அத்தியாயம் – 23
மதுரை முழுவதும் இருந்த அவனின் சொந்தபந்தங்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க, அவனது தாத்தா- பாட்டி இருவரும் வந்தனர்..
அவர்கள் காரில் வரும் பொழுது எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு அமைதியாக வந்தவள், “தாத்தா நாம் எங்கே போகிறோம்..?!” என்று கேட்டாள்..
“நாம் கோவிலுக்கு போகிறோம் குட்டிம்மா..” என்று பதில் சொல்ல அவளும் அமைதியாக வந்தாள்.. அவள் அவளின் அன்னை பற்றி கேட்கவும் இல்லை அதேபோல யாரையும் தொந்தரவு செய்யவும் இல்லை அவள் மிகவும் அமைதியாக வந்தாள்..
அவர்களின் சொந்த வீடு மதுரையில் இருப்பதால் அங்கே நேராக வந்தவர்கள் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அங்கே இருந்த வீட்டைப் பார்த்து,
“பாட்டி இது யாரோட வீடு..?” என்று கேட்டாள் ..
“இதுவும் நம்மளோட வீடுதான் கண்ணம்மா..” என்றவர் காரை விட்டு இறங்கி அவளைத் தூககிக் கொள்ள, அவளும் அமைதியாக வீட்டிற்கு சென்றாள்..
அங்கிருந்த ஹோலில் அமர்ந்து இருந்த ரோஹித் அவள் வருவதை கண்டு ‘அவள் என்ன சொல்கிறாள் என்று பார்போம்..?’ என்று அமைதியாக அமர்ந்திருக்க, அவனை பார்த்தவள்,
தாத்தாவின் பக்கத்தில் வந்த அபூர்வா, “தாத்தா இந்த அங்கிள் கோபமாக பேசுவாரே..” என்று அவள் ரோஹித்தைக் காட்டிக் கூறியதைக் கேட்ட பெரியவர்கள், சிரித்துவிட்டனர்..
“அவன் உன்னை எதுவும் செய்ய மாட்டான்.. முக்கியமா என்னோட குட்டிம்மாவை கோபமாக பேச மாட்டான்..” என்று அவளை தூக்கிக்கொண்டு அவளது தாத்தா சொல்ல,
“அப்படியா..?!” என்று கேட்டதைப் பார்த்து ரோஹித்திற்கே பாவமாக இருந்தது.. இருப்பினும் அவன் அமைதியாக இருந்தான்..
“அப்போ நான் அந்த அங்கிளிடம் போகவா..?” என்று தாத்தாவைக் கேட்டாள் அபூர்வா,
“அவன் அங்கிள் இல்லை அபூர்வா..” என்றார் சிவரத்தினம்..
“அவர் அங்கிள் இல்லையென்றால் அவர் யாரு..? நான் அவரை எப்படி கூப்பிட வேண்டும்..” என்று சமத்துப் பெண்ணாகக் கேட்டாள் அபூர்வா..
“அவன் உன்னோட அப்பா..” என்று அவளுக்கு சொல்லிக் கொடுக்க, “என்னோட அப்பாவா..?” என்று கேட்டவள் ரோஹித் முகத்தையே பார்த்தாள்
அவள் சிவரத்தினத்திடம் இருந்து இறங்கி அவனிடம் செல்ல, அதுவரையில் அமைதியாக இருந்தவன் எழுந்து அவளின் அருகில் வர அவனின் எதிரே நின்று இடையில் கையூன்றி அவனையே பார்த்தாள்..
“அபூக்குட்டிக்கு அப்பாவைப் பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டான்..
“உங்களுக்கு அம்மாவைப் பிடிக்குமா..?” என்று தலையைச் சரித்துக் கேட்டாள் அபூர்வா.. அவளின் முகம் பார்த்தவன், அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்,
“அம்மாவை எனக்கு இவ்வளவு பிடிக்கும் என்று கைகள் இரண்டையும் நீட்டி விரித்துக் காட்ட, அவனிடம் புன்னகையுடன் வந்து அவனைக் கட்டிக் கொண்டாள் அபூர்வா..
“அப்பாவிற்கு அபூர்வாவை பிடிக்குமா..?!” என்றாள் அபூர்வா..
“அப்பாவிற்கு அபூர்வாவை ரொம்ப பிடிக்கும்..” என்று சொன்னவன், அவளைத் தூக்கிக் கொள்ள,
“அப்பா அம்மா என்னிடம் ஒன்றுமே சொல்லல..” என்று சொன்னவள், அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சலுகையாக முத்தம் கொடுக்க, அவனும் அவளிற்கு முத்தம் கொடுக்க குதுகலத்துடன் சிரித்தாள்
அவளின் புன்னகையில் அவனுக்கு சந்தோசம் இரட்டிப்பாக மாற, “தாத்தா – பாட்டி நீங்க இருவரும் சென்று பத்திரிக்கை கொடுத்துவிட்டு வாருங்கள்..” என்றவனின் சந்தோசம் கண்டு பெரியவர்கள் தங்களின் வேலையை கவனிக்க துவங்கினர்..
அவளை தூக்கிச்சென்று காரில் அமர வைத்தவன், “செல்லம் நாம் எங்கே போகலாம்..” என்று கேட்க, “அப்பா முதலில் கோவிலுக்கு போகலாம் அப்பா..” என்றாள் அபூர்வா..
“இல்லடா நாம் அப்புறம் கோவிலுக்கு போகலாம்..” என்றவன் அவளை அழைத்துச் சென்று அவளுக்கு பிடித்த பொம்மைகளையும், விளையாட்டு பொருட்களையும் வாங்கிக் குவித்தவன்
அவள் ஊர் சுற்றிவிட்டு உறங்குவதைப் பார்த்து மகிழ்ந்து அவளின் நெற்றியில் முத்தம் வந்தவன், “டிரைவர் வண்டியை எடுங்க..” என்று கூறியவன் காரின் கதவுகளை இறக்கிவிட்டு, அவனின் மடியில் படுத்திருந்த மகளின் தலையை வருடிக் கொடுத்துக்கொண்டே வந்துக்கொண்டே இருந்தவன்,
அவனின் மனம் திடீரென்று படபடவென்று அடித்து கொண்டது.. மனம் முழுவது யாரோ தன்னை விட்டு பிரிந்து செல்வது போல தோன்றியது.. அவனது நினைவுகளில் அவள் மையமாக இருக்க அலைபேசியை எடுத்தான்
அதிலிருந்து மதுமிதாவிற்கு அழைத்தவனின் அழைப்பு போய் கொண்டே இருக்க, இவனுக்கு பிரசர் தலைக்கு ஏறியது.. ஏனோ அவள் எடுக்காமல் இருப்பது அவளுக்கு ஏதோ ஆபத்து என்று அவனின் மனம் அடித்துக் கொள்ள, அந்த அழைப்பு எடுக்கப்பட்டது..
“ரோஹித்... அபூவைப் பத்தி.. த்தி.. தி.. பத்திரமாகப் பார்த்துக் கொள்..” என்றவளின் பேச்சு விட்டு விட்டு வர, “நீ அவளுக்கு பாதுக்காப்பாக இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்குடா..” என்று சொன்னவளின் மூச்சு வாங்க பேசினாள் மதுமிதா..
“ஏய் மது என்னடி ஆச்சு உனக்கு..? எதுக்கு இப்படி எல்லாம் பேசுகிறாய்..?” என்று போனில் கத்தியவனின் குரல் அவளுக்கு சென்றடைவதற்கு அவள் மயங்கிச் சரிந்தாள்.. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்த ஒரு சின்ன திருப்பத்தில் காரை திருப்ப,
“ஏய் மது! ஏய் பேசுடி..” என்று கத்தியவனின் குரலில் குழந்தை விழித்துக் கொள்ள எழுந்தவள், காரின் கதவுகளின் வழியே வெளியே பார்த்தவள்,
“அப்பா.. அம்மா அம்மாஆஆ..” என்று கத்த அவளின் குரலில் நிமிர்ந்தவன், “டிரைவர் வண்டியை நிறுத்துங்க..” என்று சொன்னவன் கீழே இறங்கிப் பார்க்க, ரத்தவெள்ளத்தில் கிடந்தாள் மதுமிதா..
அவளின் முகம் பார்த்தவன், “ஏய் மது..” என்று அவளின் அருகில் ஓடியவன் அவளை ரத்த வெள்ளத்தில் பாத்தவன் மனம், தனது துடிப்பை நிறுத்தியது..
அவளை இரு கைகளில் ஏந்தியவன் காரின் பின் சீட்டில் அவளோடு ஏற, “அம்மா.. அம்மா.. அம்மா..” என்று அழுதாள் அபூர்வா,
“இல்லடா அம்மாவிற்கு ஒன்னும் இல்லை கண்ணா..” என்று குழந்தையை சமாதானம் செய்தவன் கண்கள் கலங்கியது.. அவன் அபூர்வாவை விடவும் குழந்தையாக மாறிவிட்டான்..
“மதும்மா கண்ணைத் திறந்து பாருடா.. நான் ரோஹித் வந்திருக்கிறேன் மதுமிதா.. ஏய் கண்ணை திறந்து பாருடி!” என்று அவளின் கன்னத்தில் தட்டி எழுப்பியவன், கதறி அழுதான்..
அவன் அழுவதைப் பார்த்த அபூர்வா, “அப்பா அழுகாதீங்க அம்மாக்கு ஒன்னும் ஆகாது..” என்று அவனின் கண்களை துடைத்துவிட்டாள்.. அவர்கள் மூவரும் சேர்ந்து மதுமிதாவை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர்..
[அபூர்வா அனைவரும் அவளைத் தனியே விட்டு விட்டு வந்த பிறகு என்ன நடந்தது..?! சிலமணி நேரம் முன்னே சென்று பாப்போம்..]
மதுரை முழுவதும் இருந்த அவனின் சொந்தபந்தங்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க, அவனது தாத்தா- பாட்டி இருவரும் வந்தனர்..
அவர்கள் காரில் வரும் பொழுது எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு அமைதியாக வந்தவள், “தாத்தா நாம் எங்கே போகிறோம்..?!” என்று கேட்டாள்..
“நாம் கோவிலுக்கு போகிறோம் குட்டிம்மா..” என்று பதில் சொல்ல அவளும் அமைதியாக வந்தாள்.. அவள் அவளின் அன்னை பற்றி கேட்கவும் இல்லை அதேபோல யாரையும் தொந்தரவு செய்யவும் இல்லை அவள் மிகவும் அமைதியாக வந்தாள்..
அவர்களின் சொந்த வீடு மதுரையில் இருப்பதால் அங்கே நேராக வந்தவர்கள் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அங்கே இருந்த வீட்டைப் பார்த்து,
“பாட்டி இது யாரோட வீடு..?” என்று கேட்டாள் ..
“இதுவும் நம்மளோட வீடுதான் கண்ணம்மா..” என்றவர் காரை விட்டு இறங்கி அவளைத் தூககிக் கொள்ள, அவளும் அமைதியாக வீட்டிற்கு சென்றாள்..
அங்கிருந்த ஹோலில் அமர்ந்து இருந்த ரோஹித் அவள் வருவதை கண்டு ‘அவள் என்ன சொல்கிறாள் என்று பார்போம்..?’ என்று அமைதியாக அமர்ந்திருக்க, அவனை பார்த்தவள்,
தாத்தாவின் பக்கத்தில் வந்த அபூர்வா, “தாத்தா இந்த அங்கிள் கோபமாக பேசுவாரே..” என்று அவள் ரோஹித்தைக் காட்டிக் கூறியதைக் கேட்ட பெரியவர்கள், சிரித்துவிட்டனர்..
“அவன் உன்னை எதுவும் செய்ய மாட்டான்.. முக்கியமா என்னோட குட்டிம்மாவை கோபமாக பேச மாட்டான்..” என்று அவளை தூக்கிக்கொண்டு அவளது தாத்தா சொல்ல,
“அப்படியா..?!” என்று கேட்டதைப் பார்த்து ரோஹித்திற்கே பாவமாக இருந்தது.. இருப்பினும் அவன் அமைதியாக இருந்தான்..
“அப்போ நான் அந்த அங்கிளிடம் போகவா..?” என்று தாத்தாவைக் கேட்டாள் அபூர்வா,
“அவன் அங்கிள் இல்லை அபூர்வா..” என்றார் சிவரத்தினம்..
“அவர் அங்கிள் இல்லையென்றால் அவர் யாரு..? நான் அவரை எப்படி கூப்பிட வேண்டும்..” என்று சமத்துப் பெண்ணாகக் கேட்டாள் அபூர்வா..
“அவன் உன்னோட அப்பா..” என்று அவளுக்கு சொல்லிக் கொடுக்க, “என்னோட அப்பாவா..?” என்று கேட்டவள் ரோஹித் முகத்தையே பார்த்தாள்
அவள் சிவரத்தினத்திடம் இருந்து இறங்கி அவனிடம் செல்ல, அதுவரையில் அமைதியாக இருந்தவன் எழுந்து அவளின் அருகில் வர அவனின் எதிரே நின்று இடையில் கையூன்றி அவனையே பார்த்தாள்..
“அபூக்குட்டிக்கு அப்பாவைப் பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டான்..
“உங்களுக்கு அம்மாவைப் பிடிக்குமா..?” என்று தலையைச் சரித்துக் கேட்டாள் அபூர்வா.. அவளின் முகம் பார்த்தவன், அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்,
“அம்மாவை எனக்கு இவ்வளவு பிடிக்கும் என்று கைகள் இரண்டையும் நீட்டி விரித்துக் காட்ட, அவனிடம் புன்னகையுடன் வந்து அவனைக் கட்டிக் கொண்டாள் அபூர்வா..
“அப்பாவிற்கு அபூர்வாவை பிடிக்குமா..?!” என்றாள் அபூர்வா..
“அப்பாவிற்கு அபூர்வாவை ரொம்ப பிடிக்கும்..” என்று சொன்னவன், அவளைத் தூக்கிக் கொள்ள,
“அப்பா அம்மா என்னிடம் ஒன்றுமே சொல்லல..” என்று சொன்னவள், அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சலுகையாக முத்தம் கொடுக்க, அவனும் அவளிற்கு முத்தம் கொடுக்க குதுகலத்துடன் சிரித்தாள்
அவளின் புன்னகையில் அவனுக்கு சந்தோசம் இரட்டிப்பாக மாற, “தாத்தா – பாட்டி நீங்க இருவரும் சென்று பத்திரிக்கை கொடுத்துவிட்டு வாருங்கள்..” என்றவனின் சந்தோசம் கண்டு பெரியவர்கள் தங்களின் வேலையை கவனிக்க துவங்கினர்..
அவளை தூக்கிச்சென்று காரில் அமர வைத்தவன், “செல்லம் நாம் எங்கே போகலாம்..” என்று கேட்க, “அப்பா முதலில் கோவிலுக்கு போகலாம் அப்பா..” என்றாள் அபூர்வா..
“இல்லடா நாம் அப்புறம் கோவிலுக்கு போகலாம்..” என்றவன் அவளை அழைத்துச் சென்று அவளுக்கு பிடித்த பொம்மைகளையும், விளையாட்டு பொருட்களையும் வாங்கிக் குவித்தவன்
அவள் ஊர் சுற்றிவிட்டு உறங்குவதைப் பார்த்து மகிழ்ந்து அவளின் நெற்றியில் முத்தம் வந்தவன், “டிரைவர் வண்டியை எடுங்க..” என்று கூறியவன் காரின் கதவுகளை இறக்கிவிட்டு, அவனின் மடியில் படுத்திருந்த மகளின் தலையை வருடிக் கொடுத்துக்கொண்டே வந்துக்கொண்டே இருந்தவன்,
அவனின் மனம் திடீரென்று படபடவென்று அடித்து கொண்டது.. மனம் முழுவது யாரோ தன்னை விட்டு பிரிந்து செல்வது போல தோன்றியது.. அவனது நினைவுகளில் அவள் மையமாக இருக்க அலைபேசியை எடுத்தான்
அதிலிருந்து மதுமிதாவிற்கு அழைத்தவனின் அழைப்பு போய் கொண்டே இருக்க, இவனுக்கு பிரசர் தலைக்கு ஏறியது.. ஏனோ அவள் எடுக்காமல் இருப்பது அவளுக்கு ஏதோ ஆபத்து என்று அவனின் மனம் அடித்துக் கொள்ள, அந்த அழைப்பு எடுக்கப்பட்டது..
“ரோஹித்... அபூவைப் பத்தி.. த்தி.. தி.. பத்திரமாகப் பார்த்துக் கொள்..” என்றவளின் பேச்சு விட்டு விட்டு வர, “நீ அவளுக்கு பாதுக்காப்பாக இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்குடா..” என்று சொன்னவளின் மூச்சு வாங்க பேசினாள் மதுமிதா..
“ஏய் மது என்னடி ஆச்சு உனக்கு..? எதுக்கு இப்படி எல்லாம் பேசுகிறாய்..?” என்று போனில் கத்தியவனின் குரல் அவளுக்கு சென்றடைவதற்கு அவள் மயங்கிச் சரிந்தாள்.. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்த ஒரு சின்ன திருப்பத்தில் காரை திருப்ப,
“ஏய் மது! ஏய் பேசுடி..” என்று கத்தியவனின் குரலில் குழந்தை விழித்துக் கொள்ள எழுந்தவள், காரின் கதவுகளின் வழியே வெளியே பார்த்தவள்,
“அப்பா.. அம்மா அம்மாஆஆ..” என்று கத்த அவளின் குரலில் நிமிர்ந்தவன், “டிரைவர் வண்டியை நிறுத்துங்க..” என்று சொன்னவன் கீழே இறங்கிப் பார்க்க, ரத்தவெள்ளத்தில் கிடந்தாள் மதுமிதா..
அவளின் முகம் பார்த்தவன், “ஏய் மது..” என்று அவளின் அருகில் ஓடியவன் அவளை ரத்த வெள்ளத்தில் பாத்தவன் மனம், தனது துடிப்பை நிறுத்தியது..
அவளை இரு கைகளில் ஏந்தியவன் காரின் பின் சீட்டில் அவளோடு ஏற, “அம்மா.. அம்மா.. அம்மா..” என்று அழுதாள் அபூர்வா,
“இல்லடா அம்மாவிற்கு ஒன்னும் இல்லை கண்ணா..” என்று குழந்தையை சமாதானம் செய்தவன் கண்கள் கலங்கியது.. அவன் அபூர்வாவை விடவும் குழந்தையாக மாறிவிட்டான்..
“மதும்மா கண்ணைத் திறந்து பாருடா.. நான் ரோஹித் வந்திருக்கிறேன் மதுமிதா.. ஏய் கண்ணை திறந்து பாருடி!” என்று அவளின் கன்னத்தில் தட்டி எழுப்பியவன், கதறி அழுதான்..
அவன் அழுவதைப் பார்த்த அபூர்வா, “அப்பா அழுகாதீங்க அம்மாக்கு ஒன்னும் ஆகாது..” என்று அவனின் கண்களை துடைத்துவிட்டாள்.. அவர்கள் மூவரும் சேர்ந்து மதுமிதாவை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர்..
[அபூர்வா அனைவரும் அவளைத் தனியே விட்டு விட்டு வந்த பிறகு என்ன நடந்தது..?! சிலமணி நேரம் முன்னே சென்று பாப்போம்..]