• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 33

அந்த அதிர்ச்சியைத் தாங்கிய ரோஹித், “இவளின் இத்தனை நாள் உழைப்பு வீணாகக் கூடாது.. இதில் நான் வந்தால் இந்த தகவல் அனைத்தையும் நான் தேடிக் கண்டுபிடித்தது போல ஆகும்..” என்று யோசிக்க ஆரமித்தான்..

அவளின் செல்லில் வீடியோ பதிவைப் பார்க்க அதில் அவள் கோவிலுக்கு செல்லும் முன்னர் ஆன் செய்த வீடியோ பதிவை கடைசி நொடியில் ரெகார்ட் செய்திருந்தாள்..

அவளின் செல்லில் இருந்து அருணிற்கு அழைத்தான் ரோஹித்.. மதுவின் அழைப்பைப் பார்த்த அருண், “மதுமிதா எங்கே இருக்கிறாய்..? வீட்டில் இருக்கிறாயா..? இல்லை நீ சொன்ன அந்த ஹோட்டலில் இருக்கிறாயா..?!” என்று கேள்விகளை அடுக்கினான் அருண்..

அவனின் கேள்விகளை கேட்டவன், “ஹலோ அருண் நான் ரோஹித் பேசுகிறேன்..” என்று சொல்லவும் அருணிற்கு ஒன்றும் புரியவில்லை..

முதலில் புரியாமல் விழித்தவன், “டேய் ரோஹித் நீ எப்பொழுது வெளிநாட்டில் இருந்து வந்தாய்..?! நீ எப்படி மதுவின் செல்லில் பேசுகிறாய்..? மதுமிதா எங்கே..?” என்று கேட்டான்..

அவனின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், “நீ இப்பொழுது எங்கே இருக்கிறாய்..?” என்று கேட்டான்

“நான் இப்பொழுது மதுவின் வீட்டின் முன்னே நிற்கிறேன்..” என்று பதில் சொல்ல மணியைப் பார்த்த ரோஹித், அதில் இரவு 11.3௦ என்று காட்டியது..

“நான் மதுவின் வீட்டில் தான் இருக்கிறேன் அருண்..” என்று சொன்னவன் அழைப்பை வைக்க, வீட்டின் உள்ளிருந்து வந்து கதவைத் திறந்தாள் எஸ்தர்..

“வாங்க தம்பி..” என்று அழைத்தவளுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவன், “ரோஹித் வீட்டில் இருக்கிறானா..?!” என்று கேட்டான்..

“ஆமாம் தம்பி.. அந்த தம்பி வீட்டின் உள்ளே தான் இருக்கிறார்..” என்று சொல்லவும், மதுவின் வீட்டை நோக்கி நடந்தான் அருண்..

அவன் வாசலுக்கு வந்து காலின்பெல் அடிக்கும் முன்னாடியே கதவைத் திறந்தான் ரோஹித்.. அவன் கதவைத் திறந்ததும் உள்ளே சென்றவன்,

“ரோஹித் நீ எப்படி இங்கே..?!” என்று கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் கதவை சாத்தியவன், “நான் இங்கே வந்து அதாவது வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து ஒருவாரம் ஆகிறது..” என்று கூறினான்..

அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு சிலையென நின்றான் அருண்.. “என்ன அருண் சிலையாகி நிற்கிறாய்..?! நான் வந்த தகவல் உனக்கு தெரியாதா..?” என்று சந்தேகமாகக் கேட்டான் ரோஹித்

“எனக்கு தெரியாது ரோஹித்..” என்று கூறியவன் சோபாவில் அமர, அவனின் எதிரே அமர்ந்த ரோஹித் அவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தான்

“டேய் எனக்கு தெரியாமல் இத்தனை விஷயம் நடந்திருக்கிறது.. எனக்கு சொல்ல வேண்டும் என்று உங்கள் யாருக்குமே தெரியலையா..?!” என்று கேட்டான்

“யாருக்கு உனக்கா ரோஹித்.. இங்கே வரும் வரையில் மதுவைப் பற்றி எனக்கே தெரியாது..” என்று சொன்னவனை நம்பாமல் பார்த்தான் ரோஹித்..

“என்னை நம்புடா.. அவளுக்கு ஆக்சிடன்ட் என்று கயலின் மூலம் தெரியும் வரையில் அவள் எங்கே இருக்கிறாள் என்று எனக்கு தெரியாது ரோஹித்.. அவளுக்கு ஆக்சிடன்ட் ஆனது தெரிந்து தான் நான் இங்கே வந்தேன்..” என்று சொன்னவன் ரோஹித்தைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தான்..

“மது எனக்கு சொன்ன முதல் விஷயம் இது ஆக்சிடன்ட் இல்ல அண்ணா இது ஒரு திட்டமிட்ட கொலை இதைப் பற்றி மெல்ல விசாரித்து சொல்லு..” என்று மட்டும் சொன்னாள்..

அவன் சொல்லியதைக் கேட்ட ரோஹித், “மது எப்படி எங்கள் தாத்தாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்..?!” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்

“உன்னோட தாத்தாவிற்கு எல்ல விஷயமும் தெரியும் ரோஹித்..” என்று அவனுக்கு பதில் கொடுத்தான் அருண்..

“அவருக்கு எப்படித் தெரியும்.. அதுவும் கயல்விழி வரையில் தெரிந்து வைத்திருக்கிறார்..?” என்று சந்தேகமாகக் கேட்டவனின் முகம் பார்த்த அருண்,

“நீ மதுமிதா பற்றி சொல்லியதும், நீ படிப்பை முடித்துவிட்டு வெளிநாடு செல்லும் வரையிலும் அமைதியாக இருந்தவர், எனது மூலமாக கயல்விழியிடம் பேசி அந்த வீட்டில் மதுவின் நடவடிக்கை என்ன..? என்பதைக் கண்காணிக்க ஆரமித்தார்..

நீ வெளிநாடு சென்ற பிறகு, சக்திவேல் காதல் திருமணம் செய்தது உறவினர் மூலமாக அவர்க்கு தெரிந்து அவனைக் கண்காணிக்கும் பொழுது மறுபடியும் அவர்களின் வாழ்க்கை வட்டத்திற்கு வந்தாள் மதுமிதா..

மதுமிதா மூலம் எந்த தகவலும் தெரியாது என்பதால் கயல்விழியிடம் கேட்டு எல்லா விசயத்தையும் தெரிந்துக் கொள்வார்.. அந்த நேரத்தில் தான் அபூர்வா பிறந்தாள்..

அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நினைத்த பொழுதுதான் இந்த விபத்து நிகழ்ந்தது.. இந்த விசயமும் கயலின் மூலம் தெரிந்துக் கொண்டவர் மதுவையும் அபூர்வாவையும் தன்னுடைய பாதுக்காப்பில் வைக்க நினைத்தார்..” என்று அவன் சொல்லிக் கொண்டே வர, அவனை இடைமறித்த ரோஹித்,

“இந்த விஷயம் அனைத்தும் தாத்தாவிற்கு தெரியுமா..?!” என்று கேட்டான் ரோஹித்.. இல்லையென்று தலையசைத்தான் அருண்..

“அது ஒரு விபத்து என்பது மட்டும் தான் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அது கொலை என்று யாருக்கும் தெரியாது.. ஏன் இந்த விஷயம் ரஞ்சித்திற்கு கூட தெரியாது..” என்று சொன்னவன்,

“உன்னோட தாத்தா எனக்கு அழைத்து மதுவிற்கு அங்கே ஒரு வேலை இருப்பதாக சொல்லி இங்கே அனுப்பிவிடு என்று சொன்னார்.. நானும் அவளிற்கு பாதுக்காப்பான இடம் வேண்டும் என்று அங்கே அனுப்பி வைத்தேன்.. அதன்பிறகு தான் மதுவிடம் இருக்கும் குழந்தை உன்னோட அண்ணாவின் குழந்தை என்பதே எனக்கு தெரியும்..” என்று அவன் சொல்லி முடித்தான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ரோஹித், “அருண் இந்த கேசை டீல் பண்ணுவது நீயா..?” என்று நேரடியாகக் கேட்டான்..

“இல்ல ரோஹித் மதுமிதா கோர்ட்டில் மனு தாக்கல் பண்ணியிருக்கிறாள்.. இன்னும் ஒரு வாரத்தில் கேஸ் விசாரணை நடக்கும்..” என்று சொல்ல அருண் ஒரு சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்..

அவனுக்கு எதிரே அமர்ந்த ரோஹித், “அவளிடம் அனைத்து ரெகார்டும் சரியாக இருக்கிறது..” என்று சொன்னவன் வீட்டின் உள்ளே சென்று சில பேப்பரை எடுத்து வந்தான்.

அதற்குள் வீட்டைப் பார்த்த அருண், “ரோஹித் மதுமிதா எங்கே..?” என்று கேட்டான்.. அவளைப் பற்றிக் கேட்ட அருணிற்கு,

“நான் சொல்கிறேன் அருண் இப்பொழுது இதில் எல்லாம் சரியாக இருக்கிறது.. ஆனால் இந்த கேஸ் கோர்டில் வெற்றியடைய மதுமிதா திருமணம் ஆனவள் என்ற ஆதாரம் வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் கேசை உடைக்க முடியாது..” என்று சொல்லவும்,

“அவளின் திருமண ஆதாரம் எதுக்கு ரோஹித்..?!” என்று புரியாமல் கேட்டான் அருண்..

“அபூர்வா அவளிடம் வளர, அவள் திருமணம் ஆனவளாக இருக்க வேண்டும்.. கணவன் மனைவியாக இருந்தால் மட்டும் தான் அபூர்வா நம்மிடம் இருப்பாம்.. கேஸ் நமது பக்கம் தீர்ப்பாகும்.. என்னோட அண்ணியின் தாத்தா எழுதிய உயிலில் அப்படிதான் இருக்கிறது..” என்று சொன்னவன் ஆதாரத்தைக் காட்டினான்..

அருணிற்கு அவனைப் பார்த்து திகைப்பாக இருந்தது.. அவனின் பார்வை உணர்ந்து அவனைப் புருவம் உயர்த்திக் கேள்வியாகப் பார்த்தான் ரோஹித்..

“என்னடா இப்படி பார்க்கிறாய்..?” என்றான் ரோஹித்..

“இல்ல மதுவை முதலில் பார்த்த பொழுது நீ எப்படி இருந்தாயோ அதே போலதான் இப்பொழுது இருக்கிறாய்..” என்று கூறினான் அருண்..

“நான் எப்பொழுதும் இப்படித்தான் இருப்பேன்.. நான் எங்கே இருந்தாலும் என்னோட மனது மதுவை விட்டு நகராது..” என்று கூறியவன்,

“இப்பொழுது அந்த வாசுதேவனைப் பிடிக்க நான் உன்னிடம் போலீஸ் கம்ப்ளைன்ட் தருகிறேன்..” என்று சொல்லவும், அவனை கேள்வியாக பார்த்தது இப்பொழுது அருணின் முறையானது..

அவனின் எதிரே அமர்ந்திருந்த ரோஹித் எழுந்து சென்று ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்துக் கொண்டே அருணிடம், “மதுவைக் கத்தியால் குத்திவிட்டான் வாசுதேவன்.. அவளை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன் அருண்..” என்று உண்மையைச் சொன்னவன் கண்கள் இரண்டும் கலங்க, அவனின் அருகில் சென்ற அருண்,
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“என்னது மதுவை அந்த வாசு குத்திவிட்டானா..?! இப்பொழுது மது எங்கே இருக்கிறாள்.. அபூர்வா குட்டி அவளின் அருகில் இருந்தாளா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்

“இல்ல அபூர்வா என்னோடு தான் இருந்தாள்.. இப்பொழுது மருத்துவமனையில் என்னோட தாத்தா, பாட்டி இருக்காங்க..” என்றவனின் கண்கள் கலங்கியது..

“எதுக்கு இப்படி கலங்குகிறாய் ரோஹித்.. இந்த கேஸ் வெற்றி பெற்றால் எல்லாவிதமான பிரச்சனையும் முடிந்துவிடும்..” என்று சொல்லி அவனைத் தேற்ற நினைத்தான்..

“இல்ல அருண் எனக்கு மனசு வலிக்குது! மதுவின் வாழ்க்கை மட்டும் இல்லாமல், சக்தியின் வாழ்க்கை, ரஞ்சித் வாழ்க்கை எல்லாம் என்னால் அழிந்துவிட்டதே..” என்று கதறினான் ரோஹித்..

அவனைத் தட்டிக்கொடுத்து சமாதனம் செய்த அருண், “நேரம் காலம் இரண்டும் நம் கையில் இல்லை ரோஹித்.. நீ பிரிந்து சென்றதால் மட்டும் இப்படி நடந்தது என்று நினைப்பது முட்டாள் தனம்..” என்று சொன்னவன்,

“யாரோட வாழ்க்கையில் என்ன என்ன நடக்கணும் என்று இருக்கிறதோ அதெல்லாம் நடந்தே தீரும்.. நீ இங்கே இருந்திருந்தால் மதுவின் பெற்றோர் சுயரூபம் மதுவிற்கு தெரியாமலே போயிருக்கும்..” என்று கூறினான்..

“மதுவிற்கு இப்படி ஆனது யாருக்காவது தெரியுமா..?” என்று கேட்டான் அருண்..

“இல்லடா.. யாருக்கும் நான் எந்த தகவலும் சொல்லவில்லை..” என்று அவன் சொன்னதும், “யாருக்கும் சொல்லாமல் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் ரோஹித்..” என்று கேட்டான்

பிறகு ரோஹித் முகம் பார்த்தவன், “ரோஹித் நீ ஊரில் இருந்து வந்து ஒருவாரம் தான் ஆகிறது.. ஆனால் கோர்டில் நடக்க போகும் கேஸ் வரையில் விவரம் தெரிந்து வைத்திருக்கிறாயே எப்படி..?” என்று கேட்டான்..

“மதுவின் நிலையைப் பார்த்து என்னோட மனதில் வந்த கேள்விகளுக்கு விடைதேடி வந்தேன்..” என்று சொன்னவன், “வா அருண் மதுவைப் பார்த்துவிட்டு வரலாம்..” என்று அழைத்தான் ரோஹித்..

“இப்பொழுது எனக்கு ஒன்று மட்டும்தான் புரியவில்லை..” என்றவனின் போன் அடித்தது.. அதை எடுத்தவன், “சொல்லு கயல்விழி.. என்ன இந்த நேரத்தில் போன் செய்கிறாய்..?” என்று சொல்ல, ரோஹித் அமைதியாக நின்றிருந்தான்..

“அக்காவிற்கும் மாமாவிற்கும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் செய்ய போறாங்க அண்ணா..” என்று சந்தோசமாகக் கூறினாள் கயல்விழி..

“என்ன சொல்கிறாய் கயல்விழி.. உன்னைத்தான் பெண் பார்க்க வந்ததாக சொன்னாங்க..?!” என்று சந்தேகமாகக் கேட்டான்..

“என்னைக் கேட்டு தான் வந்தாங்க.. ஜீவாவின் வீட்டில் இருந்து.. ஆனால் அக்காவிற்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் உனக்கு மாமா பத்திரிக்கை கொடுத்தாங்களா..?” என்று கேட்டதும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..

“ஏய் எந்த மாமா பத்திரிக்கை கொடுப்பாங்க.. ஆமாம் மாப்பிள்ளை யாரு..?” என்று கேட்டதும், ரோஹித்திற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..

அவன் சிரிப்பதை பார்த்தவனுக்கு சந்தேகம் எழுந்தது.. அவன் கயலிடம், “மதுமிதாவை திருமணம் செய்ய போவது ரோஹித்தா..?” என்று கேட்டான்..

“ஹப்பாடி இப்பொழுதாவது கண்டுபிடிச்சுட்டீங்களே..” என்று அருணை வாரினாள் கயல்விழி..

அவள் அவனை வாருவதைக் கண்டு சிரித்த ரோஹித்தைப் பார்த்த அருண், “இவ்வளவு ரணகளத்திலும் உனக்கு மட்டும் எப்படிடா சிரிப்பு வருது..” என்று கேட்டதும்,

“அண்ணா மாமா பக்கத்தில் இருக்காங்களா..?!” என்று கேட்டதுக்கு அருண், “ம்ம் இருக்கிறான்.. உன்னோட அக்காவிற்கு இந்த விஷயம் தெரியுமா..?” என்றான்

“அண்ணா அவளுக்கு மட்டும் உண்மைத் தெரிந்தது என்றால் கதை கந்தல் தான்!” என்று அலறினாள் கயல்விழி..

“அண்ணா அக்காவை மட்டும் குற்றாலத்தில் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று பயமாக இருக்கிறது அண்ணா..” என்று அவள் கலக்கமாகச் சொன்னாள்..

அவளின் கலக்கம் கண்டு, ‘நீ நினைப்பது போலவே நடந்துவிட்டது..’ என்று மனதில் நினைக்க, ‘அவளிடம் எதுவும் சொல்லாதே’ என்று சைகை செய்தான் ரோஹித்..

“ம்ம் பயப்பாடாதே கயல்விழி..” என்று அவளுக்கு ஆறுதலாகப் பேசியவன், “நீ போய் படுத்து தூங்கு கயல்.. காலையில் நான் பேசுகிறேன்..” என்று சொல்லவும்,

“ம்ம் சரிங்க அண்ணா..” என்று சொன்னவள் அழைப்பைத் துண்டித்தாள்.. அவள் அழைப்பை வைத்ததும், ரோஹித்தை முறைத்தான் அருண்..

“நீ இங்கே வந்த ஒரு வாரத்தில் என்ன என்ன விஷயம் எல்லாம் நடந்திருக்கிறது..?! எனக்கு இங்கே நடப்பது ஒண்ணுமே புரியலடா..” என்று சொன்னவனிடம், “புரியாமல் இருப்பதுதான் நல்லது அருண்..” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ரோஹித்..

அவனை முறைத்தவன் கையில் கிடைத்த பேப்பர் வைட் எடுத்து அவனை நோக்கி வீசினான் அருண்.. அதை லாவகமாக கேச் பிடித்தான்..

“இந்த அவசர ஏற்பாட்டிற்கே உன்னோட தங்கச்சிதான் காரணம்..” என்று ரோஹித் சொல்லவும் அவனைச் சந்தேகமாகப் பார்த்தான் அருண்..

“உனக்கு தெளிவாக சொன்னதான் புரியும்..” என்று அவனை சோபாவில் அமரச் சொல்லிவிட்டு,

“நான் அவளைப் பார்த்த நேரத்தில் அவள் அபூர்வாவுடன் இருந்ததைப் பார்த்து..” என்று அவன் இழுக்க அருணிற்கு அவன் சொல்ல வருவது புரிந்தது..

“ம்ம் புரியுது..” என்றான் அருண்.. அவன் எந்த அளவிற்கு அவளின் மீது உயிரை வைத்திருந்தான் என்று அருணுக்கும் தெரியும்.. அதனால் அவன் என்ன நினைத்திருப்பான் என்று அவனுக்கும் புரிந்தது..

“நான் உண்மை என்ன என்று தெரியாமல் அவளை ஒரு வார்த்தை கேட்டுவிட்டேன்.. அதுக்காக இந்த உலகத்தை விட்டு போக நினைத்துவிட்டாள்..” என்று அவன் சொல்ல,

அதுவரை அமைதியாகக் கேட்ட அருண், “என்னது தற்கொலைக்கு முயற்சி பண்ணினாளா..?!” என்று கேட்டான்

“ம்ம்..” என்று தலையசைத்தான்

“அப்புறம் என்ன நடந்தது..?” என்று கேட்ட அருணைப் பார்த்த ரோஹித், “நான் என்ன கதையா சொல்கிறேன்..?” என்று கேட்டதும்,

“பின்ன என்னடா செய்ய சொல்கிறாய்..?” என்று அவனைப் பார்த்து சலிப்புடன் கேட்டான்

“அதுதான் அவளைத் தனியாக விட்டால் பிரச்சனை வரும் என்று திருமண ஏற்பாடு செய்தேன்.. அதற்கு அவளே போய் இந்த புதிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டாள்..” என்று சொன்னவன்

“இனிமேல் என்ன செய்ய போவதாக உத்தேசம்..?” என்று கேட்டான் அருண்..

“நீ கேட்பது புரியல அருண்..” என்றான்

“இந்த கேஸ் விஷயத்தில் என்ன செய்ய போகிறாய்..?” என்று கேட்டான்..

அவனை நிமிர்ந்து பார்த்தவன், “இந்த கேஸில் விஷயத்தில் அவள் தான் எல்லாம் கண்டுபிடித்தாள்.. இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை.. இந்த முயற்சிகள் முழுக்க முழுக்க அவளோடது..” என்று சொன்னவனை இடைமறித்த அருண்,

“அப்போ இந்த கேஸில் நீ இன்வால் ஆகலையா..?” என்று நேரடியாகக் கேட்டான்.. இல்லை என்று தலையசைத்த ரோஹித், “இந்த வெற்றி அவளுக்கும் அவளின் முயற்சிகளுக்கும் கிடைத்த பரிசாக இருக்க வேண்டும்..” என்றவன் தொடர்ந்து,

“இந்த கேஸில் அவள் வெற்றி பெற ஃபுல் சப்போர்ட் கொடுப்பேன்.. அவளிற்கு பக்கபலமாக இருப்பேன்.. அவளையும், அபூர்வாவையும் பாதுகாப்பது மட்டும் என்னோட பொறுப்பு..!” என்று கூறினான்.. அவனது காதலை கண்டு மெய் சிலிர்த்து அமர்ந்திருந்தான் அருண்...!

அவளின் முயற்சிகளைத் திருட நினைக்காமல், அவளுக்கு வாகை சூட நினைத்த ரோஹித்திற்காக தன்னுடைய தங்கை பத்துவருடம் காத்திருந்ததில் தவறேதும் இல்லை என்று நினைத்தான் அருண்..!
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top