அத்தியாயம் – 2
அமெரிக்காவில் சிகாகோ மாகாணத்தில் இருந்த ஒரு பிளாட்டில், ரோஹித் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, காலிங்பெல் நிற்காமல் அலறியது..
அவனும் இரண்டு காதுகளையும் நன்றாக மூடிக்கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, காலிங்பெல் மட்டும் நிற்காமல் அடித்துக் கொண்டே இருக்க,
“சரியான இம்சை..” என்று திட்டிய வண்ணம் படுக்கையில் இருந்து எழுந்து சென்ற ரோஹித் கதவைத் திறக்க, “டேய் எருமை கதவைத் திறக்க இவ்வளவு நேரமா..? என்னோட கீய் கொடு நான் போய் படுக்கிறேன்..” என்று கடுப்புடன் கூறிய கீர்த்தியைப் பார்த்தவன்,
“உன்னோட கீயை என்னிடம் எதுக்கு கொடுத்துட்டுப் போறா..?” என்று அவனும் கடுப்புடன் கேட்க, “நான் மட்டும் அந்த மைதா மாவு காரனிடம் நைட் சிப்ட் செய்துட்டு வருவேன்.. நீ மட்டும் நல்ல தூங்குவியோ..?” என்று அவளும் எகிறினாள்
“ஆகமொத்தம் நான் நிம்மதியாகத் தூங்கக் கூடாது.. அதுதானே உன்னோட திட்டம்..?” என்று கோபத்துடன் கேட்டான் ரோஹித்
“நான் மட்டும் தூங்காமல் தானே வேலை செய்கிறேன்.. நீ மட்டும் எப்படி நிம்மதியாகத் தூங்கலாம்..?” என்று சத்தமிட்ட கீர்த்தியைப் பார்த்து,
“ஐயோ சாமி நைட் கத்தி ஊரைக்கூட்டி பஞ்சத்து வைத்திராதே தாயே! இது ஒன்னும் நம்ம ஊரு கிடையாது..” என்று அவன் கையெடுத்துக் கும்பிடுவதைப் பார்த்து மெல்ல மலை இறங்கிய கீர்த்தி..
“ரோஹித் சாவியைக் கொடு! நான் போய் தூங்குகிறேன்..” என்று அவள் சோர்வாக சொல்ல, “முதலில் சாப்பிட்டியா கீர்த்தி..?” என்று கேட்டான் ரோஹித்
அவள் இல்லை என்று தலையை இடமும் தலையை ஆட்ட, “லூசு வா சாப்பிட்டுவிட்டு அப்புறம் சென்று தூங்கு..” என்று அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான்
இரவு பன்னிரண்டு மணக்க மணக்க தக்காளி சாதம் செய்து வைத்திருக்க அதை மோப்பம் பிடித்த கீர்த்தி, “டேய் ரோஹித் நீ மட்டும் எப்படித்தான் இப்படி மணக்க மணக்க சமையல் செய்கிறாய் என்று தெரியவில்லை..” என்று சொன்னவள் டைனிங் டேபிளில் அமர்ந்தாள்
அவளின் கேள்விக்கு அழகிய சிரிப்பை பதிலென கொடுத்தான் ரோஹித், அதைப் பார்த்த கீர்த்தி, “எல்லா கேள்விக்கும் உன்னோட பதில் சிரிப்புதானா..? உன்னோட அந்த அழகான புன்னகைக்கு பின்னால் இருக்கும் மர்மம் தான் என்ன என்று எனக்கே தெரிய மாட்டேன் என்கிறது..” என்று புலம்பியபடியே சாப்பிட ஆரமித்தாள்
“உனக்கு இப்ப இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம் தானா..?” என்று கேட்ட ரோஹித், தனக்கும் ஒரு தட்டில் சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு அவளின் எதிரில் அமர்ந்தான்
“நீயும் இன்னமும் சாப்பிடலையா லூசு..” என்று கேட்ட கீர்த்தியைப் பார்த்த ரோஹித், “நீயில்லாம் நான் மட்டும் எப்படிடா சாப்பிடுவேன்..?” என்று கேட்டவனை விழிகள் இரண்டும் தெறிக்கும் அளவிற்கு அவனைப் பார்த்தாள் கீர்த்தி
“அப்படியெல்லாம் சொல்வேன் என்று எதிர் பார்க்காதே கீர்த்தி..” என்று சிரிப்புடன் சொல்லி கண்ணடிக்க, “ஃபிராடு நீ அவ்வளவு நல்லவனோ என்று நினைத்து ஒரு நிமிஷம் ஏமாந்துவிட்டேன்..” என்று சொன்ன கீர்த்தி,
“இது இரண்டாவது ரவுண்டா..?” என்று சந்தேகமாகக் கேட்டாள் கீர்த்தி
“இல்லடா வந்தவுடன் லேப்டாப்பில் வொர்க்கை முடித்துவிட்டு அப்படி படுத்துவிட்டேன்..” என்று சொன்ன ரோஹித் சாப்பிட, அவனைப் பார்த்த கீர்த்தி
“டேய் ரோஹித் எனக்கு ஒரு சந்தேகம்..?” என்று கேட்ட கீர்த்தியைப் பார்த்து கேள்வியாக ஒற்றை புருவம் உயர்த்தினான் ரோஹித்
“உன்னோட ஊரில் அத்தனை சொத்துகள் அனைத்தையும் வைத்துக் கொண்டு இங்கே வந்து வேலை செய்யும் அளவிற்கு என்ன நிலைமை வந்தது..?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்ட கீர்த்தியைப் பார்த்த ரோஹித்
“உனக்கு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகணுமா..?” என்று எதிர் கேள்விக் கேட்டவனைப் பார்த்து, “சொல்லாதே நல்ல சாப்பிடு..” என்று சொன்ன கீர்த்தி கோபத்துடன் சாப்பிட ஆரமித்தாள்
அவளின் கோபம் எதுவரைக்கும் என்று அவனுக்கும் தெரியும், அதனால் அவனும் எதுபற்றியும் கவலையும் இல்லாமல் சாப்பிட ஆரமித்தான் ரோஹித்
நல்ல சாப்பிட்டு முடித்தவுடன் எதுவும் பேசாமல் எழுந்து சென்ற கீர்த்தி, கீயை எடுத்துக்கொண்டு அவளின் ஃப்ளாட்டிற்கு சென்றாள்
அவனும் எழுந்து கதவை அடைத்துவிட்டு அதன்மேல் சாய்ந்து நின்று, “நான் என்னடி பண்ணினேன்.. என்னிடம் அப்படி பேச உன்னால் எப்படி முடிந்தது..” என்று கேட்டவன் ஆழ மூச்செடுத்து தன்னை சமாதானம் செய்துக்கொண்டு படுக்கை அறையை நோக்கிச் சென்றான்
காலையில் எழுந்த கீர்த்தி, அவனுக்கும் சேர்த்து காபி போட்டுவிட்டு அலைபேசியைக் கையில் எடுத்து, ரோஹித்துக்கு அழைத்தாள்..
தூக்கக்கலக்கத்தில் செல்லை எடுத்தவன், “ஹலோ..” என்று சொல்ல, “டேய் எருமை எழுந்திரு! வந்து காபி சாப்பிடு..” என்று அழைக்க, “ம்ம் வருகிறேன் கீர்த்தி..” என்று சொல்லிவிட்டு அலைபேசியை வைத்தவன் குளியலறைக்குள் புகுந்தான்.. கீர்த்தி காலை சமையலை சமைக்க ஆரமித்தாள்..
இதுதாங்க கீர்த்தி, எப்பொழுது எந்த கோபத்தையும் பத்து நிமிடத்திற்கு மேல் அவளால் பிடித்தது வைத்திருக்க முடியாது.. கீர்த்தி ரோஹித்தின் உயிர்தோழி என்றே சொல்லலாம்.. கீர்த்திக்கு பிறந்தது வளந்தது எல்லாம் அமேரிக்கா தான். அவளின் பெற்றொர் இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட, இவள் இவளது பாதையில் செல்ல ஆரமித்தாள்..
அமெரிக்காவில் பிறந்தப்பெண் என்றதும் கிளப், டான்ஸ், பார்ட்டி, டேட்டிங் என்று செல்லும் பெண்களில் இருந்து இவள் முற்றிலும் மாறுபட்டவள்.. அவளுக்கு இது எதுவுமே பிடிக்காது..
