• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
“அபூர்வா மழையில் நனைந்தாய் போல.. எங்கே இருவரும் போட்டு வந்தீங்க..? மழை வரும் என்று தெரிந்தே இருவரும் வெளியே சென்றிருக்கீங்க..?” என்று அவளைக் குறுக்கு விசாரணை செய்ய,
“இல்ல பாட்டி நாங்க ரோஜா செடி வாங்க போனோம்.. மழை வருவதற்குள் வந்துவிடலாம் என்று தான் சென்றோம்.. செடி வாங்கிவிட்டு வருவதற்குள் மழை வந்துவிட்டது..” என்று பாட்டிக்கு பதில் கூறியவள்,
தாத்தாவின் அருகில் குனிந்து, “இதுக்குத்தான் தாத்தா சொன்னேன்.. நீங்க நான் சொல்வதைக் கேட்காமல் என்னை மாட்டி விட்டிடிங்க..?!” என்று அவரிடம் ரகசியம் பேசினாள்.. அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தார்..
“தாத்தா என்னை மாட்டிவிட்டு சிரிக்கிறீங்க..?” என்று கேட்டாள்
“இல்லம்மா நானே உன்னோட பாட்டிக்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன் எனக்கு கம்பெனிக்கு ஆள் வேண்டாமா..?” என்று சிரிப்புடன் கேட்டார்..
“அதுக்கு என்னை இப்படியா மாட்டிவிடுவது போங்க தாத்தா நீங்க..” என்று சிணுங்கினாள் அபூர்வா
அவளின் பேச்சில் கவரப்பட்ட கீர்த்தி, “உன்னோட பெயர் என்ன குட்டி..?” என்று சந்தோசமாகக் கேட்டாள் கீர்த்தி..
“மை நேம் இஸ் அபூர்வா..” என்று சொல்ல, “அப்படியா..!” என்றுக் கேட்ட கீர்த்தி, அவளைத் தூக்கிக் கொள்ள அவளிடம் சீக்கிரம் சென்றவள்,
“ஆண்ட்டி தாத்தா பாட்டிக்கிட்ட அங்கே அம்மாவிடம் அங்கிள் சண்டை போட்டதைச் சொல்லாதீங்க..” என்று அவளின் காதோடு இரகசியமாக சொன்னாள் அபூர்வா,
அந்த குழந்தைக்கு இருந்த அறிவு திறனைப் பார்த்து வியந்த கீர்த்தி, “ஏன் சொல்ல கூடாது..?!” என்று இரகசியமாகக் கேட்டாள்
“பாட்டி அம்மாவைத் திட்டுவாங்க.. அப்புறம் வருத்தம் படுவாங்க.. அம்மா, பாட்டி, தாத்தா பாவம் இல்ல அதுதான் சொல்லாதீங்க..” என்று கூறினாள் அபூர்வா
“சரி செல்லம் ஆண்ட்டி யாரிடமும் எதுவும் சொல்லமாட்டேன்..” என்று அவளின் இரு கன்னத்திலும் முத்தம் வைத்தாள்.. அவளும் கீர்த்தியின் இரு கன்னத்திலும் முத்தம் பதித்தாள்..
முன்னால் வீட்டிற்குள் சென்ற ரோஹித், ‘இந்த குட்டிப்பெண் இங்கே இருக்கிறாள் என்றால் மதுவும் இங்குதான் இருக்கிறாள்..’ என்று மனதில் நினைத்தவன் அவளைக் கண்களால் தேடினான்..
அவள் அவனின் கண்ணீர்க்கு தட்டுப்படவே இல்லை.. ‘எங்கேடி இருக்கிறாய்..?’ என்று மனதில் நினைத்தவன் வீடு முழுவதும் பார்வையால் தேடினான்..
அதற்குள் எல்லோரும் வீட்டின் உள்ளே வர, “தாத்தா இந்த குட்டிம்மா யாரு..? அதுவும் என்னோட இடத்திற்கே வெட்டு வைக்கிறாள்..?” என்று சிரிப்புடன் கேட்டான்
“நீங்க எல்லோரும் பேசிட்டு இருங்க.. நான் உங்களுக்கு சாப்பிட எதாவது எடுத்து வருகிறேன்!” என்று சொன்ன காமாட்சி சமையல் அறையை நோக்கி வேகமாக நடந்தாள்..
“நீ உட்காரு ரோஹித்..” என்று சோபாவைக் காட்டிய சிவரத்தினம், ஒரு சோபாவில் ரோஹித்தும், இன்னொரு சோபாவில் கீர்த்தியும், அபூர்வாவும், அமர்ந்தனர்..
“உன்னோட கேள்விக்கு எல்லாம் நான் அப்புறமாக பதில் சொல்கிறேன்.. நீ எப்பொழுது இந்தியா வந்தாய்..?” என்று கேட்டார்..
“இரண்டு நாள் தான் தாத்தா ஆகிறது.. அங்கிருந்து வந்தும் உங்களைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அதுதான் உடனே கிளம்பி வந்துவிட்டேன்..” என்று பதில் கூறினான் அவரின் பேரன்
“கீர்த்திம்மா நீயும் இந்தியா வருவாய் என்று தெரியும்.. ஆனால் இவ்வளவு விரைவாக நான் உன்னை எதிர்பார்க்கவேயில்லை..” என்று கூற அதை அவள் காதில் வாங்கினாள் தானே! அவள் அபூர்வா உடன் பேசுவதில் ரொம்ப தீவிரமாக இருந்தாள்..
கீர்த்தியும், அபூர்வாவும் பேசுவதை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹித்..
“ம்ம் இவளுக்கும் ஐஸ் வைத்துவிட்டாளா..?” என்று கேட்டு இருவரையும் பார்த்தவர், “நீ என்னப்பா கேட்டாய்..?” என்று பேரனின் பக்கம் திரும்பினார்..
அவரின் கேள்வியில் அவரை நிமிர்ந்து பார்த்த ரோஹித், “இவள் யாரு தாத்தா..?” என்று குழந்தையைப் பார்த்தவண்ணம் கேட்டான்..
“இவள் நம்முடைய பள்ளிக்கூடத்தில் வேலைப் பார்க்கும் பெண்ணின் மகள்.. இவள் தான் இந்த வீட்டின் உயிர்ப்பே..” என்று கூறியவர்,
“இவள் இங்கே வரும் பொழுது, இவள் ஆறு மாதக்குழந்தை..” என்று கீர்த்தியின் மடியில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்த அபூர்வாவைப் பார்த்தவர்,
“இவளின் அம்மாவிற்கு யாருமே இல்லை.. இவள் தான் அவளின் சொந்தம், பந்தம் எல்லாம்..!” என்று சொல்ல அதுவரையில் அவர் சொன்னதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியானான்,
“என்ன தாத்தா சொல்றீங்க..?” என்று கேட்டவன், “இவளின் அம்மாவிற்கு சொந்தம், பந்தம் என்று யாரும் இல்லைப்பா..” என்று சொல்லவும், அவனின் பாட்டி சிற்றுண்டியுடன் வரவும் சரியாக இருந்தது..
இவர்களின் பேச்சைக் கேட்ட கீர்த்தி, ‘ரோஹித் எதுக்கு இவளின் அம்மா பற்றி இவ்வளவு விசாரிக்கிறான்..?’ என்ற கேள்வி அவளின் மனதில் எழுந்தது..
“இந்தப்பா உனக்கு பிடித்த கேசரி கிளறி இருக்கிறேன்..” என்று கூறியவர், பேரனின் கையிலும், கீர்த்தியின் கையிலும் சிற்றுண்டியைக் கொடுத்தார்..
“இதை சாப்பிட்டுக் கொண்டிருங்க.. நான் உங்களுக்கு சாப்பிட எடுத்து வைக்கிறேன்..” என்று சொன்னவர் உள்ளே சென்றார்,
ரோஹித் மனம், ‘இவள் இன்னும் என்னென்ன பொய் சொல்லி வைத்திருக்கிறாள்.. இல்லை இந்த மூன்று வருடத்தில் இவளுக்கு திருமணம் நடந்தபிறகு இவளின் அப்பா, அம்மா இருவரும் இறந்துவிட்டார்களோ..?’ என்று யோசனையுடன் அமர்ந்திருந்தான் ரோஹித்..
“தாத்தா அம்மா என்னைத் தேடிக்கொண்டு இருப்பாங்க.. நான் அம்மாவிடம் போகிறேன்..” என்று அவள் எழுந்து செல்ல, அவளைத் தொடர்ந்தது ரோஹித்தின் பார்வை..!
“என்னம்மா சொன்னாள் அபூக்குட்டி!” என்று சிரித்தவர், “உன்னிடம் தனியாக ரகசியம் எல்லாம் பேசினாள்..” என்றவரிடம், “தாத்தா அவளிற்கு இரண்டு வயது இருக்குமா..?” என்று கேட்டாள் கீர்த்தி..
“ம்ம் இரண்டு வருடம் தான் ஆகிறது.. அவளின் அம்மா என்றால் இவளுக்கும் உயிர்..” என்று கூறியவர், “இருவருக்கும் மேல் உள்ள அறைகள் உள்ளது.. இருவரும் சென்று அலுப்பு தீர குளித்துவிட்டு வாருங்க..” என்று கூறியவர் எழுந்து பின்புறம் சென்றார்..
ரோஹித் இன்னும் யோசனை கலையாமல் அமர்ந்திருந்தான்.. அவனை யோசனையுடன் பார்த்த கீர்த்தி, “என்ன ரோஹித் பழைய நினைவுகளா..?” என்று அவனிடம் கேட்டாள்
அப்பொழுதுதான் யோசனை கலைந்து எழுந்தவன், “ம்ம் பழைய நினைவுகள் தான்..” என்று பதில் கொடுத்தவன் மாடிக்குச் சென்றான்..
அவனைப் பார்வையில் தொடர்ந்த கீர்த்தி, “நீ இப்பொழுதுதான் பேசவே ஆரமித்திருக்கிறாய் ரோஹித்.. உன்னோட மனதில் உள்ள பெண்ணைக் கண்டறிந்து அவளை உன்னிடம் சேர்க்காமல் நான் இந்தியா விட்டு போவதாக இல்லை..” என்று கூறியவள் அவனைப் பின்தொடந்தாள்..
Sema interesting sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top