சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி......
வித்யா பரபரப்பாக வாசலை பார்ப்பதும் வீட்டினுள் வேலைகளை செய்வதுமாக நடந்து கொண்டிருக்க ஹாலில் அமர்ந்து போனை பார்த்து கொண்டிருந்த கணேஷ்
"எதுக்கு மா இவ்வளவு டென்ஷன் ஆகுற??? சரோஜா என்ன சின்ன குழந்தையா??? வழக்கமாக அவ வர்ற டைம் தானே இது....அவ வந்துடுவா....நீ டென்ஷன் ஆகாம உன் வேலையை பாருமா......" என்று கூறவும்
"அவ வந்துடுவானு எனக்கும் தெரியும்....ஆனா அவ வர்றதுக்குள்ள தரகர் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோட வந்துட்டா என்ன பண்ணுறது???இன்னைக்குனு பார்த்து போனையும் எடுக்க மாட்டேங்குறா...." என்று வித்யா கவலையுடன் கூற கணேஷின் மனதிலும் சிறு கவலை எழுந்தது.
"சீக்கிரம் வர்றேன்னு தானே சொல்லிட்டு போனா....." என்று யோசித்து கொண்டே எழுந்து நின்ற கணேஷ்
"அம்மா....நான் எதுக்கும் நம்ம தெரு முனை வரைக்கும் நடந்து போய் பார்த்துட்டு வர்றேன்....." என்று விட்டு வீட்டில் இருந்து வெளியே வர அவர்கள் வீட்டின் முன்னால் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
"என்னப்பா லேட் ஆகுதுனு நீயே எங்களைத் தேடி வந்துட்ட போல....." என்று சிரித்துக்கொண்டே காரில் இருந்து இறங்கியவரைப் பார்த்து திருதிருவென்று விழித்த கணேஷ்
"அப்படி எல்லாம் இல்லை அங்கிள்....வெளியே கடைக்கு கொஞ்சம் போகலாம்னு தான் வந்தேன்.....நீங்க முதல்ல உள்ளே வாங்க....." என்று வந்தவர்களை உள்ளே அழைத்து சென்றவன் வித்யாவைத் தேடி சென்றான்.
"அம்மா அவங்க எல்லோரும் வந்துட்டாங்க....இன்னும் இந்த சரோஜாவை காணோம்...." என்று கணேஷ் வித்யாவிடம் படபடப்பாக கூற வித்யாவின் பதட்டம் மேலும் கூடியது.
"அம்மா நீ போய் அவங்க கூட எப்படியாவது பேசி சமாளி.....நான் சரோஜாவை பார்த்துட்டு வர்றேன்...." என்று விட்டு கணேஷ் பின் வாசல் வழியாக வெளியேறி சென்று விட வித்யா முகத்தில் அரும்பிய வியர்வை துளிகளை துடைத்து கொண்டு முகத்தில் வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு ஹாலை நோக்கி சென்றார்.
"என்ன பொண்ணு அலங்காரத்திற்கு உதவி பண்ணிட்டு இருந்திங்க போல???" என்று வந்திருந்த பெண் ஒருவர் கேட்கவும்
சமாளிப்பாக அவரை பார்த்து சிரித்துக் கொண்ட வித்யா
"அது....அலங்காரம் எல்லாம் இல்ல.....அது.....பொண்ணு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சுனு சொன்னா....அது தான் அவளை சீக்கிரம் வரச்சொல்லி சொல்லிட்டு இருந்தேன்....." என்று கூறவும் அங்கு இருந்த அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் குழப்பமாக பார்த்து கொண்டனர்.
"இன்னைக்கு நாங்க பொண்ணு பார்க்க வர்றோம்னு காலையிலேயே சொன்னோம் தானே....ஹால்ப் டே லீவு போட்டு வரக் கூட உங்க பொண்ணுக்கு நேரம் இல்லையா என்ன???" என்று அங்கிருந்தவர்களில் வயதான நபர் ஒருவர் கேட்கவும் வித்யா பதில் எதுவும் கூறாமல் கையை பிசைந்து கொண்டு நின்றார்.
வீதியில் ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்த கணேஷ் வழியில் சரோஜா எங்காவது தென்படுகின்றாளா என்று தன் பார்வையை சுற்றிலும் சுழல விட்டு கொண்டே தன் போனில் சரோஜாவிற்கு அழைப்பு எடுத்து கொண்டிருக்க மறுமுனையில் சரோஜாவின் போன் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.
வித்யா ஒரு புறம் தவிப்புடனும், கணேஷ் மறுபுறம் பயத்துடனும் சரோஜாவை பற்றி யோசித்து கொண்டிருக்க சரோஜாவை அரை மயக்கத்தில் தன் கைகளில் ஏந்தி கொண்டு ஹாஸ்பிடலினுள் வேகமாக நுழைந்தான் அஜய்ராஜ்.
சரோஜாவின் நெற்றியில் இருந்து சொட்டு சொட்டாக இரத்தம் வடிந்து கொண்டிருக்க அவசரமாக அவளை ஸ்ட்ரெச்சரில் கிடத்திய அஜய் துரித கதியில் அவளுக்கு சிகிச்சைகளை ஆரம்பிக்க செய்தான்.
சரோஜாவிற்கு சிகிச்சைகள் ஆரம்பித்து விட களைத்துப் போய் ஓய்வாக அமர்ந்த அஜயிடம்
சரோஜாவின் கைப்பையை கான்ஸ்டபிள் ஒருவர் கொண்டு வந்து கொடுக்கவும் அதை வாங்கி பார்த்த அஜய் அதிலிருந்த அவளது ஐ.டி யை எடுத்து பார்த்தான்
"சரோஜா....." என்ற அவளது பெயரை படித்த அஜயின் இதழ்கள் தானாக புன்னகையில் வளைந்தது.
எம்.ஆர் டிடெக்டிவ் என்ற பெயரை பார்த்ததும் அஜய் யோசனையாக
"அப்பா ஆபீஸ்ல வேலை செய்யுற பொண்ணா???" என்று பார்த்து கொண்டு இருக்கையில் சரோஜாவிற்கு சிகிச்சைகளை முடித்துக்கொண்டு டாக்டர் வெளியே வரவும் சரியாக இருந்தது.
"டாக்டர் அவங்க எப்படி இருக்காங்க???" என்று அஜய் கேட்கவும்
கையில் இருந்த தன் க்ளவுஸை கழட்டி கொண்டே
"நத்திங் வெரி சீரியஸ்....தலையில் அடிபட்டு பிளட் லாஸ் ஆனதால மயக்கம் போட்டுட்டாங்க.....நல்ல வேளை பலமாக அடி எதுவும் பட்டுடல....அப்புறம் அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சதும் ஹாஸ்பிடல் பார்மலிட்டிஸ் எல்லாம் முடிச்சுட்டு நீங்க அவங்கள கூட்டிட்டு போகலாம்....." என்று விட்டு டாக்டர் சென்று விட அஜய் சரோஜா இருந்த அறைக்குள் சென்றான்.
தலையில் ஒரு பெரிய கட்டு போடப்பட்டிருக்க கையில் டிரிப்ஸ் ஏற ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் சரோஜா.
"சரோஜா...." என்று புன்னகையோடு கூறிய அஜய் சற்று முன் நடந்த நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தான்.
ஒரு விசாரணை விடயமாக வேகமாக அவனுடைய போலீஸ் வாகனத்தில் அஜய் சென்று கொண்டிருந்தான்.
பல இடங்களில் இருந்து அவனுக்கு தொடர்ச்சியாக அழைப்பு வந்து கொண்டே இருக்க எல்லாவற்றையும் புளு டூத் மூலமாக பேசிக் கொண்டே வந்தவன் அப்போது தான் எதிரில் ஒரு பெண் ஸ்கூட்டரில் நடு வீதியில் நிற்பதைப் பார்த்தான்.
"யார் இது நடு ரோட்டில் நிற்குறது???" என்று அஜய் யோசித்த வண்ணம் அவளை பார்க்க அவளோ பதட்டத்துடன் சுற்றிலும் பார்த்து கொண்டு நின்றாள்.
அவசரமாக ஸ்கூட்டரை அவள் ரிவர்ஸ் எடுப்பதற்குள் அஜயின் வாகனம் அவளை நெருங்கி இருந்தது.
அஜய் பதட்டத்துடன் வேகமாக பிரேக்கை அழுத்த அதற்குள் அவனது ஜீப் அவளை அடித்து தூக்கி இருந்தது.
"அய்யோ.....பிரேக் போடுறதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே......." என்று
பதட்டத்துடன் ஜீப்பில் இருந்து இறங்கிய அஜய் வேகமாக அந்த பெண்ணின் அருகில் சென்றான்.
அடித்த வேகத்தில் தூக்கி வீசப்பட்டவள் நல்ல வேளையாக அருகில் இருந்த காகிதங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் விழுந்து கிடந்தாள்.
விழுந்த வேகத்தில் அவளது நெற்றியில் அடிபட்டு இருக்க அவசரமாக அவளை தன் கைகளில் ஏந்தி கொண்ட அஜய் தன் ஜீப்பில் அவளை ஏற்றிக் கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான்.
ஹாஸ்பிடல் செல்லும் வழியில் தன்னுடைய உதவியாளர் ஒருவருக்கு அழைப்பு எடுத்து நடந்த எல்லாவற்றையும் சொல்லி அவளுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வரச் சொன்னவன் வேகமாக ஹாஸ்பிடலை வந்து அடைந்தான்.
அஜய் தன்னுடைய சிந்தனையில் மூழ்கிப் போய் நிற்க சரோஜா மயக்கம் தெளிந்து மெல்ல கண் திறந்தாள்.
சரோஜாவிடம் அசைவு தெரிவதை வேகமாக கண்டு கொண்ட அஜய் சரோஜாவின் அருகில் செல்ல நினைத்து அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.
"இப்போ நாம அவகிட்ட போய் பேசி போனா ஆக்சிடெண்ட் பண்ணது நான் தான் தெரிஞ்சு ஏதாவது பிரச்சினை வந்துடுச்சுனா என்ன பண்ணுறது?? ஏற்கனவே கொடுத்த கேஸை முடிக்கலனு காட்டுக் கத்து கத்துறானுங்க....இப்போ இந்த மேட்டரும் அவங்க காதுக்கு போனா.....வேணாம்.....வெளியில் போய் பார்மலிட்டிஸ் முடிச்சுட்டே நம்ம போயிடலாம்....." என்று நினைத்துக் கொண்டவன் தன் கையில் இருந்த சரோஜாவின் ஹேண்ட் பாக்கை அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு அஜய் வெளியேறி சென்று விட மயக்கத்தில் இருந்து கண் விழித்த சரோஜா அறையில் இருந்து வெளியே சென்ற அஜயின் பின் புறத் தோற்றத்தையே கண்டாள்.
"என்ன இது போலீஸ் மாதிரி இருக்கு??? ஆமா இது என்ன இடம்?? நான் இப்போ எங்க இருக்கேன்???" என்று யோசித்த வண்ணம் சரோஜா இருக்க
நர்ஸ் ஒருவர் அவளருகில் வந்து
"மேம்....நவ் ஆர் யூ ஓகே???" என்று கேட்டார்.
"யா....ஐ யம் ஆல்ரைட்....பட் எனக்கு என்ன ஆச்சு???" என்று குழப்பமாக சரோஜா கேட்கவும்
"உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சுனு அட்மிட் பண்ணாங்க....சின்ன காயம் தான்....இப்போவும் உங்களுக்கு வலி இருக்கா???" என்று அந்த நர்ஸ் கேட்டார்.
"இல்ல வலி எல்லாம் இல்ல....என்னை யாரு இங்க அட்மிட் பண்ணது??? என்னோட திங்க்ஸ் எல்லாம்???" என்று சரோஜா கேட்டுக் கொண்டிருக்கையில் அந்த அறைக்குள் ஒரு கான்ஸ்டபிள் வந்தார்.
"மேடம் உங்க பேக்கை ஸார் டேபிளில் வைச்சிருக்குறதா சொன்னார்....அப்புறம் உங்க ஹாஸ்பிடல் பில்லையும் அவரே பே பண்ணிட்டாரு....உங்களை உங்க வீட்டுல டிராப் பண்ண சொல்லி சொன்னாரு....நீங்க வந்தீங்கனா போகலாம்....." என்று அந்த கான்ஸ்டபிள் கூறவும்
அவனை விசித்திரமாக பார்த்த சரோஜா
"என்னங்க நடக்குது இங்க??? நீங்க பாட்டுக்கு வந்தீங்க....ஏதேதோ சொல்லுறீங்க....யாருங்க உங்க ஸார்?? அவரு எதுக்கு என் பில்லை பே பண்ணணும்??" என்று கேட்டாள்.
"அது....வந்து...எங்க ஸார் சரியாக தான் வந்தாரு....நீங்க தான் ரோட்டை பார்க்காம....." என்று அந்த கான்ஸ்டபிள் இழுக்கவும்
அவனைக் கூர்மையாக பார்த்த சரோஜா
"ஓஹ் ஆக்சிடெண்ட்டும் பண்ணிட்டு அதை மறைக்க ஹெல்ப்பும் பண்ணுறீங்களா??? கண்டிப்பாக இதை நான் சும்மா விட மாட்டேன்....போலீஸ் ஸ்டேஷன்ல உங்க ஸார் மேல கம்ப்ளயிண்ட் பண்ணாம விடமாட்டேன்....உங்க ஸார் யாரு?? டீடெயில்ஸ் சொல்லுங்க....சொல்லுங்க...." என்று கூறி கொண்டே கட்டிலில் இருந்து இறங்கியவள் தன் ஹேண்ட் பாக்கை எடுத்து அதிலிருந்த நோட் புக்கை எடுத்தாள்.
"ம்ம்ம்....டீடெய்ல்ஸை சொல்லுங்க....." என்று சரோஜா அதட்டலாக கேட்கவும்
அவளை பரிதாபமாக பார்த்த கான்ஸ்டபிள்
"ஸாரோட பேரு அஜய்ராஜ்....அஷிஸ்டென்ட் கமிஷனர்....." என்று கூற நோட்புக்கில் மும்முரமாக எழுதி கொண்டிருந்த சரோஜா அதிர்ச்சியாக அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
"அசிஸ்டெண்ட் கமிஷனரா???" என்று அதிர்ச்சியாக முணுமுணுத்த சரோஜா
உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு
"என் உயிரை காப்பாற்றுனதுக்காக உங்க ஸாரை சும்மா விடுறேன்....இல்லேனா இன்னைக்கு அவர் கதை காலியாகி இருக்கும்...." என்று கூற அவளருகில் நின்ற நர்ஸ் மற்றும் கான்ஸ்டபிள் அவளறியா வண்ணம் தங்கள் சிரிப்பை மறைத்து கொண்டனர்.
"என்ன இரண்டு பேரும் நக்கலாக சிரிக்குற மாதிரி இருக்கு???" என்று சரோஜா கேட்கவும்
வித்யா பரபரப்பாக வாசலை பார்ப்பதும் வீட்டினுள் வேலைகளை செய்வதுமாக நடந்து கொண்டிருக்க ஹாலில் அமர்ந்து போனை பார்த்து கொண்டிருந்த கணேஷ்
"எதுக்கு மா இவ்வளவு டென்ஷன் ஆகுற??? சரோஜா என்ன சின்ன குழந்தையா??? வழக்கமாக அவ வர்ற டைம் தானே இது....அவ வந்துடுவா....நீ டென்ஷன் ஆகாம உன் வேலையை பாருமா......" என்று கூறவும்
"அவ வந்துடுவானு எனக்கும் தெரியும்....ஆனா அவ வர்றதுக்குள்ள தரகர் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோட வந்துட்டா என்ன பண்ணுறது???இன்னைக்குனு பார்த்து போனையும் எடுக்க மாட்டேங்குறா...." என்று வித்யா கவலையுடன் கூற கணேஷின் மனதிலும் சிறு கவலை எழுந்தது.
"சீக்கிரம் வர்றேன்னு தானே சொல்லிட்டு போனா....." என்று யோசித்து கொண்டே எழுந்து நின்ற கணேஷ்
"அம்மா....நான் எதுக்கும் நம்ம தெரு முனை வரைக்கும் நடந்து போய் பார்த்துட்டு வர்றேன்....." என்று விட்டு வீட்டில் இருந்து வெளியே வர அவர்கள் வீட்டின் முன்னால் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
"என்னப்பா லேட் ஆகுதுனு நீயே எங்களைத் தேடி வந்துட்ட போல....." என்று சிரித்துக்கொண்டே காரில் இருந்து இறங்கியவரைப் பார்த்து திருதிருவென்று விழித்த கணேஷ்
"அப்படி எல்லாம் இல்லை அங்கிள்....வெளியே கடைக்கு கொஞ்சம் போகலாம்னு தான் வந்தேன்.....நீங்க முதல்ல உள்ளே வாங்க....." என்று வந்தவர்களை உள்ளே அழைத்து சென்றவன் வித்யாவைத் தேடி சென்றான்.
"அம்மா அவங்க எல்லோரும் வந்துட்டாங்க....இன்னும் இந்த சரோஜாவை காணோம்...." என்று கணேஷ் வித்யாவிடம் படபடப்பாக கூற வித்யாவின் பதட்டம் மேலும் கூடியது.
"அம்மா நீ போய் அவங்க கூட எப்படியாவது பேசி சமாளி.....நான் சரோஜாவை பார்த்துட்டு வர்றேன்...." என்று விட்டு கணேஷ் பின் வாசல் வழியாக வெளியேறி சென்று விட வித்யா முகத்தில் அரும்பிய வியர்வை துளிகளை துடைத்து கொண்டு முகத்தில் வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு ஹாலை நோக்கி சென்றார்.
"என்ன பொண்ணு அலங்காரத்திற்கு உதவி பண்ணிட்டு இருந்திங்க போல???" என்று வந்திருந்த பெண் ஒருவர் கேட்கவும்
சமாளிப்பாக அவரை பார்த்து சிரித்துக் கொண்ட வித்யா
"அது....அலங்காரம் எல்லாம் இல்ல.....அது.....பொண்ணு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சுனு சொன்னா....அது தான் அவளை சீக்கிரம் வரச்சொல்லி சொல்லிட்டு இருந்தேன்....." என்று கூறவும் அங்கு இருந்த அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் குழப்பமாக பார்த்து கொண்டனர்.
"இன்னைக்கு நாங்க பொண்ணு பார்க்க வர்றோம்னு காலையிலேயே சொன்னோம் தானே....ஹால்ப் டே லீவு போட்டு வரக் கூட உங்க பொண்ணுக்கு நேரம் இல்லையா என்ன???" என்று அங்கிருந்தவர்களில் வயதான நபர் ஒருவர் கேட்கவும் வித்யா பதில் எதுவும் கூறாமல் கையை பிசைந்து கொண்டு நின்றார்.
வீதியில் ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்த கணேஷ் வழியில் சரோஜா எங்காவது தென்படுகின்றாளா என்று தன் பார்வையை சுற்றிலும் சுழல விட்டு கொண்டே தன் போனில் சரோஜாவிற்கு அழைப்பு எடுத்து கொண்டிருக்க மறுமுனையில் சரோஜாவின் போன் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.
வித்யா ஒரு புறம் தவிப்புடனும், கணேஷ் மறுபுறம் பயத்துடனும் சரோஜாவை பற்றி யோசித்து கொண்டிருக்க சரோஜாவை அரை மயக்கத்தில் தன் கைகளில் ஏந்தி கொண்டு ஹாஸ்பிடலினுள் வேகமாக நுழைந்தான் அஜய்ராஜ்.
சரோஜாவின் நெற்றியில் இருந்து சொட்டு சொட்டாக இரத்தம் வடிந்து கொண்டிருக்க அவசரமாக அவளை ஸ்ட்ரெச்சரில் கிடத்திய அஜய் துரித கதியில் அவளுக்கு சிகிச்சைகளை ஆரம்பிக்க செய்தான்.
சரோஜாவிற்கு சிகிச்சைகள் ஆரம்பித்து விட களைத்துப் போய் ஓய்வாக அமர்ந்த அஜயிடம்
சரோஜாவின் கைப்பையை கான்ஸ்டபிள் ஒருவர் கொண்டு வந்து கொடுக்கவும் அதை வாங்கி பார்த்த அஜய் அதிலிருந்த அவளது ஐ.டி யை எடுத்து பார்த்தான்
"சரோஜா....." என்ற அவளது பெயரை படித்த அஜயின் இதழ்கள் தானாக புன்னகையில் வளைந்தது.
எம்.ஆர் டிடெக்டிவ் என்ற பெயரை பார்த்ததும் அஜய் யோசனையாக
"அப்பா ஆபீஸ்ல வேலை செய்யுற பொண்ணா???" என்று பார்த்து கொண்டு இருக்கையில் சரோஜாவிற்கு சிகிச்சைகளை முடித்துக்கொண்டு டாக்டர் வெளியே வரவும் சரியாக இருந்தது.
"டாக்டர் அவங்க எப்படி இருக்காங்க???" என்று அஜய் கேட்கவும்
கையில் இருந்த தன் க்ளவுஸை கழட்டி கொண்டே
"நத்திங் வெரி சீரியஸ்....தலையில் அடிபட்டு பிளட் லாஸ் ஆனதால மயக்கம் போட்டுட்டாங்க.....நல்ல வேளை பலமாக அடி எதுவும் பட்டுடல....அப்புறம் அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சதும் ஹாஸ்பிடல் பார்மலிட்டிஸ் எல்லாம் முடிச்சுட்டு நீங்க அவங்கள கூட்டிட்டு போகலாம்....." என்று விட்டு டாக்டர் சென்று விட அஜய் சரோஜா இருந்த அறைக்குள் சென்றான்.
தலையில் ஒரு பெரிய கட்டு போடப்பட்டிருக்க கையில் டிரிப்ஸ் ஏற ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் சரோஜா.
"சரோஜா...." என்று புன்னகையோடு கூறிய அஜய் சற்று முன் நடந்த நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தான்.
ஒரு விசாரணை விடயமாக வேகமாக அவனுடைய போலீஸ் வாகனத்தில் அஜய் சென்று கொண்டிருந்தான்.
பல இடங்களில் இருந்து அவனுக்கு தொடர்ச்சியாக அழைப்பு வந்து கொண்டே இருக்க எல்லாவற்றையும் புளு டூத் மூலமாக பேசிக் கொண்டே வந்தவன் அப்போது தான் எதிரில் ஒரு பெண் ஸ்கூட்டரில் நடு வீதியில் நிற்பதைப் பார்த்தான்.
"யார் இது நடு ரோட்டில் நிற்குறது???" என்று அஜய் யோசித்த வண்ணம் அவளை பார்க்க அவளோ பதட்டத்துடன் சுற்றிலும் பார்த்து கொண்டு நின்றாள்.
அவசரமாக ஸ்கூட்டரை அவள் ரிவர்ஸ் எடுப்பதற்குள் அஜயின் வாகனம் அவளை நெருங்கி இருந்தது.
அஜய் பதட்டத்துடன் வேகமாக பிரேக்கை அழுத்த அதற்குள் அவனது ஜீப் அவளை அடித்து தூக்கி இருந்தது.
"அய்யோ.....பிரேக் போடுறதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே......." என்று
பதட்டத்துடன் ஜீப்பில் இருந்து இறங்கிய அஜய் வேகமாக அந்த பெண்ணின் அருகில் சென்றான்.
அடித்த வேகத்தில் தூக்கி வீசப்பட்டவள் நல்ல வேளையாக அருகில் இருந்த காகிதங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் விழுந்து கிடந்தாள்.
விழுந்த வேகத்தில் அவளது நெற்றியில் அடிபட்டு இருக்க அவசரமாக அவளை தன் கைகளில் ஏந்தி கொண்ட அஜய் தன் ஜீப்பில் அவளை ஏற்றிக் கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான்.
ஹாஸ்பிடல் செல்லும் வழியில் தன்னுடைய உதவியாளர் ஒருவருக்கு அழைப்பு எடுத்து நடந்த எல்லாவற்றையும் சொல்லி அவளுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வரச் சொன்னவன் வேகமாக ஹாஸ்பிடலை வந்து அடைந்தான்.
அஜய் தன்னுடைய சிந்தனையில் மூழ்கிப் போய் நிற்க சரோஜா மயக்கம் தெளிந்து மெல்ல கண் திறந்தாள்.
சரோஜாவிடம் அசைவு தெரிவதை வேகமாக கண்டு கொண்ட அஜய் சரோஜாவின் அருகில் செல்ல நினைத்து அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.
"இப்போ நாம அவகிட்ட போய் பேசி போனா ஆக்சிடெண்ட் பண்ணது நான் தான் தெரிஞ்சு ஏதாவது பிரச்சினை வந்துடுச்சுனா என்ன பண்ணுறது?? ஏற்கனவே கொடுத்த கேஸை முடிக்கலனு காட்டுக் கத்து கத்துறானுங்க....இப்போ இந்த மேட்டரும் அவங்க காதுக்கு போனா.....வேணாம்.....வெளியில் போய் பார்மலிட்டிஸ் முடிச்சுட்டே நம்ம போயிடலாம்....." என்று நினைத்துக் கொண்டவன் தன் கையில் இருந்த சரோஜாவின் ஹேண்ட் பாக்கை அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு அஜய் வெளியேறி சென்று விட மயக்கத்தில் இருந்து கண் விழித்த சரோஜா அறையில் இருந்து வெளியே சென்ற அஜயின் பின் புறத் தோற்றத்தையே கண்டாள்.
"என்ன இது போலீஸ் மாதிரி இருக்கு??? ஆமா இது என்ன இடம்?? நான் இப்போ எங்க இருக்கேன்???" என்று யோசித்த வண்ணம் சரோஜா இருக்க
நர்ஸ் ஒருவர் அவளருகில் வந்து
"மேம்....நவ் ஆர் யூ ஓகே???" என்று கேட்டார்.
"யா....ஐ யம் ஆல்ரைட்....பட் எனக்கு என்ன ஆச்சு???" என்று குழப்பமாக சரோஜா கேட்கவும்
"உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சுனு அட்மிட் பண்ணாங்க....சின்ன காயம் தான்....இப்போவும் உங்களுக்கு வலி இருக்கா???" என்று அந்த நர்ஸ் கேட்டார்.
"இல்ல வலி எல்லாம் இல்ல....என்னை யாரு இங்க அட்மிட் பண்ணது??? என்னோட திங்க்ஸ் எல்லாம்???" என்று சரோஜா கேட்டுக் கொண்டிருக்கையில் அந்த அறைக்குள் ஒரு கான்ஸ்டபிள் வந்தார்.
"மேடம் உங்க பேக்கை ஸார் டேபிளில் வைச்சிருக்குறதா சொன்னார்....அப்புறம் உங்க ஹாஸ்பிடல் பில்லையும் அவரே பே பண்ணிட்டாரு....உங்களை உங்க வீட்டுல டிராப் பண்ண சொல்லி சொன்னாரு....நீங்க வந்தீங்கனா போகலாம்....." என்று அந்த கான்ஸ்டபிள் கூறவும்
அவனை விசித்திரமாக பார்த்த சரோஜா
"என்னங்க நடக்குது இங்க??? நீங்க பாட்டுக்கு வந்தீங்க....ஏதேதோ சொல்லுறீங்க....யாருங்க உங்க ஸார்?? அவரு எதுக்கு என் பில்லை பே பண்ணணும்??" என்று கேட்டாள்.
"அது....வந்து...எங்க ஸார் சரியாக தான் வந்தாரு....நீங்க தான் ரோட்டை பார்க்காம....." என்று அந்த கான்ஸ்டபிள் இழுக்கவும்
அவனைக் கூர்மையாக பார்த்த சரோஜா
"ஓஹ் ஆக்சிடெண்ட்டும் பண்ணிட்டு அதை மறைக்க ஹெல்ப்பும் பண்ணுறீங்களா??? கண்டிப்பாக இதை நான் சும்மா விட மாட்டேன்....போலீஸ் ஸ்டேஷன்ல உங்க ஸார் மேல கம்ப்ளயிண்ட் பண்ணாம விடமாட்டேன்....உங்க ஸார் யாரு?? டீடெயில்ஸ் சொல்லுங்க....சொல்லுங்க...." என்று கூறி கொண்டே கட்டிலில் இருந்து இறங்கியவள் தன் ஹேண்ட் பாக்கை எடுத்து அதிலிருந்த நோட் புக்கை எடுத்தாள்.
"ம்ம்ம்....டீடெய்ல்ஸை சொல்லுங்க....." என்று சரோஜா அதட்டலாக கேட்கவும்
அவளை பரிதாபமாக பார்த்த கான்ஸ்டபிள்
"ஸாரோட பேரு அஜய்ராஜ்....அஷிஸ்டென்ட் கமிஷனர்....." என்று கூற நோட்புக்கில் மும்முரமாக எழுதி கொண்டிருந்த சரோஜா அதிர்ச்சியாக அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
"அசிஸ்டெண்ட் கமிஷனரா???" என்று அதிர்ச்சியாக முணுமுணுத்த சரோஜா
உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு
"என் உயிரை காப்பாற்றுனதுக்காக உங்க ஸாரை சும்மா விடுறேன்....இல்லேனா இன்னைக்கு அவர் கதை காலியாகி இருக்கும்...." என்று கூற அவளருகில் நின்ற நர்ஸ் மற்றும் கான்ஸ்டபிள் அவளறியா வண்ணம் தங்கள் சிரிப்பை மறைத்து கொண்டனர்.
"என்ன இரண்டு பேரும் நக்கலாக சிரிக்குற மாதிரி இருக்கு???" என்று சரோஜா கேட்கவும்