• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 45 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
காலையில் பத்துமணி கிளம்பியவர்கள் மாலை நான்கு மணிக்கு சென்னையை அடைந்தனர்.. வீட்டிற்கு சென்றவர்கள் அடுத்தடுத்த வேலைகளை முடித்துவிட்டு கயல்விழியை அலங்கரித்து ஜீவாவின் அறைக்குள் அனுப்பி வந்தனர்..

உள்ளே சென்றதும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த ஜீவாவைப் பார்த்தவள், “தூங்குகிறாயா உனக்கு இருக்குடி மாப்பிள்ளை..” என்று சொல்லிக் கொண்டே அவனின் அருகில் சென்றவள் அவன் தூங்குவதைப் பார்த்து, ‘என்னை அழுக வைத்தாய் இல்ல..” என்று யோசித்தவள் கண்களில் பட்டது தண்ணீர் வைத்திருந்த வாட்டர் கேன்..

அதை எடுத்து அவனின் முகத்தில் ஊற்ற அரக்க பறக்க எழுந்து அமர்ந்தான் ஜீவா.. அவன் எழுந்து அமர்ந்ததும் அவனைப் பார்த்து சிரித்தவள்,

“இப்பதான் ஜீவா நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்..” என்று அவள் கிண்டலாகக் கூறவும், “என்னடி மனசில் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?” என்று கேட்டு படுக்கையில் இருந்து எழுந்தவன்,

“முதலிரவு அன்று படுத்து தூங்கும் ஒரே நல்லவன் நீதான் என்று நினைத்தேன் ஜீவா..” என்று குழந்தை போல சொன்னவளைப் பார்த்து,

“பார்க்க அப்படியே குழந்தை போலவே செய்கிறாய்.. ஆனால் நீ பண்ணும் சேட்டை யார் கண்ணுக்கும் தெரியாது..” என்று புலம்பியவன்,

“முதலிரவில் கணவன் தூங்கினால் எழுப்பனும் என்ற சென்ஸ் கூட இல்லையா..?” என்று அவன் கேட்டதும்,

“நான் எல்லாம் தொல்லை ஒழிந்தது என்று தூங்கும் கேஸ். ஆனாலும் நான் எதுக்கு உன்னை எழுப்பினேன் தெரியுமா..? நான் நல்ல தூங்குவேன்.. நான் துங்குவதை நீ பார்த்துக் கொண்டிருப்பாய்.. இதுதான் உனக்கு பனிஷ்மென்ட் என்று கூறியவள் அவனின் தூக்கத்தில் ஒரு வாட்டர் கேன் தண்ணியை ஊற்றிவிட்டு படுக்கையில் படுத்து உறங்க ஆரமித்தாள்..

அவளையே பார்த்தவன் கொஞ்ச நேரத்தில் அவளின் அருகில் வந்து, “நல்ல தூங்குகிறாய்..” என்று கூறியவனின் பார்வையில் அவளின் அழகு படவே அவளின் தலையில் இருந்து கால்வரையில் அளந்தவன்,

“இதுக்குமேல் சும்மா இருந்த நல்ல இருக்காது..” என்று வாய்விட்டு கூறியவன், அவளின் அருகில் சென்றவன் அவளின் இதழோடு இதழ் பதிக்க தூக்கத்தில் அவனின் முத்தத்தை உணர்ந்தவள் கண்விழிக்காமல் படுத்திருக்க, அவள் விழித்திருக்கிறாள் என்று உணர்ந்தவன்,

“ஏய் கயல்.. நீ தூங்கல எனக்கு தெரியும்..” என்று அவனப் சொல்ல விழிதிறந்து அவனைப் பார்த்தவள், “என் மீது கோபமா செல்லம்..?” என்று வருத்ததுடன் கேட்டான்..

அவனின் வருத்தம் கண்டவள் எழுந்து அவனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு, “இல்லம்மா என்னோட அக்கா மீது எந்த தவறும் இல்லை என்று என்னோட அம்மா, அப்பாவிற்கு புரிய வைக்க நீ எடுத்த முடிவு என்னோடமூளைக்கு புரிந்தாலும், என்னோட மனசுக்கு புரியலடா..” என்று சொல்ல,

“உன்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டேனா..?” என்று கேட்டான் ஜீவா, அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் இல்லை என்று தலையசைத்துவிட்டு, “நான் தான் உன்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டேன்.. ஸாரிடா..” என்று சொல்லவும், அவளை அணைத்துக் கொண்டான் ஜீவா.. மெல்ல மெல்ல அவனின் மௌனநிலைக்கு மாற இருவரும் ஒருவராகக் கலந்தனர். அவர்கள் பிரிவு அவர்களுக்கு ஒரு நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது..

ரஞ்சித் வீட்டில் இருந்து கிளம்பியவர்கள் நேராக வீட்டிற்கு வர சரியாக இருந்தது.. அவர்கள் அனைவருக்கும் இரவு உணவை ரெடி செய்தவள் அனைவரையும் சாப்பிட வைத்து பெரியவர்கள் அவர்களின் அறைக்கு செல்ல, கல்யாணி அபூர்வாவைத் தூக்கிச் சென்றுவிட, அவர்களின் அறைக்கு சென்றாள் மதுமிதா..

என்றும் போல இல்லாமல் இன்று அவளின் அறைக்கு செல்ல அவளின் கால்கள் பின்னிக் கொள்ள, அறைக்குள் சென்றவள் கதவைச் சாத்த, அந்த அறையில் ரோஹித் இல்ல..

அவனைத் தேடியவள் மாடிக்கு சென்றாள்.. அங்கே வெறும் தரையில் படுத்திருந்தான் ரோஹித்.. அவனைப் பார்த்தவள் அவனின் அருகில் சென்று அவனின் தோளைத் தொட, அவன் நினைவின் தாக்கத்தில் இருந்து விடுப்பட்டான்..

அவளைப் பார்த்து என்ன என்பது போல புருவம் உயர்த்த, “இங்கே எதுக்கு வந்தீங்க ரோஹித்..?” என்று கேட்டாள்..

“ஏன் மது நான் இங்கே இருப்பதில் உனக்கு என்ன பிரச்சனை..?” என்று கேட்டதும், அவளின் கண்கள் தானாகவே கலங்கியது..

“எதுக்கு இப்பொழுது அழுகிறாய்..?” என்று எழுந்து அமர்ந்தான் ரோஹித்.. “நீ எதுக்கு இப்படி பேசுகிறாய்..?” என்று வருத்ததுடன் கேட்டாள்..

“உனக்கு என்னம்மா விடிந்தவுடன் வெளிநாட்டிற்கு கிளம்ப இருக்கிறாய்..” என்று சொல்லவும், அவனைப் பார்த்தவள், “என்னை நம்பு நான் எங்கேயும் போகவில்லை.. நான் இங்கேதான் இருக்க போகிறேன்..” என்று அவள் அவனைப் பார்த்துக் கூறவும், அவளின் கைகளை எடுத்து அவனின் தலையில் வைத்துக்கொண்டு

“இப்பொழுது உண்மையைச் சொல்லு..” என்று சொல்லவும், “இல்ல ரோஹித் நான் போகலடா.. எனக்கு என்னோட ரோஹித் தான் வேண்டும்.. வேற யாரும் வேண்டாம்..” என்று சொல்லி அழுதாள்..

அவளை இழுத்து தனது மடியில் பட்டுக் கொண்டவன், “அப்புறம் எதற்கு நீ பாஸ்போர்ட் விசா எல்லாம் எடுத்து வைத்தாய்..?” என்று கேட்டவன், “உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா..?” என்று கேட்டதும் அவனின் வாயைத் தனது கை கொண்டு மூடினாள்..

“இல்ல சத்தியமாக இல்லடா.. ஆனால்..” என்று அவள் இழுக்க, “நீ என்னை நம்பவே இல்லையே.. அதில்தான் என்னோட மனம் வலிக்கிறது..” என்று அவள் கதறி அழுக, அவளை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டு, “ உன்னை நான் நம்புகிறேன் அழுகாதே மதும்மா..” என்று சொல்ல அவளிற்கு அழுகை மட்டும் வந்தது..

அவள் அதிகமாக அழுகவும் அவளின் இதழில் இதழ் பொருத்தி சிறை செய்தவன் கொஞ்சம் நேரம் கழித்தே அவளின் இதழை விடுவிக்க அவளின் அழுகை நின்றது.. “ஐ லவ் யூ டீ. நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது மதுமிதா.” என்று அவன் சொல்லவும் அவனின் விழிகளைப் பார்த்தவள் அவனின் மீது சரிய அவனோ அவளை தாங்கிய வண்ணம் தரையில் சரிந்தான்..

“கொஞ்ச நேரத்தில் பயப்படுத்திவிட்டாய்..” என்று கூறியது அவனைப் பார்த்து கலகலப்பாக சிரித்தாள்.. அவளின் மலர்ந்த முகம் பார்த்துக் கொண்டே, “ஏன் செல்லம் அம்மா, அப்பா இருவருக்கும் ஏன் தண்டனை ரொம்ப குறைவாகக் கொடுத்தாய்..?” என்று அவளின் முகத்தை விரலால் வருடிக்கொண்டே கேட்டான்..

“என்னோட அம்மா அப்பாவிடம் நான் பேசவே மாட்டேன்.. அவர்களுக்கு அதுதான் பனிஷ்மென்ட்..” என்று கூறியவளைப் பார்த்தவன், “அதுதான் ஏன்..?” என்று கேட்டான்..

“உன்னைத் தப்பாக பேசினாங்க இல்ல அதுதான்..” என்று சொல்ல அவளை அணைத்துக் கொண்டவன், “ம்ம் நல்ல பனிஷ்மென்ட் இப்பொழுது மழை வந்தால் நல்ல இருக்கும் செல்லம்..” என்று சொல்ல, அவனின் விரல்களும் உதடும் அவனின் பயணத்தைத் துவங்க, அவனை தடுக்க அவன் அவளின் எதிர்ப்பை மீறி அவளை ஆக்கிரமிக்க,

“ரோஹித் உன்னோட பாட்டு கேட்டு ரொம்ப நாளானது கொஞ்சம் பாடுப்பா..” என்று அவள் கெஞ்சவும் சரியென தலையசைத்தவன் அவனின் காதலை அவனின் பாடலில் வெளிப்படுத்த அவளும் அவனுடன் இணைந்து பாட ஆரமித்தாள்.. அவர்கள் சந்தோசத்தையும் காதலையும் சொல்வது போல இருந்தது அந்த பாடல்..

ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்

மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே

நீர் அருவிகள் ஓர் நதியென ஏன் நடக்கிறது..

வான் கடலெனும் தன் துணைதனை தான் கலந்திடவே!

செந்தாழம் பூ கார்காலம் வந்ததும் கூத்தாடுதே யாரைக்கண்டு..

மின்னலெனும் தன்காதல் நாயகன் வானத்திலே மின்னக்கண்டு..

அதில் கதை கோடி உண்டு..”

என்று அவள் பாடிட அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க பன்னீரைத் தூவி வாழ்த்தியது மழை.. அதில் நனைந்தவண்ணம் பாடினாள் மதுமிதா..

“நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும் நாம் இணைதிடவே

உன் உறவினில் என் மனதினில் தேன் பெருகிடுதே.

என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம் உன் கண்களே சொல்கின்றதே..

பூங்கூந்தளில் பூசூடும் பூவிது உன் தோளிலே சாய்கின்றதே..

மனம் சதிராடும் காலம்..”

மழைகாற்று வீச இருவரும் ஒரே மனநிலையில் இருக்க மழையும் பொழிய அதில் ஆசை தீர நனைந்தவர்கள், இருவரும் பாடலில் ஒன்றிணைத்தனர்..

“தேன் சுவைதனைப் பூமணந்தனை நார் பிரித்திடுமா..

யார் பிரித்திடும் வெண்ணிலவினை வான் பிரிந்திடுமோ..?

ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள் எந்நாளுமே மாறாதைய்யா

நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள் எந்நாளுமே நீங்காதம்மா..

கண்ணா அதுதானே காதல்..” என்று அவள் பாட அங்கிருந்து எழுந்தவன், அவளை கைகளில் ஏந்திக்கொண்டு அறைக்குள் சொல்ல, அவளோ அவனின் தோளில் கோடி போல் கிடந்தாள்.. அவளை படுக்கையில் விட்டவன், அவளைப் பார்வையில் அளந்தான் அவனின் பார்வையின் பொருள் புரிந்து வெக்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்தாள்.. வெளியே பொழிந்த மழைக்கு உள்ளே இருவரும் சேர்ந்து தங்களின் காதல் பயணத்தில் முதல் அத்தியாயத்தைத் எழுத தொடங்கினர்.. இருவரின் காத்திருப்பும் அழகாக கைகூடியது..

நேசித்த இந்த இரு நெஞ்சங்களும் பலபல இன்னல்களைத் தாண்டி இப்பொழுதும் எப்பொழுதும் இணைந்திருக்க அவர்களை வாழ்த்துவோம்..
Happy married life. All Jodies ???
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top