sakthipriya
SM Exclusive
செளந்தர்யாவிற்கு இங்கே பள்ளி வாழ்க்கை பழக ஆரம்பித்து விட்டது.
காலையில் எழும் செளந்தர்யா அழகாக கோலம் போட்டு முடித்த பின் கவிதாம்மா தரும் காபி குடித்து விட்டு சமையலில் சிறு உதவிகளை செய்வாள்.
செளந்தர்யா குளித்து முடிக்க டிபன் ரெடியாக இருக்க அதை சாப்பிட்டுபின் பள்ளி செல்வாள்.
கவிதா அம்மா உத்தரவுபடி மதிய சாப்பாட்டுக்கு வீடு வந்து செல்லும் அவள் மாலையில் வீட்டிற்கு திரும்பி தோட்டத்தை பார்வையிட்டு சில பராமரிப்பு வேலைகள் செய்வாள்.
மாலை வீட்டில் பூஜை முடித்த பின் கவிதாம்மாவிடம் பேசி கொண்டு இருப்பாள்.
செளந்தர்யா இரவு சமையல் வேலை முடிந்து டிபன் சாப்பிட்ட பின் அவினாசுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்கு சென்று புத்தகத்தில் மூழ்கி விடுவாள்.
செளந்தர்யா சினிமா சீரீயல்களை பார்ப்பதே இல்லை என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருக்க அதை பற்றி கேட்க நினைத்தாள்.
செளந்தர்யா நியுஸ் சேனல்கள் பார்த்தபின் டிஸ்கவரி சேனல் சென்று பின் ஸ்போர்டஸ் சேனல்களை ஆராய்ந்துக் கொண்டிருக்க கவிதா அங்கு வந்து அருகில் அமர்ந்தார்.
"தங்கம்! நான் ரொம்ப நாளாக உன்னை ஒன்று கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்டா" என்றார் கவிதா.
"என்ன அம்மா அது?" என்று அவள் பார்வையை கவிதா பக்கம் திருப்பினாள்.
"உன் மாதிரி இளம் வயசு ஆளுக சினிமா பார்ப்பாங்க இல்லைன்னா பாட்டு சீரீயல் இல்லைன்னா ஏதாச்சும் என்டர்டெயின்ட்மென்ட் நிகழ்ச்சி பார்ப்பாங்க. நீ என்னாடன்னா நியூஸ் சேனல், டிஸ்கவரி சேனல், ஸ்போர்ட்ஸ் சேனல் அப்படி பார்க்கிறியே ஏன்?"
"அம்மா! என் சின்ன வயசுல இருந்தே அம்மா என்னை அதிகமாக டிவி பார்க்க விட மாட்டாங்க. சினிமா, சீரியல், பாட்டு எதுவும் அவங்களும் பார்க்க விட மாட்டாங்க. என்னையும் அவங்க கூட நல்ல விஷயங்களை செய்ய சொல்லி அவங்களும் செய்ய அதே பழகி போச்சும்மா. " என்றவளை ஆச்சரியமாக பார்த்தாள் கவிதா.
"ஸ்கூல், காலேஜ் போன பின் உன் பிரண்ட்ஸ் அதை பற்றி பேசியிருப்பாங்களே?"
"ஆமாம்மா. நான் அங்கேயும் மேக்சிமம் படிப்பு பற்றி பேசிட்டு இருப்பேன் அப்புறம் எப்பவாது நான் பார்த்த படங்கள், பேப்பர்ல படிச்ச செய்தி இதை எல்லாம் வைச்சு சமாளிப்பேன்."
"இங்கேதான் அந்த மிலிட்டரி இல்லையே இப்ப பார்க்கலாம் இல்லையா?"
"இல்லை. என் அம்மா ஏன் என்னை பார்க்க விடலை அப்படின்னு தெரியாது ஆனா அவங்க என் நல்லதுக்குதான் செய்யறாங்க. நான் அவங்க கண் முன்னாடி இல்லைன்னாலும் அவங்க காட்டின வழியில் நடக்க விரும்பறேன்." என்று பேசிய செளந்தர்யாவை பார்த்து பிரமித்தாள் கவிதா.
"சரி உன் அம்மாகிட்ட இது பற்றி நீ கேட்டியா?"
"இல்லைம்மா. அவங்க எப்பவும் வேலை வேலைன்னு இருக்கிற காரணத்தால் அவங்க பார்க்க வாய்ப்பில்லை. என்னையும் கூட வைச்சுகிட்டதால் நான் பார்க்க முடியலை. இதை தவிர வேற என்ன காரணம் இருக்க போகுது? "
"சினிமா பாட்டு கேட்கிற பழக்கம் உண்டா?"
"ம் அது கேட்பேன். மைண்ட் ரிலாக்ஸ் ஆக நான் மியூசிக் கேட்பேன்."
"சரிடா தங்கம்! நல்லாபடியாக அதையாவது கேளுடா" என்று கவிதா சொல்ல,
"அம்மா! காலேஜ்ல படிக்கிறப்ப எங்க அம்மாவும் நீங்களும் சினிமா பார்த்திருக்கீங்களா? அம்மா அப்பவும் என்னை மாதிரி பார்க்க மாட்டாங்களா?" என்று கேட்டாள் செளந்தர்யா.
"உன் அம்மாதானே அவள் அப்பவும் அப்படிதான் தங்கம். சினிமாவே பிடிக்காதுடா." என்றாள் கவிதா.
"தாயை போல் புள்ளை இல்லையா அம்மா" என்று செளந்தர்யா கேட்க "ஆமா தங்கம்" என்றாள் கவிதா.
