sakthipriya
SM Exclusive
"என்னடா தங்கம்! ரொம்ப தீவீரமாக யோசிச்சிட்டிருக்க?" என்ற தாய் வாணியின் குரல் கேட்க பலத்த சிந்தனையில் இருந்த ஸ்வேதா தாயை பார்த்தாள்.
"எந்த ஆபரை அக்செப்ட் பன்னி எந்த ஸ்கூல்ல நான் ஜாயின் பன்றதுன்னு ஒரே குழப்பமாக இருக்கும்மா. நீயே நல்ல ஸ்கூலா செலக்ட் செஞ்சு தா" என்று இரண்டு பள்ளிகளின் அப்பாயின்மென்ட் ஆர்டரை நீட்டினாள் ஸ்வேதா.
வாணி இரண்டையும் வாங்கி அதை பிரிக்காமல் கிழித்து குப்பையில் போட "அம்மா!" என்றாள் ஸ்வேதா.
"ஸ்வேதா குட்டி! இவங்க உனக்கு என்ன சம்பளம் தரப் போறாங்க? நாலாயிரம் இல்லே அஞ்சாயிரம் இதுக்கு நீ மாசம் முழுக்க பாடுபடனுமா?"
"அந்த மெட்ரிக் ஸ்கூலில் எட்டாயிரம் ஸ்டார்ட்டிங் வருசத்துக்கு ஆயிரம் ரூபா இன்கிரிமென்ட் தரன்னு சொல்லியிருக்காங்க" என்றாள் ஸ்வேதா.
"உன் அழகுக்கு நீ ஒரு விளம்பர சூட்டிங் பன்னா போதும்டா. ஒரு நாளில் பத்தாயிரத்துக்கு மேல சம்பாதிக்கலாம்" என்றாள் தாய்.
"அம்மா! எனக்கு அதுல இஷ்டம் இல்லம்மா. என்னை கட்டாயப் படுத்தாதே" என்ற மகளிடம்,
"சரி அம்மா உன்னை இந்த விஷயத்துல கட்டாயபடுத்தலை ஆனா இந்த ஸ்கூல் வேலை எல்லாம் போக வேண்டாம்" என்றாள் வாணி.
"அம்மா! எனக்கு சும்மா இருக்க பிடிக்கலை. வீட்டில் இருந்து நான் என்ன செய்ய?"
"உன்னை யார் சும்மா இருக்க சொல்றது? குக்கரி கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலிஷ் அப்படின்னு போ" என்றாள் வாணி.
சரிம்மா என்ற ஸ்வேதாவின் டீச்சர் கனவு கலைந்துவிட்ட நிலையில் தன் அறைக்கு சென்றாள்.
அழகிய காந்த கண்கள், இரு செர்ரி பழ நிற இதழ்கள், உயிர் வாங்கும் நாசி, ஆப்பிள் கன்னங்கள், நீளமான கருத்த அடர்த்தியான கூந்தல், சின்ன முகம், சிற்றிடை, நல்ல கோதுமை நிறமுடைய இருபத்தி இரண்டு வயது பார்பி டால்தான் ஸ்வேதா.
சினிமாவில் ஒரிரு படங்களில் கேரக்டர் ரோல் என்ற பெயரில் தலை காட்டிக் கொண்டு விளம்பர படங்களில் நடித்து வரும் கலைவாணியின் ஒரே மகள்.
அழகில் தன்னைவிட பத்து மடங்கு உடைய மகளை கதாநாயகி ஆக்க வேண்டும் என்பதே வாணியின் லட்சியம்.
அம்மாவை சிறுவயது முதல் பார்க்கும் ஸ்வேதாவுக்கு அந்த வாழ்க்கையில் துளி கூட விருப்பமில்லை.
அம்மாவின் விருப்பபடி குக்கரி கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் சென்று வந்த மகளை எப்படியும் மாடல் ஆக்கி விட திட்டம் போட்டாள் கலைவாணி.
