anu akka romba thanks for your comment..Sanju, Madhu n Ranji friendship Romba azhaguuu. Nyc ud
anu akka romba thanks for your comment..Sanju, Madhu n Ranji friendship Romba azhaguuu. Nyc ud
thank youNice
thanks nithya sisterNice ud
thanks sarummaNice update
thanks suganya for your commentsSEMA interesting next ud la enna nadaka pogudu nu romba ethirpaka thonudu
Next ud epah poduvinga sisthanks suganya for your comments
thanks sisterArumaiyana natpu..
Interesting ?????????அவன் சிரித்தும் அவனுக்கு தெரிந்துவிட்டது இவர்கள் இருவரும் இணைந்து நம்மை கேலி செய்கின்றனர் என்று..! “நீங்க இருவரும் நட்பு என்ற பயணத்தில் இணைந்து எத்தனை வருடம் ஆகிறது..?” என்று கேட்டான்..
“பதினேழு வருடம்..” என்று இருவரும் சேர்ந்து கோரஸாக சொல்லவும், “அடிபாவிகளா.. பிறந்ததிலிருந்து ஐந்து வருடம் தான் அப்பா, அம்மா கட்டுப்பாட்டில் இருந்தீங்களா..?” என்று கேட்டவன் சஞ்சனாவின் பக்கம் திரும்பி,
“நீ மூன்று வருடம் காலேஜ் என்னுடன் இங்கே தானே படித்தாய்..?!” என்று சந்தேகம் கேட்டான் ரஞ்சித்..
“எங்களின் நட்பை வளர்க்கத்தான் பல புதிய டெக்னாலஜி கண்டுபிடித்திருக்கின்றனர்..” என்று அவள் பெருமையாக சொல்லவும், அவள் சொன்ன பாணியில் மனம் விட்டு சிரித்தாள் மதுமிதா..
“வாழ்க உங்களின் நட்பு! வளர்க உங்களின் புகழ்! உங்களின் நட்பு பயணம் முடிவில்லாமல் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..” என்று ஒரு அரசனின் தோரணையில் சொன்னவனை பார்த்து,
“வானரம் என்று இவனுக்கு எதுக்கு பெயர் வைத்தேன் இப்ப தெரியுதா..? தஞ்சாவூரில் பெரிய கோவிலைப் பார்த்து வளர்ந்ததால் இந்த வானரம் இப்படித்தான் இருக்கும்..” என்று சஞ்சனா ரஞ்சித்தை வாரினாள்
“இல்லடி வானரம் என்பதை விடவும், ரஞ்சிதா தான் பொருத்தமாக இருக்கிறது..” என்று மதுமிதாவும் தன்னுடைய பங்கிற்கு வாரினாள்..
“ஆண்டவா என்னை இந்த இரண்டு பிசாசுகளிடம் இருந்து காப்பாத்து..” என்று ரஞ்சித் கடவுளை அழைக்க, “பக்தா உனது பக்தியில் மெய் சிலிர்த்தோம்.. அதனால் நீங்கள் கேட்ட வரம் வழங்கப்படும்..” என்று மதுமிதாவும் சஞ்சனாவும் சொல்லவும்,
“பிசாசுகளுக்கு சாமி கெட்டப் ரொம்ப முக்கியம் பாரு..” என்று சொன்னவன் இடத்தை காலி செய்தான்.. ஆனால் அவனது முகமும் மலர்ந்தே இருந்தது..
அன்றைய தினம் வேலையை முடித்தவள், “மது நீ எங்கே தங்கியிருக்கிறாய்..?!” என்று கேட்டாள் சஞ்சனா..
அவள் வீட்டின் முகவரியைச் சொல்லவும், “என்ன பெரியத்தான் அட்ரஸ் சொல்கிறாய்..” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்தாள் சஞ்சனா..
“என்னடி பெரிய அத்தானா..? அப்பொழுது உன்னோட அத்தான்..?” என்று கேள்வியாக இடது புருவம் உயர்த்தினாள் மதுமிதா..
“ரஞ்சித் தான் மதுமிதா..” என்று அவளும் வெக்கத்துடன் சொல்லிவிட்டு, “அவனுக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை.. எனக்கும் எனக்கும் அப்படி ஒரு நிலைதான்.. அப்பா இருந்தும் கண்டிக்க ஆள் இல்லை.. அம்மா இருந்தும் கவனிக்க ஆள் இல்லை..” என்று சொன்னவள் கண்கள் கலங்க,
“நான் ஒருத்தி இருக்கிறேன் என்று கூட இருவருக்கும் நினைப்பு இல்லமா.. எனக்கு ரஞ்சித் பிடித்த காரணமே, அவன் சரியான நேரத்திற்கு என்னை கவனமாக சாப்பட வைக்கும் அந்த கரிசனம் தான்..” என்று சொல்லவும் அவள் பாசத்திற்கு ஏங்குகிறாள் என்று உணர்ந்தவள்
“என்னடி இது குழந்தை போல கண்ணை கசக்குகிறாய்..?” என்று தோழியை தோளோடு அணைத்துக் கொண்டாள்.. ரஞ்சித் வரவும் மூவரும் வீடு நோக்கி பயணித்தனர்..
சஞ்சனாவின் பின்னோடு அமர்ந்த மதுமிதா, “நேற்று திருமணம் செய்தவங்க ரஞ்சித்தின் கூட பிறந்த அண்ணா..?” என்று கேட்டதும் சிரித்தாள் சஞ்சனா..
“எதுக்குடி சிரிக்கிறாய்..?” என்று கடுப்புடன் கேட்டாள் மதுமிதா..
“ரஞ்சித் கூட பிறந்தவர் என்று நீ சொன்னதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது மது..” என்று அவளின் சிரிப்பிற்கு விளக்கம் கொடுத்தவள்,
“ரஞ்சித் நண்பனின் அண்ணா.. இவனும் நம்மை போலவே இணைபிரியாத நட்பு.. அதனால் அவனின் அண்ணாவை இவனும் அண்ணா என்று சொல்கிறான்..” என்று விளக்கம் கொடுத்தாள்..
“அவங்க வீட்டில் சம்மதிக்காமல் இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டாங்களா..?!” என்று கேட்டாள் மதுமிதா..
“அந்த அண்ணாவின் வீட்டில் அவர் இவர்கள் காதல் பற்றி எதுவும் சொல்லவில்லை.. இந்த அக்காவின் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை.. இந்த அக்காவின் அத்தை மகன் தான் இருக்கிறான்.. இவங்களும் எதுவும் அவங்க வீட்டில் சொல்லவில்லை..” என்று சொல்லவும்,
“இவர்கள் இவ்வளவு அவசரமாக திருமணம் செய்ய என்ன காரணம்..?!” என்று கேட்டாள் மதுமிதா..
“அந்த அக்கா கன்சீவ் ஆக இருக்காங்க.. நான்குமாதம் அதுதான் பிராப்ளம்..” என்று சொல்லவும், மதுவிற்கு அது பெரிதாக தெரிந்தது.. ஆனால் அவளுக்கு கோபம் வரவில்லை..
காரணம், காதலித்து திருமணம் செய்து வேலை முடிந்ததும் கழட்டிவிட்டு செல்லும் மனிதர்கள் மத்தியில் கருவை கலைக்காமல் அந்த பெண்ணை திருமணம் செய்தது அவர்களின் காதலைக் காட்டியது..
அதற்குள் வீடு வரவும் வீட்டின் முன்னே வண்டியை நிறுத்தினாள் சஞ்சனா..! அந்த இடத்தில் படிப்பதை நிறுத்தினான் ரோஹித்..!
அவனது மனதில் இருந்த கேள்விகளுக்கு பதிலாக அவனது முகத்தில் அதிர்ச்சியே அதிகமாக இருந்தது. மதுமிதா எழுதியிருப்பதை மறுபடியும் ஒரு முறை படித்தான்..
அதில் சொல்லப்பட செய்தியில் அவனின் மனம் கோபம் எல்லை கடந்தது..! ‘இப்படி ஒரு காரியம் செய்யும் முன்னே யோசிக்கவே மாட்டியாடா..?! எல்லா காரியத்தையும் எடுத்தோம், கவுத்தோம் என்று செய்துதான் இப்பொழுது பெரிய பிரச்சனையில் வந்து நிற்கிறது..’ என்று அண்ணனை திட்டினான் ரோஹித்..
ஆனால் அவனிடம் திட்டுவாங்க அவனின் அண்ணன் சக்தி இந்த பூலோகத்தில் இல்லை.. அவனது காதல் உண்மை என்பதை இறப்பில் கூட நிரூபித்துக் காட்டிவிட்டான் சக்திவேல் – ராதிகா இருவரும்..
இறப்பு கூட இருவரையும் பிரிக்கவில்லை.. அவர்களின் காதலுக்கு சான்றாக இருவரையும் இணைந்தே அழைத்து சென்றது..!
அதற்கு கீழே உள்ள வரிகளை படித்தவன், ‘ம்ம் இப்படியும் சிலர் இருக்க அதில் அவனின் அண்ணன் மட்டும் தனித்து தெரிவதை உணர்ந்து மதுமிதா கோபப்படவில்லை என்பதில் நிம்மதி அடைந்தான்..
‘நாணயத்திற்கு இரண்டு பக்கம்.. இரண்டு பக்கத்திலும் இருந்து பார்க்க வேண்டும் என்பதை அவனின் காதலி அவனுக்கே மறுபடியும் ஒருமுறை அவனுக்கு கற்பித்தாள் அவனின் காதலி..
எல்லோரும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்துவிட்டு, ‘இதெல்லாம் என்ன ஜென்மம்..?! இப்படி செய்துவிட்டு இன்னும் உயிருடன் இருக்கிறது பார்..!’ என்று சொல்வார்கள், அதே தப்பை அவர்கள் வீட்டில் செய்தால் அதை மூடி மறைப்பார்கள்..!
அதற்கு மறுபக்கத்தில் என்ன நடந்திருக்கும் என்று யாருமே யோசிப்பது கிடையாது.. அப்படி யோசித்தால் இங்கே காதலர்கள் யாரும் தற்கொலை செய்துக் கொள்ளவும் மாட்டார்கள்.. அவர்களை தற்கொலை செய்ய யாரும் தூண்டவும் மாட்டார்கள்..
அவனின் மனதின் கொதிப்பை அடக்கிவிட்டு மறுபடியும் படிக்க ஆரமித்தான்..! அவளின் டைரியில் இன்னும் எத்தனை அதிர்ச்சி வைத்திருக்கிறாள் என்று மேலும் படிக்க ஆரமித்தான்..