thanks saru kavanikkalama edit panrenNice update dear
Last la ranjith keerthi varnum
Ranjith kayalvizhi nu vandruku
Very nice soooo loveable ???????“என்னோட ஆபீஸ் வொர்க் செய்ய வந்தான் ரோஹித்.. அவனை நான் எப்பொழுதும் கிண்டல் செய்வேன்.. ஆனால் வன் கண்டுக்கவே மாட்டான்..” என்று சொல்ல ரஞ்சித் அமைதியாக அவள் சொல்வதைக் கேட்டான்..
“ஒருமுறை எனக்கு ரொம்பவே முடியவில்லை என்று ஆபீஸிக்கு போன் போட்டு லீவ் சொல்லிவிட்டு ரெஸ்ட் எடுக்க, அவனும் ஆபீஸ் லீவ் போட்டுவிட்டு வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்..” என்று சொன்னவள் நிறுத்தி மீண்டும் தொடந்தாள்..
‘அதற்கும் நான் அவனைக் கிண்டல் செய்ய, அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்.. என்னோட வாழ்க்கையில் ஒரே பொண்ணுக்குதான் இடம்.. ஆனால் நீ மட்டும் விதிவிலக்கு கீர்த்தி..’
‘உன்னோட விளையாட்டுத்தனமும், குழந்தைத்தனமும், யாரையும் காயப்படுத்தாத குணமும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. காதலுக்கும் நட்புக்கும் வித்தியாசம் இருக்குமா.. அவர்களை விட்டு நான் விலகிப் போவதை நீ கிண்டல் செய்கிறாய்.. நான் இப்படித்தான் இருப்பேன்.. அதுக்கு மட்டும் காரணம் கேட்காதே.. நீ எனக்கு ஒரு நல்ல தோழி..’ என்று சொல்ல
“அவனின் நட்பு இன்று வரையில் தொடர்கிறது.. அதுமட்டுமல்ல அவன் எந்த பெண்ணிடமும் பேசாமல் என்னிடம் மட்டும் சகஜமாக பேசி சிரிப்பான் அது எல்லோருக்கும் பொறாமையாக இருக்கும்..” என்று சொல்ல,
“ரோஹித் என்னோட அப்பா, அம்மா, நண்பன் எல்லாம் அவன்தான்.. அவன் வந்த பிறகு நான் சிரிக்காத நாளே இல்ல.. என்னை அவ்வளவு சந்தோசமாக வைத்திருப்பான்..”
“மனதில் இருக்கும் ஒருத்திக்காக மற்றவரை ஏற்றுக்கொள்ளாத ஒரு குணம்.. அதேபோல நீயும் இருந்தாய்.. அன்று மதுவை அடித்தாயே அந்த இடத்தில் மதுவின் இடத்தில் நானும், உன்னோட இடத்தில் ரோஹித்தும் இருந்தாலும் ரோஹித் அதுதான் செய்திருப்பான்.. அந்த குணம் எனக்கு ரொம்பவே பிடித்தது..” என்று சொல்ல அவர்கள் நட்பும், புரிதலையும் கண்டு ரஞ்சித் அமைதியாக இருந்தான்..
“ஆனால் இந்த இரண்டு நாளும் எனக்கு நரக வேதனை ரஞ்சி.. ரோஹித்தைப் பிரிந்தது ஒரு தனிமை சூழ்ந்தது என்றால், உன்னைப் பிரிந்து வந்தது அதைவிடவும் அதிகமாக வலித்தது..” என்று சொன்னாள்..
அவளின் வலிகளைப் புரிந்தவன், அவளை ஆதரவாக அணைத்துக் கொள்ள, அங்கே இரு நேசித்த நெஞ்சமும் தங்களின் காதலைப் பகிர்ந்து ஒன்றாக இணைந்தது..
அவர்கள் இங்கே இப்படி இருக்க, இந்தியாவில் ரோஹித்தும் மதுவிடம் இது பற்றிதான் கேட்டான்..
அவள் இரவு உணவை முடித்துவிட்டு அபூர்வாவை தூங்க வைத்துவிட்டு மாடியில் நின்றிருந்தாள் மதுமிதா.. அவள் அங்கே வந்ததும் அவளின் பின்னோடு வந்தவன், அவளின் அருகில் வந்த ரோஹித், “ஏன் மது ஏர்போர்ட்டில் கீர்த்தி என்னை கட்டிப்பிடித்து அழுததும் உனக்கு சந்தேகம் வரலையா..?” என்று கேட்டான்..
அவனை திரும்பிப் பார்த்தவள், “உண்மையைச் சொல்லணும் என்றால் நான் சந்தோசம் தான் பட்டேன்.. என்னோட கணவருக்கு இப்படியும் ஒரு தோழியா என்று..!” என்று அவள் மகிழ்ச்சியுடன் கூறினாள்..
அவனின் முகத்தை நோக்கியவள், “உனக்காக என்னிடம் பேசியதில் இருந்தே தெரிந்தது உங்களின் நட்பின் ஆழம்.. உண்மையைச் சொன்னால் என்னோட தோழி சஞ்சனா இறக்கவே இல்லை.. அவள் கீர்த்தி ரூபத்தில் எங்களுடன் இருக்கிறாள்..” என்று அவள் சொல்ல சொல்ல, ரோஹித் மனம் மகிழ்ந்தது..
“ரோஹித் கீர்த்தியை ரஞ்சித் அழைத்து வந்ததும், கயல்விழி –ஜீவா, கீர்த்தி – ரஞ்சித் இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்ய வேண்டும்..” என்று சொல்ல, அவனும் அமைதியாக தலையசைத்தான்..
அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “என்ன ரோஹித் நான் மட்டும் பேசுகிறேன் நீ எதுவும் பேசவே மாட்டேன் என்கிறாய்..?!” என்று கேட்டாள்..
அவளைக் காதலோடு பார்த்தவன், “என்னோட மதுவா இது என்ற சந்தேகம்.. அதுதான் அமைதியாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்..” என்று சொல்ல,
“இதில் ஒரு சந்தேகமும் வேண்டாம் நான் உங்கள் மதுமிதாதான்..” என்று கூறியவள், அடுத்து நடக்க வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டாள்
அடுத்த முகூர்த்ததில் இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் என்று முடிவு செய்து அதை பெரியவர்களிடம் கூறினாள்.. ஜீவாவின் வீட்டில் இருவரின் திருமணம் பற்றி சொல்லவும், அனைவரும் மனபூர்வமாக சம்மதம் சம்மதித்தனர்...
“ஐயோ நான் பேசியதை மனதில் வைத்துக் கொண்டு எந்த கன்னத்தைப் பதம் பார்க்க போகிறாளோ..?!” ஜீவா மட்டும் கொஞ்சம் பயத்துடன் புலம்பினான்..
தன்னுடைய அப்பா, அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்கிய மதுமிதா கயலிடம் வந்து, “இப்பொழுது சந்தோசமா என்னோட குட்டி தங்கைக்கு..?” என்று புன்னகையுடன் கேட்டதும், அவளை பாசத்துடன் கட்டியணைத்துக் கொண்டவள்,
“ஜீவா என்னை ரொம்பவே அழ வைத்து விட்டான்.. அவனுக்கு இருக்கிறது அக்கா..” என்று சொன்னவளின் உள்ளர்த்தம் புரியாமல் சிரித்துக்கொண்டு சென்றாள் மதுமிதா..
இரண்டு ஜோடிகளுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்ய, ரோஹித் தனது கம்பெனியை தொடங்கினான்.. அவனது வேலைக்களுக்கு இடையிலும் மதுவையும், அபூர்வாவையும் விசாரித்துக் கொள்வான்..
மதுவின் மீது எந்த அளவிற்கு காதலை வைத்திருந்தானோ அந்த அளவிற்கு அபூர்வா மீது பாசத்தை வைத்திருந்தான்.. அவனைப் பார்ப்பவர்கள் ரோஹித் அபூர்வாவின் அப்பா கிடையாது என்று சொன்னால் யாரும் நம்பகூட மாட்டார்கள் அந்த அளவிற்கு பாசம் வளர்ந்தது
இவர்கள் தகவல் கொடுக்க அடுத்த இரண்டு நாளில் வந்து சேர்ந்தனர் ரஞ்சித்தும், கீர்த்தியும்.. அவள் வந்ததும் வாசலுக்கு வந்து வரவேற்ற மதுமிதா,
“நான் அன்றே சொன்னேன் இல்லை.. நீ திரும்பவும் இந்திய வருவாய் என்று..! இனிமேல் இதுதான் உன்னோட ஊர், நாங்கதான் உன்னோட சொந்தம்பந்தம் எல்லாம்..” என்று அரவணைத்துக் கொண்டதும் கீர்த்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது..
அவளின் கண்ணீரைத் துடைத்தவள், “ஏய் ரஞ்சி அவளை அழுக வைத்தாய் மகனே நீ அவ்வளவுதான்..” என்று மது மிரட்ட அங்கே இருந்தவர்கள் அவளைப் பார்த்து சிரித்தனர்..
திருமண வேலைகள் அனைத்தும் ரோஹித், மதுமிதா பெரியவர்கள் இணைந்து செய்ய, இரண்டு ஜோடிகளின் திருமணமும் ஒரே நாளில் நடந்தேறியது.. ரோஹித், மதுமிதா, ஜீவா மூவரின் வீட்டு பெரியவர்களும் சேர்ந்து இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைத்தனர்..