• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இந்தச் சிறுகதை உங்களுக்கு எதனால் பிடித்திருக்கிறது?

  • பிடிக்கவில்லை!

  • கதைக்கரு

  • எழுத்து நடை

  • கதையமைப்பு


Results are only viewable after voting.

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
“என்ன டா முழிச்சுட்டியா?” என்று கேட்ட கதிர்வேலனின் அலட்சியத்தில் ரொம்பவே அதிர்ந்து போனார் ரகுநந்தன். அவர் ஏதும் கேட்பதற்கு முன் மேலும் அதிர்சியாக அவர் கண்ணில் பட்டது அந்தக் கோப்பு! உள்ளிருப்பதை வெளிக்காட்டிய அந்தக் கோப்பில் இருந்த முதல் தாளில் ரகுநந்தனின் புகைப்படத்துடன் கூடிய அடிப்படை விவரங்கள் அடங்கி இருந்தன. டாஸியர் பைல்!

கதிர்வேலனுடனான தனது சந்திப்பு தான் எண்ணுவதைப் போல் அத்தனை எதேச்சையானது அல்ல என்பதை அவர் உணர்ந்துகொண்டு எழ முற்பட்ட பொழுது, தான் பிணைக்கப்பட்டிருந்த ’சீட் பெல்ட்டும்’ எத்தகையது என்பதை உணர்ந்துகொண்டார். கதிர்வேலன் ரகுநந்தனைப் பார்த்துச் சிரித்த சிரிப்பில் கலப்படமில்லாத குரோதம் இருந்தது.

எதுவும் செய்யச் சக்தியற்று இருந்த ரகுநந்தன் கதிர்வேலன் அந்த இயந்திரத்தை இயக்குவதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் அப்படிக் கடந்ததோ தெரியாது (இந்தக் கதையைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கலான வாக்கியம்!) இயந்திரம் மெல்ல மெல்ல இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. ’பம்’ என்று தரையிறங்கும் உணர்வு ஏற்பட்டது. விளக்குகள் ஒலிகள் எல்லாம் அடங்கும் வரை காத்திருந்த கதிர்வேலன், தன்னை சீட்-பெல்ட்டில் இருந்து விடுவித்துக்கொண்டு, ரகுநந்தனின் ’கட்டுகளை’ச் சரிபார்த்தார், பிறகு எங்கிருந்தோ ஒரு மாஸ்கிங் டேப்பை எடுத்து ரகுநந்தனின் வாயைச் சுற்றி இறுக்க ஒட்டினார், ஒன்றுமே சொல்லாமல் ரகுநந்தனைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு கதவைத் திறந்து இறங்கி வெளியேறி மீண்டும் கதவைச் சாற்றினார்.

’ஆபத்து’ என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்திருந்த ரகுநந்தன், என்ன ஏன் யார் எப்படி என்றெல்லாம் ஆராய அவகாசமின்றி தப்பிக்கும் வழியை யோசித்தார். இருக்கையின் பிணைப்பிற்கு உட்பட்டு அப்படியும் இப்படியும் அசைந்து ஆடினார். இயந்திரமே குலுங்கும் படி அவர் அடிய ஆட்டத்தில் ’டப்’ என்று அவருக்கு வழி பிறந்தது, எங்கோ ஒரு பலவீனமான ‘ஸ்ட்ராப்’ அறுந்துகொண்டு ரகுநந்தனின் கட்டு கொஞ்சம் இளகியது, அதைப் பயன்படுத்திக்கொண்டு அப்படியும் இப்படியும் அசைந்து நெளிந்து கட்டிலிருந்து முழுவதுமாகவே தன்னை விடுவித்துக்கொண்டார் ரகுநந்தன்.

இயந்திரத்தின் கதவைத் திறந்து வெளியில் வந்தவருக்கு ஒரு புத்தம் புதிய உலகம் காத்திருந்தது. அந்த இரவில் அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஒளித்துணுக்குகள்தான். தொலைவில், வெவ்வேறு அளவில், வெவ்வேறு உயரத்தில், வெவ்வேறு வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த ஒளித்துணுக்குகள்! பெரியதாய் நகர்ந்தவை கட்டிடங்கள் என்பதும், சிறியதாய் நகர்ந்தவை வாகனங்கள் என்பதும் அவருக்கு மெல்ல புரியலாயிற்று, ரகுநந்தனின் கைகளும் தொடைகளும் குளிரில் நடுங்குவதைப் போல லேசாய் நடுங்கின... முதுகில் ஐஸ்கட்டி வைத்ததைப் போல ஒரு சில்லிப்பு பரவியது... ’உண்மையாகவே எதிர்காலத்தில் நின்று கொண்டிருக்கின்றோம்’ என்ற உணர்வு கொடுத்த பரிசுகள் அவை!

மெல்ல ரகுநந்தனின் மூளை அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கியது, ஆனால் அதற்கு ஒன்றும் புரியவில்லை. எந்த காலத்தில் இருக்கிறோம் என்றே தெரியாமல் ஒரு ஆபத்தில் இருக்கிறோம், இங்கே யார் நண்பன் யார் எதிரி என்று எப்படித் தெரிந்துகொள்வது? ரகுநந்தன் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டார் அவருக்கு அங்கே அறிமுகமானதாய் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் – காலப்பயண இயந்திரம்!

இயந்திரத்திற்குள் ஏறி கதவை அடைத்துக்கொண்ட ரகுநந்தன் உள்ளே எப்போதும் ஒளிர்ந்த ஒரு எல்.ஈ.டி-யின் வெளிச்சத்தில் அதை கொஞ்சம் ஆய்ந்து கவனிக்கலானார், அதிக சிரமமின்றி அதன் பிரதான விசையை அடையாளம் கண்டு தட்டிவிட்டார், இயந்திரம் உயிர்பெற்றது, ‘ட்ரிப் ச்சார்ட்டர்’ என்று ஒளிர்ந்த எல்.சி.டி திரையை இயக்குவது ஏ.டி.எம் இயந்திரத்தை இயக்குவது போல் எளிதாகவே தோன்றியது ரகுநந்தனிற்கு, அது அடுத்தடுத்து கேட்ட கேள்விகளுக்கு விரல் நுனியால் பதில்களைத் தொட்டுக்கொண்டே வந்தார், இறுதியாய் அது ‘என்கேஜ்?’ என்று கேட்டதற்கு அவர் ‘யெஸ்’ என்று தொட்டதுதான் தாமதம், இயந்திரம் தனது ’பீப்’ ‘டிக்’ ‘க்ளின்’ ‘க்ரக்’ குரலில் கிளம்பிவிட்டோம் என்று அறிவித்தது, ரகுநந்தன் அவசர அவசரமாய் தனது சீட்-பெல்டை அணிந்துகொண்டார்.

இயந்திரத்தை விட்டு இறங்கி (தனது பழைய) நிகழ்காலம்தான் என்று உறுதிபடுத்திக்கொண்டு நிம்மதி பெருமூச்சு விட இருந்த ரகுநந்தனிற்கு ஒரு பேரதிர்ச்சி கண்ணில் பட்டது, சாலையின் மறுமுனையில் ரகுநந்தன் நடந்து போய்கொண்டிருந்தார்!

‘படால்’ என யாரோ அறைந்ததைப் போல விஷயம் புரிந்தது ரகுநந்தனிற்கு, என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தவரை அந்தச் சிறுவன் கற்பனை ஸ்கூட்டரை ஓட்டியபடி கடந்த பொழுது ரகுநந்தனின் மூளை கடகடவென செயல்படத் தொடங்கியது, சட்டென அந்தச் சிறுவனை நிறுத்தி வைத்துக்கொண்டு, தன் பைஜாமா பையைத் துழாவி, ஒரு பேனாவையும் குறிப்பு நோட்டையும் எடுத்தார், அதில் ஒரு பக்கத்தில் கடகடவென எழுதியபடியே அந்தப் பையனிடம் “நான் கொடுக்குறத அதோ அங்க போற அந்த ஆள்கிட்ட கொடுத்துரு...” என்றார்,

“தந்தா எனக்கு என்ன தருவ?” என்று கேட்டான் பையன், ரகுநந்தனின் பேனா பாதியில் எழுதாமல் திக்கியது, அதை உதறி உதறி எழுதினார், பையன் குதிக்கத் தொடங்கினான், “தந்தா எனக்கு என்ன தருவ?” என்று அந்த வாக்கியத்தை மனப்பாடம் செய்கிறவன் போல மீண்டும் மீண்டும் கேட்க தொடங்கினான், ”அட இருடா...” என்று பேனாவின் மீது இருந்த வெறுப்பை அவன் மீது காட்டினார், அவன் “நான் போறேன் போ!” என்று கோவித்தான், அவனைப் பிடித்து இழுத்து, எழுதிய வரை போதும் என்று எண்ணியவராய் ரகுநந்தன் அந்தத் தாளைக் கிழித்து அவனிடம் கொடுத்து ”அவர்கிட்ட கொடு போ” என்று விரட்டினார், “எனக்கு?” என்று நகராமல் நின்றான் பையன், இரண்டு கைகளாலும் தன் பைஜாமாவின் பைகளைக் குடைந்த ரகுநந்தனின் இடதுகையில் ரூபாய் தாள் ஒன்று சிக்கியது, அதை பையனிடம் கொடுத்தார், “இந்தா! சீக்கிரம் போ!”

“ஐய்... பத்து ரூபா...” என்று தன் கற்பனை வண்டியில் கிளம்பி ஓடினான் சிறுவன், அவன் கையில் இருந்த அந்த ரூபாயில் காந்தி சிரிக்க வேண்டிய இடத்தில் யாரோ ஒரு தலைப்பாகை இளைஞன் சிரித்துக்கொண்டிருந்தான்!
* * * * * * * * *
[முற்றும்]​
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயநரசிம்மன் தம்பி
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
தன் பேச்சை தானே கேட்கவில்லையே ரகுநந்தன்....
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
தன் பேச்சை தானே கேட்கவில்லையே ரகுநந்தன்....
Correct... Point'a pudichitteenga... ka.ka.ka.po. :)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top