அவள் பார்க்கும் அனைவரும், “நீங்க தமிழ்நாடா..?” என்று கேட்கும் அளவிற்கு தமிழும் பேசுவாள்.. தமிழ்நாட்டு பெண் போலவே இருப்பாள்.. அவளுக்கு இந்தியா என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் சின்ன வயதிலேயே அவள் தமிழை மிகவும் விருப்பத்துடன் கற்றாள்..
அங்கே வரும் இந்தியப்பெண்களுடன் தோழியாக பழகுவாள்.. அப்படியே நாட்கள் விரைய அவளுக்கு கிடைத்த முதல் இந்திய தோழன் தான் நம்ம ரோஹித்..
முதலில் இவனுடன் விளையாட்டாக பழகிய கீர்த்தி, பிறகு நல்ல தோழியாக பழகவும் ஆரமித்துவிட்டாள்.. இவள் அமெரிக்காவில் பிறந்து இந்திய கலச்சாரம் படி வளர்ந்த அமெரிக்காவின் தமிழ் பேசும் மங்கை!
அன்று விடுமுறை என்பதால் மெதுவாக எழுந்து குளித்துவிட்டு வந்த ரோஹித்தைப் பார்த்த கீர்த்தி, “வரும் நேரத்தைப் பாரு.. ஆடி அசைந்து மெதுவாக வருவதற்குள் இந்த காபி மாட்டுக்கு வைக்கும் புண்ணாக்கு தண்ணியை விடவும் மோசமாக ஆகிவிட்டது..” என்று அவனைக் கடிந்துக் கொண்டவள் மறுபடியும் காபி போட்டு அவனின் கையில் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்
ரோஹித் வழக்கம் போல வம்பிழுக்காமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து புருவம் உயர்த்தினாள் கீர்த்தி, “என்னடா காலையில் ஒரே யோசனையாக இருக்கிறாய்..?” என்று கேட்டாள்
“இல்ல கீர்த்தி நைட் வீட்டிற்கு கால் பண்ணினேன் யாருமே எடுக்கல.. அண்ணனுக்கும் கால் பண்ணினால் அவனும் எடுக்கவே இல்லை.. அதுதான் ஒரே யோசனையாகவே இருக்கிறது..” என்று சொல்ல
“கவலைப்பாடாதே! கண்டிப்பாக போன் வரும்.. இங்கே ராத்திரி என்றால் அங்கே பகல், ஏதாவது வேலையாக இருந்திருக்கலாம்.. அதுக்கு இப்படித்தான் இருப்பியா..?” என்று திட்டியவள்
அவளின் அலைபேசியை எடுத்து அவனின் வீட்டிற்கு அழைத்தாள்.. அந்த அழைப்பை எடுத்து கல்யாணி, “ஹலோ..” என்று சொல்ல, “அம்மா நான் கீர்த்திம்மா..” என்று சொல்ல,
அதுவரையில் அழுதுக்கொண்டு இருந்த கல்யாணி, “ஒரு நிமிஷம் கண்ணா..” என்று சொன்னவர் எழுது சென்று முகம் கழுவிவிட்டு வர, “டேய் ரோஹி அம்மா பேசறாங்க..” என்று எதிரில் இருந்த ரோஹித்திடம் அவள் சொல்ல, ‘பேசு கீர்த்தி..’ என்று சைகை செய்தான் ரோஹித்
“சொல்லும்மா நல்ல இருக்கிறாயா..?” என்று பாசத்துடன் கேட்டார் கல்யாணி
“என்னங்கம்மா உங்களின் தூக்கத்தைக் கேடுத்துவிட்டேனா..?” என்று வருத்தமாகக் கேட்ட கீர்த்தியின் கேள்விக்கு சிரித்தவர்,
‘அதைக் கெடுக்கத்தான் நான் பெத்து வைத்திருக்கேனே ஒன்று அது என்னோட தூக்கத்தை நல்ல கெடுத்துவிட்டது’ என்று மனதில் பெரிய மகனை திட்டியவர்,
“இல்லம்மா நான் இன்னும் தூங்கவில்லை..” என்று கூறியவர், “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்மா நல்ல இருக்கிறாயா..?” என்று செல்லமாகக் கேட்க,
“நான் நல்ல இருக்கேன் அம்மா.. அப்பா எங்கே..?” என்று கேட்டாள் கீர்த்தி
“அவர் தூங்குகிறார் கீர்த்திம்மா..” என்று சொன்னவர், கணவன் நொடிந்து போயி உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து கண்ணீரை அவரின் முந்தானையில் துடைத்தார்..
