ஹலோ நண்பர்களே ,
இதுவரைக்கு எனக்கு நீங்க எல்லாரும் நிறைய ஆதரவு குடுத்திருக்கீங்க அதே ஆதரவை " நெருங்காதே ...நெருங்கியே விலகாதே "க்கும் குடுப்பீங்கன்னு நம்பி என்னுடைய முதல் அத்தியாயத்தை பதிவிடுறேன் ....
இதோ "நெருங்காதே ...நெருங்கியே விலகாதே" யோட அத்தியாயம் 1 படிச்சிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிருங்கள் .
மும்பை மக்கள் அனைவரும் நித்திரைக்குள் தங்களை நுழைத்திருந்த நேரம் ....
வானம் என்னும் மெத்தைதனில் , மேகம் என்னும் போர்வைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு துயில் கொண்டிருந்த வெண்மதி .... தென்றல் காற்றின் சிலிர் சிலிர்ப்பில் , போர்வையை விளக்கிவிட்டவாறு மெல்ல எட்டி பார்த்து தன் உறக்கத்தை முறித்துக்கொண்டு ... மினுமினுக்கும் அந்த நட்ச்சத்திரக்கூட்டத்தை பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்த , அந்த அழகான இரவு காட்ச்சியை , தன் அறையின் பால்கனியில் உள்ள ஒரு தூணில் சாய்ந்தவாறு ஒரு பெண் ரசித்துக்கொண்டிருந்தாள் ......
" என்ன அதிசயம் நிலவெல்லாம் ரசிக்க ஆரம்பிச்சிட்ட அதுவும் மெய்மறந்து !! " புன்முறுவலோடு வந்த குரல் பக்கம் திரும்பியவள் ....
" ஏது நான் மெய்மறந்து .... நல்ல ஜோக் தான் , தினமும் நீ இந்த வானத்தையே ரசிச்சி பார்த்துட்டு இருப்பியே .... அப்படி என்ன தான் அந்த வானத்துல தெரியுதுன்னு நானும் வந்து பார்த்தேன் "
" ஏதவாது தெரிஞ்சிதா "
" ம்ம்ம் எங்க ஒன்னும் இல்லை .... அதே வானம் கலர் கூட அதே கருப்பு தான்..... ப்ளாக் அண்ட் வெயிட் மூவி மாதிரி இருந்துச்சு ... நீ மட்டும் எப்படி தான் டெய்லி ராத்திரி இந்த வானத்த புதுசா பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருக்கியோ .... " ஆச்சரியமாய் கேட்ட ரேஷ்மாவை .... பார்த்து சிறு புன்னகையை மட்டும் சிந்தினாள்...
" நீ எப்பவும் இப்படி சந்தோஷமா சிரிச்சிட்டே இருக்கணும் .... ஷாரி ரொம்ப நல்லவனா தெரியிறான் .... இந்த முறையாவது எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் உன் கல்யாணம் நடக்கணும் "
" கண்டிப்பா நடக்கும் ... கவலைப்படாத ரேஷு ..."
" எப்படி கவலைப்படாம இருக்க முடியும் ... அதான் ஏழரை நாட்டு சனியை கசின்ங்கிற பேர்ல கூடவே வச்சிருக்கியே ... அதை நினைச்சாதான் பயமா இருக்கு ... ஏய் ஸ்வாதிந்தா பேசமா உன் கல்யாணம் முடியிற வரைக்கும் அவளை நான் கிட்னாப் பண்ணிரவா ???"
"ரேஷு " கோபமாக புருவத்தை உயர்த்தினாள் ....
" நீ என்ன முறைச்சாலும் சரி ... உன் தங்கச்சு பண்றதெல்லாம் சுத்தமா சரியில்ல .... "
"அவ சின்ன பொண்ணு .. வசதியா வாழ்ந்தவ ... திடீர்ன்னு மிடில் க்ளாஸ் வாழ்க்கைய ஏத்துக்கணும்ன்னா கஷ்டமா தானே இருக்கும் ... அவளும் அத்தையும் ரொம்பப்பாவம் ... மாமா போனதுக்கு அப்பறம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க ..."
