அத்தியாயம் – 37
கயல்விழி சுசீலாவை அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு வந்த நேராக வீட்டிற்கு வந்தாள்.. வீட்டிற்கு வந்தவளை வாசலில் வைத்தே வழிமறித்த சேகர், “என்னம்மா அந்த பையன் என்ன சொன்னான்..?!” என்று கேட்டார்..
அவரின் கேள்வியில் அவரை நிமிர்ந்துப் பாரதத் கயல்விழி, “அப்பா அவருக்கு இப்பொழுது மும்பை சொல்லும் வேலை இருப்பதால், இன்னும் இரண்டு மாதம் சென்ற பின்பு திருமணத்திற்கு நாள் குறிக்கலாம் என்று சொன்னார்..” என்று சொன்னவள்,
அவரின் முகம் மலர்வதைக் கண்டு, “உங்களின் சுயநலத்திற்கு என்னோட வாழ்க்கையை அழிக்க நினைப்பது நியாயமா..?” என்று முகத்தில் அடித்தார் போல கேட்டாள்
“நாங்க என்னம்மா தப்பு பண்ணினோம்..?” என்று கேட்டதற்கு, அவரின் முகத்தைப் பார்த்தவள், “அக்கா தான் அந்த குழந்தையைப் பெற்றால் என்று உங்களுக்கு தெரியுமா..?” என்று நேரடியாகக் கேட்டாள்.. அவளின் கேள்வியில் அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை..
அவர் எதுவும் பேசாமல் நிற்க, “அக்காவை நாம் அப்படியா அப்பா வளர்த்தோம்.. குடும்பம் ஒன்று தான் என்னோட உலகம் என்று இருந்தவளின் மனதை நோகடிக்க உங்களுக்கு எப்படி அப்பா மனது வந்தது..?” என்று கேட்டாள்.. அவர் பதில் பேசாமல் அமைதியாக நின்றார்..
“என்னப்பா உங்களின் வளர்ப்பு பற்றி உங்களுக்கே சந்தேகமா..? திருமணத்திற்கு நீங்க வரீங்களோ இல்லையோ நான் கண்டிப்பாக போய் தான் தீருவேன்..” என்று கூறியவள், வீட்டிற்குள் செல்ல, இப்பொழுது சிலையென நின்றார் சேகர்..
அவளின் கூற்றில் இருந்தே அவள் சொன்னதை செய்வாள் என்று அறிந்தார் சேகர்.. ஆனால் அமுதா இதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்..
அவளின் அறைக்குள் வந்தவள், கதவைத் தாளிட்டுவிட்டு, அப்படியே படுக்கையில் படுத்துக் கொண்டு, அமைதியாக கண்மூடினாள்.. அதன் பிறகு வந்த நாளில் அவள் அவனை விட்டு விலகி நிற்க, அது அவனுக்கு வலித்தது..
இதையெல்லாம் கவனித்த அவர்களின் கூட வேலை செய்யும் பெண் நிர்மலா, “என்ன கயல்விழி இருவருக்கும் ப்ரேக் அப் ஆகிவிட்டது போல.. இருவரும் இப்பொழுது பேசிக் கொள்வதே இல்லை..?” என்று கேட்டாள்..
“நான் உன்னிடம் சொன்னேனா எங்களுக்குள் எதுவும் இல்லை என்று..?!” கயல்விழி கேட்டதும், அவளின் முகம் வாடிப்போனது..
“யாரோட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று பார்த்து சந்தோசப்படாமல் உன்னோட வேலையை மட்டும் பாரு சரியா..? அடுத்த முறை இப்படி கேட்டால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் கயல்விழி!
கம்பெனியில் அனைவரிடமும் பேசினாலும் அவனிடம் பேசாமல் இருக்க, அவளின் வலியை விடவும் அதிகம் வலியை அனுபவித்தான் ஜீவா.. அவனின் கண்ணில் வலியைக் காண சகிக்காமல் வேலையை வேறொரு பிரான்சிற்கு மாறிவிட்டாள்
ஜீவா பற்றி முழுவதும் அறிந்து வைத்திருந்த கயல்விழி, அவனது முடிவிற்கு சம்மதித்தாள்.. அவனைப் பற்றி அறிந்ததால் இந்த இரண்டு மாத இடைவெளியை அவளே ஏற்படுத்திக் கொண்டாள்..
இரண்டு ஜோடிகள் தங்களின் பிரிவை தொடக்கி இருக்க, ரஞ்சித் கீர்த்தியின் புரிதலும், வேலைகளும் இவளின் செய்கை அவனது மனதில் சஞ்சனாவின் நினைவையே கொண்டு வந்தது
ரஞ்சித் திருமணத்திற்காக அனைத்து வேலைகளையும் செய்ய, அவனுக்கு உதவியாக சிலவேலைகளை செய்தாள் கீர்த்தி.. அவனோடு வெளியே செல்லும் பொழுது தனக்கு தேவையானவற்றை தேடி வாங்கக் கொண்டாள்.. அப்பொழுது கோவில் வழியாக வண்டியைச் செலுத்திய ரஞ்சித்தை வண்டியை நிறுத்த சொன்னாள்..
அவனும் வண்டியை நிறுத்தி, அவளை அவன் கேள்வியாகப் பார்க்க, “நான் கோவிலுக்கு போய்ட்டு வரவா..?” என்று தலையைச் சரித்துக் குழந்தை போல கேட்டாள்..
அவள் கேட்டதும், “ம்ம் போய்ட்டு வா..” என்றான்..
“நீ வரலையா..?” என்று கேட்டதற்கு, “நான் எதுக்கு உனக்குத்தான் விளக்கம் கொடுக்க விக்கிமீடியா இருக்கிறது இல்ல..” என்று அவன் நக்கலாகக் கேட்டதும்,
“என்ன ரஞ்சித் என்னை கிண்டல் செய்கிறாயா..?!” என்று கேட்டவள், வண்டியை விட்டு இறங்கிக் கோவிலுக்குள் சென்றாள்.. தஞ்சை பெரிய கோவில் உள்ளே நுழைந்தவள் அதன் பிரம்மாண்டமான கட்டிடக்கலை கண்டு வியந்து நின்றாள்..
“ஹலோ மேடம் கோவிலுக்குள் வாங்க..” என்று அழைத்தவனைத் திரும்பிப் பார்த்தவள், “என்னடா கோவிலுக்குள் எல்லாம் வருகிறாய்..?!” என்று நக்கலாகக் கேட்டதும் அவளுக்கு ஒரு கும்பிடு போட்டவன்,
“வா சாமி கும்பிடலாம்..” என்று அழைத்துச் சென்றான்.. அவனின் பின்னோடு சென்றவள், சிவன் சந்நிதானத்தில் கண்களை மூடி கரம் குவித்து வேண்டிக்கொள்ள, அதைப் பார்த்தவன் அமைதியாக கண்களை மூடி நின்றான்..
அவனின் மனம், ‘யார் இந்த கீர்த்தி.. எனக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு..? இவளைப் பார்க்கும் பொழுது எல்லாம் என்னோட சஞ்சனாவைப் பார்ப்பது போலவே இருக்கிறது.. அவளின் அதே குறும்புத்தனம், கண்டிக்கும் இடத்தில் கண்டிப்பு என்று அனைத்திலும் இருவருக்கும் எவ்வளவு ஒற்றுமை..?!’ என்று இறைவனிடம் கேட்டது
சிவனை வழி பட்டுவிட்டு சன்னிதானத்தில் இருந்து வெளியே வர, “என்ன கீர்த்தி ரொம்ப நேரமாக வேண்டினாய்..?” என்று விளையாட்டு போல கேட்டான் ரஞ்சித்..
“நானா..? ரோஹித் திருமணம் நல்லபடியாக நடக்கணும்.. அப்பா, அம்மா, தாத்தா பாட்டி, அபூக்குட்டி எல்லாம் நல்ல இருக்கணும்.. கயல்விழி, ஜீவாவின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்.. அப்புறம் நீயும் சஞ்சனாவும் சந்தோசமாக இருக்கணும் அவ்வளவுதான்..” என்றவளைப் பார்த்தவன்,
“உனக்கு எதுவுமே வேண்டிக்கொள்ளவே இல்லையா..?” என்று நேரடியாக கேட்டதும், வண்டியை நிறுத்திய இடத்திற்கு வரவே வண்டியில் அமர்ந்தவள்,
“எனக்கு என்று இருப்பது இவர்கள் மட்டும் தானே..?!” என்றவளின் வருத்தம் அவனின் மனத்தை மிகவும் பாதித்தது.. அவன் அவளைப் பார்த்துக் கொண்டே நிற்க, “ஹலோ இஞ்சி வந்து வண்டியை எடு..” என்று அழைக்க, அவனும் காரில் ஏறி வண்டியை எடுத்தான்.
வீட்டின் முன்னே வண்டியை நிறுத்தியவன் அமைதியாக இருக்க, “ரொம்ப தேங்க்ஸ் ரஞ்சித்..” என்று சொன்னவள் வீட்டின் உள்ளே சென்று மறைய, அவள் செல்லும் திசையைப் பார்த்தவன் காரை நிறுத்திவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றான்..
கயல்விழி சுசீலாவை அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு வந்த நேராக வீட்டிற்கு வந்தாள்.. வீட்டிற்கு வந்தவளை வாசலில் வைத்தே வழிமறித்த சேகர், “என்னம்மா அந்த பையன் என்ன சொன்னான்..?!” என்று கேட்டார்..
அவரின் கேள்வியில் அவரை நிமிர்ந்துப் பாரதத் கயல்விழி, “அப்பா அவருக்கு இப்பொழுது மும்பை சொல்லும் வேலை இருப்பதால், இன்னும் இரண்டு மாதம் சென்ற பின்பு திருமணத்திற்கு நாள் குறிக்கலாம் என்று சொன்னார்..” என்று சொன்னவள்,
அவரின் முகம் மலர்வதைக் கண்டு, “உங்களின் சுயநலத்திற்கு என்னோட வாழ்க்கையை அழிக்க நினைப்பது நியாயமா..?” என்று முகத்தில் அடித்தார் போல கேட்டாள்
“நாங்க என்னம்மா தப்பு பண்ணினோம்..?” என்று கேட்டதற்கு, அவரின் முகத்தைப் பார்த்தவள், “அக்கா தான் அந்த குழந்தையைப் பெற்றால் என்று உங்களுக்கு தெரியுமா..?” என்று நேரடியாகக் கேட்டாள்.. அவளின் கேள்வியில் அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை..
அவர் எதுவும் பேசாமல் நிற்க, “அக்காவை நாம் அப்படியா அப்பா வளர்த்தோம்.. குடும்பம் ஒன்று தான் என்னோட உலகம் என்று இருந்தவளின் மனதை நோகடிக்க உங்களுக்கு எப்படி அப்பா மனது வந்தது..?” என்று கேட்டாள்.. அவர் பதில் பேசாமல் அமைதியாக நின்றார்..
“என்னப்பா உங்களின் வளர்ப்பு பற்றி உங்களுக்கே சந்தேகமா..? திருமணத்திற்கு நீங்க வரீங்களோ இல்லையோ நான் கண்டிப்பாக போய் தான் தீருவேன்..” என்று கூறியவள், வீட்டிற்குள் செல்ல, இப்பொழுது சிலையென நின்றார் சேகர்..
அவளின் கூற்றில் இருந்தே அவள் சொன்னதை செய்வாள் என்று அறிந்தார் சேகர்.. ஆனால் அமுதா இதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்..
அவளின் அறைக்குள் வந்தவள், கதவைத் தாளிட்டுவிட்டு, அப்படியே படுக்கையில் படுத்துக் கொண்டு, அமைதியாக கண்மூடினாள்.. அதன் பிறகு வந்த நாளில் அவள் அவனை விட்டு விலகி நிற்க, அது அவனுக்கு வலித்தது..
இதையெல்லாம் கவனித்த அவர்களின் கூட வேலை செய்யும் பெண் நிர்மலா, “என்ன கயல்விழி இருவருக்கும் ப்ரேக் அப் ஆகிவிட்டது போல.. இருவரும் இப்பொழுது பேசிக் கொள்வதே இல்லை..?” என்று கேட்டாள்..
“நான் உன்னிடம் சொன்னேனா எங்களுக்குள் எதுவும் இல்லை என்று..?!” கயல்விழி கேட்டதும், அவளின் முகம் வாடிப்போனது..
“யாரோட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று பார்த்து சந்தோசப்படாமல் உன்னோட வேலையை மட்டும் பாரு சரியா..? அடுத்த முறை இப்படி கேட்டால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் கயல்விழி!
கம்பெனியில் அனைவரிடமும் பேசினாலும் அவனிடம் பேசாமல் இருக்க, அவளின் வலியை விடவும் அதிகம் வலியை அனுபவித்தான் ஜீவா.. அவனின் கண்ணில் வலியைக் காண சகிக்காமல் வேலையை வேறொரு பிரான்சிற்கு மாறிவிட்டாள்
ஜீவா பற்றி முழுவதும் அறிந்து வைத்திருந்த கயல்விழி, அவனது முடிவிற்கு சம்மதித்தாள்.. அவனைப் பற்றி அறிந்ததால் இந்த இரண்டு மாத இடைவெளியை அவளே ஏற்படுத்திக் கொண்டாள்..
இரண்டு ஜோடிகள் தங்களின் பிரிவை தொடக்கி இருக்க, ரஞ்சித் கீர்த்தியின் புரிதலும், வேலைகளும் இவளின் செய்கை அவனது மனதில் சஞ்சனாவின் நினைவையே கொண்டு வந்தது
ரஞ்சித் திருமணத்திற்காக அனைத்து வேலைகளையும் செய்ய, அவனுக்கு உதவியாக சிலவேலைகளை செய்தாள் கீர்த்தி.. அவனோடு வெளியே செல்லும் பொழுது தனக்கு தேவையானவற்றை தேடி வாங்கக் கொண்டாள்.. அப்பொழுது கோவில் வழியாக வண்டியைச் செலுத்திய ரஞ்சித்தை வண்டியை நிறுத்த சொன்னாள்..
அவனும் வண்டியை நிறுத்தி, அவளை அவன் கேள்வியாகப் பார்க்க, “நான் கோவிலுக்கு போய்ட்டு வரவா..?” என்று தலையைச் சரித்துக் குழந்தை போல கேட்டாள்..
அவள் கேட்டதும், “ம்ம் போய்ட்டு வா..” என்றான்..
“நீ வரலையா..?” என்று கேட்டதற்கு, “நான் எதுக்கு உனக்குத்தான் விளக்கம் கொடுக்க விக்கிமீடியா இருக்கிறது இல்ல..” என்று அவன் நக்கலாகக் கேட்டதும்,
“என்ன ரஞ்சித் என்னை கிண்டல் செய்கிறாயா..?!” என்று கேட்டவள், வண்டியை விட்டு இறங்கிக் கோவிலுக்குள் சென்றாள்.. தஞ்சை பெரிய கோவில் உள்ளே நுழைந்தவள் அதன் பிரம்மாண்டமான கட்டிடக்கலை கண்டு வியந்து நின்றாள்..
“ஹலோ மேடம் கோவிலுக்குள் வாங்க..” என்று அழைத்தவனைத் திரும்பிப் பார்த்தவள், “என்னடா கோவிலுக்குள் எல்லாம் வருகிறாய்..?!” என்று நக்கலாகக் கேட்டதும் அவளுக்கு ஒரு கும்பிடு போட்டவன்,
“வா சாமி கும்பிடலாம்..” என்று அழைத்துச் சென்றான்.. அவனின் பின்னோடு சென்றவள், சிவன் சந்நிதானத்தில் கண்களை மூடி கரம் குவித்து வேண்டிக்கொள்ள, அதைப் பார்த்தவன் அமைதியாக கண்களை மூடி நின்றான்..
அவனின் மனம், ‘யார் இந்த கீர்த்தி.. எனக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு..? இவளைப் பார்க்கும் பொழுது எல்லாம் என்னோட சஞ்சனாவைப் பார்ப்பது போலவே இருக்கிறது.. அவளின் அதே குறும்புத்தனம், கண்டிக்கும் இடத்தில் கண்டிப்பு என்று அனைத்திலும் இருவருக்கும் எவ்வளவு ஒற்றுமை..?!’ என்று இறைவனிடம் கேட்டது
சிவனை வழி பட்டுவிட்டு சன்னிதானத்தில் இருந்து வெளியே வர, “என்ன கீர்த்தி ரொம்ப நேரமாக வேண்டினாய்..?” என்று விளையாட்டு போல கேட்டான் ரஞ்சித்..
“நானா..? ரோஹித் திருமணம் நல்லபடியாக நடக்கணும்.. அப்பா, அம்மா, தாத்தா பாட்டி, அபூக்குட்டி எல்லாம் நல்ல இருக்கணும்.. கயல்விழி, ஜீவாவின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்.. அப்புறம் நீயும் சஞ்சனாவும் சந்தோசமாக இருக்கணும் அவ்வளவுதான்..” என்றவளைப் பார்த்தவன்,
“உனக்கு எதுவுமே வேண்டிக்கொள்ளவே இல்லையா..?” என்று நேரடியாக கேட்டதும், வண்டியை நிறுத்திய இடத்திற்கு வரவே வண்டியில் அமர்ந்தவள்,
“எனக்கு என்று இருப்பது இவர்கள் மட்டும் தானே..?!” என்றவளின் வருத்தம் அவனின் மனத்தை மிகவும் பாதித்தது.. அவன் அவளைப் பார்த்துக் கொண்டே நிற்க, “ஹலோ இஞ்சி வந்து வண்டியை எடு..” என்று அழைக்க, அவனும் காரில் ஏறி வண்டியை எடுத்தான்.
வீட்டின் முன்னே வண்டியை நிறுத்தியவன் அமைதியாக இருக்க, “ரொம்ப தேங்க்ஸ் ரஞ்சித்..” என்று சொன்னவள் வீட்டின் உள்ளே சென்று மறைய, அவள் செல்லும் திசையைப் பார்த்தவன் காரை நிறுத்திவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றான்..