அமெரிக்காவில் சிகாகோ மாகாணத்தில் இருந்த ஒரு பிளாட்டில், ரோஹித் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, காலிங்பெல் நிற்காமல் அலறியது..
அவனும் இரண்டு காதுகளையும் நன்றாக மூடிக்கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, காலிங்பெல் மட்டும் நிற்காமல் அடித்துக் கொண்டே இருக்க,
“சரியான இம்சை..” என்று திட்டிய வண்ணம் படுக்கையில் இருந்து எழுந்து சென்ற ரோஹித் கதவைத் திறக்க, “டேய் எருமை கதவைத் திறக்க இவ்வளவு நேரமா..? என்னோட கீய் கொடு நான் போய் படுக்கிறேன்..” என்று கடுப்புடன் கூறிய கீர்த்தியைப் பார்த்தவன்,
“உன்னோட கீயை என்னிடம் எதுக்கு கொடுத்துட்டுப் போறா..?” என்று அவனும் கடுப்புடன் கேட்க, “நான் மட்டும் அந்த மைதா மாவு காரனிடம் நைட் சிப்ட் செய்துட்டு வருவேன்.. நீ மட்டும் நல்ல தூங்குவியோ..?” என்று அவளும் எகிறினாள்
“ஆகமொத்தம் நான் நிம்மதியாகத் தூங்கக் கூடாது.. அதுதானே உன்னோட திட்டம்..?” என்று கோபத்துடன் கேட்டான் ரோஹித்
“நான் மட்டும் தூங்காமல் தானே வேலை செய்கிறேன்.. நீ மட்டும் எப்படி நிம்மதியாகத் தூங்கலாம்..?” என்று சத்தமிட்ட கீர்த்தியைப் பார்த்து,
“ஐயோ சாமி நைட் கத்தி ஊரைக்கூட்டி பஞ்சத்து வைத்திராதே தாயே! இது ஒன்னும் நம்ம ஊரு கிடையாது..” என்று அவன் கையெடுத்துக் கும்பிடுவதைப் பார்த்து மெல்ல மலை இறங்கிய கீர்த்தி..
“ரோஹித் சாவியைக் கொடு! நான் போய் தூங்குகிறேன்..” என்று அவள் சோர்வாக சொல்ல, “முதலில் சாப்பிட்டியா கீர்த்தி..?” என்று கேட்டான் ரோஹித்
அவள் இல்லை என்று தலையை இடமும் தலையை ஆட்ட, “லூசு வா சாப்பிட்டுவிட்டு அப்புறம் சென்று தூங்கு..” என்று அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான்
இரவு பன்னிரண்டு மணக்க மணக்க தக்காளி சாதம் செய்து வைத்திருக்க அதை மோப்பம் பிடித்த கீர்த்தி, “டேய் ரோஹித் நீ மட்டும் எப்படித்தான் இப்படி மணக்க மணக்க சமையல் செய்கிறாய் என்று தெரியவில்லை..” என்று சொன்னவள் டைனிங் டேபிளில் அமர்ந்தாள்
அவளின் கேள்விக்கு அழகிய சிரிப்பை பதிலென கொடுத்தான் ரோஹித், அதைப் பார்த்த கீர்த்தி, “எல்லா கேள்விக்கும் உன்னோட பதில் சிரிப்புதானா..? உன்னோட அந்த அழகான புன்னகைக்கு பின்னால் இருக்கும் மர்மம் தான் என்ன என்று எனக்கே தெரிய மாட்டேன் என்கிறது..” என்று புலம்பியபடியே சாப்பிட ஆரமித்தாள்
“உனக்கு இப்ப இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம் தானா..?” என்று கேட்ட ரோஹித், தனக்கும் ஒரு தட்டில் சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு அவளின் எதிரில் அமர்ந்தான்
“நீயும் இன்னமும் சாப்பிடலையா லூசு..” என்று கேட்ட கீர்த்தியைப் பார்த்த ரோஹித், “நீயில்லாம் நான் மட்டும் எப்படிடா சாப்பிடுவேன்..?” என்று கேட்டவனை விழிகள் இரண்டும் தெறிக்கும் அளவிற்கு அவனைப் பார்த்தாள் கீர்த்தி
