• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Odi pogalam 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஓடி போகலாம் 2

நிஷா அரக்க பறக்க மலேஷியா klia ஏர்போர்ட் வந்து செக் இன், இமிகரேஷன் எல்லாம் முடித்துக் கொண்டு வேகமாக அவள் ஏற வேண்டிய விமானத்தில் ஏறி அமர்ந்தாள்.

பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் மணாளன் ஷியாங், இவளை அங்கே அப்பொழுது எதிர்பார்க்கவில்லை. மோதிரம் மாற்றும் நேரம் தான் இவளை கவனித்து பார்த்து இருந்தான், அதன் பின் அவளின் குறும்பு புரிந்து அவள் எதிர்பாராத நேரம் முத்தம் கொடுத்தான் அவளின் இதழில்.

அதுவும் முத்தம் கொடுக்கும் எண்ணம் அதுவரை இல்லாமல் இருந்தவன், அவளின் குறும்புதனத்தில் கொடுக்க எண்ணி கொடுத்தானா, இல்லை அவளின் செர்ரி உதடை சுவைக்க எண்ணி முத்தம் கொடுத்தானா என்பதை அவனும் அறியவில்லை.
ஆனால் இந்த குறுகிய நேரத்திற்குள் அவளின் முகம் அவனின் மனதில் அப்பட்டமாக பதிந்து இருப்பதை, அவனால் அதிர்ச்சியோடு அதை உள் வாங்க முடிந்தது.


அவனின் போன் அலறிய பின் தான், இன்னும் தன் செல்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்யவில்லை என்பதை உணர்ந்தான். உடனே யார் என்று பார்த்தவன், அவனின் தாத்தா தான் அழைத்து இருந்தார்.

“அறிவுகெட்டவனே! என்னதான் இது கண்துடைப்பு கல்யாணம் அப்படினாலும் அது நமக்கு மட்டும் தான். மீடியாகாரன், இந்த கல்யாணத்தை உலகம் முழுதும் பரப்பிட்டான்”.

“கல்யாணம் முடிஞ்ச கையோட, தனியா கிளம்பி போனால் எல்லோரும் என்ன நினைப்பாங்க? கொஞ்சம் கூட அறிவே இல்லை உனக்கு, எல்லாத்தையும் நானே சொல்லிக் கொடுக்கணுமா என்ன?” என்று சிடுசிடுத்தார்.

“என்ன தான் பிரச்சினை உங்களுக்கு? ஏன் இப்படி என் உயிரை வாங்குறீங்க?” என்று அவருக்கு மேல் இவன் கத்தினான்.

“உன் உயிரை வாங்கி நான் என்ன செய்ய போறேன்? உன்னை மாதிரியே இருப்பா போல உன் பொண்டாட்டி, அவளும் எங்க போறா அப்படினு சொல்லாம, கிளம்புறேன் பை சொல்லிட்டு கிளம்பி போய்ட்டா”.

“இந்த காலத்து பிள்ளைங்க ரொம்ப மோசம், எப்போ தான் எங்க பேச்சை கேட்பீங்களோ? முதல உன் பொண்டாட்டியை தேடி கண்டுபிடிச்சு, அவ கூட ஹனிமூன் போன மாதிரி பில்ட் அப் பண்ணு புரியுதா!” என்று சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு போனை வைத்தார்.

அதற்குள் விமான பணிப்பெண் வந்து, அவனின் செல்பேசியை அனைத்து வைக்குமாறு கூறவும் அவன் உடனே முதல் வேலையாக அதை செய்து முடித்தான்.

அவளை அவன் பார்க்க அவளோ அவனை பார்க்காது, கையோடு கொண்டு வந்து இருந்த பொன்னியின் செல்வன் கதையை படித்துக் கொண்டு இருந்தாள்.
இதுவரை அவனின் பார்வைக்காக, அவனின் ஒற்றை சிரிப்புகாக தவமாக காத்து கொண்டு இருந்த பெண்களையே பார்த்து பழகியவன், முதல் முறையாக ஒருத்தியை திருமணம் புரிந்து அவளுக்கு முத்தமும் கொடுத்து, அதில் அவள் மயங்கி இருந்ததையும் பார்த்துவிட்டு இப்பொழுது அதற்கு நேர்மாறாக இவனை யார் என்றே தெரியாது என்பது போல் அமர்ந்து இருந்தவளை பார்த்து எரிச்சல் வந்தது.


“பாவி! நானாவது சொல்லிட்டு வந்தேன் ஷுட்டிங் போறேன் அப்படினு, இவ கிளம்புறேன் மட்டும் சொல்லிட்டு எங்க போறேன் அப்படினு சொல்லாம வந்து இருக்கா”.

“இவளை தண்ணி தெளிச்சு விட தான் ஒரு வேளை, இவங்க வீட்டுல என்னோட இவளை கோர்த்து விட்டாங்களா?” மனதிற்குள் அவளை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்தான்.

இதை தானே நிஷாவும் எதிர்பார்த்தாள், அவளைப் பற்றி மட்டுமே அவன் நினைக்க வேண்டும் என்று. அதற்கு தானே அவள் ஒவ்வொரு காயாக, நகர்திக் கொண்டு இருக்கிறாள்.

இங்கு நிஷாவோ அவன் அருகில் அமர்ந்து கொண்டு, தன் பாட்டி கூறியதை தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.

“இங்க பாரு நிஷா உனக்கு அவர் மேலயும், அவருக்கு உன் மேலயும் அன்பு மட்டும் இருந்தா போதாது, புரிதல் வேண்டும்.

கணவன்,மனைவி உறவுகுள்ள அன்பு மட்டும் இருந்தா பத்தாது, ஒருத்தருடைய மரியாதையை எங்கும் விட்டுக் கொடுக்காமல் இருக்கவும் தெரியணும், விட்டுக் கொடுத்து வாழவும் தெரியணும்”.

“சில திருமணங்கள் ஜெய்கிறது இல்லை, காரணம் அங்க புரிதல் இல்லை. உன் திருமணம் ஜெய்க்கணும் அப்படினா நீயும் உன் சரிபாதியை புரிஞ்சிக்கனும், உன் சரிபாதியும் உன்னை புரிந்து வைத்து இருக்கணும்” என்று அவள் பாட்டி கூறியதை தான் தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.

அவளை பொறுத்தவரை ஒரு தடவை தான் தன் மகன் திருமணம், அதை வாழ்ந்து ஜெய்க்க தன்னால் ஆன எல்லா முயற்சியும் செய்து விடுவது.

அதற்கு முதல்படியாக தான் அவள் அவன் தாத்தாவை, அவனிடம் அப்படி பேச வைத்தது. அவனும் அதற்கு ஏற்றார் போல், இவளை தான் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தான்.

“இவன் கூட ஓடி போக எவ்வளவு பண்ண வேண்டி இருக்கு, அதுவும் கல்யாணம் பண்ணிகிட்டு ஓடி போக ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கு. ஆண்டவா! எங்களை நீ தான் காப்பாத்தனும்” என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டு இருந்தாள்.

கண் மூடி வேண்டுதல் வைத்துக் கொண்டு, அலைச்சல் காரணமாக சரியாக தூங்காததால் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள் நிஷா. உறங்கும் பொழுது, அவளின் சோர்ந்த முகம் அவளின் களைப்பை அப்பட்டமாக எடுத்து காட்டியது அவனுக்கு.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“பாவம் காலையில் தான் இந்தியாவில் இருந்து வந்தா சொன்னாங்க, இப்போ உடனே பங்காக் கிளம்பியகனுமா. இவ இப்போ எதுக்கு அங்க போறா? என்ன வேலை செய்றா இவ முதல?”.

“ச! நான் எதுக்கு இவளை பத்தியே நினைக்கிறேன்! ஜஸ்ட் இது கண் துடைப்பு கல்யாணம் தானே, இனி இவளை நினைக்காம நாளைக்கு ஷுட்டிங் ல செட் சரியா போட்டுக் கொடுக்கிறதை பத்தி யோசிக்கணும்” என்று எண்ணிக் கொண்டே அடுத்து அடுத்து செய்ய வேண்டியதை பட்டியலிட தொடங்கினான்.

சிறிது நேரத்தில் அவனுக்கும் கண்கள் தூக்கத்துக்கு செல்ல தொடங்கவும், அப்படியே அவள் மேல் சரிந்து தூங்கிவிட்டான். தன் மேல் எதோ பாரம் அழுத்துவதை உணர்ந்தவள், அரை தூக்கத்தில் விழித்து பார்த்தவள் அவனின் மணாளன் அவள் மீது சரிந்து உறங்குவதை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டே தூக்கத்தை தொடர்ந்தாள்.

விமானம் தரை இறங்கிய பின் எல்லோரும் இறங்கிய பின்னர், மெதுவாக இவர்கள் இறங்கினர். அவளிடம் எங்கே தங்கி இருக்கிறாள் என்று இவன் கேட்க நினைக்க, அவளோ அவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கொடுக்காமல் அவள் பாட்டுக்கு முன்னே நடந்து சென்றாள்.

இவனும் அவளின் இந்த அலட்சியத்தில் அவளை கண்டுகொள்ளாமல், தன் உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினான். அங்கே இவனுக்காக காத்துக் கொண்டு இருந்த காரில் இவன் ஏறவும் வண்டி நேராக பட்டாயா நோக்கி சென்றது.

அங்கே வழக்கம் போல் அவன் தங்கும் ஹார்ட் ராக் ஹோட்டலில் வண்டி நின்றது. வெயிட்டர் அவனின் உடமைகளை எடுத்துக் கொண்டு உள்ளே வர, இவன் ரிசப்ஷன் முன் நின்று எப்பொழுதும் அவன் தங்கும் சூட் ரூம் கேட்டான்.

“சாரி சார்! தட் ரூம் இஸ் ஆல்ரெடி புக்ட் அண்ட் அவர் கெஸ்ட் இஸ் ஸ்டேயிங் தேர்” என்று அந்த ரிசப்ஷன் பெண்மணி கூறவும் அதிர்ந்தான்.

“வாட்! லுக் மிஸ் ஐ அம் தி பெர்சன் புக்ட் திஸ் சூட் லாஸ்ட் வீக் இட்செல்ப். பிளீஸ் செக் இட் புரோபர்லி, அண்ட் லெட் மீ நோ” என்றவன் பொறுமையாக காத்து இருந்தான்.

அவனின் ராசியான சூட் அது, சீசன் நேரம் வேறு என்று போன வாரமே முன் பதிவு செய்துவிட்டு இருந்தான். இப்பொழுது அந்த அறை இல்லை என்றால், அவன் கோபம் கொள்ளாமல் என்ன செய்வான்.

“சாரி சார்! அவர் கெஸ்ட் மிஸ் நிஷா புக்ட் தி சூட் பிஃபோர் யூ சார். கேன் ஐ அரேஞ்ச் சம் அதர் சூட் பார் யூ” என்று கேட்டவுடன் அவனுக்கு பிபீ ஏறாத குறை தான்.

அவனின் நண்பனும், அவனின் வலது கையுமான நண்பன் டிசங்கிற்கு அழைத்தான் ஷியாங். அவனிடம் அந்த அறையை எப்படியாவது அவனுக்கு மாற்றி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு இருந்தான்.

“டேய்! ஏற்கனவே பேசிட்டேன் டா அந்த பொண்ணு கிட்ட. அந்த பொண்ணுக்கு அது தான் ராசியான சூட்டாம், விட்டுக் கொடுக்க மாட்டேன் சொல்லிடுச்சு. வேணும்னா, நீ அங்க ரூம்க்கு போய் திரும்ப அந்த பொண்ணுகிட்ட பேசி பாரேன்” என்று கூறிவிட்டு செல்லை அணைத்தான்.

எரிச்சலில் இருந்தவன், நேராக அந்த சூட் அறைக்கு முன் நின்று பெல்லை அழுத்தினான். கதவை திறந்த நிஷாவை பார்த்தவன், சத்தியமாக அவளை அங்கே அவன் எதிர்பார்க்கவில்லை.

“என்ன வேணும்?” என்று அவள் கேட்டதற்கு, அப்பொழுது அவனின் வாய் தன்னை போல் நீ தான் வேண்டும் என்றது.

“வாட்!” என்று அவள் சற்று பலமாக அதிர்ந்த பிறகு தான், அவன் சொன்னதின் பொருளை உணர்ந்து தன்னையே கடிந்து கொண்டான்.

“சாரி! இந்த சூட் ரூம் எனக்கு வேண்டும். எனக்கு இது தான் ராசியான சூட், பிளீஸ் எனக்கு இதை கொடுத்திட்டு, நீ வேற சூட் எடுத்துக்கோ” என்று பவ்யமாக அவன் கேட்கவும் அதை விட பவியமாக அவள் முடியாது என்று கூறியதோடு, அறை கதவை சாற்ற போனாள்.

அவன் அவள் கதவை சாற்ற விடாமல் செய்துவிட்டு, அவளை இடித்துக் கொண்டு உள்ளே வந்து கதவை அடைத்தான்.

“Mrs. ஷியாங் நமக்கு தான் இன்னைக்கு கல்யாணம் முடிஞ்சதே அதுவும் இப்போ நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ஆச்சே, எதுக்கு தனி தனி ரூம் நாம ஒன்னாவே இருக்கலாம்” என்று கூறிவிட்டு, அவள் எதிர்பாராத நேரத்தில் அவளை இழுத்து அணைத்து இதழில் முத்தம் பதித்தான்.
அதிர்ச்சியில் கண்களை ஸாசர் போல் விரித்து, அவனை அவள் பார்க்க அவனோ முத்தம் கொடுப்பதில் தீவிரம் காட்டினான்.


அவனின் இந்த அதிரடியில், அவள் மூளை சிறிது நேரம் மரத்து போய் இருந்தது. சட்டென்று சுதாரித்து அவனிடம் இருந்து விலகி, தன்னை பிரித்து எடுத்தாள்.

“இடியட்! கட்டின பொண்டாட்டியா இருந்தாலும், அவளுக்கு சம்மதமா அப்படினு கேட்டுட்டு தான் செய்யணும். டேய் மியாவ்! முதல நீ என்னை புரிஞ்சிக்க டிரை பண்ணு,அப்புறம் தொடலாம்”.

“வெளியே இந்த சோபாவே மெத்தை மாதிரி ஜம்முனு தான் இருக்கு, இங்கேயே படுத்து தூங்கு. உள்ள பெட்ரூம் வந்தா, அடி பின்னி எடுத்து விடுவேன் பார்த்துக்கோ” என்று மிரட்டிவிட்டு சென்றவளை பார்த்து முதல் முதலாக அவளை இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

எத்தனையோ பெண்கள் இவனை சுற்ற, எந்த பெண்ணையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்தவன், இப்பொழுது மனைவியை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினான்.

நிஷாவோ, அவன் கொடுத்த முத்தத்தில் மயங்கி அதையே நினைத்துக் கொண்டு, அவனோடு தனியாக ஓடி போக அடுத்த திட்டம் தீட்ட தொடங்கினாள்.

தொடரும்..

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Hi friends next EPI pottachu, படிச்சிட்டு சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்..

உங்க கருத்துக்கள் தான் என்னோட energy tonic.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top