சங்க காலத்தில் இருந்தே ஆண்கள் பெண்களை மயக்கி தான் கைபிடித்து இருக்கின்றனர்... அதற்கு கவிஞரும் விதிவிலக்கு அல்ல... கவிஞர் பேசி பேசியே கண்ணம்மாவை மட்டும் அல்ல நம் அனைவரையும் விட்டில் பூச்சி போல அவரின்பால் இழுத்துக்கொண்டார்....
கவிஞர் முல்லை நிலத்தை விட்டு மருத்திற்கு வந்து விட்டார் ... போலும் ?? (காட்டிலாகா அதிகாரி இப்ப விவசாயி ஆனது)
கள்ளை வைத்து வித்தை காட்டுவதில் மன்னனாம் பாரி அதுபோல நீயும் சங்க இலக்கியத்தில் இருந்து சொல்லேடுத்து வசனம் தொடுத்தாலும்... அதில் கூட்டி குறைத்து நீ செய்யும் வித்தை இருக்கே அட! அட!!??
அகநானூறில் இருந்த காட்டிய மேற்கோள் பிரமாதம் ... நீண்ட கூந்தலுக்கான காரணம் இன்று தான் புரிந்தது??
“அது என்ன Mrs. யுகேந்திரன் நான் சொல்கிறேன் இனிமேல் நீங்க Mr. நித்திலா” ??? அம்மாடி நீ பாரதியின் கண்ணம்மா என்று நிரூபித்துவிட்டாய்...??
துரோகம் - இருப்பதிலேயே பெரும் வலி தருவது அது தான்... பெற்றவர்கள் தான் குழந்தைகளின் முன்னுதாரணம் அப்படி பட்ட தந்தை இப்படி பட்ட ஒரு இழிவான செயலை செய்ததை ஏற்று கொள்ள முடியாது... யுகி தனக்கு தானே ஒரு மாய வலை பின்னி அதில் அவனுடைய வலியை மறைத்து கொள்கிறான் என்று சொன்ன இடம் மிக அழகாக இருந்தது....
நூல் அருந்த பட்டம் போல ...
கவிஞருக்கு கை விலங்கு நீக்கப்பட்டு ... இன்ப கடலில் நீந்தி, முழ்கி முத்து எடுக்க வாழ்த்துக்கள் ????
???