“அப்படியெல்லாம் சொல்வேன் என்று எதிர் பார்க்காதே கீர்த்தி..” என்று சிரிப்புடன் சொல்லி கண்ணடிக்க, “ஃபிராடு நீ அவ்வளவு நல்லவனோ என்று நினைத்து ஒரு நிமிஷம் ஏமாந்துவிட்டேன்..” என்று சொன்ன கீர்த்தி,
“இது இரண்டாவது ரவுண்டா..?” என்று சந்தேகமாகக் கேட்டாள் கீர்த்தி
“இல்லடா வந்தவுடன் லேப்டாப்பில் வொர்க்கை முடித்துவிட்டு அப்படி படுத்துவிட்டேன்..” என்று சொன்ன ரோஹித் சாப்பிட, அவனைப் பார்த்த கீர்த்தி
“டேய் ரோஹித் எனக்கு ஒரு சந்தேகம்..?” என்று கேட்ட கீர்த்தியைப் பார்த்து கேள்வியாக ஒற்றை புருவம் உயர்த்தினான் ரோஹித்
“உன்னோட ஊரில் அத்தனை சொத்துகள் அனைத்தையும் வைத்துக் கொண்டு இங்கே வந்து வேலை செய்யும் அளவிற்கு என்ன நிலைமை வந்தது..?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்ட கீர்த்தியைப் பார்த்த ரோஹித்
“உனக்கு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகணுமா..?” என்று எதிர் கேள்விக் கேட்டவனைப் பார்த்து, “சொல்லாதே நல்ல சாப்பிடு..” என்று சொன்ன கீர்த்தி கோபத்துடன் சாப்பிட ஆரமித்தாள்
அவளின் கோபம் எதுவரைக்கும் என்று அவனுக்கும் தெரியும், அதனால் அவனும் எதுபற்றியும் கவலையும் இல்லாமல் சாப்பிட ஆரமித்தான் ரோஹித்
நல்ல சாப்பிட்டு முடித்தவுடன் எதுவும் பேசாமல் எழுந்து சென்ற கீர்த்தி, கீயை எடுத்துக்கொண்டு அவளின் ஃப்ளாட்டிற்கு சென்றாள்
அவனும் எழுந்து கதவை அடைத்துவிட்டு அதன்மேல் சாய்ந்து நின்று, “நான் என்னடி பண்ணினேன்.. என்னிடம் அப்படி பேச உன்னால் எப்படி முடிந்தது..” என்று கேட்டவன் ஆழ மூச்செடுத்து தன்னை சமாதானம் செய்துக்கொண்டு படுக்கை அறையை நோக்கிச் சென்றான்
காலையில் எழுந்த கீர்த்தி, அவனுக்கும் சேர்த்து காபி போட்டுவிட்டு அலைபேசியைக் கையில் எடுத்து, ரோஹித்துக்கு அழைத்தாள்..
தூக்கக்கலக்கத்தில் செல்லை எடுத்தவன், “ஹலோ..” என்று சொல்ல, “டேய் எருமை எழுந்திரு! வந்து காபி சாப்பிடு..” என்று அழைக்க, “ம்ம் வருகிறேன் கீர்த்தி..” என்று சொல்லிவிட்டு அலைபேசியை வைத்தவன் குளியலறைக்குள் புகுந்தான்.. கீர்த்தி காலை சமையலை சமைக்க ஆரமித்தாள்..
இதுதாங்க கீர்த்தி, எப்பொழுது எந்த கோபத்தையும் பத்து நிமிடத்திற்கு மேல் அவளால் பிடித்தது வைத்திருக்க முடியாது.. கீர்த்தி ரோஹித்தின் உயிர்தோழி என்றே சொல்லலாம்.. கீர்த்திக்கு பிறந்தது வளந்தது எல்லாம் அமேரிக்கா தான். அவளின் பெற்றொர் இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட, இவள் இவளது பாதையில் செல்ல ஆரமித்தாள்..
அமெரிக்காவில் பிறந்தப்பெண் என்றதும் கிளப், டான்ஸ், பார்ட்டி, டேட்டிங் என்று செல்லும் பெண்களில் இருந்து இவள் முற்றிலும் மாறுபட்டவள்.. அவளுக்கு இது எதுவுமே பிடிக்காது..
அவள் பார்க்கும் அனைவரும், “நீங்க தமிழ்நாடா..?” என்று கேட்கும் அளவிற்கு தமிழும் பேசுவாள்.. தமிழ்நாட்டு பெண் போலவே இருப்பாள்.. அவளுக்கு இந்தியா என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் சின்ன வயதிலேயே அவள் தமிழை மிகவும் விருப்பத்துடன் கற்றாள்..
