அத்தியாயம் – 22
வானம் மெல்ல சிவக்க, இனிதான ஒரு விடியலைத் தேடி வானில் பறந்து சென்றது பறவைகள் தங்களின் இன்னிசை இசையுடன்! எங்கிருந்தோ வந்த கருங்குயிலின் கானம் மதுவிற்கு விழிப்பைக் கொடுக்க,
அவள் எப்பொழுதும் போல மகளின் முகத்தில் கண்விழிக்க, அவளின் மகளோ அன்னையின் கழுத்தை கட்டிக்கொண்டு அவளின் மார்பில் துயில் கொண்டிருக்க அவளின் நெற்றியில் இதழ் பதித்து எழுந்தாள்..
அவளின் மனதில் நிம்மதி நிலை கொண்டு நிற்க, நேற்று செய்ய இருந்த காரியம் அவளின் மனதில் படமாக ஓட, மகளை அணைத்துக் கொண்டாள் மதுமிதா..
‘என்ன முட்டாள் தனமான காரியம் செய்ய இருந்தேன்.. நேற்று அவன் மட்டும் வரவில்லை என்றால்..?!’ என்ற கேள்வியில் அவளின் நெஞ்சம் ஜில் என்றது..
மார்பில் படுத்திருந்த அபூர்வாவின் முகம் பார்த்தவள், ‘உன்னை விட்டுவிட்டு நான் எங்கே செல்வேன் கண்ணம்மா.. என்னோட உயிர் உன்னோட பாசத்திலும் அவனது காதலிலும் கட்டுப்பட்டு கிடக்கிறது..’ என்றவள் மகளை அருகில் படுக்க வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தவள், குளித்து முடித்து பூஜை அறைக்குள் சென்றாள்..
தெய்வங்களின் மத்தியில் தெய்வமாக மாறிய மூன்று ஜீவன்கள் புன்னகை முகத்துடன் இருந்தவர்களின் முகம் பார்த்தவள், எப்பொழுது அவளது மனதில் தோன்றும் கேள்வியை மறுபடியும் எழுந்தது..
‘என்னோட வாழ்க்கையில் என்ன நடக்கிறது..?! ரோஹித்தை நான் காதலித்தேன்.. அது என்னோட தவற..? இல்ல அவரை நினைத்த மனதில் வேறு ஒருவரை நினைக்க முடியாமல் மதுரைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு சென்றது என்னோட தவற..? அங்கே உங்களுடன் நட்புக்கு கொண்டது என்னோட தவற..? இல்ல நீங்க மூவரும் இறந்த பின்னரும் அபூர்வாவிற்காக நான் வாழ நினைத்து தவற..? என்னோட பெற்றோரே என்னை நம்பாமல் போனது தவற..? இல்ல என்னோட விதியா..?’ என்று மனதில் அந்த புகைப்படத்தில் இருந்த மூவரையும் பார்த்து கேட்டாள்..
அந்த புகைப்படத்தில் இருந்தவர்களால் அவளைப் பார்த்து புன்னகைக்க மட்டும் முடிந்தது.. அந்த புன்னகை பார்த்து,
‘அபூர்வா தான் என்னோட வாழ்க்கை என்று வாழ ஆரமித்த பிறகு தனது மொத்த காதலின் சின்னமாக என் முன் அதே காதலுடன் வந்து நிற்கும் ரோஹித்.. அவனை நான் ஏற்றுக்கொண்டால் என்னோட காதல் வெற்றி அடைத்துவிடும்.. என்னோட காத்திருப்பு கைகூடிவிடும்.. ஆனால் அபூர்வாவை ஏற்றுக்கொள்ள அவனால் முடியுமா..?’ என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் பெருகியது..
