அத்தியாயம் – 8
வீட்டிற்கு மகள், மருமகன் வந்திருப்பதாக நினைத்து வாசலுக்கு வந்த சிவரத்தினம், காரில் இருந்து இறக்கிய பேரனைப் பார்த்து அப்படியே வாயடைத்து நின்றார்..
கணவனின் பின்னோடு வாசலுக்கு வந்த காமாட்சி, “என்னங்க யார் வந்திருக்காங்க..?” என்று அவரைக் கேட்டவண்ணம் வாசலைப் பார்க்க அங்கே பேரனைப் பார்த்தவர்..
“ரோஹித் கண்ணா!” என்று கண்களில் கண்ணீர் மழை பொழிய ரோஹித்தை நோக்கிச் சென்று அவனை அணைத்துக் கண்ணீர் விட்டார்.. தன்னை வந்து கட்டிக்கொண்ட பாட்டியைக் கட்டிக் கொண்டவன்,
“பாட்டி நான் வந்துவிட்டேன் இல்ல அழக்கூடாது..” என்று அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டான் ரோஹித்.. அவனின் முகத்தை கையில் தாங்கிய காமாட்சி,
“எங்களைப் பார்க்க வர உனக்கு ஏழு வருசம் ஆச்சாடா கண்ணா..” என்று கேட்க, “பாட்டி நான் இங்கு வராமல் எங்கே போக போகிறேன்..” என்று கேட்டவன், அவனின் பாட்டியை அணைத்துக் கொண்டு தாத்தாவைக் கேள்வியாகப் பார்க்க அவரின் பார்வையில் எந்த வேறுபாடும் இல்லை..
“என்ன தாத்தா வந்தவனை வாசலில் நிற்க வைத்தே அனுப்பிவிடலாம் என்று யோசனை செய்வது போல இருக்கிறது..?” என்று கேலியாகக் கேட்டான்..
“உன்னைப் பார்த்து எத்தனை வருடம் ஆகிவிட்டது.. நீ இப்படி திடீரென்று வந்தது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது கண்ணா..” என்று கூறியவர்,
“காமாட்சி நீ போய் ஆரத்தி கரைத்து எடுத்து வா..” என்று கூற அதுவரையில் அழுதுக்கொண்டு இருந்தவர், ஆரத்தி கரைக்க உள்ளே சென்றார்..
“வாம்மா கீர்த்தி! நல்ல இருக்கிறாயா..?” என்று கேட்ட சிவரத்தினத்தை ஆச்சரியமாக பார்த்தாள் கீர்த்தி..
அதுவரையில் பாட்டி, தாத்தா, பேரன் மூவருக்கும் நடக்கும் பாசத்தைப் பகிர்ந்துக் கொள்வதை அருகில் இருந்து கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திக்கு தாத்தாவின் அழைப்பு ஆச்சரியமாக இருந்தது..
“தாத்தா என்னோட பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்று அவள் ஆச்சர்யத்துடன் கேட்டாள்.. அதுவரையில் பழக்கம் இல்லாத இடத்திற்கு வந்து விட்டோமே! என்ற எண்ணம் அவளின் உள்ளே சிறிது தயக்கம் இருந்தது...
ரோஹித் தாத்தாவின் வரவேற்பில் அவளின் மனதின் சங்கடம் மறைந்து மெல்லிய புன்னகை அவளின் முகத்தில் அழகாக படர்ந்தது..
அவளின் முகத்தில் வந்த தெளிவைப் பார்த்த சிவரத்தினம், “என்னம்மா கீர்த்தி பழக்கம் இல்லாத இடத்திற்கு வந்துவிட்டோம் என்று கொஞ்சம் கலக்கமாகவே இருந்தாய் போல, இப்பொழுது தயக்கம் இல்லையே..?!” என்று சந்தோசமாகக் கேட்டார்..
அவளின் மனதில் ஓடியதை நொடியில் படித்ததை நினைத்து ‘இல்லை’ என்று தலையசைத்தாள்..
“தாத்தா நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லை..” என்று மெல்லிய புன்னகை முகத்தில் படரக் கேட்டாள்..
“இந்த ஏழு வருடத்தில் உன்னைப் பற்றி பேசுவது தானே என்னோட மகளிற்கு வேலை..” என்று சிரித்துவிட்டு, நிமிர்ந்து பார்க்க, காமாட்சி ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார்..
“இருவரும் சேர்ந்து நில்லுங்க கண்ணா..” என்று இருவருக்கும் சேர்ந்து ஆரத்தி சுற்றினார்..
மழையில் நனைந்து வந்த மதுமிதா, வீட்டிற்குள் நுழைந்த மறுநொடி, “அபூர்வா இங்கே வா..” என்று அழைக்க உள்ளே இருந்த டெடிபியர் உடன் வெளி வந்தாள்
“உன்னோட டெடிபியரை அங்கே வைத்துவிட்டு வா அபூ.. தலை துவட்டிவிட்டு ட்ரஸ் மாற்றிவிட்டு அப்புறமாக விளையாடலாம்..” என்று சொன்ன மது அவளைத் தூக்கிச்சென்று குளிக்க வைத்தாள்..
“எதுக்கு அம்மா குளிக்க வைக்கிறீங்க..” என்று கேட்டாள் மகள்..
“மழையில் நனைத்தால் உடம்பு வலிக்கும்.. நீங்க குட்டி பொண்ணா அதனால் உனக்கு ரொம்ப வலிக்கும் செல்லம் அதுதான்.. குளித்துவிட்டு ட்ரஸ் மாற்றிக்கலாம்..” என்று விளக்கம் கொடுத்து அவளைக் குளிக்க வைத்து தலையை துவட்டி, ட்ரஸ் மாற்றி விட்டாள் மது..
“அம்மா நான் பாட்டி வீட்டிற்கு போய்விட்டு வருகிறேன்..” என்று அனுமதி கேட்ட மகளைப் பார்த்தவள், “ம்ம் சரி.. ஆனால் சீக்கிரம் வரவேண்டும்.. அம்மா உனக்காக பணியாரம் செய்ய போகிறேன்..” என்று அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து மகளின் கன்னத்தில் முத்தம் பதித்தாள் மது..
“என்னோட செல்ல அம்மா..” என்று மதுவின் தாடையைப் பிடித்துக் கொஞ்சிய அபூர்வா, அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தாள்..
“அம்மா நான் நீங்க செய்வதற்குள் வந்துவிடுகிறேன்..” என்று வெளியே சென்றாள் அபூர்வா..
மகள் சென்ற திசைப் பார்த்து நின்ற மதுவின் மனம், ‘இவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாதே..’ என்று நினைத்தவள் மனதில் ரோஹித்தின் உருவம் தோன்றவே,
‘யாருமே நம்பாத பொழுது நீங்க மட்டும் நம்புவீங்க என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.. நீங்கள் என்னை நம்பாமல் காயப்படுத்த நினைத்தாலும் அதுக்கும் நான் தயார்தான்..’ என்று நினைத்தவள் சமையல் அறையை நோக்கிச் சென்றாள்..
“உள்ளே போங்க கண்ணா..” என்று இருவரிடமும் சொன்னவர் ஆரத்திய கீழே உற்றிவிட்டு வீட்டின் உள்ளே வர, பின் வாசலின் வழியாக உள்ளே வந்த அபூர்வா,
“தாத்தா எங்கே இருக்கீங்க..?!” என்று கத்தியபடி உள்ளே வர, வீட்டின் உள்ளே நுழைந்த ரோஹித்தும், கீர்த்தியும் அவளைப் பார்த்து கொஞ்சம் அதிரவே செய்தனர்..
“இங்கே இருக்கேன் குட்டிம்மா..” என்று அவர்களின் பின்னோடு வீட்டுக்குள் வந்த சிவரத்தினம் குரல் கொடுக்க, அவளைப் பார்த்து அபூர்வா அரிசிப்பல் தெரிய அழகாக சிரித்தாள்..
“குட்டிம்மா.. அதுக்குள் ட்ரஸ் மாத்திட்டியா..?! நீ மழையில் நனைந்து உன்னோட பாட்டிக்கு தெரியாது..” என்று சத்தமாக சொன்னார்..
“ஐயோ தாத்தா! பாட்டிக்கிட்ட நீங்களே மட்டி விட்டிருவீங்க போல.. உஸ்ஸ்ஸ்ஸ்..” என்று வாயின் மேல் விரல் வைத்து அவரை அமைதியாக இருக்க சொன்னாள்.. அவரும் அப்படியே செய்தார்.
இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்த ரோஹித்திற்கு ஆச்சர்யமாக இருந்தது.. ஒரு குட்டி பொண்ணு என்ன விவரமாகப் பேசுகிறாள்.. அதுவும் அவனது தாத்தாவிடம் பேசுகிறாள் என்று அவனுக்கே ஆச்சர்யம் தாங்கவே இல்லை..
அந்த குட்டிபெண்ணைப் பார்த்து, ‘இந்த குட்டி இங்கே தான் இருக்கிறாளா..?!’ என்று ஒருபக்கம் மனம் துள்ளலுடன் நினைத்தாலும் மறுபக்கம் ரோஹித், ‘இவளின் அம்மாவை நல்ல திட்டிவிடுவான்’ என்றும் நினைத்தாள்..
அப்பொழுதுதான் புதிதாக வந்த இருவரையும் அவள் பார்த்துவிட்டு, ‘அச்சச்சோ..!’ அம்மாவைத் திட்ட இந்த அங்கிள் இங்கேயே வந்துட்டாங்க..’ என்று கையை உதறியவள்..
“தாத்தா இவங்க யாரு..?” என்று தாத்தாவின் அருகில் சென்று கேட்க, அவளைத் தூக்கிக்கொண்டவர்,
“இது என்னோட பேரன் ரோஹித்.. இது என்னோட பேத்தி கீர்த்தனா..” என்று அறிமுகம் செய்ய அவர்களைப் பார்த்தவள்,
“நான் யார் தாத்தா..” என்று அவரிடமே கேட்டாள் அபூர்வா.. அவளின் கேள்வியில் ஆச்சர்யமாக பார்ப்பதே ரோஹித், கீர்த்தியின் வேலையாக இருந்தது..
“நீயும் என்னோட பேத்திதான் கண்ணா..” என்று உள்ளே வந்த காமாட்சி, “உள்ளே வா கண்ணா..” என்று இருவரையும் வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்..
வீட்டிற்கு மகள், மருமகன் வந்திருப்பதாக நினைத்து வாசலுக்கு வந்த சிவரத்தினம், காரில் இருந்து இறக்கிய பேரனைப் பார்த்து அப்படியே வாயடைத்து நின்றார்..
கணவனின் பின்னோடு வாசலுக்கு வந்த காமாட்சி, “என்னங்க யார் வந்திருக்காங்க..?” என்று அவரைக் கேட்டவண்ணம் வாசலைப் பார்க்க அங்கே பேரனைப் பார்த்தவர்..
“ரோஹித் கண்ணா!” என்று கண்களில் கண்ணீர் மழை பொழிய ரோஹித்தை நோக்கிச் சென்று அவனை அணைத்துக் கண்ணீர் விட்டார்.. தன்னை வந்து கட்டிக்கொண்ட பாட்டியைக் கட்டிக் கொண்டவன்,
“பாட்டி நான் வந்துவிட்டேன் இல்ல அழக்கூடாது..” என்று அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டான் ரோஹித்.. அவனின் முகத்தை கையில் தாங்கிய காமாட்சி,
“எங்களைப் பார்க்க வர உனக்கு ஏழு வருசம் ஆச்சாடா கண்ணா..” என்று கேட்க, “பாட்டி நான் இங்கு வராமல் எங்கே போக போகிறேன்..” என்று கேட்டவன், அவனின் பாட்டியை அணைத்துக் கொண்டு தாத்தாவைக் கேள்வியாகப் பார்க்க அவரின் பார்வையில் எந்த வேறுபாடும் இல்லை..
“என்ன தாத்தா வந்தவனை வாசலில் நிற்க வைத்தே அனுப்பிவிடலாம் என்று யோசனை செய்வது போல இருக்கிறது..?” என்று கேலியாகக் கேட்டான்..
“உன்னைப் பார்த்து எத்தனை வருடம் ஆகிவிட்டது.. நீ இப்படி திடீரென்று வந்தது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது கண்ணா..” என்று கூறியவர்,
“காமாட்சி நீ போய் ஆரத்தி கரைத்து எடுத்து வா..” என்று கூற அதுவரையில் அழுதுக்கொண்டு இருந்தவர், ஆரத்தி கரைக்க உள்ளே சென்றார்..
“வாம்மா கீர்த்தி! நல்ல இருக்கிறாயா..?” என்று கேட்ட சிவரத்தினத்தை ஆச்சரியமாக பார்த்தாள் கீர்த்தி..
அதுவரையில் பாட்டி, தாத்தா, பேரன் மூவருக்கும் நடக்கும் பாசத்தைப் பகிர்ந்துக் கொள்வதை அருகில் இருந்து கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திக்கு தாத்தாவின் அழைப்பு ஆச்சரியமாக இருந்தது..
“தாத்தா என்னோட பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்று அவள் ஆச்சர்யத்துடன் கேட்டாள்.. அதுவரையில் பழக்கம் இல்லாத இடத்திற்கு வந்து விட்டோமே! என்ற எண்ணம் அவளின் உள்ளே சிறிது தயக்கம் இருந்தது...
ரோஹித் தாத்தாவின் வரவேற்பில் அவளின் மனதின் சங்கடம் மறைந்து மெல்லிய புன்னகை அவளின் முகத்தில் அழகாக படர்ந்தது..
அவளின் முகத்தில் வந்த தெளிவைப் பார்த்த சிவரத்தினம், “என்னம்மா கீர்த்தி பழக்கம் இல்லாத இடத்திற்கு வந்துவிட்டோம் என்று கொஞ்சம் கலக்கமாகவே இருந்தாய் போல, இப்பொழுது தயக்கம் இல்லையே..?!” என்று சந்தோசமாகக் கேட்டார்..
அவளின் மனதில் ஓடியதை நொடியில் படித்ததை நினைத்து ‘இல்லை’ என்று தலையசைத்தாள்..
“தாத்தா நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லை..” என்று மெல்லிய புன்னகை முகத்தில் படரக் கேட்டாள்..
“இந்த ஏழு வருடத்தில் உன்னைப் பற்றி பேசுவது தானே என்னோட மகளிற்கு வேலை..” என்று சிரித்துவிட்டு, நிமிர்ந்து பார்க்க, காமாட்சி ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார்..
“இருவரும் சேர்ந்து நில்லுங்க கண்ணா..” என்று இருவருக்கும் சேர்ந்து ஆரத்தி சுற்றினார்..
மழையில் நனைந்து வந்த மதுமிதா, வீட்டிற்குள் நுழைந்த மறுநொடி, “அபூர்வா இங்கே வா..” என்று அழைக்க உள்ளே இருந்த டெடிபியர் உடன் வெளி வந்தாள்
“உன்னோட டெடிபியரை அங்கே வைத்துவிட்டு வா அபூ.. தலை துவட்டிவிட்டு ட்ரஸ் மாற்றிவிட்டு அப்புறமாக விளையாடலாம்..” என்று சொன்ன மது அவளைத் தூக்கிச்சென்று குளிக்க வைத்தாள்..
“எதுக்கு அம்மா குளிக்க வைக்கிறீங்க..” என்று கேட்டாள் மகள்..
“மழையில் நனைத்தால் உடம்பு வலிக்கும்.. நீங்க குட்டி பொண்ணா அதனால் உனக்கு ரொம்ப வலிக்கும் செல்லம் அதுதான்.. குளித்துவிட்டு ட்ரஸ் மாற்றிக்கலாம்..” என்று விளக்கம் கொடுத்து அவளைக் குளிக்க வைத்து தலையை துவட்டி, ட்ரஸ் மாற்றி விட்டாள் மது..
“அம்மா நான் பாட்டி வீட்டிற்கு போய்விட்டு வருகிறேன்..” என்று அனுமதி கேட்ட மகளைப் பார்த்தவள், “ம்ம் சரி.. ஆனால் சீக்கிரம் வரவேண்டும்.. அம்மா உனக்காக பணியாரம் செய்ய போகிறேன்..” என்று அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து மகளின் கன்னத்தில் முத்தம் பதித்தாள் மது..
“என்னோட செல்ல அம்மா..” என்று மதுவின் தாடையைப் பிடித்துக் கொஞ்சிய அபூர்வா, அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தாள்..
“அம்மா நான் நீங்க செய்வதற்குள் வந்துவிடுகிறேன்..” என்று வெளியே சென்றாள் அபூர்வா..
மகள் சென்ற திசைப் பார்த்து நின்ற மதுவின் மனம், ‘இவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாதே..’ என்று நினைத்தவள் மனதில் ரோஹித்தின் உருவம் தோன்றவே,
‘யாருமே நம்பாத பொழுது நீங்க மட்டும் நம்புவீங்க என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.. நீங்கள் என்னை நம்பாமல் காயப்படுத்த நினைத்தாலும் அதுக்கும் நான் தயார்தான்..’ என்று நினைத்தவள் சமையல் அறையை நோக்கிச் சென்றாள்..
“உள்ளே போங்க கண்ணா..” என்று இருவரிடமும் சொன்னவர் ஆரத்திய கீழே உற்றிவிட்டு வீட்டின் உள்ளே வர, பின் வாசலின் வழியாக உள்ளே வந்த அபூர்வா,
“தாத்தா எங்கே இருக்கீங்க..?!” என்று கத்தியபடி உள்ளே வர, வீட்டின் உள்ளே நுழைந்த ரோஹித்தும், கீர்த்தியும் அவளைப் பார்த்து கொஞ்சம் அதிரவே செய்தனர்..
“இங்கே இருக்கேன் குட்டிம்மா..” என்று அவர்களின் பின்னோடு வீட்டுக்குள் வந்த சிவரத்தினம் குரல் கொடுக்க, அவளைப் பார்த்து அபூர்வா அரிசிப்பல் தெரிய அழகாக சிரித்தாள்..
“குட்டிம்மா.. அதுக்குள் ட்ரஸ் மாத்திட்டியா..?! நீ மழையில் நனைந்து உன்னோட பாட்டிக்கு தெரியாது..” என்று சத்தமாக சொன்னார்..
“ஐயோ தாத்தா! பாட்டிக்கிட்ட நீங்களே மட்டி விட்டிருவீங்க போல.. உஸ்ஸ்ஸ்ஸ்..” என்று வாயின் மேல் விரல் வைத்து அவரை அமைதியாக இருக்க சொன்னாள்.. அவரும் அப்படியே செய்தார்.
இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்த ரோஹித்திற்கு ஆச்சர்யமாக இருந்தது.. ஒரு குட்டி பொண்ணு என்ன விவரமாகப் பேசுகிறாள்.. அதுவும் அவனது தாத்தாவிடம் பேசுகிறாள் என்று அவனுக்கே ஆச்சர்யம் தாங்கவே இல்லை..
அந்த குட்டிபெண்ணைப் பார்த்து, ‘இந்த குட்டி இங்கே தான் இருக்கிறாளா..?!’ என்று ஒருபக்கம் மனம் துள்ளலுடன் நினைத்தாலும் மறுபக்கம் ரோஹித், ‘இவளின் அம்மாவை நல்ல திட்டிவிடுவான்’ என்றும் நினைத்தாள்..
அப்பொழுதுதான் புதிதாக வந்த இருவரையும் அவள் பார்த்துவிட்டு, ‘அச்சச்சோ..!’ அம்மாவைத் திட்ட இந்த அங்கிள் இங்கேயே வந்துட்டாங்க..’ என்று கையை உதறியவள்..
“தாத்தா இவங்க யாரு..?” என்று தாத்தாவின் அருகில் சென்று கேட்க, அவளைத் தூக்கிக்கொண்டவர்,
“இது என்னோட பேரன் ரோஹித்.. இது என்னோட பேத்தி கீர்த்தனா..” என்று அறிமுகம் செய்ய அவர்களைப் பார்த்தவள்,
“நான் யார் தாத்தா..” என்று அவரிடமே கேட்டாள் அபூர்வா.. அவளின் கேள்வியில் ஆச்சர்யமாக பார்ப்பதே ரோஹித், கீர்த்தியின் வேலையாக இருந்தது..
“நீயும் என்னோட பேத்திதான் கண்ணா..” என்று உள்ளே வந்த காமாட்சி, “உள்ளே வா கண்ணா..” என்று இருவரையும் வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்..