அங்கே வரும் இந்தியப்பெண்களுடன் தோழியாக பழகுவாள்.. அப்படியே நாட்கள் விரைய அவளுக்கு கிடைத்த முதல் இந்திய தோழன் தான் நம்ம ரோஹித்..
முதலில் இவனுடன் விளையாட்டாக பழகிய கீர்த்தி, பிறகு நல்ல தோழியாக பழகவும் ஆரமித்துவிட்டாள்.. இவள் அமெரிக்காவில் பிறந்து இந்திய கலச்சாரம் படி வளர்ந்த அமெரிக்காவின் தமிழ் பேசும் மங்கை!
அன்று விடுமுறை என்பதால் மெதுவாக எழுந்து குளித்துவிட்டு வந்த ரோஹித்தைப் பார்த்த கீர்த்தி, “வரும் நேரத்தைப் பாரு.. ஆடி அசைந்து மெதுவாக வருவதற்குள் இந்த காபி மாட்டுக்கு வைக்கும் புண்ணாக்கு தண்ணியை விடவும் மோசமாக ஆகிவிட்டது..” என்று அவனைக் கடிந்துக் கொண்டவள் மறுபடியும் காபி போட்டு அவனின் கையில் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்
ரோஹித் வழக்கம் போல வம்பிழுக்காமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து புருவம் உயர்த்தினாள் கீர்த்தி, “என்னடா காலையில் ஒரே யோசனையாக இருக்கிறாய்..?” என்று கேட்டாள்
“இல்ல கீர்த்தி நைட் வீட்டிற்கு கால் பண்ணினேன் யாருமே எடுக்கல.. அண்ணனுக்கும் கால் பண்ணினால் அவனும் எடுக்கவே இல்லை.. அதுதான் ஒரே யோசனையாகவே இருக்கிறது..” என்று சொல்ல
“கவலைப்பாடாதே! கண்டிப்பாக போன் வரும்.. இங்கே ராத்திரி என்றால் அங்கே பகல், ஏதாவது வேலையாக இருந்திருக்கலாம்.. அதுக்கு இப்படித்தான் இருப்பியா..?” என்று திட்டியவள்
அவளின் அலைபேசியை எடுத்து அவனின் வீட்டிற்கு அழைத்தாள்.. அந்த அழைப்பை எடுத்து கல்யாணி, “ஹலோ..” என்று சொல்ல, “அம்மா நான் கீர்த்திம்மா..” என்று சொல்ல,
அதுவரையில் அழுதுக்கொண்டு இருந்த கல்யாணி, “ஒரு நிமிஷம் கண்ணா..” என்று சொன்னவர் எழுது சென்று முகம் கழுவிவிட்டு வர, “டேய் ரோஹி அம்மா பேசறாங்க..” என்று எதிரில் இருந்த ரோஹித்திடம் அவள் சொல்ல, ‘பேசு கீர்த்தி..’ என்று சைகை செய்தான் ரோஹித்
“சொல்லும்மா நல்ல இருக்கிறாயா..?” என்று பாசத்துடன் கேட்டார் கல்யாணி
“என்னங்கம்மா உங்களின் தூக்கத்தைக் கேடுத்துவிட்டேனா..?” என்று வருத்தமாகக் கேட்ட கீர்த்தியின் கேள்விக்கு சிரித்தவர்,
‘அதைக் கெடுக்கத்தான் நான் பெத்து வைத்திருக்கேனே ஒன்று அது என்னோட தூக்கத்தை நல்ல கெடுத்துவிட்டது’ என்று மனதில் பெரிய மகனை திட்டியவர்,
“இல்லம்மா நான் இன்னும் தூங்கவில்லை..” என்று கூறியவர், “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்மா நல்ல இருக்கிறாயா..?” என்று செல்லமாகக் கேட்க,
“நான் நல்ல இருக்கேன் அம்மா.. அப்பா எங்கே..?” என்று கேட்டாள் கீர்த்தி
“அவர் தூங்குகிறார் கீர்த்திம்மா..” என்று சொன்னவர், கணவன் நொடிந்து போயி உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து கண்ணீரை அவரின் முந்தானையில் துடைத்தார்..
Last edited: