இந்த நாவல் தான் என்னோட முதல் review அக்கா. அப்படின்னு நான் சொல்றேன் ஆமாவா இல்லையா னு நீங்க தான் சொல்லணும்.??
முதல் அத்தியாயத்திலேயே ஆரம்பித்தது விறுவிறுப்பு. அதை கடைசி வரை தேயாமல் கொண்டு சென்ற விதத்திற்க்கே ஒரு பெரிய salute கா உங்களுக்கு.??
மீடியாவின் பின் நடக்கும் கருப்பு பக்கத்தில் ஆரம்பித்து குடி குடியை கெடுக்கும் னு அழுத்தமா பதிவு செய்த அத்தியாயம்... சரி இது தான் கதை கரு போல அப்படினு நினைச்சா திடிரென்று பாலியல் வன்கொடுமையையும் கையில் எடுத்துருக்கீங்க.??
ஒரு பெண் அவளை சுற்றி காக்கவும் அளிக்கவும் என ஐந்து ஆண்கள். இதில் அவளை காப்பது யார்? அழிப்பது யார்? எதற்கு? ஏன்? என்ற கேள்விகளுடன் என்னை பைத்தியமாக்கிய ??கதை கிட்டதட்ட அடிமை ஆகிவிட்டேன் என்றே சொல்லலாம். யார் கதையின் நாயகன் என்றே தெரியாமல் பாதிக்கதை பயணித்தது மறக்க முடியாத அனுபவம். நம் எதிர்பார்ப்புக்கு எதிராக கதையை கொண்டு சென்று இறுதியில் நம் விருப்பத்திற்கு ஏற்பவே முடித்திருக்கிறார்.?? பொதுவாக காதல் தோல்வி கதைகளை நான் விரும்பவே மாட்டேன்... ஆனால் இந்த கதை chanceyae illa. You have a magic in your hands... The way of your writing is very attractive... கடைசியில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும் அத்தியாயம் நான் துள்ளி குதித்து படித்த அத்தியாயம். இதை போல நிஜவாழ்க்கையில் நடக்குமா? என ஏங்கவும் வைத்தது.
நான் கதையை பற்றி விளக்கமாலாம் சொல்லல ஏன்னா சுவாரசியம் குறைந்துடுமோ னு பயமா இருக்குது. அதைவிட review காக நான் திரும்ப படிக்க ஆரம்பிச்சேன் ஆனா என்னால உண்மை தெரிஞ்சு படிக்க முடியல வலிக்குது கா.?? அதனால நான் நாயகன் நாயகி வந்த பகுதி மட்டும் தான் படிச்சேன். அதுவும் இவனும் இல்ல இவனும் இல்ல னு ரிஜெக்ட் பண்ணி ஹீரோ கண்டுபிடிச்சது இந்த கதையில் தான் இருக்கும் செம கா.?
கதையை சுருக்கமா சொல்லணும் னா சாக்ஷி என்ற பார்வையற்ற பெண்ணின் நட்பு மற்றும் காதல் அவள் பார்வையை போன்றே ஒரு கசப்பான சம்பவத்தினால் இருண்டு போகிறது. கிட்டத்தட்ட மரணத்தை தொட்டு மீளுகிறாள். அவள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்திற்கு நியாயம் செய்ய வருகிறாள் ஜென்னிதா. இவர்களோடு டேவிட், மகிழ், சையத், வேந்தன், ராகவ், மாயா மற்றும் பலர் பயணிப்பார்கள். உண்மையில் இக்கதையின் நாயகன் ஒரு குறை சொல்ல முடியாத கதாபாத்திரம் சிறு தவறை தவிர. Mr.perfect என்றால் அது இவன் தான்.
I love him and also his love for his betterhalf..
ஒன்னு காதலி வேணும் இல்லனா சன்யாசம் போறேன் னு அவன் பண்ணுற அலப்பறை இருக்கே ஐயோ ஐயோ. ஒவ்வொரு சிறு விஷயமும் காரண காரியதோடு தான் நடைபெறுகிறது என்பதற்கு இந்த கதை நல்ல ஒரு உதாரணமா இருக்கும். இறுதியாக இந்த நாவல் தேடல் போட்டியில் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறும்
உங்கள் ரசிகை
காவ்யா...????
இந்த சைட்டில்
என் முதல் comment (VET)
என் முதல் review
எல்லாம் உங்களுக்கு தான் கா...??
Such a awesome story... Thank you sooooo much..??QUOTE
காவ்யா மா இப்போ தான் டா உன் ரிவ்யு படிச்சிசேன் கவனிச்சேன்
நான் இப்போ கொஞ்ச நாளா கண்ணு கட்டி விட குதிரை போல
VNE கதை தவிர வேர எந்த பக்கமும் பக்காம மந்திரிச்சி விட்ட கோழி போலவே இங்கயே தவம் இருந்துட்டேன் டா
இந்த தேடல் போட்டிகான நேர நெருக்கத்தில் தான்
நான் படிச்சுட்டு பாதியில் இருந்த கதை எல்லாம் கூட படித்து முடித்தேன் கண்ணா
அதனால தான் இந்த பக்கம் வராமல் எந்த விஷ்யமும் தெரியாம போச்சு டா
காவ்யா யோட ரிவ்யு கந்தம் போல இருக்கு டா எவ்வளவு தெளிவா அழக இருக்கு தெரியுமா உன்னோட விமர்சனம் உண்மையில் மோனிஷாக்கு உன்னை போல் ஒரு டெடிகேட் சின்சியர் அதி திவிரமான ஒரு ரசிகை கிடைச்சது she is lucky and u to very lucky too because நீ யுடி அவங்களை மிரட்டி கேட்கறதும் அவங்களும் உன் அன்பு தொல்லைக்கு கட்டு பட்டு யுடி உடனே குடுப்பேன் என்று ஒரு ரிவ்யுவில் மோனிஷா சொன்னதை படிச்சேன் மா?? என்ன ஒரு அன்பு oru writer and reader in between
Nice? god bless u my dear??