banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
எனது இனிய அன்புத் தோழிகளே
என்னுடைய தோழி ஒருத்திக்கு
ஒரு பிரச்சினை
அவளின் கணவரும் என்னுடன்
பணிபுரிந்தவர்தான்
ஓய்வு பெற இன்னும் சில
வருடங்கள் இருக்கு
இவர்களுக்கு இரண்டு மகன்கள்
ஒரு மகள்
மகன்கள் நன்கு படித்தும்
நல்ல வேலை இல்லை
ஏதோ கிடைத்த வேலைக்கு
சென்று சொற்ப வருவாய்
வருகிறது
பெண் காலேஜில் படிக்கிறாள்
இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு
கேட்காதீங்க
கணவர்தான் பிரச்னை
நல்ல மனிதர்
மிகவும் அன்பானவர்
பண்பானவர்
எல்லோருக்கும் உதவி செய்யும்
மனமுள்ளவர்
தன்னால் முடிந்த உதவியை
மற்றவர்களுக்கு உடனே
செய்யத் தயங்காதவர்
கடவுளின் அருள் அவரிடம் இருப்பதாக, எங்க வீட்டுக்காரரிடம்
சாமி இருக்கு-ன்னு என்
தோழியே கூறுவாள்
இவ்வளவு நல்ல மனிதர் கடந்த
இரண்டு வருடங்களாக
வேலைக்கு செல்வதில்லை
எப்பொழுதும் காலை 5 மணிக்கே
எழுந்து எல்லாவற்றையும்
சுறுசுறுப்புடன் செய்பவர்
இப்போது பகல் 12 மணி வரை
தூங்குகிறார்
இரவில் நன்றாக தூங்குவதில்லை
எதிலும் பிடிப்பில்லை
எல்லாவற்றிலும் அவருக்கு ஒரு
ஏனோ தானோங்கிற எண்ணம்
and செயல்
அவருக்கு இருந்த லீவெல்லாம் கரைந்து போய் பாதிச் சம்பளமோ
ஏதோ ஒரு தொகை வருகிறதாம்
தற்பொழுது கொஞ்சம் கஷ்டமான
சூழ்நிலை
பையனுக்கு வேலைக்கு-ன்னு
ஒரு பெரிய தொகையை வேறு
ஏமாந்து விட்டார்
அதனால் இப்படி இருக்கிறாரோன்னு
பார்த்தால் கூடப் பிறந்த தங்கை
போல பழகிய ஒருத்திதான்
இவருக்கு ஒரு அமாவாசையன்று
முட்டையில் குங்குமம் வைத்து
சுற்றிப் போட்டாளாம்
இதை அந்த தங்கை போன்ற
பெண்ணே, சமீபமாக
இன்னொருவரிடம் சொல்லும்
பொழுது என் தோழி கேட்டிருக்கிறாள்
அந்த முட்டையை என்ன செய்தாள்
என்று கேட்க இவளால்
இயலவில்லை
எவ்வளவு பெரிய நம்பிக்கைத்
துரோகம்?
இப்பொழுதும் இதெல்லாம்
உண்டா?
இந்தக் காலத்தில் இப்படியும்
செய்வார்களா?
அன்புத்தோழிகளே இதற்கு
இந்தப் பிரச்சனை தீர என்ன
வழி?
மலையாள மாந்திரீகரிடம்
போகலாமா-ன்னு பார்த்தால்
அவள் குடும்பத்தின் மீது
இன்னும் கூடுதலாக வேற
ஏதாவது துன்பம் வந்து
விடுமோன்னு யாரிடமும்
சொல்லவும் என் தோழிக்கு
பயம்
தானுண்டு தன் வேலையுண்டு-ன்னு
யார் வம்புக்கு போகாத என்
தோழியின் மீது அவளுடைய
இரு பக்க சொந்தத்திற்கும்
பொறாமை
இவள் எப்பொழுது விழுவாள்?
நாம் கைகொட்டி சிரிக்கலாம்
என்றே காத்துக் கொண்டு
இருக்கிறார்கள்
சொந்தத்திற்கு உதவி செய்யும்
மனமில்லாததால்தான் தங்கை
போல அந்தப் பெண்ணை
நம்பி வீட்டிற்குள்ளும்
அனுமதித்திருக்கிறாள்
அடுத்த சொந்தத்திற்கு
தெரியாமல் இதை எப்படி
சரி செய்வது என்று என்னிடம்
கேட்டாள்
எனக்கும் ஒன்றும்
தோணவில்லையாதலால்
உங்களின் உதவியை
நாடுகிறேன், அன்புத் தோழிகளே
என்னுடைய தோழி ஒருத்திக்கு
ஒரு பிரச்சினை
அவளின் கணவரும் என்னுடன்
பணிபுரிந்தவர்தான்
ஓய்வு பெற இன்னும் சில
வருடங்கள் இருக்கு
இவர்களுக்கு இரண்டு மகன்கள்
ஒரு மகள்
மகன்கள் நன்கு படித்தும்
நல்ல வேலை இல்லை
ஏதோ கிடைத்த வேலைக்கு
சென்று சொற்ப வருவாய்
வருகிறது
பெண் காலேஜில் படிக்கிறாள்
இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு
கேட்காதீங்க
கணவர்தான் பிரச்னை
நல்ல மனிதர்
மிகவும் அன்பானவர்
பண்பானவர்
எல்லோருக்கும் உதவி செய்யும்
மனமுள்ளவர்
தன்னால் முடிந்த உதவியை
மற்றவர்களுக்கு உடனே
செய்யத் தயங்காதவர்
கடவுளின் அருள் அவரிடம் இருப்பதாக, எங்க வீட்டுக்காரரிடம்
சாமி இருக்கு-ன்னு என்
தோழியே கூறுவாள்
இவ்வளவு நல்ல மனிதர் கடந்த
இரண்டு வருடங்களாக
வேலைக்கு செல்வதில்லை
எப்பொழுதும் காலை 5 மணிக்கே
எழுந்து எல்லாவற்றையும்
சுறுசுறுப்புடன் செய்பவர்
இப்போது பகல் 12 மணி வரை
தூங்குகிறார்
இரவில் நன்றாக தூங்குவதில்லை
எதிலும் பிடிப்பில்லை
எல்லாவற்றிலும் அவருக்கு ஒரு
ஏனோ தானோங்கிற எண்ணம்
and செயல்
அவருக்கு இருந்த லீவெல்லாம் கரைந்து போய் பாதிச் சம்பளமோ
ஏதோ ஒரு தொகை வருகிறதாம்
தற்பொழுது கொஞ்சம் கஷ்டமான
சூழ்நிலை
பையனுக்கு வேலைக்கு-ன்னு
ஒரு பெரிய தொகையை வேறு
ஏமாந்து விட்டார்
அதனால் இப்படி இருக்கிறாரோன்னு
பார்த்தால் கூடப் பிறந்த தங்கை
போல பழகிய ஒருத்திதான்
இவருக்கு ஒரு அமாவாசையன்று
முட்டையில் குங்குமம் வைத்து
சுற்றிப் போட்டாளாம்
இதை அந்த தங்கை போன்ற
பெண்ணே, சமீபமாக
இன்னொருவரிடம் சொல்லும்
பொழுது என் தோழி கேட்டிருக்கிறாள்
அந்த முட்டையை என்ன செய்தாள்
என்று கேட்க இவளால்
இயலவில்லை
எவ்வளவு பெரிய நம்பிக்கைத்
துரோகம்?
இப்பொழுதும் இதெல்லாம்
உண்டா?
இந்தக் காலத்தில் இப்படியும்
செய்வார்களா?
அன்புத்தோழிகளே இதற்கு
இந்தப் பிரச்சனை தீர என்ன
வழி?
மலையாள மாந்திரீகரிடம்
போகலாமா-ன்னு பார்த்தால்
அவள் குடும்பத்தின் மீது
இன்னும் கூடுதலாக வேற
ஏதாவது துன்பம் வந்து
விடுமோன்னு யாரிடமும்
சொல்லவும் என் தோழிக்கு
பயம்
தானுண்டு தன் வேலையுண்டு-ன்னு
யார் வம்புக்கு போகாத என்
தோழியின் மீது அவளுடைய
இரு பக்க சொந்தத்திற்கும்
பொறாமை
இவள் எப்பொழுது விழுவாள்?
நாம் கைகொட்டி சிரிக்கலாம்
என்றே காத்துக் கொண்டு
இருக்கிறார்கள்
சொந்தத்திற்கு உதவி செய்யும்
மனமில்லாததால்தான் தங்கை
போல அந்தப் பெண்ணை
நம்பி வீட்டிற்குள்ளும்
அனுமதித்திருக்கிறாள்
அடுத்த சொந்தத்திற்கு
தெரியாமல் இதை எப்படி
சரி செய்வது என்று என்னிடம்
கேட்டாள்
எனக்கும் ஒன்றும்
தோணவில்லையாதலால்
உங்களின் உதவியை
நாடுகிறேன், அன்புத் தோழிகளே
Last edited: