ஹாய் ஹலோ பிரண்ட்ஸ்....
இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்த அனைவருக்கும் நன்றி
கையில் டிரிப்ஸ் ஏறி கொண்டிருக்க சரோஜா மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
அஜயோ அவளருகில் அவளது தலையை வருடிக் கொடுத்தவாறே கண்கள் கலங்க அமர்ந்திருந்தான்.
ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை நர்ஸ் ஒருவர் வந்து சரோஜாவின் இதயத்துடிப்பு வீதம் மற்றும் டிரிப்ஸ் ஏறும் வீதத்தை பரிசோதித்து கொண்டிருக்க அஜய் தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டே சரோஜாவின் கையை ஆதரவாக வருடிக் கொடுத்தான்.
சரோஜா வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே வித்யா அழுத வண்ணம் அமர்ந்திருக்க அவரின் ஒரு புறம் கணேஷும் மறுபுறம் கனகாவும் சோகமே மறு உருவமாக அமர்ந்திருந்தனர்.
சற்று தள்ளி ராஜஷேகர் போனில் மும்முரமாக பேசிக்கொண்டிருக்க அஜய் சரோஜா வைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்து தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு வெளியேறி வந்தான்.
அஜயை பார்த்ததும் கணேஷ் வேகமாக அவனருகில் எழுந்து சென்று
"சரோஜா கண் முழிச்சுட்டாளா மாமா?" என ஆவலுடன் கேட்டான்.
இல்லை என்று தலை அசைத்த வண்ணம் அவனை கடந்து சென்ற அஜய் ராஜஷேகரின் அருகில் சென்று நின்றான்.
"டெட் பாடியை எல்லாம் போஸ்ட் மார்டத்திற்கு அனுப்பியாச்சு... இன்னும் ஒரு ஐந்து, ஆறு மணி நேரத்தில் ரிசல்ட் வந்துடும்..." என்று ராஜஷேகர் கூறவும்
"ருத்ரா ம்மா கிட்ட தகவல் சொல்லியாச்சா?" என முகத்தில் எந்தவித உணர்வையும் பிரதிபலிக்காமல் அஜய் கேட்டான்.
"சொல்லியாச்சுபா..."
"ஓஹ் சரி..." என்றவாறே ராஜஷேகரைக் கடந்து சென்றவன் அந்த ஹாஸ்பிடல் தோட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து அவனின் பின்னால் வந்து நின்ற இன்ஸ்பெக்டர் டேவிட்
"ஸார் நவீன் கண் முழிச்சுட்டாரு..." என்று கூறவும் தன் கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்து கொண்டவன் நவீன் வைத்திருந்த அறையை நோக்கி சென்றான்.
நவீன் மெல்ல கண் விழித்து சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டு கொண்டிருக்க அவனருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்ட அஜய் டேவிட்டின் புறம் திரும்பி
"எல்லாம் ரெடி தானே?" என்று கேட்டான்.
"எஸ் ஸார்" என்ற டேவிட் நவீனின் புறம் திரும்பி
"நவீன் என்ன நடந்தது ஒரு விடயம் விடாமல் சொல்லுங்க" என்று கூற நவீன் இது வரையில் நடந்த விடயங்களை எல்லாம் மெல்ல மெல்ல கூறத் தொடங்கினான்.
" வாஞ்சிநாதன் ஸாரை எல்லோருக்கும் நல்லவரா, அதே நேரம் எந்த பிரச்சினைக்கும் போகதவராக தான் தெரியும்... ஆனா அது முழுமையாக உண்மை இல்லை...வெளியே எந்தளவுக்கு அவர் நல்லவராக தெரிந்தாரோ அதே அளவுக்கு உள்ளுக்குள்ள அவருக்கு வேற ஒரு கெட்ட முகம் இருக்கு...அரசியல்ல நல்ல பேர் சம்பாதிக்குறது கஷ்டம். வாஞ்சிநாதன் அதை ஈஸியாக சம்பாதித்தாரு...அது மத்தவங்களுக்கு பிடிக்கல அதனால தான் அவர் கட்சி ஆளுங்க அவர் கூட சண்டை போட்டாங்க...இப்படி தான் வெளி உலகிற்கு வாஞ்சிநாதன் கட்சியை விட்டு விலகினதற்கு காரணம் தெரியும்...உண்மையாகவே நடந்தது இது இல்லை...அவரோட ஸ்டீல் பக்டரி அவரோட பரம்பரை சொத்து...அங்கே நடக்குறது வெறும் ஸ்டீல் உற்பத்தி இல்லை போதை மருந்து உற்பத்தி...படிச்சு வேலை இல்லாமல் சுற்றி திரியுற பசங்களுக்கு வேலை வாங்கித் தர்றதா சொல்லி வாஞ்சிநாதன் கூட்டிட்டு போவாரு...சொன்ன மாதிரி வேலையும் வாங்கிக் கொடுப்பார்...ஆனா ஒரு கன்டிஷன் இருக்கும்..."
"என்ன கன்டிஷன்?" குழப்பமாக அஜய் கேட்டான்.
"எந்த இடத்தில் வேலை பார்த்தாலும் வாஞ்சிநாதனுக்கு சப்போர்ட்டா அவருக்கு உதவியாக இருக்கணும்"
"இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் நவீன்?"
"ஏன்னா நான் இப்போ பார்த்துட்டு இருக்குற வேலை வாஞ்சிநாதன் எனக்கு வாங்கி கொடுத்தது..." என்ற நவீனின் பார்வை சுவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
நவீன் சிறு வயதிலேயே தன் தாய், தந்தையை இழந்தவன்.
குடும்பத்தினரும், உறவினர்களும் நவீனை ஓரங்கட்டி விட வாழ வழி இன்றி வீதி வீதியாக ஊர் ஊராக சுற்றி திரிந்தவன் இறுதியாக சென்னையை வந்து சேர்ந்தான்.
பத்து வயது மாத்திரமே ஆன நவீனுக்கு தான் எங்கே இருக்கிறோம் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று எதுவுமே தெரியவில்லை.
ஒரு மாத காலமாக மழையிலும், வெயிலிலும் அலைந்து திரிந்தவனை வேலை விடயமாக தன் காரில் சென்று கொண்டிருந்த வாஞ்சிநாதன் கண்டு கொண்டார்.
வாஞ்சிநாதன் அரசியலில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த காலம் அது.
பல பேர் பாராட்ட பல நல்ல செயல்களை செய்து கொண்டிருந்தவர் அன்று நவீனை பார்த்த மாத்திரத்தில் ஆதரவற்ற ஒருவனுக்கு உதவி செய்து இன்னும் தன் நன் மதிப்பை உயர்த்தி கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு அவனை ஓர் அனாதை இல்லத்தில் சேர்த்து படிக்க வைத்தார்.
உறவினர்களும், ஊரார்களும் ஒதுக்கி வைத்த தன்னை முன் பின் அறியாத ஒருவர் காப்பாற்றி படிக்க வைப்பதை பார்த்து வியந்து போன நவீன் வாஞ்சிநாதனை தன் மனதில் கடவுளுக்கும் மேலாகப் பார்க்கத் தொடங்கினான்.
நாட்கள் போகப் போக நவீனுக்கு உலகம் புரிபடத் தொடங்கியது.
அதிலும் முக்கியமாக வாஞ்சிநாதன் பற்றிய விடயங்கள்.
வீட்டை விட்டு வேலைக்காக ஓடி வந்தவர்கள், பெற்றோர் அரவணைப்பின்றி திரியும் வேலை இல்லாத பட்டதாரிகள் எல்லோரும் வாஞ்சிநாதனின் உதவியோடு பல நல்ல வேலைகளை பெற்றுக் கொண்டு நவீனைப் போலவே வாஞ்சிநாதனை அக மகிழ்ந்து ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து பார்த்து கொண்டிருந்தனர்.
ஆனால் போகப் போக வாஞ்சிநாதனின் துணையால் வேலையில் சேர்ந்த பலர் மர்மமாக காணாமல் போகத் தொடங்கினர்.
நவீன் எம். ஆர் டிடெக்டிவில் இணைந்து கொள்வதற்கு முன்னர் சிறிது காலம் வாஞ்சிநாதனிடம் பி.ஏ வாக பணி புரிந்து வந்தான்.
அந்த சந்தர்ப்பத்திலேயே இந்த நபர்களின் மர்மமான மாயம் நவீனுக்கு தெரிய வந்தது.
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வாஞ்சிநாதனைப் பார்க்க வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதைப் பார்த்து அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தவன் இந்த மாயமான செய்தியை அறிந்ததும் உடனடியாக வாஞ்சிநாதனிடம் இதை பற்றி தெரிவித்தான்.
வாஞ்சிநாதனோ அந்த செய்தியை ஒரு பொருட்டாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்து விட நவீனுக்கு வாஞ்சிநாதனின் மேல் சிறிது சிறிதாக சந்தேகம் எழத் தொடங்கியது.
ஒரு நாள் மறைந்து இருந்து வாஞ்சிநாதனைப் பின் தொடர்ந்து சென்ற நவீன் அவர்களது ஸ்டீல் பக்டரியின் பின் புறமாக ஒரு குடோனில் பல நபர்கள் சேர்ந்து எதுவோ பொடி போன்ற ஒரு பொருளை வைத்து கொண்டிருப்பதை குழப்பமாக பார்த்து கொண்டு நின்றான்.
அப்போது தான் அவர்கள் பேசுவதை கவனித்தவன் அது போதைப்பொருள் என்பதை கண்டு கொள்ள அந்த நொடி வாஞ்சிநாதன் மேல் அவன் வைத்திருந்த நன்மதிப்பு தவிடுபொடியாகி போனது.
வெளியில் நல்ல மனிதர் வேஷம் போட்டு கொண்டு இன்னொரு புறம் ஊரையும், சமூகத்தையும் ஏமாற்றி கொண்டு இருக்கும் ஒருவரை இத்தனை நாளாக நம்பி இருந்தோமே என்ற கழிவிரக்கம் நவீனின் மனதை ஆக்கிரமித்து கொண்டது.
சிந்தனை வயப்பட்டவனாக நவீன் நின்று கொண்டிருந்த வேளை திடீரென்று அவன் முன்னால் வாஞ்சிநாதன் வந்து நின்றார்.
அதிர்ச்சியோடும், பயத்தோடும் நவீன் வாஞ்சிநாதனைப் பார்க்க அவன் தோளில் தன் கையை போட்டு உள்ளே அழைத்து கொண்டு சென்ற வாஞ்சிநாதன் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே கேள்வியாக புருவம் உயர்த்தினார்.
"இங்க பாருங்க ஸார்...நீங்க ஏதோ தப்பான வேலை பார்க்குறீங்க...இது சரி இல்லை இதெல்லாம் எதுவும் வேண்டாம் ஸார்...நீங்க எப்போவும் போல நல்லவராக இருந்துடுங்க ஸார் ப்ளீஸ்..." தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வாஞ்சிநாதனின் கைகளை பற்றி கெஞ்சலாக கூறினான் நவீன்.
"இதோ பாரு டா என் கீழே இத்தனை நாளாக வேலை பார்த்தவன் இப்போ என் கையை பிடித்து எனக்கே புத்தி சொல்லுற அளவுக்கு போயிட்டானா?" கேலியாக வந்த வாஞ்சிநாதனின் வார்த்தைகளில் முகம் கறுத்து போக வாஞ்சிநாதனின் கையில் இருந்த தன் கையை விலக்கி கொண்டவன் தன் தோளில் இருந்த வாஞ்சிநாதனின் மறு கையையும் எடுத்து விட்டு விட்டு சற்று தள்ளி நின்றான்.
"இத்தனை நாள் நீங்க எனக்கு செய்த உதவி எல்லாவற்றுக்கும் நன்றி ஸார்...இனிமேல் ஒரு நிமிஷம் கூட நான் இந்த இடத்தில் வேலை பார்க்க மாட்டேன்... உங்களை கடவுளுக்கு மேலாக என் மனதில் வைத்து பார்த்தேன்...ஆனா ஒரு செக்கன்ல எல்லாவற்றையும் சுக்கு நூறாக உடைச்சுட்டீங்க...நான் வர்றேன் ஸாரி போறேன்..." என்று விட்டு நவீன் அந்த இடத்தை விட்டு வெளியே செல்ல போக அவன் முன்னால் நான்கு, ஐந்து நபர்கள் அவன் வழியை மறித்தவாறு வந்து நின்றனர்.
