழந்தைகள் எனும் போது அவனுக்கு வார்த்தைகளால் விவரித்திட முடியாத சந்தோஷம்.
சையத் ஆவலாக "எப்போ மது இவங்க இரண்டு பேரும் எழுந்திருப்பாங்க ?" என்று கேட்க,
"அய்யோ... எழுப்பி விட்டிராதீங்க... இரண்டு பேரும் ஒண்ணா தூங்கிறதே பெரிய விஷயம்" என்றவள் உரைக்க ஏக்கமாய் பெருமூச்செறிந்தவன்
தன் மனைவியின் புறம் திரும்பி,
அவள் கன்னங்களை ஆசையாய தழுவியபடி "பசங்க உன்னை ரொம்ப கஷ்ட கொடுக்கிறாங்களா மது ?" என்று கவலை தோய்ந்த முகத்தோடு கேட்டான்.
"இந்த மாதிரி கஷ்டங்கள் கூட சந்தோஷம்தான்" என்றவள் சொல்ல நெகிழ்ந்தபடி அவளை அணைத்து கொண்டவன்,
"நீயும் அவார்ட் பஃங்ஷனுக்கு வந்தா நல்லா இருந்திருக்கும்" என்றதுமே
அவள் புன்முறுவலோடு "பரவாயில்லைங்க நான் டீவில பார்த்துப்பேன்... அதுவும் இல்லாம இதோடவா முடிஞ்சிர போகுது... உங்க திறமைக்கு இன்னும் நிறைய நிறைய அவார்ட் கிடைக்கும்... அந்த பங்கஷனுக்கெல்லாம் நான் மிஸ் பண்ணாம வந்து பார்ப்பேன்..." என்றவள் நம்பிக்கையாக உரைக்க அவளை தன்னோடு இறுக்கி கொண்டு கண்ணீர் பெருக்கினான்.
வாழ்க்கையில் வரும் இன்பம் துன்பங்களை ஒன்றாய் கை கோர்த்தபடி கடப்பதுதான் உண்மையான கணவன் மனைவி உறவு.
அத்தகைய தம்பதிகளாக சையத்துக் மதுவும் இருந்தனர்.
******
ஜென்னி வீட்டிலும் விருதும் வழுங்கும் விழாவை பற்றிய கவலைதான்.
ஜென்னியின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அந்த விழாவிற்கு செல்வதற்கான மூன்று ரக ஆடைகள் வடிவமைக்கப்பட்டு வந்துவிட்டன.
அவளுக்கு எதை அணிந்து கொள்வதென்ற குழப்பம்தான்.
மூன்றுமே வெவ்வேறு விதத்தில் அழகுதான்.
குழப்பமுற்றவள் "இது மூணுத்தில எது நல்லா இருக்கு ரூப்ஸ்" என்று ரூபாவிடம் வினவ,
"நீங்க எது போட்டாலும் ரொம்ப அழகா இருக்கும் மேடம்" என்றாள்.
"அழகுங்கிறது வேற... யார மாதிரியும் இல்லாம நாம யுனிக்கா இருக்கிறதுதான் முக்கியம்" என்றவள் சொல்ல ரூபாவிற்கு விளங்கவில்லை, மூன்றில் எதை தேர்ந்தெடுப்பதன்று.
இந்த குழப்பம் நீடித்திருக்க, டேவிடிடம் கேட்டால்தான் சரியாக இருக்கும் என்று அவன் வருகைக்காக காத்திருந்தாள்.
டேவிட் வீட்டிற்கு வந்தடைந்தன்
அவன் உடையெல்லாம் மாற்றிக் கொண்டு தன் அலுவலக வேலைகளை பார்க்க யத்தனிக்க,
ஜென்னி அவனை நிறுத்தி, "வேலையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் இங்க வாங்க" என்றழைக்க,
அவனும் அவளோடு சென்றான்.
அங்கே வைத்திருந்த ஆடைகளை காண்பித்தவள், "மூணுத்தில எதை நான் அவார்ட் பங்க்ஷனுக்கு போட்டுக்கட்டும் டேவிட்" என்று வினவினாள்.
அவளை ஒரு முறை பார்த்தவன் மூன்று ஆடைகளையும் ஆழ்ந்து பார்த்துவிட்டு, சில நொடிகள் யோசித்தான்.