‘தாயே ஆகாமல் தாயாக மாறினேன் என்னோட அபூர்வாவிற்காக..! என்னோட மொத்த பாசத்தையும் அவளின் மீது கொட்டி வளர்த்தேன்.. இப்பொழுது என்னோட ரோஹித்தை ஏற்கவும் முடியாமல் அபூர்வாவின் மீது வைத்த பாசத்தை உடைக்கவும் முடியாமல் சாக நினைத்தவளையும் சாகவும் முடியாமல் இருக்கும் ஒரு முடவனின் நிலை யாருக்கும் வரக்கூடாது!’ என்று மனதில் இருப்பதை எல்லாம் கொட்டியவள்
‘எனக்கு இருவரும் இரண்டு கண்கள்! ரோஹித் வேண்டும்.. அபூர்வாவும் வேண்டும்.. என்னால் ஒருவரை ஒருவருக்காக விட்டுக்கொடுக்க முடியாது..’ என்று மனதில் நினைத்தவள் ஒரு நிமிர்வுடன்,
‘இதுவரை நான் நினைத்தது நடக்கவில்லை.. என்ன நடந்தாலும் நான் ஏற்க தயார்.. ஆனால் என்னோட மகள் வாழ்க்கைக்கு எந்த தீங்கும் வராமல் நீங்கதான் பார்த்துக் கொள்ள வேண்டும்..’ என்று மனதாரப் பிராத்தனை செய்தவள்,
பூஜை அறையை விட்டு வெளியே வர குளித்து முடித்து தயாராக இருந்தால் கயல்விழி..! அவலைப் பார்த்து புன்னகை செய்தவள்,
“என்ன கயல் எங்கே இவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறாய்..? இதுதான் நீ இரண்டு நாள் தங்கும் அழகா..?!” என்று புன்னகையோடு கேட்க, அவளை கண்களால் அளந்தாள் கயல்விழி..
மஞ்சள் வண்ண காட்டன் புடவையில் நேர்த்தியாக கட்டிக்கொண்டு தலைக்கு குளித்த படியால் தலையை பின்னல் இடாமல் ஒரு சின்ன கிளிப் மூலம் கொஞ்ச முடியை அடக்கியவள் கூந்தலை விரிய விட்டு முகத்தில் ஒரு போட்டு மட்டும் வைத்துக் கொண்டு இருந்தவளின் முகத்திற்கு அழகு சேர்த்து அவள் அணிந்திருந்த ஜிமிக்கியும், ஒற்றைக்கல் மூக்குத்தியும்..!
தனது தமக்கையின் அழகில், ‘ரோஹித் மாம்ஸ் எதுக்கு அக்காவை இன்னமும் சுற்றி வரீங்க என்று எனக்கு இப்பொழுதானே புரிகிறது.. இவள் போல அமைதியான அழகு யாருக்கு கிடைக்கும்..?’ என்று மனதில் நினைத்தவள் சிலையென நின்றிருந்தாள்..!
தங்கை தன்னைப் பார்த்து சிலை என்று நிற்பதைப் பார்த்து, “அம்மன் விக்ரகத்தை நாளை காலையில் கோவிலில் பிரதிஷ்டி செய்துவிடலாமா கயல்!” என்று தங்கையைப் பார்த்து குறும்பாக கண்சிமிட்டிச் சிரித்தாள் மதுமிதா..
அவளின் முகத்தில் இருந்த தெளிவும், அவளின் குறும்பு கண்சிமிட்டலும் கயல்விழியை உயிர்பிக்க, அவளின் அருகில் சென்று கட்டிக் கொண்டாள் கயல்விழி..
“என்னடி காலையில் ஒரே ட்ரிம்ல இருக்கிறாய்..? என்ன வீட்டில் திருமணம் ஏற்பாடு ஏதாவது நடக்கிறதா..?” என்று விளையாட்டாகக் கேட்டாள் மதுமிதா..
அவளிற்கு தெரியாமல் எத்தனை விஷயங்கள் நடந்திருக்கிறது என்று அவளிற்கே தெரியாது.. ஆனால் அவளின் கணிப்பு சரியாக இருந்தது..!
அவளிடமிருந்து விலகியவள் தலையைக் குனிந்துக் கொண்டு, “யெஸ் ஜீவா வீட்டில் இருந்து என்னை பெண் கேட்டு வந்திருக்காங்க அக்கா..” என்று சொன்ன தங்கையைப் பார்த்து சந்தோசம் அடைந்தவள்,
“ஐயோ என்னோட கயல்விழி பெரிய பொண்ணு ஆகிட்டா! அவளுக்கு கூட அடக்கம் என்றால் என்ன என்று தெரிகிறது..” என்று தங்கையைக் கிண்டல் செய்தாள் மதுமிதா..
“அக்கா..” என்று சிணுங்கியவளைப் பார்த்து அழகாக புன்னகை செய்தவள், “உன்னோட வீட்டில் என்ன சொன்னாங்க..?” என்று கேட்டாள்.. அவள் கேட்டதின் அர்த்தம் கயல்விழி கவனிக்கவில்லை..
அவளோ,“அப்பா, அம்மா இருவரும் என்னிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லி இருக்காங்க.” என்று சொன்னவளைப் பார்த்து மதுமிதா வெறுமையாக சிரிக்க அவளின் சிரிப்பில் முதலில் இருந்த உயிர்ப்பு இல்லை...
கயல்விழி அப்பொழுதுதான் கவனித்தால், ‘உன்னோட வீட்டில் என்ன சொன்னாங்க..’ என்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்து நிமிர்ந்து பார்த்தவள்,
“அக்கா நீயும் அந்த குடும்பத்தில் ஒருத்திதான்..” என்று அவள் சொல்ல, அவளைப் பார்த்து கசப்பான புன்னகை ஒன்றை உதிர்த்தாள் மதுமிதா..
“குடும்பத்தில் உண்மையான அர்த்தம் தெரியுமா கயல் உனக்கு..?” என்று கேட்டவள் தங்கையின் முகத்தை நோக்க, அவள் குழப்பத்தில் நின்றிருந்தாள்..
“நான் தப்பே செய்திருந்தாலும் ஒரு கட்டத்தில் என்னோட மகள், அப்படி ஒரு காரியம் செய்ய மாட்டாள் என்று நம்புவது தான், நம்பி ஏற்றுக்கொள்வதுதான் குடும்பம்..” என்று சொன்னவள்
“பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று பழமொழி உண்டு! என்னோட வாழ்க்கையில் பிள்ளை மனம் தான் பித்து, பெத்த மனம் கல்லாகத் தான் இருக்கிறது..” என்றவள் கயலின் முகம் பார்த்து,
“அக்கா இப்படியே பேசிட்டு உன்னோட கல்யாணத்திற்கு வரமாட்டேன் என்று மட்டும் நினைக்காதே.. நான் வருவேன் என்னை என்ன பேசினாலும், திட்டினாலும், அவமானப்படுத்தினாலும் உன்னோட திருமணத்திற்கு நான் கண்டிப்பாக வருவேன்..” என்று சொல்லிக்கொண்டிருக்க
“நாங்கள் உள்ளே வரலாமா..?!” என்று கோரஸாகக் குரல் கேட்க, அக்கா, தங்கை இருவரும் வாசலைப் பார்க்க, ரஞ்சித், கீர்த்தி, ஜீவா மூவரும் வாசலில் நின்றிருந்தனர்..
“வாங்க..” என்று புன்னகையுடன் அழைத்தவள், மூவரும் உள்ளே வர, அவர்கள் உள்ளே வர அவர்களின் பின்னோடு வீட்டிற்குள் வந்தனர் காமாட்சி, சிவரத்தினம் இருவரும்...!
அதுவரை இருவரும் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் மறந்தவளாக, “அப்பா, அம்மா உள்ளே வாங்க..” என்று மதுமிதா அழைக்க, ‘இவள் யாரைச் சொல்கிறாள்..?’ என்ற கேள்வியில் வாசலைப் பார்த்தவர்கள்,
“அவர்களைத் தாத்தா – பாட்டி என்று கூப்பிடனும்..” என்று கயல்விழி சிரிப்புடன் சொல்ல, “என்னம்மோ தெரியல கயல்விழி இவங்களை நான் அப்படி கூப்பிட எனக்கும் ஆசைதான்! ஆனால் என்னை முழுவதும் புரிந்து வைத்திருப்பதால் எனக்கு அப்பா, அம்மா என்றுதான் கூப்பிட வருகிறது..” என்று சொல்ல,
“இனிமேல் மாத்திக்கணும் மதுமிதா..” என்று கண்டிப்புடன் சொன்னார் காமாட்சி, மற்றவர்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டு நிற்க,
“சரிம்மா நான் மாற்றிக் கொள்கிறேன்..” என்று சொல்ல, “திரும்பவும் அம்மாவா..?!” இவள் திருந்தவே மாட்டாள்..” என்று திட்டினாள் கயல்விழி..
“சரிங்க பாட்டி நான் இனிமேல் அப்படியே கூப்பிடுகிறேன் பாட்டிம்மா..” என்றவள், “எல்லோரு இருங்க நான்..” என்று திரும்பியவளை, “இல்ல மதுமிதா எதுவும் வேண்டாம்.. நாங்க மதுரை போகிறோம்..” என்று சொல்ல, அதுவரையில் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து, இருள் சூழ்ந்தது அவளின் முகத்தில்!
அவள் முகத்தை வைத்தே மனதை படித்தவர், “என்னோட மகளும், மருமகனும் துணியெடுக்க மதுரை வராங்க.. நாங்களும் சென்றால் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று போகிறோம்..” என்று சொன்னவர், “அபூர்வாவை எங்களோடு அனுப்பும்மா.. எங்களுக்கு அவளை விட்டுவிட்டு செல்ல மனமே இல்லை..” என்று கேட்கவும்,
“தாத்தா நீங்க இருவரும் இல்லை என்றால் அவளை என்னால் சமாளிக்கவே முடியாது! அதுவே நான் இல்லை என்றாலும் அபூவை நீங்க இருவரும் சமாளித்து விடுவீர்கள்..” என்று சொன்னவள்,
“அதுக்கு என்ன தாத்தா நீங்க தாராளமாக அழைத்துச் செல்லுங்கள்.. அவள் எழுந்ததும் கூப்பிட்டுட்டு போங்க..” என்று சந்தோசமாகச் சொன்னவள்,
அறைக்குள் செல்ல திரும்ப, “அம்மா..” என்று அழைத்தவண்ணம் எழுந்து வந்தாள் அபூர்வா..
“நீங்க பேசியது காதில் விழுந்து விட்டது போல..?” என்று சொன்னவள் சிரிக்க முயன்று தோற்றவளாக மகளைத் தயார் செய்ய, கயலில் அருகில் வந்த ஜீவா,
“அப்பா போன் செய்தார் கயல்.. நம் இருவரும் இங்கே வந்திருப்பது என்னோட சொந்தக்காரர் யாரோ பார்த்து அப்பாவிற்கு சொல்லிவிட்டார்.. அவரும், அம்மாவும் உன்னை பெண் கேட்டு உங்க வீட்டிற்கு போன போதுதான், அவங்களுக்கும் பத்திரிக்கை கொடுக்கபட்டது..” என்று விவரம் சொல்ல,
வானம் மெல்ல சிவக்க, இனிதான ஒரு விடியலைத் தேடி வானில் பறந்து சென்றது பறவைகள் தங்களின் இன்னிசை இசையுடன்! எங்கிருந்தோ வந்த கருங்குயிலின் கானம் மதுவிற்கு விழிப்பைக் கொடுக்க,
அவள் எப்பொழுதும் போல மகளின் முகத்தில் கண்விழிக்க, அவளின் மகளோ அன்னையின் கழுத்தை கட்டிக்கொண்டு அவளின் மார்பில் துயில் கொண்டிருக்க அவளின் நெற்றியில் இதழ் பதித்து எழுந்தாள்..
அவளின் மனதில் நிம்மதி நிலை கொண்டு நிற்க, நேற்று செய்ய இருந்த காரியம் அவளின் மனதில் படமாக ஓட, மகளை அணைத்துக் கொண்டாள் மதுமிதா..
‘என்ன முட்டாள் தனமான காரியம் செய்ய இருந்தேன்.. நேற்று அவன் மட்டும் வரவில்லை என்றால்..?!’ என்ற கேள்வியில் அவளின் நெஞ்சம் ஜில் என்றது..
மார்பில் படுத்திருந்த அபூர்வாவின் முகம் பார்த்தவள், ‘உன்னை விட்டுவிட்டு நான் எங்கே செல்வேன் கண்ணம்மா.. என்னோட உயிர் உன்னோட பாசத்திலும் அவனது காதலிலும் கட்டுப்பட்டு கிடக்கிறது..’ என்றவள் மகளை அருகில் படுக்க வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தவள், குளித்து முடித்து பூஜை அறைக்குள் சென்றாள்..
தெய்வங்களின் மத்தியில் தெய்வமாக மாறிய மூன்று ஜீவன்கள் புன்னகை முகத்துடன் இருந்தவர்களின் முகம் பார்த்தவள், எப்பொழுது அவளது மனதில் தோன்றும் கேள்வியை மறுபடியும் எழுந்தது..
‘என்னோட வாழ்க்கையில் என்ன நடக்கிறது..?! ரோஹித்தை நான் காதலித்தேன்.. அது என்னோட தவற..? இல்ல அவரை நினைத்த மனதில் வேறு ஒருவரை நினைக்க முடியாமல் மதுரைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு சென்றது என்னோட தவற..? அங்கே உங்களுடன் நட்புக்கு கொண்டது என்னோட தவற..? இல்ல நீங்க மூவரும் இறந்த பின்னரும் அபூர்வாவிற்காக நான் வாழ நினைத்து தவற..? என்னோட பெற்றோரே என்னை நம்பாமல் போனது தவற..? இல்ல என்னோட விதியா..?’ என்று மனதில் அந்த புகைப்படத்தில் இருந்த மூவரையும் பார்த்து கேட்டாள்..
அந்த புகைப்படத்தில் இருந்தவர்களால் அவளைப் பார்த்து புன்னகைக்க மட்டும் முடிந்தது.. அந்த புன்னகை பார்த்து,
‘அபூர்வா தான் என்னோட வாழ்க்கை என்று வாழ ஆரமித்த பிறகு தனது மொத்த காதலின் சின்னமாக என் முன் அதே காதலுடன் வந்து நிற்கும் ரோஹித்.. அவனை நான் ஏற்றுக்கொண்டால் என்னோட காதல் வெற்றி அடைத்துவிடும்.. என்னோட காத்திருப்பு கைகூடிவிடும்.. ஆனால் அபூர்வாவை ஏற்றுக்கொள்ள அவனால் முடியுமா..?’ என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் பெருகியது..
‘தாயே ஆகாமல் தாயாக மாறினேன் என்னோட அபூர்வாவிற்காக..! என்னோட மொத்த பாசத்தையும் அவளின் மீது கொட்டி வளர்த்தேன்.. இப்பொழுது என்னோட ரோஹித்தை ஏற்கவும் முடியாமல் அபூர்வாவின் மீது வைத்த பாசத்தை உடைக்கவும் முடியாமல் சாக நினைத்தவளையும் சாகவும் முடியாமல் இருக்கும் ஒரு முடவனின் நிலை யாருக்கும் வரக்கூடாது!’ என்று மனதில் இருப்பதை எல்லாம் கொட்டியவள்
‘எனக்கு இருவரும் இரண்டு கண்கள்! ரோஹித் வேண்டும்.. அபூர்வாவும் வேண்டும்.. என்னால் ஒருவரை ஒருவருக்காக விட்டுக்கொடுக்க முடியாது..’ என்று மனதில் நினைத்தவள் ஒரு நிமிர்வுடன்,
‘இதுவரை நான் நினைத்தது நடக்கவில்லை.. என்ன நடந்தாலும் நான் ஏற்க தயார்.. ஆனால் என்னோட மகள் வாழ்க்கைக்கு எந்த தீங்கும் வராமல் நீங்கதான் பார்த்துக் கொள்ள வேண்டும்..’ என்று மனதாரப் பிராத்தனை செய்தவள்,
பூஜை அறையை விட்டு வெளியே வர குளித்து முடித்து தயாராக இருந்தால் கயல்விழி..! அவலைப் பார்த்து புன்னகை செய்தவள்,
“என்ன கயல் எங்கே இவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறாய்..? இதுதான் நீ இரண்டு நாள் தங்கும் அழகா..?!” என்று புன்னகையோடு கேட்க, அவளை கண்களால் அளந்தாள் கயல்விழி..
மஞ்சள் வண்ண காட்டன் புடவையில் நேர்த்தியாக கட்டிக்கொண்டு தலைக்கு குளித்த படியால் தலையை பின்னல் இடாமல் ஒரு சின்ன கிளிப் மூலம் கொஞ்ச முடியை அடக்கியவள் கூந்தலை விரிய விட்டு முகத்தில் ஒரு போட்டு மட்டும் வைத்துக் கொண்டு இருந்தவளின் முகத்திற்கு அழகு சேர்த்து அவள் அணிந்திருந்த ஜிமிக்கியும், ஒற்றைக்கல் மூக்குத்தியும்..!
தனது தமக்கையின் அழகில், ‘ரோஹித் மாம்ஸ் எதுக்கு அக்காவை இன்னமும் சுற்றி வரீங்க என்று எனக்கு இப்பொழுதானே புரிகிறது.. இவள் போல அமைதியான அழகு யாருக்கு கிடைக்கும்..?’ என்று மனதில் நினைத்தவள் சிலையென நின்றிருந்தாள்..!
தங்கை தன்னைப் பார்த்து சிலை என்று நிற்பதைப் பார்த்து, “அம்மன் விக்ரகத்தை நாளை காலையில் கோவிலில் பிரதிஷ்டி செய்துவிடலாமா கயல்!” என்று தங்கையைப் பார்த்து குறும்பாக கண்சிமிட்டிச் சிரித்தாள் மதுமிதா..
அவளின் முகத்தில் இருந்த தெளிவும், அவளின் குறும்பு கண்சிமிட்டலும் கயல்விழியை உயிர்பிக்க, அவளின் அருகில் சென்று கட்டிக் கொண்டாள் கயல்விழி..
“என்னடி காலையில் ஒரே ட்ரிம்ல இருக்கிறாய்..? என்ன வீட்டில் திருமணம் ஏற்பாடு ஏதாவது நடக்கிறதா..?” என்று விளையாட்டாகக் கேட்டாள் மதுமிதா..
அவளிற்கு தெரியாமல் எத்தனை விஷயங்கள் நடந்திருக்கிறது என்று அவளிற்கே தெரியாது.. ஆனால் அவளின் கணிப்பு சரியாக இருந்தது..!
அவளிடமிருந்து விலகியவள் தலையைக் குனிந்துக் கொண்டு, “யெஸ் ஜீவா வீட்டில் இருந்து என்னை பெண் கேட்டு வந்திருக்காங்க அக்கா..” என்று சொன்ன தங்கையைப் பார்த்து சந்தோசம் அடைந்தவள்,
“ஐயோ என்னோட கயல்விழி பெரிய பொண்ணு ஆகிட்டா! அவளுக்கு கூட அடக்கம் என்றால் என்ன என்று தெரிகிறது..” என்று தங்கையைக் கிண்டல் செய்தாள் மதுமிதா..
“அக்கா..” என்று சிணுங்கியவளைப் பார்த்து அழகாக புன்னகை செய்தவள், “உன்னோட வீட்டில் என்ன சொன்னாங்க..?” என்று கேட்டாள்.. அவள் கேட்டதின் அர்த்தம் கயல்விழி கவனிக்கவில்லை..
அவளோ,“அப்பா, அம்மா இருவரும் என்னிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லி இருக்காங்க.” என்று சொன்னவளைப் பார்த்து மதுமிதா வெறுமையாக சிரிக்க அவளின் சிரிப்பில் முதலில் இருந்த உயிர்ப்பு இல்லை...
கயல்விழி அப்பொழுதுதான் கவனித்தால், ‘உன்னோட வீட்டில் என்ன சொன்னாங்க..’ என்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்து நிமிர்ந்து பார்த்தவள்,
“அக்கா நீயும் அந்த குடும்பத்தில் ஒருத்திதான்..” என்று அவள் சொல்ல, அவளைப் பார்த்து கசப்பான புன்னகை ஒன்றை உதிர்த்தாள் மதுமிதா..
“குடும்பத்தில் உண்மையான அர்த்தம் தெரியுமா கயல் உனக்கு..?” என்று கேட்டவள் தங்கையின் முகத்தை நோக்க, அவள் குழப்பத்தில் நின்றிருந்தாள்..
“நான் தப்பே செய்திருந்தாலும் ஒரு கட்டத்தில் என்னோட மகள், அப்படி ஒரு காரியம் செய்ய மாட்டாள் என்று நம்புவது தான், நம்பி ஏற்றுக்கொள்வதுதான் குடும்பம்..” என்று சொன்னவள்
“பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று பழமொழி உண்டு! என்னோட வாழ்க்கையில் பிள்ளை மனம் தான் பித்து, பெத்த மனம் கல்லாகத் தான் இருக்கிறது..” என்றவள் கயலின் முகம் பார்த்து,
“அக்கா இப்படியே பேசிட்டு உன்னோட கல்யாணத்திற்கு வரமாட்டேன் என்று மட்டும் நினைக்காதே.. நான் வருவேன் என்னை என்ன பேசினாலும், திட்டினாலும், அவமானப்படுத்தினாலும் உன்னோட திருமணத்திற்கு நான் கண்டிப்பாக வருவேன்..” என்று சொல்லிக்கொண்டிருக்க
“நாங்கள் உள்ளே வரலாமா..?!” என்று கோரஸாகக் குரல் கேட்க, அக்கா, தங்கை இருவரும் வாசலைப் பார்க்க, ரஞ்சித், கீர்த்தி, ஜீவா மூவரும் வாசலில் நின்றிருந்தனர்..
“வாங்க..” என்று புன்னகையுடன் அழைத்தவள், மூவரும் உள்ளே வர, அவர்கள் உள்ளே வர அவர்களின் பின்னோடு வீட்டிற்குள் வந்தனர் காமாட்சி, சிவரத்தினம் இருவரும்...!
அதுவரை இருவரும் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் மறந்தவளாக, “அப்பா, அம்மா உள்ளே வாங்க..” என்று மதுமிதா அழைக்க, ‘இவள் யாரைச் சொல்கிறாள்..?’ என்ற கேள்வியில் வாசலைப் பார்த்தவர்கள்,
“அவர்களைத் தாத்தா – பாட்டி என்று கூப்பிடனும்..” என்று கயல்விழி சிரிப்புடன் சொல்ல, “என்னம்மோ தெரியல கயல்விழி இவங்களை நான் அப்படி கூப்பிட எனக்கும் ஆசைதான்! ஆனால் என்னை முழுவதும் புரிந்து வைத்திருப்பதால் எனக்கு அப்பா, அம்மா என்றுதான் கூப்பிட வருகிறது..” என்று சொல்ல,
“இனிமேல் மாத்திக்கணும் மதுமிதா..” என்று கண்டிப்புடன் சொன்னார் காமாட்சி, மற்றவர்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டு நிற்க,
“சரிம்மா நான் மாற்றிக் கொள்கிறேன்..” என்று சொல்ல, “திரும்பவும் அம்மாவா..?!” இவள் திருந்தவே மாட்டாள்..” என்று திட்டினாள் கயல்விழி..
“சரிங்க பாட்டி நான் இனிமேல் அப்படியே கூப்பிடுகிறேன் பாட்டிம்மா..” என்றவள், “எல்லோரு இருங்க நான்..” என்று திரும்பியவளை, “இல்ல மதுமிதா எதுவும் வேண்டாம்.. நாங்க மதுரை போகிறோம்..” என்று சொல்ல, அதுவரையில் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து, இருள் சூழ்ந்தது அவளின் முகத்தில்!
அவள் முகத்தை வைத்தே மனதை படித்தவர், “என்னோட மகளும், மருமகனும் துணியெடுக்க மதுரை வராங்க.. நாங்களும் சென்றால் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று போகிறோம்..” என்று சொன்னவர், “அபூர்வாவை எங்களோடு அனுப்பும்மா.. எங்களுக்கு அவளை விட்டுவிட்டு செல்ல மனமே இல்லை..” என்று கேட்கவும்,
“தாத்தா நீங்க இருவரும் இல்லை என்றால் அவளை என்னால் சமாளிக்கவே முடியாது! அதுவே நான் இல்லை என்றாலும் அபூவை நீங்க இருவரும் சமாளித்து விடுவீர்கள்..” என்று சொன்னவள்,
“அதுக்கு என்ன தாத்தா நீங்க தாராளமாக அழைத்துச் செல்லுங்கள்.. அவள் எழுந்ததும் கூப்பிட்டுட்டு போங்க..” என்று சந்தோசமாகச் சொன்னவள்,
அறைக்குள் செல்ல திரும்ப, “அம்மா..” என்று அழைத்தவண்ணம் எழுந்து வந்தாள் அபூர்வா..
“நீங்க பேசியது காதில் விழுந்து விட்டது போல..?” என்று சொன்னவள் சிரிக்க முயன்று தோற்றவளாக மகளைத் தயார் செய்ய, கயலில் அருகில் வந்த ஜீவா,
“அப்பா போன் செய்தார் கயல்.. நம் இருவரும் இங்கே வந்திருப்பது என்னோட சொந்தக்காரர் யாரோ பார்த்து அப்பாவிற்கு சொல்லிவிட்டார்.. அவரும், அம்மாவும் உன்னை பெண் கேட்டு உங்க வீட்டிற்கு போன போதுதான், அவங்களுக்கும் பத்திரிக்கை கொடுக்கபட்டது..” என்று விவரம் சொல்ல,