" ஏது அவ பாவம் ... மனசாட்சியோடு பேசு டி ... அவ எந்த கஷ்டமும் படலை ... அவளால நீங்கதான் கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க ... இப்போ புதுசா ஒருத்தனும் சேர்த்திருக்கான் ... இவளுடைய சுயரூபம் மட்டும் தெரிஞ்சிது கவுதம் விட்டுட்டு போனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை "
" ரேஷ்மா அப்படி சொல்லாத ..... ஆஹானா கவுதமை நேசிக்கிறா "
" ஐயோ அப்புறம் முடியலை ...அவ கவுதமை நேசிக்கலை ...அவனுடைய பதவி அவனுடைய செல்வாக்கு அவனுடைய பணம் இதெல்லாத்தையும் நேசிக்கிறா ... ஆனா இதெல்லாம் உனக்கு புரியாது ...
என் பயம் எல்லாம் அவளை நினைச்சு தான் ... நாளைக்கு ஷாரிக்கை பார்த்துட்டு கவுதமைவிட ஷாரிக் பெட்டரா இருக்கான் ... கவுதமை விட்டு குடுத்த மாதிரி ஷாரிக்கையும் விட்டு குடுன்னு சொல்லிருவாளோன்னு நெஞ்சு திக்கு திக்குன்னு அடிச்சிக்குது .... நீயும் ஒரு முட்டாள் ....சரின்னு சொன்னாலும் இல்லை இல்லை கண்டிப்பா சரி சொல்லிருவ ... அதான் அவளை கிட்ணப் பண்ணவான்னு கேட்டேன் "
" ஏய் அஹானா அந்த மாதிரி கிடையாது ...கவுதமை அவ உண்மையா நேசிச்சா .... அதனால நான் கவுதம்கிட்ட எடுத்து சொன்னேன் அவரும் புரிஞ்சிக்கிட்டாரு ....
ஏதோ நான் கவுதமை லவ் பண்ணின மாதிரியும் ... அஹானாக்காக என் காதலையே நான் விட்டு கொடுத்த மாதிரியும் பேசுற ...
கவுதம் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு அஹானாக்கு அவரை புடிச்சிருந்துச்சு ... வீட்ல சொன்னேன் அஹானாக்கும் கவுதமும்க்கும் ஃபிக்ஸ் பண்ணினாங்க ... இதுல விட்டு குடுக்கிறதுக்கு என்ன இருக்கு .... "
" அது எப்படி உன் அஹானாக்கு மட்டும் உனக்கு சொந்தமான விஷயங்கள் மேலையே அதிகமான லவ் வருது ... உனக்கு வாங்குன டிரஸ் ... உனக்கு புடிச்ச நகை ... இப்போ உனக்கு பார்த்த மாப்பிள்ளை ... "
"ரேஷு "
" என்னை முறைக்காத ... டிரஸ் நகையெல்லாம் கூட ஓகே ... ஆனா எப்போ கவுதமை வேணும்ன்னு கேட்டாளோ அப்பவே அவளுடைய லிமிட்டை அவ க்ராஸ் பண்ணிட்டா ... இனிமையாவது அவ ஒழுங்கா இருக்கணும் இல்லைன்னா நல்லா இருக்காது ..."
" அப்படி எதுவும் ஆகாது ரேஷு ...நாளைக்கு அவ வீட்டுக்கு வரும் பொழுது அவகிட்ட சண்டை போடாத "
" அது அவ நடந்துக்கிறதை பொறுத்து ... "
" ரேஷு "
" சரி சண்டை போடலை ... ஆடிஷன்ல என்ன சொன்னாங்களாம் "
" சான்ஸ் வரும் பொழுது கூப்புடுறேன்னு சொல்லிருக்காங்க ...பாவம் ரொம்ப முயற்ச்சி பண்ணிட்டு இருக்கா ... அவ ஆசைப்பட்ட மாதிரியே அவளுக்கு நல்ல படத்துல ஹீரோயின் சான்ஸ் கிடைக்கணும் "
" அதுக்கு உன் அஹானா நல்லா நடிக்கணும் " நக்கலாக கூற ... செல்லமாய் முறைத்தாள் ஸ்வாதிந்தா....