பின்னர் ஒரு ஊதா நிற லாங் கவுனை கையில் எடுத்து "இந்த வைலட் டிரஸ்" என்றான் பளிச்சென்று.
"என்ன நீங்க. ? பட்டுன்னு செலக்ட் பண்ணிட்டீங்க... நான் ரொம்ப குழம்பிட்டிருந்தேன்" என்றாள்.
அவன் அவள் தோள்மீது தன் கரங்களை மாலையாய் கோர்த்தவன் "என் வொய்ஃப்க்கு எது பெஸ்ட்டா இருக்கும்னு எனக்கு தெரியாதா ?! அன் மோரோவர் அந்த டிரஸ் ரொம்ப யுனிக்கா இருக்கு" என்றான்.
அவள் அவனை அதிசயத்து பார்த்தாள்.
தான் மனதில் எண்ணுவதை சொல்வதற்கு முன்னாடியே அதை செய்து முடிப்பதில் அவனுக்கு நிகர் அவன்தான்.
வியப்பாய் அவனை அவள் பார்த்துகொண்டிருக்க, அவன் மெல்ல அவளை நெருங்கி வந்திருந்தான்.
"விடுங்க டேவிட்" என்று அவன் கரத்தை அவள் தட்டிவிட,
அவன் மீண்டும் அவளை நெருங்கியபடி "அவார்ட் பங்க்ஷன் வொர்கெல்லாம்... மண்டையை பிளக்குது... என்னோட ஒரே ரிலேக்ஷனே நீதானே ஜென்னி" என்றவன் சொல்ல,
"ஆஹான்" என்றவள் குறும்பாய் புன்னகையித்து விலகி போனவள்,
அந்த ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
வள்ளி பரபரப்பாய் மகிழ் வேலைக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மேற்கொண்டிருந்தார்.
அந்த சமயம் மகிழோ படாதபாடுபட்டு அழுது கொண்டிருக்கும் தன் ஒன்றரை வயது மகள் சாக்ஷியை சமாதானப்படுத்தி கொண்டிருந்தான்.
மகிழ் அவனுக்கு பெண் குழந்தை பிறந்த உடனேயே முடிவெடுத்துவிட்டான்.
அவளுக்கு சாக்ஷி என்று பெயரிட வேண்டுமென்று. மாயாவும் அதே எண்ணத்தைதான் கொண்டிருந்தாள்.
ஆனால் ஜென்னி அதற்கு பிடிவாதமாய் மறப்பு தெரிவித்தாள். தான் சாக்ஷியாய் பட்ட துன்பங்களை வேறெந்த பெண்ணும் இம்மியளவும் பெறக் கூடாதே என்ற எண்ணம்தான்.
ஆனால் மாயா மகிழ் இருவரும் தங்கள் மகளுக்கு பிடிவாதமாய் சாக்ஷி என்ற பெயரையே சூட்டிவிட்டனர்.
மகிழ் தன் மகளை கரத்தில் ஏந்தி கொண்டு,
"ஏன் அழறீங்க... இதோ பாட்டி... பால் கலக்கி எடுத்துட்டு வந்திருவாங்க... அழக்கூடாது" என்றவன் அவளை அமைதியடைய செய்ய முயன்று முடியாமல் அவதியுற்றிருந்தான்.
யார் எத்தனை பொறுப்பாக பார்த்து கொண்டாலும் குழந்தைகளுக்கு அம்மாதானே முதல் முக்கிய தேவை.
ஆனால் என்ன செய்வது?
மாயா ஓரிசாவில் உள்ள சில பார்வையற்ற குழந்தைகளுக்கு தன் நிறுவனம் மூலமாக பார்வை கிடைப்பதற்கு வேண்டிய உதவிகளை ஏற்பாடு செய்ய சென்றிருக்கிறாள்.
அவள் ஏற்படுத்திய சாக்ஷி சைட் சேவர் ஆர்கனைஷன் இந்தியா முழுக்க தம் புகழை பரப்பியதில்லாமல் பலரின் பாராட்டுதல்களையும் உதவி தொகைகளையும் அள்ளி குவித்து கொண்டிருந்தது.
அவள் ஆசைப்பட்டதும் அதைதானே.
