அத்தியாயம் – 33
அந்த அதிர்ச்சியைத் தாங்கிய ரோஹித், “இவளின் இத்தனை நாள் உழைப்பு வீணாகக் கூடாது.. இதில் நான் வந்தால் இந்த தகவல் அனைத்தையும் நான் தேடிக் கண்டுபிடித்தது போல ஆகும்..” என்று யோசிக்க ஆரமித்தான்..
அவளின் செல்லில் வீடியோ பதிவைப் பார்க்க அதில் அவள் கோவிலுக்கு செல்லும் முன்னர் ஆன் செய்த வீடியோ பதிவை கடைசி நொடியில் ரெகார்ட் செய்திருந்தாள்..
அவளின் செல்லில் இருந்து அருணிற்கு அழைத்தான் ரோஹித்.. மதுவின் அழைப்பைப் பார்த்த அருண், “மதுமிதா எங்கே இருக்கிறாய்..? வீட்டில் இருக்கிறாயா..? இல்லை நீ சொன்ன அந்த ஹோட்டலில் இருக்கிறாயா..?!” என்று கேள்விகளை அடுக்கினான் அருண்..
அவனின் கேள்விகளை கேட்டவன், “ஹலோ அருண் நான் ரோஹித் பேசுகிறேன்..” என்று சொல்லவும் அருணிற்கு ஒன்றும் புரியவில்லை..
முதலில் புரியாமல் விழித்தவன், “டேய் ரோஹித் நீ எப்பொழுது வெளிநாட்டில் இருந்து வந்தாய்..?! நீ எப்படி மதுவின் செல்லில் பேசுகிறாய்..? மதுமிதா எங்கே..?” என்று கேட்டான்..
அவனின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், “நீ இப்பொழுது எங்கே இருக்கிறாய்..?” என்று கேட்டான்
“நான் இப்பொழுது மதுவின் வீட்டின் முன்னே நிற்கிறேன்..” என்று பதில் சொல்ல மணியைப் பார்த்த ரோஹித், அதில் இரவு 11.3௦ என்று காட்டியது..
“நான் மதுவின் வீட்டில் தான் இருக்கிறேன் அருண்..” என்று சொன்னவன் அழைப்பை வைக்க, வீட்டின் உள்ளிருந்து வந்து கதவைத் திறந்தாள் எஸ்தர்..
“வாங்க தம்பி..” என்று அழைத்தவளுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவன், “ரோஹித் வீட்டில் இருக்கிறானா..?!” என்று கேட்டான்..
“ஆமாம் தம்பி.. அந்த தம்பி வீட்டின் உள்ளே தான் இருக்கிறார்..” என்று சொல்லவும், மதுவின் வீட்டை நோக்கி நடந்தான் அருண்..
அவன் வாசலுக்கு வந்து காலின்பெல் அடிக்கும் முன்னாடியே கதவைத் திறந்தான் ரோஹித்.. அவன் கதவைத் திறந்ததும் உள்ளே சென்றவன்,
“ரோஹித் நீ எப்படி இங்கே..?!” என்று கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் கதவை சாத்தியவன், “நான் இங்கே வந்து அதாவது வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து ஒருவாரம் ஆகிறது..” என்று கூறினான்..
அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு சிலையென நின்றான் அருண்.. “என்ன அருண் சிலையாகி நிற்கிறாய்..?! நான் வந்த தகவல் உனக்கு தெரியாதா..?” என்று சந்தேகமாகக் கேட்டான் ரோஹித்
“எனக்கு தெரியாது ரோஹித்..” என்று கூறியவன் சோபாவில் அமர, அவனின் எதிரே அமர்ந்த ரோஹித் அவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தான்
“டேய் எனக்கு தெரியாமல் இத்தனை விஷயம் நடந்திருக்கிறது.. எனக்கு சொல்ல வேண்டும் என்று உங்கள் யாருக்குமே தெரியலையா..?!” என்று கேட்டான்
“யாருக்கு உனக்கா ரோஹித்.. இங்கே வரும் வரையில் மதுவைப் பற்றி எனக்கே தெரியாது..” என்று சொன்னவனை நம்பாமல் பார்த்தான் ரோஹித்..
“என்னை நம்புடா.. அவளுக்கு ஆக்சிடன்ட் என்று கயலின் மூலம் தெரியும் வரையில் அவள் எங்கே இருக்கிறாள் என்று எனக்கு தெரியாது ரோஹித்.. அவளுக்கு ஆக்சிடன்ட் ஆனது தெரிந்து தான் நான் இங்கே வந்தேன்..” என்று சொன்னவன் ரோஹித்தைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தான்..
“மது எனக்கு சொன்ன முதல் விஷயம் இது ஆக்சிடன்ட் இல்ல அண்ணா இது ஒரு திட்டமிட்ட கொலை இதைப் பற்றி மெல்ல விசாரித்து சொல்லு..” என்று மட்டும் சொன்னாள்..
அவன் சொல்லியதைக் கேட்ட ரோஹித், “மது எப்படி எங்கள் தாத்தாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்..?!” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்
“உன்னோட தாத்தாவிற்கு எல்ல விஷயமும் தெரியும் ரோஹித்..” என்று அவனுக்கு பதில் கொடுத்தான் அருண்..
“அவருக்கு எப்படித் தெரியும்.. அதுவும் கயல்விழி வரையில் தெரிந்து வைத்திருக்கிறார்..?” என்று சந்தேகமாகக் கேட்டவனின் முகம் பார்த்த அருண்,
“நீ மதுமிதா பற்றி சொல்லியதும், நீ படிப்பை முடித்துவிட்டு வெளிநாடு செல்லும் வரையிலும் அமைதியாக இருந்தவர், எனது மூலமாக கயல்விழியிடம் பேசி அந்த வீட்டில் மதுவின் நடவடிக்கை என்ன..? என்பதைக் கண்காணிக்க ஆரமித்தார்..
நீ வெளிநாடு சென்ற பிறகு, சக்திவேல் காதல் திருமணம் செய்தது உறவினர் மூலமாக அவர்க்கு தெரிந்து அவனைக் கண்காணிக்கும் பொழுது மறுபடியும் அவர்களின் வாழ்க்கை வட்டத்திற்கு வந்தாள் மதுமிதா..
மதுமிதா மூலம் எந்த தகவலும் தெரியாது என்பதால் கயல்விழியிடம் கேட்டு எல்லா விசயத்தையும் தெரிந்துக் கொள்வார்.. அந்த நேரத்தில் தான் அபூர்வா பிறந்தாள்..
அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நினைத்த பொழுதுதான் இந்த விபத்து நிகழ்ந்தது.. இந்த விசயமும் கயலின் மூலம் தெரிந்துக் கொண்டவர் மதுவையும் அபூர்வாவையும் தன்னுடைய பாதுக்காப்பில் வைக்க நினைத்தார்..” என்று அவன் சொல்லிக் கொண்டே வர, அவனை இடைமறித்த ரோஹித்,
“இந்த விஷயம் அனைத்தும் தாத்தாவிற்கு தெரியுமா..?!” என்று கேட்டான் ரோஹித்.. இல்லையென்று தலையசைத்தான் அருண்..
“அது ஒரு விபத்து என்பது மட்டும் தான் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அது கொலை என்று யாருக்கும் தெரியாது.. ஏன் இந்த விஷயம் ரஞ்சித்திற்கு கூட தெரியாது..” என்று சொன்னவன்,
“உன்னோட தாத்தா எனக்கு அழைத்து மதுவிற்கு அங்கே ஒரு வேலை இருப்பதாக சொல்லி இங்கே அனுப்பிவிடு என்று சொன்னார்.. நானும் அவளிற்கு பாதுக்காப்பான இடம் வேண்டும் என்று அங்கே அனுப்பி வைத்தேன்.. அதன்பிறகு தான் மதுவிடம் இருக்கும் குழந்தை உன்னோட அண்ணாவின் குழந்தை என்பதே எனக்கு தெரியும்..” என்று அவன் சொல்லி முடித்தான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த ரோஹித், “அருண் இந்த கேசை டீல் பண்ணுவது நீயா..?” என்று நேரடியாகக் கேட்டான்..
“இல்ல ரோஹித் மதுமிதா கோர்ட்டில் மனு தாக்கல் பண்ணியிருக்கிறாள்.. இன்னும் ஒரு வாரத்தில் கேஸ் விசாரணை நடக்கும்..” என்று சொல்ல அருண் ஒரு சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்..
அவனுக்கு எதிரே அமர்ந்த ரோஹித், “அவளிடம் அனைத்து ரெகார்டும் சரியாக இருக்கிறது..” என்று சொன்னவன் வீட்டின் உள்ளே சென்று சில பேப்பரை எடுத்து வந்தான்.
அதற்குள் வீட்டைப் பார்த்த அருண், “ரோஹித் மதுமிதா எங்கே..?” என்று கேட்டான்.. அவளைப் பற்றிக் கேட்ட அருணிற்கு,
“நான் சொல்கிறேன் அருண் இப்பொழுது இதில் எல்லாம் சரியாக இருக்கிறது.. ஆனால் இந்த கேஸ் கோர்டில் வெற்றியடைய மதுமிதா திருமணம் ஆனவள் என்ற ஆதாரம் வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் கேசை உடைக்க முடியாது..” என்று சொல்லவும்,
“அவளின் திருமண ஆதாரம் எதுக்கு ரோஹித்..?!” என்று புரியாமல் கேட்டான் அருண்..
“அபூர்வா அவளிடம் வளர, அவள் திருமணம் ஆனவளாக இருக்க வேண்டும்.. கணவன் மனைவியாக இருந்தால் மட்டும் தான் அபூர்வா நம்மிடம் இருப்பாம்.. கேஸ் நமது பக்கம் தீர்ப்பாகும்.. என்னோட அண்ணியின் தாத்தா எழுதிய உயிலில் அப்படிதான் இருக்கிறது..” என்று சொன்னவன் ஆதாரத்தைக் காட்டினான்..
அருணிற்கு அவனைப் பார்த்து திகைப்பாக இருந்தது.. அவனின் பார்வை உணர்ந்து அவனைப் புருவம் உயர்த்திக் கேள்வியாகப் பார்த்தான் ரோஹித்..
“என்னடா இப்படி பார்க்கிறாய்..?” என்றான் ரோஹித்..
“இல்ல மதுவை முதலில் பார்த்த பொழுது நீ எப்படி இருந்தாயோ அதே போலதான் இப்பொழுது இருக்கிறாய்..” என்று கூறினான் அருண்..
“நான் எப்பொழுதும் இப்படித்தான் இருப்பேன்.. நான் எங்கே இருந்தாலும் என்னோட மனது மதுவை விட்டு நகராது..” என்று கூறியவன்,
“இப்பொழுது அந்த வாசுதேவனைப் பிடிக்க நான் உன்னிடம் போலீஸ் கம்ப்ளைன்ட் தருகிறேன்..” என்று சொல்லவும், அவனை கேள்வியாக பார்த்தது இப்பொழுது அருணின் முறையானது..
அவனின் எதிரே அமர்ந்திருந்த ரோஹித் எழுந்து சென்று ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்துக் கொண்டே அருணிடம், “மதுவைக் கத்தியால் குத்திவிட்டான் வாசுதேவன்.. அவளை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன் அருண்..” என்று உண்மையைச் சொன்னவன் கண்கள் இரண்டும் கலங்க, அவனின் அருகில் சென்ற அருண்,
அந்த அதிர்ச்சியைத் தாங்கிய ரோஹித், “இவளின் இத்தனை நாள் உழைப்பு வீணாகக் கூடாது.. இதில் நான் வந்தால் இந்த தகவல் அனைத்தையும் நான் தேடிக் கண்டுபிடித்தது போல ஆகும்..” என்று யோசிக்க ஆரமித்தான்..
அவளின் செல்லில் வீடியோ பதிவைப் பார்க்க அதில் அவள் கோவிலுக்கு செல்லும் முன்னர் ஆன் செய்த வீடியோ பதிவை கடைசி நொடியில் ரெகார்ட் செய்திருந்தாள்..
அவளின் செல்லில் இருந்து அருணிற்கு அழைத்தான் ரோஹித்.. மதுவின் அழைப்பைப் பார்த்த அருண், “மதுமிதா எங்கே இருக்கிறாய்..? வீட்டில் இருக்கிறாயா..? இல்லை நீ சொன்ன அந்த ஹோட்டலில் இருக்கிறாயா..?!” என்று கேள்விகளை அடுக்கினான் அருண்..
அவனின் கேள்விகளை கேட்டவன், “ஹலோ அருண் நான் ரோஹித் பேசுகிறேன்..” என்று சொல்லவும் அருணிற்கு ஒன்றும் புரியவில்லை..
முதலில் புரியாமல் விழித்தவன், “டேய் ரோஹித் நீ எப்பொழுது வெளிநாட்டில் இருந்து வந்தாய்..?! நீ எப்படி மதுவின் செல்லில் பேசுகிறாய்..? மதுமிதா எங்கே..?” என்று கேட்டான்..
அவனின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், “நீ இப்பொழுது எங்கே இருக்கிறாய்..?” என்று கேட்டான்
“நான் இப்பொழுது மதுவின் வீட்டின் முன்னே நிற்கிறேன்..” என்று பதில் சொல்ல மணியைப் பார்த்த ரோஹித், அதில் இரவு 11.3௦ என்று காட்டியது..
“நான் மதுவின் வீட்டில் தான் இருக்கிறேன் அருண்..” என்று சொன்னவன் அழைப்பை வைக்க, வீட்டின் உள்ளிருந்து வந்து கதவைத் திறந்தாள் எஸ்தர்..
“வாங்க தம்பி..” என்று அழைத்தவளுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவன், “ரோஹித் வீட்டில் இருக்கிறானா..?!” என்று கேட்டான்..
“ஆமாம் தம்பி.. அந்த தம்பி வீட்டின் உள்ளே தான் இருக்கிறார்..” என்று சொல்லவும், மதுவின் வீட்டை நோக்கி நடந்தான் அருண்..
அவன் வாசலுக்கு வந்து காலின்பெல் அடிக்கும் முன்னாடியே கதவைத் திறந்தான் ரோஹித்.. அவன் கதவைத் திறந்ததும் உள்ளே சென்றவன்,
“ரோஹித் நீ எப்படி இங்கே..?!” என்று கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் கதவை சாத்தியவன், “நான் இங்கே வந்து அதாவது வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து ஒருவாரம் ஆகிறது..” என்று கூறினான்..
அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு சிலையென நின்றான் அருண்.. “என்ன அருண் சிலையாகி நிற்கிறாய்..?! நான் வந்த தகவல் உனக்கு தெரியாதா..?” என்று சந்தேகமாகக் கேட்டான் ரோஹித்
“எனக்கு தெரியாது ரோஹித்..” என்று கூறியவன் சோபாவில் அமர, அவனின் எதிரே அமர்ந்த ரோஹித் அவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தான்
“டேய் எனக்கு தெரியாமல் இத்தனை விஷயம் நடந்திருக்கிறது.. எனக்கு சொல்ல வேண்டும் என்று உங்கள் யாருக்குமே தெரியலையா..?!” என்று கேட்டான்
“யாருக்கு உனக்கா ரோஹித்.. இங்கே வரும் வரையில் மதுவைப் பற்றி எனக்கே தெரியாது..” என்று சொன்னவனை நம்பாமல் பார்த்தான் ரோஹித்..
“என்னை நம்புடா.. அவளுக்கு ஆக்சிடன்ட் என்று கயலின் மூலம் தெரியும் வரையில் அவள் எங்கே இருக்கிறாள் என்று எனக்கு தெரியாது ரோஹித்.. அவளுக்கு ஆக்சிடன்ட் ஆனது தெரிந்து தான் நான் இங்கே வந்தேன்..” என்று சொன்னவன் ரோஹித்தைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தான்..
“மது எனக்கு சொன்ன முதல் விஷயம் இது ஆக்சிடன்ட் இல்ல அண்ணா இது ஒரு திட்டமிட்ட கொலை இதைப் பற்றி மெல்ல விசாரித்து சொல்லு..” என்று மட்டும் சொன்னாள்..
அவன் சொல்லியதைக் கேட்ட ரோஹித், “மது எப்படி எங்கள் தாத்தாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்..?!” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்
“உன்னோட தாத்தாவிற்கு எல்ல விஷயமும் தெரியும் ரோஹித்..” என்று அவனுக்கு பதில் கொடுத்தான் அருண்..
“அவருக்கு எப்படித் தெரியும்.. அதுவும் கயல்விழி வரையில் தெரிந்து வைத்திருக்கிறார்..?” என்று சந்தேகமாகக் கேட்டவனின் முகம் பார்த்த அருண்,
“நீ மதுமிதா பற்றி சொல்லியதும், நீ படிப்பை முடித்துவிட்டு வெளிநாடு செல்லும் வரையிலும் அமைதியாக இருந்தவர், எனது மூலமாக கயல்விழியிடம் பேசி அந்த வீட்டில் மதுவின் நடவடிக்கை என்ன..? என்பதைக் கண்காணிக்க ஆரமித்தார்..
நீ வெளிநாடு சென்ற பிறகு, சக்திவேல் காதல் திருமணம் செய்தது உறவினர் மூலமாக அவர்க்கு தெரிந்து அவனைக் கண்காணிக்கும் பொழுது மறுபடியும் அவர்களின் வாழ்க்கை வட்டத்திற்கு வந்தாள் மதுமிதா..
மதுமிதா மூலம் எந்த தகவலும் தெரியாது என்பதால் கயல்விழியிடம் கேட்டு எல்லா விசயத்தையும் தெரிந்துக் கொள்வார்.. அந்த நேரத்தில் தான் அபூர்வா பிறந்தாள்..
அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நினைத்த பொழுதுதான் இந்த விபத்து நிகழ்ந்தது.. இந்த விசயமும் கயலின் மூலம் தெரிந்துக் கொண்டவர் மதுவையும் அபூர்வாவையும் தன்னுடைய பாதுக்காப்பில் வைக்க நினைத்தார்..” என்று அவன் சொல்லிக் கொண்டே வர, அவனை இடைமறித்த ரோஹித்,
“இந்த விஷயம் அனைத்தும் தாத்தாவிற்கு தெரியுமா..?!” என்று கேட்டான் ரோஹித்.. இல்லையென்று தலையசைத்தான் அருண்..
“அது ஒரு விபத்து என்பது மட்டும் தான் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அது கொலை என்று யாருக்கும் தெரியாது.. ஏன் இந்த விஷயம் ரஞ்சித்திற்கு கூட தெரியாது..” என்று சொன்னவன்,
“உன்னோட தாத்தா எனக்கு அழைத்து மதுவிற்கு அங்கே ஒரு வேலை இருப்பதாக சொல்லி இங்கே அனுப்பிவிடு என்று சொன்னார்.. நானும் அவளிற்கு பாதுக்காப்பான இடம் வேண்டும் என்று அங்கே அனுப்பி வைத்தேன்.. அதன்பிறகு தான் மதுவிடம் இருக்கும் குழந்தை உன்னோட அண்ணாவின் குழந்தை என்பதே எனக்கு தெரியும்..” என்று அவன் சொல்லி முடித்தான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த ரோஹித், “அருண் இந்த கேசை டீல் பண்ணுவது நீயா..?” என்று நேரடியாகக் கேட்டான்..
“இல்ல ரோஹித் மதுமிதா கோர்ட்டில் மனு தாக்கல் பண்ணியிருக்கிறாள்.. இன்னும் ஒரு வாரத்தில் கேஸ் விசாரணை நடக்கும்..” என்று சொல்ல அருண் ஒரு சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்..
அவனுக்கு எதிரே அமர்ந்த ரோஹித், “அவளிடம் அனைத்து ரெகார்டும் சரியாக இருக்கிறது..” என்று சொன்னவன் வீட்டின் உள்ளே சென்று சில பேப்பரை எடுத்து வந்தான்.
அதற்குள் வீட்டைப் பார்த்த அருண், “ரோஹித் மதுமிதா எங்கே..?” என்று கேட்டான்.. அவளைப் பற்றிக் கேட்ட அருணிற்கு,
“நான் சொல்கிறேன் அருண் இப்பொழுது இதில் எல்லாம் சரியாக இருக்கிறது.. ஆனால் இந்த கேஸ் கோர்டில் வெற்றியடைய மதுமிதா திருமணம் ஆனவள் என்ற ஆதாரம் வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் கேசை உடைக்க முடியாது..” என்று சொல்லவும்,
“அவளின் திருமண ஆதாரம் எதுக்கு ரோஹித்..?!” என்று புரியாமல் கேட்டான் அருண்..
“அபூர்வா அவளிடம் வளர, அவள் திருமணம் ஆனவளாக இருக்க வேண்டும்.. கணவன் மனைவியாக இருந்தால் மட்டும் தான் அபூர்வா நம்மிடம் இருப்பாம்.. கேஸ் நமது பக்கம் தீர்ப்பாகும்.. என்னோட அண்ணியின் தாத்தா எழுதிய உயிலில் அப்படிதான் இருக்கிறது..” என்று சொன்னவன் ஆதாரத்தைக் காட்டினான்..
அருணிற்கு அவனைப் பார்த்து திகைப்பாக இருந்தது.. அவனின் பார்வை உணர்ந்து அவனைப் புருவம் உயர்த்திக் கேள்வியாகப் பார்த்தான் ரோஹித்..
“என்னடா இப்படி பார்க்கிறாய்..?” என்றான் ரோஹித்..
“இல்ல மதுவை முதலில் பார்த்த பொழுது நீ எப்படி இருந்தாயோ அதே போலதான் இப்பொழுது இருக்கிறாய்..” என்று கூறினான் அருண்..
“நான் எப்பொழுதும் இப்படித்தான் இருப்பேன்.. நான் எங்கே இருந்தாலும் என்னோட மனது மதுவை விட்டு நகராது..” என்று கூறியவன்,
“இப்பொழுது அந்த வாசுதேவனைப் பிடிக்க நான் உன்னிடம் போலீஸ் கம்ப்ளைன்ட் தருகிறேன்..” என்று சொல்லவும், அவனை கேள்வியாக பார்த்தது இப்பொழுது அருணின் முறையானது..
அவனின் எதிரே அமர்ந்திருந்த ரோஹித் எழுந்து சென்று ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்துக் கொண்டே அருணிடம், “மதுவைக் கத்தியால் குத்திவிட்டான் வாசுதேவன்.. அவளை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன் அருண்..” என்று உண்மையைச் சொன்னவன் கண்கள் இரண்டும் கலங்க, அவனின் அருகில் சென்ற அருண்,