நவீன் குழப்பமாக தன் பின்னால் நின்ற வாஞ்சிநாதனை திரும்பி பார்த்தான்.
"அது எப்படி ராஜா அவ்வளவு சுலபமாக இந்த இடத்தை விட்டு நீ போக முடியும்? என் கிட்ட ஒரு தரம் வந்துட்டா அதற்கு அப்புறம் என்னை மீறி நீங்க யாருமே போக முடியாது. நீங்க எல்லோரும் பூமராங் மாதிரி...நானாக உங்களை தூக்கி போட்டாலும் சரி நீங்களாகவே என் கிட்ட இருந்து விலகி எங்கேயாவது ஓடி ஒழியப் போனாலும் சரி கடைசியாக ஆரம்பித்த என் கிட்ட தான் வந்து சேருவீங்க...அது தான் உங்க தலையெழுத்து...அதனால இந்த வீர வசனம் பேசுறதை நிறுத்திட்டு எனக்கு சார்பாக வேலை செய்யப் பழகு சரியா?" வாஞ்சிநாதன் புன்னகையோடு நவீனைப் பார்க்க
கோபமாக அவரை நெருங்கி வந்தவன்
"என் உடம்பில் உயிர் இருக்குற வரைக்கும் ஒரு நாளும் நான் இதை பண்ண மாட்டேன்" என்று கூற வாஞ்சிநாதன் சலித்து கொண்டே அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
"இதோ பாரு நவீன் சும்மா வம்பு பண்ணாதே...எனக்கு மற்ற பசங்க எல்லோரையும் விட உன் மேல ஒரு படி பாசம் அதிகம்...அது எதனாலனு எனக்கு தெரியாது...சித்துவுக்கு அடுத்ததாக நான் உன்னை தான் என் பையனாக பார்க்குறேன்... அதனால தான் இவ்வளவு பொறுமையாக உன் கூட பேசிட்டு இருக்கேன்...இதுவே வேற எவனாவது இங்க வந்து இருந்தா இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன் ஒரே வெட்டு தான்..." வாஞ்சிநாதனின் கோபமான வார்த்தைகளை கேட்டு நவீனுக்கு சர்வமும் நடுங்கி போனது.
இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்த அனைவருக்கும் நன்றி
கையில் டிரிப்ஸ் ஏறி கொண்டிருக்க சரோஜா மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
அஜயோ அவளருகில் அவளது தலையை வருடிக் கொடுத்தவாறே கண்கள் கலங்க அமர்ந்திருந்தான்.
ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை நர்ஸ் ஒருவர் வந்து சரோஜாவின் இதயத்துடிப்பு வீதம் மற்றும் டிரிப்ஸ் ஏறும் வீதத்தை பரிசோதித்து கொண்டிருக்க அஜய் தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டே சரோஜாவின் கையை ஆதரவாக வருடிக் கொடுத்தான்.
சரோஜா வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே வித்யா அழுத வண்ணம் அமர்ந்திருக்க அவரின் ஒரு புறம் கணேஷும் மறுபுறம் கனகாவும் சோகமே மறு உருவமாக அமர்ந்திருந்தனர்.
சற்று தள்ளி ராஜஷேகர் போனில் மும்முரமாக பேசிக்கொண்டிருக்க அஜய் சரோஜா வைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்து தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு வெளியேறி வந்தான்.
அஜயை பார்த்ததும் கணேஷ் வேகமாக அவனருகில் எழுந்து சென்று
"சரோஜா கண் முழிச்சுட்டாளா மாமா?" என ஆவலுடன் கேட்டான்.
இல்லை என்று தலை அசைத்த வண்ணம் அவனை கடந்து சென்ற அஜய் ராஜஷேகரின் அருகில் சென்று நின்றான்.
"டெட் பாடியை எல்லாம் போஸ்ட் மார்டத்திற்கு அனுப்பியாச்சு... இன்னும் ஒரு ஐந்து, ஆறு மணி நேரத்தில் ரிசல்ட் வந்துடும்..." என்று ராஜஷேகர் கூறவும்
"ருத்ரா ம்மா கிட்ட தகவல் சொல்லியாச்சா?" என முகத்தில் எந்தவித உணர்வையும் பிரதிபலிக்காமல் அஜய் கேட்டான்.
"சொல்லியாச்சுபா..."
"ஓஹ் சரி..." என்றவாறே ராஜஷேகரைக் கடந்து சென்றவன் அந்த ஹாஸ்பிடல் தோட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து அவனின் பின்னால் வந்து நின்ற இன்ஸ்பெக்டர் டேவிட்
"ஸார் நவீன் கண் முழிச்சுட்டாரு..." என்று கூறவும் தன் கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்து கொண்டவன் நவீன் வைத்திருந்த அறையை நோக்கி சென்றான்.
நவீன் மெல்ல கண் விழித்து சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டு கொண்டிருக்க அவனருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்ட அஜய் டேவிட்டின் புறம் திரும்பி
"எல்லாம் ரெடி தானே?" என்று கேட்டான்.
"எஸ் ஸார்" என்ற டேவிட் நவீனின் புறம் திரும்பி
"நவீன் என்ன நடந்தது ஒரு விடயம் விடாமல் சொல்லுங்க" என்று கூற நவீன் இது வரையில் நடந்த விடயங்களை எல்லாம் மெல்ல மெல்ல கூறத் தொடங்கினான்.
" வாஞ்சிநாதன் ஸாரை எல்லோருக்கும் நல்லவரா, அதே நேரம் எந்த பிரச்சினைக்கும் போகதவராக தான் தெரியும்... ஆனா அது முழுமையாக உண்மை இல்லை...வெளியே எந்தளவுக்கு அவர் நல்லவராக தெரிந்தாரோ அதே அளவுக்கு உள்ளுக்குள்ள அவருக்கு வேற ஒரு கெட்ட முகம் இருக்கு...அரசியல்ல நல்ல பேர் சம்பாதிக்குறது கஷ்டம். வாஞ்சிநாதன் அதை ஈஸியாக சம்பாதித்தாரு...அது மத்தவங்களுக்கு பிடிக்கல அதனால தான் அவர் கட்சி ஆளுங்க அவர் கூட சண்டை போட்டாங்க...இப்படி தான் வெளி உலகிற்கு வாஞ்சிநாதன் கட்சியை விட்டு விலகினதற்கு காரணம் தெரியும்...உண்மையாகவே நடந்தது இது இல்லை...அவரோட ஸ்டீல் பக்டரி அவரோட பரம்பரை சொத்து...அங்கே நடக்குறது வெறும் ஸ்டீல் உற்பத்தி இல்லை போதை மருந்து உற்பத்தி...படிச்சு வேலை இல்லாமல் சுற்றி திரியுற பசங்களுக்கு வேலை வாங்கித் தர்றதா சொல்லி வாஞ்சிநாதன் கூட்டிட்டு போவாரு...சொன்ன மாதிரி வேலையும் வாங்கிக் கொடுப்பார்...ஆனா ஒரு கன்டிஷன் இருக்கும்..."
"என்ன கன்டிஷன்?" குழப்பமாக அஜய் கேட்டான்.
"எந்த இடத்தில் வேலை பார்த்தாலும் வாஞ்சிநாதனுக்கு சப்போர்ட்டா அவருக்கு உதவியாக இருக்கணும்"
"இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் நவீன்?"
"ஏன்னா நான் இப்போ பார்த்துட்டு இருக்குற வேலை வாஞ்சிநாதன் எனக்கு வாங்கி கொடுத்தது..." என்ற நவீனின் பார்வை சுவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
நவீன் சிறு வயதிலேயே தன் தாய், தந்தையை இழந்தவன்.
குடும்பத்தினரும், உறவினர்களும் நவீனை ஓரங்கட்டி விட வாழ வழி இன்றி வீதி வீதியாக ஊர் ஊராக சுற்றி திரிந்தவன் இறுதியாக சென்னையை வந்து சேர்ந்தான்.
பத்து வயது மாத்திரமே ஆன நவீனுக்கு தான் எங்கே இருக்கிறோம் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று எதுவுமே தெரியவில்லை.
ஒரு மாத காலமாக மழையிலும், வெயிலிலும் அலைந்து திரிந்தவனை வேலை விடயமாக தன் காரில் சென்று கொண்டிருந்த வாஞ்சிநாதன் கண்டு கொண்டார்.
வாஞ்சிநாதன் அரசியலில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த காலம் அது.
பல பேர் பாராட்ட பல நல்ல செயல்களை செய்து கொண்டிருந்தவர் அன்று நவீனை பார்த்த மாத்திரத்தில் ஆதரவற்ற ஒருவனுக்கு உதவி செய்து இன்னும் தன் நன் மதிப்பை உயர்த்தி கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு அவனை ஓர் அனாதை இல்லத்தில் சேர்த்து படிக்க வைத்தார்.
உறவினர்களும், ஊரார்களும் ஒதுக்கி வைத்த தன்னை முன் பின் அறியாத ஒருவர் காப்பாற்றி படிக்க வைப்பதை பார்த்து வியந்து போன நவீன் வாஞ்சிநாதனை தன் மனதில் கடவுளுக்கும் மேலாகப் பார்க்கத் தொடங்கினான்.
நாட்கள் போகப் போக நவீனுக்கு உலகம் புரிபடத் தொடங்கியது.
அதிலும் முக்கியமாக வாஞ்சிநாதன் பற்றிய விடயங்கள்.
வீட்டை விட்டு வேலைக்காக ஓடி வந்தவர்கள், பெற்றோர் அரவணைப்பின்றி திரியும் வேலை இல்லாத பட்டதாரிகள் எல்லோரும் வாஞ்சிநாதனின் உதவியோடு பல நல்ல வேலைகளை பெற்றுக் கொண்டு நவீனைப் போலவே வாஞ்சிநாதனை அக மகிழ்ந்து ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து பார்த்து கொண்டிருந்தனர்.
ஆனால் போகப் போக வாஞ்சிநாதனின் துணையால் வேலையில் சேர்ந்த பலர் மர்மமாக காணாமல் போகத் தொடங்கினர்.
நவீன் எம். ஆர் டிடெக்டிவில் இணைந்து கொள்வதற்கு முன்னர் சிறிது காலம் வாஞ்சிநாதனிடம் பி.ஏ வாக பணி புரிந்து வந்தான்.
அந்த சந்தர்ப்பத்திலேயே இந்த நபர்களின் மர்மமான மாயம் நவீனுக்கு தெரிய வந்தது.
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வாஞ்சிநாதனைப் பார்க்க வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதைப் பார்த்து அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தவன் இந்த மாயமான செய்தியை அறிந்ததும் உடனடியாக வாஞ்சிநாதனிடம் இதை பற்றி தெரிவித்தான்.
வாஞ்சிநாதனோ அந்த செய்தியை ஒரு பொருட்டாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்து விட நவீனுக்கு வாஞ்சிநாதனின் மேல் சிறிது சிறிதாக சந்தேகம் எழத் தொடங்கியது.
ஒரு நாள் மறைந்து இருந்து வாஞ்சிநாதனைப் பின் தொடர்ந்து சென்ற நவீன் அவர்களது ஸ்டீல் பக்டரியின் பின் புறமாக ஒரு குடோனில் பல நபர்கள் சேர்ந்து எதுவோ பொடி போன்ற ஒரு பொருளை வைத்து கொண்டிருப்பதை குழப்பமாக பார்த்து கொண்டு நின்றான்.
அப்போது தான் அவர்கள் பேசுவதை கவனித்தவன் அது போதைப்பொருள் என்பதை கண்டு கொள்ள அந்த நொடி வாஞ்சிநாதன் மேல் அவன் வைத்திருந்த நன்மதிப்பு தவிடுபொடியாகி போனது.
வெளியில் நல்ல மனிதர் வேஷம் போட்டு கொண்டு இன்னொரு புறம் ஊரையும், சமூகத்தையும் ஏமாற்றி கொண்டு இருக்கும் ஒருவரை இத்தனை நாளாக நம்பி இருந்தோமே என்ற கழிவிரக்கம் நவீனின் மனதை ஆக்கிரமித்து கொண்டது.
சிந்தனை வயப்பட்டவனாக நவீன் நின்று கொண்டிருந்த வேளை திடீரென்று அவன் முன்னால் வாஞ்சிநாதன் வந்து நின்றார்.
அதிர்ச்சியோடும், பயத்தோடும் நவீன் வாஞ்சிநாதனைப் பார்க்க அவன் தோளில் தன் கையை போட்டு உள்ளே அழைத்து கொண்டு சென்ற வாஞ்சிநாதன் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே கேள்வியாக புருவம் உயர்த்தினார்.
"இங்க பாருங்க ஸார்...நீங்க ஏதோ தப்பான வேலை பார்க்குறீங்க...இது சரி இல்லை இதெல்லாம் எதுவும் வேண்டாம் ஸார்...நீங்க எப்போவும் போல நல்லவராக இருந்துடுங்க ஸார் ப்ளீஸ்..." தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வாஞ்சிநாதனின் கைகளை பற்றி கெஞ்சலாக கூறினான் நவீன்.
"இதோ பாரு டா என் கீழே இத்தனை நாளாக வேலை பார்த்தவன் இப்போ என் கையை பிடித்து எனக்கே புத்தி சொல்லுற அளவுக்கு போயிட்டானா?" கேலியாக வந்த வாஞ்சிநாதனின் வார்த்தைகளில் முகம் கறுத்து போக வாஞ்சிநாதனின் கையில் இருந்த தன் கையை விலக்கி கொண்டவன் தன் தோளில் இருந்த வாஞ்சிநாதனின் மறு கையையும் எடுத்து விட்டு விட்டு சற்று தள்ளி நின்றான்.
"இத்தனை நாள் நீங்க எனக்கு செய்த உதவி எல்லாவற்றுக்கும் நன்றி ஸார்...இனிமேல் ஒரு நிமிஷம் கூட நான் இந்த இடத்தில் வேலை பார்க்க மாட்டேன்... உங்களை கடவுளுக்கு மேலாக என் மனதில் வைத்து பார்த்தேன்...ஆனா ஒரு செக்கன்ல எல்லாவற்றையும் சுக்கு நூறாக உடைச்சுட்டீங்க...நான் வர்றேன் ஸாரி போறேன்..." என்று விட்டு நவீன் அந்த இடத்தை விட்டு வெளியே செல்ல போக அவன் முன்னால் நான்கு, ஐந்து நபர்கள் அவன் வழியை மறித்தவாறு வந்து நின்றனர்.
நவீன் குழப்பமாக தன் பின்னால் நின்ற வாஞ்சிநாதனை திரும்பி பார்த்தான்.
"அது எப்படி ராஜா அவ்வளவு சுலபமாக இந்த இடத்தை விட்டு நீ போக முடியும்? என் கிட்ட ஒரு தரம் வந்துட்டா அதற்கு அப்புறம் என்னை மீறி நீங்க யாருமே போக முடியாது. நீங்க எல்லோரும் பூமராங் மாதிரி...நானாக உங்களை தூக்கி போட்டாலும் சரி நீங்களாகவே என் கிட்ட இருந்து விலகி எங்கேயாவது ஓடி ஒழியப் போனாலும் சரி கடைசியாக ஆரம்பித்த என் கிட்ட தான் வந்து சேருவீங்க...அது தான் உங்க தலையெழுத்து...அதனால இந்த வீர வசனம் பேசுறதை நிறுத்திட்டு எனக்கு சார்பாக வேலை செய்யப் பழகு சரியா?" வாஞ்சிநாதன் புன்னகையோடு நவீனைப் பார்க்க
கோபமாக அவரை நெருங்கி வந்தவன்
"என் உடம்பில் உயிர் இருக்குற வரைக்கும் ஒரு நாளும் நான் இதை பண்ண மாட்டேன்" என்று கூற வாஞ்சிநாதன் சலித்து கொண்டே அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
"இதோ பாரு நவீன் சும்மா வம்பு பண்ணாதே...எனக்கு மற்ற பசங்க எல்லோரையும் விட உன் மேல ஒரு படி பாசம் அதிகம்...அது எதனாலனு எனக்கு தெரியாது...சித்துவுக்கு அடுத்ததாக நான் உன்னை தான் என் பையனாக பார்க்குறேன்... அதனால தான் இவ்வளவு பொறுமையாக உன் கூட பேசிட்டு இருக்கேன்...இதுவே வேற எவனாவது இங்க வந்து இருந்தா இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன் ஒரே வெட்டு தான்..." வாஞ்சிநாதனின் கோபமான வார்த்தைகளை கேட்டு நவீனுக்கு சர்வமும் நடுங்கி போனது.