அவளின் உதவி பலருக்கும் தேவைப்படும் போது குழந்தையை பார்த்து கொள்ளும் பொறுப்பை மகிழ் ஏற்று கொண்டான்.
இன்று தாயின் அருகாமையை அவன் மகள் தொலைத்திருந்தாலும் ஒரு நாள் தன் தாயை கண்டு பெருமிதம் கொள்வாள் அல்லவா.
தன் தாயை போல அவளும் பலருக்கும் உதவிகள் புரிவாள். அதற்காக இந்த சிற்சில பிரிவுகள் ஒன்றும் பெரிய விஷயமல்ல.
மகிழ் அலுவலகத்திற்கு புறப்பட தயாராகி நின்றவன் தன் மகளிடம்
"சாக்ஷி செல்லம்... அப்பா ஆபிஸ் போயிட்டு வர வரைக்கும் நீங்க பாட்டியை தொந்தரவு செய்யாம பார்த்துக்கனும்" என்றான்.
அதன் பிறகு மகளை தன் தாயிடம் விட்டு புறப்பட்டவன்,
"அவார்ட் பங்ஷன் வொர்க்லாம் போயிட்டிருக்கு... ஸோ நைட் வர மாட்டேன் மா... கொஞ்சம் நீயும் அப்பாவும் சமாளிச்சுக்கங்க" என்றதும்
அவரும் "சரி ப்பா... நீ பார்த்து போ" என்று வழியனுப்பினர்.
அவன் புறப்பட்ட சென்ற சில நிமிடங்களில் கைப்பேசியில் தன் மனைவியின் அழைப்பை பார்த்து ஆனந்தம் பொங்க அழைப்பை ஏற்றவன்,
"எப்படி இருக்கீங்க மகிழ் ? பாப்பா எப்படி இருக்கா ?" என்றவள் வினவ,
"நீ இல்லாம நாங்க இரண்டு பேரும் ரொம்ப கஷ்டபடிறோம் டி.. எப்போதான் வருவ. ?!" என்றவன் தவிப்போடு கேட்க,
"வேலை முடிஞ்சாலும் முடியல்லன்னாலும் நான் நாளைக்கு ஈவனிங் சென்னையில இருப்பேன் ல... சாக்ஷி மேடையில ஏறி அவார்ட் வாங்கிறது பார்க்கனும் ல" என்க,
அவன் கோபமாக,
"அப்ப கூட உன் ப்ரண்ட் அவார்ட் வாங்கிறது பார்க்கத்தான் வருவ... எங்களை பார்க்க இல்ல" என்று ஏக்கமாய் கேட்டான்.
"உங்களை பார்க்காம எப்படி ? அதையும் பார்க்கதானே வர்றேன்... அந்த கோ காம்பியர் பிரியா கிட்ட நீங்க எப்படி பேச போறீங்கன்னு" எனறாள்.
"அம்மா தாயே... நீ நினைக்கிற மாறி எல்லாம் இல்ல... நாங்க ஜஸ்ட் ப்ரொக்ரம்காகதான் அப்படி பேசிக்கிறோம் ?"
"அப்படி ஒண்ணும் தெரியலயே"
"பேசாம இந்த வேலையை விட்டிரேன்... அப்பையாச்சும் நீ நிம்மதியா இருப்ப"
"ஆமாம் எங்க போனாலும் உங்க பின்னாடி சுத்தவே ஒரு கூட்டம் இருக்கே" என்று பொறுமியவளுக்கு அவன் என்ன சமாதானம் உரைப்பான்.
அவன் எங்கே சென்றாலும் அவனை ஒரூ பத்து பெண்கள் ரசிகை என்ற பெயரில் சூழ்ந்து கொள்ள, அதை பார்ப்பவளுக்கு கோபம் பொங்கி கொண்டு வந்தது.
எங்கு இருந்தாலும் அவன் தன்னவனாக மட்டுமே இருக்க வேண்டுமே என்ற உரிமை.
அதை அவனாலும் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆதலாலயே அவன் திறமையை கண்டு நடிக்க படவாய்ப்புகள் வரும் போது கூட அவற்றை தவிர்த்துவிட்டான்.
நடிப்பாகவே இருந்தாலும் காதல் காட்சிகளில் வேறு பொண்ணோடு அவன் இருப்பதை கூட மாயாவால் தாங்கி கொள்ள முடியாது.
