• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அவளைப் பார்த்து சிரித்தவண்ணம் உள்ளே வந்த மதுமிதா, “அவள் சும்மா சொல்கிறாள் அப்பா.. மழையில் சரியான ஆட்டம் போட்டுவிட்டு வந்து உங்களின் மேல் பழியைப் போடுகிறாள்..” என்று சிரித்தாள்..
அப்பொழுது தான் மதுவை நிமிர்ந்துப் பார்த்த சிவரத்தினம், “சரிம்மா அவள் தான் சின்ன பொண்ணு.. நீயும் இப்படி மழையில் நனைந்து வந்து நிற்கிறாய்..” என்று அவர் கேட்க,
“அப்பா நாங்க குடை எடுத்துட்டு போகவில்லை அப்பா.. அதுதான் மழையில் நனைந்து விட்டோம்..” என்று அவள் சொல்லிவிட்டு வீடு நோக்கிச் செல்ல, அபூர்வா அங்கேயே நின்றாள்..
அவள் நின்ற இடத்தில் இருந்தே, “அம்மா அந்த ரோஜா செடியை என்னிடம் கொடுங்க..” என்று சொல்ல, மகளைத் திரும்பிப் பார்த்த மதுமிதா,
“ஏன் நீ வந்து வாங்கிட்டுப் போ..” என்று அவளும் நின்ற இடத்தில் இருந்தே சொல்ல, “நான் செய்த தப்புக்கு பனிஷ்மென்ட் ஆஆ..” என்று மகளும் நின்ற இடத்தில் இருந்தே கேள்விக் கேட்டாள்..
“ம்ம் சொன்ன பேச்சு கேட்காமல் இருந்தால் பனிஷ்மென்ட் தான்..” என்று மது சிரிப்புடன் சொல்ல,
“ஸாரி அம்மா..” என்று சொல்ல, “நோ நீதான் வந்து வாங்கிட்டுப் போகணும்..” என்று அவள் நின்ற இடத்தில் இருந்தே சொல்ல, அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சிவரத்தினம்..
“அவள் தான் சின்ன பொண்ணு.. நீ கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டியது தானே குட்டிம்மா..” என்று அபூர்வாவிடம் அவர் சொல்ல,
“எல்லா இடத்திலும் விட்டுக் கொண்டுத்தால் நம்பலை மதிக்க மாட்டங்க தாத்தா..” என்று அவருக்கே பாடம் சொல்லிக் கொடுத்தாள் பேத்தி..
“நீ பெரிய பொண்ணு தானே..?! நீயாவது விட்டுக் கொடும்மா..” என்று மதுவிடம் சொன்னார் சிவரத்தினம்..
“இப்படியே மழையில் எவ்வளவு நேரம் மூவரும் நிற்பது..?” என்று கேட்டார் சிவரத்தினம்..
“மழை நிற்கும் வரையில்..” என்று அம்மாவும், மகளும் கோரஸ் பாடினார்கள்..
“இருவரும் சொல்லி வைத்து வேலைப் பார்க்கிறீங்க.. உங்களுக்கு அவள்தான் சரி.. இப்பொழுது நான் போய் காமாட்சி கிட்ட சொல்கிறேன் அவள் வருவாள் பஞ்சாயத்துப் பண்ண..” என்றவர் வீடு நோக்கி செல்ல,
“வா மது நாம் இருவரும் ஓட்டிவிடலாம்.. இல்லையென்றால் பாட்டியிடம் பழையபடி பாட்டுக்கேட்க என்னால் முடியாது சாமி..” என்று சொன்னவள்,
“செடியை எடுத்துட்டு வந்துவிடு மது காஞ்சியில் இருந்து காமாட்சி வந்தால், நாம் இருவரும் முடிந்தோம்..” என்று சொன்ன அபூர்வா முன்னே ஓட, அவளைத் தொடர்ந்து மதுவும் வீடு நோக்கி நடந்தாள்..
அவளிடம் பேசிவிட்டு கோபத்துடன் காரை எடுத்த ரோஹித், கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.. அவனின் முகம் பார்த்த கீர்த்தி,
“எதுக்கு இப்பொழுது இவ்வளவு கோபத்தில் இருக்க..? அவங்க என்ன வேண்டும் என்ற அப்படி செஞ்சாங்க..” என்று அவள் அவனை சமாதானம் செய்ய,
“நீ கொஞ்சம் பேசாமல் வா கீர்த்தி.. அப்புறம் நான் உன்னைத் திட்டிவிட்டால் என்மேல் கோபப்பட்டு பேசாமல் இருப்பாய்..” என்று கூறிய ரோஹித் கோபத்தில் வண்டியை வேகமாக செலுத்த, “கொஞ்சம் மெதுவாக போடா நான் ஒன்னும் பேசாமல் வருகிறேன்..” என்று கூறிய கீர்த்தி ரேடியோவைப் போட்டவள், அமைதியாக அமர்ந்து வேடிக்கைப் பார்க்க ஆரமித்தாள்
“வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி!
பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல் பாவை தெரியுதடி!” என்ற பாடல் வரிகள் வரவே ரேடியோவை ஆப் செய்தான் ரோஹித்..
பாடல் நின்றதும் அவனைத் திரும்பிப் பார்த்த கீர்த்தி, “டேய் உனக்கு என்னதான் பிரச்சனை..?!” என்று கோபத்துடன் கேட்டாள்..
“இப்பொழுது நான் சொல்லிய ஆகணுமா..?” என்று பல்லைக் கடித்தவன்,
“அம்மா தாயே நீ ஒன்னும் பேசாமல் வா அதுவே போதும்..” என்று கூறியவன், மனம் செந்தணல் போல எரிந்தது..
அவனின் மனம், ‘நீ காதலித்த பொண்ணு இப்பொழுது இன்னொரு பொண்ணுக்கு அம்மா.. அதனால் நீ உன்னோட வழியைப் பார்த்துக் கொண்டு போ..’ என்று நடப்பை எடுத்துரைத்தது
“என்னது நான் என்னோட வழியைப் பார்த்துட்டுப் போகணுமா..? அவள் சந்தோசமாக இருப்பாள்.. நான் எங்கிருந்தாலும் வாழ்க! என்று சொல்லிட்டுப் போகணும்!” என்று கேட்டான்..
அவனின் கோபத்தில் வார்த்தைகளை சத்தமாக சொன்னதை அவன் கவனிக்கவே இல்லை.. ஆனால் அவன் கூறியதைக் கேட்டுவிட்டாள் கீர்த்தி..
“என்னடா தனியாக பேசிட்டு இருக்க..?” என்று அவனை உலுக்கினாள் கீர்த்தி.. அதற்குள் அவனின் தாத்தா, பாட்டியின் வீடும் வந்துவிட, காம்போன்ட் கதவுகள் மூடப்பட்டிருக்க ஹாரன் அடித்தான் ரோஹித்!
வீட்டை நோக்கி செல்ல ஆரமித்த மதுமிதா கதவுகளைத் திறக்க செல்ல, அதற்குள் வாட்ச்மேன் வந்து கதவைத் திறக்க, உள்ளே நுழைந்தான் ரோஹித்! அதற்குள் வீட்டுக்குள் சென்றுவிட்டாள் மதுமிதா..
நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல, செல்ல வழியெங்கிலும் இயற்கை அன்னையின் எழில் திரும்பும் இடங்கள் எங்கிலும் காணப்பட்டது. செடிகள் மரங்கள் புடைசூழ எழில் அன்னையின் இயற்கை எழிலைக் காண கண்ணிரண்டும் பத்தாது..
“என்னடா குற்றாலம் என்று சொன்னால் எல்லோருக்கும் அருவிதான் முதலில் நினைவு வரும்.. என்னிடம் குற்றாலம் என்று சொன்னால் உன்னோட வீடுதான் நினைவு வரும்..” என்று சந்தோசமாகக் கூறியவள்,
“என்னடா இந்த மரங்கள் அனைத்தும் எப்பொழுது வைக்க பட்டது.. வானுயரத்திற்கு வளர்ந்து நிற்கிறது..” என்று அந்த மரங்களின் உயரத்தைப் பார்த்து பிரம்மித்தாள் கீர்த்தி..
மற்ற நேரங்களாக இருந்தால், அவனும் அவளுடன் அந்த வீட்டைப்பற்றி சொல்லியிருப்பான்.. ஆனால் இப்பொழுது அவன் மனநிலை சரியில்லாத காரணத்தால் அதை சரிசெய்ய போராடிக் கொண்டிருந்தான்..
அந்த காலநிலைக்கு ஏற்றது போல, மழையும் மெல்ல மெல்ல குறைந்து மெல்லிய தூரல் போட, அந்த ஏகாந்த நிலையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை..

அதையும் கடந்து உள்ளே சென்றால், இந்த எழில் அழகிற்கு சிகரம் போல காணப்பட்டது அந்த வெள்ளை மாளிகை. அதன் பக்கத்தில் இருந்த ரோஜா தோட்டம் கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. இங்கே முதலில் வருபவர்கள் இப்படியும் இடம் இருக்கிறதா என்று வியந்து விடுவார்கள்.
“வீடு சூப்பர் ரோஹித்.. எனக்கு இங்கே இருந்து போக மனம் வருமா என்றே தெரியலை..” என்று கூறியவள் ரோஹித்தின் முகம் காண, ரோஹித்தின் கண்கள் மட்டும் ரத்தநிறத்தில் இருந்ததே தவிர, அவனின் முகம் சாதாரணமாக இருந்தது..
“டேய் ஏழு வருடம் கழித்து தாத்தா, பாட்டியைப் பார்க்க போகிறாய்.. கொஞ்சமாவது முகத்தை சிரித்து போல வைத்து கொள்ளேன்..” என்று கெஞ்சினாள் கீர்த்தி
அவனின் உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு, அவனின் முகத்தில் புன்னகை என்னும் மெல்லிய பூவை படரவிட்டான்..
அந்த மாளிகையில் அனைத்திற்கும் வேலையாட்கள் இருக்க, அவரவர் பணிகளை செய்துக்கொண்டு இருந்தனர்..
வாசலில் கார் சத்தம் கேட்ட சிவரத்தினம், “காமாட்சி நம் வீட்டிற்கு பிள்ளைகள் யாரோ வந்திருக்காங்க வா வந்து யார் என்று பாரு..” என்று நடுஹாலில் நின்று குரல் கொடுத்தார்..
“நம் வீட்டிற்கு யார் வந்திருக்க போறாங்க.. ஒன்னும் நம்ம கல்யாணியும், மாப்பிள்ளைமாக இருக்கும் போய் பாருங்க..” என்று கூறியபடியே சமையல் அறையின் உள்ளே இருந்து வெளிப்பட்டார் காமாட்சி!
வாசலில் கார் நிற்க, ரோஹித்தும் கீர்த்தியும் இறங்கினர்.. அதற்குள் சிவரத்தினம் வாயிலை நோக்கி அடியெடுத்து வைக்க, அங்கே நின்றவர்களைப் பார்த்து அதிர்ச்சியில்அப்படியே வாயடைத்து நின்றார்..
Onumeee puriyala marmmaaa irukuthu ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top