ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
நான் தான் உங்க நெமிரா .... எப்படி இருக்கீங்க ஃப்ரெண்ட்ஸ் மறுபடியும் வந்துட்டேன் உங்களை தொல்லை பண்றதுக்கு ....
நினைத்ததை அடைந்தே தீருவேன் என்னும் வைராக்கியத்தை தன் நெஞ்சிலும் ... அதிரடியான காதலை தன் விழிகளிலும் கொண்டிருக்கும் 'ஆஹானா' ....
குளுமை வீசும் நிலவை போலத் தன் கண்களில் அன்போடு கூடிய காதலை மட்டுமே கொண்டிருக்கும் 'ஸ்வாந்தித்தா'...
வேங்கை தன் இரையை வேட்டையாட காத்திருப்பது போலத் தன் விழிகளில் கோபத்தோடு கூடிய வெறுப்பை மட்டுமே கொண்டிருக்கும் 'ரன்தீர் ' ....
காதலை அள்ளிக்கொடுக்கும் இரு தேவதைகளும் ... பலி கொடுக்க துடிக்கும் அசுரனுடன் ... நெருங்கினால் என்னாகும் ?? சிதைப்பானா !! இல்லை சிதையில் சிதைந்து போவானா !!
பலியிட்டானா !! பலி ஆனான் !! இருவரில் யாருடைய காதல் கைகூடியது ?? பகையை தீர்த்துக்கொண்டானா ?? வெறுப்பு வென்றதா !! காதல் வென்றதா !!
யாருடன் யார் நெருங்கினார்கள் ??? யார் விலகினார்கள் ??
" என் நித்திரையைக் களவாடிய உன் நினைவுகளை விலக்க
முடியாமல் தினம் தினம் யுத்தம் செய்கிறது என் விழிகள் ....
நீ யாரென்று எண்ணியே ...என்னை உன்னிடம் தொலைக்கிறேன்
நெருங்கி நெருங்கி வந்தேன் விலகி விலகி சென்றாய்
விலகி விலகி செல்கிறேன் ஏன் நெருங்க இழுக்கிறாய்
ஏன் இந்த மாயமான் வேடம் ??? .... புரியவில்லை எனக்கு
தொலைவில் பார்த்தால் தெரிகிறாய்
அருகில் வந்தால் மறைகிறாய் ...
இது காதலா ?? இல்லை கானலா??
தூரல் போல விட்டு விட்டு வந்து
தவணை முறையில் ஏன் என்னைக் கொள்கிறாய் .... "
என்று காரணம் புரியாமல் நெருங்கி , விலகவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் உணர்ச்சியில் குவியலில் சிக்குண்ட நாயகி ...
" நினைவே திரும்பாதே ...
திரும்பியே வதைக்காதே !!
உயிரே விலகாதே
விலகியே கொள்ளாதே !!
மனமே நினைக்காதே
நினைத்தே மறக்காதே !!
விழியே சிரிக்காதே
சிரித்தே சிதைக்காதே !!
காதலே அழைக்காதே
அழைத்தபின் நீங்காதே !!
சிதைக்க வந்தவனடி நான்
இன்று உன் கனல் விழி அழகில் சிதைந்து கிடக்கிறேன் "
நெருங்காதே பெண்ணே நெருக்காதே
உன்னை அணைக்கும் நிலையில் நான் இல்லை ...
விலகாதே உயிரே விலகாதே ...
உன் விலகலை தாங்கும் இதயம் எனக்கில்லை..
காதலே நெருங்காதே நெருங்கியே விலகாதே !!
நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் நொறுங்கி போகும் நாயகன் ....
விதியின் செயலால் , மதியின் கூர்மையால் இவர்களுள் யார் இவனுடன் இணைந்தாலும் அதுவே அவர்களுக்கு .... ' கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் ' ஆகும் .
நட்பு காதல் துரோகம் கோபம் மகிழ்ச்சி என்று பல உணர்வுகள் கலந்த காதல் கதை தான்
'நெருங்காதே நெருங்கியே விலகாதே.... நிச்சயமாக உங்களுக்கு இந்த கதை புடிக்கும்ன்னு நான் நம்புறேன் .
உங்களின் ஆதரவை எதிர்பார்த்து ....
இப்படிக்கு,
நட்புடன்
பி .நெமிரா...
நட்புடன்
பி .நெமிரா...
Last edited: