• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 25
அவன் வீடியோ பார்த்துக் கொண்டிருக்க, அவனின் அலைபேசி அடிக்க, அதை எடுத்துப் பேசினான்.. அவனின் மனம் குழப்பத்துடன் இருக்க,
“ஹலோ ரோஹித் எங்கப்பா இருக்கிறாய்..?!” என்று கேட்டார் சிவரத்தினம்..
அவரின் குரல் கேட்டவன், “தாத்தா நான் மருத்துவமனையில் இருக்கிறேன்..” என்று கூற, அவருக்கும் பதட்டம் வந்தது..
“டேய் ரோஹித் அபூர்வாக்கு என்னடா ஆச்சு..?! மதுமிதா அவளை விட்ட்டுவிட்டு இருக்க மாட்டாள்.. என்னோட பேத்திக்கு என்னடா ஆச்சு..?” என்று கேட்டார்..
அவர் பேசுவதைக் கேட்ட காமாட்சி, “என்னங்க ஆச்சு அபூர்வாவிற்கு..?!” என்று கேட்டவரின் கண்களும் கலங்கியது.. அவர்கள் இருவரும் பத்திரிக்கை கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்..
அவர் தவறாக நினைத்துக் கொண்டதை புரிந்துக் கொண்ட ரோஹித், “தாத்தா அபூர்வாவிற்கு ஒன்றும் இல்லை..” என்று சொல்லவும்
“அவளுக்கு எதுவும் இல்லையா..?” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர், அடுத்த நொடியே, “அவளுக்கு எதுவும் இல்லை என்றால் உனக்கு ஏதாவது பலத்த அடியா கண்ணா..?!” என்று கேட்டதும் அவரின் பாசத்தில் அவனின் கண்கள் கலங்கியது..
“தாத்தா எங்க இருவருக்கும் எந்த அடியும் ஆபத்தும் இல்லை.. ஆனால்..” என்று அவன் இழுக்கவும்,
“உங்கள் இருவருக்கும் இல்லை என்றால் வேற யாருக்கு என்ன நடந்தது..?!” என்று கேட்டார்.. காமாட்சி அழுதுக்கொண்டு வந்தார்..
“மது..” என்று சொல்லவும் அவரின் புருவம் முடிச்சிட, “மதுமிதாவிற்கு என்ன ஆச்சு..?” என்று கேட்டார் சிவரத்தினம்..
“தாத்தா அவளை யாரோ கத்தியால் குத்திட்டாங்க.. நாங்க அவளைப் பார்த்துவிட்டு இங்கே இருக்கும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்..” என்று சொல்லவும் அவரது மனம் வலித்தது..
அவன் பேசுவதைக் கேட்டு கண் கலங்கியவர், ‘இன்னும் இந்த பொண்ணு எத்தனை சோதனை தான் அனுபவிக்குமோ..?!’ என்று அவர் மனதில் வருந்தினார்..
ரோஹித் பேசியதை கேட்ட காமாட்சி, “அந்த சாமிக்கு கண்ணே இல்லையா..? என்னோட குடும்பத்தில் இன்னும் எத்தனை பேரை நான் இழக்கணுமோ..?” என்று கேட்டு அழுக ஆரமித்தார்..
“என்னங்க அவன் எந்த மருத்துவமனையில் இருக்கிறான் என்று கேளுங்க..” என்று சொன்னவர் தனது முந்தானையில் கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தார்..
“எந்த மருத்துவமனை கண்ணா..?!” என்று கேட்டது விவரம் சொன்னவன் அலைபேசியை வைத்துவிட்டு மடியில் துங்கிய மகளைப் பார்த்தான்.. அப்பொழுது ‘வீட்டிற்கு செல்ல வேண்டும்..’ என்று சொல்ல வந்த டிரைவரிடம்,
“அண்ணா பாப்பாவிற்கு கடையில் சென்று இட்லி வாங்கிட்டு வந்து தரீங்களா..?!” என்று கேட்டதும், அவர் அவனைப் பார்த்துவிட்டு, அமைதியாக நின்றார்..
“என்ன அண்ணா அமைதியாக நிக்கிறீங்க..?” என்று அவரைப் பார்த்துக் கேட்டான் ரோஹித்..
“தம்பி நீங்க இப்படி கேட்பீங்க என்று தான் நான் கையோடு வாங்கிட்டு வந்தேன்..” என்று சொல்லி பார்சலைக் கொடுத்தவரை பார்த்தவன்,
“எல்லோரும் வேலைக்காரங்க என்று வேறுபாடு காட்டுகின்றனர்.. ஆனால் உங்களுக்கு உள்ள மனிதாபிமானம் கூட சிலருக்கு இருப்பதில்லை..” என்று பார்சலை வாங்கியதும் செல்லாமல் நின்றிருந்தார் அவனின் கார் டிரைவர்..
“என்னங்க அண்ணா..?!” என்று கேட்டான் ரோஹித்.. அவர் அவனைப் பார்த்துவிட்டு, “தம்பி இந்த பொண்ணு பெயர் மதுமிதா தானே..?!” என்று மதுவைக் கைகாட்டி சந்தேகமாக கேட்டார்..
“ஆமாம் அண்ணா..” என்று சொன்னவன், “எதுக்கு இப்பொழுது இவளைப் பற்றி கேட்கிறீங்க..” என்று கேட்டான் ரோஹித்..
“இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு தம்பி.. அன்னைக்கும் இந்த பொண்ணு உயிருக்கு போராடிய பொழுது நான்தான் இந்த பொண்ணை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தேன்..” என்று சொன்னார் வேலுசாமி..
அவர்களின் அறைக்குள் நுழைத்தனர் சிவரத்தினமும், காமாட்சியும்..! அவர்கள் உள்ளே வருவதை பார்த்து வெளியே சென்றார் வேலுசாமி..
“ரோஹித் இப்பொழுது இவளுக்கு எப்படி இருக்கிறது.. டாக்டர் என்ன சொன்னாங்க..?!” என்று கேட்டார் காமாட்சி.. அவளின் அருகில் சென்றவர், “இவளின் சிரித்த முகம் பார்த்தாலே மனதில் இருக்கும் கவலை எல்லாம் மறந்து விடுமே.. இவளுக்கா இத்தனை சோதனை..?” என்று மதுவின் முகத்தை தனது கைகளால் வருடினார்..
அவனிடம் இருந்து அபூர்வாவை வாங்கிய சிவரத்தினம், “ரோஹித் காலையில் நாங்க அங்கிருந்து கிளம்பும் போது அங்கே இருந்தவள் மதுரை வர காரணம் என்ன..?” என்று பேரனைப் பார்த்து கேட்டார்..
“அதற்கு நான் பிறகு பதில் சொல்கிறேன் தாத்தா.. இவளை என்னால் இப்படி பார்க்கவே முடியவில்லை.. இவளுக்கு இப்படி ஆனது பற்றி நீங்க யாருக்காவது தகவல் சொன்னீங்களா..?!” என்று நேரடியாகக் கேட்டான் ரோஹித்..
“இன்னும் இல்லடா நான் யாருக்கும் எதுவும் சொல்லவில்லை..” என்று சொன்னதும் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், “தாத்தா நீங்க யாருக்கும் எந்த தகவலும் சொல்லாதீங்க..” என்று சொன்னதும் பெரியவர்கள் அவனை கேள்வியாக பார்த்தனர்..
“இவளுக்கு இப்படி ஆனது தெரிந்தால் அபசகுணம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்திவிடுவார்கள்.. அதனால் அவர்கள் திருமண வேலையைப் பார்க்கட்டும்.. நீங்க அபூர்வாவையும் மதுவையும் பார்த்துக் கொள்ளுங்கள்..” என்று முக இறுக்கத்துடன் கூறினான் ரோஹித்..
“நீ என்னப்பா பண்ண போகிறாய்..?!” என்று பேரனைப் பார்த்து கேட்டார் சிவரத்தினம்..
“இவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தவனை கூண்டில் ஏற்றிவிட்டு வருகிறேன்..” என்று சொல்லவும்,
“டேய் யார் என்று தெரியாமல் நீ அவனை எப்படி கண்டுபிடிப்பாய்..?” என்று கேட்டார் சிவரத்தினம்.. அவரை நிமிர்ந்து பார்த்தவன்,
“என்னோட மதுவை இப்படி செய்தவனை நானே கண்டுபிடித்து அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு வந்து இவளின் கழுத்தில் தாலி கட்டுகிறேன்.. இது என்னோட சவால் தாத்தா..” என்றவன் அவளின் அருகில் சென்று அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு அவளின் தலையை வருடிக் கொடுத்துவிட்டு, மகளின் நெற்றியில் இதழ் பதித்தவன்,
“இவர்கள் இருவரையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் தாத்தா..” என்று சொன்னவன் அறையை விட்டு வெளியே வந்தான்.. அவனின் கையில் மதுவின் செல்லும் ஒரு வீட்டின் சாவியும் இருந்தது..
மருத்துவமனை விட்டு வெளியே வந்தவன், “அண்ணா நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க.. ஆனால் அதை கேட்கும் பொறுமை எனக்கு இப்பொழுது இல்லை.. எதுவாக இருந்தாலும் காலையில் நானே உங்களின் வீட்டிற்கு வந்து தெரிந்துக் கொள்கிறேன்..” என்று சொன்னவன், காரில் ஏறி அமர்ந்தான்..
அவரிடம் திரும்பியவன், “உங்களின் வீட்டின் முன்னே காரை நிறுத்தி இறங்கிக் கொள்ளுங்கள்..” என்று சொன்னதும் அவர் சரி என்று தலையை மட்டும் ஆட்டினார்...!
அவர் காரை ஓட்ட அதில் அமர்ந்திருந்தவன் மதுவின் செல்லில் இருந்த குறுந்தகவலை ஆராய்ந்தான்... அதில் அவனுக்கு தேவையானது ஒன்று கிடைத்தது.. அதற்குள் கார் டிரைவர் வீட்டின் முன்னே நிற்க,
“சரிங்க தம்பி நான் கிளம்புகிறேன்..” என்று காரை விட்டு இறங்க, “நான் நாளை காலையில் உங்களுக்கு கூப்பிடுகிறேன் அண்ணா.. நீங்க நான் சொல்லும் இடத்திற்கு வந்துவிடுங்கள் நாம் அங்கே பேசலாம்..” என்று சொன்னவன், காரை விட்டு இறங்கி டிரைவிங் சீட்டில் ஏறி அமர்ந்தான்..
அவன் காரை எடுத்துக் கொண்டு சென்றதும் வீட்டின் உள்ளே சென்றார் வேலுச்சாமி..!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவன் காரை நிறுத்தியது ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட்..! அதில் மொத்தம் நான்கு வீடுகள்.. அந்த வீட்டின் முன்னே காரை பார்க் செய்தவன் காரை விட்டு இறங்கினான்..
அந்த வீட்டின் கேட்டின் அருகில் இருந்த காலிங்பெல் அடித்தும் ஒருவீட்டில் இருந்து கதவைத் திறந்து வந்த ஒரு நடுத்தர வயது உடைய ஒரு பெண்மணி
“நீங்க யார் தம்பி.. உங்களுக்கு யார் வேண்டும்..?” என்று கேட்டார்..
“நான் இந்த வீட்டில் இருந்த மதுமிதா என்ற பெண்ணைத் திருமணம்..” என்று ரோஹித் வாக்கியத்தை முடிக்கும் முன்னே,
“தம்பி மதுமிதா இன்னைக்கு மாலை வந்த பொழுது நான் வெளியே போயிருந்தேன்.. அவளைப் பார்க்க முடியவில்லை.. மதுமிதாவும், அபூர்வாவும் நல்ல இருக்காங்களா..?!” என்று கேட்டவர்,
“ஐயோ வந்தவரை வாசலில் நிற்க வைத்தே பேசுகிறேன் பாருங்கள்..” என்று தலையில் அடித்துக்கொண்டு கேட்டினை திறந்தவர்,
“வாங்க தம்பி..” என்று அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.. அவர்கள் வீட்டிற்குள் நுழைத்தும் அவன் முதலில் கண்டது அந்த வீட்டில் இருந்த இயேசுவின் படத்தை மட்டுமே..!
அவன் உள்ளே வந்ததும், அவனை சோபாவில் அமர வைத்தவர், “என்ன தம்பி நான் மட்டும் பேசுகிறேன்.. நீங்க எதுவும் பேசாமல் இருக்கீங்க..?!” என்று கேட்டதும்,
“மதுமிதா நல்ல இருக்கிறாள்.. ஆனால் மருத்துவமனையில் இருக்கிறாள்..” என்று கூறினான்..
“தம்பி அவளுக்கு ஏதோ ஆபத்து.. அதுதான் நீங்க இங்கே வந்திருக்கீங்க என்று தெரிகிறது.. கர்த்தரை நான் தினமும் வேண்டுவது அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தான்..” என்று சொன்னவர்,
“தம்பி என்னோட வாங்க..” என்று அழைத்துச் சென்றவர், “இந்த வீட்டில் தான் தம்பி மதுமிதா இருந்தாள்.. இன்னமும் இந்த வீட்டிற்கு வாடகை அவள் தான் கொடுக்கிறாள்.. இந்த வீட்டில் அவளின் பொருட்கள் இருப்பது அவளோடு இருந்த யாருக்கும் தெரியாது.. ஏன் ரஞ்சித் அவனுக்கே நான் சொல்லவில்லை..” என்று சொன்னவர், அவனின் முகம் பார்த்துவிட்டு சென்றார்..
அதன்பிறகு திரும்பி வந்தவர், “தம்பி என்னோட பெயர் எஸ்தர். என்ன உதவு வேண்டும் என்றாலும் என்னிடம் கேளுங்கள்..” என்று சொல்லிவிட்டு அவரின் வீட்டிற்கு சென்றார்..அவனுக்கு பேச்சு வரவே இல்லை..
நாம் தினமும் சந்திப்பவர்களையே சில நேரங்களில் மறந்துவிடுகிறோம்.. ஆனால் இவர்கள் கிட்டத்தட்ட மூன்று வருடம் கழித்துக் கூட ஞாபகம் வைத்திருக்கிறார்கள்..! வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று லைட்டை போட்டான் ரோஹித்...! கதவை சாத்திவிட்டு அந்த அறையை சுற்றி தனது பார்வையை ஓட்டினான்..
அந்த வீடு மிகவும் சுத்தமாக இருந்தது.. இது எல்லாம் அவளின் வேலை என்று அறிந்தவன், அந்த வீட்டில் இருந்தவற்றை எல்லாம் பார்த்தான்.. அந்த அறையில் எல்லா பொருட்களும் இருக்க வேண்டிய இடத்தில் சரியாக இருந்தது..
“இந்த வீட்டிற்கும் அவளிற்கும் என்னோட அண்ணா, அண்ணி, ரஞ்சித், சஞ்சனா, ஆகியோருக்கும் ஏதோ சம்மதம் இருக்கிறது.. அதே போல, என்னோட அண்ணாவின் திருமணம் நடந்து மட்டும் எனக்கு சொன்னான்.. அதன்பிறகு அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.. இந்த இரண்டு வருடத்தில் அவனிடம் இருந்து சுத்தமாக தகவல் இல்லை..” என்று வாய்விட்டு கூறியவன்,
‘ரஞ்சித் இருக்கிறான்.. மது இருக்கிறாள்.. அபூர்வாவும் இருக்கிறாள்..’
‘ஆனால் சக்திவேல், ராதிகா, சஞ்சனா மூவரும் எங்கே..? அபூர்வா மதுவின் குழந்தை கிடையாது என்றால் என்னோட அண்ணணின் குழந்தை தான் அபூர்வாவா..?’
‘மதுமிதாவை கொல்லும் அளவிற்கு அவளுக்கு எதிரிகள் யார் இருக்க முடியும்..?’ என்று யோசித்தவன்,
‘மதுமிதா கடைசியாக பேசிய பொழுது அபூர்வாவை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள சொன்னாள்.. அப்படி என்றால் ஆபத்து அவளுக்கு இல்லை.. அபூர்வாவிற்கு தான்..’ என்று மனதின் கேள்விகளை முன்னிறுத்தினான்..
நம்மை சுற்றியுள்ள பல கேள்விகளுக்கு பதிலும் அந்த கேள்விக்குள் தான் இருக்கும்.. ஆனால் நாம் அதை கவனித்திருக்க மாட்டோம்.. அதே போல பல பிரச்சனையில் நான் கேள்வி என்பதை கேட்பதே இல்லை..
கேள்விகள் கேட்டால் மட்டும் தான் அந்த கேள்விக்கான தேடல் தொடங்கும், அந்த தேடலில் தான் பதிலை நாம் அறிந்து பிரச்சனைக்கு தீர்வினை காண முடியும்..
இப்பொழுது அதை தான் ரோஹித் செய்கிறான்.. அவனின் மனதில் கேள்விகளை முதலில் அணிவகுத்து அவற்றை பட்டியலிடப்பட்டு தனது தேடலை தொடங்குகிறான்..
அவளின் படுக்கை அறைக்குள் சென்றவன், அதில் ஆராய்ந்து பார்க்க அங்கே ஒரு அலைமாரி இருக்க அதை நோக்கிச் சென்றான் ரோஹித்..
அந்த அலைமாரியின் சாவியும், அதற்கு பக்கத்தில் இருக்க அதை திறந்துப் பார்த்தான்.. அதில் அவளின் சுடிதார்கள், சேலைகள் எல்லாம் இருக்க, அதற்கு அடுத்த அலைமாரியைத் திறந்தான்..
அதில் அவளின் படித்த சான்றிதழ் கொண்ட பைல் மற்றும் பாஸ்போர்ட், விசா, அனைத்தும் இருந்தது அதற்கு அருகில் அவளின் லேப்டாப் மற்றும் மூன்று டைரிகள் இருக்க அதை எடுத்தவன் படுக்கையில் அமர்ந்தான்..
லேப்டாப்பை ஆன் செய்தவன் அவளின் செல்லையும், அவளின் டைரியையும் எடுத்து அருகில் வைத்துக் கொண்டு கையில் ஒரு பேனாவும் ஒரு நோட்டையும் எடுத்துக்கொண்டு அமர்ந்தான்..
அதில் பாஸ்வோர்ட் கேட்டதும், மதுமிதா என்று அடித்தான்.. ஆனால் அது ஓபன் ஆகவில்லை.. அதில் இருந்த ‘மலர்..’ என்று அவனுக்கு ஞாபகம் வர, “அபூர்வா..” என்று டைப் செய்து ஓகே கொடுக்கவும் ஓபன் ஆகியது..
அருகில் இருந்த டைரியை கையில் எடுத்தவன், ஒவ்வொன்றாக படிக்க ஆரமித்தான்.. அவன் படிக்க ஆரமித்த பொழுது அந்த டைரியின் வருடம் மூன்று ஆண்டுகள் முன்னாடி எழுதப்பட்டது என்று அவனுக்கு தெரிந்தது..
அந்த டைரியின் முதல் பக்கம் படிக்க திருப்பியவனின் முகத்தில் புன்னகை தானாகவே மலர்ந்தது.. அதில் அவனின் புகைப்படம் இருந்தது..
அடுத்த பக்கத்தை திருப்பியவனின் மனம் இதில் இருந்து படிப்பதற்கு முன்னாடியே, ‘இவள் எதற்காக மதுரை வந்தாள்..?!’ என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்தது..
அந்த டைரியில் முதல் பக்கத்தில், “எனக்கு இப்பொழுது இந்த வீட்டில் இருக்கவே சுத்தமாக விருப்பம் இல்லை..” என்று எழுதியிருந்தாள்..
அவன் தொடர்ந்து படிக்க ஆரமித்தான்.. “இந்த ஏழு ஆண்டுகளில் நான் தவறாக பேசியதால் மட்டுமே ரோஹித் என்னை விட்டு பிரிந்து சென்றான் என்று நினைத்தேன்.. ஆனால் அவன் என்னை பிரிந்து செல்ல நினைக்கவில்லை.. அவனை இங்கிருந்து அனுப்பியிருக்கின்றனர் என்று நான் இப்பொழுதுதான் தெரிந்துக் கொண்டேன்..” என்று எழுதியிருப்பதைப் பார்த்து அவனுக்கு வருத்தமாக இருந்தது..
“உனக்கும் உண்மை தெரிந்துதான் நீ அப்பா – அம்மாவை விட்டு இந்த ஊருக்கு வந்தாயா மது..?” என்று கேட்டவன் மேலே படித்தான். அதன்பிறகு அவன் படிக்க ஆரமிக்க, அதில் அவனுக்கு பல அதிர்ச்சிகளை வைத்திருந்தாள் மதுமிதா..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top