இதுவரைக்கு எனக்கு நீங்க எல்லாரும் நிறைய ஆதரவு குடுத்திருக்கீங்க அதே ஆதரவை " நெருங்காதே ...நெருங்கியே விலகாதே "க்கும் குடுப்பீங்கன்னு நம்பி என்னுடைய முதல் அத்தியாயத்தை பதிவிடுறேன் ....
இதோ "நெருங்காதே ...நெருங்கியே விலகாதே" யோட அத்தியாயம் 1 படிச்சிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிருங்கள் .
மும்பை மக்கள் அனைவரும் நித்திரைக்குள் தங்களை நுழைத்திருந்த நேரம் ....
வானம் என்னும் மெத்தைதனில் , மேகம் என்னும் போர்வைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு துயில் கொண்டிருந்த வெண்மதி .... தென்றல் காற்றின் சிலிர் சிலிர்ப்பில் , போர்வையை விளக்கிவிட்டவாறு மெல்ல எட்டி பார்த்து தன் உறக்கத்தை முறித்துக்கொண்டு ... மினுமினுக்கும் அந்த நட்ச்சத்திரக்கூட்டத்தை பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்த , அந்த அழகான இரவு காட்ச்சியை , தன் அறையின் பால்கனியில் உள்ள ஒரு தூணில் சாய்ந்தவாறு ஒரு பெண் ரசித்துக்கொண்டிருந்தாள் ......
" என்ன அதிசயம் நிலவெல்லாம் ரசிக்க ஆரம்பிச்சிட்ட அதுவும் மெய்மறந்து !! " புன்முறுவலோடு வந்த குரல் பக்கம் திரும்பியவள் ....
" ஏது நான் மெய்மறந்து .... நல்ல ஜோக் தான் , தினமும் நீ இந்த வானத்தையே ரசிச்சி பார்த்துட்டு இருப்பியே .... அப்படி என்ன தான் அந்த வானத்துல தெரியுதுன்னு நானும் வந்து பார்த்தேன் "
" ஏதவாது தெரிஞ்சிதா "
" ம்ம்ம் எங்க ஒன்னும் இல்லை .... அதே வானம் கலர் கூட அதே கருப்பு தான்..... ப்ளாக் அண்ட் வெயிட் மூவி மாதிரி இருந்துச்சு ... நீ மட்டும் எப்படி தான் டெய்லி ராத்திரி இந்த வானத்த புதுசா பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருக்கியோ .... " ஆச்சரியமாய் கேட்ட ரேஷ்மாவை .... பார்த்து சிறு புன்னகையை மட்டும் சிந்தினாள்...
" நீ எப்பவும் இப்படி சந்தோஷமா சிரிச்சிட்டே இருக்கணும் .... ஷாரி ரொம்ப நல்லவனா தெரியிறான் .... இந்த முறையாவது எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் உன் கல்யாணம் நடக்கணும் "
" கண்டிப்பா நடக்கும் ... கவலைப்படாத ரேஷு ..."
" எப்படி கவலைப்படாம இருக்க முடியும் ... அதான் ஏழரை நாட்டு சனியை கசின்ங்கிற பேர்ல கூடவே வச்சிருக்கியே ... அதை நினைச்சாதான் பயமா இருக்கு ... ஏய் ஸ்வாதிந்தா பேசமா உன் கல்யாணம் முடியிற வரைக்கும் அவளை நான் கிட்னாப் பண்ணிரவா ???"
"ரேஷு " கோபமாக புருவத்தை உயர்த்தினாள் ....
" நீ என்ன முறைச்சாலும் சரி ... உன் தங்கச்சு பண்றதெல்லாம் சுத்தமா சரியில்ல .... "
"அவ சின்ன பொண்ணு .. வசதியா வாழ்ந்தவ ... திடீர்ன்னு மிடில் க்ளாஸ் வாழ்க்கைய ஏத்துக்கணும்ன்னா கஷ்டமா தானே இருக்கும் ... அவளும் அத்தையும் ரொம்பப்பாவம் ... மாமா போனதுக்கு அப்பறம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க ..."