இருவரும் சில நொடிகள் மௌனம் காத்திட,
மாயா அவனிடம் "ஸாரி மகிழ்... ஹார்ட் பன்ற மாறி பேசிட்டேனா ? ஐ லவ் யூ ஸோ மச்... அதான்" என்க,
அவனும் அவள் குரலில் இழைந்த காதலை உணர்ந்தவனாய்,
"ஐ லவ் யூ டி... அன் ஐம் மிஸ்ஸிங் யூ டெரிப்பளி" என்றதும் அவள் முகம் பளீரென்று அத்தனை பிரகாசமாய் மாறியது.
அதை அவன் பார்த்திராவிட்டாலும் அவள் மௌனத்தின் மூலமாகவே அதனை உணர்ந்து கொண்டான்.
************
சையத் வீட்டில் ஓரே ஆர்பாட்டமாய் இருந்தது.
விருது வழங்கும் விழாவிற்கு போக, அஃப்சானா ஆஷிக் இருவருமே எந்த உடையை அணிந்து கொள்வதென்று குழப்பத்தில் இருந்தனர்.
அங்கே இத்தனை ரணகளம் நடந்து கொண்டிருந்தாலும் சையத்தின் குழந்தைகள் உறங்கி கொண்டிருந்தன.
அவன் குடும்ப வம்சாவெளி இரட்டை பிள்ளைகளாக பிறந்திருந்தது.
இரண்டுமே ஆண் குழந்தைகள்.
ஒருவனுக்கு கரீம் என்று தன் தந்தை பெயரை சூட்டியவன் இன்னொருவனுக்கு சிவா என்று மதுவின் தந்தை பெயரை சூட்டியிருந்தான்.
தன் குழந்தைகளை ஏக்கமாய் பார்த்திருந்தவனுக்கு பூரிப்போடு சேர்த்து வருத்தமும் கூட.
அவன் ஜென்னியை வைத்து எடுத்த ரௌத்திரம் பழகு என்ற படம் அமோக வெற்றி.
யாருமே எதிர்பாராத அளவுக்கு வசூலை அள்ளியது.
பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்க, அவனை வாய்ப்புகள் விரும்பி தேடிவந்தன.
அவன் இயக்கத்தில் நடிக்க பல நாயகர்கள் முன்னே வந்து நிற்க, மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென்ற தனித்துவமான இடத்தை தக்க வைத்து கொண்டுவிட்டான் சையத்.
அதே நேரம் தன் குழந்தைகளோடு இருந்து விளையாடி நேரம் கழிக்க முடியவில்லையே என்ற லேசான நெருடல்.
அதுவும் இரட்டை குழந்தைகள் எனும் போது அவனுக்கு வார்த்தைகளால் விவரித்திட முடியாத சந்தோஷம்.
சையத் ஆவலாக "எப்போ மது இவங்க இரண்டு பேரும் எழுந்திருப்பாங்க ?" என்று கேட்க,
"அய்யோ... எழுப்பி விட்டிராதீங்க... இரண்டு பேரும் ஒண்ணா தூங்கிறதே பெரிய விஷயம்" என்றவள் உரைக்க ஏக்கமாய் பெருமூச்செறிந்தவன்
தன் மனைவியின் புறம் திரும்பி,
அவள் கன்னங்களை ஆசையாய தழுவியபடி "பசங்க உன்னை ரொம்ப கஷ்ட கொடுக்கிறாங்களா மது ?" என்று கவலை தோய்ந்த முகத்தோடு கேட்டான்.
"இந்த மாதிரி கஷ்டங்கள் கூட சந்தோஷம்தான்" என்றவள் சொல்ல நெகிழ்ந்தபடி அவளை அணைத்து கொண்டவன்,
"நீயும் அவார்ட் பஃங்ஷனுக்கு வந்தா நல்லா இருந்திருக்கும்" என்றதுமே
அவள் புன்முறுவலோடு "பரவாயில்லைங்க நான் டீவில பார்த்துப்பேன்... அதுவும் இல்லாம இதோடவா முடிஞ்சிர போகுது... உங்க திறமைக்கு இன்னும் நிறைய நிறைய அவார்ட் கிடைக்கும்... அந்த பங்கஷனுக்கெல்லாம் நான் மிஸ் பண்ணாம வந்து பார்ப்பேன்..." என்றவள் நம்பிக்கையாக உரைக்க அவளை தன்னோடு இறுக்கி கொண்டு கண்ணீர் பெருக்கினான்.
வாழ்க்கையில் வரும் இன்பம் துன்பங்களை ஒன்றாய் கை கோர்த்தபடி கடப்பதுதான் உண்மையான கணவன் மனைவி உறவு.
அத்தகைய தம்பதிகளாக சையத்துக் மதுவும் இருந்தனர்.
******
ஜென்னி வீட்டிலும் விருதும் வழுங்கும் விழாவை பற்றிய கவலைதான்.
ஜென்னியின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அந்த விழாவிற்கு செல்வதற்கான மூன்று ரக ஆடைகள் வடிவமைக்கப்பட்டு வந்துவிட்டன.
அவளுக்கு எதை அணிந்து கொள்வதென்ற குழப்பம்தான்.
மூன்றுமே வெவ்வேறு விதத்தில் அழகுதான்.
குழப்பமுற்றவள் "இது மூணுத்தில எது நல்லா இருக்கு ரூப்ஸ்" என்று ரூபாவிடம் வினவ,
"நீங்க எது போட்டாலும் ரொம்ப அழகா இருக்கும் மேடம்" என்றாள்.
"அழகுங்கிறது வேற... யார மாதிரியும் இல்லாம நாம யுனிக்கா இருக்கிறதுதான் முக்கியம்" என்றவள் சொல்ல ரூபாவிற்கு விளங்கவில்லை, மூன்றில் எதை தேர்ந்தெடுப்பதன்று.
இந்த குழப்பம் நீடித்திருக்க, டேவிடிடம் கேட்டால்தான் சரியாக இருக்கும் என்று அவன் வருகைக்காக காத்திருந்தாள்.
டேவிட் வீட்டிற்கு வந்தடைந்தன்
அவன் உடையெல்லாம் மாற்றிக் கொண்டு தன் அலுவலக வேலைகளை பார்க்க யத்தனிக்க,
ஜென்னி அவனை நிறுத்தி, "வேலையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் இங்க வாங்க" என்றழைக்க,
அவனும் அவளோடு சென்றான்.
அங்கே வைத்திருந்த ஆடைகளை காண்பித்தவள், "மூணுத்தில எதை நான் அவார்ட் பங்க்ஷனுக்கு போட்டுக்கட்டும் டேவிட்" என்று வினவினாள்.
அவளை ஒரு முறை பார்த்தவன் மூன்று ஆடைகளையும் ஆழ்ந்து பார்த்துவிட்டு, சில நொடிகள் யோசித்தான்.
பின்னர் ஒரு ஊதா நிற லாங் கவுனை கையில் எடுத்து "இந்த வைலட் டிரஸ்" என்றான் பளிச்சென்று.
"என்ன நீங்க. ? பட்டுன்னு செலக்ட் பண்ணிட்டீங்க... நான் ரொம்ப குழம்பிட்டிருந்தேன்" என்றாள்.
அவன் அவள் தோள்மீது தன் கரங்களை மாலையாய் கோர்த்தவன் "என் வொய்ஃப்க்கு எது பெஸ்ட்டா இருக்கும்னு எனக்கு தெரியாதா ?! அன் மோரோவர் அந்த டிரஸ் ரொம்ப யுனிக்கா இருக்கு" என்றான்.
அவள் அவனை அதிசயத்து பார்த்தாள்.
தான் மனதில் எண்ணுவதை சொல்வதற்கு முன்னாடியே அதை செய்து முடிப்பதில் அவனுக்கு நிகர் அவன்தான்.
வியப்பாய் அவனை அவள் பார்த்துகொண்டிருக்க, அவன் மெல்ல அவளை நெருங்கி வந்திருந்தான்.
"விடுங்க டேவிட்" என்று அவன் கரத்தை அவள் தட்டிவிட,
அவன் மீண்டும் அவளை நெருங்கியபடி "அவார்ட் பங்க்ஷன் வொர்கெல்லாம்... மண்டையை பிளக்குது... என்னோட ஒரே ரிலேக்ஷனே நீதானே ஜென்னி" என்றவன் சொல்ல,
"ஆஹான்" என்றவள் குறும்பாய் புன்னகையித்து விலகி போனவள்,
அந்த ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.