• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 37

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 37

கயல்விழி சுசீலாவை அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு வந்த நேராக வீட்டிற்கு வந்தாள்.. வீட்டிற்கு வந்தவளை வாசலில் வைத்தே வழிமறித்த சேகர், “என்னம்மா அந்த பையன் என்ன சொன்னான்..?!” என்று கேட்டார்..

அவரின் கேள்வியில் அவரை நிமிர்ந்துப் பாரதத் கயல்விழி, “அப்பா அவருக்கு இப்பொழுது மும்பை சொல்லும் வேலை இருப்பதால், இன்னும் இரண்டு மாதம் சென்ற பின்பு திருமணத்திற்கு நாள் குறிக்கலாம் என்று சொன்னார்..” என்று சொன்னவள்,

அவரின் முகம் மலர்வதைக் கண்டு, “உங்களின் சுயநலத்திற்கு என்னோட வாழ்க்கையை அழிக்க நினைப்பது நியாயமா..?” என்று முகத்தில் அடித்தார் போல கேட்டாள்

“நாங்க என்னம்மா தப்பு பண்ணினோம்..?” என்று கேட்டதற்கு, அவரின் முகத்தைப் பார்த்தவள், “அக்கா தான் அந்த குழந்தையைப் பெற்றால் என்று உங்களுக்கு தெரியுமா..?” என்று நேரடியாகக் கேட்டாள்.. அவளின் கேள்வியில் அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை..

அவர் எதுவும் பேசாமல் நிற்க, “அக்காவை நாம் அப்படியா அப்பா வளர்த்தோம்.. குடும்பம் ஒன்று தான் என்னோட உலகம் என்று இருந்தவளின் மனதை நோகடிக்க உங்களுக்கு எப்படி அப்பா மனது வந்தது..?” என்று கேட்டாள்.. அவர் பதில் பேசாமல் அமைதியாக நின்றார்..

“என்னப்பா உங்களின் வளர்ப்பு பற்றி உங்களுக்கே சந்தேகமா..? திருமணத்திற்கு நீங்க வரீங்களோ இல்லையோ நான் கண்டிப்பாக போய் தான் தீருவேன்..” என்று கூறியவள், வீட்டிற்குள் செல்ல, இப்பொழுது சிலையென நின்றார் சேகர்..

அவளின் கூற்றில் இருந்தே அவள் சொன்னதை செய்வாள் என்று அறிந்தார் சேகர்.. ஆனால் அமுதா இதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்..

அவளின் அறைக்குள் வந்தவள், கதவைத் தாளிட்டுவிட்டு, அப்படியே படுக்கையில் படுத்துக் கொண்டு, அமைதியாக கண்மூடினாள்.. அதன் பிறகு வந்த நாளில் அவள் அவனை விட்டு விலகி நிற்க, அது அவனுக்கு வலித்தது..

இதையெல்லாம் கவனித்த அவர்களின் கூட வேலை செய்யும் பெண் நிர்மலா, “என்ன கயல்விழி இருவருக்கும் ப்ரேக் அப் ஆகிவிட்டது போல.. இருவரும் இப்பொழுது பேசிக் கொள்வதே இல்லை..?” என்று கேட்டாள்..

“நான் உன்னிடம் சொன்னேனா எங்களுக்குள் எதுவும் இல்லை என்று..?!” கயல்விழி கேட்டதும், அவளின் முகம் வாடிப்போனது..

“யாரோட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று பார்த்து சந்தோசப்படாமல் உன்னோட வேலையை மட்டும் பாரு சரியா..? அடுத்த முறை இப்படி கேட்டால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் கயல்விழி!

கம்பெனியில் அனைவரிடமும் பேசினாலும் அவனிடம் பேசாமல் இருக்க, அவளின் வலியை விடவும் அதிகம் வலியை அனுபவித்தான் ஜீவா.. அவனின் கண்ணில் வலியைக் காண சகிக்காமல் வேலையை வேறொரு பிரான்சிற்கு மாறிவிட்டாள்

ஜீவா பற்றி முழுவதும் அறிந்து வைத்திருந்த கயல்விழி, அவனது முடிவிற்கு சம்மதித்தாள்.. அவனைப் பற்றி அறிந்ததால் இந்த இரண்டு மாத இடைவெளியை அவளே ஏற்படுத்திக் கொண்டாள்..

இரண்டு ஜோடிகள் தங்களின் பிரிவை தொடக்கி இருக்க, ரஞ்சித் கீர்த்தியின் புரிதலும், வேலைகளும் இவளின் செய்கை அவனது மனதில் சஞ்சனாவின் நினைவையே கொண்டு வந்தது

ரஞ்சித் திருமணத்திற்காக அனைத்து வேலைகளையும் செய்ய, அவனுக்கு உதவியாக சிலவேலைகளை செய்தாள் கீர்த்தி.. அவனோடு வெளியே செல்லும் பொழுது தனக்கு தேவையானவற்றை தேடி வாங்கக் கொண்டாள்.. அப்பொழுது கோவில் வழியாக வண்டியைச் செலுத்திய ரஞ்சித்தை வண்டியை நிறுத்த சொன்னாள்..

அவனும் வண்டியை நிறுத்தி, அவளை அவன் கேள்வியாகப் பார்க்க, “நான் கோவிலுக்கு போய்ட்டு வரவா..?” என்று தலையைச் சரித்துக் குழந்தை போல கேட்டாள்..

அவள் கேட்டதும், “ம்ம் போய்ட்டு வா..” என்றான்..

“நீ வரலையா..?” என்று கேட்டதற்கு, “நான் எதுக்கு உனக்குத்தான் விளக்கம் கொடுக்க விக்கிமீடியா இருக்கிறது இல்ல..” என்று அவன் நக்கலாகக் கேட்டதும்,

“என்ன ரஞ்சித் என்னை கிண்டல் செய்கிறாயா..?!” என்று கேட்டவள், வண்டியை விட்டு இறங்கிக் கோவிலுக்குள் சென்றாள்.. தஞ்சை பெரிய கோவில் உள்ளே நுழைந்தவள் அதன் பிரம்மாண்டமான கட்டிடக்கலை கண்டு வியந்து நின்றாள்..

“ஹலோ மேடம் கோவிலுக்குள் வாங்க..” என்று அழைத்தவனைத் திரும்பிப் பார்த்தவள், “என்னடா கோவிலுக்குள் எல்லாம் வருகிறாய்..?!” என்று நக்கலாகக் கேட்டதும் அவளுக்கு ஒரு கும்பிடு போட்டவன்,

“வா சாமி கும்பிடலாம்..” என்று அழைத்துச் சென்றான்.. அவனின் பின்னோடு சென்றவள், சிவன் சந்நிதானத்தில் கண்களை மூடி கரம் குவித்து வேண்டிக்கொள்ள, அதைப் பார்த்தவன் அமைதியாக கண்களை மூடி நின்றான்..

அவனின் மனம், ‘யார் இந்த கீர்த்தி.. எனக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு..? இவளைப் பார்க்கும் பொழுது எல்லாம் என்னோட சஞ்சனாவைப் பார்ப்பது போலவே இருக்கிறது.. அவளின் அதே குறும்புத்தனம், கண்டிக்கும் இடத்தில் கண்டிப்பு என்று அனைத்திலும் இருவருக்கும் எவ்வளவு ஒற்றுமை..?!’ என்று இறைவனிடம் கேட்டது

சிவனை வழி பட்டுவிட்டு சன்னிதானத்தில் இருந்து வெளியே வர, “என்ன கீர்த்தி ரொம்ப நேரமாக வேண்டினாய்..?” என்று விளையாட்டு போல கேட்டான் ரஞ்சித்..

“நானா..? ரோஹித் திருமணம் நல்லபடியாக நடக்கணும்.. அப்பா, அம்மா, தாத்தா பாட்டி, அபூக்குட்டி எல்லாம் நல்ல இருக்கணும்.. கயல்விழி, ஜீவாவின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்.. அப்புறம் நீயும் சஞ்சனாவும் சந்தோசமாக இருக்கணும் அவ்வளவுதான்..” என்றவளைப் பார்த்தவன்,

“உனக்கு எதுவுமே வேண்டிக்கொள்ளவே இல்லையா..?” என்று நேரடியாக கேட்டதும், வண்டியை நிறுத்திய இடத்திற்கு வரவே வண்டியில் அமர்ந்தவள்,

“எனக்கு என்று இருப்பது இவர்கள் மட்டும் தானே..?!” என்றவளின் வருத்தம் அவனின் மனத்தை மிகவும் பாதித்தது.. அவன் அவளைப் பார்த்துக் கொண்டே நிற்க, “ஹலோ இஞ்சி வந்து வண்டியை எடு..” என்று அழைக்க, அவனும் காரில் ஏறி வண்டியை எடுத்தான்.

வீட்டின் முன்னே வண்டியை நிறுத்தியவன் அமைதியாக இருக்க, “ரொம்ப தேங்க்ஸ் ரஞ்சித்..” என்று சொன்னவள் வீட்டின் உள்ளே சென்று மறைய, அவள் செல்லும் திசையைப் பார்த்தவன் காரை நிறுத்திவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றான்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவளின் அறைக்குள் வந்தவள் காலில் கொலுசை அணிந்துக் கொண்டு நடக்க அதில் வரும் ‘ஜல் ஜல் ஓசை..’ கேட்டு சந்தோசத்துடன் பாவாடை தாவணியை எடுத்து அணிந்தாள்

அவள் அதை அணிந்துக்கொண்டு வந்து கண்ணாடியில் முகம் பார்க்க, அவளின் உருவம் கண்டு யாருமே அவளை வெளிநாட்டில் இருந்து வந்தவள் என்று சொல்லவே மாட்டார்கள்.. அப்படியே இந்திய பெண் போலவே இருந்தாள்..

அன்று மதியம் உணவு வேலைகளை முடித்தவள், பின்னாடி இருந்த தென்னந்தோப்பில் மெல்ல நடந்தாள். அவள் கால்கள் போன போக்கில் போனவள் அங்கே ஒரு பெண்ணின் அழகிய குரல் கேட்டது..

“பூந்தென்றலே நீ பாடிவா.. பொன் மேடையில் பூ சூடாவா..” என்று பாடல் கேட்டதும் அந்த கீதம் வந்த திசையை அறிந்து ஆர்வமாக நடந்தாள்..

‘யாரோட குரல் இது..?!’ என்ற யோசனை மனதில் எழுந்தது.. அவள் வேகமாக நடக்க, பழக்கம் இல்லாத பாவாடை தாவணி, அவளின் கால்களைத் தடுக்க அதை கவனிக்காமல் வேகமாக நடக்க, ஒரு தென்னை மரத்தின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தான் ரஞ்சித்..

அவனின் அருகே பம்செட்டில் தண்ணி ஓடிக்கொண்டிருக்க, ‘இவன் எதுக்கு இங்கே தனியாக அமர்ந்திருக்கிறான்..’ என்று யோசித்தவள் அவனை நெருங்க, அவனின் கையில் இருந்த செல்லில் தான் அந்த பாடல் பாடிக்கொண்டிருந்தது..

அவளின் காலில் இருந்த கொலுசொலி கேட்டு நிமிர்ந்தவள் கண்கள் இரண்டும் சிவந்திருந்தது.. அவனின் கண்கள் சிவந்திருப்பதில் அவளின் மனது ஏதோ செய்ய, “ரஞ்சித் என்ன இங்கே அமர்ந்திருக்கிறாய்..?!” என்று கேட்டாள்.. ஆனால் அவனோ அவளைப் பார்த்தான்..

பாவாடை தாவணியில் கிராமத்து பெண் போல இருந்தாள் கீர்த்தி.. அவளின் முகம் பார்த்தவன், ‘இவள் தான் அமெரிக்காவில் பிறந்தவளா..?’ என்ற சந்தேகம் கூட எழுந்தது அவனது மனதில்!

அவளின் முகத்தைப் பார்த்தவன், “இல்ல கீர்த்தி என்னமோ போலவே இருந்தது... அதுதான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்..” என்று சொல்ல,

“யார் பாடிய பாடல் ரஞ்சித் ரொம்ப இனிமையாக இருந்தது..” என்று கேட்டதும் அவளின் கையில் மொபைலைக் கொடுத்தான் ரஞ்சித்..

ஆனால் அதை வாங்கியவள் அந்த வீடியோவைப் பார்க்காமல் திரும்பவும் அவனின் கையில் கொடுக்க அவன் அவளை கேள்வியாகப் பார்த்தான்..

“ஒருவரின் மொபைல் கூட சில நேரத்தில் பர்சனல் என்ற விசங்கள் இருக்கும்.. நாம் ஒன்றைப் பார்க்க போய் அதில் வேறொன்றைப் பார்ப்பது என்பது தவறு.. சோ நீயே அந்த விடியோவை ப்ளே பண்ணு..” என்று அவனிடம் கொடுத்தாள்..

இப்பொழுது எல்லாம் அவனின் மீது காதல் பார்வைகளை வீசுவதே இல்லை கீர்த்தி.. ‘என்னதான் தான் ஒன்றை விரும்பினாலும் அது மற்றொருவரின் சொந்தம் என்று அறியும் பொழுது விலகி நிற்பது தானே நல்லது..’ என்று விலகி நின்றுவிட்டாள்..

ரஞ்சித் எப்பொழுதும் போலவே இருந்தாலும்கூட அவனின் மனது குழப்பத்தில் சிக்கி தவித்தது.. அதற்கு காரணம் அவளின் ஒவ்வொரு செயலிலும் ஏதோ ஒரு இடத்தில் கீர்த்தியும், சஞ்சனாவும் ஒற்றுமை வந்தது..

அதில் அதிகம் மனம் குழம்பியவன், அமைதியாக தோட்டத்தில் அமர்ந்திருக்க அவனின் எதிரே வந்து நின்றாள் கீர்த்தி.. அவளுக்கு வீடியோ ப்ளே பண்ணிக் கொடுத்தவன், அவளின் முகத்தைப் பார்க்க,

அவளோ சஞ்சனாவின் தேன் குரலில் மனம் மயங்க அந்த வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் முகத்தில் இருந்த மெல்லிய புன்னகை அவனின் மனதில் முதல் காதல் சுவடாக மாறியதை அவன் அறியவில்லை..

அந்த பாடல் முடிந்ததும் நிமிர்ந்தவள், “இந்த பாடல் முடிந்ததும் இந்த ஹீரோயின் இறந்துவிடுவாங்க ரஞ்சித்.. எத்தனை ஆசைகள்..? எத்தனை கனவுகள் இருக்கும் அவளின் மனதில்..?!” என்று இவள் பேசிக்கொண்டிருக்க, அவன் அந்த இடத்தை விட்டு சென்றான்..

அவள் அவன் சென்றது, ‘ஏன் ரஞ்சித் எதுவும் சொல்லாமல் போகிறான்..?!’ என்று யோசித்தாள் ஆனால் அவளிற்கு எதுவும் புரியவில்லை..

அவள் தென்னை மரத்தில் சாய்ந்துக் கொள்ள, வானம் மெல்ல இருட்டியது.. வானம் இருட்டியது கண்ட ஒரு கானக்குயில், ‘கூக்கூ..’ என்று இசைபாட, மழைகால தென்றல் அவளின் உடலை வருடிச் சென்றது..

அந்த நேரத்தை மனதில் ரசித்துக் கொண்டிருந்தவள், மனதில் வந்தது அந்த பாடலின் வரிகள்..

“கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே

உன்னருகே நான் இருந்தால் தினம்

உன்னருகே நான் இருந்தால்..” என்ற பாடலை அவள் வாய்விட்டு பாடிக்கொண்டிருக்க, இவனின் மனம் அதில் பதிந்தது.. அவளின் பின்னே நின்று கையைக் கட்டிக்கொண்டு கேட்டு கொண்டிருந்தான்.. ஆனால் அவள் அவன் நிற்பதை கவனிக்காமல் அவளிற்கு பிடித்த பாடல் வரிகளைப் பாடிக் கொண்டிருந்தாள்..

அவள் எதர்ச்சியாக திரும்பிப்பார்க்க அங்கே நின்று இருந்த ரஞ்சித்தைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்த கீர்த்தி, “இந்த ரஞ்சித் பாடல் வரிகள் சூப்பர்..” என்று சொல்ல அவனோ அவளின் விழிகளைப் பார்க்க, அவள் தலை குனிந்தாள்..

“கீர்த்தி என்னை நிமிர்ந்து பார் கீர்த்தி..” என்று சொன்னதும், உடனே நிமிர்ந்தவள், பார்வையாலேயே என்ன என்று கேட்டதும், “எதுக்கு கீர்த்தி விலகி விலகி போகிறாய்..? என்ன காரணம் எனக்கு சொல்லு..” என்று கேட்டான்..

“ரஞ்சித் என்னடா சொல்கிறாய் எனக்கு ஒன்றுமே புரியல..” என்று அவள் புரியாமல் கேட்டதற்கு அவளை முறைத்தான் ரஞ்சித்..

“எனக்கு சஞ்சனா என்ற காதலி இருக்கிறாள் என்று உனக்கு முன்னாடியே தெரியும்.. அந்த உண்மை தெரிந்தும் என்னை எதற்கு நேசிக்கிறாய்..?” என்று நேராக கேட்டான்..

“இது என்ன கேள்வி..? நான் நேசிப்பதற்கும் உன்னிடம் பர்மிஷன் வாங்கணுமா ரஞ்சித்..?” என்று கேட்டாள்.. பிறகு அவனின் முகத்தைப் பார்த்துவிட்டு அவளே தொடர்ந்தாள்..

அவன் அமைதியாகவே நின்று கொண்டு, “அப்புறம் எதற்கு அந்த பாடலை அதுவும் சில வரிகள் மட்டும் பாடுகிறாய்..?” என்று கேட்டான்

“நான் உன்னை நேசித்த காரணம் என்ன என்று உனக்கு தெரியுமா..? இல்லை நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொன்னேனா..?” கேட்டாள்..

அதற்கு அவன் மெல்ல சிரித்துவிட்டு, “நீ காதலிப்பது நீ சொல்லித்தான் தெரியணுமா..? உன்னுடைய பார்வை மாடும் போதாதா..?” என்று கேட்டான்..

அதுவரை அமைதியாக இருந்தவள், அவன் சொன்னதைக் கேட்டு ‘அவன் என்னை அதிகமாக கவனித்திருக்கிறான்..’ என்று சொல்ல, அவனை திசை திருப்ப மாற்றி பேசினாள் கீர்த்தி

“எனக்கு என்று யாரும் இல்லை ரஞ்சித்.. இப்பொழுது நான் இங்கிருந்து சென்றாலும் எனக்கு ஒரு குடும்பம் இந்தியாவில் இருக்கிறது என்ற நிம்மதியில் இருந்து விடுவேன் ரஞ்சித்..” என்று சொன்னவள் அந்த இடத்தை விட்டு செல்ல நினைத்தாள்..

அவள் ஏன் அப்படி பேசுகிறாள் என்று புரியாமல் அவன் அவளைப் பார்த்தவண்ணம் நிற்க, அவள் அந்த இடத்தைவிட்டு செல்ல நினைக்க, அவர்கள் இருவரின் மனதை மாற்ற நினைத்த மழை மகள் மண்ணைத் தொட்டாள்..

அந்தநேரம் மழை நன்றாக பொழிய, அதுவரை இருந்த கவலை மாறி குழந்தை போல நனைந்தவளை அதட்ட மனம் இல்லாமல் அமைதியாக இருந்தான்..

“ரஞ்சித் உன்னிடம் ஒரு உண்மை சொல்லவா.. எனக்கு இங்கிருந்து போகவே விருப்பம் இல்லை.. ஆனால் ரோஹித் திருமணம் முடிந்ததும் அமெரிக்கா போகலாம் என்று இருக்கேன்..” என்று சொல்ல,

“என்ன சொல்கிறாய் கீர்த்தி..?” என்று பதட்டமாகவே கேட்டான்

“என்ன சொல்கிறேன் உன்னோட நாட்டிற்கு நான் போக வேண்டாமா..?” என்று அவனிடம் கேட்டவள், அவனின் முகம் பார்த்துவிட்டு நான் செல்வதுதான் நாம் இருவருக்குமே நல்லது..

மழையில் நனைந்தவள் எதுவும் பேசாமல் அப்படியே பின்வாசல் வழியாக வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.. ரஞ்சித் தான் எந்த மாதிரி உணருகிறோம் என்று புரியாமல் நின்றிருந்தான்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top