" ஏது அவ பாவம் ... மனசாட்சியோடு பேசு டி ... அவ எந்த கஷ்டமும் படலை ... அவளால நீங்கதான் கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க ... இப்போ புதுசா ஒருத்தனும் சேர்த்திருக்கான் ... இவளுடைய சுயரூபம் மட்டும் தெரிஞ்சிது கவுதம் விட்டுட்டு போனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை "
" ரேஷ்மா அப்படி சொல்லாத ..... ஆஹானா கவுதமை நேசிக்கிறா "
" ஐயோ அப்புறம் முடியலை ...அவ கவுதமை நேசிக்கலை ...அவனுடைய பதவி அவனுடைய செல்வாக்கு அவனுடைய பணம் இதெல்லாத்தையும் நேசிக்கிறா ... ஆனா இதெல்லாம் உனக்கு புரியாது ...
என் பயம் எல்லாம் அவளை நினைச்சு தான் ... நாளைக்கு ஷாரிக்கை பார்த்துட்டு கவுதமைவிட ஷாரிக் பெட்டரா இருக்கான் ... கவுதமை விட்டு குடுத்த மாதிரி ஷாரிக்கையும் விட்டு குடுன்னு சொல்லிருவாளோன்னு நெஞ்சு திக்கு திக்குன்னு அடிச்சிக்குது .... நீயும் ஒரு முட்டாள் ....சரின்னு சொன்னாலும் இல்லை இல்லை கண்டிப்பா சரி சொல்லிருவ ... அதான் அவளை கிட்ணப் பண்ணவான்னு கேட்டேன் "
" ஏய் அஹானா அந்த மாதிரி கிடையாது ...கவுதமை அவ உண்மையா நேசிச்சா .... அதனால நான் கவுதம்கிட்ட எடுத்து சொன்னேன் அவரும் புரிஞ்சிக்கிட்டாரு ....
ஏதோ நான் கவுதமை லவ் பண்ணின மாதிரியும் ... அஹானாக்காக என் காதலையே நான் விட்டு கொடுத்த மாதிரியும் பேசுற ...
கவுதம் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு அஹானாக்கு அவரை புடிச்சிருந்துச்சு ... வீட்ல சொன்னேன் அஹானாக்கும் கவுதமும்க்கும் ஃபிக்ஸ் பண்ணினாங்க ... இதுல விட்டு குடுக்கிறதுக்கு என்ன இருக்கு .... "
" அது எப்படி உன் அஹானாக்கு மட்டும் உனக்கு சொந்தமான விஷயங்கள் மேலையே அதிகமான லவ் வருது ... உனக்கு வாங்குன டிரஸ் ... உனக்கு புடிச்ச நகை ... இப்போ உனக்கு பார்த்த மாப்பிள்ளை ... "
"ரேஷு "
" என்னை முறைக்காத ... டிரஸ் நகையெல்லாம் கூட ஓகே ... ஆனா எப்போ கவுதமை வேணும்ன்னு கேட்டாளோ அப்பவே அவளுடைய லிமிட்டை அவ க்ராஸ் பண்ணிட்டா ... இனிமையாவது அவ ஒழுங்கா இருக்கணும் இல்லைன்னா நல்லா இருக்காது ..."
" அப்படி எதுவும் ஆகாது ரேஷு ...நாளைக்கு அவ வீட்டுக்கு வரும் பொழுது அவகிட்ட சண்டை போடாத "
" அது அவ நடந்துக்கிறதை பொறுத்து ... "
" ரேஷு "
" சரி சண்டை போடலை ... ஆடிஷன்ல என்ன சொன்னாங்களாம் "
" சான்ஸ் வரும் பொழுது கூப்புடுறேன்னு சொல்லிருக்காங்க ...பாவம் ரொம்ப முயற்ச்சி பண்ணிட்டு இருக்கா ... அவ ஆசைப்பட்ட மாதிரியே அவளுக்கு நல்ல படத்துல ஹீரோயின் சான்ஸ் கிடைக்கணும் "
" அதுக்கு உன் அஹானா நல்லா நடிக்கணும் " நக்கலாக கூற ... செல்லமாய் முறைத்தாள் ஸ்வாதிந்தா....