Message…
காலையில் எழும் செளந்தர்யா அழகாக கோலம் போட்டு முடித்த பின் கவிதாம்மா தரும் காபி குடித்து விட்டு சமையலில் சிறு உதவிகளை செய்வாள்.
செளந்தர்யா குளித்து முடிக்க டிபன் ரெடியாக இருக்க அதை சாப்பிட்டுபின் பள்ளி செல்வாள்.
கவிதா அம்மா உத்தரவுபடி மதிய சாப்பாட்டுக்கு வீடு வந்து செல்லும் அவள் மாலையில் வீட்டிற்கு திரும்பி தோட்டத்தை பார்வையிட்டு சில பராமரிப்பு வேலைகள் செய்வாள்.
மாலை வீட்டில் பூஜை முடித்த பின் கவிதாம்மாவிடம் பேசி கொண்டு இருப்பாள்.
செளந்தர்யா இரவு சமையல் வேலை முடிந்து டிபன் சாப்பிட்ட பின் அவினாசுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்கு சென்று புத்தகத்தில் மூழ்கி விடுவாள்.
செளந்தர்யா சினிமா சீரீயல்களை பார்ப்பதே இல்லை என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருக்க அதை பற்றி கேட்க நினைத்தாள்.
செளந்தர்யா நியுஸ் சேனல்கள் பார்த்தபின் டிஸ்கவரி சேனல் சென்று பின் ஸ்போர்டஸ் சேனல்களை ஆராய்ந்துக் கொண்டிருக்க கவிதா அங்கு வந்து அருகில் அமர்ந்தார்.
"தங்கம்! நான் ரொம்ப நாளாக உன்னை ஒன்று கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்டா" என்றார் கவிதா.
"என்ன அம்மா அது?" என்று அவள் பார்வையை கவிதா பக்கம் திருப்பினாள்.
"உன் மாதிரி இளம் வயசு ஆளுக சினிமா பார்ப்பாங்க இல்லைன்னா பாட்டு சீரீயல் இல்லைன்னா ஏதாச்சும் என்டர்டெயின்ட்மென்ட் நிகழ்ச்சி பார்ப்பாங்க. நீ என்னாடன்னா நியூஸ் சேனல், டிஸ்கவரி சேனல், ஸ்போர்ட்ஸ் சேனல் அப்படி பார்க்கிறியே ஏன்?"
"அம்மா! என் சின்ன வயசுல இருந்தே அம்மா என்னை அதிகமாக டிவி பார்க்க விட மாட்டாங்க. சினிமா, சீரியல், பாட்டு எதுவும் அவங்களும் பார்க்க விட மாட்டாங்க. என்னையும் அவங்க கூட நல்ல விஷயங்களை செய்ய சொல்லி அவங்களும் செய்ய அதே பழகி போச்சும்மா. " என்றவளை ஆச்சரியமாக பார்த்தாள் கவிதா.
"ஸ்கூல், காலேஜ் போன பின் உன் பிரண்ட்ஸ் அதை பற்றி பேசியிருப்பாங்களே?"
"ஆமாம்மா. நான் அங்கேயும் மேக்சிமம் படிப்பு பற்றி பேசிட்டு இருப்பேன் அப்புறம் எப்பவாது நான் பார்த்த படங்கள், பேப்பர்ல படிச்ச செய்தி இதை எல்லாம் வைச்சு சமாளிப்பேன்."
"இங்கேதான் அந்த மிலிட்டரி இல்லையே இப்ப பார்க்கலாம் இல்லையா?"
"இல்லை. என் அம்மா ஏன் என்னை பார்க்க விடலை அப்படின்னு தெரியாது ஆனா அவங்க என் நல்லதுக்குதான் செய்யறாங்க. நான் அவங்க கண் முன்னாடி இல்லைன்னாலும் அவங்க காட்டின வழியில் நடக்க விரும்பறேன்." என்று பேசிய செளந்தர்யாவை பார்த்து பிரமித்தாள் கவிதா.
"சரி உன் அம்மாகிட்ட இது பற்றி நீ கேட்டியா?"
"இல்லைம்மா. அவங்க எப்பவும் வேலை வேலைன்னு இருக்கிற காரணத்தால் அவங்க பார்க்க வாய்ப்பில்லை. என்னையும் கூட வைச்சுகிட்டதால் நான் பார்க்க முடியலை. இதை தவிர வேற என்ன காரணம் இருக்க போகுது? "
"சினிமா பாட்டு கேட்கிற பழக்கம் உண்டா?"
"ம் அது கேட்பேன். மைண்ட் ரிலாக்ஸ் ஆக நான் மியூசிக் கேட்பேன்."
"சரிடா தங்கம்! நல்லாபடியாக அதையாவது கேளுடா" என்று கவிதா சொல்ல,
"அம்மா! காலேஜ்ல படிக்கிறப்ப எங்க அம்மாவும் நீங்களும் சினிமா பார்த்திருக்கீங்களா? அம்மா அப்பவும் என்னை மாதிரி பார்க்க மாட்டாங்களா?" என்று கேட்டாள் செளந்தர்யா.
"உன் அம்மாதானே அவள் அப்பவும் அப்படிதான் தங்கம். சினிமாவே பிடிக்காதுடா." என்றாள் கவிதா.
"தாயை போல் புள்ளை இல்லையா அம்மா" என்று செளந்தர்யா கேட்க "ஆமா தங்கம்" என்றாள் கவிதா.
Message…