பட்டுசேலை விளம்பரம் ஒன்று வர அதை சரியாக பயன்படுத்தி கொண்டாள் வாணி.
"ஸ்வேதா தங்கம்! பட்டுசேலை விளம்பரம் ஒன்று வந்திருக்கு. சிட்டில பேமஸ் டெக்ஸ்டைல் ஷாப்போட விளம்பரம். கடை ஒனரே என்னிடம் கேட்டதும் உன்னை கூட கேட்காம சரின்னு ஒத்துகிட்டேன். சாரிடா தங்கம்" என்றாள் கலைவாணி.
"சில்க் சேரி விளம்பரம்தானே நான் பன்றேன் அம்மா. வீட்ல சும்மா இருக்க எனக்கும் போராடிக்கதான் செய்யுது. எனக்கும் பொழுது போகும். அமெளன்ட்டும் கிடைக்கும்"
என்று ஸ்வேதா ஒருவழியாக சம்மதித்தாள்.
அடுத்த சில தினங்களில் விளம்பர சூட்டிங் தொடங்கியது.
முதல் விளம்பரம் என்பதால் அவள் தாய் வாணி உடன் இருந்து உதவி செய்தாள்.
"வாணி மேடம்! உங்க மகளா?" என்று கேட்டார் குறுந்தாடி இயக்குநர்.
"ஆமா சார். அவளுக்கு மாடலில் இன்டெரஸ்ட் இல்லை. உங்க ஆட் அப்படிங்கறதால நான் கஷ்டபட்டு சம்மதிக்க வைச்சு கூட்டிட்டு வந்திருக்கேன். கொஞ்சம் பார்த்துகோங்க சார்" என்றாள் கலைவாணி.
"சரி வாணி மேடம். நீங்க கவலையேபடாதீங்க. அவ என் பொண்ணு மாதிரிதான்" என்று அவர் செல்ல, கடை ஒனர் வர தன் அம்மா அவரிடமும் சகஜமாக பேசுவதை பார்த்து பிரமித்தாள் ஸ்வேதா.
Message…
"எந்த ஆபரை அக்செப்ட் பன்னி எந்த ஸ்கூல்ல நான் ஜாயின் பன்றதுன்னு ஒரே குழப்பமாக இருக்கும்மா. நீயே நல்ல ஸ்கூலா செலக்ட் செஞ்சு தா" என்று இரண்டு பள்ளிகளின் அப்பாயின்மென்ட் ஆர்டரை நீட்டினாள் ஸ்வேதா.
வாணி இரண்டையும் வாங்கி அதை பிரிக்காமல் கிழித்து குப்பையில் போட "அம்மா!" என்றாள் ஸ்வேதா.
"ஸ்வேதா குட்டி! இவங்க உனக்கு என்ன சம்பளம் தரப் போறாங்க? நாலாயிரம் இல்லே அஞ்சாயிரம் இதுக்கு நீ மாசம் முழுக்க பாடுபடனுமா?"
"அந்த மெட்ரிக் ஸ்கூலில் எட்டாயிரம் ஸ்டார்ட்டிங் வருசத்துக்கு ஆயிரம் ரூபா இன்கிரிமென்ட் தரன்னு சொல்லியிருக்காங்க" என்றாள் ஸ்வேதா.
"உன் அழகுக்கு நீ ஒரு விளம்பர சூட்டிங் பன்னா போதும்டா. ஒரு நாளில் பத்தாயிரத்துக்கு மேல சம்பாதிக்கலாம்" என்றாள் தாய்.
"அம்மா! எனக்கு அதுல இஷ்டம் இல்லம்மா. என்னை கட்டாயப் படுத்தாதே" என்ற மகளிடம்,
"சரி அம்மா உன்னை இந்த விஷயத்துல கட்டாயபடுத்தலை ஆனா இந்த ஸ்கூல் வேலை எல்லாம் போக வேண்டாம்" என்றாள் வாணி.
"அம்மா! எனக்கு சும்மா இருக்க பிடிக்கலை. வீட்டில் இருந்து நான் என்ன செய்ய?"
"உன்னை யார் சும்மா இருக்க சொல்றது? குக்கரி கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலிஷ் அப்படின்னு போ" என்றாள் வாணி.
சரிம்மா என்ற ஸ்வேதாவின் டீச்சர் கனவு கலைந்துவிட்ட நிலையில் தன் அறைக்கு சென்றாள்.
அழகிய காந்த கண்கள், இரு செர்ரி பழ நிற இதழ்கள், உயிர் வாங்கும் நாசி, ஆப்பிள் கன்னங்கள், நீளமான கருத்த அடர்த்தியான கூந்தல், சின்ன முகம், சிற்றிடை, நல்ல கோதுமை நிறமுடைய இருபத்தி இரண்டு வயது பார்பி டால்தான் ஸ்வேதா.
சினிமாவில் ஒரிரு படங்களில் கேரக்டர் ரோல் என்ற பெயரில் தலை காட்டிக் கொண்டு விளம்பர படங்களில் நடித்து வரும் கலைவாணியின் ஒரே மகள்.
அழகில் தன்னைவிட பத்து மடங்கு உடைய மகளை கதாநாயகி ஆக்க வேண்டும் என்பதே வாணியின் லட்சியம்.
அம்மாவை சிறுவயது முதல் பார்க்கும் ஸ்வேதாவுக்கு அந்த வாழ்க்கையில் துளி கூட விருப்பமில்லை.
அம்மாவின் விருப்பபடி குக்கரி கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் சென்று வந்த மகளை எப்படியும் மாடல் ஆக்கி விட திட்டம் போட்டாள் கலைவாணி.
பட்டுசேலை விளம்பரம் ஒன்று வர அதை சரியாக பயன்படுத்தி கொண்டாள் வாணி.
"ஸ்வேதா தங்கம்! பட்டுசேலை விளம்பரம் ஒன்று வந்திருக்கு. சிட்டில பேமஸ் டெக்ஸ்டைல் ஷாப்போட விளம்பரம். கடை ஒனரே என்னிடம் கேட்டதும் உன்னை கூட கேட்காம சரின்னு ஒத்துகிட்டேன். சாரிடா தங்கம்" என்றாள் கலைவாணி.
"சில்க் சேரி விளம்பரம்தானே நான் பன்றேன் அம்மா. வீட்ல சும்மா இருக்க எனக்கும் போராடிக்கதான் செய்யுது. எனக்கும் பொழுது போகும். அமெளன்ட்டும் கிடைக்கும்"
என்று ஸ்வேதா ஒருவழியாக சம்மதித்தாள்.
அடுத்த சில தினங்களில் விளம்பர சூட்டிங் தொடங்கியது.
முதல் விளம்பரம் என்பதால் அவள் தாய் வாணி உடன் இருந்து உதவி செய்தாள்.
"வாணி மேடம்! உங்க மகளா?" என்று கேட்டார் குறுந்தாடி இயக்குநர்.
"ஆமா சார். அவளுக்கு மாடலில் இன்டெரஸ்ட் இல்லை. உங்க ஆட் அப்படிங்கறதால நான் கஷ்டபட்டு சம்மதிக்க வைச்சு கூட்டிட்டு வந்திருக்கேன். கொஞ்சம் பார்த்துகோங்க சார்" என்றாள் கலைவாணி.
"சரி வாணி மேடம். நீங்க கவலையேபடாதீங்க. அவ என் பொண்ணு மாதிரிதான்" என்று அவர் செல்ல, கடை ஒனர் வர தன் அம்மா அவரிடமும் சகஜமாக பேசுவதை பார்த்து பிரமித்தாள் ஸ்வேதா.
Message…
Last edited: