குறுநாவலை எழுத ஊக்கப்படுத்திய நமது தளத்தின் எழுத்தாளர் அழகி அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
SM தளத்தின் உரிமையாளர் ப்ரியங்கா அவர்களுக்கும், மற்றும் பல உதவிகள் பல நிலைகளில் நான் வேண்டிய போது மறுக்காமல், இன்முகத்துடன் செய்த எழுத்தாளர்கள் , தென்றல், அகிலா கண்ணன் மற்றும் செல்வசங்கரி ஆகியோருக்கு நன்றி சொல்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
ஒவ்வொரு நிலைகளிலும் எனக்கு பல வகைகளில் உதவி புரிந்த மேற்கூறிய அனைவருக்கும் , எனை எழுத்தாளராக அறிமுகம் செய்ததில் பெரும்பங்கு இருக்கிறது.
நிலவைக் கொண்டு வா எனும் எனது குறுநாவலை படித்தவர்கள், விமர்சனம் எழுதியர்கள், படித்து பொறுமையாக தனது விருப்பத்தைத் தெரிவித்தவர்கள், கருத்தினை பகிர்ந்து கொண்டவர்கள், அமைதியாக படித்துவிட்டு சென்றவர்கள், 93 வாக்குகளை அளித்து எனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்கள், படித்துக் கொண்டு இருப்பவர்கள், இனி வரும் காலங்களில் படிக்க இருப்பவர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவில் புதிய நாவலுக்கான அறிவிப்புடன் உங்களை சந்திக்கிறேன்.
புதிய நாவலுக்கு தங்களின் ஆதரவு மற்றும் ஊக்கத்தினை எதிர்பார்த்து ஜூலை 31 அன்று புதிய அறிவிப்புடன் வருகிறேன்.
என்றும் அன்புடன் சரோஜினி...