சுற்றிலும் இருள் சூழ்ந்து இருக்க வேகமாக தன் பைக்கில் ஆள் அரவமற்ற அந்த சாலையில் பறந்து சென்று கொண்டிருந்தான் அஜய்ராஜ்.
ஆறு அடி உயரம், அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பானே என்ற பாடல் வரிகள் அவனுக்கு கச்சிதமாக பொருந்தும்.
ஆனால் அவன் முகத்தில் மருந்துக்கேனும் சிரிப்பு என்பது இருக்கவில்லை.
இருபத்து எட்டு வயதை நெருங்கி கொண்டிருக்கும் அஜய்ராஜ் அஸிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்.
கடுமையான முகத்துடன் விசாரணைகளை மேற்கொள்வதால் என்னவோ வெளி உலகில் அவன் சிரித்தே பல வருடங்கள் ஆயிற்று.
ஆனால் வீட்டில் எப்போதும் கலகலப்பாக இருக்கும் அஜய் சில தினங்களாக வீட்டிலும் தன்னை மறந்து சுற்றி கொண்டு இருந்தான்.
நைட் டியூட்டி முடிந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த அஜயின் முகத்தில் பல்வேறு சிந்தனைகள் இன்னும் ஓடி கொண்டேயிருந்தது.
சிந்தனை வாய்ந்த முகத்துடன் வீட்டுக்குள் நுழைந்த அஜய்ராஜ் எதிரில் தன்னையே பார்த்து கொண்டு நின்ற தன் அன்னை கனகாவை கண்டு கொள்ளாமலேயே அவரை கடந்து தன்னறைக்குள் சென்று நுழைந்து கொள்ள கனகா குழப்பமாகவும், கவலையாகவும் அஜயை பார்த்து கொண்டு நின்றார்.
"என்ன கனகா யோசிச்சுட்டு இருக்க???" என்றவாறு வந்த தன் கணவர் ராஜஷேகரைப் பார்த்த கனகா
"எல்லாம் அஜயை பற்றி தான்....இந்த பையன் வர வர சரியா யாரு கூடவும் பேச மாட்டேங்குறான்....சரியாக சாப்பிட மாட்டேங்குறான்.....அவன் மனசுல என்ன தான் இருக்குதுனுலே தெரியல....." என்று வருத்தமாக கூறவும்
அவர் தோளில் ஆதரவாக கை போட்டு கொண்ட ராஜஷேகர்
"விடும்மா வேலை டென்ஷனா இருக்கும்...நீ போய் டின்னர் ஏற்பாடு பண்ணு....நான் போய் அஜயை கூட்டிட்டு வர்றேன்....." என்று விட்டு செல்ல அஜயின் அறையை நோக்கி சென்ற ராஜஷேகரைப் பார்த்து பெருமூச்சு விட்ட வண்ணம் கனகா தன் வேலைகளை கவனிக்க சென்றார்.
அஜயின் அறைக் கதவை தட்டி விட்டு ராஜஷேகர் வெளியில் காத்து நிற்க குளித்து விட்டு தலையை துவட்டிக் கொண்டே வந்து கதவைத் திறந்த அஜய்
"அப்பா எப்போ பா ஊருக்கு வந்தீங்க????" என்று ஆச்சரியமாக கேட்டான்.
"அட கடவுளே!!!! அப்பா ஊருக்கு வந்தது கூட தெரியாமல் என் பையன் இருந்துருக்கானே....இது என்ன கொடுமை....." என்று தலையில் கை வைத்து கொண்டு ராஜஷேகர் கூறவும்
அவரைப் பார்த்து சமாளிப்பது போல சிரித்துக் கொண்ட அஜய்
"உங்களுக்கு தெரியாததாப்பா??? நம்ம வேலை அப்படி.....அதுவும் இப்போ நடந்துட்டு இருக்குற விசாரணை ஒரே கன்பியூஸன்.....இந்த டென்ஷன்ல அம்மா கிட்ட கூட சரியாக பேசவே இல்லை....அம்மா என்ன நினைச்சாங்களோ தெரியல....." என்று வருத்தமாக கூறவும்
அவன் தோளில் தட்டி கொடுத்த ராஜஷேகர்
"சரி சரி பீல் பண்ணாம வந்து உங்க அம்மாவை சமாதானப்படுத்து.....உன்னை நினைச்சு ரொம்ப கவலை படுறா...." என்று கூற கையில் இருந்த டவலை அருகில் இருந்த மேஜை மேல் வைத்த அஜய் வேகமாக கனகாவைத் தேடி சென்றான்.
டைனிங் டேபிளில் சாப்பாடு வைத்து கொண்டு நின்ற கனகாவின் பின்னால் வந்து அவர் தோளில் சாய்ந்து கொண்ட அஜய்
"ஐ மிஸ் யூ ஸோ மச் ம்மா....." என்று கூறவும் கனகா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.
"அம்மா....என் வேலையை பற்றி உனக்கு தெரியும் தானே....அப்படி இருந்தும் நீ இப்படி உன் முகத்தை நாலு முழத்துக்கு தூக்கி வைக்கலாமா??? ப்ளீஸ் மா ஸாரி இனி இப்படி உன் கூட பேசாமல் இருக்க மாட்டேன்.....போதுமா??? ப்ளீஸ் மா....ஸ்மைல்.....ஸ்மைல்....." என்று அவர் கன்னத்தை அஜய் பிடிக்கவும் அவனது கையை தட்டி விட்ட கனகா மறுபுறம் திரும்பி நின்றார்.
"இந்தா புள்ள கனகா....இப்போ நீ என் கூட பேசலேனு வை அப்புறம் நானும் அப்பாவும் உன்னோட பேவரிட் 'மாங்குயிலே....பூங்குயிலே' சாங்க்கு டான்ஸ் ஆடிடுவோம் பார்த்துக்கோ....." என்று அஜய் கூறவும்
"அய்யோ....." என்று அவசரமாக திரும்பிய கனகா
"வேண்டாம் சாமி....எனக்கு கோபமெல்லாம் போச்சு....எனக்கு கனகா நடிச்சதுலயே புடிச்சது அந்த ஒரு பாட்டு தான்....அதையும் பார்க்க விடாமல் பண்ணிடாதீங்க...." என்று கூற சிரித்துக்கொண்டே டைனிங் டேபிளில் ராஜஷேகரும், அஜயும் அமர்ந்து கொண்டனர்.
ராஜஷேகர் மற்றும் கனகாவின் ஒரே வாரிசு தான் அஜய்ராஜ்.
ராஜஷேகர் எம்.ஆர் டிடெக்டிவின் எம்.டி, கனகா சிறந்த இல்லத்தரசி.
அஜயின் தட்டில் சாப்பாட்டை வைத்து விட்டு அவனது எதிரில் அமர்ந்து கொண்ட கனகா
"அஜய் அம்மா ஒண்ணு சொன்னா கேட்பியா???" என்று கேட்டார்.
"ஏதோ வில்லத் தனமாக கேட்கப் போற போல இருக்கே....சரி என்ன விஷயம் சொல்லும்மா....." என்று அஜய் கூறவும்
ராஜஷேகரைப் பார்த்து
"சொல்லவா???" என்று சைகையில் கனகா கேட்க
"சொல்லு....." என்று ராஜஷேகர் கனகாவைப் பார்த்து வாயசைத்தார்.
"உங்க அப்பா அடிக்கடி வேலை விஷயமாக பாரின், வெளியூர்னு போயிடுறாரு....நீயும் உன் வேலையில் ரொம்ப பிஸியாக இருந்துடுற.....நான் மட்டும் வீட்டில் தனியாக நீங்க வர்ற வரைக்கும் சும்மாவே உட்கார்ந்து இருக்கணும்.....அதனால நீ ஒரு கல்யாணம் பண்ணிட்டேனா
மருமகள், பேரக்குழந்தைங்கனு வீடு நிறைஞ்சு போயிடும்லே....." என்று விட்டு கனகா ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் அஜயின் முகத்தைப் பார்த்து கொண்டு இருக்க அவனோ தட்டில் இருந்த சாப்பாட்டை அளைந்து கொண்டு இருந்தான்.
அஜய் மௌனமாக இருப்பதை பார்த்து அவனது தோளில் கை வைத்த ராஜஷேகர்
"எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போற அஜய்??? உன் வயசு பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணி குழந்தை, குட்டினு இருக்காங்க....எங்களுக்கு இருக்குற ஒரே பையன் நீ....உன் கல்யாணத்தைப் பார்க்க எங்களுக்கு ஆசையாக இருக்காதா???" என்று கேட்கவும்
புன்னகத்து கொண்டே ராஜஷேகர் மற்றும் கனகாவைப் பார்த்த அஜய்
"இப்போவாச்சும் உங்களுக்கு இந்த ஐடியா வந்துச்சே...." என்று கூறி சிரிக்க
"அடப்பாவி....." என்றவாறு அவனை ஆச்சரியமாக பார்த்தார் கனகா.
"அய்யோ அம்மா....நான் சும்மா ஜோக்குக்கு சொன்னேன்.....இவ்வளவு நாள் உங்களை லோன்லியா பீல் பண்ண வச்சதுக்கு ஸாரி....அன்ட் உங்க இஷ்டப்படி கல்யாணத்துக்கு பொண்ணு பாருங்க....உங்களுக்கு பிடிச்சு இருந்தா எனக்கு ஓகே....." என்று விட்டு எழுந்து சென்ற அஜயை பார்த்து கண் கலங்கிய கனகா
"எல்லாம் நல்ல படியாக நடக்கணும் கடவுளே......" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.
அறைக்குள் வந்து சிறிது நேரம் தன் லேப்டாப்பை பார்த்து கொண்டு இருந்த அஜய் வெளியில் ஏதோ சத்தம் கேட்கவும் தன் அறையில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான்.
வெளியே யாரையும் காணாமல் போகவே சிறிது நேரம் அமைதியாக மறைந்து நின்று யாராவது வருகின்றார்களா என்று அஜய் பார்த்து கொண்டு நிற்கையில் திடீரென்று பூனை ஒன்று அவன் முன்னால் பாய திடுக்கிட்டு கால் தவறி கீழே விழுந்தவன் சுற்றிலும் பார்த்து விட்டு
"நல்ல வேளை யாரும் பார்த்துடல....." என்றவாறு எழுந்து நின்றான்.
மேஜை மேல் இருந்த தன் கன்னை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்ட அஜய் மறு கையால் டார்ச்சை எடுத்துக் கொண்டு தன் அறையில் இருந்து வெளியேறி சென்றான்.
ஹாலில் டிவி பார்த்து கொண்டிருந்த ராஜஷேகர் அஜய் கையில் டார்ச்சோடு வருவதைப் பார்த்து
"இந்த நேரத்தில் எங்கபா போற???" என்று கேட்டார்.
"ஒண்ணும் இல்லை ப்பா....தூக்கம் வரல அது தான் சும்மா தோட்டத்தில் நடந்துட்டு வரலாம்னு போறேன்...." என்று அஜய் கூறவும்
"நான் வேணும்னா கூட வரவா???" என்று ராஜஷேகர் கேட்டார்.
"இல்லை ப்பா.....பரவாயில்லை....ஒரு ஐந்து நிமிஷம் தான்....சும்மா ஒரு வாக் போயிட்டு வந்துடுறேன்....." என்றவாறு வேகமாக வீட்டை விட்டு வெளியேறி சென்ற அஜய் தன் அறை இருக்கும் பக்கமாக சென்றான்.
சுற்றிலும் டார்ச் வெளிச்சத்தை பரவ விட்டவன் வித்தியாசமாக ஏதாவது தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து பார்த்தான்.
யாரோ ரகசியமாக பேசுவது போல சத்தம் கேட்கவும் மெல்ல சத்தம் எழுப்பாதவாறு எட்டு வைத்து நடந்து சென்ற அஜய் தன் கையில் இருந்த டார்ச்சை சத்தம் வந்த திசையை நோக்கி திருப்ப அங்கே யாரும் இருக்கவில்லை.
"யாரையும் காணோம்.....ஆனா எனக்கு சத்தம் கேட்டுச்சே....." என்று அஜய் யோசித்து கொண்டு நிற்கையில் அவனின் பின்னால் காலடி ஓசை கேட்டது.
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கன்னை எடுத்து லோட் செய்தவன் சட்டென்று பின்னால் திரும்பி
"ஹேண்ட்ஸ் அப்....." என்று கூற
ராஜஷேகர் அதிர்ச்சியாக கைகள் இரண்டையும் தூக்கி கொண்டு
"அடேய்.....நான் உன் அப்பாடா....." என்று கூறவும்
"அய்யோ......" என்று தன் தலையில் தட்டி கொண்ட அஜய்
"ஸாரி பா.....யாரோ திருடன் வந்துட்டான்னு நினைச்சு....ஸாரி....." என்று கூற ராஜஷேகர் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டார்.
"போலீஸ் எல்லா நேரத்திலும் அலார்டா இருக்கணும்னு உன்னை பார்த்தாலே புரியும்.....ஏதோ சத்தத்தை கேட்டு நீ கன்பியூஸ் ஆகி இருப்ப....பனி நேரத்தில் ரொம்ப நேரம் வெளியே நிற்காதே....வா உள்ளே போகலாம்....." என்றவாறு ராஜஷேகர் அஜயை அழைத்து கொண்டு செல்ல
ராஜஷேகரை குழப்பமாக பார்த்த அஜய்
"நீங்க இந்த நேரத்தில் எதுக்கு வெளியே வந்தீங்க???" என்று கேட்டான்.
"ஹா....ஹா....ஹா.....போலீஸ் இன்விஸ்டிகேஷனா???" என்று சிரித்துக்கொண்ட ராஜஷேகர்
"நீ வாக் போறேன்னு சொல்லும் போதே எனக்கு தெரியும்....நீ வாக் போகல வேற ஏதோ வேலையாக தான் போறேனு....அது தான் உன் பின்னாலேயே வந்தேன்.....நீ போலீஸ்னா நான் டிடெக்டிவ் டா....." என்றவாறு தன் மீசையை முறுக்கி விட்டு கொள்ள அவரை பார்த்து புன்னகத்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்த அஜய் ராஜஷேகரிடம் சொல்லி விட்டு தன்னறைக்குள் நுழைந்து கொண்டான்.
ஆனால் அவன் உள்மனது ஏனோ ஒரு வித்தியாசமான உணர்வை சுற்றி வந்து கொண்டிருந்தது.
சிறிது நேரம் ரேடியோவை ஆன் செய்து பாட்டு கேட்டு கொண்டிருந்தவன் சிறிது நேரத்தில் அப்படியே உறங்கி விட அது வரை நேரமும் அஜயின் அறையின் பின்புறமாக பதுங்கி இருந்த ஒரு உருவம் வேகமாக ஓடிச்சென்று அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி வீதிக்கு பாய்ந்து சென்றது.