அத்தியாயம் – 35
இவர்கள் இப்படி இருக்க அங்கே சென்னையில் காலையிலேயே கடலின் முன்னே நின்று அன்றைய நாளை ரசித்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.. அவள் ஜீவாவை வரச்சொல்லி இருக்க அவன் இன்னும் வரவில்லை என்பதால் கோபத்தில் நின்றிருந்தாள்..
அவளுக்கு அதிகம் கோபத்தைக் கொடுக்காமல் வந்து சேர்ந்தான் ஜீவா.. அவன் வந்தும், அவனை திரும்பிப் பார்த்தவள், “என்ன ஜீவா இவ்வளவு லேட்..?” என்று கேட்டதும்,
“நீ எதுக்கு என்னை இங்கே வரச்சொன்னாய்..?” என்று நேரடியாகக் கேட்டான் ஜீவா. அவனது கேள்வியில் இருந்தது கடமையா..? வெறுப்பா..? விருப்பமின்மையா என்பதை பிரித்தறிய முடியவில்லை கயல்விழியால்
“எங்கள் வீட்டில் நம்முடைய திருமணத்திற்கு ஓகே சொல்லிட்டாங்க.. ஆனால் என்னோட அக்காவை நீ தவறாக பேசியது இன்னும் அப்படியே இருக்கிறது..” என்று கயல்விழி அவனைப் பார்த்துக் கூறினாள்..
அவளின் முதல் வாக்கியம் கேட்டு அவனின் முகம் மலரும் என்று எதிர்பார்த்த கயல்விழி ஏமாந்துதான் போனாள்.. அவனது முகத்தில் கொஞ்சம் இருந்த புன்னகையும் மறைந்தது..
‘நான் சொன்னதைக் கேட்டு சந்தோசம் இல்லையா..?’ என்று மனதில் வருத்தத்தோடு நினைத்தாள் கயல்விழி..
அவளின் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பு மறைவதைப் பார்த்தவன் மனமும் வலித்தது.. ஆனால் அந்த வலியைத் தனக்குள்ளே மறைத்துக் கொண்டான் ஜீவா..
அதற்கு காரணம் அவன் அவள் மீது வைத்த காதலே..! அவள் கொண்ட காதல் எப்படி என்று அவனுக்கு தெரியாது.. ஏன் என்றால் இவர்கள் இருவரும் இன்னமும் காதலைச் சொல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்..
குற்றாலம் செல்லும் பொழுது அவனுக்கு இருந்த நம்பிக்கை திரும்ப வந்த பிறகு அவனிடம் இல்லை.. கயலின் வீட்டிற்கு தன்னுடைய தாய், தந்தை சென்று பெண் கேட்டதை நினைத்து சந்தோசப்பட்டான்..
ஆனால் அவன் வீட்டிற்கு வந்த அன்று அவனின் அப்பா அம்மா பேசிக்கொண்டதைக் கேட்டு அவனின் அடிவயிற்றில் பகிர்றேன்றது.. காரணம் கயல்விழி உயிராக நினைக்கும் அக்காவை அவனின் அப்பா அம்மா தவறாகப் பேசிக்கொண்டிருந்தனர்..
அப்பொழுதே முடிவு செய்துவிட்டான் இந்த திருமணம் நடக்காது என்று.. இவர்கள் பெருந்தன்மையுடன் கயல்விழியை ஏற்றுக் கொண்டாலுமே, மற்றவர்கள் தவறாக பேசுவதை நிறுத்தவும் மாட்டார்கள்..
இவளும் மற்றவர்களிடம் சண்டை போடாமல் இருக்க மாட்டாள்.. இதனால் தினமும் வீட்டில் சண்டைதான் நடக்கும் காலப்போக்கில் அது பெரிதாக மாறினால், பாதிக்கப்படுவது இவர்கள் வாழ்க்கைதான் என்பதை சரியாக கணித்தவன் யோசனையில் ஆழ்ந்தான்..
“உன்னோட அக்காவை தப்பாக பேசியது என்னோட தவறுதான்.. என்னை மன்னித்துவிடு!” என்று கயலிடம் மன்னிப்பு கேட்டான் ஜீவா..
அவன் மன்னிப்புக் கேட்டதும் கயலிற்கு மனதை என்னமோ செய்தது.. அவளின் முகத்தைப் பார்க்காமல் மணலில் அமர்ந்தவனைப் பார்த்து அவள் கேள்வியாக புருவம் உயர்த்த, “நீயும் வந்து உட்காரு..” என்று கூறினான்
அவள் எதுவும் பேசாமல் இரண்டடி இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்தாள் கயல்விழி.. அவனின் முகத்தைப் பார்க்க, அவன் ஏதோ பலத்த யோசனையில் இருந்தான்..
“என்னடா என்னமோ யோசிப்பது போல தெரிகிறது..?” என்று கேட்டாள் கயல்விழி.. அதுக்கும் காரணம் இருந்தது அவனின் மௌனம் அவளை என்னமோ செய்தது..
“முதலில் நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..” என்று கூறியவன், அவளின் முகத்தைப் பார்க்க அவள் திகைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்...
“எதுக்கு மன்னிப்பு என்று தானே யோசிக்கிறாய்..?” என்று கேட்டதும் அவளின் கட்டளை இன்றி அவளின் தலை தானாக அசைந்து ஆமாம் என்றது..
“எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை..” என்று அவளின் தலையில் இடியை இறக்கினான் ஜீவா.. அவளின் காதுகளையே அவளால் நம்பமுடியவில்லை..
“ஜீவா நீ என்ன சொல்கிறாய்..?!” என்று அதிர்ச்சியில் மீண்டும் கேட்டாள்
“எனக்கு இந்த திருமணத்தில் இஸ்டம் இல்லை கயல்விழி.. இந்த திருமணத்தை நிறுத்திவிடலாம்..” என்று அவன் சொன்னதைக்கேட்டு அவளிற்கு தலை சுற்றியது!
“எதுக்கு ஜீவா என்னை வேண்டாம் என்று சொல்கிறாய்..? நான் என்ன தப்பு செய்தேன்..?” என்று குழந்தை போல கண்கலங்க கேட்டவளைப் பார்த்து அவனின் மனம் கதறியது..
“உன்னோட அக்காவைத் தானே நீ இன்னமும் உயிராக விரும்புகிறாய்.. அதுதான் பிரச்சனை..?!” என்று நேரடியாக பதில் சொன்னவன் ஜீவா..
“என்னோட அக்காவை நான் விரும்புவது தவறா..? அதற்கும் நம்முடைய திருமணத்திற்கும் என்ன சம்மந்தம்..?” என்று கேட்டாள் கயல்விழி..
“உன்னோட அக்காவைத் தவறாக பேசினாள் உனக்கு பிடிக்காது.. உன்னை முழுவதும் புரிந்ததால் நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தாலும் மற்றவர்கள் ஏதாவது சொல்ல, அது நம்முடைய திருமண வாழ்க்கையைப் பாதிக்கும் கயல்விழி..” என்றவன், அவள் ஏதோ சொல்ல வர அவளைக் கைநீட்டித் தடுத்தவன்,
“நான் சொல்லி முடித்து விடுக்கிறேன்..” என்றவன் அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடந்தான்..
“உன்னோட பாசத்தால் பாதிக்கபடுவது நாம் மட்டும் இல்லை.. என்னோட அப்பா, அம்மாவின் நிம்மதி, அவங்களின் சந்தோசம் எல்லாம் தான்..” என்று சொன்னவன்,
“நாளைக்கே உன்னோட அக்காவை என்னோட அம்மா தவறாக பேசினால், நீ அதுக்கு பதில் கொடுப்பாய்.. என்னோட அம்மாவும் அதற்கு பதிலுக்கு பதில் கொடுப்பார்கள்.. அப்புறம் வீடு வீடாக இருக்காது கயல்..” என்று சொல்லவும், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,
“போதும் ஜீவா..” என்று சொல்லியவளை அவன் இடைமறிக்க, “நீ சொன்னது அனைத்தையும் நான் பொறுமையாக கேட்டேன் இல்லையா..?” என்று கேட்டதும் ஆம் என்று தலையசைத்தான்
“இப்பொழுது நான் சொல்வதை நீ கொஞ்சம் பொறுமையாகக் கேளு..” என்று சொன்னவள் தொடர்ந்தாள்..
“என்னால் உன்னோட நிம்மதி போய்விடும் என்று நினைக்கவில்லை.. என்னோட அக்காவின் பாசம், நம்ம திருமண வாழ்க்கைக்கு எதிரியாக மாறிவிடும் என்று நினைக்கிறாய்..” என்று அவள் நேரடியாகக் கேட்டாள்..
அவளின் கேள்வியில் அவன் ஆம் என்று தலையசைக்க, “அவளை எந்த அளவிற்கு விரும்புகிறேனோ அந்த அளவை விட உன்னை அதிகமாகக் காதலிக்கிறேன் ஜீவா..” என்று சொல்லியவள்,
“லூசு மாதிரி அக்கா அக்கா என்று பைத்தியமாக இருக்கிறாள் என்று நீ நினைக்கிறாய்.. நல்ல இருப்பவர்களுக்கு கூட யோசிக்கும் திறன் இருக்கும்.. என்னை போல விளையாட்ட இருக்கும் பெண்கள் தான் அதிகம் சென்சிடிவாக இருப்பார்கள்..” என்று சொன்னவள் வார்த்தைகள் இல்லாமல் கண்களில் கண்ணீர் வழிய,
“உனக்கு என்னோட காதல் விளையாட்டு போல ஜீவா.. நான் உன்னை எந்த அளவு காதலிக்கிறேன் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது..” என்று சொன்னவளின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,
“இந்த கண்ணீர் வேற நேரம் கேட்ட நேரத்தில் வரும்.. பசங்களுக்கு பொண்ணுங்க அழுதே காரியத்தை சாதிக்கின்றனர் என்று சொல்வதற்கு வசதியாக இருப்பதற்கு வருகிறது..” என்று சொன்னவளைப் பார்த்தவன் மனது,
‘இதுதான் தனது நெஞ்சை குத்துகிறது என்று அவனால் சொல்ல முடியவில்லை.. ஏன் என்றால் பெண்களின் காதலை முள் என்று சொல்கின்றனர்.. மலர் என்றும் மயங்குகின்றனர்..’
‘ஒரு பெண்ணின் மனதை புரிந்தவனிற்கு அவளின் மனது மலர் போன்றது.. அவளைப் புரியாதவனுக்கு அவளின் மனது முள் போன்றது.. முள்ளையும் மலராக மாற்ற காதலால் முடியும்.. மலரையும் முள்ளாக மாற்றவும் இந்த காதலால் முடியும்’
இப்பொழுது கயல்விழி முள்ளாக இருக்கிறாளா..? இல்லை மலராக இருக்கிறாளா..? என்று நினைத்துக் கொண்டிருந்தான்.. அவனின் நினைவுகளைக் கலைத்தது அவளின் வார்த்தைகள்..
“எல்லாத்தையும் விளையாட்டாக எடுத்த என்னால் உன்னோட காதலை விளையாட்டாக எடுக்க முடியவில்லை.. மது இருக்கும் இடத்தை நான் ரஞ்சித்திற்கு கூட இந்நாள் வரையில் சொன்னது கிடையாது..” என்று கூறியவள்,
“உன்னை அங்கே அழைத்துச் சென்றேன் காரணம்.. எனக்கு இவனைப் பிடித்திருக்கிறது.. என்னோட அக்காவிற்கும் இவனைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக!” என்று சொன்னவள் அவனின் திகைத்த விழிகளைப் பார்த்து புன்னகை பூத்தாள்..
அந்த புன்னகையில் உயிர்ப்பே இல்லை.. அவளின் முகம் பார்த்தவன், “கயல்விழி நீ இப்படி சிரிக்காதே எனக்கு மனம் வலிக்கிறது..” என்று அவளிடம் கூறிவிட்டான் ஜீவா..
“உனக்கு வலிக்கும் என்பதற்காக நான் புன்னகைக்காமல் இருக்க முடியாது ஜீவா..” என்று விரக்தியாகக் கூறியவள் தொடர்ந்தாள்..
“என்னோட அக்கா நட்பிற்கு கொடுத்த மரியாதை விட ரோஹித் மேல் வைத்திருந்த காதல் தான் அதிகம்.. என்னோட அக்கா அமைதியாக இருந்தாள்.. அதுக்கு அவள் காதலிக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா..?” என்று கேட்டதும் அவளின் கேள்வியில் இருந்த நியாயம் அவனுக்கு புரிந்தது..
“எங்கக்காவை உன்னோட வீட்டில் யாரும் தவறாக பேசாம மாட்டார்கள் என்றால் நமக்குள் எதற்கு பிரச்சனை வரப்போகிறது..” என்று சொன்னாள் கயல்விழி..
“நீ புரியாமல் பேசுகிறாய் கயல்விழி..” என்று சொல்லவும், அவனை கைநீட்டித் தடுத்தவள்,
இவர்கள் இப்படி இருக்க அங்கே சென்னையில் காலையிலேயே கடலின் முன்னே நின்று அன்றைய நாளை ரசித்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.. அவள் ஜீவாவை வரச்சொல்லி இருக்க அவன் இன்னும் வரவில்லை என்பதால் கோபத்தில் நின்றிருந்தாள்..
அவளுக்கு அதிகம் கோபத்தைக் கொடுக்காமல் வந்து சேர்ந்தான் ஜீவா.. அவன் வந்தும், அவனை திரும்பிப் பார்த்தவள், “என்ன ஜீவா இவ்வளவு லேட்..?” என்று கேட்டதும்,
“நீ எதுக்கு என்னை இங்கே வரச்சொன்னாய்..?” என்று நேரடியாகக் கேட்டான் ஜீவா. அவனது கேள்வியில் இருந்தது கடமையா..? வெறுப்பா..? விருப்பமின்மையா என்பதை பிரித்தறிய முடியவில்லை கயல்விழியால்
“எங்கள் வீட்டில் நம்முடைய திருமணத்திற்கு ஓகே சொல்லிட்டாங்க.. ஆனால் என்னோட அக்காவை நீ தவறாக பேசியது இன்னும் அப்படியே இருக்கிறது..” என்று கயல்விழி அவனைப் பார்த்துக் கூறினாள்..
அவளின் முதல் வாக்கியம் கேட்டு அவனின் முகம் மலரும் என்று எதிர்பார்த்த கயல்விழி ஏமாந்துதான் போனாள்.. அவனது முகத்தில் கொஞ்சம் இருந்த புன்னகையும் மறைந்தது..
‘நான் சொன்னதைக் கேட்டு சந்தோசம் இல்லையா..?’ என்று மனதில் வருத்தத்தோடு நினைத்தாள் கயல்விழி..
அவளின் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பு மறைவதைப் பார்த்தவன் மனமும் வலித்தது.. ஆனால் அந்த வலியைத் தனக்குள்ளே மறைத்துக் கொண்டான் ஜீவா..
அதற்கு காரணம் அவன் அவள் மீது வைத்த காதலே..! அவள் கொண்ட காதல் எப்படி என்று அவனுக்கு தெரியாது.. ஏன் என்றால் இவர்கள் இருவரும் இன்னமும் காதலைச் சொல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்..
குற்றாலம் செல்லும் பொழுது அவனுக்கு இருந்த நம்பிக்கை திரும்ப வந்த பிறகு அவனிடம் இல்லை.. கயலின் வீட்டிற்கு தன்னுடைய தாய், தந்தை சென்று பெண் கேட்டதை நினைத்து சந்தோசப்பட்டான்..
ஆனால் அவன் வீட்டிற்கு வந்த அன்று அவனின் அப்பா அம்மா பேசிக்கொண்டதைக் கேட்டு அவனின் அடிவயிற்றில் பகிர்றேன்றது.. காரணம் கயல்விழி உயிராக நினைக்கும் அக்காவை அவனின் அப்பா அம்மா தவறாகப் பேசிக்கொண்டிருந்தனர்..
அப்பொழுதே முடிவு செய்துவிட்டான் இந்த திருமணம் நடக்காது என்று.. இவர்கள் பெருந்தன்மையுடன் கயல்விழியை ஏற்றுக் கொண்டாலுமே, மற்றவர்கள் தவறாக பேசுவதை நிறுத்தவும் மாட்டார்கள்..
இவளும் மற்றவர்களிடம் சண்டை போடாமல் இருக்க மாட்டாள்.. இதனால் தினமும் வீட்டில் சண்டைதான் நடக்கும் காலப்போக்கில் அது பெரிதாக மாறினால், பாதிக்கப்படுவது இவர்கள் வாழ்க்கைதான் என்பதை சரியாக கணித்தவன் யோசனையில் ஆழ்ந்தான்..
“உன்னோட அக்காவை தப்பாக பேசியது என்னோட தவறுதான்.. என்னை மன்னித்துவிடு!” என்று கயலிடம் மன்னிப்பு கேட்டான் ஜீவா..
அவன் மன்னிப்புக் கேட்டதும் கயலிற்கு மனதை என்னமோ செய்தது.. அவளின் முகத்தைப் பார்க்காமல் மணலில் அமர்ந்தவனைப் பார்த்து அவள் கேள்வியாக புருவம் உயர்த்த, “நீயும் வந்து உட்காரு..” என்று கூறினான்
அவள் எதுவும் பேசாமல் இரண்டடி இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்தாள் கயல்விழி.. அவனின் முகத்தைப் பார்க்க, அவன் ஏதோ பலத்த யோசனையில் இருந்தான்..
“என்னடா என்னமோ யோசிப்பது போல தெரிகிறது..?” என்று கேட்டாள் கயல்விழி.. அதுக்கும் காரணம் இருந்தது அவனின் மௌனம் அவளை என்னமோ செய்தது..
“முதலில் நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..” என்று கூறியவன், அவளின் முகத்தைப் பார்க்க அவள் திகைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்...
“எதுக்கு மன்னிப்பு என்று தானே யோசிக்கிறாய்..?” என்று கேட்டதும் அவளின் கட்டளை இன்றி அவளின் தலை தானாக அசைந்து ஆமாம் என்றது..
“எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை..” என்று அவளின் தலையில் இடியை இறக்கினான் ஜீவா.. அவளின் காதுகளையே அவளால் நம்பமுடியவில்லை..
“ஜீவா நீ என்ன சொல்கிறாய்..?!” என்று அதிர்ச்சியில் மீண்டும் கேட்டாள்
“எனக்கு இந்த திருமணத்தில் இஸ்டம் இல்லை கயல்விழி.. இந்த திருமணத்தை நிறுத்திவிடலாம்..” என்று அவன் சொன்னதைக்கேட்டு அவளிற்கு தலை சுற்றியது!
“எதுக்கு ஜீவா என்னை வேண்டாம் என்று சொல்கிறாய்..? நான் என்ன தப்பு செய்தேன்..?” என்று குழந்தை போல கண்கலங்க கேட்டவளைப் பார்த்து அவனின் மனம் கதறியது..
“உன்னோட அக்காவைத் தானே நீ இன்னமும் உயிராக விரும்புகிறாய்.. அதுதான் பிரச்சனை..?!” என்று நேரடியாக பதில் சொன்னவன் ஜீவா..
“என்னோட அக்காவை நான் விரும்புவது தவறா..? அதற்கும் நம்முடைய திருமணத்திற்கும் என்ன சம்மந்தம்..?” என்று கேட்டாள் கயல்விழி..
“உன்னோட அக்காவைத் தவறாக பேசினாள் உனக்கு பிடிக்காது.. உன்னை முழுவதும் புரிந்ததால் நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தாலும் மற்றவர்கள் ஏதாவது சொல்ல, அது நம்முடைய திருமண வாழ்க்கையைப் பாதிக்கும் கயல்விழி..” என்றவன், அவள் ஏதோ சொல்ல வர அவளைக் கைநீட்டித் தடுத்தவன்,
“நான் சொல்லி முடித்து விடுக்கிறேன்..” என்றவன் அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடந்தான்..
“உன்னோட பாசத்தால் பாதிக்கபடுவது நாம் மட்டும் இல்லை.. என்னோட அப்பா, அம்மாவின் நிம்மதி, அவங்களின் சந்தோசம் எல்லாம் தான்..” என்று சொன்னவன்,
“நாளைக்கே உன்னோட அக்காவை என்னோட அம்மா தவறாக பேசினால், நீ அதுக்கு பதில் கொடுப்பாய்.. என்னோட அம்மாவும் அதற்கு பதிலுக்கு பதில் கொடுப்பார்கள்.. அப்புறம் வீடு வீடாக இருக்காது கயல்..” என்று சொல்லவும், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,
“போதும் ஜீவா..” என்று சொல்லியவளை அவன் இடைமறிக்க, “நீ சொன்னது அனைத்தையும் நான் பொறுமையாக கேட்டேன் இல்லையா..?” என்று கேட்டதும் ஆம் என்று தலையசைத்தான்
“இப்பொழுது நான் சொல்வதை நீ கொஞ்சம் பொறுமையாகக் கேளு..” என்று சொன்னவள் தொடர்ந்தாள்..
“என்னால் உன்னோட நிம்மதி போய்விடும் என்று நினைக்கவில்லை.. என்னோட அக்காவின் பாசம், நம்ம திருமண வாழ்க்கைக்கு எதிரியாக மாறிவிடும் என்று நினைக்கிறாய்..” என்று அவள் நேரடியாகக் கேட்டாள்..
அவளின் கேள்வியில் அவன் ஆம் என்று தலையசைக்க, “அவளை எந்த அளவிற்கு விரும்புகிறேனோ அந்த அளவை விட உன்னை அதிகமாகக் காதலிக்கிறேன் ஜீவா..” என்று சொல்லியவள்,
“லூசு மாதிரி அக்கா அக்கா என்று பைத்தியமாக இருக்கிறாள் என்று நீ நினைக்கிறாய்.. நல்ல இருப்பவர்களுக்கு கூட யோசிக்கும் திறன் இருக்கும்.. என்னை போல விளையாட்ட இருக்கும் பெண்கள் தான் அதிகம் சென்சிடிவாக இருப்பார்கள்..” என்று சொன்னவள் வார்த்தைகள் இல்லாமல் கண்களில் கண்ணீர் வழிய,
“உனக்கு என்னோட காதல் விளையாட்டு போல ஜீவா.. நான் உன்னை எந்த அளவு காதலிக்கிறேன் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது..” என்று சொன்னவளின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,
“இந்த கண்ணீர் வேற நேரம் கேட்ட நேரத்தில் வரும்.. பசங்களுக்கு பொண்ணுங்க அழுதே காரியத்தை சாதிக்கின்றனர் என்று சொல்வதற்கு வசதியாக இருப்பதற்கு வருகிறது..” என்று சொன்னவளைப் பார்த்தவன் மனது,
‘இதுதான் தனது நெஞ்சை குத்துகிறது என்று அவனால் சொல்ல முடியவில்லை.. ஏன் என்றால் பெண்களின் காதலை முள் என்று சொல்கின்றனர்.. மலர் என்றும் மயங்குகின்றனர்..’
‘ஒரு பெண்ணின் மனதை புரிந்தவனிற்கு அவளின் மனது மலர் போன்றது.. அவளைப் புரியாதவனுக்கு அவளின் மனது முள் போன்றது.. முள்ளையும் மலராக மாற்ற காதலால் முடியும்.. மலரையும் முள்ளாக மாற்றவும் இந்த காதலால் முடியும்’
இப்பொழுது கயல்விழி முள்ளாக இருக்கிறாளா..? இல்லை மலராக இருக்கிறாளா..? என்று நினைத்துக் கொண்டிருந்தான்.. அவனின் நினைவுகளைக் கலைத்தது அவளின் வார்த்தைகள்..
“எல்லாத்தையும் விளையாட்டாக எடுத்த என்னால் உன்னோட காதலை விளையாட்டாக எடுக்க முடியவில்லை.. மது இருக்கும் இடத்தை நான் ரஞ்சித்திற்கு கூட இந்நாள் வரையில் சொன்னது கிடையாது..” என்று கூறியவள்,
“உன்னை அங்கே அழைத்துச் சென்றேன் காரணம்.. எனக்கு இவனைப் பிடித்திருக்கிறது.. என்னோட அக்காவிற்கும் இவனைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக!” என்று சொன்னவள் அவனின் திகைத்த விழிகளைப் பார்த்து புன்னகை பூத்தாள்..
அந்த புன்னகையில் உயிர்ப்பே இல்லை.. அவளின் முகம் பார்த்தவன், “கயல்விழி நீ இப்படி சிரிக்காதே எனக்கு மனம் வலிக்கிறது..” என்று அவளிடம் கூறிவிட்டான் ஜீவா..
“உனக்கு வலிக்கும் என்பதற்காக நான் புன்னகைக்காமல் இருக்க முடியாது ஜீவா..” என்று விரக்தியாகக் கூறியவள் தொடர்ந்தாள்..
“என்னோட அக்கா நட்பிற்கு கொடுத்த மரியாதை விட ரோஹித் மேல் வைத்திருந்த காதல் தான் அதிகம்.. என்னோட அக்கா அமைதியாக இருந்தாள்.. அதுக்கு அவள் காதலிக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா..?” என்று கேட்டதும் அவளின் கேள்வியில் இருந்த நியாயம் அவனுக்கு புரிந்தது..
“எங்கக்காவை உன்னோட வீட்டில் யாரும் தவறாக பேசாம மாட்டார்கள் என்றால் நமக்குள் எதற்கு பிரச்சனை வரப்போகிறது..” என்று சொன்னாள் கயல்விழி..
“நீ புரியாமல் பேசுகிறாய் கயல்விழி..” என்று சொல்லவும், அவனை கைநீட்டித் தடுத்தவள்,